Monday, May 4, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 119

இடியட் என்று தேடினால் டிரம்ப் படம் வருவது ஏன்?

0

கூகுளில் இடியட் என ஆங்கிலத்தில் தேடினால் டிரம்பின் புகைப்படம் வந்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து கூகிள் சிஇஓ சுந்தர்பிச்சை விளக்கமளித்திருப்பது சிரிப்பலையை ஏற்படுத்தியிருக்கிறது.

கூகுளில் ஆங்கிலத்தில் இடியட் என்று தேடினால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புகைப்படம் கிடைப்பதாக எழுந்த சர்ச்சையின் அடிப்படையில் ஹவுஸ் நீதித்துறை குழு விசாரணையின் போது சுந்தர் பிச்சை அளித்துள்ள பதில் மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. கூகிள் படத் தேடலில் “முட்டாள்” என்ற வார்த்தைக்கான சிறந்த முடிவுகளில் டிரம்ப்பின் படம் இடம்பெற்றதைத் தொடர்ந்து வாஷிங்டன்னில் இது பேசுபொருளானது.

இது தொடர்பாக ஹவுஸ் விசாரணைக்குழு கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையிடம் விளக்கம் கேட்கப்பட்டது. “அது எப்படி நடக்கும்? அப்படி நிகழும் வகையில் தேடல் எவ்வாறு செயல்படுகிறது?” என்று ஜனநாயகக் கட்சி பிரதிநிதி ஜோ லோஃப்கிரென் சுந்தர் பிச்சையிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு சுந்தர் பிச்சை கூகிள் முடிவுகளை கைமுறையாகத் தேர்ந்தெடுக்கவோ அல்லது திருத்தவோ இல்லை அவை , வழிமுறை பயனர் நடத்தை மற்றும் பொருத்தத்தின் அடிப்படையில் தகவல்களை செயலாக்குகிறது.

“நாங்கள் முக்கிய வார்த்தையை எடுத்து எங்கள் குறியீட்டில் உள்ள பில்லியன் கணக்கான பக்கங்களுடன் ஒப்பிடுகிறோம். பின்னர் பொருத்தம், புத்துணர்ச்சி, புகழ், மற்றவர்கள் அதை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் போன்றவற்றின் அடிப்படையில் அவற்றை தரவரிசைப்படுத்துகிறோம்,” என்று சுந்தர் பிச்சை பதிலளித்தார்.

லோஃப்கிரென் நகைச்சுவையாகத் தொடர்ந்து, “அப்படியானால், பயனர்களுக்கு நாங்கள் என்ன காட்டப் போகிறோம் என்பதைக் கண்டுபிடிப்பது திரைக்குப் பின்னால் அமர்ந்திருக்கும் ஒரு சிறிய மனிதர் அல்லவா?” எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு சுந்தர் பிச்சை, “கடந்த ஆண்டு 3 டிரில்லியனுக்கும் அதிகமான தேடல்களைக் கண்டோம், எனவே எந்தவொரு தேடல் முடிவிலும் நாங்கள் கைமுறையாக தலையிடவில்லை.” கூகிள் பழமைவாதிகளுக்கு எதிராக ஒரு சார்புடையது என்று டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாகக் கூறியதை அடுத்து இந்த வீடியோ வைரலாக்கபட்டு வருகிறது.

சரி, கூகிள் எவ்வாறு நாம் தேடும் விஷயங்களுக்குத் தேவையான வெளியீட்டை உருவாக்குகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? தளத்தின் பின்னால் அமர்ந்திருக்கும் ஒருவர் நமது அனைத்து வினவல்களையும் கண்காணிக்கிறாரா, அல்லது அது வெறும் நவீன மென்பொருள் தொழில்நுட்பமா?

தேடல் முடிவுகளின் அரசியலில் மூழ்குவதற்கு முன், கூகிள் திரைக்குப் பின்னால் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். கூகிளின் தேடுபொறி பில்லியன் கணக்கான வலைத்தளங்களை ஸ்கேன் செய்து தகவல்களை ஒரு பெரிய குறியீட்டில் சேமிக்க வலை கிராலர்கள் எனப்படும் மென்பொருளைப் பயன்படுத்துகிறது. நீங்கள் ஒரு கேள்வியை உள்ளிடும்போது, ​​நூற்றுக்கணக்கான காரணிகளின் அடிப்படையில் மிகவும் பொருத்தமான முடிவுகளைக் காண்பிக்க கூகிளின் தரவரிசை வழிமுறை இந்த குறியீட்டை ஆராய்ந்து பார்த்து நமக்கு அதில் சிறந்தவற்றை விடையாகக் கொடுக்கிறது. இந்த முறை கூகுள் பாம்பிங் என்று கூறப்படுகிறது.

சரி கூகுள் பாம்பிங் என்றால் என்ன என்று பார்க்கும்போது அதிக எண்ணிக்கையிலான பயனர்கள் ஒரு குறிப்பிட்ட சொற்றொடரை ஒரு குறிப்பிட்ட பக்கம் அல்லது படத்துடன் வேண்டுமென்றே இணைக்கும்போது, ​​பொதுவாக இணைப்பு அல்லது மீண்டும் மீண்டும் தேடல்கள் மூலம் இது நிகழ்கிறது. இந்த வழிமுறை இந்தக் கூட்டு வடிவத்தைக் கண்டறிந்து முடிவுகளில் பிரதிபலிக்கிறது, கூகிள் ஒப்புக்கொள்வதால் அல்ல, ஆனால் இணையம் அப்படிச் சொல்வது போல் தெரிகிறது. டிரம்ப் “முட்டாள்” தேடல் முடிவு காட்டுவது கூகிள் சார்பு அல்ல, ஆனால் இணையம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது.

ஆனாலும், இடியட் என்று தேடினால் டிரம்பின் புகைப்படம் கிடைக்கும் விவகாரம் மீண்டும் வைரலானைத் தொடர்ந்து நெட்டிசன்கள் மத்தியில் இது சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஊடகவியலாளர்களின் திறன்களை வளர்க்க புதிய திட்டம்!

0

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்களை ஆதரிக்க புதிய தொழில்நுட்பங்கள்

புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப ஊடகவியலாளர்களுக்கான பல திறன் மேம்பாட்டுத் திட்டங்களை, அரசாங்க தகவல் திணைக்களத்தினால் அடுத்த ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படும் என்று திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு உட்பட நவீன தொழில்நுட்பத்தால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களுக்கு ஏற்ப ஊடகவியலாளர்களின் திறன்களை வளர்க்க வேண்டியிருப்பதால், அதற்கான பயிற்சி நெறிகள் மற்றும் செயலமர்வுகள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

நேற்று (27) கண்டி மாவட்ட செயலகத்தில், அரசாங்க தகவல் திணைக்களத்தால் மாவட்ட ஊடகவியலாளர்களுக்காக நடத்தப்பட்ட அசிதிசி பியவர கண்டி மாவட்ட ஊடக செயலமர்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஜனநாயகம் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் என்றும், அதற்கு இணையாக, ஊடகவியலாளர்களுக்கான டிஜிட்டல் கருவிகளுக்கான அணுகல், டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்துவது தொடர்பான அறிவு மற்றும் அந்த தொழில்நுட்பத்தை அணுகுவதற்கான தடைகளை நீக்குதல் ஆகியவை அடுத்த ஆண்டில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஊடகங்களில் நுழையும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், தற்போது செயல்படும் ஊடகவியலாளர்களின் திறன்களை வளர்ப்பதன் மூலம் ஊடகத் துறையில் உள்ள குறைபாடுகளை சமாளிக்க முடியும் என்றும் அவர் கூறினார். ஊடகவியலாளர்களின் திறன்களை வளர்ப்பதற்காக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தால் பல பாடநெறிகளை நடத்துவது குறித்து ஏற்கனவே கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், இந்த பாடநெறிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் புதிய தலைவராக எம்.பி.எம். பைரூஸ்!

0

ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் 30வது ஆண்டு நிறைவு மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டம் இன்று (27) இலங்கை தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.

இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் நீண்டகால தலைவருமான கலாபூஷணம் அல்ஹாஜ் என்.எம். அமீன் ஓய்வுபெறுகின்ற நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் இன்றைய வருடாந்திர பொதுக் கூட்டத்தில் புதிய தலைவர் மற்றும் செயலாளர் உற்பட புதிய உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

அந்த வகையில் போரத்தின் புதிய தலைவராக எம்.பி.எம். பைரூஸும் அவர்களும் புதிய செயலாளராக ஷம்ஸ் பாஹிமும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இந் நிகழ்வில் ஊடகத் துறைக்கு நீண்ட காலமாக விலைமதிப்பற்ற சேவையைச் செய்த பத்திரிகையாளர்கள் பாராட்டப்பட்டதுடன், திடீர் பேரழிவுகள் ஏற்பட்டால் பத்திரிகையாளர்களுக்கு உதவுவதற்காக நிதியும் ஒன்றும் நிறுவப்பட்டது.

இலங்கைக்கான சவுதி அரேபியாவின் தூதர் அதிமேதகு காலித் ஹமூத் நாசர் அல்கஹ்தானி, இலங்கைக்கான பாலஸ்தீன தூதர் அதிமேதகு இஹாப் கலீல், அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷா பண்டார, முஸ்லிம் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.எம்.அமீன், பொதுச் செயலாளர் என்.ஏ.எம்.சாதிக் ஷிஹான், பொருளாளர் கியாஸ் ஏ புஹாரி, தேசிய அமைப்பாளர் இர்ஷாத் ஏ காதர் மற்றும் முஸ்லிம் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பத்திரிகையாளர்கள் குழுவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சூர்யகுமாருக்கு 30% அபராதம் விதித்த ஐசிசி!

0

ஐசிசியின் நடத்தை விதிகளை மீறியதாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு போட்டிக்கட்டணத்தில் 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2025 ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இரண்டுமுறை மோதின, இதில் இரண்டு போட்டியிலும் இரண்டு அணி வீரர்களுக்கும் இடையே வார்த்தை மோதல்களும், சர்ச்சைக்குரிய செயல்பாடுகளும் இருந்தன.

லீக் போட்டியில் பாகிஸ்தான் கேப்டனுடன் கைக்குலுக்காத இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், செய்தியாளர் சந்திப்பில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு துணையாக இருக்கிறோம், அதற்கான பதிலடி தற்போது கொடுக்கப்பட்டது என்று பேசினார். மேலும் இந்திய வீரர்கள் யாரும் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்கவில்லை.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் பவுலர் ஹாரிஸ் ராஃப், ரசிகர்களின் ’கோலி’ என்ற கோஷத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய சைகளை வெளிப்படுத்தினார். இது இணையத்தில் வைரலாகி பேசுபொருளாக மாறியது.. தொடர்ந்து மற்றொரு பாகிஸ்தான் வீரர் ஃபர்ஹான் செய்த துப்பாக்கி சுடுதல் செலப்ரேஷனும் விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் வீரர்களின் இந்த நடவடிக்கைக்காக ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அரசியல் ரீதியான கருத்தை தெரிவித்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியில் புகாரளித்திருந்தது. அதன் நடவடிக்கையாக நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் விசாரணையில் ஈடுபட்டார். சூர்யகுமார் யாதவ் விசாரணையின் போது தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. அதேநேரத்தில் ஹாரிஸ் ராஃபின் செயல்கள் குற்றமென நடுவரால் உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில் ஐசிசியின் நடத்தை விதிகளை மீறியதாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் இருவருக்கும் போட்டிக்கட்டணத்தில் 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சூர்யகுமார் யாதவ் குற்றத்தை ஒப்புக்கொள்ளாத நிலையில், இந்திய அணி இந்த குற்றத்தின்மீது மேல்முறையீடு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இன்னும் இந்தியாவின் மேல்முறையீடு விசாரிக்கப்படாத நிலையில், இறுதிப்போட்டி முடிந்தபிறகு இதற்கான முடிவு என்னவென்று தெரியவரும் என சொல்லப்படுகிறது.

தேவாவுக்கு ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் கௌரவம்!

0

இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவாவுக்கு ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

பிரபல இசையமைப்பாளர் தேவா அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு மேற்கொண்ட பயணத்தின்போது, அவருக்கு ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் (Australian Parliament) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மரியாதை வழங்கப்பட்டுள்ளது.

திரையுலக இசையில் தேனிசைத்தென்றல் தேவாவிற்கு என்று தனி இடம் இருக்கிறது. 36 ஆண்டுகால இசை வாழ்க்கையில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் 400 படங்களுக்கும் மேல் இசையமைத்த பெருமைக்கு சொந்தக்காரர் தேவா. ஒரு படத்தில் மெலடி, குத்துபாட்டு, வெஸ்டர்ன் பாட்டு, இசைக்கருவிகளுக்கு முக்கியத்துவம் தரும் பாட்டு முதலியவற்றோடு, கானா பாடல்களையும் கொடுக்கும் ஒரே இசையமைப்பாளர் தேவா மட்டுமே. இசையமைப்பதை தாண்டி பல்வேறு ஹிட் பாடல்களையும் பாடியுள்ளதோடு, மாஸ்ஸான பின்னணி இசை என ரசிகர்களின் மனதில் தேவா தனியிடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு சென்ற தேனிசைத்தென்றல் தேவா, சபாநாயகர் நாற்காலியில் அமரவைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். தேவா அவர்கள் பாராளுமன்றத்துக்கு வரவேற்கப்பட்டு, அங்குள்ள சபாநாயகர் இருக்கையில் அமர அழைக்கப்பட்டார். மேலும், பாராளுமன்றத்தின் முக்கியச் சின்னமான செங்கோலும் அவருக்கு அளித்து மரியாதை செலுத்தப்பட்டது. இது ஒரு பெரிய அரசியல் கௌரவமாகக் கருதப்படுகிறது.

இந்த அரிய மரியாதை குறித்து தேவா அவர்கள் நெகிழ்ச்சியுடன் தனது நன்றியைத் தெரிவித்தார். ஆஸ்திரேலிய அரசு, தமிழ்க் கலை மற்றும் கலாச்சார மையம் சக இசைக் கலைஞர்கள் மற்றும் தனது அன்பான ரசிகர்கள் அனைவருக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியை வெளிப்படுத்தினார்.தேனிசைத் தென்றல் தேவாவுக்குக் கிடைத்த இந்த கௌரவம், தமிழ் இசைத்துறைக்குப் பெருமை சேர்த்துள்ளது.

மன்னாரில் பொதுமக்களை தாக்கிய பொலிஸார்!

0

மன்னாரில் காற்றாலை மின் திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில், மக்களின் விருப்பத்திற்கு மாறாக காற்றாலைகளை தீவுக்குள் கொண்டு செல்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை அமைதியான முறையில் தடுக்க முயன்ற மக்கள் மீது பொலிஸார் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டனர். 

இதில் பலர் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.மக்களின் விருப்பத்திற்கு எதிராக எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என ஜனாதிபதி தெரிவித்திருந்த நிலையில், கடந்த மாதம் ஒரு குழுவை அமைத்து மக்களின் கருத்துக்களை உள்வாங்கி நல்ல தீர்வு வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.

ஆனால், இதற்கு மாறாக, ஜனாதிபதி மக்களின் எதிர்ப்பையும் கருத்துக்களையும் மதிக்காமல், காற்றாலைத் திட்டங்களைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு நேற்று முன்தினம் பணிப்புரை விடுத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று (26) இரவு 10 மணியளவில், முதற்கட்டமாக காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை மக்கள் அமைதியாகத் தடுத்து நிறுத்த முயன்றபோதிலும், அவர்களின் எதிர்ப்பை மீறி உதிரிபாகங்கள் கொண்டு செல்லப்பட்டன.

தொடர்ந்து, நள்ளிரவு 12 மணியளவில் இரண்டாவது காற்றாலை உதிரிபாகங்கள் கொண்டு செல்லப்பட்டபோது, பொதுமக்களும் அருட்தந்தையர்களும் வீதிகளில் இறங்கி தடுக்க முயன்றனர்.

அப்போது, பொலிஸார் பெண்கள், அருட்தந்தையர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் கொடூரமாகத் தாக்குதல் நடத்தி, கூட்டத்தைக் கலைக்க முயன்றனர்.

அதேவேளை, போராட்டக்காரர்களைத் தடுக்க விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் காற்றாலை உதிரிபாகங்களைக் தீவுக்குள் கொண்டு சென்றனர். 

தாக்குதலில் காயமடைந்தவர்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சிறுவர் தினத்தையொட்டி குருதிக்கொடை முகாம்!

சிறுவர் தினத்தையொட்டி போரின் போது படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் நினைவாக “எழுகை” அமையத்தின் ஒழுங்குபடுத்தலில் மாபெரும் குருதிக்கொடை முகாம் கிளிநொச்சி பசுமை பூங்காவனத்தில் நடைபெற்றது.

இதன்போது பலர் தாமாகவே முன்வந்து மிகுந்த ஆர்வத்துடன் குருதி கொடையினை இன்றைய தினம் 27.09.2025 வழங்கினர்.

“சிந்திய குருதியை ஒருபோதும் மறக்கிலோம் அன்று சிந்தியதை இன்றும் கொடை செய்கிறோம்” என்ற அடிப்படையில் இன்றைய இரத்ததான முகம் இடம்பெற்றமை விஷேட அம்சமாகும்.

இன்று பல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்!

0

2025 செப்டம்பர் 27ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும்.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ௐரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமத்திய மாகாணத்திலும் மாத்தளை, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் மத்திய, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்கு 07 மிட்சுபிஷி கெப் வண்டிகள்!

0

சுகாதார சேவைகளுக்கு பயன்படுத்துவற்காக 07 இரட்டை இருக்கை வாகனங்கள் (Double cab) வழங்கப்பட்டன.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவி மற்றும் சுகாதார அமைப்புகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்கு 07 இரட்டை இருக்கை வாகனங்களை (Double cab) வழங்கியுள்ளது. இந்த வாகனங்கள் ஒவ்வொன்றின் பெறுமதி 22 மில்லியன் ஆகும். இந்த வாகனங்கள் நேற்று (25) சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் வளாகத்தில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் சுகாதார மருத்துவ அதிகாரிகள் அலுவலகங்களுக்கு ஒப்படைக்கப்பட்டன.

அதன்படி, கண்டி மாவட்டத்தில் உள்ள வரல்லகம மற்றும் கங்காவத கோரளை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்கள், அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஹொரொவ்பதான சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம், பதுளை மாவட்டத்தில் உள்ள மஹியங்கனை மற்றும் பண்டாரவளை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்கள், இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள நிவிடிகல சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் மற்றும் கொழும்பு திட்ட மேலாண்மை பிரிவு ஆகியவற்றுக்கு இந்த வாகனங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கும் நிகழ்வு இங்கு நடைபெற்றது.

மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் சபரகமுவ மாகாணங்களில் சுகாதார சேவைகளுக்காக 45 வாகனங்களை கொள்வனவு செய்ய சுகாதார அமைப்புகள் மேம்பாட்டுத் திட்டம் நடவடிக்கை எடுத்திருந்தது, மேலும் 2022 ஜனவரியில், இந்த இரட்டை இருக்கை வாகனங்களில் 38 கொள்வனவு செய்யப்பட்டு அந்த வாகனங்களை பயன்படுத்தி நோய் தடுப்பு சுகாதார சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படையில் மீதமுள்ள 07 வாகனங்களை சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர், நிபுணர் டாக்டர் அனில் ஜாசிங்க, மேலதிக செயலாளர்கள் சாமிக கமகே, சுனில் கலகம, ஜனக கித்சிறி குணவர்தன, துணை இயக்குநர் ஜெனரல் தினிபிரியா ஹேரத், இயக்குநர் (போக்குவரத்து) நிலங்க தில்ஹான் சோமபால, ஆசிய வளர்ச்சி வங்கியின் இலங்கையில் சுகாதார அமைப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தின் இயக்குநர் டாக்டர் அனில் திசாநாயக்க மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

40 ஆண்டில் 5 முறை இந்தியா-பாகிஸ்தான் ஃபைனல்!

0

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இருநாடுகளுக்கு இடையேயான அரசியல் பதற்றம் காரணமாக இருதரப்பு தொடர்களில் விளையாடுவதை தவிர்த்துவருகின்றன.

என்றாலும், இரண்டு அணிகளுக்கான மோதல் எப்போது நடந்தாலும் அதுஒரு திருவிழா போலவே உலக கிரிக்கெட்டில் அங்கம் வகிக்கிறது. வரலாற்றில் அதற்கான சான்றுகள் அதிகம் இருக்கின்றன, எடுத்துக்காட்டாக 2007 டி20 உலகக்கோப்பை ஃபைனல், 2022 டி20 உலகக்கோப்பை லீக் போட்டி என மைதானத்தின் பார்வையாளர்கள் தொடங்கி, மொபைல், டெலிவிசன் பார்வையாளர்கள் என அனைத்திலும் சாதனை படைத்து வரலாறாக மாறியது இந்தியா-பாகிஸ்தான் போட்டி.

இந்நிலையில் 2025 ஆசியக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா-பாகிஸ்தான் அணிகள் தகுதிபெற்றுள்ளன. வரும் 28-ம் தேதி ஞாயிற்று கிழமையன்று இவ்விரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கும் நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையேயான மோதலானது சர்ச்சைகளுக்கு நடுவே அதிக எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா நடத்திய ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கை என்பதை எல்லாம் தாண்டி, 2025 ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் வீரர்களின் மோதலனாது ஒருபடி உச்சம் தொட்டுள்ளது.

பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்க மறுத்த இந்திய வீரர்கள், பதிலுக்கு பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவை விமர்சிக்கும் வகையில் செய்த துப்பாக்கி சுடுதல் செலப்ரேசன், அதற்கு பதிலளிக்கும் விதமாக இந்திய வீரர்களின் பதிவுகள் என நடப்பு 2025 ஆசியக்கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் சர்ச்சைகளில் தலைப்பு செய்திகளாக மாறியுள்ளன.

இந்தசூழலில் 2025 ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை சந்தித்தால் ’நாங்கள் கோப்பை வெல்லுவோம்’ என பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி கூறியுள்ளார்.

தற்போது இரண்டு அணிகளுக்கும் இடையே இறுதிப்போட்டியானது உறுதியாகிவிட்ட நிலையில், இதற்கு முன்பு எத்தனை முறை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஃபைனலில் மோதியுள்ளன, அதில் எந்த அணி அதிகமுறை கோப்பைகள் வென்றுள்ளது என்பதை பார்க்கலாம்.

1984 முதல் நடைபெற்றுவரும் ஆசியக்கோப்பை வரலாற்றில் இதுவரை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோதிக்கொண்டதே இல்லை. ஆனால் 1986 ஆஸ்ட்ரல்-ஆசிய கோப்பை மோதலின் இறுதிப்போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. அதில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது.

அதேபோல 1994 ஆஸ்ட்ரல்-ஆசிய கோப்பை இறுதிப்போட்டியிலும் 39 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது பாகிஸ்தான். கடைசியாக இரு அணிகளும் மோதிக்கொண்ட 2017 சாம்பியன்ஸ் டிராபி பைனலில் பாகிஸ்தான் வென்று கோப்பையை தட்டிச்சென்றது.

இந்திய அணியை பொறுத்தவரை 1985 உலக கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றியை பதிவுசெய்தது. அதுபோக 2007 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பாகிஸ்தானிடமிருந்து கோப்பையை தட்டிப்பறித்தது இந்தியா.

1985 முதலான 40 வருட கிரிக்கெட் வரலாற்றில் 5 முறை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோதியுள்ள நிலையில், அதில் பாகிஸ்தான் அணி 3-2 என முன்னிலை வகிக்கிறது. இந்தசூழலில் 2025 ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்து 3-3 என சமன்செய்யும் என்ற எதிர்ப்பார்ப்பில் இந்திய ரசிகர்கள் இருந்துவருகின்றனர்.

2025 ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் வரும் ஞாயிற்று கிழமை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.