Tuesday, July 21, 2026
Sponsored advertisementspot_img
Home Blog

நாகவில்லுவில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வின் நினைவுதினம்!

பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நாகவில்லுவில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு!

இலங்கை திருநாட்டில் பெளதீக ரீதியான பல வேலைத்திட்டங்களையும், இடம்பெயர்வு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பறந்துபட்ட அறிவினையும் கொண்டிருந்த எருக்கலம்பிட்டியை சேர்ந்த மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது வருட நினைவு தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

அந்த வகையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் நினைவுப் பேருரையும், புத்தக வெளியீடு நிகழ்வும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 25.08.2025 புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், புத்தி ஜீவிகள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்தகொண்டமை விஷேட அம்சமாகும்.

சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் பொருளாளர் ஜனாப் ஏ.ஜி. அனீஸ் (Bsc.Agri) அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

மேலும் இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீட, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களினால் நூல் அறிமுக உரையும், நினைவுப் பேருரையும் மிகவும் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்டது.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பங்களிப்பு அளப்பெரியது என நினைவு கூறிய பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன், வடக்கில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் முஸ்லிம்களின் இடம்பெயர்வு குறித்து அதீத அக்கறையுடன் செயற்பட்ட மிக முக்கியமானவர் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் எனவும் எடுத்துரைத்தார்.

வடக்கு முஸ்லிம்களின் இடம்பெயர்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் பலதரப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தி, சர்வதேசம் வரை இவ்விடயங்களை கொண்டுசென்ற மகான் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் என பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் தனது உரையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் புதல்வி சட்டத்தரணி எப்.சப்னா ஹஸ்புல்லாஹ் அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், நூல் வெளியீடு நிகழ்வும் இடம்பெற்றது.

நூலின் முதற்பிரதியை ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் (GS) அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

மேலும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் செயலாளர் ஜனாப் எஸ்.எச்.எம். றிஸ்னி அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதுடன், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பாரியாருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், பேராசிரியர்கள், கல்விமான்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலைச் சமூகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், ஈ நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனம் ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்காக ஒன்று திரண்ட அரசியல் தலைவர்கள்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவிதியையும் விட, சமூகத்தின் உரிமைகளுக்கான பிரச்சினைகளை தோற்றிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியலை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கல் அணி சாம்பியன் ஆனது!

0

‘நேஷன்ஸ் லீக்’ கால்பந்தில் போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனது. பைனலில் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 5-3 என ஸ்பெயினை வீழ்த்தியது.

ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக ‘நேஷன்ஸ் லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. நேற்று ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த பைனலில், போர்ச்சுகல், நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 21வது நிமிடம் ஜுபிமெண்டி (ஸ்பெயின்), 26வது நிமிடம் மெண்டிஸ் (போர்ச்சுகல்) தலா ஒரு கோல் அடித்தனர். 45வது நிமிடம் மைக்கேல் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 61 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 138வது கோல் இது. 90 நிமிட முடிவில் போட்டி 2-2 என சமன் ஆனது. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. காயம் காரணமாக 88 வது நிமிடம் வெளியேறிய ரொனால்டோ, இதில் பங்கேற்கவில்லை.

முதல் 3 வாய்ப்பில் போர்ச்சுகலின் ராமோஸ், விடின்ஹா, பெர்ணான்டஸ் கோல் அடித்தனர். மறுபக்கம் ஸ்பெயின் தரப்பில் மெரினோ, பயேனா, இஸ்கோ கோல் அடிக்க 3-3 என ஆனது.

4வது வாய்ப்பில் மெண்டெஸ் (போர்ச்சுகல்) கோல் அடிக்க, ஸ்பெயினின் மோராட்டோ அடித்த பந்தை கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்து அசத்தினார்.

5வது வாய்ப்பில் நெவேஸ் கோல் அடித்தார். இதையடுத்து 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் ‘திரில்’ வெற்றி பெற்றது. 2019க்குப் பின் இத்தொடரில் மீண்டும் சாம்பியன் ஆனது.

தில்லையடியில் சிக்கிய கடத்தல் பீடி இலைகள்!

0

புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் வேன் ஒன்றும் பறிமுதல்!

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட ஒரு வேன் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், புத்தளம் பொலிஸாருடன் இணைந்து தில்லையடி பகுதியில் நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகளானது வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வேன் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் ஆபத்தா?

விண்வெளியில் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களை சீனா நினைத்தால் வெறும் 12 மணி நேரத்தில் தாக்கி அழித்துவிட முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற செய்தி ஊடகத்தில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது சீனா 99 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் நான்ஜிங் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளிக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் வூ யுன்ஹுவா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் எலான் மஸ்கின் 1400 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெறும் 12 மணி நேரத்தில் காலி செய்துவிடும். சீன செயற்கைக்கோளில் லேசர், நுண் அலைகளை உருவாக்கும் கருவி, உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெறுமென நெட்வொர்க் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. தவிர, ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம்சாட்டி வருகிறது.

அதாவது, உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைன் படைகளுக்கு தகவல்கள் கொடுக்கவும், ரஷ்ய எல்லையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்ய போரின்போது அப்போதைய உக்ரைனின் துணைப் பிரதமரான மைக்கைலோ ஃபெடோரோவ், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை உடனடியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், “உடனடியாக சேவை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

உக்ரைன் போருடன் மட்டுமே ஸ்டார்லிங்க் நிற்காது, நாளை சீனாவுக்கும்-தைவானுக்கும் பஞ்சாயது ஏற்பட்டால் அப்போதும், தைவானுக்கு சப்போர்ட் செய்ய ஸ்டார்லிங்க் வரும். எனவே இந்த கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு இதற்கான பணிகளை சீனா தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ‘கியான்ஃபான் மெகா-விண்மீன் திட்டம்’ (Qianfan mega-constellation project) என்றும் பெயரிட்டிருந்தது. நோக்கம் உலகம் முழுவதும் இணைய தொடர்பை வழங்குவதாகும். இதற்காக மொத்தம் 15,000 சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவ சீனா முடிவெடுத்தது. இதன் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. இதில் 18 செயற்கைக்கோள்கள் இருந்தன.

ஒவ்வொன்றும் சுமார் 300 கி.கி எடையில் இருந்தது. இவை பூமியிலிருந்து 800 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோன்று 2024 டிசம்பரில் அடுத்து இரண்டு தொகுதி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. தற்போது மொத்தம் 99 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. 15,000 செயற்கைக்கோள்களை 3 கட்டங்களாக ஏவ இருக்கிறது. முதல் கட்டத்தில் 1,296 செயற்கைக்கோள்கள் ஏவப்படும். இதில் 648 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் கன்னி உரை

0

அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்

தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:

மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.

ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.

மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.

மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.

நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.

மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தலில் இவ்வாறுதான் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்

0

அதிகாரிகள் மற்றும் பிற தேவைகள் முடிந்த பிறகு, மாலை 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 4.15 மணிளவில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் 21ம் திகதி வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் பெறப்பட்டதும், அதிகாரிகள் மற்றும் இதர தேவைகள் முடிந்ததும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இரவு 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

மாலை 4.15 மணிளவில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

அத்துடன் மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முடிவுகள் கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையே முதலில் எண்ணப்படும்.

அந்தக் கணக்கெடுப்பின் பின்னர் (மாவட்ட அளவில் எண்ணும் பணி) முதலில் வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

அதன் பிறகு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அது தயாரிக்கப்படுகிறது.

தேர்தல்கள் செயலகமே ஒட்டுமொத்த முடிவுகளைக் கணக்கிடும்.

எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளாரா என சரிபார்க்கப்படும்.

அப்படியானால், அந்த நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்படும்.

அப்போது ஜனாதிபதியை நாங்கள் அறிவிப்போம்.

எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்காவிடின், விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும்.

அங்கு, அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் வைத்து விட்டு  மீதமுள்ள 36 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்” என்றார்.

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறும்

0

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வாத்தியாசலையாக மாற்றம் பெரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன தலைமையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

புத்தளம் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற புத்தளம் தல வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க குறித்த வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

மேலும் புத்தளத்தில் மீன் பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் மீன் பிடி துறைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டமை புத்தளம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாட்டில் நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை நிலை நாட்ட தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தனது பிரதான நோக்கம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மொட்டுக்கட்சிக்கு எதிராக நிற்கும் முக்கிய அமைச்சர்கள்

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காதிருக்கவும், மொட்டு சின்னத்தில் தனியாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த கடிதம் நேற்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் அரசியல் குழுவில் முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அந்த கடிதத்தை நிராகரிக்க அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 பேர் அங்கம் வகிப்பதுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 72 பேர் பங்கேற்றனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த 11 பேர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மஹிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சஹன் பிரதீப், ரமேஸ் பத்திரன, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, கனக ஹேரத், மொஹான் பிரியதர்ஷன ஆகியோர் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அத்துடன் பிறிதொரு கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 6 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறப்பட்ட தம்மிக பெரேரா தொடர்பில் அரசியல் குழுக் கூட்டத்தின்போது எந்தவித கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத 11 பேர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சைனப் ஆரம்பப் பாடசாலைக்கு ஆளுநர் வருகை!

0

புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலையின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் யஹியா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் ஜெய்னப் பாடசாலைக்கு 22 லட்சம் ரூபா பெறுமதியான நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தல் மற்றும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் செயற்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் கற்றல் உபகரணம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கௌரவ அதிதியாக புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அர்ஜுன ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரம்ப பாடசாலையின் முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஆரம்ப பாடசாலை ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்பு குறித்து விரிவாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் துரித வளர்ச்சி பற்றியும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் செயற்திட்டத்திற்கு வடமேல் மாகாண ஆளுநர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஷி ஜமால்தின், இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் அயல் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு
நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறை

0

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஓவியப்போட்டியில் எருக்கலம்பிட்டி மாணவன் முதலாமிடம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.

வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.

முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா

0

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளனர்.

சாந்த நிரியல்ல உட்பட 15 பேர் கொண்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் அறிவித்தலுக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி திங்கட்கிழமை புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ “அத தெரண” விற்கு தெரிவித்தார்.

புத்தளம் எருக்கலம்பிட்டியில் கடும் வெள்ளம்

0

புத்தளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் பகுதி முழுதும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

புத்தளம், தில்லையடி, பாலாவி, புத்தளம் எருக்கலம்பிட்டி, ஹிதாயத் நகர்,  மதுரங்குளி மற்றும் ஏனைய பல கிராமங்களும் வெள்ளித்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1500 குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவருவதுடன், அனைத்து வீடுகளும் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்றிற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஐநூற்றுக்கும் அதிகமான வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் மூன்று வேலைகளிலும் ஊர் தனவந்தர்களின் உதவியுடனும், பள்ளிவாசல் நிர்வாக சபையின் வழிகாட்டலுடனும் வழங்கப்பட்டு வருவதுடன், ஊர் மக்களுக்கும் உணவு விநியோகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவர்களுக்கான நிவாரண உதவிகள் இதுவரை அரசாங்கத்தினால் வழங்கப்படாத போதிலும், ஊர் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு விநியோகங்கள் இதுவரை  வழங்கப்பட்டு வருகின்றது.

புத்தளம் பொத்துவில்லு பகுதியில் உள்ள குளம் மழை நீரினால்  பெருக்கெடுத்துள்ளதால் குறித்த குளத்து நீர் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்திற்குள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக ஊடறுத்து செல்வதால் வீடுகள் தொடர்ந்தும் நீருள் மூழ்கியுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிவாரண உதவிக்காக பல மக்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

போலை அடிக்காமல் ஆளை அடித்த அர்ஜென்டினா! WWE பாணி அராஜகம்!

மெட்லைஃப் மைதானத்தில் நேற்று நடந்த 2026 ஃபீஃபா உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி, வரலாற்றில் ஒரு மறக்க முடியாத ஆட்டமாக மாறியுள்ளது. முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினாவும், ஸ்பெயின் அணியும் மோதிய இந்த ஆட்டம், கால்பந்து மைதானத்தை விட ஒரு WWE மல்யுத்த ரிங்கைத்தான் அதிகம் நினைவூட்டியது.

ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அர்ஜென்டினா அணி கடுமையான உடல் ரீதியான தாக்குதல்களை கையில் எடுத்தது. ஸ்பெயின் வீரர்களின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், அவர்களை முரட்டுத்தனமாக இடித்து தள்ளுவது, சட்டையை பிடித்து இழுப்பது என அர்ஜென்டினா வீரர்கள் முரட்டு ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக, லிசாண்ட்ரோ மார்டினெஸ், லியான்ட்ரோ பரேடஸ் மற்றும் கிறிஸ்டியன் ரொமேரோ ஆகியோர் நடுவரின் கண் முன்னாலேயே ஸ்பெயின் வீரர்களை தாக்கி மஞ்சள் அட்டைகளைப் பெற்றனர்.

