Sponsored Advertisementspot_img
HomeLocal Newsபராமரிப்பு நிலையங்களாக மாறுகின்றனவா பெண் பிள்ளைகளுக்கான மதுரசாக்கள்?

பராமரிப்பு நிலையங்களாக மாறுகின்றனவா பெண் பிள்ளைகளுக்கான மதுரசாக்கள்?

  • சமூகச் சீரழிவுகள், போதை கலாச்சாரம் மற்றும் நவீன தொழில்நுட்ப சவால்களுக்கு மத்தியில் பெண் பிள்ளைகளைப் பாதுகாக்கும் முக்கிய கேடயமாக மதுரசாக்கள் விளங்குகின்றன.
  • மார்க்கக் கல்வியை நோக்கமாகக் கொண்டிருப்பதை விட, குடும்பப் பிளவுகள் மற்றும் பெற்றோரின் பிரச்சினைகள் காரணமாகவே பல பெண் பிள்ளைகள் மதுரசாக்களில் சேர்க்கப்படும் அதிர்ச்சிப் பின்னணி அதிகரித்துள்ளது.
  • தவறான நிர்ப்பந்தங்களின் அடிப்படையில் சேர்க்கப்பட்டாலும், மார்க்க வழிகாட்டல் மூலம் அந்தப் பெண் பிள்ளைகள் சமூகத்தில் சிறந்த ஆளுமைகளாக உருவெடுக்கின்றனர்.

ஒவ்வொரு முஸ்லிமும் தனது வாழ்வின் அடிப்படை வழிகாட்டியான மார்க்கக் கல்வியைப் பெற்றுக்கொள்வது ஆன்மீகக் கடமையாகும். ஆனால், இன்றைய நவீன உலகில் சமூக வலைத்தளங்களின் நச்சுத் தாக்கம், முறையற்ற தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் தீவிரமாக வியாபித்து வரும் போதை கலாச்சாரம் என்பன முஸ்லிம் குடும்பங்களின் நிம்மதியை அடியோடு குலைத்து வருகின்றன. குறிப்பாக, “எமது பெண் பிள்ளைகள் இந்தச் சீரழிவுகளில் இருந்து தப்பித்து எவ்வாறு மானத்தோடும் ஒழுக்கத்தோடும் வாழப்போகிறார்கள்?” என்ற பெருங்கவலை ஒவ்வொரு விழிப்புணர்வுள்ள பெற்றோரின் இதயத்திலும் ஆறாத நெருப்பாக எரிந்துகொண்டிருக்கிறது.

இவ்வாறான நச்சுச் சூழலிலிருந்து தமது பிள்ளைகளைப் பாதுகாத்து, சிறந்த இறைபக்தியுள்ள ஆளுமைகளாக உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கில் அரபுக் கல்லூரிகளையும் (மத்ரஸாக்களையும்) மார்க்கக் கல்வி நிலையங்களையும் நோக்கிப் பயணிக்கும் பெற்றோர்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறத்தில் மத்ரஸாக்களை வெறும் ‘பாதுகாப்புப் புகலிடங்களாகவும்’, ‘பிள்ளைகளின் பராமரிப்பு நிலையங்களாகவும்’ மாற்றும் ஓர் அதிர்ச்சியளிக்கும் சமூக அவலம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகின்றது.

மறைக்கப்பட்ட பின்னணியும் கசப்பான சமூக யதார்த்தமும்

இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி, மார்க்கத்தை ஆழமாகக் கற்று சமூகத்திற்கு நற்பணி ஆற்றவேண்டும் என்ற தூய நோக்கில் சேர்க்கப்படும் பிள்ளைகளை விட, குடும்பங்களின் கடுமையான சிக்கல்களால் தள்ளிவிடப்படும் பெண் பிள்ளைகளின் எண்ணிக்கையே இன்று மத்ரஸாக்களில் அதிகமாகக் காணப்படுகின்றது.

தூய மார்க்கக் கல்வியைப் புகட்டி சமூகத்திற்குச் சிறந்த வழிகாட்டிகளை உருவாக்கும் உயரிய நோக்கோடு சில பெற்றோர்கள் தமது பெண் பிள்ளைகளை மதுரசாக்களில் சேர்த்தாலும், இதன் மறுபக்கத்தில் அதிர்ச்சியளிக்கும் ஒரு கசப்பான, பயங்கரமான யதார்த்தம் நிலவுகிறது.

குடும்பங்களில் ஏற்படும் கணவன்–மனைவி பிளவுகள், முறையற்ற உறவுகள், குடும்ப வறுமை, தாய்மார் வெளிநாடு செல்லுதல் மற்றும் பெற்றோரின் முறையற்ற நடத்தைகள் போன்ற காரணங்களால், பெண் பிள்ளைகளுக்கு ஒரு பாதுகாப்பான இடமாக மதுரசாக்களைப் பயன்படுத்தும் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது.

இத்தகைய மனதை உலுக்கும் குடும்பப் பின்னணிகளினால் கைவிடப்படும் அப்பாவிப் பெண் பிள்ளைகளே இன்று மத்ரஸாக்களைத் தஞ்சம் அடைகின்றனர். வீட்டில் நிலவும் போர்க்கள சூழலில் இருந்து தப்பித்து மத்ரஸா சுவர்களுக்குள் வந்து சேரும் இப்பெண் பிள்ளைகளின் உள்ளங்கள் ஏற்கனவே ஆழமான ரணங்களால் கிழிபட்டுக் கிடக்கின்றன.

தமது எவ்வித குற்றமும் இன்றி, பெற்றோரின் பொறுப்பற்ற சண்டைகளினாலும் சுயநலப் பிரிவுகளினாலும் மத்ரஸாக்களில் சேர்க்கப்படும் இந்தப் பெண் பிள்ளைகள் அனுபவிக்கும் உளவியல் மற்றும் உணர்வு ரீதியான வலிகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.

வார இறுதி நாட்களில் மற்ற மாணவிகளைப் பார்க்க அவர்களது பெற்றோர்கள் பாசத்தோடு பழங்களும் பலகாரங்களும் கொண்டு வரும் போது, எவரும் வராத மத்ரஸா வாசலையே வெறித்துப் பார்த்து ஏங்கி நிற்கும் அந்தச் சிறுமிகளின் மௌனக் கண்ணீர் கல்நெஞ்சையும் கரையச் செய்யும்.

இத்தகைய இக்கட்டான குடும்பப் பின்னணியில் இருந்து நிர்ப்பந்தமாக மதுரசாக்களில் சேர்க்கப்படும் பெண் பிள்ளைகளை, மார்க்க அறிஞர்களான உலமாக்கள் தங்களின் சொந்தப் பிள்ளைகளைப் போன்று அரவணைத்து வழிகாட்டுகின்றனர்.

பெற்றோரிடமிருந்து மாதாந்தக் கட்டணங்களோ, புத்தகங்கள் மற்றும் சீருடைகளுக்கான செலவுகளோ கிடைக்காத சூழ்நிலையிலும், அந்தப் பிள்ளைகளின் கல்வி மற்றும் அடிப்படைத் தேவைகளைத் தமது சொந்தப் பொறுப்பிலும் நிறுவன நிதியிலும் சுமந்து, கல்வி புகட்டும் உன்னதப் பணியை உலமாக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

விடுமுறைக் கால சவால்களும் உளவியல் மீட்டெடுப்பும்

மத்ரஸாக்களுக்கு வழங்கப்படும் விடுமுறை நாட்கள் என்பது ஏனைய மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தருணமாக இருக்கும் வேளையில், இந்தச் சிதைந்த குடும்பத்து மாணவிகளுக்கோ அது ஒரு “நரக வேதனையாகவும் மரண பயமாகவும்” மாறுகிறது.

வீட்டுக்குச் சென்றால் அங்கே அன்பான வரவேற்போ, ஆதரவான பெற்றோரோ இருப்பதில்லை. மாறாக சண்டைகளும், அவமானங்களும், அவமதிப்புகளுமே காத்திருக்கின்றன. அத்தகைய நச்சுச் சூழலில் சிக்கும் சில பெண் பிள்ளைகள் கடுமையான மன அழுத்தத்திற்குள்ளாகி விபரீதமான, தவறான முடிவுகளை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இதனால், மத்ரஸா நிர்வாகத்திற்கும் ஆசிரியைகளுக்கும் ஒவ்வொரு விடுமுறைக் காலமும் பெருங்கவலையாகவே முடிகிறது:

“விடுமுறைக்குச் சென்ற நமது ஆசைப் பிள்ளை மீண்டும் உயிரோடு, ஈமானோடு, ஒழுக்கத்தோடு மத்ரஸா திரும்புமா?” என்ற அச்சமும் கேள்வியும் அவர்களின் நெஞ்சில் முள்ளாகத் தைத்துக் கொண்டே இருக்கிறது.

எனினும், மீண்டும் மதுரசாக்களுக்குத் திரும்பும் அந்த மாணவிகளுக்குத் தகுந்த உளவியல் ஆலோசனைகளையும் ஆன்மீக வழிகாட்டல்களையும் வழங்கி, அவர்களை அந்த இக்கட்டுகளிலிருந்து மீட்பதில் உலமாக்களின் பங்கு அளப்பரியதாக உள்ளது.

சாம்பலிலிருந்து எழும் பீனிக்ஸ் பறவைகள்: போராட்டமே வெற்றியின் அடித்தளம்!

பெற்றோர்களால் கைவிடப்பட்ட பிள்ளைகளுக்கு ஒரு தகப்பனின் நிழலாகவும், தாயின் கனிவாகவும் மாறி, மதுரசாக்கள் அவர்களின் கண்ணீரைத் துடைத்துத் தேற்றுகின்றது.

உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவிகளுக்கு ஆன்மீக உபதேசங்களையும், தன்னம்பிக்கையையும் ஊட்டி, அவர்களை நல்வழிப்படுத்த உலமாக்கள் செய்யும் தியாகம் எவராலும் விலைமதிக்க முடியாதது.

எத்தனையோ துயரங்கள், கண்ணீர்கள், புறக்கணிப்புகள் மற்றும் சமூக அவலங்களைத் தாண்டி, இறைவனின் அளப்பெரும் கருணையினாலும், உலமாக்களின் அர்ப்பணிப்புமிக்க வழிகாட்டலினாலும் இந்தப் பெண் பிள்ளைகள் மாபெரும் சாதனையாளர்களாக உருவெடுக்கிறார்கள்!

மத்ரஸாவில் சேர்க்கப்பட்ட ஆரம்ப நோக்கம் கசப்பானதாக இருந்தாலும், அல்லாஹ்வின் புனித வேதத்தை நெஞ்சில் சுமந்து, தூய ஹதீஸ்களின் வழிகாட்டலை கற்றுத் தேர்ந்து, சமூகத்திற்கே நல்வழி காட்டும் ஆலிமாக்களாகவும், சிறந்த அறிஞர்களாகவும், ஒரு புதிய தலைமுறையை உருவாக்கும் சிறந்த குடும்பத் தலைவிகளாகவும் அவர்கள் வரலாற்று வெற்றி அடைந்து, குடும்பத்தின் சாபக்கேடுகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு, சமூகத்தின் ஆசீர்வாதங்களாக இவர்கள் மலர்வது ஓர் ஆன்மீகப் பெரு அதிசயமேயாகும்!

மத்ரஸாக்கள் என்பவை குடும்பப் பிரச்சினைகளின் சுமையைத் தட்டிக்கழிக்கும் ‘பராமரிப்பு மையங்கள்’ அல்ல; அவை சமூகத்தின் ஆன்மீக கலங்கரை விளக்கங்கள்.

பெற்றோர்கள் தங்களது பொறுப்பற்ற நடத்தைகளை உணர்ந்து, குடும்ப அமைதியைப் பேண வேண்டும். அத்துடன், எவ்வித பிரதிபலனுமின்றி சமூகத்தின் இடிந்துபோன குடும்பத்துப் பிள்ளைகளைத் தத்தெடுத்து, கண்ணீர் சிந்தி அவர்களை வெற்றியாளர்களாக மாற்றும் மத்ரஸாக்களுக்கும் அர்ப்பணிப்புடன் பாடுபடும் உலமாக்களுக்கும் முழு சமூகமும் நிதி ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் பக்கபலமாக நிற்க வேண்டும்.

குடும்பப் பிரச்சினைகளால் பிள்ளைகள் ஒதுக்கித் தள்ளப்படும் அவல நிலை மாறி, உண்மையான சமூக மறுமலர்ச்சிக்காகவும் இறையச்சத்திற்காகவும் மார்க்கக் கல்வியை நாடும் பொற்காலம் உருவாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பிரார்த்திப்போம்!

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

பராமரிப்பு நிலையங்களாக மாறுகின்றனவா பெண் பிள்ளைகளுக்கான மதுரசாக்கள்?

  • சமூகச் சீரழிவுகள், போதை கலாச்சாரம் மற்றும் நவீன தொழில்நுட்ப சவால்களுக்கு மத்தியில் பெண் பிள்ளைகளைப் பாதுகாக்கும் முக்கிய கேடயமாக மதுரசாக்கள் விளங்குகின்றன.
  • மார்க்கக் கல்வியை நோக்கமாகக் கொண்டிருப்பதை விட, குடும்பப் பிளவுகள் மற்றும் பெற்றோரின் பிரச்சினைகள் காரணமாகவே பல பெண் பிள்ளைகள் மதுரசாக்களில் சேர்க்கப்படும் அதிர்ச்சிப் பின்னணி அதிகரித்துள்ளது.
  • தவறான நிர்ப்பந்தங்களின் அடிப்படையில் சேர்க்கப்பட்டாலும், மார்க்க வழிகாட்டல் மூலம் அந்தப் பெண் பிள்ளைகள் சமூகத்தில் சிறந்த ஆளுமைகளாக உருவெடுக்கின்றனர்.

ஒவ்வொரு முஸ்லிமும் தனது வாழ்வின் அடிப்படை வழிகாட்டியான மார்க்கக் கல்வியைப் பெற்றுக்கொள்வது ஆன்மீகக் கடமையாகும். ஆனால், இன்றைய நவீன உலகில் சமூக வலைத்தளங்களின் நச்சுத் தாக்கம், முறையற்ற தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் தீவிரமாக வியாபித்து வரும் போதை கலாச்சாரம் என்பன முஸ்லிம் குடும்பங்களின் நிம்மதியை அடியோடு குலைத்து வருகின்றன. குறிப்பாக, “எமது பெண் பிள்ளைகள் இந்தச் சீரழிவுகளில் இருந்து தப்பித்து எவ்வாறு மானத்தோடும் ஒழுக்கத்தோடும் வாழப்போகிறார்கள்?” என்ற பெருங்கவலை ஒவ்வொரு விழிப்புணர்வுள்ள பெற்றோரின் இதயத்திலும் ஆறாத நெருப்பாக எரிந்துகொண்டிருக்கிறது.

இவ்வாறான நச்சுச் சூழலிலிருந்து தமது பிள்ளைகளைப் பாதுகாத்து, சிறந்த இறைபக்தியுள்ள ஆளுமைகளாக உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கில் அரபுக் கல்லூரிகளையும் (மத்ரஸாக்களையும்) மார்க்கக் கல்வி நிலையங்களையும் நோக்கிப் பயணிக்கும் பெற்றோர்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறத்தில் மத்ரஸாக்களை வெறும் ‘பாதுகாப்புப் புகலிடங்களாகவும்’, ‘பிள்ளைகளின் பராமரிப்பு நிலையங்களாகவும்’ மாற்றும் ஓர் அதிர்ச்சியளிக்கும் சமூக அவலம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகின்றது.

மறைக்கப்பட்ட பின்னணியும் கசப்பான சமூக யதார்த்தமும்

இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி, மார்க்கத்தை ஆழமாகக் கற்று சமூகத்திற்கு நற்பணி ஆற்றவேண்டும் என்ற தூய நோக்கில் சேர்க்கப்படும் பிள்ளைகளை விட, குடும்பங்களின் கடுமையான சிக்கல்களால் தள்ளிவிடப்படும் பெண் பிள்ளைகளின் எண்ணிக்கையே இன்று மத்ரஸாக்களில் அதிகமாகக் காணப்படுகின்றது.

தூய மார்க்கக் கல்வியைப் புகட்டி சமூகத்திற்குச் சிறந்த வழிகாட்டிகளை உருவாக்கும் உயரிய நோக்கோடு சில பெற்றோர்கள் தமது பெண் பிள்ளைகளை மதுரசாக்களில் சேர்த்தாலும், இதன் மறுபக்கத்தில் அதிர்ச்சியளிக்கும் ஒரு கசப்பான, பயங்கரமான யதார்த்தம் நிலவுகிறது.

குடும்பங்களில் ஏற்படும் கணவன்–மனைவி பிளவுகள், முறையற்ற உறவுகள், குடும்ப வறுமை, தாய்மார் வெளிநாடு செல்லுதல் மற்றும் பெற்றோரின் முறையற்ற நடத்தைகள் போன்ற காரணங்களால், பெண் பிள்ளைகளுக்கு ஒரு பாதுகாப்பான இடமாக மதுரசாக்களைப் பயன்படுத்தும் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது.

இத்தகைய மனதை உலுக்கும் குடும்பப் பின்னணிகளினால் கைவிடப்படும் அப்பாவிப் பெண் பிள்ளைகளே இன்று மத்ரஸாக்களைத் தஞ்சம் அடைகின்றனர். வீட்டில் நிலவும் போர்க்கள சூழலில் இருந்து தப்பித்து மத்ரஸா சுவர்களுக்குள் வந்து சேரும் இப்பெண் பிள்ளைகளின் உள்ளங்கள் ஏற்கனவே ஆழமான ரணங்களால் கிழிபட்டுக் கிடக்கின்றன.

தமது எவ்வித குற்றமும் இன்றி, பெற்றோரின் பொறுப்பற்ற சண்டைகளினாலும் சுயநலப் பிரிவுகளினாலும் மத்ரஸாக்களில் சேர்க்கப்படும் இந்தப் பெண் பிள்ளைகள் அனுபவிக்கும் உளவியல் மற்றும் உணர்வு ரீதியான வலிகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.

வார இறுதி நாட்களில் மற்ற மாணவிகளைப் பார்க்க அவர்களது பெற்றோர்கள் பாசத்தோடு பழங்களும் பலகாரங்களும் கொண்டு வரும் போது, எவரும் வராத மத்ரஸா வாசலையே வெறித்துப் பார்த்து ஏங்கி நிற்கும் அந்தச் சிறுமிகளின் மௌனக் கண்ணீர் கல்நெஞ்சையும் கரையச் செய்யும்.

இத்தகைய இக்கட்டான குடும்பப் பின்னணியில் இருந்து நிர்ப்பந்தமாக மதுரசாக்களில் சேர்க்கப்படும் பெண் பிள்ளைகளை, மார்க்க அறிஞர்களான உலமாக்கள் தங்களின் சொந்தப் பிள்ளைகளைப் போன்று அரவணைத்து வழிகாட்டுகின்றனர்.

பெற்றோரிடமிருந்து மாதாந்தக் கட்டணங்களோ, புத்தகங்கள் மற்றும் சீருடைகளுக்கான செலவுகளோ கிடைக்காத சூழ்நிலையிலும், அந்தப் பிள்ளைகளின் கல்வி மற்றும் அடிப்படைத் தேவைகளைத் தமது சொந்தப் பொறுப்பிலும் நிறுவன நிதியிலும் சுமந்து, கல்வி புகட்டும் உன்னதப் பணியை உலமாக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

விடுமுறைக் கால சவால்களும் உளவியல் மீட்டெடுப்பும்

மத்ரஸாக்களுக்கு வழங்கப்படும் விடுமுறை நாட்கள் என்பது ஏனைய மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தருணமாக இருக்கும் வேளையில், இந்தச் சிதைந்த குடும்பத்து மாணவிகளுக்கோ அது ஒரு “நரக வேதனையாகவும் மரண பயமாகவும்” மாறுகிறது.

வீட்டுக்குச் சென்றால் அங்கே அன்பான வரவேற்போ, ஆதரவான பெற்றோரோ இருப்பதில்லை. மாறாக சண்டைகளும், அவமானங்களும், அவமதிப்புகளுமே காத்திருக்கின்றன. அத்தகைய நச்சுச் சூழலில் சிக்கும் சில பெண் பிள்ளைகள் கடுமையான மன அழுத்தத்திற்குள்ளாகி விபரீதமான, தவறான முடிவுகளை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இதனால், மத்ரஸா நிர்வாகத்திற்கும் ஆசிரியைகளுக்கும் ஒவ்வொரு விடுமுறைக் காலமும் பெருங்கவலையாகவே முடிகிறது:

“விடுமுறைக்குச் சென்ற நமது ஆசைப் பிள்ளை மீண்டும் உயிரோடு, ஈமானோடு, ஒழுக்கத்தோடு மத்ரஸா திரும்புமா?” என்ற அச்சமும் கேள்வியும் அவர்களின் நெஞ்சில் முள்ளாகத் தைத்துக் கொண்டே இருக்கிறது.

