Monday, May 4, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 117

கண்ணிவெடி அபாயத்தில் வாழும் தட்டுவன்கொட்டி பகுதி மக்கள்!

கிளிநொச்சி மாவட்டத்தின் தட்டுவன்கொட்டி பகுதியில் கடந்த 15 வருடங்களாக வசித்து வரும் மக்கள் தற்போது புதிய ஒரு பிரச்சினைக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

தமது பகுதியில் தற்பொழுதும் சில பகுதிகளில் வெடிக்காத நிலையில் கண்ணிவெடிகள் இணங்காணப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தமது பகுதியில் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் தமது நாளாந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பெரும் அச்ச நிலைமையை ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே மீண்டும் ஒருமுறை தமது பகுதியில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் குழுவினர் தமது பணியினை மீழவும் ஒருமுறை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமது பகுதியில் 100 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், தமது பகுதியில் இருந்து எந்த ஒரு அவசர தேவை கருதி செல்வதாயின் போக்குவரத்து வசதிகள் இன்மையால் தனியார் வாகனங்களிலே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மேலும் வைத்தியசாலை செல்வதற்கு நோயாளர் காவு வண்டிகளே வந்து தம்மை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்வதாகவும், தமது வாழ்வாதாரமாக கடற்தொழிலை மாத்திரமே மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த பகுதியில் இருவர் சட்ட விரோதமான முறையில் வெடிக்காத நிலையில் இருந்த வெடி பொருளை வெட்ட முயன்போது ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அன்றைய தினமே வெடிக்காத நிலையில் இரண்டு எரிகனைகள் இனங்காணப்பட்டு போலீசாரால் மீட்கப்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக தமது பகுதிகளில் இருப்பவர்கள் பெரும் அச்ச நிலைமையுடன் வாழ்ந்து வருவதாகவும், எனவே இதற்கு உரிய தீர்வினை பெற்றுத் தரும் வகையில் விரைவாக தமது பகுதியில் மீளவும் ஒரு முறை கண்ணிவெடி அகற்றும் குழுவினர் கண்ணிவெடியை அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

31 வெடி குண்டுகள் கண்டுபிடிப்பு!

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் வெடிக்காத நிலையில் வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் நேற்றைய தினம் பிற்பகல் 2:30 மணியளவில் வெடிக்காத நிலையில் 31 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது;

முகமாலை வடக்கு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தமது வீட்டு வளாகத்திற்குள் பள்ளம் தோண்டியபோது ஆபத்தான நிலையில் வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த விடயத்தை உடனடியாக வீட்டு உரிமையாளர் பளை பொலிஸார்க்கு தெரியப்படுத்தியுள்ளார்.

அதன் பின்னர் கிளிநொச்சி நீதி மன்றத்தின் உத்தரவுடன் பாதுகாப்பான முறையில் வெடி குண்டிகளை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கற்பிட்டியில் சிக்கிய 4.5 கிலோ கிராம் தங்கம்!

0

கற்பிட்டி களப்பின் அரிச்சல் கடல் பகுதியில் நேற்று 01.10.2025 காலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் நான்கு (04) கிலோகிராம் நானூற்று ஐம்பத்து நான்கு (454) கிராம் தங்கத்தை கடத்த முயன்ற இரண்டு (02) சந்தேக நபர்களையும் ஒரு டிங்கி (01) படகையும் கைப்பற்றினர்.

கடல் வழிகளில் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்பரப்பை உள்ளடக்கிய வகையில் கடற்படை வழக்கமான ரோந்து மற்றும் தேடல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், நேற்று காலை கற்பிட்டி களப்பின் அரிச்சல் கடல் பகுதியில் இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனம் நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, குறிப்பிட்ட கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த ஒரு சந்தேகத்திற்கிடமான (01) டிங்கி படகை கடற்படையினர் சோதனை செய்தனர்.

அந்த டிங்கியின் மீன்பிடி வலையில் பதின்மூன்று (13) சந்தேகத்திற்கிடமான ஈய எடைகள் காணப்பட்டன, மேலும் மேற்கொண்ட சோதனையின் போது, நுணுக்கமாக தயாரிக்கப்பட்டு ஈய எடைகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோதமாக கொண்டு செல்ல முயற்சித்த சுமார் நான்கு (04) கிலோகிராம் நானூற்று ஐம்பத்து நான்கு (454) கிராம் தங்கம் மற்றும் ஒரு டிங்கி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள் கற்பிட்டி ஏலத் தோட்டம் மற்றும் ஆனவாசலை பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், சந்தேக நபர்கள், தங்கம் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

புத்தளம், மதுரங்குளியில் இடம்பெற்ற விபத்தில் போலீஸ் சார்ஜன்ட் பலி!

0

ஜூட் சமந்த

மோட்டார் கார் மற்றும் லாரி மோதியதில் போலீஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புத்தளம், மதுரங்குளிய போலீசார் தெரிவித்தனர்.

புத்தளம் – சிலாபம் சாலையில் மதுரங்குளிய – செம்பெட்டே பகுதியில் நேற்று 29 ஆம் தேதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கருவலகஸ்வெவ போலீசில் பணியாற்றிய போலீஸ் சார்ஜன்ட் 29943 அபேசிங்க (51) என்பவரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் இறந்தவர் ஓட்டிச் சென்ற மோட்டார் கார் எதிர் திசையில் இருந்து வந்த கோழிகளை ஏற்றிச் சென்ற லாரியுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த போலீஸ் சார்ஜன்ட் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய ஓட்டுநர் மற்றும் லாரியை மதுரங்குளிய போலீசார் கைது செய்துள்ளனர்.

ஹோகந்தர – ​​சிங்கபுர பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மதுரங்குளிய போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

புத்தளம், வனாத்தவில்லு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

0

ஜூட் சமந்த

உந்துருளி ஒன்று உழவு இயந்திரத்துடன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றொருவர் புத்தளம் ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வனாத்தவில்லுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வனாத்தவில்லுவ – மொரபத்தாவ பகுதியில் நேற்று 29 ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இறந்தவர் திசாநாயக்க முதியான்சேலகே சரத் குமுது (வயது 41) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காயமடைந்த உடுப்பிட்டிகமகே தினேஷ் புஷ்பகுமார (வயது 30) புத்தளம் ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், உயிரிழந்த நபரும், காயமடைந்தவரும் வனாத்தவில்லுவ – மொரபத்தாவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வனாத்தவில்லுவ – மொரபத்தாவ பகுதியில் ஒரு பக்க சாலையில் சென்று கொண்டிருந்த உழவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட டிரெய்லரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய உழவு இயந்திரத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ள வனாத்தவில்லுவ பொலிஸார், சாரதியை கைது செய்துள்ளனர். அவர் வனாத்தவில்லு – கிழக்கு, விஜேபுரவில் வசிக்கும் 47 வயதுடையவர்.

வனாத்தவில்லு காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

மருதங்கேணி பொலிசாரின் முன் மாதிரியான செயற்பாடு!

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அம்பன் கிராமத்தில் உள்ள ஓர் வறுமைக்கோட்டில் உள்ள குடும்பத்திற்கு மருதங்கேணி பொலிசார் 25000 ரூபாய் பெறுமதியான பொதி ஒன்றினை வழங்கிய விடயம் பேசும்பொருளாக மாறியுள்ளது.

குறித்த பொதியில் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதி வழங்கி வைக்கப்பட்டது.

இவ் நிகழ்வில் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன், எதிர் வரும் முதலாம் திகதி தாழையடி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் சிறுவர் தினத்தை மிகவும் சிறப்பாக நடத்தவும் எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் பெரும்போகம் ஆரம்பம்!

இரணைமடுக் குளத்தின் கீழான 2025ஆம் ஆண்டுக்கான காலபோக நெற்ச்செய்கை தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்கதிபர் தலைமையில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன கட்டிடத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் கண்டாவளை மற்றும் கரைச்சி பிரதேச செயலாளர்கள், பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர், கிளிநொச்சி கிழக்கு நீர்ப்பாசன பொறியியலாளர், மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர், மாவட்ட விவசாயத்திணைக்கள பிரதிப்பணிப்பாளர், கமநல காப்புறுதிச்சபை மாவட்ட உதவிப்பணிப்பாளர், விவசாயத்திணைக்களம் சார்ந்த உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

2025, ஆம் ஆண்டுக்கான பெரும்போக நெற்ச்செய்கை தற்பொழுது ஆரம்பிக்கப்படுவதற்கான முன் ஆயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் நடைபெற்றது.

இதன் போது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்கள் பல முக்கிய விடயங்களை தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில், தற்பொழுது இரணமடு குளத்தின் நீர்மட்டமானது 19/5 அடி நீர்மட்டமாக காணப்படுவதாகவும், 21,000 ஏக்கர் நிலப்பரப்புக்கு குறித்த நீர் பாசனம் செய்யவேண்டிய தேவை இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் நெற்செய்கை 01.10.2025 தொடக்கம் 10.11.2025 வறையான காலப்பகுதிகள் ஆரம்பிக்கப்படவேண்டும் எனவும், 15.11.2025 திகதிகளில் நீர்ப்பாசனம் செய்யப்படவேண்டும் எனவும் தெரிவித்தார். எனவே விவசாயிகள் உரிய காலத்தில் நெற்ச்செய்கையினை ஆரம்பிக்கப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

40 வருடமாக தெதுரு ஓயா பகுதியில் வசித்தவர்களுக்கு ஏற்பட்ட சோதனை!

0

ஜூட் சமந்த

சிலாபம்-தெதுரு ஓயா ஆற்றுக்கழிமுகத்திற்கு அருகில் கட்டப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அகற்ற கடலோர பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சி, அப்பகுதி மீனவர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து நிறுத்தப்பட்டது.

இந்த சம்பவம் இன்று 29 ஆம் தேதி காலை இடம்பெற்றது.

சிலாபம்-தெதுரு ஓயா ஆற்றுக்கழிமுகத்திற்கு அருகில் உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டுமானங்களை அகற்றுமாறு கடலோர பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஏற்கனவே அப்பகுதிவாசிகளுக்கு அறிவித்திருந்தனர்.

இருப்பினும், ஆற்றுக்கழிமுகத்திற்கு அருகில் கட்டப்பட்ட பல நிரந்தர கட்டிடங்களில் பலர் இன்னும் தங்கியிருப்பதை கடலோர பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளை அமைத்து அதில் தங்கி இருக்கின்ற மக்களை அகற்ற காவல்துறை மற்றும் காவல்துறை சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளின் உதவியுடன் அப்பகுதிக்குச் சென்ற கடலோர பாதுகாப்புத் துறை அதிகாரிகள், அப்பகுதி மீனவர்களின் கடும் எதிர்ப்பைச் சந்தித்தனர்.

அவர்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இடத்தில் வசித்து வருவதாகவும், மின்சாரம் மற்றும் தண்ணீரைப் பெற்று சிலாபம் நகராட்சி மன்றத்திற்கு மதிப்பீட்டு வரியைக் கூட செலுத்திய நிலையில், இந்த வழியில் அவர்களை வெளியேற்றுவது நியாயமற்றது என்றும் அவர்கள் கூறினர். இருப்பினும், கடலோர பாதுகாப்பு சட்டத்தின்படி அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அகற்றும் அதிகாரம் தங்களுக்கு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அப்போது, ​​இரு தரப்பினருக்கும் இடையே ஒரு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. ஒரு பெண் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார், ஆனால் காவல்துறையினரும் கிராம மக்களும் அதைத் தடுத்தனர். மின்சார வாரிய ஊழியர்கள் கட்டப்பட்ட ஒரு கட்டிடத்திற்கு வழங்கப்பட்ட மின்சாரத்தை துண்டிக்க முயன்றபோதும் மேலும் பதட்டமான சூழ்நிலை அதிகரித்தது.

ஆற்றுக்கழிமுகத்திற்கு அருகில் கட்டப்பட்டிருந்த இரண்டு பன்றி கொட்டகைகள் மற்றும் ஒரு நிரந்தர கட்டிடத்தை மட்டுமே கடலோர பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இறுதியாக அகற்ற முடிந்தது.

குடியிருப்பாளர்களுக்கும் கடலோர பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கும் இடையே அவசர பேச்சுவார்த்தை நடத்தி தற்போதைய நிலைமைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கல்முனை மண்ணிற்கு பெருமை சேர்த்த இளம் ஊடகவியலாளர்!

0

கல்முனை செய்தியாளர்

SDG அமைப்பின் இளைஞர் தூதுவர்களுக்கான உத்தியோகபூர்வ நியமனம் வழங்கும் நிகழ்வும் ஏனைய நிகழ்வுகளில் பங்குபற்றியவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவமும் நேற்று (28) கொழும்பு பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. 

இந் நிகழ்வில் Kalmunai Friendly Guiders பவுண்டேசனின் ஸ்தாபக தலைவரும், சிரேஷ்ட இளம் ஊடகவியலாளரும், சர்வதேச மனித உரிமை அமைப்பின் சர்வதேச இயக்குனருமான ஏ.எஸ்.எம்.அர்ஹம் அவர்களுக்கு ஆஸ்திரேலியா நாட்டுக்கான இளைஞர் தூதுவராக உத்தியோகபூர்வ நியமனம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதன்மூலம் தனது கல்முனை மண்ணிற்கு தொடர்ந்து பெருமை சேர்த்து மண்ணையும், பெற்றோர்களையும் கெளரவத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்.

மேலும் ஏனைய நிகழ்வுகளில் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

போதைக்கு அடிமையாகும் மேல் மாகாண பாடசாலை மாணவர்கள்!

0

இலங்கையில் பாடசாலை மாணவர்களில் மேல் மாகாணத்தில் உள்ள மாணவர்களே மிகவும் போதைப்பொருளுக்கு அடிமையாகும் போக்கைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. 

இதில் கொழும்பு மாவட்டம் முதன்மை பெறும் நிலையில், கிராண்ட்பாஸ், தொட்டலங்க, கொம்பனிவீதி, அங்குலான, வாழைத்தோட்டம், பாணந்துறை, தெஹிவளை, கல்கிஸ்ஸை, ஹிக்கடுவ உள்ளிட்ட பல நகரங்களில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள பிள்ளைகள் போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகுவதாக அந்த சபை மேலும் கூறியுள்ளது. 

அத்துடன் பாடசாலை மாணவர்கள் இடையே போதைப் பழக்கத்திற்கு அடிமையாக அதிக வாய்ப்புள்ள பகுதிகளாக கண்டி மாவட்டத்தை சேர்ந்த சில பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதேநேரம் கம்பஹா, குருநாகல், அனுராதபுரம், காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களும் ஆபத்தான மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை மேலும் தெரிவித்துள்ளது. 

நாண்பர்களின் அழுத்தமே பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு உள்ளாகும் முக்கிய காரணியாக கண்டறியப்பட்டுள்ளது. 

குறிப்பாக, பாடசாலைகளில் போதைப்பொருள் கொள்கைகள் செயல்படுத்தப்படாதது, பாடசாலையில் போதைப்பொருள் தடுப்புக் கொள்கையை அமுல்படுத்துவதில் அதிபர்கள் மற்றும் வலயக் கல்வி அலுவலகங்கள் ஆர்வம் காட்டாதது ஆகியவை பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாவதற்கான காரணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 

மேலும், உடைந்த குடும்பச் சூழலில் மன அழுத்த சூழ்நிலைகள், குழந்தைகளைப் புறக்கணித்தல், குடும்பம் மற்றும் வசிக்கும் பகுதியில் போதைப்பொருட்களின் பரவல், வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற சுற்றுச்சூழல் காரணிகளும் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாவதை தடுக்க, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை, சர்வதேச தரத்தின்படி உள்ளூர்மயமாக்கும் 6 பிரிவுகள் மூலம் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

அதன்படி, பாடசாலை அடிப்படையிலான போதைப்பொருள் தடுப்புக் கல்வி மற்றும் பயிற்சி, இளைஞர்களை அடிப்படையாகக் கொண்ட போதைப்பொருள் தடுப்புக் கல்வி மற்றும் பயிற்சி, குடும்ப அடிப்படையிலான போதைப்பொருள் தடுப்புக் கல்வி மற்றும் பயிற்சி, பணியிட அடிப்படையிலான போதைப்பொருள் தடுப்புக் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் அடிப்படையிலான போதைப்பொருள் கல்வி பயிற்சி அல்லது போதைப்பொருள் கொள்கை உருவாக்கம் மற்றும் ஊடக அடிப்படையிலான போதைப்பொருள் தடுப்புக் கல்வி மற்றும் பயிற்சி ஆகிய பிரிவுகள் மூலம் அவை செயல்படுத்தப்படுகின்றன. 

மேலும், போதைப்பொருள் தடுப்பு சோதனைகள், மதிப்பீட்டு சோதனைகள் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையான பிள்ளைகளை தொடர்ச்சியான படிப்புக்கு பரிந்துரைத்து, ஆலோசனை, சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் பின் பராமரிப்பு சேவைகள் மூலம் மீட்பதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களை தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை செயல்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. 

இதற்கிடையில், போதைப்பொருள் பழக்கத்திற்கு உள்ளான பாடசாலை மாணவர்களை மீட்பதற்கும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை செயற்பட்டு வரும் அதேநேரத்தில், இந்த நோக்கத்திற்காக, சோதனைக்கு பின்னர் மூன்று முறைகளில் செயற்படுவதற்காக பாடசாலை ஆலோசகர் ஆசிரியர் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. 

அதன்படி, குறைந்த அவதானமுள்ள மாணவர்களுக்கான ஆலோசனை மற்றும் தலையீடு முதல் முறையில் மேற்கொள்ளப்படுகிறது. 

இரண்டாவது முறையில் நடுத்தர ஆபத்துள்ள மாணவர்களை கண்டறிதல் மற்றும் அதிக ஆபத்துள்ள மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களை தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை அதிகாரிகளிடம் பரிந்துரைப்பதாகும். 

இறுதி கட்டமாக, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் இளைஞர் சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று அவர்கள் விரும்பியபடி பாடசாலை கல்வி அல்லது தொழிற்கல்விக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுவார்கள் என்றும் மேலும் கூறப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஓகஸ்ட் 31 வரை போதைப்பொருள் குற்றங்களுக்காக 206 பிள்ளைகளை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர். 

இவர்களில் 39 பிள்ளைகள் நன்னடத்தையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

பிள்ளைகளை போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாக்கியமை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பிள்ளைகள் போதைப்பொருட்களுக்கு ஆளாவதை தடுக்க இலங்கை பொலிஸார், பாடசாலை மற்றும் உரிய நிறுவனங்களில் 15,652 செயற்திட்டங்களை நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.