இருப்பினும், அர்ஜென்டினாவின் இந்த ரவுடித்தனமான அப்ரோச்சை கண்டு ஸ்பெயின் அணி சற்றும் பதற்றமடையவில்லை.

அர்ஜென்டினாவின் ஒவ்வொரு முரட்டு அடியையும் புன்னகையுடனும், நிதானத்துடனும் எதிர்கொண்டது. பந்தை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்த ஸ்பெயின், பாசிங் கேமில் கவனம் செலுத்தி அர்ஜென்டினாவை ஓடவிட்டது.

65 சதவீதத்திற்கும் மேலாக பந்தை தன் வசம் வைத்திருந்த ஸ்பெயின், அர்ஜென்டினாவின் மோசமான ஆட்டத்திற்கு தங்களின் கிளாஸ் ஆட்டத்தின் மூலமே பதிலடி கொடுத்தது.

ஆட்டத்தின் 82-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் என்சோ பெர்னாண்டஸ், ஸ்பெயின் இளம் டிஃபெண்டர் பாவ் குபார்சியை மிக மோசமான முறையில் கீழே தள்ளி இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார்.

இதனால் அர்ஜென்டினா 10 வீரர்களாக குறைந்தது. 90 நிமிடங்கள் முடிவிலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு சென்றது.

கூடுதல் நேரத்தின் போது ஸ்பெயின் அடித்த ஒரு கோல் நடுவரால் மறுக்கப்பட்டாலும், அவர்கள் தங்களின் பொறுமையை இழக்கவில்லை. நடுவரிடம் சண்டைக்கு செல்லவில்லை.

இறுதியாக ஆட்டத்தின் 106-வது நிமிடத்தில், நிக்கோ வில்லியம்ஸ் கொடுத்த அற்புதமான அசிஸ்ட்டை, மாற்று வீரராக களம் புகுந்த பெரான் டோரஸ் கோலாக மாற்றினார்.

மைதானமே அதிரும் வகையில் ஸ்பெயின் ரசிகர்கள் இந்த வரலாற்று கோலை கொண்டாடினர்.

கோலை இழந்த பின் அர்ஜென்டினாவின் ஆக்ரோஷம் எல்லை மீறியது. ஆட்டத்தின் இறுதி விசிலுக்குப் பிறகு, அர்ஜென்டினாவின் லியான்ட்ரோ பரேடஸ் ஸ்பெயின் வீரர்களின் தொண்டையைப் பிடித்து தள்ளியதால் அவருக்கு நேரடியாக சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.

அர்ஜென்டினா வீரர்கள் இத்தனை அராஜகங்களை செய்த போதிலும், கோப்பையை வென்ற ஸ்பெயின் அணி எந்தவொரு சண்டைக்கும் செல்லாமல், அர்ஜென்டினா வீரர்களுக்கு கைகொடுத்து தங்களின் நிதானத்தையும் நாகரீகத்தையும் வெளிப்படுத்தினர்.

லியோனல் மெஸ்ஸியின் கடைசி உலகக்கோப்பை கனவை உடைத்து, முரட்டுத்தனத்தை தனது பொறுமையான ஆட்டத்தால் வீழ்த்தி, 2010க்கு பின் தங்களின் இரண்டாவது உலகக்கோப்பை மகுடத்தை சூடியுள்ளது ஸ்பெயின்!

கால்பந்து உலகில் ‘கிளாஸ்’ எப்போதும் ‘மாஸ்’ என்பதை ஸ்பெயின் மீண்டும் நிரூபித்துள்ளது.

EAST RUTHERFORD, NEW JERSEY – JULY 19: Rodri #16 of Spain lifts the FIFA World Cup Winner’s Trophy after the team’s victory following the FIFA World Cup 2026 Final match between Spain and Argentina at New York New Jersey Stadium on July 19, 2026 in East Rutherford, New Jersey. (Photo by David Ramos/Getty Images)

அர்ஜென்டினா தோல்வியை பலரும் கொண்டாடுவது ஏன்? ஷாக் பின்னணி!

அர்ஜென்டினா ஸ்பெயின் இடையே நடந்த உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் ஸ்பெயின் 1-0 என்ற கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி வென்றது. அர்ஜென்டினாவில் தோல்வியை உலக நாடுகள் பலவும் கொண்டாடி வருகின்றன. சக லத்தீன் அமெரிக்க நாடுகளே கூட இதை கொண்டாட தொடங்கி உள்ளன.

சர்வதேச கால்பந்து அரங்கில் அர்ஜென்டினா அணி பல வெற்றிகளைக் குவித்து இருந்தாலும், அந்த அணியின் வீரர்களும் ரசிகர்களும் வெளிப்படுத்தும் அதி தீவிர இனவெறிப் போக்கு உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்திய தொடர்களில் மாற்று நாட்டு வீரர்களை நோக்கி அர்ஜென்டினா வீரர்கள் செய்த இனவெறி தாக்குதல்கள், பாடிய இனவெறிப் பாடல்கள் மற்றும் ரசிகர்களின் மோசமான நடத்தைகள், லத்தீன் அமெரிக்க நாடான அர்ஜென்டினா எவ்வாறு ஒரு தீவிர வலதுசாரி நாடாக மாறியுள்ளது என்ற விவாதத்தை உலக அரங்கில் தீவிரப்படுத்தியுள்ளது.

தற்போது உலககோப்பை தோல்வி இந்த விவாதத்தை மேலும் தீவிரமாக்கி உள்ளது

போலிப் பெருமிதம்

அர்ஜென்டினா ஒரு லத்தீன் அமெரிக்க நாடாக இருந்தாலும், பிரேசில் அல்லது கொலம்பியா போன்ற அண்டை நாடுகளைப் போல தங்களை இடதுசாரி நாடாக அடையாளப்படுத்திக் கொள்ள அது வரலாற்று ரீதியாக மறுத்து வருகிறது.

19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் அந்நாட்டு பிரதமர்கள், நிர்வாகிகள் திட்டமிட்டு ஐரோப்பிய குடியேற்றங்களை ஊக்குவித்தனர். நாங்கள் அனைவரும் ஐரோப்பாவிலிருந்து கப்பல்களில் வந்தவர்களின் வாரிசுகள் என்று கூறிக்கொண்டு நாட்டிற்கு உள்ளே ஐரோப்பிய மக்கள் அதிக அளவில் குடியேற வழி ஏற்படுத்திக்கொடுத்தனர்.

இந்த வரலாற்று கொடூரம்தான், இன்றைய அர்ஜென்டினாவின் தீவிர வலதுசாரி இனவாதப் போக்குக்கு அடிப்படை அஸ்திவாரமாக மாறியுள்ளது. அதாவது அர்ஜென்டினா நாட்டை ஆக்கிரமித்து, நாட்டை கட்டுப்பாட்டில் எடுத்து, அந்த நாட்டு பூர்வகுடிகளையே ஓரம்கட்டியதுதான் தற்போது உள்ள அர்ஜென்டினியர்களின் உண்மையான கதை!

வீரர்களும் ரசிகர்களும் காட்டும் இனவெறி

அர்ஜென்டினா கால்பந்து கலாச்சாரத்திலும் இந்த இனவெறிப் போக்கு மிக அப்பட்டமாக வெளிப்படுகிறது. 2024 கோபா அமெரிக்கா வெற்றிக்குப் பிறகு, நட்சத்திர வீரர் என்ஸோ பெர்னாண்டஸ் உள்ளிட்ட அர்ஜென்டினா வீரர்கள் பிரான்ஸ் நாட்டு கறுப்பின வீரர்களின் ஆப்பிரிக்க வம்சாவளியை இழிவுபடுத்தும் வகையில் பேருந்தில் இனவெறிப் பாடலைப் பாடி கிண்டல் செய்தனர். இது சர்வதேச அளவில் பெரும் கண்டனத்தைப் பெற்றது.

இதுமட்டுமன்றி, உலகக் கோப்பைத் தொடர்களின் போது மாற்று நாட்டு ரசிகர்களையும், கறுப்பின வீரர்களையும் அர்ஜென்டினா ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்வதும், வீரர்களை களத்திலே கடுமையாக நடத்துவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

அண்டை நாடான மெக்சிகோ மக்களை நோக்கியும் தீவிரமான வெறுப்புப் பிரச்சாரத்தை அந்நாட்டு மக்களே முன்னெடுப்பது வழக்கம்.

தீவிர வலதுசாரி அரசியல்

தற்போது அர்ஜென்டினாவில் அதிபர் ஜாவியர் மிலெயின் தலைமையில் தீவிர வலதுசாரி ஆட்சி நடைபெற்று வருகிறது.

தீவிர இனவெறி, நிறவெறி கொள்கையைக் கொண்ட இந்த அரசு அங்கே மக்கள் இடையே மேலும் வெறுப்பை திணித்து வருகிறது. இது தற்போது உலகக்கோப்பையிலும் தெரிய தொடங்கி உள்ளது.

48 நாடுகள் பங்கேற்கும் உலகக் கோப்பையிலேயே, முற்றிலும் வெள்ளையின வீரர்களை மட்டுமே கொண்ட அணியாக அர்ஜென்டினா தனித்து நிற்பதற்கு பின் இந்த நிறவெறிதான் காரணம்!

இதன் காரணமாக, ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்க நாடுகளும் தற்போது அர்ஜென்டினாவுக்கு எதிராகத் திரும்பியுள்ளன. பிரேசில், மெக்சிகோ, சிலி, உருகுவே போன்ற நாடுகளின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் அர்ஜென்டினா இல்லாத லத்தீன் அமெரிக்கா என்ற பிரச்சாரத்தைத் தீவிரமாக முன்னெடுத்து, அர்ஜென்டினாவுக்கு எதிராக விளையாடும் அணிகளை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர். உலகக்கோப்பை இறுதிப் போட்டியிலும் இவர்கள் ஸ்பெயின் அணிக்கே ஆதரவு அளித்தனர்.

விளையாட்டு என்பது உலக மக்களை இணைக்கும் பாலம் என்பதை மறந்து, போலிப் பெருமிதத்தாலும் தீவிர வலதுசாரி அரசியலாலும் அர்ஜென்டினா ஒரு மோசமான நாடாக மாறி வருவது கால்பந்து ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ள நீரில் 8 அடி மூழ்கிய வீடுகள்: உரிமைப் பத்திரம் இல்லாததால் இழப்பீடு மறுப்பு!

0

சொந்த மண்ணிலேயே பிறந்து, வளர்ந்து, அங்கேயே தங்கள் ஆயுளைக் கழித்து விட்ட பிறகும், “நீங்கள் இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள் இல்லை” என்று கூறப்பட்டால் அந்த மக்களின் வேதனை எப்படி இருக்கும்? அப்படியொரு கண்ணீர்க் கதையைத்தான் தங்கோட்டுவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஜங்குராவெல, கல்வக மற்றும் அட்டியாவல ஆகிய கிராம மக்கள் பல தலைமுறைகளாகச் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.

மாவோயா ஆற்றை அண்டி அமைந்துள்ள இக்கிராம மக்களின் பிரதான ஜீவனோபாயமே செங்கல் மற்றும் ஓட்டு உற்பத்திதான். தமது தொழில் தேவைக்காகவும், மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காகவும் பல தலைமுறைகளாக மாவோயாவைச் சுற்றியே இவர்கள் தமது குடியிருப்புகளை அமைத்துக் கொண்டனர். காலப்போக்கில் மக்கள் தொகை பெருகியபோது, அன்றைய அரசியல்வாதி ஒருவரால் ஜங்குராவெல குளத்துப்பகுதியில் இவர்கள் குடியமர்த்தப்பட்டனர். ஆனால், இன்றுவரை அவர்களுக்கான சட்டப்பூர்வ காணி உரிமை வழங்கப்படவே இல்லை!

இவர்களின் வேதனையை மேலும் இரட்டிப்பாக்கியது அண்மையில் வீசிய ‘திட்வா’ சூறாவளிதான்! மா ஓயா பெருக்கெடுத்ததால் இவர்களின் வீடுகள் சுமார் 8 அடி உயரத்திற்கு நீரில் மூழ்கி நாசமாகின. ஆனால், காணிப் பத்திரம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக, வீடுகளைக் கழுவுவதற்கு வழங்கப்பட்ட சிறிய தொகையைத் தவிர, உடைமைகளை இழந்த இந்த ஏழை மக்களுக்குச் சதமேனும் இழப்பீடு கிடைக்கவில்லை.

“நாங்கள் திருமணம் முடித்து 30 வருடங்களாகிறது. வாக்காளர் பட்டியலில் பெயரிருக்கிறது, வீட்டிற்கு மின்சாரமும் தந்திருக்கிறார்கள். தேர்தலின்போதும், கரண்ட் தரும்போதும் எங்களை இந்த நாட்டின் குடிமக்களாக ஏற்கும் கிராம சேவகர், ஏதேனும் நிவாரணமோ உரிமையோ கேட்கப் போனால் ‘அனுமதியற்ற குடிகள்’ என்று விரட்டுகிறார்” எனப் பாதிக்கப்பட்ட தாய் ஒருவர் கண்ணீருடன் விவரிக்கின்றார்.

நிலைமையை மேலும் சிக்கலாக்கும் வகையில், குடியிருப்புகள் குளத்தின் மேல்பகுதியில் அமைந்துள்ளதால் இங்கிருந்து வெளியேறி வனாதவில்லு பகுதிக்குச் செல்லுமாறு அதிகாரிகள் அழுத்தம் தருகின்றனர். ஆனால், “எங்களுக்குத் தெரிந்த தொழிலை விட்டுவிட்டு, அறிமுகமில்லாத ஊருக்குச் சென்று பிள்ளைகளுடன் எப்படி வாழ்வது?” எனக் கேள்வி எழுப்பும் இம்மக்கள், ஏற்கனவே ‘திட்வா’ புயலால் மாதக்கணக்கில் நீரில் மூழ்கிய வனாதவில்லு – சின்னநாகவில்லு பகுதிக்கு எங்களை அனுப்புவது ஒரு பிரச்சினையைத் தீர்க்க முற்பட்டு மற்றொரு பெரும் பேரழிவை உருவாக்குவதற்கே சமம் எனக் குமுறுகின்றனர்.

சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழும் இவர்களுக்கு, அவர்கள் பிறந்த மண்ணிலேயே சட்டப்பூர்வ உரிமையை வழங்கி, நிம்மதியாக வாழ வழிவகுப்பதே தற்போதைய அரசின் கடமையல்லவா?

செய்தி: ஜுட் சமந்த

கல்பிட்டியில் ஈரான் நாட்டு சுற்றுலாப் பயணிக்கு நேர்ந்த கொடூரம்!

0

இலங்கையின் இயற்கை அழகை கண்டு ரசிப்பதற்காகப் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வந்தவண்ணம் உள்ளனர். ஆனால், நாட்டைத் தேடிவரும் விருந்தினர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அப்படியொரு அதிர்ச்சிச் சம்பவம்தான் தற்போது நாட்டின் பிரபல சுற்றுலாத் தலமான கல்பிட்டி பகுதியில் இடம்பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

தலவில – கப்பலடிப் பகுதியில் அமைந்துள்ள முன்னணி சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த இவர், கல்பிட்டியின் அழகை ரசித்தபடி தலவில – களப்புப் பள்ளி வீதியில் சென்று கொண்டிருந்த அந்த நொடியில்தான், அந்தத் திடுக்கிடும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

திடீரென அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அந்தப் பெண்ணின் அருகில் உரசி நின்றது. அதில் வந்த மர்ம நபர் ஒருவர், அச்சமுற்ற அந்த வெளிநாட்டுப் பெண்ணை பலவந்தமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், கூச்சலிட்டுத் தப்பியோடித் தன் உயிரையும் கற்பையும் காப்பாற்றிக் கொண்டுள்ளார்.

காயப்பட்ட மனதுடன் உடனடியாகச் செயற்பட்ட அந்த ஈரான் பெண், கல்பிட்டி காவல் நிலையத்திற்குச் சென்று தனக்கு நேர்ந்த கொடுமை குறித்துப் புகார் அளித்துள்ளார். நாட்டிற்குச் சுற்றுலா வரும் வெளிநாட்டவர் ஒருவருக்கு நாட்டின் வீதியிலேயே இவ்வாறானதொரு அச்சுறுத்தல் ஏற்பட்டது சுற்றுலாத் துறையினரிடையேயும் அப்பகுதி மக்களிடையேயும் பெரும் கவலையைத் தோற்றுவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்துள்ள கல்பிட்டி காவற்துறையினர், தப்பியோடிய மோட்டார் சைக்கிள் ஆசாமியைக் கைது செய்யப் பெருமுயற்சி எடுத்து வருகின்றனர். “சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும், குற்றவாளி யார் என்பது விரைவில் அடையாளம் காணப்பட்டுச் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்” என காவற்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறையினரின் தீவிர விசாரணை தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது!

ஜுட் சமந்த

தடகள சம்பியன்ஷிப் தொடரில் அல் ஹிலால் மாணவன் வெள்ளிப் பதக்கம்!

0

கொழும்பு சுகததாச சர்வதேச விளையாட்டரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற 3ஆவது எஸ்.ஏ தடகள சம்பியன்ஷிப் தொடரில், நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரியின் நட்சத்திர மாணவனான பஸ்லி முஹம்மது பராஸ் குண்டெரிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை தட்டிப்பறித்து அசத்தியுள்ளார்.

தேசிய மட்டத்திலான இந்தத் தொடர் ஆரம்பமானது முதலே பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. இதில் 15 வயதிற்குட்பட்டோருக்கான குண்டெரிதல் பிரிவில் களமிறங்கிய பராஸ், ஆரம்பத்திலிருந்தே ஏனைய போட்டியாளர்களுக்கு கடும் சவாலாக விளங்கினார். அனைவரது கண்களும் மைதானத்தின் எல்லைக் கோட்டையே உற்றுநோக்கிக் கொண்டிருந்த அந்தப் பரபரப்பான நிமிடத்தில், பராஸ் தனது முழு பலத்தையும் பிரயோகித்து குண்டை வீசினார்.

அவர் கைகளிலிருந்து புறப்பட்ட அந்த விசை, 12.40 மீற்றர் தூரத்தைக் கடந்து போய் விழுந்தபோது மைதானமே அதிர்ந்தது. இந்த அசாத்திய தூரப் பிரயோகம் அவருக்கு தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தையும், இலங்கையின் தடகள வரலாற்றில் ஒரு புதிய அடையாளத்தையும் பெற்றுக்கொடுத்தது. இந்த அரிய சாதனைக்காக அவருக்கு உத்தியோகபூர்வமாக சான்றிதழும் வெள்ளிப் பதக்கமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த வெற்றியானது வெறும் பதக்கத்தோடு நின்றுவிடவில்லை. ஒரு சாதாரண பிரதேசத்து மாணவன், தேசிய அரங்கில் கொடி கட்டிப் பறக்க முடியும் என்பதை பராஸ் நிரூபித்துக் காட்டியுள்ளார். இந்த வரலாற்று வெற்றியையடுத்து, அல் ஹிலால் மத்திய கல்லூரியின் அதிபர், பாடசாலை நிர்வாகம், அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பயிற்றுவிப்பாளர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கத்தினர் மற்றும் சக மாணவர்கள் என ஒட்டுமொத்த நீர்கொழும்பு பிரதேசமுமே இந்த இளம் வீரனைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறது. சமூக வலைத்தளங்களிலும் பராஸின் சாதனைப் படங்கள் தப்போது ட்ரெண்டாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தித் தகவல்: அரபாத் பஹர்தீன்

20 வருச ஏமாற்றம்: அரசியல்வாதியை பிங்கிரியவில் வச்சு செஞ்ச மக்கள்!

0

தலைப்பு: 20 வருச ஏமாற்றம்: எல்லையில மாட்டுன ரோடு! அரசியல்வாதியை வச்சு செஞ்ச மக்கள் – பிங்கிரியவில் பரபரப்பு!

மாதம்பே: “நடந்து கூட போக ஏலாது தம்பி, இது ரோடா இல்ல வயலா?” என்று கேட்கும் அளவுக்கு மோசமடைந்துள்ள மாதம்பே – பனிரெந்தாவ சந்தியிலிருந்து பிங்கிரிய – வத்துவத்த வரையான வீதியை உடனடியாக புனரமைக்கக் கோரி, பிரதேச மக்கள் இன்று (20) மதியம் திடீர் வீதி மறியல் போராட்டத்தில் குதித்தனர். 20 வருடங்களாக ஒரு துண்டு தார் கூட இடப்படாமல் கைவிடப்பட்டுள்ள இந்த வீதியால் மக்களின் பொறுமை எல்லை கடந்துள்ளது.

இந்தப் பகுதியில் பெருமளவிலான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதனால் நாளொன்றுக்கு 300 க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் இந்த வீதியைப் பயன்படுத்துகின்றன. ஏற்கனவே குன்றும் குழியுமாக இருந்த வீதி, இந்த அசுர வாகனங்களின் நடமாட்டத்தால் முற்றாக அழிந்து போயுள்ளது. “வாகனங்கள் போறதை விடுங்க, எங்களால கால்நடையாகக் கூட இந்த வீதியில நடக்க ஏலாது” என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஆத்திரத்துடன் தெரிவித்தனர்.

இந்த வீதிப் பிரச்சினைக்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான ‘அரசியல் நழுவல்’ ஒளிந்திருக்கிறது. இந்த வீதியானது பிங்கிரிய மற்றும் உடுபத்தாவ ஆகிய இரு பிரதேச சபைகளை பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளது. இதனால், “அது அவங்க எல்லை, இது இவங்க எல்லை” என இரு பிரதேச சபைகளும் மாறி மாறி சாக்குப்போக்கு சொல்லி, கடந்த 20 வருடங்களாக மக்களை நடுத்தெருவில் விட்டுள்ளதாக கிராமவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

போராட்டம் சூடுபிடித்த வேளையில், அந்த வீதியால் வந்த பல வாகனங்களை மக்கள் மறித்து திருப்பி அனுப்பினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவானது. அப்போதுதான் அந்த ‘கிளைமாக்ஸ்’ காட்சி அரங்கேறியது. போராட்ட இடத்திற்கு பிங்கிரிய பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர் ஒருவர் வருகை தந்தார். அவரைக் கண்டதும் மக்கள் மேலும் கொதித்தெழுந்தனர். “20 வருசமா எங்கிருந்தீங்க?” என மக்கள் சூழ்ந்து கொள்ள, மக்கள் பிரதிநிதிக்கும் கிராமவாசிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

நிலைமை கைமீறிப் போவதைக் கண்ட பிங்கிரிய பொலிஸார் உடனடியாக களத்தில் குதித்தனர். இரு தரப்பினருக்கும் இடையே நின்ற பொலிஸார், நிலைமையை ஒருவாறாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இறுதியாக, பிங்கிரிய மற்றும் உடுபத்தாவ ஆகிய இரு பிரதேச சபைகளின் தவிசாளர்களையும் அழைத்து, உடனடியாக ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்து தருவதாக பொலிஸார் உறுதியளித்தனர். பொலிஸாரின் இந்த உத்தியோகபூர்வ வாக்குறுதியை அடுத்தே மக்கள் தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். 20 வருட பிரச்சினைக்கு இந்த பேச்சுவார்த்தையிலாவது தீர்வு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தகவல்: ஜூட் சமந்த

பிள்ளையைப் பாடசாலையில் விட்டுவிட்டு திரும்பிய இராணுவ அதிகாரி விபத்தில் பலி!

0

ஜுட் சமந்த

பிள்ளையைப் பாடசாலைக்கு அனுப்பிவிட்டு வீடு திரும்பிய தந்தைக்கு, வீதியில் காத்திருந்த விபத்து மரணத்தை பரிசளித்த துயரச் சம்பவம் ஆணமடுவ பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று (ஜூலை 20) அதிகாலை ஆணமடுவ – புத்தளம் பிரதான வீதியின் பரமாகந்த சந்திக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக ஆணமடுவ போலீசார் தெரிவித்துள்ளனர்.

அபேபுஸ்ஸ இராணுவ முகாமின் முதலாவது சிங்க ரெஜிமென்ட்டில் ‘வொரண்ட் ஒபிசர்’ (Subedar/Warrant Officer) ஆகக் கடமையாற்றி வந்த 37 வயதுடைய விக்கிரமஆரச்சிகே துமிந்த சந்தருவன் என்ற இராணுவ அதிகாரியே இந்தத் கொடூர விபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். ஆணமடுவ – ஊரியாவ பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட இவர், விடுமுறையில் வீடு வந்திருந்த போதே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

இராணுவப் பணியில் எத்தனையோ சவால்களை எதிர்கொண்ட இந்த அதிகாரி, இன்று காலை தனது பிள்ளையின் எதிர்காலத்திற்காக மோட்டார் சைக்கிளில் ஆணமடுவ நகரிலுள்ள பாடசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பிள்ளையைப் பாதுகாப்பாகப் பாடசாலையில் விட்டுவிட்டு, மீண்டும் தனது மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போதே, பரமாகந்த சந்திக்கு அருகில் எதிரே வந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான (CTB) பேருந்துடன் இவரது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியுள்ளது.

விபத்தின் வீரியம் காரணமாக மோட்டார் சைக்கிள் முற்றாகச் சேதமடைந்ததுடன், படுகாயமடைந்த இராணுவ அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்ட ஆணமடுவ போலீசார், விபத்துடன் தொடர்புடைய இலங்கை பொதுப்போக்குவரத்துச் சபை பேருந்தைக் கைப்பற்றியுள்ளதுடன், அதன் சாரதியையும் கைது செய்துள்ளனர். ஆணமடுவ போலீஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவினர் இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்துப் பல கோணங்களில் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை அலறவிட்டு மகுடம் சூடியது ஸ்பெயின் இளம்படை!

  • மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை அலறவிட்ட ஸ்பெயின் ‘சிறுவர்கள்’: நியூஜெர்சியில் மகுடம் சூடியது இளம்படை!
  • கேப் வேர்டேவிடம் தடுமாற்றம் முதல் உலகக் கிண்ண சாம்பியன் வரை: ஸ்பெயினின் அசாத்திய மிரட்டல் பயணம்!
  • 120 நிமிடங்கள், ஒரு ஷாட் கூட டார்கெட் இல்லை: அர்ஜென்டினாவை முற்றாக முடக்கிய ஸ்பெயினின் ‘பார்முலா’!

உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் மற்றுமொரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை வீழ்த்த முடியாது என்ற பிம்பத்தை உடைத்தெறிந்து, நியூஜெர்சியில் நடைபெற்ற அதிரடியான இறுதிப் போட்டியில் லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி உலகக் கிண்ணத்தை முத்தமிட்டுள்ளது ஸ்பெயின் இளம்படை.

முப்பது நாட்களுக்கு முன்னர் எவராலும் கணிக்கப்படாத ஒரு அணி, இன்று உலக கால்பந்தின் உச்சகட்ட சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது ஒட்டுமொத்த விளையாட்டு உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தத் தொடரின் ஆரம்பம் ஸ்பெயின் அணிக்கு அத்தனை சிறப்பாக அமையவில்லை. தங்களின் முதல் போட்டியில் உலகக் கிண்ணத்திற்குப் புதியவரான கேப் வேர்டே (Cape Verde) அணியுடன் கோல் எதுவுமின்றி ஸ்பெயின் சமநிலை பெற்றபோது, பல விமர்சகர்கள் ஸ்பெயினின் உலகக் கிண்ணக் கனவு அவ்வளவுதான் என எழுதத் தொடங்கினர். ஆனால், சவுதி அரேபியா மற்றும் உருகுவே அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி மீண்டெழுந்த ஸ்பெயின், நாக்-அவுட் சுற்றுகளில் போர்த்துக்கல் மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு எதிராக கடைசி நிமிடங்களில் ‘சூப்பர்-சப்’ மிக்கேல் மெரினோ அடித்த அசாத்திய கோல்களால் அரையிறுதிக்கு அசுரப் பாய்ச்சல் மேற்கொண்டது.

அரையிறுதியில் உலகக் கிண்ணத்தை வெல்லும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரான்ஸ் அணியை, பயிற்சியாளர் டி லா புவெண்டேவின் (de la Fuente) தந்திரோபாய ஆட்டம் முற்றாக முடக்கியது. எம்பாப்பே போன்ற உலகத் தரம் வாய்ந்த வீரர்களை ஸ்பெயினின் நடுவண் கள வீரர்களான ரோட்ரி, டானி ஓல்மோ மற்றும் பாபியன் ரூயிஸ் ஆகியோர் பந்தைக் கூடத் தொடவிடாமல் தடுத்து, 2-0 என பிரான்ஸை வீட்டுக்கு அனுப்பினர். இந்தத் தொடரில் லாமின் யமால் எனும் 19 வயது இளம் நட்சத்திரம் மாத்திரம் கோல் அடிக்கவில்லை என்றாலும், ஒட்டுமொத்த அணியாக மிக்கேல் ஒயர்சபால் (5 கோல்கள்) மற்றும் பெரான் டோரஸ் ஆகியோர் இணைந்து ஸ்பெயினை வழிநடத்தினர்.

அதே அரையிறுதி வியூகத்துடனேயே அர்ஜென்டினாவுக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் ஸ்பெயின் களமிறங்கியது. 65 சதவீதத்திற்கும் அதிகமாகப் பந்தைத் தன் வசம் வைத்திருந்த ஸ்பெயின் அணி, அர்ஜென்டினா வீரர்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வடையச் செய்தது. இதன் விளைவாக, போட்டியின் கூடுதல் நேரத்தில் அர்ஜென்டினாவின் என்சோ பெர்னாண்டஸ், ஸ்பெயினின் 19 வயது இளம் வீரர் குபார்சியை ஆபத்தான முறையில் தாக்கியதால் இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். 120 நிமிட ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியால் ஸ்பெயினின் கோல் கம்பத்தை நோக்கி ஒரு துல்லியமான ஷாட் கூட அடிக்க முடியாமல் போனதே ஸ்பெயினின் பலத்திற்குச் சான்றாகும்.

மைதானத்தில் நிலவிய இந்த உச்சக்கட்ட பதற்றத்திற்கு மத்தியில், போட்டியின் 106ஆவது நிமிடத்தில் ஆட்டத்தின் போக்கை மாற்றும் அந்த வரலாற்றுத் தருணம் நிகழ்ந்தது. நிக்கோ வில்லியம்ஸ் அசிஸ்ட் செய்ய, மாற்று வீரராகக் களம் புகுந்த பெரான் டோரஸ் (Ferran Torres) பந்தை அர்ஜென்டினாவின் கோல் வலையின் உச்சிக்கு அதிரடியாக உதைத்து தள்ளினார். அரங்கம் அதிர எழுந்த அந்த ஒற்றை கோல், மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை வீழ்த்தி, ஸ்பெயினின் புதிய இளம் சகாப்தத்தை உலகக் கிண்ண சாம்பியன்களாக அரியாசனத்தில் ஏற்றியுள்ளது.

போட்டி முடிவடைந்ததாக நடுவர் இறுதி விசிலை ஊதிய அடுத்த கணமே, மாற்று வீரர்கள் அமர்ந்திருக்கும் பகுதியிலிருந்து ஸ்பெயின் வீரர்கள் தங்களின் வரலாற்று வெற்றியை கொண்டாடுவதற்காக மைதானத்தை நோக்கி ஓடி வந்தனர். அந்த உற்சாக வெள்ளத்திற்கு மத்தியில், மைதானத்தில் நின்றுகொண்டிருந்த அர்ஜென்டினாவின் நடுகள ஆட்டக்காரர் லியாண்ட்ரோ பரேடஸ் (Leandro Paredes), ஸ்பெயினின் இளம் நட்சத்திர வீரர் காவியை (Gavi) ஆக்ரோஷமாக தரையில் தள்ளி வீழ்த்தினார்.

தோல்வியின் விரக்தியும், வெற்றியின் கொண்டாட்டமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட அந்த நொடியில், இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மைதானத்தில் ஒரு மினி யுத்தமே வெடித்தது. வீரர்கள் ஒருவரையொருவர் முட்டித் தள்ளிக்கொண்டதால், இறுதிப் போட்டி நடந்த அரங்கம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது.

நிலைமை கைமீறிச் செல்வதனை அவதானித்த அர்ஜென்டினா அணியின் தலைமைப் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி (Lionel Scaloni) உடனடியாக மைதானத்திற்குள் விரைந்து இரு அணி வீரர்களுக்கும் இடையே மிகச் சாதுரியமாகத் தலையிட்டு, ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட வீரர்களின் கோபத்தைத் தணித்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். தோல்வியின் வலியிலும் அவர் காட்டிய இந்த நிதானம் தற்போது கால்பந்து ரசிகர்களினால் சமூக வலைத்தளங்களில் வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகின்றது.

கற்பிட்டிக்குள் ஊடுருவிய ‘டபா’ போதை மாத்திரைகள்: முறியடித்தது கற்பிட்டி போலீஸ்!

0

கடல் எல்லைகளைத் தாண்டி இலங்கைக்குள் ஊடுருவும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பாரிய சூழ்ச்சியொன்றை கற்பிட்டி போலீசார் அதிரடியாக முறியடித்துள்ளனர். கற்பிட்டி, ஜணசவிபுர பகுதியில் நேற்று (ஜூலை 19) மாலை முன்னெடுக்கப்பட்ட இரகசிய தேடுதல் வேட்டையின் போது, சர்வதேச கடல்வழியாகக் கொண்டு வரப்பட்ட பெரும் தொகையான போதை மாத்திரைகள் மற்றும் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், முக்கிய சந்தேகநபர் ஒருவரும் வலையமைப்பில் சிக்கியுள்ளார்.

இளைஞர்களை இலக்கு வைத்து விநியோகிக்கப்படும் ‘P Cap’ வகையைச் சேர்ந்த, ‘டபா’ (Taba) என்று அழைக்கப்படும் 67,330 போதை மாத்திரைகள் இதன்போது போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மாத்திரைகள் ஒவ்வொன்றும் தலா 200 ரூபாய் என்ற அதிக விலைக்கு உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்த அதிர்ச்சித் தகவலைக் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.

போதை மாத்திரைகள் மட்டுமன்றி, கடத்தல்காரர்களின் மற்றுமொரு ரகசியத் திட்டமும் இந்த சோதனையில் அம்பலமாகியுள்ளது. சந்தேகநபரின் வீட்டைப் போலீசார் சல்லடை போட்டுத் தேடியபோது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 கிலோகிராம் எடையுடைய பீடி இலைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த பீடி இலைத் தொகுதியினை நாட்டின் வேறொரு பகுதிக்கு அவசரமாகக் கடத்துவதற்குத் தயாரான நிலையிலேயே போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரையும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள் மற்றும் பீடி இலைகளையும் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான சட்டநடவடிக்கைகளை போலீசார் தற்போது தீவிரப்படுத்தியுள்ளனர்.

பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், கற்பிட்டி போலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி உற்பட அதிகாரிக் குழுவினர் இந்த வெற்றிகரமான அதிரடிச் சுற்றிவளைப்பை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜுட் சமந்த

தலைமுறை தாண்டிய உடப்பூர் ஆடித்திருவிழா!

0

உடப்பூர் மண்ணின் ஆன்மீகப் பெருமை: தலைமுறைகளைக் கடந்து அரங்கேறும் ஆடித்திருவிழா பக்திப் பரவசம்!

இலங்கையின் பாரம்பரியமிக்க கிராமங்களில் ஒன்றான உடப்பூரில், காலம் காலமாகப் பேணப்பட்டு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆடித்திருவிழா தற்போது பக்திப் பரவசத்துடன் ஆரம்பமாகி நன்முறையில் நடைபெற்று வருகின்றது. கிராமத்துக்கே உரிய தனித்துவமான அடையாளங்களுடனும், மாறாத பக்தி நெறியுடனும் ஆரம்பமாகியுள்ள இந்த ஆடி உற்சவம், இப்பகுதி மக்களை மாத்திரமன்றி வெளியூர் பக்தர்களையும் பெருமளவில் ஈர்த்து வருகின்றது.

இவ்விழாவின் முக்கிய அம்சமாக, ஆலயத்தின் வெளிக்கொடியேற்ற நிகழ்வு மிகச் சிறப்பாக இடம்பெற்றதைத் தொடர்ந்து, ஒவ்வொரு நாள் விட்டும் கிராமத்தின் முக்கிய சந்திகள் தோறும் கரகம் மற்றும் கும்மி கொட்டும் பாரம்பரிய நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. இந்த நிகழ்வுகள் உடப்பூர் கிராமத்தையே ஒரு திருவிழாக் கோலமாக மாற்றியமைத்துள்ளன.

ஆண்டிமுனை டூ பார்த்தசாரதி ஆலயம்: வீதிகளெங்கும் ஒலிக்கும் மரபு இசை!

பக்தர்களின் இந்த பக்திப் பேரணி ஆண்டிமுனை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இருந்து பக்திப் பரவசத்துடன் புறப்பட்டு, ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தை நோக்கி நகர்கிறது. இந்த ஊர்வலத்தின் போது, உடப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாரம்பரிய மரபு இசைக்குழுவினர் தங்களின் கம்பீரமான குரல்களால் கும்மிப் பாடல்களை இசைத்து, பக்தி மழையில் மக்களை நனைய வைக்கின்றனர்.

இந்தத் திருவிழாவில் மற்றுமொரு வியக்கத்தக்க விடயம் என்னவென்றால், காலம் மாறினாலும் அழியாத உடப்பூர் மக்களின் ஆடை ஒழுக்கமாகும். விழாவில் கலந்துகொள்ளும் ஆண்கள் அனைவரும் தூய வேட்டி, சட்டைகளுடனும், பெண்கள் மற்றும் சிறுமிகள் பாரம்பரிய பட்டுப்பாவாடை, சட்டை மற்றும் சேலைகளுடனும் சமூகமளித்து தங்களின் பண்பாட்டு விழுமியங்களை உலகிற்குப் பறைசாற்றி நிற்கின்றனர்.

பக்தர்களின் பெரும் எதிர்பார்ப்பு: 18ஆம் நாள் தீமிதிப்பு பெருவிழா!

ஸ்ரீ திரௌபதி அம்பிகையின் அருள் வேண்டி பக்திப் பரவசத்துடன் விரதமிருக்கும் நூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்துகொள்ளும் இந்த ஆடித்திருவிழாவின் மிக முக்கிய மற்றும் இறுதி உச்சக்கட்ட நிகழ்வாக, 18ஆம் நாள் தீமிதிப்பு எனப்படும் ‘பூமிதிப்பு பெருவிழா’ வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது. அம்பாளின் அருளோடு நெருப்பில் இறங்கி பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் இந்த அற்புதம், இப்பகுதியின் மிக உயரிய ஆன்மீக நிகழ்வாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.