Sunday, June 8, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 11

நினைவேந்தலில் கலந்துகொண்ட சிறீதரன் எம்.பி!

இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் நினைவேந்தலும், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும் தமிழரசுக்கட்சியின் இராமநாதபுரம் வட்டாரத்தின் ஏற்பாட்டில் வட்டக்கச்சி பொதுச்சந்தை முன்பாகவும், வட்டக்கச்சி வட்டாரத்தின் ஏற்பாட்டில் ஆறுமுகம் வீதி சந்தியிலும் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கலந்து கொண்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உரையாற்றிருந்தார்.

ஈழத்தமிழ் தேசிய இனமான நாம் இந்த மண்ணிலே நீண்டகாலம் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டோம். 1954 முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தமிழர் மீதான பல்வேறு படுகொலைகள் இடம்பெற்றன என நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உரையாற்றிருந்தார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

நாட்டின் பல பகுதிகளில் இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்ட போதெல்லாம் தர்மத்தின் வழி நாங்கள் ஒரு தீர்வை எட்டிக்கொள்ளலாம் என எமது தலைவர்கள் கருதிய காலத்தில் எங்களைப் பாதுகாக்க ஆயுதங்களுக்கு பதில் வேறொண்டும் இல்லை நிலையிலே ஆயுதங்களை ஏந்தினோம்.

பல்வேறு விடுதலை இயக்கங்கள் ஆயுதங்கள் ஏந்தினாலும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொள்கையே நீண்ட விடுதலைப் போராட்டத்தை கொண்டது.

இந்த காலத்தில் பல படுகொலைகள் இடம்பெற்று முள்ளிவாய்க்காலில் நிறைவுக்கு வந்தது. பல நூற்றுக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். பல இலட்சம் மக்கள் இருந்த போது 70,000 மக்கள் தான் உள்ளார்கள் என தெரிவித்து உணவளித்து ஏனையோரை பட்டினியால் கொண்டனர்.

அதனை விட கொத்தணி குண்டுகளால் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவை நடந்து 16 வருடம் ஆகியிருந்தாலும் சிரட்டையில் கஞ்சி என்பது உணவுக்காக மக்கள் கஷ்டப்பட்ட காலத்தில் பெரிதும் உதவியது. அந்த கஞ்சி குடித்த சிறுவர்களையே கொன்றது. இலங்கை அரசு சிரட்டை கஞ்சி என்பது எங்களோடு வாழ்ந்தவர்களின் ஆத்மாவாக நினைக்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்திருந்தமை குறிப்பிட்டத்தக்கது.

போக்குவரத்த்து அமைச்சின் கண்டன அறிக்கை!

0

இன்று (2025.05.16) ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் இரண்டு முக்கிய இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து நியாயமற்ற முறையில் உடனடி வேலைநிறுத்தத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பதவி தர உயர்வுகளை வழங்குவதில் தாமதம், மற்றும் புதிய ஆட்சேர்ப்பு செயல்முறையை செயல்படுத்தாமை ஆகிய இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து நியாயமற்ற முறையில் உடனடி வேலைநிறுத்தத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக குறித்த அமைச்சு அறிக்கை ஒன்றின்மூலம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு என்றவகையில் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் (2025.01.22) ரயில்வே துறையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றின் மூலம் 909 வெற்றிடங்களுக்கான அமைச்சரவை ஒப்புதலையும் வழங்கியுள்ளதாகவும், இதில் 106 நிலைய அதிபர்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் பல மாதங்களுக்கு முன்னரே இந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், அவற்றை செயல்படுத்துவதில் உள்ள தாமதம் மற்றும் சிக்கலான சூழ்நிலைகள் குறித்து அமைச்சு, அமைச்சர்கள் மட்டத்தில் தலையிட்டு கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்த போதிலும் திணைக்களத்தின் சில உப திணைக்களங்களுக்கு இடையே காணப்படும் திறனற்ற தன்மை காரணமாக இதுவரையிலும் எந்தவொரு புதிய ஆட்சேர்ப்புகளையும் செய்யத் முடியாமல் போயுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கைகள் அமைச்சு மட்டத்தில் தீர்க்கப்பட்டிருந்த போதிலும் அவற்றை செயல்படுத்தாமையின் பின்னணியில் பிரச்சினைகளை கலந்துரையாடித் தீர்த்துக்கொள்வதற்குப் பதிலாக பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் உடனடி தொழிற்சங்க நடவடிக்கைகளை செயல்படுத்துவது குறித்து அமைச்சு என்ற வகையில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

புகையிரத திணைக்களத்தின் சில உப திணைக்களங்களின் செயல்திறன் குறைவாக இருந்த போதிலும் அமைச்சு என்ற வகையில் அனைத்திலும் தலையீட்டை மேற்கொண்டு தீர்வுகாண முயற்சித்து வரும் போதிலும், பொதுமக்களுக்கு அநியாயமாக தீங்கு விளைவிக்கும் வேலைநிறுத்தங்களைத் தொடங்குவதற்குப் பின்னால் வேறு ஏதேனும் நோக்கம் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இந்த வேலைநிறுத்தமானது தெளிவாக அரசாங்கத்தை சிரமத்திற்கு உட்படுத்தவும் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கவும் மட்டுமே மேற்கொள்ளப்படும் ஓர் முயற்சியாகத் தெரிகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.வி.யின் கருத்தால் சூடான தென் இலங்கை!

0

இலங்கையில் தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்பதை பிரான்ஸ் அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்துவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

பிரான்ஸ் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற தமிழர்களுக்கான பிரான்ஸ் உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கருத்துரைக்கும் காணொளி ஒன்று இந்த கூட்டத்தில் ஒளிபரப்பட்டுள்ளது. 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதகுருமார்களால் சிங்களமயமாக்கலும் பௌத்த மயமாக்கலும் இடம்பெறுவதாக இந்த காணொளியின் வாயிலாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இன்றும் வடக்கு கிழக்கில் இராணுவத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. 

குறிப்பாக 2 அல்லது 3 தமிழர்களுக்கு ஒரு இராணுவ உத்தியோகத்தர் உள்ளார். அத்துடன் வடக்கு கிழக்கில் இராணுவம் கட்டுப்படுத்தும் நிலத்தின் அளவும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. 

தமிழர் பகுதியில் அவ்வப்போது சிங்கள குடியேற்றங்கள் அதிகரித்து வருகின்றன என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தமது காணொளியில் தெரிவித்துள்ளார். 

அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் தனித்துவம் தொடர்ந்தும் உறுதி செய்யப்படுவதற்கான சில காரணங்களையும் அவர் தமது காணொளியில் குறிப்பிட்டுள்ளார். 

பிரான்சில் உள்ள 47 மாநகர சபைகளில் இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடந்ததை அங்கீகரிக்கும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

அத்துடன் இந்தியாவின் தமிழக மாநிலமும் கனேடிய நாடாளுமன்றமும் இவ்வாறான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன. 

எனவே, ஆர்மெனியா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளில் இனப்படுகொலை இடம்பெற்றமையை அங்கீகரித்ததை போன்று இலங்கையிலும் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை பிரான்ஸ் அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்துவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட ரணில்!

0

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று (16) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது. 

கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் இந்த முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சார்பில் ஆஜரான அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைக்கையில், சந்தேக நபரான சாமர சம்பத் தசநாயக்க, ஊவா மாகாண முதலமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், மாகாண சபைக்கு சொந்தமான நிலையான வைப்பு நிதிக் கணக்கில் இருந்த பணத்தை காலாவதியாகும் முன்னர் திரும்பப் பெற்றதன் மூலம் அரசாங்கத்துக்கு 17.6 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு, இவ்வாறு மாகாண சபைகளின் நிலையான வைப்பு நிதியை காலாவதியாகும் முன்னர் திரும்பப் பெறுவதற்கு 2015ஆம் ஆண்டு தான் பிரதமராகப் பணியாற்றிய காலத்தில் திறைச்சேரி ஊடாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டதாகவும், அந்தச் சுற்றறிக்கைக்கு அமைய சாமர சம்பத் தசநாயக்கவின் செயல் சட்டவிரோதமானது அல்ல என்றும் கூறியிருந்தார். 

ஆனால், குறித்த சுற்றறிக்கை 2016ஆம் ஆண்டு நவம்பர் 22 அன்று வெளியிடப்பட்டிருந்த போதிலும், சாமர சம்பத் தசநாயக்கவால் பணம் திரும்பப் பெறப்பட்டது 2016ஆம் ஆண்டு பெப்ரவரி 29 அன்று எனவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார். 

அதன்படி, சாமர சம்பத் தசநாயக்க பணத்தை திரும்பப் பெற்றபோது, ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடும் சுற்றறிக்கை எதுவும் இல்லை எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார். 

இது தொடர்பாக, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அழைத்து வாக்குமூலம் பதிவு செய்ததாகவும், அப்போது அவர் குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்ட திகதிகள் குறித்து அறியாமல் ஊடகங்களுக்கு இந்தக் கருத்தை வெளியிட்டமை தெரியவந்ததாகவும் அந்த அதிகாரி கூறினார். 

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி ஊடக சந்திப்பை நடத்தி இந்தக் கருத்தை வெளியிட்டதன் மூலம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு தாக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். 

சந்தேக நபரான சாமர சம்பத் தசநாயக்கவின் மனைவியின் கோரிக்கையின் பேரில் இந்த ஊடக சந்திப்பை நடத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாகவும், அதன்படி, சந்தேக நபர் விசாரணைகளுக்கு இடையூறு செய்வதால், அவருக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்து தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிடுமாறு கோரப்பட்டது. 

எனினும் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் பிணையை ரத்து செய்து, அவரை தடுப்புக் காவலில் வைக்குமாறு ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (16) நிராகரித்தார்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்த வாதங்களில், சந்தேக நபரின் பிணையை ரத்து செய்யும் அளவுக்கு போதுமான ஆதாரங்கள் வெளிப்படுத்தப்படவில்லை எனக் கூறி, இந்தக் கோரிக்கையை நீதவான் நிராகரித்தார்.

போதைப்பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை!

0

ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

இந்த மூவரும் 2018 ஆம் ஆண்டு பேருவளையைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் பல நாள் மீன்பிடிக் கப்பலில் 17 கிலோகிராமுக்கு அதிகளவான ஹெரோயின் போதைப்பொருளுடன் பயணித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டனர். 

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த மேலும் 5 பிரதிவாதிகளை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே உத்தரவிட்டார்.

துருக்கியில் இடம்பெறும் மிக முக்கிய பேச்சுவார்த்தை!

0

போர் நிறுத்தம் ஒப்பந்தம் தொடர்பாக, துருக்கியில் இன்று (மே15) உக்ரைன்- ரஷ்யா நேரடி பேச்சுவார்த்தை நடத்துகிறது.

ரஷ்யா- உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில், அதை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரு தரப்பிலும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் இன்று (மே 15) நேரடி பேச்சுவார்த்தை நடத்தலாம் என உக்ரைனுக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்து இருந்தார்.

இதையடுத்து, ”மே 15ம் தேதி வியாழக்கிழமை துருக்கியில் புடினுக்காக நான் காத்திருப்பேன். தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்துவோம்” என புடின் அழைப்பை ஜெலன்ஸ்கி ஏற்றுக்கொண்டார். போர் நிறுத்தம் ஒப்பந்தம் தொடர்பாக, துருக்கியில் இன்று (மே 15) உக்ரைன்- ரஷ்யா நேரடி பேச்சுவார்த்தை நடத்துகிறது.

துருக்கியில் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையை புடின் புறக்கணிக்கிறார். அவர் தனது பிரதிநிதிகளை நேரடி பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைக்க உள்ளதாக, ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இது குறித்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ரஷ்யாவிலிருந்து யார் வருவார்கள் என்பதைப் பார்க்க நான் காத்திருக்கிறேன், பின்னர் உக்ரைன் எந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை நான் முடிவு செய்வேன். துருக்கியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்வது குறித்து அதிபர் டிரம்ப் பரிசீலித்து வருவதாகவும் நான் கேள்விப்பட்டேன்.

ரஷ்யா போரையும், கொலைகளையும் நீட்டித்து வருகிறது. போர் நிறுத்தம் கொண்டு வர ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்கும் ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு தலைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அமைதி மற்றும் ராஜதந்திரத்திற்கு உதவும் அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மாணவனின் கழுத்தை அறுத்த சக மாணவன்!

0

மாணவர்கள் இருவருக்கு இடையில், இன்று (15) ஏற்பட்ட கைகலப்பில் மாணவர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையின் அதி தீவிர சிகிட்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை பாடசாலை ஒன்றில் கல்விப்பயிலும் இரண்டு மாணவர்களுக்கு இடையே இந்த கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

பாடசாலையில் க.பொ.த.உயர்தரம் கற்கும் மாணவன் இதே பாடசாலையில் க.பொ.த.சாதாரண தரத்தில் கற்கும் மாணவனை தாக்கி சவர அலகால் கழுத்தை அறுத்துள்ளார்.

படுகாயமடைந்த மாணவன் முதலில் புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மாணவனை தாக்கி காயமேற்படுத்திய மாணவன் தப்பிச்சென்றுள்ளதாக அறிய முடிகின்றது.

காதல் விவகாரமே இவ் மோதலுக்கு காரணம் என சக மாணவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நில மேம்பாட்டு கூட்டுத்தாபன மு.தலைவர் கைது!

0

இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் இலஞ்ச ஊழல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் கீழ் செயல்படுத்தப்படும் ஒரு திட்டத்தின் திறப்பு விழாவிற்கு கொள்முதல் நடைமுறைக்கு புறம்பான ஒரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து, 2.76 பில்லியன் ரூபாயை செலவழித்து அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்தியமைக்கா இலங்கை நில மேம்பாட்டு கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக, அத்தகைய விழாவிற்கு பணம் ஒதுக்கப்படாதபோது, ​​திட்டத்தின் நிதியைப் பயன்படுத்தி 2.76 பில்லியன் ரூபாயை முதலீடு செய்ததாக, இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் திரு. லியன ஆராச்சிகே பிரசாத் ஹர்ஷன் டி சில்வா, 15.05.2025 அன்று இரவு 10:00 மணிக்கு தெரிவித்திருந்த நிலையில் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹர்ஷான் டி சில்வாவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், இன்று (15) பிற்பகல் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். 

அதன்படி, சந்தேக நபரை தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான 5 சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டதுடன், சந்தேக நபருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டார். 

பின்னர், இந்த வழக்கு விசாரணைகளை ஜூன் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் நீதவான் உத்தரவிட்டார்.

யாழில் ஆரம்பமான ஊர்திப் பவனி!

தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக நேற்று காலை ஊர்திப் பவனி ஆரம்பமாகியது.

குறித்த ஊர்திப் பவனி இன்று கிளிநொச்சிக்கு வந்தடைந்ததுடன், பரந்தன், கிளிநொச்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அஞ்சலிக்காக தரித்திருந்தது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில் இந்த ஊர்திப் பவனி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊர்திபவனி வடக்கை சேர்ந்த ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று இறுதியாக முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது.

“தமிழினப் படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும், தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி வேண்டும்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் இறுதி போரின் சாட்சியங்கள் என்பன குறித்த வாகனத்தில் காட்சி படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வாகன பவனி வடக்கின் சகல மாவட்டங்களுக்கும் பயணிக்கும் போது பொதுமக்கள் அஞ்சலி செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

10 லட்சத்தை அண்மித்த சுற்றுலா பயணிகள் வருகை!

0

இந்த வருடம் சுற்றுலாப் பயணிகளின் வருகை 950,000 ஐயும் தாண்டியுள்ளது.

2025 மே மாதம் 13 ஆம் திகதி வரை 956,639 சுறுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்தள்ளனர்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, இந்த வருடம் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பை காட்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த மாதம், இந்தியா, ஜேர்மன் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய மூன்று நாடுகளிலிருந்தும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

மேலும், சீீனா, அவுஸ்திரேலியா, பங்கலாதேஷ், பிரான்ஸ், இரஷ்யா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் கடந்த மாதம் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.