Saturday, November 22, 2025
Sponsored advertisementspot_img
Home Blog

நாகவில்லுவில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வின் நினைவுதினம்!

பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நாகவில்லுவில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு!

இலங்கை திருநாட்டில் பெளதீக ரீதியான பல வேலைத்திட்டங்களையும், இடம்பெயர்வு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பறந்துபட்ட அறிவினையும் கொண்டிருந்த எருக்கலம்பிட்டியை சேர்ந்த மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது வருட நினைவு தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

அந்த வகையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் நினைவுப் பேருரையும், புத்தக வெளியீடு நிகழ்வும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 25.08.2025 புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், புத்தி ஜீவிகள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்தகொண்டமை விஷேட அம்சமாகும்.

சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் பொருளாளர் ஜனாப் ஏ.ஜி. அனீஸ் (Bsc.Agri) அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

மேலும் இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீட, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களினால் நூல் அறிமுக உரையும், நினைவுப் பேருரையும் மிகவும் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்டது.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பங்களிப்பு அளப்பெரியது என நினைவு கூறிய பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன், வடக்கில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் முஸ்லிம்களின் இடம்பெயர்வு குறித்து அதீத அக்கறையுடன் செயற்பட்ட மிக முக்கியமானவர் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் எனவும் எடுத்துரைத்தார்.

வடக்கு முஸ்லிம்களின் இடம்பெயர்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் பலதரப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தி, சர்வதேசம் வரை இவ்விடயங்களை கொண்டுசென்ற மகான் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் என பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் தனது உரையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் புதல்வி சட்டத்தரணி எப்.சப்னா ஹஸ்புல்லாஹ் அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், நூல் வெளியீடு நிகழ்வும் இடம்பெற்றது.

நூலின் முதற்பிரதியை ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் (GS) அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

மேலும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் செயலாளர் ஜனாப் எஸ்.எச்.எம். றிஸ்னி அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதுடன், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பாரியாருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், பேராசிரியர்கள், கல்விமான்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலைச் சமூகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், ஈ நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனம் ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்காக ஒன்று திரண்ட அரசியல் தலைவர்கள்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவிதியையும் விட, சமூகத்தின் உரிமைகளுக்கான பிரச்சினைகளை தோற்றிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியலை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கல் அணி சாம்பியன் ஆனது!

0

‘நேஷன்ஸ் லீக்’ கால்பந்தில் போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனது. பைனலில் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 5-3 என ஸ்பெயினை வீழ்த்தியது.

ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக ‘நேஷன்ஸ் லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. நேற்று ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த பைனலில், போர்ச்சுகல், நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 21வது நிமிடம் ஜுபிமெண்டி (ஸ்பெயின்), 26வது நிமிடம் மெண்டிஸ் (போர்ச்சுகல்) தலா ஒரு கோல் அடித்தனர். 45வது நிமிடம் மைக்கேல் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 61 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 138வது கோல் இது. 90 நிமிட முடிவில் போட்டி 2-2 என சமன் ஆனது. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. காயம் காரணமாக 88 வது நிமிடம் வெளியேறிய ரொனால்டோ, இதில் பங்கேற்கவில்லை.

முதல் 3 வாய்ப்பில் போர்ச்சுகலின் ராமோஸ், விடின்ஹா, பெர்ணான்டஸ் கோல் அடித்தனர். மறுபக்கம் ஸ்பெயின் தரப்பில் மெரினோ, பயேனா, இஸ்கோ கோல் அடிக்க 3-3 என ஆனது.

4வது வாய்ப்பில் மெண்டெஸ் (போர்ச்சுகல்) கோல் அடிக்க, ஸ்பெயினின் மோராட்டோ அடித்த பந்தை கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்து அசத்தினார்.

5வது வாய்ப்பில் நெவேஸ் கோல் அடித்தார். இதையடுத்து 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் ‘திரில்’ வெற்றி பெற்றது. 2019க்குப் பின் இத்தொடரில் மீண்டும் சாம்பியன் ஆனது.

தில்லையடியில் சிக்கிய கடத்தல் பீடி இலைகள்!

0

புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் வேன் ஒன்றும் பறிமுதல்!

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட ஒரு வேன் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், புத்தளம் பொலிஸாருடன் இணைந்து தில்லையடி பகுதியில் நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகளானது வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வேன் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் ஆபத்தா?

விண்வெளியில் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களை சீனா நினைத்தால் வெறும் 12 மணி நேரத்தில் தாக்கி அழித்துவிட முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற செய்தி ஊடகத்தில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது சீனா 99 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் நான்ஜிங் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளிக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் வூ யுன்ஹுவா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் எலான் மஸ்கின் 1400 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெறும் 12 மணி நேரத்தில் காலி செய்துவிடும். சீன செயற்கைக்கோளில் லேசர், நுண் அலைகளை உருவாக்கும் கருவி, உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெறுமென நெட்வொர்க் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. தவிர, ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம்சாட்டி வருகிறது.

அதாவது, உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைன் படைகளுக்கு தகவல்கள் கொடுக்கவும், ரஷ்ய எல்லையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்ய போரின்போது அப்போதைய உக்ரைனின் துணைப் பிரதமரான மைக்கைலோ ஃபெடோரோவ், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை உடனடியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், “உடனடியாக சேவை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

உக்ரைன் போருடன் மட்டுமே ஸ்டார்லிங்க் நிற்காது, நாளை சீனாவுக்கும்-தைவானுக்கும் பஞ்சாயது ஏற்பட்டால் அப்போதும், தைவானுக்கு சப்போர்ட் செய்ய ஸ்டார்லிங்க் வரும். எனவே இந்த கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு இதற்கான பணிகளை சீனா தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ‘கியான்ஃபான் மெகா-விண்மீன் திட்டம்’ (Qianfan mega-constellation project) என்றும் பெயரிட்டிருந்தது. நோக்கம் உலகம் முழுவதும் இணைய தொடர்பை வழங்குவதாகும். இதற்காக மொத்தம் 15,000 சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவ சீனா முடிவெடுத்தது. இதன் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. இதில் 18 செயற்கைக்கோள்கள் இருந்தன.

ஒவ்வொன்றும் சுமார் 300 கி.கி எடையில் இருந்தது. இவை பூமியிலிருந்து 800 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோன்று 2024 டிசம்பரில் அடுத்து இரண்டு தொகுதி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. தற்போது மொத்தம் 99 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. 15,000 செயற்கைக்கோள்களை 3 கட்டங்களாக ஏவ இருக்கிறது. முதல் கட்டத்தில் 1,296 செயற்கைக்கோள்கள் ஏவப்படும். இதில் 648 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் கன்னி உரை

0

அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்

தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:

மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.

ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.

மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.

மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.

நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.

மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தலில் இவ்வாறுதான் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்

0

அதிகாரிகள் மற்றும் பிற தேவைகள் முடிந்த பிறகு, மாலை 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 4.15 மணிளவில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் 21ம் திகதி வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் பெறப்பட்டதும், அதிகாரிகள் மற்றும் இதர தேவைகள் முடிந்ததும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இரவு 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

மாலை 4.15 மணிளவில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

அத்துடன் மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முடிவுகள் கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையே முதலில் எண்ணப்படும்.

அந்தக் கணக்கெடுப்பின் பின்னர் (மாவட்ட அளவில் எண்ணும் பணி) முதலில் வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

அதன் பிறகு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அது தயாரிக்கப்படுகிறது.

தேர்தல்கள் செயலகமே ஒட்டுமொத்த முடிவுகளைக் கணக்கிடும்.

எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளாரா என சரிபார்க்கப்படும்.

அப்படியானால், அந்த நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்படும்.

அப்போது ஜனாதிபதியை நாங்கள் அறிவிப்போம்.

எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்காவிடின், விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும்.

அங்கு, அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் வைத்து விட்டு  மீதமுள்ள 36 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்” என்றார்.

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறும்

0

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வாத்தியாசலையாக மாற்றம் பெரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன தலைமையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

புத்தளம் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற புத்தளம் தல வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க குறித்த வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

மேலும் புத்தளத்தில் மீன் பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் மீன் பிடி துறைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டமை புத்தளம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாட்டில் நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை நிலை நாட்ட தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தனது பிரதான நோக்கம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மொட்டுக்கட்சிக்கு எதிராக நிற்கும் முக்கிய அமைச்சர்கள்

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காதிருக்கவும், மொட்டு சின்னத்தில் தனியாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த கடிதம் நேற்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் அரசியல் குழுவில் முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அந்த கடிதத்தை நிராகரிக்க அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 பேர் அங்கம் வகிப்பதுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 72 பேர் பங்கேற்றனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த 11 பேர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மஹிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சஹன் பிரதீப், ரமேஸ் பத்திரன, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, கனக ஹேரத், மொஹான் பிரியதர்ஷன ஆகியோர் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அத்துடன் பிறிதொரு கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 6 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறப்பட்ட தம்மிக பெரேரா தொடர்பில் அரசியல் குழுக் கூட்டத்தின்போது எந்தவித கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத 11 பேர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சைனப் ஆரம்பப் பாடசாலைக்கு ஆளுநர் வருகை!

0

புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலையின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் யஹியா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் ஜெய்னப் பாடசாலைக்கு 22 லட்சம் ரூபா பெறுமதியான நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தல் மற்றும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் செயற்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் கற்றல் உபகரணம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கௌரவ அதிதியாக புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அர்ஜுன ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரம்ப பாடசாலையின் முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஆரம்ப பாடசாலை ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்பு குறித்து விரிவாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் துரித வளர்ச்சி பற்றியும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் செயற்திட்டத்திற்கு வடமேல் மாகாண ஆளுநர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஷி ஜமால்தின், இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் அயல் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு
நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறை

0

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஓவியப்போட்டியில் எருக்கலம்பிட்டி மாணவன் முதலாமிடம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.

வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.

முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா

0

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளனர்.

சாந்த நிரியல்ல உட்பட 15 பேர் கொண்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் அறிவித்தலுக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி திங்கட்கிழமை புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ “அத தெரண” விற்கு தெரிவித்தார்.

புத்தளம் எருக்கலம்பிட்டியில் கடும் வெள்ளம்

0

புத்தளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் பகுதி முழுதும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

புத்தளம், தில்லையடி, பாலாவி, புத்தளம் எருக்கலம்பிட்டி, ஹிதாயத் நகர்,  மதுரங்குளி மற்றும் ஏனைய பல கிராமங்களும் வெள்ளித்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1500 குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவருவதுடன், அனைத்து வீடுகளும் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்றிற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஐநூற்றுக்கும் அதிகமான வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் மூன்று வேலைகளிலும் ஊர் தனவந்தர்களின் உதவியுடனும், பள்ளிவாசல் நிர்வாக சபையின் வழிகாட்டலுடனும் வழங்கப்பட்டு வருவதுடன், ஊர் மக்களுக்கும் உணவு விநியோகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவர்களுக்கான நிவாரண உதவிகள் இதுவரை அரசாங்கத்தினால் வழங்கப்படாத போதிலும், ஊர் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு விநியோகங்கள் இதுவரை  வழங்கப்பட்டு வருகின்றது.

புத்தளம் பொத்துவில்லு பகுதியில் உள்ள குளம் மழை நீரினால்  பெருக்கெடுத்துள்ளதால் குறித்த குளத்து நீர் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்திற்குள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக ஊடறுத்து செல்வதால் வீடுகள் தொடர்ந்தும் நீருள் மூழ்கியுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிவாரண உதவிக்காக பல மக்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத விசாரணைப் பிரிவு (TID) இஸ்ரேலியர்களின் கருவியாகிவிட்டத்தா?

ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டு:

பயங்கரவாத விசாரணைப் பிரிவு (TID) இஸ்ரேலியர்களின் கருவியாக மாறியுள்ளதா? இலங்கையில் யூதர்களின் சபத் வழிபாட்டு இல்லங்கள், பயங்கரவாத தடைச் சட்டம்(PTA) துஷ்பிரயோகம் செய்யப்படல், பயங்கரவாத விசாரணைப் பிரிவு (TID) இஸ்ரேலியர்களுக்கான கருவியாக மாறியுள்ளமை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரசியல் தலையீடுகள் என்பன பற்றி சபையில் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் காட்டம்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA)- ஓட்டமாவடி

திங்கள் கிழமை(17) பாராளுமன்றத்தில் வெளிவிவகார மற்றும் நீதி அமைச்சுக்கள் தொடர்பான வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கூறியவையாவன:

வெளிவிவகார அமைச்சு மற்றும் நீதி அமைச்சு தொடர்பான இந்தக் குழுநிலை விவாதத்தில் எனது கருத்துக்களை முன்வைப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

ஆரம்பத்தில், திருகோணமலையில் ஒரு விகாரை கட்டப்படுவது தொடர்பாக திடீரென ஏற்பட்ட இனவாத பதற்றம் தொடர்பான இந்த விடயத்தை நான் குறிப்பிட விரும்புகிறேன். இதற்கு முன்பே உறுப்பினர்கள் சிலர் இதுபற்றி பேசியுள்ளனர். இது ஒரு மிக மிக முக்கியமான பிரச்சினை. இது அவ்வப்போது வருகின்றது. எங்கிருந்தோ திடீரென சிலைகள் கொண்டு வரப்பட்டு விகாரைகள் எழுப்பப்படுகின்றன. இது தேவையற்ற பதற்றத்தை உருவாக்குகிறது.

வெளிவிவகார அமைச்சு ஒர் இன நல்லுறவு குழுவை அமைத்து, இவ்வாறான மோதல்களை அந்த சபைகளுக்குப் பரிந்துரைக்க முன்வர வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன்.இங்கிலாந்தில் இதுபோன்ற ஓர் அமைப்பு அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது. சமய ரீதீயான பதட்டங்களைக் கையாளும்போது அரசாங்கங்கள் தேவையற்ற சர்ச்சையிலும், சிரமத்திலும் சிக்கிக் கொள்வதை நான் அறிந்துள்ளேன்.

இது திருகோணமலையில் நடந்ததை நியாயப்படுத்துவதாக ஆகி விடாது.அது மிகவும் பாரதூரமான விடயம்.திருகோணமலையில் பௌத்தர்கள் இருப்பதால், அங்கு விகாரைகள் அவசியம் என்று கூட நீங்கள் இப்பொழுது சொல்லுவீர்கள். ஆனால், இந்த நாட்டில் யூதர்கள் இல்லை. ஆனால், சபத் இல்லங்கள் என்ற வழிபாட்டுத்தலங்கள் இந்த நாட்டில் ஒரு யூதர் கூட இல்லாதபோதுயூதர்களுக்காக கட்டப்பட்டுள்ளன. சமீபத்தில் என்ன நடந்தது?

எனது கட்சி உறுப்பினர்களில் ஒருவர், கொழும்பு மாநகர சபையில், சபத் இல்லம், அதாவது யூதர்களின் வசதிக்காக கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள மத வழிபாட்டுத் தலத்தை விவாதத்தில் சேர்க்காதது ஏன் என்று மேயரிடம் கேட்கும் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இந்த விடயத்தை கௌரவ பிரதமர் சபையில் மிகத் தெளிவாக, இது ஒரு மத ஸ்தாபனத்தை உருவாக்க அங்கீகரிக்கபடாத காரியம் என்று கூறினார். இறுதியாக என்ன நடக்கிறது?

மாநகர சபையில் எனது உறுப்பினர் இந்த பிரச்சினையை எழுப்பி, கொழும்பு மாநகர சபையின் விவாதத்தில் ஏன் சேர்க்கப்படவில்லை என்று கேட்கும்போது, அடுத்த நாள், அவர் உடனடியாக பயங்கரவாத விசாரணைத் பிரிவிற்கு (TID) அழைக்கப்பட்டார். அவர் ஏன் இந்த பிரச்சினையை எழுப்பினார் என்று கேட்கப்பட்டார். அவர் ஏன் வரவழைக்கப்பட்டார் என்று கேட்டபோது, “இல்லை, கொழும்பு மாநகர சபையில் நீங்கள் கொண்டு வந்த தீர்மானம் பற்றி முகநூலில் சில கருத்துக்கள் வந்துள்ளன” என்று கூறப்பட்டது. அதற்கு அவர், “இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.

கௌரவப் பிரதமர் இது அங்கீகரிக்கப்படாத கட்டிடம் என்று கூறியிருந்தார். அதை அகற்றுவதற்கான பொருத்தமான அதிகாரம் கொண்ட மாநகர சபை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று கேட்டார். அதற்கு எதுவும் செய்யப்படவில்லை. மாறாக, அவர் பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு வரவழைக்கப்பட்டார். அதேபோல், பொத்துவில் பிரதேச சபையில், பொத்துவிலில் உருவாக்கப்பட்ட சபத் இல்லத்தை மூடுவதற்கு அவர்கள் ஒரு முடிவை எடுத்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு, முகநூல்பக்கத்தில் சில கருத்துக்களை இட்ட பொதுமக்களில் இளைஞர்கள் இருவர், பொத்துவில் பொலிஸாரால் வாக்குமூலம் அளிப்பதற்காக வரவழைக்கப்பட்டனர். அதன் பிறகு, அவர்கள் பயங்கரவாத விசாரணைத் பிரிவிற்கு வரவழைக்கப்பட்டனர்.

நீங்கள் ஏன் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இத்தகைய அற்பமான விடயங்களுக்காக துஷ்பிரயோகம் செய்கிறீர்கள்? ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில்,பயங்கர வாத தடைச் சட்டத்தை (PTA) ஒழிப்பதாக உறுதியளித்த அரசாங்கம்தான் இது. ஆனால், இந்த நாட்டில் ஒரு யூதர் கூட இல்லாத நிலையில், சபத் இல்லங்களை அமைப்பது குறித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்த அப்பாவி மக்களை வரவழைக்க அந்த சட்டம்(PTA) பயன்படுத்தப்படுகின்றது.

அத்தகைய பல மத வழிபாட்டுத் தலங்கள் உருவாகின்றன. இதன் பொருள் என்ன?அதேபோல், கத்தார் மீது இஸ்ரேலால் எந்தவித ஆத்திரமூட்டலும் இன்றித் தாக்குதல் நடத்தப்பட்டபோது வெளிவிவகார அமைச்சு அறிக்கை வெளியிட்ட விதத்தைப் பாருங்கள். அது, “சமீபத்தில் கத்தாரில் பதிவான தாக்குதல்கள் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகின்றது” என்று மட்டும் கூறுகின்றது.

இந்த அர்த்தமற்ற அறிக்கை எதற்கு? நீங்கள் ஏன் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுகின்றீர்கள்? இந்த அறிக்கைகளை வெளியிடுவதற்குப் பதிலாக, அறிக்கையையே வெளியிடாமல் அமைதியாக இருந்திருக்கலாம். இது தேவையற்றது. இது மிகவும் உணர்வற்ற அலட்சியமான, வேண்டுமென்றே பாரபட்சமான, திரிபுபடுத்தப்பட்ட அறிக்கையாகும். இது ஆக்கிரமிப்பாளரின் பெயரைக் கூட குறிப்பிடவில்லை, அல்லது வெளிப்படையாக மீறப்பட்ட ஒரு நாட்டின் அரசாங்கம் மற்றும் மக்களின் உணர்வுகளை எவ்வாறு பகிர்ந்து கொள்கிறது என்று கூட பேசவில்லை.

கத்தார் ஒரு நட்பு நாடு. இந்த நாடு ஆறு வளைகுடா நாடுகளின் சார்பாக மனித உரிமைகள் சபையில் உறுப்பினராக உள்ளது. மேலும், அவர்கள் மனித உரிமைகள் பேரவையில் எங்களை ஆதரித்தனர்.ஆனால், நீங்கள் ஆக்கிரமிப்பாளரை குறிப்பிடாத ஒரு வெற்று அறிக்கையை வெளியிடுகிறீர்கள், குறைந்தபட்சம் அத்துமீறல்களைக் கண்டிக்கும் அளவிற்குக் கூட செல்லவில்லை.

நீங்கள் இஸ்ரேலைத் தாக்குதல் நடத்திய நாடாக குறிப்பிடப் பயப்படுகிறீர்கள். சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்காவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் சில கூட்டங்களை நடத்தியதற்காக ஒரு பிரிட்டிஷ் பத்திரிகையாளர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அதேபோல், நீங்கள் இங்கே செய்கிறீர்கள்.

யாரெல்லாம் கருத்து தெரிவிக்கிறார்களோ அவர்களை கைது செய்கிறீர்கள். சில மாதங்களுக்கு முன்பு பாலஸ்தீனியர்களுடன் தனது ஒற்றுமையைக் காட்டும் ஒரு ஸ்டிக்கரை ஒட்டிய ஓர் அப்பாவி இளைஞன் பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு (TID ) வரவழைக்கப்பட்டான்.

இப்போது TID இந்த நாட்டில் இஸ்ரேலியர்களின் ஒரு கருவியாக மாறியுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசங்களில் இஸ்ரேல் எடுத்த நடவடிக்கைகளுக்காக சீற்றம் காட்டும் அப்பாவி பொதுமகனை நீங்கள் இப்படித்தான் நடத்துகின்றீர்களா? இந்த பிரச்சினை முடிவுக்கு வர வேண்டும்.

அதேபோல், ஜெனீவாவில் பயங்கரவாத தடைச் சட்டத்தை ( PTA) ஒழிப்பதாக அரசாங்கம் உறுதியளித்தது. ஆனால் இன்று என்ன நடந்தது? சட்டமா அதிபர் திணைக்களம் ஒரு சுயாதீன பொது வழக்குத் தொடுநர் அலுவலகத்தை உருவாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக நான் ஒரு அறிக்கையைப் பார்க்கிறேன். சுயாதீன பொது வழக்குத் தொடுநர் அலுவலகம் – இது அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு ஜெனீவாவில் அளித்த உத்தரவாதம். அரசியல் நோக்கங்களுக்காக சட்டமா அதிபர் திணைக்களம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை நாங்கள் அறிவோம்.

சட்டமா அதிபர் திணைக்களம் பல அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்குகளில் உடந்தையாக இருந்தது. ஜனாதிபதி உட்பட நானும் இன்னும் பலரும் ஒரு சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வரவழைக்கப்பட்டோம். அங்கு சட்டமா அதிபர் திணைக்களம் வழக்குப் பதிவு செய்தது. இறுதியில் எங்களின் குடியுரிமை உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கும் .

சட்டமா அதிபர் திணைக்களம் வழக்குகளை நடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டது. இப்போது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதைப் பாருங்கள். அவர்களின் அதிகாரிகளில் ஒருவராக இருந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் வேண்டுமென்றே பொய்யாகச் சிக்க வைக்கப்பட்டார்.

எனது கருத்துப்படி, இது ஒரு கற்பனைக் கதை. புத்தளம் அருகில் உள்ள கரைதீவில் ஒரு இடத்திற்குச் சென்று, போதைக்கு அடிமையான பெற்றோரின் ஏழைக் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக ‘முத்துக்களைக் காப்போம்’ என்ற ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் உருவாக்கப்பட்டது என்று அவர்மீது குற்றம் சாட்டினர்.

பயங்கரவாத சித்தாந்தங்களில் ஈடுபட்டதாகக் காட்டுவதற்காக அரசாங்கத்தால் இது ஒரு பொய் சாக்காக உருவாக்கப்பட்டது. ஆனால், இறுதியாக புத்தளம் மேல் நீதிமன்றத்தில் பல வருடங்களாக வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. சட்டமா அதிபர் பல தவணைகளை எடுத்து வருகிறார். வழக்கை மேலும் தொடர முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும், இத்தகைய தேவையற்ற விடயங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, சட்டமா அதிபர் அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்குகளில் ஈடுபட்டு வருகிறார்.

அரசாங்க பாதுகாப்பு நிதி இந்த நாட்டில் பயங்கரவாதத்திற்கு, பௌத்த மற்றும் தமிழ், முஸ்லிம் தரப்புகளில் உள்ள தீவிரவாதத்திற்கு நிதி வழங்க பயன்படுத்தப்பட்டதாக ஜனாதிபதியே பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். சட்டமா அதிபர் அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்குகளைத் தாக்கல் செய்வதில் ஈடுபட்டுள்ளார். மேலும், அவர்கள் தேவையற்ற முறையில் இந்த விடயங்களை மேல் நீதிமன்றத்தில் இழுத்தடிக்கிறார்கள்.

எனவே, இந்த விடயங்கள் முடிவுக்கு வர வேண்டும். சில நாட்களுக்கு முன்புதான், புத்தளம் மேல் நீதிமன்றத்திற்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் இந்த விடயத்தை முடிக்குமாறு உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது. இந்த விடயம் தேவையற்ற முறையில் இழுத்தடிக்கப்படுவதைக் கண்டு, அப்பாவி வழக்கறிஞர்கள் மீது கொண்டு வரப்பட்ட தேவையற்ற தண்டனைத் தடைகள் அவர்களின் அரசியல் நோக்கங்களால் தூண்டப்பட்டுள்ளன. இது முடிவுக்கு வர வேண்டும். எனவே, ஒரு சுயாதீன பொது வழக்குத் தொடுநர் அலுவலகம் நிறுவப்பட வேண்டும்.

அதைக் கூறி இத்தோடுமுடிக்கின்றேன் என தனது உரையை நிறைவு செய்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் உரைக்கு நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார பின்வருமாறு பதிலளித்தார் :

கௌரவ உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்களே, நீங்கள் சுட்டிக்காட்டிவை அனைத்திற்கும் நன்றி. அவை அனைத்தும் நன்கு கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. நான் இரண்டு விடயங்களுக்கு மட்டுமே பதிலளிக்கிறேன். அவற்றில் ஒன்று பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA). புதிய சட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளது என்று நான் காலையில் கூறினேன், ஒருவேளை, அப்பொழுது நீங்கள் இங்கு இருக்கவில்லை. தற்போது அது சிங்களம் மற்றும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

எனவே, மிகக் குறுகிய காலத்திற்குள், பயங்கரவாதம் தொடர்பான புதிய சட்டம் பொது ஆலோசனைகளுக்காக வெளியிடப்படும். எனவே, மக்கள் கருத்துக்களை வழங்க போதுமான அவகாசம் இருக்கும். சர்வதேச சமூகத்திற்கு நாங்கள் உறுதியளித்ததையும், எங்கள் மக்களுக்கு நாங்கள் உறுதியளித்ததையும் நாங்கள் செய்துவிட்டோம்.

இரண்டாவது, சுயாதீன வழக்குத் தொடுநர் சேவை பற்றி. வேறு எந்த சர்வதேச அழுத்தத்தினாலும் நாங்கள் உறுதியளிக்கவில்லை. நாங்கள் சுயாதீன வழக்குத் தொடுநர் பிரிவை நிறுவப் போகிறோம் என்று சொன்னபோது, அது எங்கள் தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாக இருந்தது. நாங்கள் அதைக் குறித்தே சொன்னோம். இருப்பினும், தற்போது, கௌரவ நீதியரசர் யசந்த கொதாகொட தலைமையிலான ஒரு குழு இந்த விடயத்தைப் பரிசீலித்து வருகிறது. கௌரவ சட்டமா அதிபரும் அதில் ஒரு பகுதியாக உள்ளார்.மேலும், ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், நாங்கள் பொது ஆலோசனைகளுக்கு அழைக்க விரும்புகிறோம்.

சட்ட அதிகாரிகளின் சங்கம் அவர்களின் ஆட்சேபனை குறித்து எனக்கு ஒரு கடிதத்தை அனுப்பியது எனக்கு நன்றாகத் தெரியும். எனவே, வேறு யாரையும் போலவே அவர்களும் தங்கள் கருத்துக்களைக் கூறலாம். ஆனால், இந்த அரசாங்கம் ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு விடயங்களை அப்படியே விட்டுவிடப் போவதில்லை என்று அர்த்தமல்ல. நாங்கள் அனைத்து கருத்துக்களையும் பரிசீலிப்போம், ஆனால் எங்கள் தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு நாங்கள் உறுதியளித்ததை எது வந்தாலும் நாங்கள் தொடருவோம் என பதிலளித்தார்.

376 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருட்கள் மீட்பு!

0

376 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதை பொருட்களை கொண்டு வந்த ஆழ்கடல் மீன்பிடிக் கப்பலுடன் 06 சந்தேகநபர்கள் தெற்கு கடற்கரையில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்.

இலங்கை கடற்படை, தெற்கு ஆழ் கடலில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, விஷப் போதைப் பொருட்கள் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் பொதி மற்றும் உள்நாட்டு ஆழ்கடல் மீன் பிடி கப்பலுடன் ஆறு சந்தேக நபர்கள் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த ஆழ் கடல் மீன் பிடிக் கப்பலுடன் சந்தேக நபர்கள் நேற்று ( 2025 நவம்பர் மாதம் 20 ) தங்கல்லை மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியகம் மேற்கொண்ட விசேட சோதனையில், போதைப் பொருளாக சந்தேகிக்கப்படும் 261 கிலோவிற்கும் அதிகமான ஐஸ் 18 மூடை மற்றும் 115 கிலோ ஹெரோயின் ஆகியன உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கையிருப்புடன், 02 ரிவால்வர் ரக மற்றும் பிஸ்டல் ரக பக்க ஆயுதங்கள், 02 வெடிமருந்து பத்திரிகைகள் மற்றும் ஒரு செயற்கைக்கோள் தொலைபேசி ஆகியவை அங்கு கண்டுபிடிக்கப்பட்டன.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகொட ஆகியோர் போதைப்பொருள் கையிருப்பு மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகளை ஆய்வு செய்வதில் பங்கேற்றனர்.

இன்று உலக தொலைக்காட்சி தினம்!

0

உலக தொலைக்காட்சி தினம் (World Television Day) ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது, மேலும் இணையத்திற்கு முன்பு தொலைக்காட்சி, உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் செல்வாக்குமிக்க தகவல் ஊடகமாக இருந்தது என்பதை நினைவில் கொள்ளும் நாளாக இது பெயரிடப்பட்டது.

உலக தொலைக்காட்சி தினம் 1996 இல் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் அறிவிக்கப்பட்டது, மேலும் உலக மக்களிடையே வெற்றிகரமான தொடர்பு, கலாச்சார பரிமாற்றம், கல்வி மற்றும் சமூக மற்றும் ஒழுக்கத் தரங்களை மேம்படுத்துவதில் தொலைக்காட்சி குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது என்பது இரகசியமல்ல. இந்த தனித்துவமான ஊடகத்தின் தாக்கம் பற்றிய பரந்த விவாதத்திற்கான வாய்ப்பை பல தசாப்தங்களாக வழங்கும் ஒரு நாளாகவும் இந்த நாள் உள்ளது.

தொலைக்காட்சி படம் மற்றும் ஒலி ஆகிய இரண்டு வடிவங்கள் மூலம் அறிவு, விரிவான செய்திகள் மற்றும் பொழுதுபோக்கை உருவாக்குகிறது, மேலும் பல சந்தர்ப்பங்களில் பொதுக் கருத்தை பாதிக்கும் முதன்மை ஆதரவாளராக இருந்து வருகிறது.

தொலைக்காட்சி ஒரு சிறப்பு மதிப்புடையது, ஏனெனில் இது சிறப்பு பொது நிகழ்வுகள், உலக புனைகதை மற்றும் விளைவுகள், அரசியல் விவாதங்கள், கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் போன்ற இந்த கூறுகளை மில்லியன் கணக்கான மக்களுக்கு நேரடியாகக் கொண்டுவருகிறது. உலகின் பல நாடுகளில், கல்வித் திட்டங்கள், குழந்தைகளுக்கான அதிகாரமளிப்புத் திட்டங்கள், தொழில்நுட்ப அறிவு மற்றும் அறிவியல் தகவல்களை வழங்குவதற்கு தொலைக்காட்சி முக்கிய கருவியாகும்.

நமது நாட்டில் COVID-19 தொற்றுநோய் காலத்தில் கல்விக்காக தொலைக்காட்சி வழங்கும் சேவை இதற்கு ஒரு வலுவான சான்றாகக் கூறலாம். பல்வேறு மொழிகள், மரபுகள் மற்றும் தேசிய ஜன்னல்கள் மூலம் உலகின் பன்முகத்தன்மையை அறிந்து அனுபவிப்பதற்கு தொலைக்காட்சி சிறந்த கட்டுப்படுத்தியாகும்.

பல்வேறு நாடுகளிலிருந்து சினிமா, நாடகம், இசை மற்றும் கலாச்சார இருப்பை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதன் மூலம் உலக மக்களிடையே கலாச்சார புரிதலை ஊக்குவிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

பண்டைய காலங்களிலிருந்து சமூகத்தின் முன்னேற்றத்திற்கான முக்கியமான நடவடிக்கைகளில் தொலைக்காட்சி ஈடுபட்டுள்ளது என்பது காணப்படுகிறது. துல்லியமான தகவல்களை வழங்குவது, தவறான பிரச்சாரத்தை எதிர்த்துப் போராடுவது, வளமான கலாச்சார கூறுகள் மூலம் அறிவை வழங்குவது மற்றும் அரசியல், சமூகத் தகவல்கள், விலங்குகள், இயற்கை போன்ற தகவல்களை வாசகருக்கு வழங்குவது ஒரு பொறுப்பாக தொலைக்காட்சி கருதுகிறது.

இணையம், ஸ்மார்ட் டிவி, IPTV, OTT சேவைகள் (YouTube, Netflix, முதலியன) வருகையுடன், தொலைக்காட்சி புதிய தொழில்நுட்பங்களுடன் ஒன்றிணைந்து ஒரு புதிய ஊடக சூழலை உருவாக்கியுள்ளது. இன்று, தொலைக்காட்சி ஒரு ஊடாடும், உலகளாவிய மற்றும் கட்டுப்படுத்தக்கூடிய தளமாக மாறியுள்ளது.

இது அதன் உள்ளடக்கத்தில் மாற்றத்திற்கு வழிவகுத்தது. இது வாசகருக்கு தேவையற்ற விஷயங்களை வழங்குவதால் பலர் இப்போது அதைக் கைவிட்டு வருகின்றனர். மேலும், தொலைக்காட்சியின் நம்பகத்தன்மை இல்லாமை, சலிப்பூட்டும் நிகழ்ச்சிகள் மற்றும் சிலரின் தனிப்பட்ட தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் இணையம் மூலம் அவர்களுக்குத் தேவையான முக்கியமான விஷயங்களை அணுக முடியும் என்பதன் காரணமாக தற்போது தொலைக்காட்சி சரிவைச் சந்தித்து வருகிறது.

உலகத் தொலைக்காட்சி தினம் என்பது உலகெங்கிலும் உள்ள மக்களிடையே இணைப்பு, புரிதல், அறிவு மற்றும் பொழுதுபோக்கை உருவாக்கும் மிகவும் மதிப்புமிக்க ஊடகம் என்பதை மக்களுக்கு நினைவூட்டும் ஒரு நாளாகும். வெளிப்படையான, உண்மை மற்றும் பொறுப்பான ஊடகத்தை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் பங்களிப்பது இத்தகைய நாட்களின் சிறப்பு நோக்கமாகும்.

ஆகஸ்ட் 13, 1888 அன்று கிரேட் பிரிட்டனின் ஸ்காட்லாந்தின் டன்பார்டனில் பிறந்த ஜான் லோகி பெயர்டால் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட தொலைக்காட்சி, சமீப காலம் வரை உலகின் மிகவும் பிரபலமான ஊடகமாக மாறியது. சமூக ஊடகங்களால் இது ஓரளவு சிதைக்கப்பட்டிருந்தாலும், பொது நனவில் இன்னும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அனைவரும் நம்பும் உண்மை. எனவே, நமது சமூகத்தை பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக மற்றும் கலாச்சார ரீதியாக உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல, சரியான ஊடக எழுத்தறிவுடன் கூடிய தொலைக்காட்சி ஊடகத்தைப் பயன்படுத்த வேண்டும்.

இலங்கையில் தொலைக்காட்சி அமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்ப திட்டம் 1979 ஆம் ஆண்டு சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு (ITN) நிறுவப்பட்டதன் மூலம் தொடங்கியது. இலங்கையில் முதல் தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பு 1979 ஏப்ரல் 13 அன்று ITN தொடங்கப்பட்டதன் மூலம் தொடங்கப்பட்டது. ITN ஆரம்பத்தில் ஒரு வணிக/தனியார் நிறுவனமாகத் தொடங்கப்பட்டாலும், பின்னர் அது அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் ஊடக நிறுவனமாக மாறியது. இலங்கை மக்களுக்கு தொலைக்காட்சியின் புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்திய சேனலாக ITN மாறியது.

அரசாங்கத்திற்கு முழுமையாகச் சொந்தமான தேசிய தொலைக்காட்சி சேனல் தேவைப்பட்டது, எனவே 1982 இல் இலங்கை தொலைக்காட்சி கவுன்சில் (SLRC) நிறுவப்பட்டது. 15 ஜூன் 1982 – SLRC (ரூபவாஹினி) அதிகாரப்பூர்வமாக ஒளிபரப்பைத் தொடங்கியது. இது ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் கட்டப்பட்ட ஒரு வசதியிலிருந்து இயங்கியது. கல்வி, கலாச்சாரம், செய்தி மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கான முன்னணி தளமாக கவுன்சில் இருந்தது.

தொலைக்காட்சி மிகவும் பிரபலமடைந்ததால், 1990கள் மற்றும் 2000களில் பல புதிய சேனல்கள் நிறுவப்பட்டன. அதன்படி, TNL TV – 1993, சிரச TV – 1998, சுவர்ணவாஹினி – 1994, தெரண TV – 2005 மற்றும் பல சேனல்கள் தொடங்கப்பட்டன.

எனவே, தொலைக்காட்சி என்பது நீண்ட பயணத்தைக் கொண்ட ஒரு ஊடகம் என்பதால், அதிலிருந்து நாம் உள்வாங்கக்கூடியதை மட்டுமே பிரித்தெடுக்க உழைப்பதன் மூலம், இந்த அற்புதமான ஊடகத்தை நீண்ட காலம் நம்மிடையே வைத்திருக்க முடியும்.

புத்தளம் பொது நூலகத்திற்கு கிடைத்த கெளரவம்!

0

புத்தளம் மாநகர சபையின் பொது நூலகத்திற்கு தேசிய ரீதியில் கிடைத்த கெளரவம்!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தினை அதிகப்படுத்த புத்தளம் மாநகர சபையின் பொது நூலகம் சிறப்பான வேலைத்திட்டங்களை செயல்படுத்தியமைக்காக (2024) நேற்று (20) தேசிய நூலக ஆவணவக்கல் சபையினால் கௌரவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விருதினை புத்தளம் பொது நூலகத்தின் பிரதம நூலகரும், பட்டய நூலகரும், இலங்கை நூலகர் சங்கத்தின் நூலக தகவல் விஞ்சாபன விரிவுரையாளருமான கே.ம். நிஷாத் பெற்றுக்கொண்டார்.

புத்தளம் மாநகர சபையின் பொது நூலகம் கடந்த பல ஆண்டுகளாக சிறப்பாக செயற்பட்டு வந்திருந்ததுடன், மன்னார் எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த புத்தளம் பொது நூலகத்தின் பிரதம நூலகர் கே.ம். நிஷாத் கடந்த சில காலங்களுக்கு முன்னர் கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் பல பல முக்கிய வேலைத்திட்டங்களை அறிமுகப்பிடுத்தி இருந்தார்.

அந்த வகையில் அவரின் அர்பணிப்பான சேவையுடனும், புத்தளம் மாநகர சபையின் சிறப்பான வழிகாட்டுதலிலும், புத்தளம் மாநகர சபையின் பொது நூலகத்திற்கு குறித்த கெளரவம் கிடைக்கபெற்றமை விஷேட அம்சமாகும்.

கம்பளைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நுரைச்சோலை OIC!

0

ஜூட் சமந்த

நுரைச்சோலை காவல் நிலையப் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் ரவி தர்மகுமார உடனடியாக அமலுக்கு வரும் வகையில் கம்பளை பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ் மா அதிபரால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

நுரைச்சோலை காவல் நிலையப் பொறுப்பதிகாரி ரவி பத்மகுமார, அந்தப் பகுதியில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்களுக்கு உதவி செய்து வருவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பல்வேறு கடத்தல்காரர்களுடன் OIC நடத்தியதாகக் கூறப்படும் பல தொலைபேசி உரையாடல்களின் ஆடியோ பதிவுகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதுர்தீன் சமீபத்தில் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

இவற்றினை கருத்திற்கொண்டு நுரைச்சோலை காவல் நிலையப் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய ரவி தர்மகுமாரவிற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கம்பளை பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள முன்னாள் நுரைச்சோலை காவல் நிலையப் பொறுப்பதிகாரி தரம் குறைக்கப்பட்டே குறித்த பகுதியில் பணிபுரிய பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடுமையாக கோபமடைந்த வட மாகாண ஆளுநர்!

மத்திய அரசாங்கம் நாங்கள் கோரும் நிதியை விடுவிப்பதற்குத் தயாராக உள்ளது. ஆனால், வடக்கு மாகாண நிர்வாகத்திலுள்ள ஒரு சில செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்வதற்கு விருப்பமின்றி, வெறும் சலுகைகளை அனுபவிப்பதில் மட்டுமே குறியாக உள்ளனர். இத்தகைய அதிகாரிகளை நினைத்து நான் வெட்கப்படுகிறேன், என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கடும் விசனம் வெளியிட்டார்.

கிளிநொச்சி, புதுமுறிப்புக் கிராமத்தில் மக்கள் நலன்சார் பணிகளை ஆற்றிவரும் ‘பத்மலோக – மனிதவள சிறப்பாற்றல் நிறுவனத்தின்’ 10ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (21.11.2025) புதுமுறிப்பு விக்னேஸ்வரா கல்லூரியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றும்போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நான் நிர்வாகச் சேவையில், ஆளுநராகப் பதவியேற்ற பின்னரே மாகாண நிர்வாகத்தினுள் நுழைந்தேன். மாகாண நிர்வாகம் இவ்வளவு பின்னடைவைச் சந்திக்கக் காரணம், பொறுப்பிலுள்ள சில அதிகாரிகளே. இவர்கள் பதவிகளையும் கதிரைகளையும் பிடித்து வைத்துக்கொண்டு, மக்கள் சேவையாற்றாது காலத்தை ஓட்டுகின்றனர்.

மக்களின் வரிப்பணத்தில் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகளை எவ்வித தயக்கமும் இன்றிப் பெற்றுக்கொள்ளும் இவர்கள், அந்த மக்களுக்குச் சேவையாற்ற மட்டும் விரும்புவதில்லை. இத்தகைய சுமைகளையும் சுமந்துகொண்டே நாம் பயணிக்க வேண்டியுள்ளது.

கடந்த காலங்களில் அரசியல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பல கிராமங்கள் அபிவிருத்தியிலிருந்து புறக்கணிக்கப்பட்டன. ஆனால், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், ‘பின்தங்கிய கிராமம் என்று எதுவும் இருக்கக் கூடாது’ என்ற உறுதியான நோக்கோடு செயற்பட்டு வருகிறது. எமது மாகாணத்துக்கு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு அபிவிருத்தி வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால், இந்த நன்மைகள் மக்களைச் சென்றடைவதற்கு எமது அதிகாரிகளே முட்டுக்கட்டையாக இருப்பது வேதனையளிக்கிறது.

சில சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் எமது மக்களின் அவலநிலையை ஒரு முதலீடாகக் காட்டித் திட்டங்களைத் தீட்டி நிதியைப் பெறுகின்றன. ஆனால், அப்படிப் பெறப்படும் நிதியில் மக்களுக்கான உதவிகளை விட, அந்த நிறுவனங்களின் நிர்வாகச் செலவுகளுக்கே பெரும் பகுதி செலவிடப்படுகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரத்தில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை.

மாறாக, மக்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்து, அவர்களுக்கு உண்மையில் என்ன தேவை என்பதைப் புரிந்து கொண்டு, தொண்டு அடிப்படையில் பணியாற்றும் ‘மனிதவள சிறப்பாற்றல் நிறுவனம்’ போன்ற அமைப்புகளே எமக்குத் தேவை, என்றார் ஆளுநர்.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டச் செயலக உதவி மாவட்டச் செயலர், கிராம அலுவலர், மனித வள சிறப்பாற்றல் நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

300 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருள் மீட்பு!

0

ரூ.300 மில்லியன் மதிப்புள்ள 30 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் மீட்பு

இலங்கை சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பொதியில் இருந்து 30 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

பின்னர், நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், குறித்த பொதி மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இவ்வாறு மீட்கப்பட்ட குஷ் போதைப்பொருள் கையிருப்பின் சந்தை மதிப்பு சுமார் ரூ.300 மில்லியன் என்று இலங்கை சுங்கம் குறிப்பிடுகிறது.

கடுலுக்குள்ளே உயிரை விட்ட கற்பிட்டி சுழியோடி!

கற்பிட்டியில் கடற்தொழிலுக்கு சென்ற குடும்பஸ்தர் கடலுக்குள் உயிரிழப்பு!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டியில் சுழியோடி கடல் அட்டை மற்றும் சங்கு எடுக்கும் தொழிலில் கடந்த பல வருடங்களாக ஈடுபாட்டு வந்த குடும்பஸ்தர் ஒருவர் கடலிலே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 50 வயது மதிக்கத்தக்க மொஹமட் ஜெமில் 9 பிள்ளைகளின் தந்தை நேற்று புதன்கிழமை (19) இரவு கடலுக்குள் வைத்து திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று கற்பிட்டி உச்சமுனை கடற்பரப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சக கடற்றொழிலாளர்களின் உதவியுடன் இரவோடு இரவாக உயிரிழந்த மொஹமட் ஜெமிலின் உடல் கரைக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் கற்பிட்டி வைத்தயசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு உயிரிழந்தவரின் உடல் அனுப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

10வது முறையாகவும் முதல்வராகும் நிதிஷ் குமார்!

0

பீகாரில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து அக்கூட்டணி சார்பில் பீகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் இன்று பதவியேற்றார்.

நிதிஷ் குமார், முதல்வராக 10வது முறையாக பதவியேற்றுள்ளார்.

பாட்னாவின் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இப்பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜே.பி. நட்டா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களான யோகி ஆதித்யநாத், தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிற முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும் துணை முதல்வர்களாக பாஜவின் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹாவும் (2வது முறை) ஆகியோர் பதவியேற்றனர்.

இவர்களைத் தவிர ஜேடியூவைச் சார்ந்த விஜய் குமார் சவுத்ரி, பிஜேந்திர பிரசாத் யாதவ், ஷ்ரவன் குமார், அசோக் சவுத்ரி, லேசி சிங், மதன் சஹானி, சுனில் குமார், முகமது ஜமா கான் ஆகியோரும் பாஜகவைச் சேர்ந்த மங்கள் பாண்டே, திலீப் குமார் ஜெய்ஸ்வால், நிதின் நபின், ராம் கிருபால் யாதவ், சஞ்சய் சிங் திகார், அருண் சங்கர் பிரசாத், சுரேந்திர மேத்தா, நாராயண் பிரசாத், ராமா ​​நிஷாத், லக்கேந்திர குமார் ரௌஷன், ஷ்ரேயாஷி சிங், பிரமோத் குமார் ஆகியோரும் பதவியேற்றனர்.

ஜே.டி.(யு) தனது தற்போதைய அமைச்சர்களைத் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது என்றாலும், பாஜக சில புதிய முகங்களைக் கொண்டு வரக்கூடும் எனக் கூறப்படுகிறது.

கூட்டணிக் கட்சிகளான மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் தலைமையிலான எல்ஜேபி (ராம் விலாஸ்), ஜிதன் ராம் மஞ்சி தலைமையிலான எச்ஏஎம்-எஸ், உபேந்திர குஷ்வாஹா தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (ஆர்எல்எம்) ஆகியவற்றுக்கு முறையே 2-1-1 என அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. விழாவுக்குப் பிறகு கட்சிகளால் இலாகாக்கள் மற்றும் முழு அமைச்சரவை பட்டியல் அறிவிக்கப்படும்.

ஓட்டமாவடி சபையை கைப்பற்றிய ACMC கட்சி!

0

கோரளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட எம்.எஸ்.ஹலால்தீன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, ஐக்கிய தேசிய கட்சி, சுயேட்சை உறுப்பினர், இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் என தலா ஒவ்வொரு உறுப்பினர்களும் ஆதரவுகளை வழங்கி இருந்த போதிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

ஏலவே,  தவிசாளர் பதவியை பெற்றுக் கொண்ட பைரூஸ் கட்சியின் தீர்மானத்தை மீறிய காரணத்தினால் அவரின் உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதை தொடர்ந்து தவிசாளர் பதவிக்கான வெற்றிடத்திற்கான தெரிவு இன்று (20) காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் இடம்பெற்ற போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சபையை கைப்பற்றியுள்ளது.