Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஜனாதிபதி அநுர – சட்டத்தரணிகள் சங்கம் இடையில் அதிரடி சந்திப்பு!

ஜனாதிபதி அநுர – சட்டத்தரணிகள் சங்கம் இடையில் அதிரடி சந்திப்பு!

நாட்டின் நீதித்துறை கட்டமைப்பில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை சட்டத்துறை வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இச்சந்திப்பு, சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக மிகவும் சுமுகமாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் பிரதான புள்ளியாக, நீதிபதிகளின் ஓய்வூதிய வயதெல்லையை நீடிப்பது தொடர்பான 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் அமைந்திருந்தது. இது தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் தனது சுவாரஷ்யமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைக்க, சட்டத்துறை மேம்பாட்டிற்காக அரசாங்கம் வகுத்துள்ள பிரமாண்ட திட்டங்களை ஜனாதிபதி வெளிப்படுத்தத் தொடங்கினார்.

சந்திப்பின் தொடக்கத்திலேயே சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சட்டத்தரணிகள் சங்கத்தினால் அன்றைய தினம் காலையிலேயே ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தமையை நினைவு கூர்ந்தார். இவ்வாறான சந்திப்புகள் இடம்பெறும்போது, பேச்சுவார்த்தையின் சாராம்சத்தை முன்னதாகவே வெளிப்படுத்துவது இரு தரப்புக்கும் இடையிலான திறந்த கலந்துரையாடலுக்கு தடையாக அமையக்கூடும் என்ற தனது நிலைப்பாட்டையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

நீதியை நிலைநாட்டுவது என்பது வெறும் நீதிமன்ற அறைகளுக்குள் மட்டும் முடிந்துவிடும் ஒன்றல்ல என்பதை ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அது விசாரணைகள் முதல் வழக்குத் தாக்கல் வரை உள்ளடங்கிய ஒருங்கிணைந்த கட்டமைப்பு என்றார். இதற்காக சட்டமா அதிபர் திணைக்களம், லஞ்ச ஊழல் ஆணைக்குழு, பொலிஸ் மற்றும் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் மனிதவளத்தை அதிரடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சேவைகளை மாவட்ட மட்டத்திற்கு கொண்டு செல்லவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகளை மாகாண மட்டத்தில் பரவலாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் நீதிமன்றங்களை மிகவும் இலகுவாக அணுகும் வகையில், மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன் பௌதிக வசதிகளையும் மேம்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. “நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் முடிவு எந்தவொரு தனிப்பட்ட நபரையும் இலக்காகக் கொண்டதல்ல, மாறாக நாட்டின் பொது நலனுக்காக எடுக்கப்பட்ட தூரநோக்கு தீர்மானம்” என ஜனாதிபதி இதில் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் இந்த தொலைநோக்கு திட்டங்களுக்கு பதிலளித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள், நீதிபதிகளின் ஓய்வூதிய வயதை நீடிப்பது தொடர்பாக தமக்கு கொள்கை ரீதியான எதிர்ப்புகள் எதுவும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினர். அத்துடன், இத்தீர்மானம் குறித்து மேலும் ஆராய்ந்து ஒரு பொதுவான இணக்கப்பாட்டிற்கு வருவது சிறந்தது என்றும் அவர்கள் பரிந்துரைத்தனர்.

இந்த விவகாரத்தில் சட்டத்தரணிகள் மத்தியில் நிலவும் கருத்துக்கள் பெரும்பான்மையானதா அல்லது சிறுபான்மையானதா என்பது விவாதத்திற்குரியது எனச் சுட்டிக்காட்டிய அவர், எவ்வித முன்முடிவுகளும் இன்றி திறந்த மனதுடன் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதே தற்போதைய தேவையாகும் என ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பில் நீதி அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார, ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் ஜே.எம். விஜேபண்டார மற்றும் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ரஜீவ் அமரசூரிய உள்ளிட்ட சிரேஷ்ட பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

ஜனாதிபதி அநுர – சட்டத்தரணிகள் சங்கம் இடையில் அதிரடி சந்திப்பு!

நாட்டின் நீதித்துறை கட்டமைப்பில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை சட்டத்துறை வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இச்சந்திப்பு, சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக மிகவும் சுமுகமாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் பிரதான புள்ளியாக, நீதிபதிகளின் ஓய்வூதிய வயதெல்லையை நீடிப்பது தொடர்பான 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் அமைந்திருந்தது. இது தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் தனது சுவாரஷ்யமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைக்க, சட்டத்துறை மேம்பாட்டிற்காக அரசாங்கம் வகுத்துள்ள பிரமாண்ட திட்டங்களை ஜனாதிபதி வெளிப்படுத்தத் தொடங்கினார்.

சந்திப்பின் தொடக்கத்திலேயே சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சட்டத்தரணிகள் சங்கத்தினால் அன்றைய தினம் காலையிலேயே ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தமையை நினைவு கூர்ந்தார். இவ்வாறான சந்திப்புகள் இடம்பெறும்போது, பேச்சுவார்த்தையின் சாராம்சத்தை முன்னதாகவே வெளிப்படுத்துவது இரு தரப்புக்கும் இடையிலான திறந்த கலந்துரையாடலுக்கு தடையாக அமையக்கூடும் என்ற தனது நிலைப்பாட்டையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

நீதியை நிலைநாட்டுவது என்பது வெறும் நீதிமன்ற அறைகளுக்குள் மட்டும் முடிந்துவிடும் ஒன்றல்ல என்பதை ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அது விசாரணைகள் முதல் வழக்குத் தாக்கல் வரை உள்ளடங்கிய ஒருங்கிணைந்த கட்டமைப்பு என்றார். இதற்காக சட்டமா அதிபர் திணைக்களம், லஞ்ச ஊழல் ஆணைக்குழு, பொலிஸ் மற்றும் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் மனிதவளத்தை அதிரடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சேவைகளை மாவட்ட மட்டத்திற்கு கொண்டு செல்லவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகளை மாகாண மட்டத்தில் பரவலாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் நீதிமன்றங்களை மிகவும் இலகுவாக அணுகும் வகையில், மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன் பௌதிக வசதிகளையும் மேம்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. “நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் முடிவு எந்தவொரு தனிப்பட்ட நபரையும் இலக்காகக் கொண்டதல்ல, மாறாக நாட்டின் பொது நலனுக்காக எடுக்கப்பட்ட தூரநோக்கு தீர்மானம்” என ஜனாதிபதி இதில் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் இந்த தொலைநோக்கு திட்டங்களுக்கு பதிலளித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள், நீதிபதிகளின் ஓய்வூதிய வயதை நீடிப்பது தொடர்பாக தமக்கு கொள்கை ரீதியான எதிர்ப்புகள் எதுவும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினர். அத்துடன், இத்தீர்மானம் குறித்து மேலும் ஆராய்ந்து ஒரு பொதுவான இணக்கப்பாட்டிற்கு வருவது சிறந்தது என்றும் அவர்கள் பரிந்துரைத்தனர்.

இந்த விவகாரத்தில் சட்டத்தரணிகள் மத்தியில் நிலவும் கருத்துக்கள் பெரும்பான்மையானதா அல்லது சிறுபான்மையானதா என்பது விவாதத்திற்குரியது எனச் சுட்டிக்காட்டிய அவர், எவ்வித முன்முடிவுகளும் இன்றி திறந்த மனதுடன் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதே தற்போதைய தேவையாகும் என ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பில் நீதி அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார, ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் ஜே.எம். விஜேபண்டார மற்றும் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ரஜீவ் அமரசூரிய உள்ளிட்ட சிரேஷ்ட பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular