Sponsored Advertisementspot_img
HomeLocal Newsசிறைச்சாலைகளிலிருந்து எஸ்கேப் ஆன 1,178 கைதிகள்!

சிறைச்சாலைகளிலிருந்து எஸ்கேப் ஆன 1,178 கைதிகள்!

நாட்டின் சிறைச்சாலைகளிலிருந்து கடந்த சில வருட காலப்பகுதியில் 1,178 கைதிகள் தப்பியோடியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிறைச்சாலைகளின் பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு நடைமுறைகள் தொடர்பில் பெரும் கேள்விகளையும் அதிர்வலைகளையும் இந்த உத்தியோகபூர்வ தரவு ஏற்படுத்தியுள்ளது.

திணைக்களத்தின் விரிவான புள்ளிவிபரங்களின்படி, 2019 ஆம் ஆண்டில் 153 பேரும், 2020 இல் 110 பேரும், 2021 இல் 103 பேரும் சிறைகளிலிருந்து தப்பியோடியுள்ளனர். இந்த எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் சடுதியாக 231 ஆக அதிகரித்ததுடன், தொடர்ந்து 2023 இல் 207 பேரும், 2024 இல் 188 பேரும், 2025 ஆம் ஆண்டில் 186 பேரும் சிறைக்காவலர்களின் கண்காணிப்பை மீறி தப்பியோடியுள்ளனர்.

இதில் மிகவும் ஆபத்தான விடயம் யாதெனில், இவ்வாறு தப்பிய 1,178 பேரில் 474 பேர் மாத்திரமே பாதுகாப்புப் படையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 734 கைதிகள் எவ்வித தடையுமின்றி இன்றுவரை பொதுவெளியில் சுதந்திரமாக நடமாடித் திரிவதாக குறித்த அறிக்கை பகிரங்கப்படுத்தியுள்ளது.

இந்த தீவிர சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல் மற்றும் ஏனைய நிர்வாகச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் திட்டவட்டமாக உறுதியளித்துள்ளது.

குறிப்பாக, 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அமுல்படுத்தப்பட்ட பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வுகளை மாகாண மட்டங்களில் முன்னெடுப்பதற்கும், நீண்டகாலமாக நிலுவையிலுள்ள வழக்குகளின் விசாரணைகளை விரைவுபடுத்துவதற்காக நீதிபதிகளின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிப்பதற்கும் அரசாங்கம் கொள்கையளவில் நடவடிக்கை எடுத்துள்ளது.

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

சிறைச்சாலைகளிலிருந்து எஸ்கேப் ஆன 1,178 கைதிகள்!

நாட்டின் சிறைச்சாலைகளிலிருந்து கடந்த சில வருட காலப்பகுதியில் 1,178 கைதிகள் தப்பியோடியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிறைச்சாலைகளின் பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு நடைமுறைகள் தொடர்பில் பெரும் கேள்விகளையும் அதிர்வலைகளையும் இந்த உத்தியோகபூர்வ தரவு ஏற்படுத்தியுள்ளது.

திணைக்களத்தின் விரிவான புள்ளிவிபரங்களின்படி, 2019 ஆம் ஆண்டில் 153 பேரும், 2020 இல் 110 பேரும், 2021 இல் 103 பேரும் சிறைகளிலிருந்து தப்பியோடியுள்ளனர். இந்த எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் சடுதியாக 231 ஆக அதிகரித்ததுடன், தொடர்ந்து 2023 இல் 207 பேரும், 2024 இல் 188 பேரும், 2025 ஆம் ஆண்டில் 186 பேரும் சிறைக்காவலர்களின் கண்காணிப்பை மீறி தப்பியோடியுள்ளனர்.

இதில் மிகவும் ஆபத்தான விடயம் யாதெனில், இவ்வாறு தப்பிய 1,178 பேரில் 474 பேர் மாத்திரமே பாதுகாப்புப் படையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 734 கைதிகள் எவ்வித தடையுமின்றி இன்றுவரை பொதுவெளியில் சுதந்திரமாக நடமாடித் திரிவதாக குறித்த அறிக்கை பகிரங்கப்படுத்தியுள்ளது.

இந்த தீவிர சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல் மற்றும் ஏனைய நிர்வாகச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் திட்டவட்டமாக உறுதியளித்துள்ளது.

குறிப்பாக, 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அமுல்படுத்தப்பட்ட பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வுகளை மாகாண மட்டங்களில் முன்னெடுப்பதற்கும், நீண்டகாலமாக நிலுவையிலுள்ள வழக்குகளின் விசாரணைகளை விரைவுபடுத்துவதற்காக நீதிபதிகளின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிப்பதற்கும் அரசாங்கம் கொள்கையளவில் நடவடிக்கை எடுத்துள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular