Tuesday, June 23, 2026
Sponsored advertisementspot_img
Home Blog

நாகவில்லுவில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வின் நினைவுதினம்!

பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நாகவில்லுவில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு!

இலங்கை திருநாட்டில் பெளதீக ரீதியான பல வேலைத்திட்டங்களையும், இடம்பெயர்வு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பறந்துபட்ட அறிவினையும் கொண்டிருந்த எருக்கலம்பிட்டியை சேர்ந்த மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது வருட நினைவு தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

அந்த வகையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் நினைவுப் பேருரையும், புத்தக வெளியீடு நிகழ்வும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 25.08.2025 புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், புத்தி ஜீவிகள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்தகொண்டமை விஷேட அம்சமாகும்.

சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் பொருளாளர் ஜனாப் ஏ.ஜி. அனீஸ் (Bsc.Agri) அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

மேலும் இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீட, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களினால் நூல் அறிமுக உரையும், நினைவுப் பேருரையும் மிகவும் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்டது.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பங்களிப்பு அளப்பெரியது என நினைவு கூறிய பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன், வடக்கில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் முஸ்லிம்களின் இடம்பெயர்வு குறித்து அதீத அக்கறையுடன் செயற்பட்ட மிக முக்கியமானவர் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் எனவும் எடுத்துரைத்தார்.

வடக்கு முஸ்லிம்களின் இடம்பெயர்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் பலதரப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தி, சர்வதேசம் வரை இவ்விடயங்களை கொண்டுசென்ற மகான் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் என பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் தனது உரையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் புதல்வி சட்டத்தரணி எப்.சப்னா ஹஸ்புல்லாஹ் அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், நூல் வெளியீடு நிகழ்வும் இடம்பெற்றது.

நூலின் முதற்பிரதியை ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் (GS) அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

மேலும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் செயலாளர் ஜனாப் எஸ்.எச்.எம். றிஸ்னி அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதுடன், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பாரியாருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், பேராசிரியர்கள், கல்விமான்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலைச் சமூகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், ஈ நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனம் ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்காக ஒன்று திரண்ட அரசியல் தலைவர்கள்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவிதியையும் விட, சமூகத்தின் உரிமைகளுக்கான பிரச்சினைகளை தோற்றிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியலை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கல் அணி சாம்பியன் ஆனது!

0

‘நேஷன்ஸ் லீக்’ கால்பந்தில் போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனது. பைனலில் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 5-3 என ஸ்பெயினை வீழ்த்தியது.

ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக ‘நேஷன்ஸ் லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. நேற்று ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த பைனலில், போர்ச்சுகல், நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 21வது நிமிடம் ஜுபிமெண்டி (ஸ்பெயின்), 26வது நிமிடம் மெண்டிஸ் (போர்ச்சுகல்) தலா ஒரு கோல் அடித்தனர். 45வது நிமிடம் மைக்கேல் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 61 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 138வது கோல் இது. 90 நிமிட முடிவில் போட்டி 2-2 என சமன் ஆனது. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. காயம் காரணமாக 88 வது நிமிடம் வெளியேறிய ரொனால்டோ, இதில் பங்கேற்கவில்லை.

முதல் 3 வாய்ப்பில் போர்ச்சுகலின் ராமோஸ், விடின்ஹா, பெர்ணான்டஸ் கோல் அடித்தனர். மறுபக்கம் ஸ்பெயின் தரப்பில் மெரினோ, பயேனா, இஸ்கோ கோல் அடிக்க 3-3 என ஆனது.

4வது வாய்ப்பில் மெண்டெஸ் (போர்ச்சுகல்) கோல் அடிக்க, ஸ்பெயினின் மோராட்டோ அடித்த பந்தை கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்து அசத்தினார்.

5வது வாய்ப்பில் நெவேஸ் கோல் அடித்தார். இதையடுத்து 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் ‘திரில்’ வெற்றி பெற்றது. 2019க்குப் பின் இத்தொடரில் மீண்டும் சாம்பியன் ஆனது.

தில்லையடியில் சிக்கிய கடத்தல் பீடி இலைகள்!

0

புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் வேன் ஒன்றும் பறிமுதல்!

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட ஒரு வேன் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், புத்தளம் பொலிஸாருடன் இணைந்து தில்லையடி பகுதியில் நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகளானது வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வேன் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் ஆபத்தா?

விண்வெளியில் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களை சீனா நினைத்தால் வெறும் 12 மணி நேரத்தில் தாக்கி அழித்துவிட முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற செய்தி ஊடகத்தில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது சீனா 99 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் நான்ஜிங் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளிக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் வூ யுன்ஹுவா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் எலான் மஸ்கின் 1400 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெறும் 12 மணி நேரத்தில் காலி செய்துவிடும். சீன செயற்கைக்கோளில் லேசர், நுண் அலைகளை உருவாக்கும் கருவி, உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெறுமென நெட்வொர்க் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. தவிர, ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம்சாட்டி வருகிறது.

அதாவது, உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைன் படைகளுக்கு தகவல்கள் கொடுக்கவும், ரஷ்ய எல்லையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்ய போரின்போது அப்போதைய உக்ரைனின் துணைப் பிரதமரான மைக்கைலோ ஃபெடோரோவ், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை உடனடியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், “உடனடியாக சேவை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

உக்ரைன் போருடன் மட்டுமே ஸ்டார்லிங்க் நிற்காது, நாளை சீனாவுக்கும்-தைவானுக்கும் பஞ்சாயது ஏற்பட்டால் அப்போதும், தைவானுக்கு சப்போர்ட் செய்ய ஸ்டார்லிங்க் வரும். எனவே இந்த கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு இதற்கான பணிகளை சீனா தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ‘கியான்ஃபான் மெகா-விண்மீன் திட்டம்’ (Qianfan mega-constellation project) என்றும் பெயரிட்டிருந்தது. நோக்கம் உலகம் முழுவதும் இணைய தொடர்பை வழங்குவதாகும். இதற்காக மொத்தம் 15,000 சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவ சீனா முடிவெடுத்தது. இதன் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. இதில் 18 செயற்கைக்கோள்கள் இருந்தன.

ஒவ்வொன்றும் சுமார் 300 கி.கி எடையில் இருந்தது. இவை பூமியிலிருந்து 800 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோன்று 2024 டிசம்பரில் அடுத்து இரண்டு தொகுதி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. தற்போது மொத்தம் 99 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. 15,000 செயற்கைக்கோள்களை 3 கட்டங்களாக ஏவ இருக்கிறது. முதல் கட்டத்தில் 1,296 செயற்கைக்கோள்கள் ஏவப்படும். இதில் 648 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் கன்னி உரை

0

அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்

தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:

மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.

ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.

மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.

மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.

நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.

மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தலில் இவ்வாறுதான் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்

0

அதிகாரிகள் மற்றும் பிற தேவைகள் முடிந்த பிறகு, மாலை 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 4.15 மணிளவில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் 21ம் திகதி வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் பெறப்பட்டதும், அதிகாரிகள் மற்றும் இதர தேவைகள் முடிந்ததும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இரவு 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

மாலை 4.15 மணிளவில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

அத்துடன் மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முடிவுகள் கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையே முதலில் எண்ணப்படும்.

அந்தக் கணக்கெடுப்பின் பின்னர் (மாவட்ட அளவில் எண்ணும் பணி) முதலில் வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

அதன் பிறகு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அது தயாரிக்கப்படுகிறது.

தேர்தல்கள் செயலகமே ஒட்டுமொத்த முடிவுகளைக் கணக்கிடும்.

எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளாரா என சரிபார்க்கப்படும்.

அப்படியானால், அந்த நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்படும்.

அப்போது ஜனாதிபதியை நாங்கள் அறிவிப்போம்.

எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்காவிடின், விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும்.

அங்கு, அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் வைத்து விட்டு  மீதமுள்ள 36 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்” என்றார்.

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறும்

0

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வாத்தியாசலையாக மாற்றம் பெரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன தலைமையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

புத்தளம் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற புத்தளம் தல வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க குறித்த வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

மேலும் புத்தளத்தில் மீன் பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் மீன் பிடி துறைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டமை புத்தளம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாட்டில் நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை நிலை நாட்ட தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தனது பிரதான நோக்கம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மொட்டுக்கட்சிக்கு எதிராக நிற்கும் முக்கிய அமைச்சர்கள்

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காதிருக்கவும், மொட்டு சின்னத்தில் தனியாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த கடிதம் நேற்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் அரசியல் குழுவில் முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அந்த கடிதத்தை நிராகரிக்க அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 பேர் அங்கம் வகிப்பதுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 72 பேர் பங்கேற்றனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த 11 பேர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மஹிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சஹன் பிரதீப், ரமேஸ் பத்திரன, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, கனக ஹேரத், மொஹான் பிரியதர்ஷன ஆகியோர் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அத்துடன் பிறிதொரு கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 6 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறப்பட்ட தம்மிக பெரேரா தொடர்பில் அரசியல் குழுக் கூட்டத்தின்போது எந்தவித கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத 11 பேர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சைனப் ஆரம்பப் பாடசாலைக்கு ஆளுநர் வருகை!

0

புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலையின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் யஹியா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் ஜெய்னப் பாடசாலைக்கு 22 லட்சம் ரூபா பெறுமதியான நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தல் மற்றும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் செயற்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் கற்றல் உபகரணம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கௌரவ அதிதியாக புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அர்ஜுன ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரம்ப பாடசாலையின் முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஆரம்ப பாடசாலை ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்பு குறித்து விரிவாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் துரித வளர்ச்சி பற்றியும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் செயற்திட்டத்திற்கு வடமேல் மாகாண ஆளுநர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஷி ஜமால்தின், இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் அயல் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு
நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறை

0

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஓவியப்போட்டியில் எருக்கலம்பிட்டி மாணவன் முதலாமிடம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.

வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.

முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா

0

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளனர்.

சாந்த நிரியல்ல உட்பட 15 பேர் கொண்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் அறிவித்தலுக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி திங்கட்கிழமை புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ “அத தெரண” விற்கு தெரிவித்தார்.

புத்தளம் எருக்கலம்பிட்டியில் கடும் வெள்ளம்

0

புத்தளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் பகுதி முழுதும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

புத்தளம், தில்லையடி, பாலாவி, புத்தளம் எருக்கலம்பிட்டி, ஹிதாயத் நகர்,  மதுரங்குளி மற்றும் ஏனைய பல கிராமங்களும் வெள்ளித்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1500 குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவருவதுடன், அனைத்து வீடுகளும் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்றிற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஐநூற்றுக்கும் அதிகமான வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் மூன்று வேலைகளிலும் ஊர் தனவந்தர்களின் உதவியுடனும், பள்ளிவாசல் நிர்வாக சபையின் வழிகாட்டலுடனும் வழங்கப்பட்டு வருவதுடன், ஊர் மக்களுக்கும் உணவு விநியோகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவர்களுக்கான நிவாரண உதவிகள் இதுவரை அரசாங்கத்தினால் வழங்கப்படாத போதிலும், ஊர் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு விநியோகங்கள் இதுவரை  வழங்கப்பட்டு வருகின்றது.

புத்தளம் பொத்துவில்லு பகுதியில் உள்ள குளம் மழை நீரினால்  பெருக்கெடுத்துள்ளதால் குறித்த குளத்து நீர் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்திற்குள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக ஊடறுத்து செல்வதால் வீடுகள் தொடர்ந்தும் நீருள் மூழ்கியுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிவாரண உதவிக்காக பல மக்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதிரடித் திருப்பம்: அமெரிக்கா – ஈரான் இடையில் 60 நாள் ‘மெகா பிளான்’!

  • அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அடுத்த 60 நாட்களுக்குள் நிரந்தர சமாதான ஒப்பந்தத்தை எட்டுவதற்கான புதிய ‘ரோட்மேப்’ (நடைமுறை வரைபடம்) சுவிட்சர்லாந்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
  • ஹொர்முஸ் நீரிணைப் பகுதியில் வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், லெபனானில் யுத்தத்தை நிறுத்தவும் இரு நாடுகளும் விசேட இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.
  • ஈரானிய அணுசக்தி நிலையங்களை சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பின் (IAEA) ஆய்வாளர்கள் பரிசோதனை செய்ய ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளது.

ரொய்ட்டர், சுவிட்சர்லாந்து:

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் அமெரிக்க – ஈரான் மோதலுக்கு மத்தியில், சுவிட்சர்லாந்தின் பர்கென்ஸ்டாக் மலை உறைவிடத்தில் இடம்பெற்ற உயர்மட்டப் பேச்சுவார்த்தை ஒரு பாரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் எட்டப்பட்ட தற்காலிக உடன்படிக்கையைத் தொடர்ந்து, அடுத்த 60 நாட்களுக்குள் நிரந்தர சமாதான ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான ‘ரோட்மேப்’ ஒன்றிற்கு இரு நாடுகளும் பச்சைக்கொடி காட்டியுள்ளதாக மத்தியஸ்தம் வகிக்கும் பாகிஸ்தானும் கட்டாரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

“ஹொர்முஸ் நீரிணை மற்றும் லெபனான் விவகாரங்களில் கடுமையான பதற்றங்கள் நிலவிய போதிலும், ஒரு இறுதிச் சமாதான உடன்படிக்கைக்கான மிகவும் பலமான அடித்தளம் இந்த பேச்சுவார்த்தை மூலம் போடப்பட்டுள்ளது” என அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) மிகவும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

அணுசக்தி ஆய்வுகளுக்கு ஈரான் சம்மதம்! பின்னணியில் ஜாரெட் குஷ்னரின் மூலோபாய திட்டம்!

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு நடத்தியதில் இருந்து, தாக்குதலுக்கு உள்ளாகாத பகுதிகளை மாத்திரமே ஈரான் சர்வதேச ஆய்வுக்கு அனுமதித்திருந்தது. இந்நிலையில், தற்போது சுவிட்சர்லாந்தில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின்படி, தனது அணுசக்தி நிலையங்களை முழுமையாகப் பரிசோதிக்க சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பிற்கு (IAEA) ஈரான் அனுமதி வழங்கியுள்ளது.

அதேவேளை, வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துக்களை விடுவிப்பது மற்றும் ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிக்கான தடைகளைத் தளர்த்துவது தொடர்பில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார். எனினும், விடுவிக்கப்படும் ஈரானியப் பணம் இராணுவத் தேவைகளுக்கோ அல்லது பிராந்திய ஆயுதக் குழுக்களுக்கோ பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மருமகனும் வெள்ளை மாளிகை தூதுவருமான ஜாரெட் குஷ்னர் ஒரு அதிரடி திட்டத்தைக் கொண்டுவந்துள்ளார். இதன்படி, விடுவிக்கப்படும் ஈரானிய நிதியை அமெரிக்கா மற்றும் கட்டார் நாடுகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். இந்த நிதியைக் கொண்டு ஈரான் அமெரிக்காவிலிருந்து சோளம், சோயா மற்றும் கோதுமை போன்ற உணவுப் பொருட்களை மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும் என அதிரடி அறிவிப்பு விடுத்துள்ளார்.

ட்ரம்பின் மிரட்டலும், ஈரானின் ‘வொக்-அவுட்டும்’! பின்னணியில் நடந்தது என்ன?

இந்தப் பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக, “ஈரான் மீண்டும் கப்பல் பாதையை மூட முயன்றால், உலக வரைபடத்தில் ஈரான் என்ற நாடே இல்லாமல் போய்விடும்” என டொனால்ட் ட்ரம்பின் கடுமையான மிரட்டல் ஃபாக்ஸ் நியூஸ் ஊடாக வெளியாகி இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த ஈரானிய தூதுக்குழு பேச்சுவார்த்தை மேசையைப் புறக்கணித்து (Walk-out) வெளியேறியதாக ஈரானின் டாஸ்னிம் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. எனினும், மத்தியஸ்தர்களின் சாதுரியமான நகர்வுகளால், இரு நாடுகளுக்கும் இடையே தூதுச் செய்திகள் பரிமாறப்பட்டு பேச்சுவார்த்தை சுமுகமாகத் தொடர்ந்துள்ளது.

“அங்கே கொஞ்சம் மிரட்டல்களும், கொஞ்சம் புலம்பல்களும் இருந்தன. ஆனால், இறுதியில் பேச்சுவார்த்தை தொடர்ந்து, நாங்கள் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளோம்” என வான்ஸ் புன்னகையுடன் ஊடகங்களுக்குக் குறிப்பிட்டுள்ளார்.

தடதடவென சரிந்த உலக எண்ணெய் விலை! வழமைக்குத் திரும்பும் ஹொர்முஸ் நீரிணை!

ஈரான் உலகிற்கான பிரதான எண்ணெய் விநியோகப் பாதையான ஹொர்முஸ் நீரிணையை மூடியதால், உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை விண்ணைத் தொட்டிருந்தது. ஆனால், இந்த புதிய பேச்சுவார்த்தை வெற்றியளித்ததைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும் என்ற பயம் நீங்கி, ‘ப்ரெண்ட் கச்சா எண்ணெய்’ விலை பேரல் ஒன்றுக்கு 80 டொலருக்கும் கீழ் சரிவடைந்துள்ளது.

திங்கட்கிழமை நிலவரப்படி சுமார் 2 மில்லியன் பேரல் எண்ணெயைச் சுமந்த இரு பிரம்மாண்ட கப்பல்கள் ஹொர்முஸ் நீரிணையைக் கடந்து சென்றுள்ளன. யுத்தம் தொடங்குவதற்கு முன்னர் நாளொன்றுக்கு சராசரியாக 125 கப்பல்கள் பயணித்த இந்த பாதையில், தற்போது கப்பல் போக்குவரத்து மீண்டும் மெதுவாக வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது.

லெபனானில் தணிந்தது துப்பாக்கி முழக்கம்! இஸ்ரேல் எடுத்த அதிரடி முடிவு!

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையிலான இந்த யுத்தத்தில், ஈரான் மற்றும் லெபனான் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். எனினும், கடந்த சனிக்கிழமை இரவு முதல் லெபனானில் இஸ்ரேலின் விமானத் தாக்குதல்கள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இதன் வெளிப்பாடாக, லெபனான் எல்லையை ஒட்டியுள்ள 8 இஸ்ரேலிய கிராமங்களில் விதிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கட்டுப்பாடுகளை இஸ்ரேலிய இராணுவம் திங்கட்கிழமை அதிகாலை முதல் தளர்த்தியுள்ளது. இந்த இணக்கப்பாடு குறித்து லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்ன், அமெரிக்க துணை ஜனாதிபதி வான்ஸ் மற்றும் கட்டார் பிரதமருடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார். “இந்த யுத்தத்திற்கு ஒரு இராஜதந்திர ரீதியிலான முடிவை எட்ட இஸ்ரேல் தயாராகவே உள்ளது” என இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் தெரிவித்துள்ளமை பிராந்தியத்தில் அமைதிக்கான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.

தொழில்நுட்ப/ஊடக வியூகம் (Media Engagement Note): இச்செய்தி, வாசகர்களைத் தக்கவைக்கும் வகையில் “Hook-Line-and-Sinker” உத்தியில், அடுத்தடுத்த பந்திகளில் புதிய திருப்பங்களை (அணுசக்தி அனுமதி, ட்ரம்பின் மிரட்டல், உலக எண்ணெய் விலை சரிவு) வெளிப்படுத்தும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் ‘Trending’ ஆகக்கூடிய மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் ட்ரம்பின் மிரட்டல் என்பன பிரதானப்படுத்தப்பட்டுள்ளன.

கத்தாரில் பயங்கர வெடிப்பு: எரிவாயு வளாகத்தில் 13 பேர் பலி!

ரொய்ட்டர்: கத்தாரின் பிரம்மாண்டமான ராஸ் லஃப்பான் (Ras Laffan) திரவ இயற்கை எரிவாயு வளாகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த பயங்கர வெடிப்புச் சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், 66 பேர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் ஈரான் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்நிலையத்தின் பணிகளை, ஊழியர்கள் மீண்டும் ஆரம்பித்த போதே இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.

தலைநகரையே உலுக்கிய நள்ளிரவு அதிர்வு!

கத்தாரின் உள்நாட்டு எரிவாயு விநியோகப் பிரிவான ‘பர்சான்’ (Barzan) நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென இந்த ‘தொழில்நுட்ப விபத்து’ ஏற்பட்டுள்ளது. ராஸ் லஃப்பான் பகுதியில் ஏற்பட்ட இந்த வெடிப்பின் வீரியம் எவ்வளவு கொடூரமானது என்றால், அங்கிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தலைநகர் தோஹாவின் மத்திய பகுதியில் இருந்த வீடுகளின் ஜன்னல் கதவுகள் கூட பலமாக அதிர்ந்துள்ளன. என்ன நடக்கிறது என்று புரியாமல் நள்ளிரவில் பொதுமக்கள் பெரும் பீதிக்குள்ளாகினர்.

அமெரிக்காவின் முக்கிய இராணுவத் தளத்தைக் கொண்டுள்ள கத்தார் நாடு, அண்மைக்கால ஈரான் யுத்தத்தின் போது தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு முகங்கொடுத்து வந்தது. உலகளாவிய திரவ இயற்கை எரிவாயு (LNG) விநியோகத்தில் 20 சதவீதமானவை பாரசீக வளைகுடாப் பகுதியிலேயே முடங்கிக் கிடந்தன. அண்மையிலேயே சில ஏற்றுமதிகள் மீள ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மார்ச் மாத ஈரானிய தாக்குதலில் கத்தாரின் இரு பிரதான எரிவாயு சுத்திகரிப்புப் பிரிவுகள் சேதமடைந்தன. இதனால் கத்தாரின் ஏற்றுமதித் திறன் 17 சதவீதம் வீழ்ச்சியடைந்ததுடன், அதனை முழுமையாகச் சீரமைக்க 3 முதல் 5 வருடங்கள் வரை செல்லும் என கத்தார் எனர்ஜி (QatarEnergy) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாத் அல்-காபி தெரிவித்திருந்தார்.

உறைநிலையின் ஆபத்தும் சவால்களும்

யுத்தக் காலத்தில் மூடப்படும் இவ்வாறான பிரம்மாண்ட எரிவாயு நிலையங்களை மீண்டும் இயக்குவது என்பது சாதாரணமான காரியமல்ல என்பதை இந்தச் சம்பவம் உலகிற்கு உணர்த்தியுள்ளது. இயற்கை எரிவாயுவை திரவ நிலைக்கு மாற்றுவதற்கு அதனை மைனஸ் 162 பாகை செல்சியஸ் ($ -162^\circ\text{C} $) என்ற அதீத குளிரூட்டப்பட்ட நிலைக்குக் கொண்டு வர வேண்டும்.

வெப்ப அதிர்ச்சியை (Thermal shock) தவிர்ப்பதற்காக இந்த உறைநிலைக் குளிர்விப்பு மிகவும் நிதானமாக, படிப்படியாகவே செய்யப்பட வேண்டும். அனைத்துப் பிரிவுகளையும் ஒரே நேரத்தில் இயக்க முடியாது, ஒன்றன்பின் ஒன்றாகவே இயக்க வேண்டும். இந்த மிக ஆபத்தான கட்டத்திலேயே நேற்றைய வெடிப்புச் சம்பவம் நேர்ந்துள்ளது.

உடனடி விசாரணைக்கு உத்தரவு

ஆண்டுக்கு 77 மில்லியன் மெட்ரிக் தொன் எரிவாயுவை உற்பத்தி செய்யும் இந்த ராஸ் லஃப்பான் தொழில் நகர விபத்து குறித்து கத்தார் எனர்ஜி நிறுவனமும், எரிசக்தி அமைச்சும் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. ஆலையின் எந்தப் பகுதியில் வெடிப்பு ஏற்பட்டது மற்றும் சேத விபரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை எனினும், கத்தாரின் சர்வதேச எரிவாயு ஏற்றுமதி பாதிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சித்திரப் போட்டி!

0

சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு முந்தல் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள மங்கள எளிய சமுர்த்தி வங்கிக்கு உட்பட்ட கணமூலை தெற்கு கிராம சேவகர் பிரிவில் சித்திரப் போட்டியொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) கணமூலை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

மங்கள எளிய சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் எஸ்.எம்.நபீலின் ஆலோசனையில் கணமூலை தெற்கு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ரஸீன் ரஸ்மினின் மேற்பார்வையில் கணமூலை அர் – ரஹ்மான் , லதீப் மாவத்தை அல் – அக்‌ஷா, மிஹ்ராஜ்புரம் அல் – மதீனா ஆகிய சமுர்த்தி சிறுவர் சங்கங்கள் இணைந்து குறித்த சித்திரப் போட்டி நகழ்ச்சியை நடத்தியது.

“போதையற்ற ஒரு நாடு, செழிப்பான ஒரு நாளை” எனும் தலைப்பில் இடம்பெற்ற சித்திரப் போட்டி மூன்று பிரிவுகளாக இடம்பெற்றது.

முதலாம் பிரிவில் 1 ஆம் ஆண்டு முதல் 3ஆம் ஆண்டு வரையும், இரண்டாம் பிரிவில் 4 ஆம் ஆண்டு முதல் 6 ஆம் ஆண்டு வரையும், மூன்றாம் பிரிவில் 7ஆம் ஆண்டு முதல் 10 ஆம் ஆண்டு வரையுமான மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.

இதன்போது, முதலாம் பிரிவு மாணவர்களுக்கு காலைக் காட்சியும், இரண்டாம் பிரிவு மாணவர்களுக்கு மாலைக் காட்சியும், மூன்றாம் பிரிவு மாணவர்களுக்கு போதையற்ற சமூகத்தை உருவாக்குவோம் எனும் தலைப்பு வழங்கப்பட்டதுடன், மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் சித்திரப் போட்டியில் கலந்துகொண்டனர்.

இந்த சித்திரப் போட்டி நிகழ்ச்சிக்கு புத்தளம் ஊடக மையம் (PMC) , விடிவெள்ளி பத்திரிகை, உதயம் மின்னிதழ் பத்திரிகை, eNews1st, UTV, RJS தமிழ் ஆகிய ஊடகங்கள் இந்த சித்திரப் போட்டி நிகழ்ச்சிக்கு ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் தவறுதலாக துப்பாக்கி வெடித்து இராணுவ வீரர் பலி!

0

மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள இராணுவ சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரரொருவர், துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் உயிரிழந்துள்ளார்.

இன்று (22) காலை 10.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், துப்பாக்கி வெடிப்பால் படுகாயமடைந்த குறித்த இராணுவ வீரர் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் சவுத் பார் இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த 46 வயதான ஜெயத்திலக எனும் இராணுவ வீரரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தின் போது மன்னார் பிரதான பாலத்துக்கு அருகே உள்ள சோதனைச் சாவடியில் அவர் கடமையில் இருந்ததாகவும், குறித்த சோதனை சாவடியில் கடமையில் ஈடுபடும் இராணுவ வீரர்களுக்கு அவரே துப்பாக்கிகளை வழங்கி வந்ததாகவும், அவ்வாறு வழங்க முற்படும்போது பெட்டிக்குள் இருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்தமையே விபத்திற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இராணுவ வீரரின் சடலம் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிலாபம் – புத்தளம் வீதியில் பகீர் விபத்து: ஒருவர் பலி!

0

ஆரச்சிக்கட்டுவ: மாலை நேரத்து பரபரப்பில் இயங்கிக்கொண்டிருந்த அந்த வீதியோரக் கடை, அடுத்த சில நொடிகளில் ஒரு மரணக் களமாக மாறும் என்று அங்கிருந்தவர்கள் எவருமே ஊகித்திருக்கவில்லை. சிலாபம் – புத்தளம் பிரதான வீதியின் ஆரச்சிக்கட்டுவ பகுதியில் கடந்த 21ஆம் திகதி மாலை இடம்பெற்ற அதிவேக கார் விபத்து, ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது.

வழக்கம்போல வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த கடை உரிமையாளரான ராமசாமி கோவிந்தசாமி (வயது 46) என்பவரே இந்த விபத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். புத்தளத்தில் இருந்து சிலாபம் நோக்கி அசுர வேகத்தில் வந்த சொகுசு கார் ஒன்று, வீதியை விட்டு விலகி, வீதியோரமாக இருந்த தற்காலிக கடைக்குள் பாய்ந்ததே இந்த விபரீதத்திற்கு காரணமாக மாறியுள்ளது.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த மோதலின் வீரியம், கடையை முற்றாக சிதைத்தது மட்டுமல்லாமல், காரில் பயணித்தவர்களையும் படுகாயங்களுக்கு உள்ளாக்கியுள்ளது. காரில் இருந்தவர்கள் தன்கொடுவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் மூவரும் தற்போது சிலாபம் பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தின் பின்னணியை ஆராய்ந்த பொலிஸாருக்கு அதிர்ச்சியூட்டும் உண்மை ஒன்று தெரியவந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் விபத்து நடக்கும் போது கடுமையான மதுபோதையில் இருந்ததாக ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிவேகமும், போதையும் ஒரு மனிதனின் உயிரைப் பறித்ததோடு, பலரை வைத்தியசாலைக் கட்டிலில் முடக்கியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் ஆரச்சிக்கட்டுவ பொலிஸாரின் போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

செய்தித் தகவல்: ஜூட் சமந்த

எரிபொருள் விலை குறையப்போகுதா? அமைச்சர் பிமல் வெளியிட்ட அதிரடித் தகவல்!

0

உலக சந்தையின் தற்போதைய போக்கைக் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கும் இலங்கை வாகன ஓட்டிகளுக்கு ஒரு நிம்மதிப் பெருமூச்சு விடும் செய்தி வெளியாகியுள்ளது. உலக சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்து நீடிக்குமாயின், அதன் நேரடிச் சலுகைகளை எதிர்வரும் ஓகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதமளவில் நாட்டு மக்களுக்கு அள்ளி வழங்க முடியும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகராட்சி அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பானது தற்போதைய பொருளாதார சூழலில் சாமானிய மக்களின் மாதாந்த பட்ஜெட்டில் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லாபம் பார்க்கும் எண்ணம் அரசுக்கு இல்லை: அமைச்சரின் அதிரடிப் பேச்சு!

மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாக இருக்கும் ஒரு கேள்விக்கு அமைச்சர் மிக ஓப்பனாகப் பதிலளித்துள்ளார். எரிபொருள் விற்பனை மூலம் லாபம் ஈட்டும் நோக்கம் தற்போதைய அரசாங்கத்திற்கு எள் அளவும் இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “இப்போதும் கூட அரசாங்கம் சும்மா இருக்கவில்லை. ஒவ்வொரு லீட்டர் டீசலுக்கும் சுமார் 100 ரூபாயையும், ஒரு லீட்டர் பெற்றோலுக்கு சுமார் 20 ரூபாயையும் மானியமாக மக்களுக்காக அரசாங்கமே பொறுப்பேற்று வழங்கி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

ஏன் நினைத்தவுடன் விலையைக் குறைக்க முடியாது? பின்னணியில் இருக்கும் டெண்டர் ரகசியம்!

“உலக சந்தையில் விலை குறைந்த அடுத்த நிமிடமே ஏன் இலங்கையில் விலையைக் குறைக்கக் கூடாது?” என்ற பொதுமக்களின் ஆதங்கத்திற்கான காரணத்தையும் அமைச்சர் இதன்போது தெளிவுபடுத்தினார்.

“கடையிலிருந்து ஒரு பொருளை உடனே காசு கொடுத்து வாங்குவது போல எரிபொருளை சந்தையில் இருந்து உடனடியாக வாங்கிவிட முடியாது. அதற்கு சர்வதேச ரீதியில் முறையான டெண்டர் நடைமுறைகள் உள்ளன. முன்கூட்டியே கோரப்படும் டெண்டர்களின்படி, ஒப்புக் கொள்ளப்பட்ட விலையிலேயே நாம் எரிபொருளைக் கொள்வனவு செய்ய வேண்டியுள்ளது” என அவர் தொழில்நுட்ப ரீதியான நடைமுறையை விளக்கினார்.

எரிபொருள் விலை குறைப்பானது வெறும் வாகன ஓட்டிகளுக்கு மாத்திரமன்றி, நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மற்றும் போக்குவரத்துத் துறைக்கும் ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுக்கும் என நம்பப்படுகிறது.

“இதே சாதகமான நிலைமை நீடித்தால் ஓகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதமளவில் மக்களுக்கு ஒரு சலுகையை வழங்க முடியும் என நாம் உறுதியாக நம்புகிறோம். நாட்டின் பொருளாதாரத்திற்கும் அது மிக அவசியமாகும். பொருளாதாரத்தின் மேல் மட்டத்தை நாம் தற்போதைய சூழலில் மிக பலமாக கட்டியெழுப்பியிருப்பதனாலேயே இவை அனைத்தையும் எம்மால் செய்ய முடிந்துள்ளது. எங்களால் முடிந்தவரை விரைவில் எரிபொருள் விலையைக் குறைக்குமாறு நாமும் அதிகாரிகளிடம் கோரியுள்ளோம்” என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தனது உரையை நம்பிக்கையோடு நிறைவு செய்துள்ளார்.

புதையல் ஸ்கேனருடன் வீடு புகுந்த போலி சாமியார்:42 இலட்சம் அபேஸ்!

0

“உங்கள் வீட்டில் பயங்கரமான பூத தோஷம் இருக்கிறது, அதனால்தான் குடும்பத்தில் உள்ளவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார்கள்”, உங்கள் வீட்டின் அடியில் பெரும் புதையல் இருக்கிறது எனக்கூறி இடம்பெற்ற பெரும் மோசடி சம்பவம் சிலாபம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுளளது.

சிலாபம், கொட்டவெஹெர – திகன்வெவ பகுதியைச் சேர்ந்த அபேசிங்க ஹேரத் முதியான்சேலாகே நிலாந்தி குமாரி அபேசிங்க என்ற பெண்ணின் வீட்டுக்கு, நவீன ‘ஸ்கேனர்’ (Scanner) இயந்திரத்துடன் வந்த மர்ம நபர் ஒருவர், வீட்டின் முற்றத்தை சோதிப்பது போல பாசாங்கு செய்துவிட்டு, அந்தப் பெண்ணிடம் சொன்ன வார்த்தைதான் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அதிரவைத்துள்ளது.

“உங்கள் வீட்டில் பயங்கரமான பூத தோஷம் இருக்கிறது, அதனால்தான் குடும்பத்தில் உள்ளவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார்கள்” என்று கூறி பீதியை கிளப்பியுள்ளார்.

அத்தோடு நிறுத்தாமல், “அந்தப் பூதம் உங்கள் வீட்டின் அடியில் உள்ள பெரும் புதையல் ஒன்றை பாதுகாத்து வருகிறது, அந்தப் புதையலின் உண்மையான சொந்தக்காரர் நீங்கள்தான்” என ஆசையைத் தூண்டியுள்ளார்.

பேய் பயமும் 42 இலட்சம் ரூபாய் புதையலும்!

மந்திரவாதியின் பேச்சை அப்படியே நம்பிய அந்தப் பெண், வீட்டின் தோஷத்தை நீக்கி புதையலைத் தோண்டி எடுப்பதற்குச் சம்மதித்துள்ளார். இதற்காக முதற்கட்ட செலவு மற்றும் சடங்குகளுக்காகப் போலிச் சாமியாரால் கோரப்பட்ட 42 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் ஒரு பவுன் தங்க நகையை அந்தப் பெண் தட்டாமல் கொடுத்துள்ளார்.

பணம் கைக்கு வந்ததும், பிரதான சந்தேக நபர் ஒரு விசேட மந்திரவாதி மற்றும் மேலும் மூன்று கூட்டாளிகளை அந்தப் பெண்ணின் வீட்டுக்கு அழைத்து வந்து நள்ளிரவில் விசேட சாந்திகர்மம் (பூஜை) ஒன்றை நடத்தியுள்ளார். பூஜையின் உச்சக்கட்டத்தில், புதையலில் இருந்து எடுத்ததாகக் கூறி இரண்டு புத்தர் சிலைகளையும், சில மாணிக்கக் கற்களையும் அந்தப் பெண்ணிடம் கொடுத்து நம்பவைத்துள்ளனர்.

முன்னேஸ்வரம் காளி கோவிலில் உடைந்த மர்மம்: போலி நகைகள் அம்பலம்!

நாடகம் இத்துடன் முடியவில்லை. புதையலில் கிடைத்த சிலைகளையும் மாணிக்கக் கற்களையும் சிலாபம் – முன்னேஸ்வரம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சுடுகாட்டு காளி கோவிலுக்கு எடுத்துச் சென்று விசேட பூஜை செய்ய வேண்டும் என சாமியார் கட்டளையிட்டுள்ளார். அதன்படியே அந்தப் பெண்ணும் சிலைகளுடன் முன்னேஸ்வரம் கோவிலுக்குச் சென்று காத்துக்கொண்டிருந்தார். ஆனால், நீண்ட நேரமாகியும் சாமியார் கும்பல் அங்கு வரவில்லை.

அங்கேயே பெண்ணுக்கு சந்தேகம் தொற்றிக்கொண்டது. உடனடியாகத் தனக்குக் கிடைத்த புத்தர் சிலைகளையும் மாணிக்கக் கற்களையும் சோதித்துப் பார்த்தபோது, அவருக்குப் பேரிடி காத்திருந்தது. அந்தச் சிலைகள் எவ்வித பெறுமதியுமற்ற ஏதோ ஒரு சாதாரண உலோகத்தால் செய்யப்பட்டவை என்பதும், மாணிக்கக் கற்கள் யாவும் போலியானவை என்பதும் அம்பலமானது.

அதிரடி வேட்டையில் இறங்கிய சிலாபம் போலீஸ்: கம்பி எண்ணும் கும்பல்!

தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண், உடனடியாகச் சிலாபம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் பெரேராவிடம் முறையிட்டார். அவரின் நேரடி உத்தரவின் பேரில், கொட்டாஞ்சேனை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் மஹிந்த குணசேன தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர் மின்னல் வேக விசாரணையில் இறங்கினர்.

வனாத்தவில்லுவ, மதுரங்குளி மற்றும் கேகாலை ஆகிய பகுதிகளில் மறைந்திருந்த ஐந்து சந்தேக நபர்களையும் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோசடி செய்யப்பட்ட பணத்தில் 14 இலட்சம் ரூபாய், உருக்கப்பட்ட நிலையில் ஒரு தங்கப் பவுன், போலிச் சிலைகள், போலி மாணிக்கக் கற்கள் மற்றும் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் அனைவரும் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

தகவல்: ஜூட் சமந்த

மாதம்பே – நாத்தாண்டியா வீதியில் பேராபத்து!

0
உயிரைப் பணயம் வைத்து பயணிக்கும் வாகன சாரதிகள்: மாதம்பே வீதியில் ஏற்பட்டுள்ள திடீர் பேராபத்து!

சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகன சாரதிகள் அடிக்கடி பயன்படுத்தும் மிக முக்கியமான மாற்றுப் பாதையொன்று தற்போது மரணப் பொறியாக மாறியுள்ளது. மாதம்பே – நாத்தாண்டியா வீதிக்கு இணையாக ஓடும் புகழ்பெற்ற ஹாமில்டன் கால்வாயின் கரைகள் பல இடங்களில் திடீரென உடைப்பெடுத்து, சரிந்து விழுந்துள்ளன. இதனால், அந்த வீதியூடாகப் பயணிக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் உயிருக்கு எந்நேரமும் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சநிலை உருவாகியுள்ளது.

வீதி ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டதை அடுத்து, வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) தற்காலிகமாக விபத்து எச்சரிக்கைப் பலகைகளையும், சைகைகளையும் மட்டுமே அந்த இடங்களில் காட்சிப்படுத்தியுள்ளது. ஆனால், வெறும் எச்சரிக்கைப் பலகைகள் மாத்திரம் வீதியால் பயணிக்கும் மக்களின் உயிரைப் பாதுகாத்துவிடுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. கரை சரிவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வெறும் போர்டுகளைப் போட்டுவிட்டு அதிகாரிகள் மௌனம் காப்பது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மின்சாரம் மற்றும் குடிநீர் தடைப்படும் அபாயம்: அடுத்தடுத்து வரும் சிக்கல்கள்!

இந்தக் கரை சரிவானது வெறும் வீதிப் போக்குவரத்தை மாத்திரம் பாதிக்கவில்லை. கால்வாய் கரை முற்றாக அரித்துச் செல்லப்பட்டுள்ளதால், வீதியோரமாக இருக்கும் மின்சாரக் கம்பங்கள் மற்றும் பிரதான நீர் விநியோகக் குழாய்கள் என்பன எந்நேரமும் சரிந்து விழும் நிலையில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. ஒருவேளை மின்கம்பங்கள் சரிந்தால், இப்பகுதி முழுவதும் இருளில் மூழ்குவதுடன், குடிநீர் விநியோகமும் முற்றாகத் தடைப்படும் அபாயம் காணப்படுகிறது.

நெரிசலைத் தவிர்க்க வந்து ஆபத்தில் சிக்கும் வாகனங்கள்: உடனடி நடவடிக்கை தேவை!

கொழும்பு – சிலாபம் பிரதான வீதியில் ஏற்படும் கடுமையான வாகன நெரிசலில் இருந்து தப்பிப்பதற்காக, இரவு பகல் பாராது பெரும்பாலான வாகன சாரதிகள் இந்த மாதம்பே – நாத்தாண்டியா வீதியையே பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறானதொரு பிஸியான வீதி, தற்போது பேராபத்தை எதிர்நோக்கியுள்ளது. எனவே, இந்த ஹாமில்டன் கால்வாய் கரைகளை உடனடியாகப் புனரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், வீதி முற்றாக அழிவடைவதுடன் பாரிய உயிர்ச்சேதங்களும் நிகழக்கூடும் என இப்பகுதி மக்கள் அவசரக் குரல் எழுப்புகின்றனர்.

தகவல்: ஜூட் சமந்த

புத்தளத்தை அதிரவைத்த முதலைப்பாளி மோட்டார் பைக் ரேஸ்!

0

முதலைப்பாளி மைதானம் இன்று எஞ்சின்களின் கர்ஜனையாலும், ரசிகர்களின் ஆரவாரத்தாலும் அதிரந்தது. இளைஞர்களின் அசாத்திய வேகத்திற்கும் விவேகத்திற்கும் களம் அமைத்துக் கொடுத்த “முதலைப்பாலி மோட்டார் பைக் ரேஸ்” (Mudalaipali Motorbike Rally) மிகவும் பிரம்மாண்டமான முறையில் இன்று அரங்கேறியது.

வழக்கமான அரசியல் மேடைகளைத் தாண்டி, துடிப்பான இளைஞர்களின் திறமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த மோட்டார் சைக்கிள் ரேஸ் நிகழ்வில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் NTM. தாஹிர் அவர்கள் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டார்.

மைதானத்தைச் சுற்றி திரண்டிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்களின் உற்சாகக் கூச்சலுக்கு மத்தியில், களம் சுவாரஷ்யத்தின் உச்சிக்கே சென்றது. இந்த அதிரடி பந்தயக் களத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான பைஷர் மரைக்கார், பர்மின் மற்றும் மௌலவி பஸால் இஸ்மாயீல் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலரும் நேரில் வருகை தந்து வீரர்களைக் குதூகலப்படுத்தினர்.

வளைந்து நெளிந்து செல்லும் மைதானப் பாதைகளில், காத்தைக் கீறிக்கொண்டு பாய்ந்த பைக்குகளையும், இளைஞர்களின் அபாரமான சாகசத் திறமைகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் NTM தாஹிர் அவர்கள் மிக உன்னிப்பாகக் கண்டு களித்தார். அத்தோடு நின்றுவிடாமல், போட்டியின் இறுதியில் வெற்றியீட்டிய வீரர்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து, அவர்களுக்கான பரிசில்கள் மற்றும் நினைவு சின்னங்களை வழங்கி கௌரவித்தார்.

இளைஞர்களின் இவ்வாறான விளையாட்டுத் திறமைகள் மற்றும் அவர்களின் எதிர்காலக் கனவுகளுக்குத் தாம் என்றும் பக்கபலமாகவிருந்து, துணை நிற்போம் என்ற உறுதியையும் மக்கள் மத்தியில் அரசியல் தலைவர்கள் இதன்போது வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

கல்வியால் உயர்வோம்! புத்தளம் ஆப்தீன் கல்லூரியில் முஹர்ரம் தின நிகழ்வு!

0

இஸ்லாமிய வரலாற்றின் தியாகத்தையும், உண்மையை நிலைநாட்டுவதற்காய் வாழ்ந்த உன்னத மனிதர்களையும் நினைவுகூரும் முஹர்ரம் மாதத்தை முன்னிட்டு, புத்தளம் ஆப்தீன் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் விசேட ஆன்மீக மற்றும் கல்வி விழிப்புணர்வு நிகழ்வு அண்மையில் மிக விமரிசையாக நடைபெற்றது.

மாணவர்களின் ஆளுமையையும் ஆன்மீக சிந்தனையையும் தூண்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு, ஒட்டுமொத்தப் பிரதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பாடசாலை மேடையை அலங்கரித்த மாணவர்களின் முஹர்ரம் கலாச்சார நிகழ்வுகள், நெஞ்சைத் தொடும் கவிதைகள் மற்றும் சிந்தனையைத் தூண்டும் உரைகள் என அனைத்தும் வந்திருந்தோரை கட்டிப்போட்டன. ஆன்மீக அதிர்வுகளோடு, கல்வி சார் ஒழுக்க விழுமியங்களையும் ஒருசேர விதைத்த பெருமை இந்த நிகழ்வைச் சாரும்.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கல்பிட்டி-புத்தளம் பிரதேச செயலக அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ சகோதரர் M.J.M. பைசல் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அரங்கமே உற்றுநோக்கிய அந்த தருணத்தில், மேடையேறிய நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் அவர்கள், மாணவர்களின் எதிர்காலப் பாதைக்கான திசைகாட்டியைத் தன் உரையில் மிக அழகாகப் பொதித்து வைத்தார்.

“முஹர்ரம் மாதம் என்பது இஸ்லாமிய வரலாற்றில் தியாகத்தின், பொறுமையின் மற்றும் உண்மையின் பக்கம் நிற்கும் உன்னத மாதமாகும். கர்பலா சம்பவம் நமக்கு உணர்த்துவது என்னவென்றால், நாம் எப்போதும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்; உண்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்” என உணர்ச்சிப் பூர்வமாகத் தனது உரையைத் தொடங்கினார். அத்தோடு நின்றுவிடாமல், சமகாலப் போட்டி உலகில் கல்வியின் அவசியத்தையும் அவர் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த எதார்த்தமான உரை, மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

மக்களின் பலத்த பாராட்டுக்களுக்கு மத்தியில், இந்த உன்னத விழாவானது பாடசாலைச் சமூகத்தின் கூட்டு முயற்சிக்குச் சான்றாக அமைந்தது.

பாடசாலை அதிபர், உப அதிபர், அர்ப்பணிப்புடன் செயலாற்றும் ஆசிரியர்கள், மாணவச் செல்வங்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் (SDC), பழைய மாணவர் சங்கம் (OBA) மற்றும் ஊர் பிரமுகர்கள் எனப் பல தரப்பினரும் ஒன்றிணைந்து இந்நிகழ்வை முழுமையான வெற்றியாக மாற்றிக் காட்டினர்.