எனினும், மீண்டும் மதுரசாக்களுக்குத் திரும்பும் அந்த மாணவிகளுக்குத் தகுந்த உளவியல் ஆலோசனைகளையும் ஆன்மீக வழிகாட்டல்களையும் வழங்கி, அவர்களை அந்த இக்கட்டுகளிலிருந்து மீட்பதில் உலமாக்களின் பங்கு அளப்பரியதாக உள்ளது.

சாம்பலிலிருந்து எழும் பீனிக்ஸ் பறவைகள்: போராட்டமே வெற்றியின் அடித்தளம்!

பெற்றோர்களால் கைவிடப்பட்ட பிள்ளைகளுக்கு ஒரு தகப்பனின் நிழலாகவும், தாயின் கனிவாகவும் மாறி, மதுரசாக்கள் அவர்களின் கண்ணீரைத் துடைத்துத் தேற்றுகின்றது.

உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவிகளுக்கு ஆன்மீக உபதேசங்களையும், தன்னம்பிக்கையையும் ஊட்டி, அவர்களை நல்வழிப்படுத்த உலமாக்கள் செய்யும் தியாகம் எவராலும் விலைமதிக்க முடியாதது.

எத்தனையோ துயரங்கள், கண்ணீர்கள், புறக்கணிப்புகள் மற்றும் சமூக அவலங்களைத் தாண்டி, இறைவனின் அளப்பெரும் கருணையினாலும், உலமாக்களின் அர்ப்பணிப்புமிக்க வழிகாட்டலினாலும் இந்தப் பெண் பிள்ளைகள் மாபெரும் சாதனையாளர்களாக உருவெடுக்கிறார்கள்!

மத்ரஸாவில் சேர்க்கப்பட்ட ஆரம்ப நோக்கம் கசப்பானதாக இருந்தாலும், அல்லாஹ்வின் புனித வேதத்தை நெஞ்சில் சுமந்து, தூய ஹதீஸ்களின் வழிகாட்டலை கற்றுத் தேர்ந்து, சமூகத்திற்கே நல்வழி காட்டும் ஆலிமாக்களாகவும், சிறந்த அறிஞர்களாகவும், ஒரு புதிய தலைமுறையை உருவாக்கும் சிறந்த குடும்பத் தலைவிகளாகவும் அவர்கள் வரலாற்று வெற்றி அடைந்து, குடும்பத்தின் சாபக்கேடுகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு, சமூகத்தின் ஆசீர்வாதங்களாக இவர்கள் மலர்வது ஓர் ஆன்மீகப் பெரு அதிசயமேயாகும்!

மத்ரஸாக்கள் என்பவை குடும்பப் பிரச்சினைகளின் சுமையைத் தட்டிக்கழிக்கும் ‘பராமரிப்பு மையங்கள்’ அல்ல; அவை சமூகத்தின் ஆன்மீக கலங்கரை விளக்கங்கள்.

பெற்றோர்கள் தங்களது பொறுப்பற்ற நடத்தைகளை உணர்ந்து, குடும்ப அமைதியைப் பேண வேண்டும். அத்துடன், எவ்வித பிரதிபலனுமின்றி சமூகத்தின் இடிந்துபோன குடும்பத்துப் பிள்ளைகளைத் தத்தெடுத்து, கண்ணீர் சிந்தி அவர்களை வெற்றியாளர்களாக மாற்றும் மத்ரஸாக்களுக்கும் அர்ப்பணிப்புடன் பாடுபடும் உலமாக்களுக்கும் முழு சமூகமும் நிதி ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் பக்கபலமாக நிற்க வேண்டும்.

குடும்பப் பிரச்சினைகளால் பிள்ளைகள் ஒதுக்கித் தள்ளப்படும் அவல நிலை மாறி, உண்மையான சமூக மறுமலர்ச்சிக்காகவும் இறையச்சத்திற்காகவும் மார்க்கக் கல்வியை நாடும் பொற்காலம் உருவாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பிரார்த்திப்போம்!

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular