Home Blog

நாகவில்லுவில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வின் நினைவுதினம்!

பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நாகவில்லுவில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு!

இலங்கை திருநாட்டில் பெளதீக ரீதியான பல வேலைத்திட்டங்களையும், இடம்பெயர்வு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பறந்துபட்ட அறிவினையும் கொண்டிருந்த எருக்கலம்பிட்டியை சேர்ந்த மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது வருட நினைவு தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

அந்த வகையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் நினைவுப் பேருரையும், புத்தக வெளியீடு நிகழ்வும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 25.08.2025 புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், புத்தி ஜீவிகள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்தகொண்டமை விஷேட அம்சமாகும்.

சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் பொருளாளர் ஜனாப் ஏ.ஜி. அனீஸ் (Bsc.Agri) அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

மேலும் இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீட, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களினால் நூல் அறிமுக உரையும், நினைவுப் பேருரையும் மிகவும் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்டது.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பங்களிப்பு அளப்பெரியது என நினைவு கூறிய பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன், வடக்கில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் முஸ்லிம்களின் இடம்பெயர்வு குறித்து அதீத அக்கறையுடன் செயற்பட்ட மிக முக்கியமானவர் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் எனவும் எடுத்துரைத்தார்.

வடக்கு முஸ்லிம்களின் இடம்பெயர்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் பலதரப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தி, சர்வதேசம் வரை இவ்விடயங்களை கொண்டுசென்ற மகான் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் என பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் தனது உரையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் புதல்வி சட்டத்தரணி எப்.சப்னா ஹஸ்புல்லாஹ் அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், நூல் வெளியீடு நிகழ்வும் இடம்பெற்றது.

நூலின் முதற்பிரதியை ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் (GS) அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

மேலும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் செயலாளர் ஜனாப் எஸ்.எச்.எம். றிஸ்னி அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதுடன், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பாரியாருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், பேராசிரியர்கள், கல்விமான்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலைச் சமூகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், ஈ நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனம் ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்காக ஒன்று திரண்ட அரசியல் தலைவர்கள்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவிதியையும் விட, சமூகத்தின் உரிமைகளுக்கான பிரச்சினைகளை தோற்றிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியலை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கல் அணி சாம்பியன் ஆனது!

‘நேஷன்ஸ் லீக்’ கால்பந்தில் போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனது. பைனலில் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 5-3 என ஸ்பெயினை வீழ்த்தியது.

ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக ‘நேஷன்ஸ் லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. நேற்று ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த பைனலில், போர்ச்சுகல், நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 21வது நிமிடம் ஜுபிமெண்டி (ஸ்பெயின்), 26வது நிமிடம் மெண்டிஸ் (போர்ச்சுகல்) தலா ஒரு கோல் அடித்தனர். 45வது நிமிடம் மைக்கேல் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 61 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 138வது கோல் இது. 90 நிமிட முடிவில் போட்டி 2-2 என சமன் ஆனது. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. காயம் காரணமாக 88 வது நிமிடம் வெளியேறிய ரொனால்டோ, இதில் பங்கேற்கவில்லை.

முதல் 3 வாய்ப்பில் போர்ச்சுகலின் ராமோஸ், விடின்ஹா, பெர்ணான்டஸ் கோல் அடித்தனர். மறுபக்கம் ஸ்பெயின் தரப்பில் மெரினோ, பயேனா, இஸ்கோ கோல் அடிக்க 3-3 என ஆனது.

4வது வாய்ப்பில் மெண்டெஸ் (போர்ச்சுகல்) கோல் அடிக்க, ஸ்பெயினின் மோராட்டோ அடித்த பந்தை கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்து அசத்தினார்.

5வது வாய்ப்பில் நெவேஸ் கோல் அடித்தார். இதையடுத்து 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் ‘திரில்’ வெற்றி பெற்றது. 2019க்குப் பின் இத்தொடரில் மீண்டும் சாம்பியன் ஆனது.

தில்லையடியில் சிக்கிய கடத்தல் பீடி இலைகள்!

புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் வேன் ஒன்றும் பறிமுதல்!

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட ஒரு வேன் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், புத்தளம் பொலிஸாருடன் இணைந்து தில்லையடி பகுதியில் நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகளானது வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வேன் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் ஆபத்தா?

விண்வெளியில் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களை சீனா நினைத்தால் வெறும் 12 மணி நேரத்தில் தாக்கி அழித்துவிட முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற செய்தி ஊடகத்தில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது சீனா 99 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் நான்ஜிங் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளிக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் வூ யுன்ஹுவா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் எலான் மஸ்கின் 1400 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெறும் 12 மணி நேரத்தில் காலி செய்துவிடும். சீன செயற்கைக்கோளில் லேசர், நுண் அலைகளை உருவாக்கும் கருவி, உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெறுமென நெட்வொர்க் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. தவிர, ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம்சாட்டி வருகிறது.

அதாவது, உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைன் படைகளுக்கு தகவல்கள் கொடுக்கவும், ரஷ்ய எல்லையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்ய போரின்போது அப்போதைய உக்ரைனின் துணைப் பிரதமரான மைக்கைலோ ஃபெடோரோவ், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை உடனடியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், “உடனடியாக சேவை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

உக்ரைன் போருடன் மட்டுமே ஸ்டார்லிங்க் நிற்காது, நாளை சீனாவுக்கும்-தைவானுக்கும் பஞ்சாயது ஏற்பட்டால் அப்போதும், தைவானுக்கு சப்போர்ட் செய்ய ஸ்டார்லிங்க் வரும். எனவே இந்த கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு இதற்கான பணிகளை சீனா தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ‘கியான்ஃபான் மெகா-விண்மீன் திட்டம்’ (Qianfan mega-constellation project) என்றும் பெயரிட்டிருந்தது. நோக்கம் உலகம் முழுவதும் இணைய தொடர்பை வழங்குவதாகும். இதற்காக மொத்தம் 15,000 சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவ சீனா முடிவெடுத்தது. இதன் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. இதில் 18 செயற்கைக்கோள்கள் இருந்தன.

ஒவ்வொன்றும் சுமார் 300 கி.கி எடையில் இருந்தது. இவை பூமியிலிருந்து 800 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோன்று 2024 டிசம்பரில் அடுத்து இரண்டு தொகுதி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. தற்போது மொத்தம் 99 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. 15,000 செயற்கைக்கோள்களை 3 கட்டங்களாக ஏவ இருக்கிறது. முதல் கட்டத்தில் 1,296 செயற்கைக்கோள்கள் ஏவப்படும். இதில் 648 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் கன்னி உரை

அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்

தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:

மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.

ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.

மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.

மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.

நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.

மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தலில் இவ்வாறுதான் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்

அதிகாரிகள் மற்றும் பிற தேவைகள் முடிந்த பிறகு, மாலை 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 4.15 மணிளவில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் 21ம் திகதி வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் பெறப்பட்டதும், அதிகாரிகள் மற்றும் இதர தேவைகள் முடிந்ததும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இரவு 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

மாலை 4.15 மணிளவில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

அத்துடன் மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முடிவுகள் கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையே முதலில் எண்ணப்படும்.

அந்தக் கணக்கெடுப்பின் பின்னர் (மாவட்ட அளவில் எண்ணும் பணி) முதலில் வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

அதன் பிறகு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அது தயாரிக்கப்படுகிறது.

தேர்தல்கள் செயலகமே ஒட்டுமொத்த முடிவுகளைக் கணக்கிடும்.

எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளாரா என சரிபார்க்கப்படும்.

அப்படியானால், அந்த நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்படும்.

அப்போது ஜனாதிபதியை நாங்கள் அறிவிப்போம்.

எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்காவிடின், விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும்.

அங்கு, அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் வைத்து விட்டு  மீதமுள்ள 36 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்” என்றார்.

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறும்

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வாத்தியாசலையாக மாற்றம் பெரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன தலைமையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

புத்தளம் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற புத்தளம் தல வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க குறித்த வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

மேலும் புத்தளத்தில் மீன் பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் மீன் பிடி துறைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டமை புத்தளம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாட்டில் நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை நிலை நாட்ட தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தனது பிரதான நோக்கம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மொட்டுக்கட்சிக்கு எதிராக நிற்கும் முக்கிய அமைச்சர்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காதிருக்கவும், மொட்டு சின்னத்தில் தனியாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த கடிதம் நேற்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் அரசியல் குழுவில் முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அந்த கடிதத்தை நிராகரிக்க அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 பேர் அங்கம் வகிப்பதுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 72 பேர் பங்கேற்றனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த 11 பேர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மஹிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சஹன் பிரதீப், ரமேஸ் பத்திரன, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, கனக ஹேரத், மொஹான் பிரியதர்ஷன ஆகியோர் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அத்துடன் பிறிதொரு கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 6 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறப்பட்ட தம்மிக பெரேரா தொடர்பில் அரசியல் குழுக் கூட்டத்தின்போது எந்தவித கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத 11 பேர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சைனப் ஆரம்பப் பாடசாலைக்கு ஆளுநர் வருகை!

புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலையின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் யஹியா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் ஜெய்னப் பாடசாலைக்கு 22 லட்சம் ரூபா பெறுமதியான நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தல் மற்றும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் செயற்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் கற்றல் உபகரணம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கௌரவ அதிதியாக புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அர்ஜுன ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரம்ப பாடசாலையின் முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஆரம்ப பாடசாலை ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்பு குறித்து விரிவாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் துரித வளர்ச்சி பற்றியும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் செயற்திட்டத்திற்கு வடமேல் மாகாண ஆளுநர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஷி ஜமால்தின், இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் அயல் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு
நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறை

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஓவியப்போட்டியில் எருக்கலம்பிட்டி மாணவன் முதலாமிடம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.

வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.

முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் எருக்கலம்பிட்டியில் கடும் வெள்ளம்

புத்தளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் பகுதி முழுதும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

புத்தளம், தில்லையடி, பாலாவி, புத்தளம் எருக்கலம்பிட்டி, ஹிதாயத் நகர்,  மதுரங்குளி மற்றும் ஏனைய பல கிராமங்களும் வெள்ளித்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1500 குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவருவதுடன், அனைத்து வீடுகளும் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்றிற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஐநூற்றுக்கும் அதிகமான வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் மூன்று வேலைகளிலும் ஊர் தனவந்தர்களின் உதவியுடனும், பள்ளிவாசல் நிர்வாக சபையின் வழிகாட்டலுடனும் வழங்கப்பட்டு வருவதுடன், ஊர் மக்களுக்கும் உணவு விநியோகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவர்களுக்கான நிவாரண உதவிகள் இதுவரை அரசாங்கத்தினால் வழங்கப்படாத போதிலும், ஊர் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு விநியோகங்கள் இதுவரை  வழங்கப்பட்டு வருகின்றது.

புத்தளம் பொத்துவில்லு பகுதியில் உள்ள குளம் மழை நீரினால்  பெருக்கெடுத்துள்ளதால் குறித்த குளத்து நீர் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்திற்குள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக ஊடறுத்து செல்வதால் வீடுகள் தொடர்ந்தும் நீருள் மூழ்கியுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிவாரண உதவிக்காக பல மக்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கத்தியுடன் வந்து பொலிஸாரை மிரட்டிய “ஓலு மரா”

ஜூட் சமந்த

பட்டப்பகலில் நடுவீதியில் பொலிஸாரை வழிமறித்து கத்தியைக் காட்டி அச்சுறுத்தி, பின்னர் பொலிஸ் நிலையத்திற்கே வந்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று லூணுவில பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 31ஆம் திகதி பிற்பகல் வேளையில் லூணுவில பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இருவர் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர்களைக் கைது செய்யும் விசேட கடமையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனையிட்டனர்.

அவரது கையடக்கத் தொலைபேசியைப் பரிசோதித்தபோது, பொலிஸாருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதில் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய புகைப்படங்களும் ரகசிய தகவல்களும் குவிந்திருந்தன. உடனடியாகச் சுதாகரித்துக்கொண்ட பொலிஸார், மோட்டார் சைக்கிளையும் தொலைபேசியையும் தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டு சந்தேகநபரை வளைத்துப் பிடிக்க முயன்றனர். ஆனால், மின்னல் வேகத்தில் அந்த நபர் பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பியோடினார்.

கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் பொலிஸார் நிலையம் திரும்பத் தயாரான வேளையில், அடுத்த அதிரடி திருப்பம் அரங்கேறியது. தப்பியோடிய நபர், லூணுவில – கிரிமெட்டியான வத்தையைச் சேர்ந்த “ஓலு மரா” என்ற பிரபல குற்றவாளியுடன் மற்றொரு மோட்டார் சைக்கிளில் கத்தியுடன் களமிறங்கினார். நடுரோட்டில் பொலிஸாரைக் கத்தியைக் காட்டி அச்சுறுத்திய அவர்கள், சாட்சியங்கள் அடங்கிய கையடக்கத் தொலைபேசியைப் பலவந்தமாகப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

இந்தச் சினிமா பாணி சம்பவம் தொடர்பில் லூணுவில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து வாக்குமூலங்களை தீவிரமாகப் பதிவு செய்து கொண்டிருந்தார்.

அப்போது யாரும் எதிர்பாராத வகையில், சற்றும் அச்சமின்றி “ஓலு மரா” பொலிஸ் நிலைய வளாகத்திற்குள்ளேயே அதிரடியாக நுழைந்து மீண்டும் அடாவடித்தனத்தில் ஈடுபட முயன்றார். உடனடியாகச் செயற்பட்ட பொலிஸ் குழுவினர் அவரைச் சுற்றிவளைத்துக் கைது செய்ய முற்பட்டனர்.

பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிக்க வெறித்தனமாக ஓடிய அந்த ஆசாமி, பொலிஸ் நிலையத்திற்கு அருகிலிருந்த ஒரு வர்த்தக நிலையத்தின் கண்ணாடியைத் தன் உடலால் உடைத்துக்கொண்டு உள்ளே பாய்ந்தார்.

கண்ணாடிச் சிதறல்கள் குத்தியதில் படுகாயமடைந்த “ஓலு மரா”வை பொலிஸார் உடனடியாகக் கைது செய்தனர். பலத்த காயங்களுக்குள்ளான அவர், தப்பியோட முடியாதவாறு பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பில் லூணுவில பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையின் முதல் கிராமிய RO குடிநீர் திட்டம்!

டிரெண்டிங் தலைப்புத் தெரிவுகள் (Trending Headlines):

  • இலங்கையின் முதல் கிராமிய RO குடிநீர் திட்டம்: உப்பு நீருக்கு மத்தியில் ஒரு புரட்சி! மக்கள் சொல்வது என்ன?
  • ஒரு லீற்றர் ரூ. 1.47 மட்டுமே: 24 மணி நேரமும் சுத்தமான குடிநீர் தரும் குடாமடுவெல்லவின் சாதனைப் பயணம்!
  • குடிநீருக்கு வாகனக் கழுவலா? உயரும் நீர் கட்டணமும்… குடாமடுவெல்ல கிராமிய திட்டத்தின் பின்னணியும்!

    மஹவெவ – ஜூட் சமந்த

    மேற்கே பரந்து விரிந்த கடல்… கிழக்கே உவர்ப்புத் தன்மை கொண்ட கண்டல் தாவரக் காடுகள்… இந்த இரண்டுக்கும் நடுவே அமைந்த ஒரு கிராமத்தில் சுத்தமான குடிநீர் கிடைப்பது என்பது ஒரு காலத்தில் வெறும் கனவாகவே இருந்தது. ஆனால், மஹவெவ பிரதேசத்தின் குடாமடுவெல்ல கிராம மக்கள் அந்த சவாலை ஒரு வரலாற்றுச் சாதனையாக மாற்றிக் காட்டியுள்ளனர்.

    2003 ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) உதவியுடன் வெறும் 200 குடும்பங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த ‘மடு குமாரி சமூக மட்ட அமைப்பு’ (Madu Kumari CBO), இன்று இலங்கையிலேயே அதிநவீன RO (Reverse Osmosis) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குழாய் வழியே குடிநீர் விநியோகிக்கும் ஒரே கிராமியத் திட்டமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    சுமார் 300 நிரந்தர வாடிக்கையாளர்களையும், தினமும் நேரடியாக வந்து நீர் பெற்றுச் செல்லும் 100-க்கும் மேற்பட்ட தற்காலிகப் பாவனையாளர்களையும் கொண்ட இத்திட்டம், 24 மணி நேரமும் தடையின்றி இயங்கி வருகிறது. சந்தையில் ஒரு லீற்றர் குடிநீர் 4 ரூபாய்க்கு விற்கப்படும் வேளையில், இங்கு குழாய் வழியே வெறும் 1.47 ரூபாய்க்கும், நேரடியாக வாங்குவோருக்கு 2 ரூபாய்க்கும் வழங்கப்படுவது இதன் சிறப்பம்சமாகும்.

    எனினும், அண்மைக்காலமாக இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நீருக்குக் கட்டுப்படியாகாத மாதாந்தக் கட்டணம் வருவதாகச் சில கிராமவாசிகள் மத்தியில் சலசலப்பு எழுந்துள்ளது. இந்த விடயத்தின் உண்மைப் பின்னணியை ஆராய நாம் நேரடியாகக் களத்தில் இறங்கினோம்.

    திட்டத்தை ஆரம்பிப்பதில் முன்னோடியாக இருந்த ஹரி பெர்னாண்டோ எம்மிடம் பேசுகையில்:

    “ஆரம்பத்தில் இங்கு நல்ல நீரூற்று இருந்தது. காலப்போக்கில் அது மாசடைந்து குடிக்கவே முடியாத நிலைக்குச் சென்றது. இத்திட்டத்தையே மூடிவிடலாம் என்று பலர் கூறினர். ஆனால், நாம் கைவிடவில்லை. நவீன இயந்திரங்களைப் பொருத்தி, மாசடைந்த நீரைச் சுத்திகரித்து இப்போது குடிக்கத் தகுந்த நீராக மாற்றியுள்ளோம். நான் குடிப்பதற்கு மட்டுமே இந்நீரைப் பயன்படுத்துவதால் எனக்குப் பெரிய பில் வருவதில்லை. மக்கள் கட்டணம் அதிகம் எனக் கருதினால், அரசாங்கம் தலையிட்டு வெளியூரிலிருந்து குழாய் நீர் இணைப்பைத் தர வேண்டும் அல்லது இந்தச் சமூக அமைப்பிற்கு மானியம் வழங்கி குறைந்த விலையில் நீர் கிடைக்க உதவ வேண்டும்,” என்றார்.

    உண்மையிலேயே இந்த உயர்தர சுத்திகரிக்கப்பட்ட நீருக்கு ஏன் அதிக கட்டணம் வருகிறது? அமைப்பின் உப தலைவர் அசித பெர்னாண்டோ இந்த மர்மத்தை உடைக்கிறார்:

    “எங்கள் கிராமத்தைச் சுற்றிலும் உவர் நீர் சூழ்ந்துள்ளதால் குடிநீரைப் பெறுவது மிகக் கடினம். உலகிலேயே மிக உயரிய RO தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீரைச் சுத்திகரித்து வழங்குகிறோம். ஆனால் சிலர் குடிப்பதற்குத் தரப்படும் இந்த உயர் தர நீரைச் செடிகளுக்கு ஊற்றவும், வாகனங்களைக் கழுவவும், கழிப்பறைத் தேவைகளுக்கும் தாராளமாகப் பயன்படுத்துகிறார்கள். பிறகு பில் அதிகம் என்று எம்மை நோக்கி விரல் நீட்டுகிறார்கள். அருமையான குடிநீரை வீண்விரயம் செய்வதே இந்த அதிக கட்டணத்திற்குக் காரணம். குடிப்பதற்கு மட்டும் சிக்கனமாகப் பயன்படுத்தினால் யாருக்கும் சுமை ஏற்படாது,” என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

    தினமும் 40,000 முதல் 50,000 லீற்றர் நீரைத் தூய்மைப்படுத்தி, அதில் 45,000 லீற்றர் வரை மக்களுக்கு விநியோகிக்கும் இத்திட்டம் 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன் சேவையைத் தொடர்கிறது. இயந்திரப் பராமரிப்புச் செலவுகள், எகிறும் மின்சாரக் கட்டணம் ஆகியவற்றுக்கு மத்தியிலும் மக்களுக்காக இந்த அமைப்பு இயங்கி வருகிறது.

    கிராம மக்களின் சுமையைக் குறைக்கவும், இந்த முன்னோடி கிராமிய நீர் திட்டத்தைத் தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்கவும் அரசாங்கம் உடனடியாக இத்திட்டத்திற்கு நிதி அல்லது மின்சார மானியம் வழங்கி உதவ முன்வர வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

    புத்தளத்தின் குரலாக ஒலித்த கே.ஏ.பாயிஸ்: தொண்டன் முதல் தேசிய அரசியல் வரை

    • அடிமட்டத்திலிருந்து தேசிய அரசியல் வரை: புத்தளத்தின் தனித்துவமான அரசியல் முகமாகவும் தொழிலதிபராகவும் மக்கள் மனங்களை வென்ற கே.ஏ. பாயிஸ்.
    • அஷ்ரபின் வழிகாட்டல்: மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் தலைமைத்துவத்தின் கீழ் வளர்ந்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக சமூக ஆதரவைத் திரட்டியமை.
    • நாடாளுமன்றப் பிரவேசம் & அமைச்சுப் பதவி: 2004-ல் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகி, 2007 முதல் 2010 வரை கால்நடை அபிவிருத்தி பிரதி அமைச்சராக ஆற்றிய அளப்பரிய சேவை.
    • நகரபிதாவாகப் புதிய பரிமாணம்: 2018-ல் புத்தளம் நகர சபைத் தலைவராகத் தெரிவாகி, ஆசிய-பசிபிக் மேயர்கள் அகடமி வரை சென்று நகர்ப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்திய தொலைநோக்குச் செயற்பாடு.
    • துயரமான முடிவு: 2021 மே 23 அன்று எலுவங்குளம் பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் தனது 52-வது வயதில் அகால மரணம்.

    வடமேல் மாகாணத்தின் புத்தளம் மண் கண்டெடுத்த மிக ஆளுமைமிக்க தலைவர்களில் ஒருவரான கமர்தீன் அப்துல் பாயிஸ் (1969–2021), சாதாரண அடிமட்டத் தொண்டனாக ஆரம்பித்து தேசிய அரசியல் அரங்கு வரை தன் தனித்துவ முத்திரையைப் பதித்தவர். வெறும் அரசியல்வாதியாக மட்டுமன்றி, வெற்றிகரமான தொழிலதிபராகவும் சமூகப் போராளியாகவும் புத்தளத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் இவர் ஆற்றிய பணிகள் இன்றும் மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றியுள்ளன.

    மறைந்த பெருந்தலைவர் எம். எச். எம். அஷ்ரப்பின் கவர்ச்சிகரமான தலைமைத்துவப் பாசறையில் அரசியல் பாடம் கற்ற பாயிஸ், மிகக் குறுகிய காலத்திலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) தேசிய அமைப்பாளராக உயர்ந்தார். சமூகத்தின் அடிமட்டக் குரல்களை ஒருங்கிணைத்து, கட்சியைப் பலப்படுத்துவதில் அச்சாணியாகச் செயற்பட்ட இவரது அரசியல் ஆளுமை, 2004 பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணியின் ஊடாக இவரை நாடாளுமன்ற உறுப்பினராக உயர்த்தியது.

    நாடாளுமன்றத்தில் புத்தளம் மக்களின் உரிமைகளுக்காகத் தீவிரமாக ஒலித்த இவரது குரலையும் மூலோபாய முக்கியத்துவத்தையும் அங்கீகரித்த அரசு, 2007 ஜனவரி முதல் 2010 ஏப்ரல் வரை இவருக்குக் கால்நடை அபிவிருத்தி பிரதி அமைச்சர் பொறுப்பை வழங்கியது. அக்காலப்பகுதியில் தேசிய மட்டத்திலான அபிவிருத்தித் திட்டங்களைப் புத்தளம் மாவட்டத்திற்குக் கொண்டுவந்து சேர்த்ததில் இவர் பெரும் பங்காற்றினார்.

    தேசிய அரசியலில் முத்திரை பதித்த கையோடு உள்ளூராட்சி நிர்வாகத்தின் பக்கமும் தனது கவனத்தைத் திருப்பிய பாயிஸ், 2018 ஆம் ஆண்டு புத்தளம் நகர சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு மேயருக்கு இணையான இப்பதவியின் ஊடாக, புத்தளத்தின் பொது உள்கட்டமைப்பை நவீனப்படுத்துவதிலும் நகர்ப்புற மீள்திறனை வலுப்படுத்துவதிலும் தீவிர கவனம் செலுத்திய அவர், நிலையான நகர அபிவிருத்தி தொடர்பான ஆசிய-பசிபிக் மேயர்கள் அகடமியிலும் பங்கேற்றுப் புத்தளத்தின் பெயரை சர்வதேச ரீதியில் கொண்டு சென்றார்.

    “புத்தளத்தின் அன்புக்குரிய மைந்தன்” என்று மக்களாலும் ஆதரவாளர்களாலும் பேரன்போடு போற்றப்பட்ட இந்த மக்கள் சேவகனின் பயணம், 2021 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி எலுவங்குளத்தில் நிகழ்ந்த எதிர்பாராத கோர வீதி விபத்தினால் தனது 52-வது வயதில் துரதிர்ஷ்டவசமாக முடிவுக்கு வந்தது. அவர் மறைந்தாலும், புத்தளத்தின் எழுச்சிக்காக அவர் விதைத்த அபிவிருத்தி விதைகள் இன்றும் அந்த மண்ணின் அடையாளமாக நிலைத்து நிற்கின்றன.

    உடப்பு பாலத்தைப் பாதுகாக்க ரூ. 83 மில்லியன் ஒதுக்கீடு!

    புத்தளம் மாவட்டத்தின் முக்கிய போக்குவரத்து இணைப்பாக விளங்கும் உடப்பு மற்றும் ஆண்டிமுனை இடையிலான பிரதான பாலத்தைப் பாதுகாக்கும் நோக்கில், பிரம்மாண்ட நிர்மாண அபிவிருத்திப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

    இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (31.08.2026) திங்கட்கிழமை சுபவேளையில் சிறப்பாக இடம்பெற்றது.

    நீண்டகாலமாக இப்பகுதி மக்கள் எதிர்பார்த்திருந்த இந்த உட்கட்டமைப்புப் பாதுகாப்புத் திட்டமானது, அரசாங்கத்தின் “வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற தேசிய கொள்கைத் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு, ரூபா 83 மில்லியன் நிதியொதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் நேரடி மேற்பார்வையில், வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முழுமையாக முன்னெடுக்கப்படுகின்றது.

    இப்பகுதி மக்களின் அன்றாடப் போக்குவரத்துப் பாதுகாப்பை உறுதி செய்யும் இந்த முக்கியமான முன்னெடுப்பானது, தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைப்பாளருமான கயான் ஜானக, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுத் தலைவருமான முகமது பைசல் ஆகியோரின் ஆலோசனையுடனும், ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபைத் தலைவர் ஜயரத்ன ஆகியோரின் ஒத்துழைப்புடனும் களமிறக்கப்பட்டுள்ளது.

    இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர்கள், ‘பிரஜா சக்தி’ சமூக அபிவிருத்தி சங்கத் (CDC) தலைவர்கள், உறுப்பினர்கள், சமூக நலன்விரும்பிகள் மற்றும் பெருந்திரளான பிரதேச பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். இத்திட்டம் நிறைவடையும் போது உடப்பு மற்றும் ஆண்டிமுனை பிரதான வீதியூடான போக்குவரத்து மிகவும் பாதுகாப்பானதாகவும் தடையற்றதாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சூடுபிடிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியப் பட்டியல் விவகாரம்!

    வதந்திகளையிட்டு அலட்டிக் கொள்ளப் போவதில்லை என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அறிவிப்பு

    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் “தாருஸ் ஸலாம்” தலைமையகத்தில், நேற்று ஞாயிற்றுக்கிழமை(30) நடைபெற்ற உயர்பீட கூட்டத்தில் கட்சியின் தேசிய பட்டியல் விவகாரம் பற்றி ஆராயப்பட்டதாகவும், அதுபற்றி வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டு, விஷமத்தனமான வதந்திகள் பொறுப்பற்ற விதத்தில் சில சமூக வலைத்தளங்களாலும், தனிப்பட்ட நபர்களாலும், பரப்பப்பட்டும், பகிரப்பட்டும் வருவதையிட்டு விசனம் தெரிவித்த கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவற்றிற்காக அலட்டிக் கொள்ளப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.

    ஞாயிற்றுக்கிழமை முற்பகல் நடைபெற்ற பிரஸ்தாப உயர்பீடக் கூட்டத்தில் சமகால அரசியல் கள நிலைவரம், கட்சியின் புனரமைப்பு நடவடிக்கைகள், மறைந்த ஸ்தாபகத் தலைவர் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 26 ஆவது நினைவு தின நிகழ்வு, பேராளர் மாநாடு என்பன பற்றியே கலந்துரையாடப்பட்டதாகவும், கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பற்றி அதில் பேசப்படவில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

    காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயத்தை தோற்றுவிக்கும் சுயநல நோக்கோடு, அவ்வாறு சில சமூக வலைத்தளங்களாலும், தனி மனிதர்களாலும் புனையப்பட்டு, பகிரப்படும் புரளிகளையும், வதந்திகளையும் அறவே நம்ப வேண்டாம் எனவும், தேசிய பட்டியல் உறுப்பினர் பதவி தொடர்பில் சரியான முடிவு உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படும் எனவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் நம்பிக்கை தெரிவித்தார்.

    (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

    உடப்புவை விழுங்கும் கடல்: தப்பியோடும் மீனவர்கள், தரைமட்டமாகும் வாடிகள்!

    • உடப்புவை விழுங்கும் கடல்: தப்பியோடும் மீனவர்கள், தரைமட்டமாகும் வாடிகள்!
    • திசைமாறிப் பாயும் பேரலைகள்: சிலாபத்தில் அடுத்தடுத்து கடலுக்குள் மூழ்கும் வீதிகள்!
    • கற்கள் போட்டாச்சு… ஆனா கடல் நிக்கல! உடப்புவில் 700 மீற்றர் ஆபத்து வளையம்!

    ஜுட் சமந்த

    சிலாபம், உடப்பு கடலோரப் பகுதி மீண்டும் இயற்கையின் கோரத் தாண்டவத்திற்கு இலக்காகியுள்ளது. வழக்கத்திற்கு மாறான ஆக்ரோஷத்துடன் எழும் பேரலைகள் கரையோரத்தை வேகமாக அரித்துச் செல்லத் தொடங்கியுள்ளதுடன், மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் பல மீனவ வாடிகளை கடலுக்குள் இழுத்துச் சென்று நிர்மூலமாக்கியுள்ளன.

    பல வருடங்களாகத் தொடரும் இந்த அவலத்திற்குத் தீர்வாக அமைக்கப்பட்ட தடுப்புக் கருங்கல் அணைகளையும் மீறி அலைகள் உள்நுழைவதுதான் தற்போது அங்குள்ளவர்களை நிலைகுலைய வைத்துள்ளது. அதுமட்டுமல்லாது, மேற்கு கரையோரப் பகுதிகளில் வழக்கமாக தெற்கிலிருந்து வடக்கு நோக்கியே கடலரிப்பு நகரும்; ஆனால், இம்முறை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி அரிப்பு நகர்வது இயற்கையின் புதிரான மாற்றமாகப் பார்க்கப்படுகின்றது.

    இந்த விசித்திரமான அலைகளின் தாக்கத்தால் நிரந்தரமாக அமைக்கப்பட்டிருந்த பல வாடிகள் விரிசல்கண்டு, எந்த வினாடியிலும் இடிந்து கடலில் விழும் அபாயத்தில் தத்தளிக்கின்றன. இதனால் அப்பகுதி மீனவர்கள் மத்தியில் பெரும் பீதியும் பதற்றமும் தொற்றிக்கொண்டுள்ளது.

    நிலைமையின் தீவிரத்தை விளக்கிய ஆராச்சிக்கட்டு பிரதேச சபை உறுப்பினர் என்.கமலேஸ்வரன், உடப்பு பிரதான பாலத்தை அண்டிய 200 மீற்றர் பகுதியை கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் துரிதமாகப் பாதுகாத்ததற்கு நன்றி தெரிவித்தார். இருப்பினும், அடுத்தடுத்த ஆபத்துகள் மிக வேகமாக மக்களை நெருங்கிக் கொண்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

    தற்போது கடல் முன்னேறி வருவது மக்கள் செறிந்து வாழும் பகுதிகளை நோக்கியே என எச்சரித்துள்ள அவர், சுமார் 700 மீற்றர் நிலப்பரப்புக்குள் கடலோர வீதியும் மீனவ வாடிகளும் ஏற்கனவே அடித்துச் செல்லப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். இன்னும் சில நாட்களில் எஞ்சிய வாடிகளும் கடலுக்குள் இழுக்கப்படலாம் என்பதால், எஞ்சியிருக்கும் பகுதியையாவது உடனடியாகக் கருங்கற்கள் கொண்டு பாதுகாக்கத் தவறினால், ஒரு ஒட்டுமொத்தக் கிராமமே கடலுக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    ரவி கருணாநாயக்க அதிரடி கைது!

    1. ரவி கருணாநாயக்க அதிரடி கைது: வாக்குமூலம் கொடுக்கச் சென்ற இடத்தில் நடந்த பரபரப்பு!
    2. 4 அழைப்பாணைகளைத் தவிர்த்த முன்னாள் அமைச்சர்: பல மணிநேர விசாரணையின் பின் இலஞ்ச ஆணைக்குழுவின் அதிரடி நடவடிக்கை!
    3. தேசிய லொத்தர் சபை முறைகேடு: முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது செய்யப்பட்ட பின்னணி!

    நாட்டின் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ஒரு முக்கிய நகர்வாக, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அரசாங்கத்தின் நிதி மற்றும் வளங்களைத் தனது சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது. தேசிய லொத்தர் சபையில் (NLB) நடைமுறைகளை மீறி ஒப்பந்த அடிப்படையில் 5 ஊழியர்களை நியமித்ததாகவும், அவர்களைத் தனது தனிப்பட்ட அரசியல் பணிகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசிற்குப் பாரிய நிதி இழப்பை ஏற்படுத்தியதாகவும் இவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

    இதற்கான விசாரணைகள் தீவிரமடைந்த நிலையில், ஆணைக்குழுவின் விசாரணைப் பொறிக்குள் சிக்குவதைத் தவிர்க்கும் நகர்வுகள் முன்னதாக அரங்கேறின. விசாரணைக்கு முன்னிலையாகுமாறு தெரிவித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த 4 அடுத்தடுத்த அழைப்பாணைகளையும் ரவி கருணாநாயக்க தவிர்த்து வந்திருந்தார். ஒரு கட்டத்தில் ஆணைக்குழு அதிகாரிகள் அவரது வீட்டுக்கே நேரில் சென்றபோதும், அவர் அங்கு இருக்கவில்லை.

    இந்த இழுபறி நிலைக்கு மத்தியில், இன்று காலை 8.15 மணியளவில் கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் காரியாலயத்திற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக ரவி கருணாநாயக்க நேரடியாக வருகை தந்தார்.

    சுமுகமாக முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த வருகை, அடுத்தடுத்த மணிநேரங்களில் திசைமாறியது. ஆணைக்குழுவின் அதிகாரிகளால் பல மணிநேரமாக முன்னெடுக்கப்பட்ட துருவித் துருவிய தொடர் விசாரணைகளின் முடிவில், ரவி கருணாநாயக்கவை உத்தியோகபூர்வமாகக் கைது செய்ய அதிகாரிகள் அதிரடியாகத் தீர்மானித்தனர். அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற முன்னிலைப்படுத்தல் குறித்த தகவல்கள் தீவிர எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

    டீசல் விலை உயருமா? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

    1. டீசல் விலை உயருமா? இலங்கை மக்களுக்கு இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
    2. உலக சந்தையில் எகிறும் டீசல் விலை: இலங்கையில் விலை சூத்திரம் எடுக்கும் அதிரடி முடிவு என்ன?
    3. எரிபொருள் திருத்தம்: நிதியமைச்சும் வலுசக்தி அமைச்சும் இன்று எடுக்கும் தீர்க்கமான தீர்மானம்!

    உலக சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட டீசல் விலை திடீரென ஏறுமுகத்தில் சென்று கொண்டிருப்பது இலங்கை வாகன ஓட்டுநர்கள் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்வதேச விலை அதிகரிப்பை உள்நாட்டு எரிபொருள் விலைச் சூத்திரத்தில் எவ்வாறு பிரதிபலிப்பது என்பது தொடர்பிலான தீர்க்கமான ஆலோசனைக் கூட்டம் இன்று நிதியமைச்சு மற்றும் வலுசக்தி அமைச்சுக்கிடையில் இடம்பெறவுள்ளது.

    இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) முன்வைக்கும் விரிவான நிதி மற்றும் சந்தைத் தரவுகளை அடிப்படையாக வைத்தே இந்த விலை மீளாய்வு கணக்கிடப்பட்டு வருகின்றது. குறிப்பாக, உலகச் சந்தையில் டீசலின் விலையேற்றம் தொடர்ச்சியாகப் பதிவாகி வருவது தற்போது கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கு பாரிய தலைவலியாக மாறியுள்ளது.

    உள்நாட்டுச் சந்தையில் பொதுமக்களுக்கு இதன்மூலம் ஏற்படும் சுமையைக் கட்டுப்படுத்துவதே தங்களின் பிரதான இலக்கு என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெளிவுபடுத்தியுள்ளார். “உலகச் சந்தையின் விலையேற்றத் தாக்கத்தை உள்நாட்டு விலையில் குறைந்தபட்ச அளவுக்கு மட்டுப்படுத்துவதற்கே நாம் முன்னுரிமை கொடுப்போம்; இருப்பினும், களநிலவரத்தைக் கருத்தில் கொண்டு இறுதிக்கட்ட முடிவை இரு அமைச்சுக்களுமே உத்தியோகபூர்வமாக அறிவிக்கும்” என அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

    தற்போதைய சர்வதேச நிலவரப்படி, உலகளவில் ஒரு லீற்றர் டீசலின் சராசரி விலை 1.59 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. எனினும், உலகின் செல்வந்த நாடுகள் அதிக வரிகள் காரணமாக எரிபொருளுக்கு அதிக விலையை அறவிடும் அதேவேளையில், எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளும் நடுத்தர நாடுகளும் குறிப்பிடத்தக்க அளவு குறைந்த விலையையே பேணி வருகின்றன.

    இவ்வாறானதொரு பின்னணியில், உள்நாட்டுப் போக்குவரத்துச் செலவுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் நேரடித் தாக்கம் செலுத்தும் டீசல் விலையில் அமைச்சுக்கள் இன்று எத்தகைய மாற்றங்களை அறிவிக்கவுள்ளன என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

    நேபாள துயரம்: 900-க்கும் மேற்பட்டோர் பலி, 4,000 பேருக்கு மேல் மாயம்!

    1. இமயமலையில் நிலநடுக்க வீரியப் பனிச்சரிவு: 900-க்கும் மேற்பட்டோர் பலி, 4,000 பேருக்கு மேல் மாயம்!
    2. நேபாளத்தில் மீண்டும் பெருவெள்ள அபாயம்: சைரன் அலறல்களால் தூங்க முடியாமல் நடுங்கும் மக்கள்!
    3. அமெரிக்கர்கள் உட்பட நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் கதி என்ன? நேபாளத்தில் தொடரும் பேரவலம்!

    இமயமலைத் தொடரில் ஏற்பட்ட திடீர் பனிப்பாறை சரிவு, நேபாள நாட்டையே புரட்டிப் போட்டுள்ளது. இதுவரை 903 மனித உயிர்கள் பலியாகியுள்ளதோடு, 4,247 பேரின் நிலை என்னவென்றே தெரியாமல் உறவுகள் தவித்து வருகின்றனர். எல்லையின் மறுபுறம் சீனாவின் திபெத் பகுதியிலும் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 546 பேர் காணாமல் போயுள்ளதாக சீன அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

    காத்மாண்டுவை இணைக்கும் பிரதான நெடுஞ்சாலைகளில் குவிந்துள்ள சேற்றையும் பாறைகளையும் அகற்றும் பணிகள் இராணுவத்தின் உதவியுடன் ஒருபுறம் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. ஆனால், இந்த மீட்புப் பணிகள் நிறைவடைவதற்குள், நள்ளிரவிலும் அதிகாலையிலும் மக்களின் தொலைபேசிகளுக்கு அடுத்தடுத்து ஒலிக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை சைரன்கள் அப்பகுதி மக்களை மரண பீதியில் ஆழ்த்தியுள்ளன.

    சீன எல்லைப் பகுதியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, போட்டேகோசி ஆற்றுப் படுகை மக்களுக்குப் புதிய எச்சரிக்கைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. “அடிக்கடி எச்சரிக்கை ஒலிக்கிறது, மழையும் பெய்கிறது. எழுந்து நடக்க முடியாத 70 வயது முதிய பெற்றோரைத் தூக்கிக்கொண்டு நள்ளிரவிலும் மேடான பகுதிகளுக்கு ஓட வேண்டியுள்ளது, உடலிலும் மனதிலும் தெம்பே இல்லை” என்று பாதிக்கப்பட்ட கிராமவாசி ஒருவர் கண்ணீருடன் விவரித்துள்ளார்.

    வீடுகளின் சுவர்கள் அடித்துச் செல்லப்பட்டு, கூரைகளும் உடமைகளும் சகதிக்குள் புதைந்து கிடக்கின்றன. “எல்லாம் முடிந்துவிட்டது; வீடும் இல்லை, உடமைகளும் இல்லை, உயிருடன் இருப்பதோடு சரி” என எஞ்சிய உடைமைகளைத் தேடி அலைந்த பெண்கள் கதறும் காட்சி காண்போரை உலுக்கியுள்ளது. சுமார் 20,000 மக்களுக்கு மின்சாரம் வழங்கிய முக்கிய மின்நிலையம் ஒன்று முற்றிலும் சேதமடைந்துள்ளது.

    இந்த இயற்கைச் சீற்றத்தில் உள்ளூர் மக்கள் மட்டுமன்றி, மலை ஏறுவதற்கும் புனித யாத்திரைக்குமாக உலகின் பல நாடுகளிலிருந்து வந்த நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்களும் சிக்கியுள்ளனர். இதில் 85 அமெரிக்கப் பிரஜைகளின் நிலை இன்னும் அறியப்படவில்லை என்றும், திபெத் பகுதியில் நேபாளிகள் உட்பட 261 வெளிநாட்டவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தப் பேராபத்து வெறுமனே பெய்த பெருமழையால் மட்டும் உருவானதல்ல. இமயமலையின் உச்சியில் இருந்த பாறாங்கல் அடுக்கு ஒன்று 5.2 ரிக்டர் அளவிலான அதிர்வை ஏற்படுத்தும் வீரியத்துடன் சரிந்து விழுந்ததில், அதனுடன் பனிப்பாறையும் சேர்ந்து நொறுங்கி கீழே உள்ள ஆறுகளுக்குள் பாய்ந்ததே இந்த வெள்ளப் பிரளயத்திற்குக் காரணம் என்பதைச் செய்மதிப் படங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

    “பூகோள வெப்பமயமாதலுக்கு எங்கள் நாடு வெறும் 0.1% மட்டுமே பொறுப்பு, ஆனால் அதன் மிகக் கொடூரமான விளைவை எங்கள் அப்பாவி மக்கள் சுமக்கிறார்கள்” என நேபாளத்தின் வெளிவிவகார அமைச்சர் உலக நாடுகளிடம் உருக்கமாக முறையிட்டுள்ளார். தற்போது அமெரிக்கா மற்றும் மலேசியா போன்ற நாடுகள் மீட்புக் குழுக்களையும் பல மில்லியன் டொலர் அவசர நிதியுதவிகளையும் நேபாளத்திற்கு அனுப்பத் தொடங்கியுள்ளன.

    முதல்வர் விஜய்க்கு அதிர்ச்சி வைத்தியம்: காங்கிரஸ் அதிரடி எச்சரிக்கை!

    1. விஜய்க்கு அதிர்ச்சி வைத்தியம்: தமிழக அரசிலிருந்து விலக காங்கிரஸ் அதிரடி எச்சரிக்கை!
    2. 2029 பிரதமர் யார்? விஜய் vs ராகுல் காந்தி – கூட்டணிக்குள் வெடித்த பகிரங்கப் போர்!
    3. பதவியா, ராகுலா? தவெக அரசுக்கு அமைச்சர் ராஜேஷ் குமார் விடுத்த பகிரங்க மிரட்டல்!

    தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத புதியதொரு புயல் தற்பொழுது வீசத் தொடங்கியுள்ளது. 2029 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் இந்திய தேசியக் காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்பதில் கட்சி எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்காது எனத் தமிழக அமைச்சர் ராஜேஷ் குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

    இந்த முடிவை ஆளும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையையும் அவர் முன்வைத்துள்ளார். ஒருவேளை ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்க தவெக தலைமை மறுத்தால், தமிழக அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் அமைச்சர்கள் அனைவரும் அடுத்த கணமே தமது பதவிகளைத் தூக்கியெறிந்துவிட்டு வெளியேறுவர் என அவர் மிகக் காட்டமாக எச்சரித்துள்ளார்.

    தனிப்பட்ட அமைச்சுப் பதவிகளையோ அல்லது ஆட்சியதிகார சுகங்களையோ விடவும் காங்கிரஸ் கட்சியும், அதன் அடிப்படைக் கோட்பாடுகளும், தலைவர் ராகுல் காந்தியின் தலைமைத்துவமுமே தமக்கு முதன்மையானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சியின் கௌரவத்திற்காகவும் தலைமைக்காகவும் எந்தவொரு நிமிடத்திலும் அமைச்சுப் பதவிகளைத் துறக்கத் தம்மால் முடியும் என்றும் அவர் பகிரங்கமாக முழங்கியுள்ளார்.

    தமிழகத்தில் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்துள்ள நிலையில், நாட்டின் அடுத்த பிரதமர் விஜய்தான் என அக்கட்சியின் அமைச்சர்களும் முன்னணி நிர்வாகிகளும் பரவலாகப் பேசிவருகின்றனர். இவ்வாறான ஒரு சூழ்நிலைக்கு மத்தியில், காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ் குமார் விடுத்துள்ள இந்த அதிரடி எச்சரிக்கை, தமிழகக் கூட்டணிக் களத்திலும் தேசிய அரசியலிலும் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் தோற்றுவித்துள்ளது.