Tuesday, May 5, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 104

கல்முனையில் இடம்பெற்ற SLMC யின் முக்கிய கலந்துரையாடல்!

0

ஏ.எஸ்.எம். அர்ஹம் – நிருபர்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை பகுதியின் சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (19) கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் தலைமையில் அவரது கல்முனை காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டார்.

நாட்டில் நிலவும் சமகால அரசியல் தொடர்பாகவும், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும், எதிர்வரக்கூடிய தேர்தல்களில் எவ்வாறு போட்டியிடுவது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

மேலும் கல்முனையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய மற்றும் எதிர்கால முன்னெடுப்புகள் குறித்தும் கருத்துரைக்கப்பட்டது.

நிகழ்வில் அதிதிகளாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றத் தவிசாளர்கள், உப தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள், போராளிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

மரத்தை நேர் செய்த வெசேல் வண்டி!

0

(உடப்பு க.மகாதேவன்)

குருநாகல் – புத்தளம் பிரதான வீதியின் மகாகெலிய சந்திக்கு அருகில் கார் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து இன்று(20) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வாகனத்தை ஓட்டிச்சென்ற சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதால், கார் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெய்வாதீனமாக குறித்த விபத்தில் பயணித்த எவருக்கும் உயிராபத்து எதுவும் இடம்பெறவில்லை.

இறால் பண்ணை நீர் தொட்டியில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

0

ஜூட் சமந்த

இறால் பண்ணையில் தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டியில் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக முந்தள் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து நேற்று 19 ஆம் தேதி முந்தல், புலிச்சகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இறந்தவர் வவுனியா, விஸ்வமடு பகுதியைச் சேர்ந்த வசந்தம் தர்ஷன் (வயது 24) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முந்தல், புலிச்சகுளம் பகுதியில் உள்ள இறால் பண்ணையில் பணிபுரிந்து வந்த உயிரிழந்த குறித்த நபர் வலிப்பு நோயாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.. இறால் பண்ணையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது திடீரென தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டியில் விழுந்துள்ள நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

பண்ணையில் இருந்த மற்றவர்கள் அவரை சிகிச்சைக்காக முந்தல் மருத்துவமனையில் அனுமதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனைக்காக சிலாபம் பொது மருத்துவமனைக்கு உடல் அனுப்பப்பட்டுள்ளது.

முந்தல் போலீசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

மாஓய நிரம்பி வழியும் அபாயம்!

0

ஜூட் சமந்த

நாட்டின் தொடர்ச்சியான மலை வீழ்ச்சியினால் மாஓய நிரம்பி வழியும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று 19 இரவு 11.30 க்கு வெளியிடப்பட்ட இந்த அறிக்கை 21 மதியம் 12.00 வரை செல்லுபடியாகும் என குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த அபாயம் காரணமாக ஆலவ்வ, திவுலபிடி, மிரிகம, பன்னல, ஆகவ, மீகமுவ, கடான மற்றும் தங்கொடுவ பிரதேச செயலகத்திற்குற்பட்ட மாஓயா அருகில் உள்ள குடியிருப்பாளர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், அதிக மலை வீழ்ச்சி காரணமாக தெதுறுஓய, ராஜாங்கனய மற்றும் அங்கமுவ வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 20 ஆம் தேதி காலை நிலவரப்படி, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 06 வான் கதவுகள் தலா 04 அடி திறக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வான் கதவுகள் வழியாக வினாடிக்கு 16,250 கன அடி நீர் தெதுரு ஓயாவிற்கு வெளியேற்றப்படும் என்றும் நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 06 வான் கதவுகள் தலா 06 அடி திறக்கப்பட்டுள்ளன, மேலும் வினாடிக்கு 6,996 கன அடி நீர் கலா ஓயாவிற்கு வெளியேற்றப்படும். அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 02 வான் கதவுகள் தலா 05 அடி திறக்கப்பட்டுள்ளன. அந்த வான் கதவுகள் வழியாக வினாடிக்கு 2,536 கன அடி நீர் கலா ஓயாவிற்கு வெளியேற்றப்படும் என்று நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.

ராஜாங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளிலிருந்து வெளியேற்றப்படும் நீர் தேங்குவதால் கலா ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலைமை காரணமாக கலா ஓயாவைச் சுற்றியுள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பேரிடர் மேலாண்மைப் பிரிவு மேலும் கூறுகிறது.

இதற்கிடையில், கலா ஓயாவில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், வில்பத்து தேசிய பூங்காவிற்குள் நுழைய உதவும் எலுவன்குளம் பாலத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இளைஞன் ஒருவர் வெட்டிக் கொலை!

அக்கறையான் போலீஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சங்குளம் பகுதியில் இளைஞன் ஒருவர் வெட்டிக் கொலை

கிளிநொச்சி, அக்கறையான் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்கந்தபுரம், ஈச்சங்குளம் பகுதியில் முற்பகை காரணமாக 24 வயது மதிக்கத்தக்க அதே பகுதியைச் சேர்ந்த கௌரிராஜன் கஜன் என்ற ஒரு பிள்ளையின் இளம் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி நீதிமன்ற நீதவானின் உத்தரவுக்கு அமைவாக சடலத்தின் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அக்கறையான் போலீசார் தெரிவித்துள்ளனர்

இச்சம்பவம் தொடர்பாக அக்கறையான் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உடப்பில் இடம்பெற்ற வாணி விழா!

0

(உடப்பு குறூப் நிருபர்)

உடப்பு இந்து மன்றத்தின் ஏற்பாட்டில் “வாணி விழா” நிகழ்வு உடப்பு தமிழ் மகா வித்தியாலயத்தில் அதிபர் திரு.பி. சுகந்தன் தலைமையில் கடந்த (16) வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் சிலாபம் ஶ்ரீஜெயனிதா நகை மாளிகை உரிமையாளர் திரு.வி.சுதானந்தம், அருள் நாகநாதன் அறக்கட்டளை நிதியஸ்தாபகர் திரு.ஏ.நாகநாதன், உடப்பு இந்து ஆலய பரிபாலனசபைத் தலைவர் திரு.வி.கந்தசாமி, அத்துடன் உடப்பு முன்னாள் ஆலய பூசகர் எம். பரந்தாமன்(ஜோதிடர்), கலாபூஷணம் மற்றும் ஊடகவியலாளரான திரு.வி.வீரசொக்கன் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் கடந்த காலங்களில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் தங்கப் பதக்கங்களும் துவிச்சக்கர வண்டிகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் கலந்து கொண்ட பிரதம அதிதிகளுக்கும் பொன்னாடைகளும் போர்த்தி கௌரவமும் அளிக்கப்பட்டது.

அதிகரிக்கும் டெங்கு அபாயம்!

0

நாட்டின் 11 மாவட்டங்களில் டெங்கு பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. 

மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நுளம்புகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதாக அதன் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்தார். 

இந்த வருடம் இதுவரையான காலப்பகுதி வரையில் 40,392 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், 22 பேர் உயிரிழந்தனர். 

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, டெங்கு நுளம்புகள் பரவுவதைக் கட்டுப்படுத்த சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பிரஷீலா சமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவா பயணமான பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல்!

0

பாராளுமன்ற ஒன்றியங்களுக்கிடையிலான (IPU) 151வது அமர்வு, சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இன்று 19-23, 2025 அன்று நடைபெறுகிறது.

குறித்த அமர்வு இன்று 19.10.2025 தொடக்கம் 23.10.2025 வரை இடம்பெறவுள்ளது.

ஆளும் குழு, நிலைக்குழுக்கள், நாடாளுமன்றங்களின் உறுப்பினர்களின் மனித உரிமைகள் குழுக்கள் மற்றும் மத்திய கிழக்கு கேள்விகள், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றம் மற்றும் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றம் உள்ளிட்ட அனைத்து பாராளுமன்ற ஒன்றியங்களுக்கிடையிலான சட்டப்பூர்வ அமைப்புகளும் இந்த சந்தர்ப்பத்தில் பங்கேற்கின்றன.

“மனிதாபிமான விதிமுறைகளைப் பாதுகாத்தல் மற்றும் நெருக்கடி காலங்களில் மனிதாபிமான நடவடிக்கையை ஆதரித்தல்” எனும் கருப்பொருளில் இந்த அமர்வு இடம்பெறுவதுடன், பாராளுமன்ற பிரதிநிதிகள் இந்த பகுதியில் விவாதிக்க, கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகளைத் ஊக்குவிக்க இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் குறித்த அமர்வில் பங்கேற்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல் அவர்களும் இலங்கைக்கான குழுவில் இணைந்து ஜெனீவா பயணமாகியுள்ளார்.

பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வடகல அடங்கிய ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற விவகார அதிகாரிகள் இந் நிகழ்வில் பங்குகொள்ள ஜெனீவா பயணமாகியுள்ளனர்.

சர்வதேச ரிதியாக கைவிடப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை அங்கீகரித்தல் மற்றும் ஆதரித்தல், இந்த நடைமுறையைத் தடுக்க நடவடிக்கை எடுப்பது என்ற தலைப்பில், அவசரகாலப் பிரச்சினை மற்றும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் நிலைக்குழுவால் பிரச்சினை குறித்த தீர்மானங்களை சட்டமன்றம் நிறைவேற்ற உள்ளது.

ஒட்டுமொத்த விவாதத்தின் அடிப்படையில் எடுக்கப்படுகின்ற முடிவை ஆவணபடுத்தி ஏற்றுக்கொள்வதன் மூலம் குறித்த சட்டமன்ற அமைவு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹட்டனில் இடம்பெற்ற தேசிய தீபாவளி பண்டிகை நிகழ்வுகள்!

0

புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நுவரெலியா மாவட்ட செயலகம் மற்றும் நோர்வூட் பிரதேச செயலகம் ஆகியன ஏற்பாட்டில் 2025ம் ஆண்டுக்கான தேசிய தீபாவளி பண்டிகை நிகழ்வுகள் இன்று (19) ஹட்டனில் இடம்பெற்றுள்ளது. 

ஹட்டன் மாணிக்கப்பிள்ளையார் ஆலையத்தில் விசேட பூஜைகள் மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்ட அதிதிகள் ஹட்டன் மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஹட்டன் மல்லியப்பு சந்திவரை பேரணி ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர். 

பின்னர் அங்குள்ள தனியார் மண்டபம் ஒன்றில் தேசிய தீபாவளி தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

கோலாட்டம், மழையகத்தின் பாரம்பரிய கலையான காமன் கூத்து, அருச்சுனதவசு போன்ற வரலாற்றை பிரதிபிலிக்க கூடிய பல்வேறு கலை நிகழ்வுகளும் இன்றைய பேரணியை அலங்கரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் பகுதியில் கடை திறப்பு விழாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

0

ஜூட் சமந்த

புதிதாக திறக்கவிருந்த ஒரு வணிக ஸ்தாபனத்தை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

புத்தளம், சேனகுடியிருப்புவைச் சேர்ந்த நவோத் கிம்ஹான் (வயது 26) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புத்தளம், ரத்மலை பகுதியில் கடந்த 17 ஆம் தேதி இந்த விபத்து நிகழ்ந்தது.

புத்தளம், ரத்மலை பகுதியில் புதிதாக திறக்கவிருந்த ஒரு வணிக ஸ்தாபனத்தை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​மின்சாரம் தாக்கி அந்த இளைஞர் உயிரிழந்தார். புதிய வணிக ஸ்தாபனத்திற்கு மின்சார இணைப்பு வழங்கப்படாததால், அருகிலுள்ள கடையில் இருந்து தற்காலிகமாக மின்சாரம் பெற நடவடிக்கை எடுத்தனர்.

மின்சாரம் பெற பயன்படுத்தப்படும் கம்பியை தயார் செய்யும் போது, ​​அந்த இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சம்பவ இடத்தில் இருந்தவர்கள் காயமடைந்த இளைஞரை சிகிச்சைக்காக புத்தளம் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததிருந்தமை குறிப்பிடத்தக்கது.