Monday, May 4, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 120

வடக்கின் விளையாட்டுத் துறையில் மறுமலர்ச்சி!

கிளிநொச்சி மாவட்டத்தின் விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி திறன் விருத்தி மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் விளையாட்டு துறை அமைச்சர். சுனில்குமாரகம மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன்ண விளையாட்டு கழகங்களில் தலைவர்கள் மற்றும் பயிற்விப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விளையாட்டு கழகங்கள் முகம்கொடுத்துவரும் பல்வேறு குறைபாடுகளை இன்றைய தினம் விளையாட்டு துறை அமைச்சரிடம் விளையாட்டு கழகங்கள் நேரடியாக தெரிவித்தன.

கலந்துரையாடலின் போது விளையாட்டு கழகங்களின் தலைவர்கள், செயலாளர் மற்றும் விளையாட்டு துறை பயிற்றுவிப்பாளர்கள் தாம் விளையாட்டுத்துறையில் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இதற்கு பதில் அளித்த விளையாட்டுதுறை அமைச்சர், கழகங்களில் குறைபாடுகள் நிவர்த்தி செய்யக் கூடிய வகையில் இருப்பதாகவும், அதற்கான நிதியும் தம்மிடம் கையிருப்பில் உள்ளதாகவும் உங்கள் விளையாட்டு கழகங்களுக்கு தேவைப்படுகின்ற தேவைப்பாடுகள் தொடர்பாக அறிக்கைகளை தருமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் கிளிநொச்சி மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் கட்டடத் தொகுதியில் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை விரைவாக தரும் பொழுது தம்மால் நிதியை பெற்றுத் தர முடியும் எனவும் இதன்போது தெரிவித்தார்.

இலங்கையின் தேசிய அபிவிருத்தியில் சீனா!

இலங்கையின் தேசிய அபிவிருத்தியில் சீனாவின் மூலோபாயப் பங்களிப்பு

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி.

இலங்கையின் நீண்ட வரலாற்றிலும் அண்மைய தேசிய அபிவிருத்தியிலும் சீனா ஒரு முதன்மையான மூலோபாயப் பங்காளியாகத் திகழ்கிறது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்திருக்கும் இரு நாடுகளின் வரலாற்று மற்றும் கலாசாரத் தொடர்புகள், நவீன காலத்தில் பொருளாதார முதலீடுகள் மற்றும் பாரிய உட்கட்டமைப்புத் திட்டங்கள் மூலம் ஆழமடைந்துள்ளன.

குறிப்பாக, சீனாவின் ‘ஒரு பட்டை ஒரு சாலை முன்னெடுப்பு’ (Belt and Road Initiative – BRI) இலங்கையின் புவியியல் அமைப்பைச் சாதகமாகப் பயன்படுத்தி, பல பாரிய அபிவிருத்தித் திட்டங்களை இங்கு முன்னெடுக்க வழிவகுத்துள்ளது.

  1. உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்கள்

சீனாவின் பங்களிப்பு இலங்கையின் பொருளாதார மற்றும் வர்த்தக முகப்பையே மாற்றியமைக்கும் வகையில் அமைந்துள்ளன. இத்திட்டங்கள் இலங்கையின் அபிவிருத்திக்கு மிக முக்கியமானவை.

அ. கொழும்புத்துறைமுக நகரம் (Colombo Port City)
கொழும்புத் துறைமுக நகரம், இலங்கையின் அபிவிருத்தியில் முன்னெப்போதுமில்லாத வகையில் பாரிய முதலீட்டையும், பொருளாதார மாற்றத்தையும் கொண்டு வரக்கூடிய ஒரு திட்டமாகும்.

திட்டத்தின் நோக்கம்:
கொழும்பின் மத்திய வணிக மாவட்டத்தையொட்டி 269 ஹெக்டேர் கடற்பரப்பை நிலமாக மீட்கும் (Land Reclamation) இந்த மெகா திட்டம், சர்வதேச நிதிச் சேவைகள், சுற்றுலா மற்றும் தகவல் தொழிநுட்ப மையங்களைக்கொண்ட சிறப்புப்பொருளாதார மண்டலமாக (Special Economic Zone) உருவாக்கப்படுகிறது.

சீனப் பங்களிப்பு:
இத்திட்டத்தில் ஆரம்ப முதலீடு சுமார் $1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். நிலத்தை மீட்கும் மற்றும் கட்டுமானப்பணிகளில் பிரதானமாகச் சீன அரசு நிறுவனமான சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பெனி (CHEC) ஈடுபட்டுள்ளது.

ஒப்பந்தச்சாரம்:
முதலீட்டுக்கு ஈடாக, மீட்கப்பட்ட நிலப்பரப்பின் ஒரு பகுதி CHEC நிறுவனத்திற்கு 99 வருட காலக்குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் தாக்கம்:
இது பூர்த்தி செய்யப்படும் போது, துபாய் அல்லது சிங்கப்பூர் போன்ற பிராந்திய நிதி மையமாகச் செயற்பட்டு, கணிசமானளவு அந்நிய முதலீட்டையும், சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆ. ஹம்பாந்தோட்டை துறைமுகம் (Hambantota Port)

இலங்கையின் தென்பகுதியில் அமைந்துள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகம், சர்வதேச கடல்வழி வர்த்தகப்பாதையில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திட்டமாகும்.

திட்டச்சவால்:
இத்துறைமுகம் இலங்கையின் சொந்தக் கடனுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், அதன் கட்டுமானத்திற்கான பாரிய சீன வங்கிக் கடனைத் திருப்பிச்செலுத்த முடியாததால் இலங்கை அரசு நெருக்கடிக்குள்ளானது.

சீனப்பங்களிப்பு:
கடன் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, 2017ம் ஆண்டு, துறைமுகத்தின் 70% பங்கு சீன அரசு நிறுவனமான சைனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் (China Merchants Port Holdings) நிறுவனத்திற்கு 99 வருட காலக் குத்தகை ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டது.

பொருளாதார விளைவு:
துறைமுக நிர்வாகத்தை சீன நிறுவனம் ஏற்றதன் மூலம், அது வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதிலும், சரக்கு கையாளும் திறனை அதிகரிப்பதிலும் முக்கியத்துவம் செலுத்தி வருகிறது.

இ. ஏனைய உள்கட்டமைப்புத்திட்டங்கள்
மேற்கூறிய பிரதான திட்டங்கள் மட்டுமன்றி, சீனா இலங்கையின் பல முக்கிய தேசிய உள்கட்டமைப்புத் திட்டங்களிலும் பங்களித்துள்ளது.

  • நெடுஞ்சாலைகள்:
    தென் அதிவேக நெடுஞ்சாலை (Southern Expressway – E01) மற்றும் ஏனைய முக்கிய வீதி அபிவிருத்திகள்.
  • துறைமுக முனையங்கள்:
    கொழும்புத் துறைமுகத்தின் தெற்கு முனையம் (South Container Terminal) கட்டுமானப் பணிகள்.
  • கட்டிடங்கள்:
    கொழும்பிலுள்ள தாமரைக்கோபுரம் (Lotus Tower) போன்ற முக்கிய அடையாளச்சின்னங்கள்.
  1. அரசியல், வர்த்தகம் மற்றும் தூதரகப்பணிகள்
    பொருளாதாரத் திட்டங்களுக்கப்பால், சீனா பல ஆண்டுகளாக இலங்கையுடன் நெருக்கமான அரசியல் மற்றும் வர்த்தக உறவைப் பேணி வருகிறது.

அ. அரசியல் உறவுகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு

  • வர்த்தகப் பங்காளி:
    சீனா, இலங்கையின் பிரதான வர்த்தகக் கூட்டாளிகளில் ஒன்றாகும். இலங்கையின் தேயிலை, ஆடை போன்றவற்றை சீனா இறக்குமதி செய்கிறது.
  • கடன் உதவி:
    அண்மைக்கால பொருளாதார நெருக்கடியின் போது, இலங்கைக்குக் கடன் மறுசீரமைப்பு வழங்குவதில் சீனா ஒரு முக்கியப் பங்களிப்பாளராகச் செயல்பட்டு வருகிறது.

ஆ. சீனத்தூதரகத்தின் செயற்பாடுகள்
இலங்கையிலுள்ள சீனத்தூதரகம், இரு நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர மற்றும் மக்கள் மட்ட உறவுகளைப் பலப்படுத்துவதில் முக்கியப் பணிகளை ஆற்றுகிறது.

  • கொள்கை ஒருங்கிணைப்பு:
    இரு நாட்டு அரசாங்கங்களுக்கிடையேயான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் மற்றும் மூலோபாயக் கூட்டணிகளைத் தொடர்ந்து ஒருங்கிணைத்தல்.
  • மனிதாபிமான உதவி:
    அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவம் மற்றும் பிற மனிதாபிமான உதவிகளை விரைவாக வழங்குவதில் முக்கியப் பங்காற்றுதல்.
  • கலாசாரப்பரிமாற்றம்:
    புலமைப்பரிசில்கள் (Scholarships) வழங்குதல் மற்றும் சீனக்கலாசார நிகழ்ச்சிகள், கலை விழாக்களின் மூலம் இரு நாட்டு மக்களிடையே நல்லிணக்கத்தைப் பேணுதல்.
  • குடியினர் பாதுகாப்பு:
    இலங்கையில் பணி புரியும், வாழும் சீனக்குடிமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல்.

இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களில் சீனாவின் பங்களிப்பு மிக முக்கியமானதும், அதன் உட்கட்டமைப்பு மற்றும் வர்த்தகத் திறனைப் பலப்படுத்துவதுமான ஒரு அங்கமாகவுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்புத் துறைமுக நகரம் போன்ற பாரிய முதலீடுகள், இலங்கையைப் பிராந்தியத்தின் கடல்சார் மற்றும் நிதி மையமாக மாற்றும் ஆற்றல் கொண்டவை.

இந்த உறவு எதிர்காலத்திலும் நிலைத்தன்மையுடன் தொடர வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா நாட்டின் 76வது founding day நேற்று (25) கெழும்பு City of Dream ஹோட்டலில் இடம்பெற்றது.

(சீன மக்கள் குடியரசின் 76வது ஆண்டு நிறைவு முன்னிட்டு பிரசுரமாகும் கட்டுரை)

கல்பிட்டியில் கலைகட்ட உள்ள “STREET FOOD FESTIVAL”

0

இன்று கல்பிட்டியில் “STREET FOOD FESTIVAL” நிகழ்வு

கல்பிட்டி சுற்றுலா தொடர்பான வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் அங்கமாக இன்றைய தினம் (26) மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை “STREET FOOD FESTIVAL” நிகழ்வு கல்பிட்டி நகரில் இடம்பெறவுள்ளது.

பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாகக் காணப்படும் கல்பிட்டிப் பிரதேசத்தில் இத்துறையை மேலும் வளர்ச்சி பெற வைத்து, இப் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் வடமேல் மாகாண சபை, தொழில்துறை சேவைகள் பணியகம், கல்பிட்டி பிரதேச சபை மற்றும் கல்பிட்டி பிரதேச செயலகம் ஆகியவற்றின் அனுசரணையில் இந் நிகழ்வு இடம்பெற உள்ளது.

கல்பிட்டி சுற்றுலா தொடர்பான வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம் (KALPITIYA FOOD FESTIVAL) எனும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வு இடம்பெறுகின்றது.

இதில் பல வகையான உணவுப் பண்டங்களைக் கொண்ட விற்பனைக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அரபாத் பஹர்தீன்)

கிளிநொச்சியில் ஆரம்பமான நிதியறிவுக் கண்காட்சி!

இலங்கை மத்திய வங்கியின் அனுசரணையில், அறிவு மாதத்தை முன்னிட்டு இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நிதியறிவுக்கண்காட்சி இன்று காலை 8.30மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய முகாமையாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கலந்து கொண்டிருந்தார். குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன், மத்திய வங்கியின் பிராந்திய அபிவிருத்திக்கான பணிப்பாளர் சதுர ஆரியதாச உள்ளிட்டோர் கலந்து கொண்டு குறித்த கண்காட்சியை ஆரம்பித்து வைத்தனர்.

மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் நிதி கல்வியறிவை மேம்படுத்தும் இலங்கை மத்திய வங்கியின் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக, மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய அலுவலகம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.

இக் கண்காட்சியில் உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர் (MSMEs) காட்சிக் கூடங்கள், கொழும்பு பங்கு பரிவர்த்தனை (CSE) முதலீட்டு வழிகாட்டுதல்கள், ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிய (ETF) சேவைகள், கொடுகடன் தகவல் பணியக சேவைகள் (CRIB) மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டுதல்கள் என்பன இடம்பெறகின்றன.

மேலும், பார்வையாளர்களுக்கு இலங்கை நாணயங்களின் வரலாறு, அரிய மற்றும் நினைவு நாணயங்கள். நாணய அமைப்பின் வளர்ச்சி போன்றவற்றை உள்ளடக்கிய நாணய அரும்பொருட்காட்சியகமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வானது தனிநபர் நிதியியல் முகாமைத்துவம், வங்கிச் சேவைகள், டிஜிட்டல் வங்கி சேவைகள், நிதியியல் மோசடிகள் மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டுதல்கள் போன்றவை குறித்து பொதுமக்கள் பயனுள்ள தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் தேவையான நிதிக் கல்வியறிவு மற்றும் அவற்றின் பிரயோகம் தொடர்பான விடயங்களை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறித்த கண்காட்சி இன்று பிற்பகல் 5.00மணி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1,000 புதிய வாகனங்களை இறக்குமதி செய்ய யோசனை!

0

1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் 2449/60 ஆம் இலக்க வர்த்தமானியில் 15.08.2025 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் அரசாங்க நிதி பற்றிய குழுவில் கருத்திற்கொள்ளப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தலைமையில் இக்குழுவின் கூட்டம் அண்மையில் (23) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போது இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

அதற்கமைய, சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை நீடிப்பதற்கு இந்த ஒழுங்குவிதிகளின் ஊடாக பாராளுமன்றத்தின் அனுமதி எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் 2024 மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒழுங்குவிதிகளின் கீழ் 1,000 புதிய வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வாகனங்களை சுற்றுலா அமைச்சினால் வழங்கப்படும் விசேட அனுமதிபத்திரத்தின் கீழ் மாத்திரமே இறக்குமதி செய்ய முடியும் என்பதுடன், 2025 ஜூன் 30 வரை செல்லுபடியாகும் இந்த அனுமதி சுற்றுலா மேம்பாட்டிற்கு ஆதரவளிக்கும் போக்குவரத்து வசதிகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சரின் முன்மொழிவைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2025 இல் இந்த வசதியை மேலும் மூன்று மாதங்களுக்கு, அதாவது 2025 செப்டம்பர் 30 வரை நீடிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்தது.

அதற்கமைய, 2025 ஆகஸ்ட் 15 ஆம் திகதியிலான 2449/60 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட புதிய ஒழுங்குவிதிகள், 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் அனுமதிக்காக தற்பொழுது பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மானிய விலையில் போக்குவரத்துத் திறனை அதிகரிக்குமாறு தொழில்துறையினரின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு வாகன இறக்குமதி குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், தற்போதைய கொள்கை கட்டமைப்பின் கீழ் அத்தகைய சலுகைகளை வழங்க முடியாது என அதிகாரிகள் விளக்கினர். மேலும், ஒரு துறையினருக்கு நிவாரணம் அளிப்பது ஏனைய தொழில்துறைகளிலும் சமநிலை மற்றும் நியாயம் பற்றிய கரிசனைகளை எழுப்பும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும், சுற்றுலா அபிவிருத்தி வரியை (Tourism Development Levy – TDL) அறவிடுவதில் காணப்படும் சவால்களையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்கள் மற்றும் முறையான நிறுவனங்கள் இந்த வரிக்கு பங்களித்தாலும், பல சுற்றுலா ஓய்வு விடுதிகள் மற்றும் எயார்பிஎன்பி (Airbnb) இயக்குநர்கள் இந்த அமைப்பின் ஒரு பகுதியாக இல்லை என்பதால் அவர்கள் பணம் செலுத்துவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டது. இது தொழில்துறையில் சமநிலையற்ற போட்டிச் சூழலை உருவாக்கியுள்ளதுடன், சுற்றுலா அபிவிருத்திக்குக் காணப்படும் நிதியையும் குறைத்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டது.

அதற்கமைய, விரிவான பரிசீலனையைத் தொடர்ந்து 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் 2449/60 ஆம் இலக்க வர்த்தமானியில் 15.08.2025 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியது.

காட்டு யானை வேலி அமைப்பதில் ஏற்பட்ட சிக்கல்!

கிளி. இராமநாதபுரம் கிராமத்தில் காட்டு யானை வேலி அமைக்கும் திட்டத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து ஆராய்வு!

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் இராமநாதபுரம் கிராமத்தில், காட்டு யானைகளின் தொல்லையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் யானை வேலிகளை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு, அதன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

குறித்த பகுதிகளில், சுமார் 05 கிலோமீற்றர் நீளமான யானை வேலிகளை அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், வனஜீவராசிகள் திணைக்களத்துக்கும் மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட காணி பிரச்சினை காரணமாக இதன் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் குறித்த பகுதிக்கு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பி.அஜிதா, கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன், வனஜீவராசிகள் திணைக்கள கிளிநொச்சி மாவட்ட பொறுப்பதிகாரி உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், கிராம சேவகர், காணிப்பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினர் நேற்று (25.09.2025) குறித்த பகுதிக்கு நேரடியாக சென்று நிலைமைகளை ஆராய்ந்தனர்.

காணி அனுமதிப் பத்திரம் உள்ள மக்களின் காணிகளை நில அளவைத் திணைக்களமூடாக அடையாளப்படுத்திய பின்னர் வனவளத் திணைக்களத்துடன் கலந்துரையாடி காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது என தீர்மானிக்கப்பட்டது. அதுவரை காணிகளை துப்புரவு செய்யும் பணிகளில் ஈடுபடவேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

மேலும், மக்களின் உறுதிக் காணிகளில் உள்வாங்காத பிரதேசம் ஊடாக யானை வேலிகளை அமைப்பது என தீர்மானிக்கப்பட்டு, குறித்த பகுதி மக்களுக்கு காண்பிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. மேலும் இதை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

மேற்படி கிராமத்தில் காட்டு யானைகளால் தமது விவசாயப் பயிர்கள் அழிக்கப்பட்டு வரும் அதேநேரம், உயிராபத்துகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதாகவும், பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறுதிப்போட்டியில் பாக்கிஸ்தான்-இந்தியா பலப்பரீட்சை!

0

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர்-4 சுற்றில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதிப் பெற்றுள்ளது. 

டுபாயில் இன்று இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை பெற்றது. 

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Mohammad Haris 31 ஓட்டங்களையும், Mohammad Nawaz 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் Taskin Ahmed 03 விக்கெட்டுக்களையும், Mahedi Hasan, Rishad Hossain ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

இதற்கமைய 136 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களை பெற்ற நிலையில் தோல்வியை சந்தித்தது. 

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Shamim Hossain அதிகட்சமாக 30 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். 

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் Shaheen Shah Afridi மற்றும் Haris Rauf ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர். 

இதன்படி பாகிஸ்தான் அணி 11 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது. 

இதற்கமைய 2025 ஆம் ஆண்டு ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணியும் தகுதிப் பெற்றுள்ளது. 

இதற்கு முன்னதாக இந்திய அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய ஊடக கொள்கை தொடர்பான கலந்துரையாடல் புத்தளத்தில்!

0

இலங்கை சுதந்திர ஊடக அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கையின் தேசிய ஊடக கொள்கை தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று காலை 8.30 மணியளவில் புத்தளம், கருவலகஸ்வெவ தப்போவ லேக் ரிசோட்டில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்டத்தின் ஊடகவியலாளர்களுக்கான குறித்த விஷேட கலந்துரையாடல், இலங்கை சுதந்திர ஊடக அமைப்பின் அமைப்பாளர் திரு. லசந்த டி சில்வா தலைமையில் இடம்பெற்றது.

நாட்டில் இதுவரை ஸ்திரமான ஊடக கொள்கை ஒன்று இல்லாத நிலையில், அரசாங்கத்தினால் தற்போது அதற்கான வரைவு இடம்பெற்று வருவதால், அது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

இலங்கையில் இதுவரை பல துறைகளுக்கான கொள்கைகள் வகுக்கப்பட்டு, செயற்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஊடகத்திற்கான தேசிய ஊடக கொள்கை ஒன்றின் அவசியம் தொடர்பில் விவாதிக்கப்பட்டது.

தற்போதைய புதிய அரசாங்கத்தினால் தேசிய ஊடக கொள்கை ஒன்று வரையப்பட்டு, அமைச்சரவை அங்கீககாரத்திற்காக காத்திருக்கின்ற நிலையில், மாவட்ட மட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடி, குறித்த தேசிய ஊடக கொள்கையில் உள்ளீர்க்கப்படவேண்டிய விடயங்கள் குறித்தும் இலங்கை சுதந்திர ஊடக அமைப்பினால் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இன்றைய தினம் புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்ட குறித்த ஊடக அமைப்பு, அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்துகொண்டது.

மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள், சவால்கள் மற்றும் பொருளாதார ரீதியான தடைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை சோஷலிச குடியரசின் தேசிய ஊடக கொள்கை ஒன்றின் மூலம் மாத்திரமே ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும் என அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மேலும் தேசிய ஊடக கொள்கையின் தேவை, குறிக்கோள், கொள்கைப்பிரகடனம் மற்றும் மூலோபாயங்கள் குறித்து மிக ஆழமாக பரிசீலிக்கப்பட்டதுடன், குறித்த தேசிய ஊடக கொள்கையில் மேலதிகமாக சேர்த்துக்கொள்ளப்படவேண்டிய மற்றும் நீக்கப்படவேண்டிய விடயங்கள் பற்றியும் பரிசீலிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பல முக்கிய விடயங்கள் தேசிய ஊடக கொள்கை வரைவை மேற்கொண்டுள்ள குழுவிற்கு பரிந்துரைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில், இலங்கை சுதந்திர ஊடக அமைப்பின் நிர்வாகிகள், புத்தளம் மாவட்ட செயலக அதிகாரிகள், மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் அமைப்பினர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

காலநிலைக்கு அமைவான விவசாய சமூக பண்ணை!

காலநிலைக்கு அமைவான விவசாய சமூக பண்ணை அமையவுள்ள பிரமந்தனாறு பகுதிக்கு மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன் உள்ளிட்ட குழுவினர் இன்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்டனர்.

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில், கிராமிய அபிவிருத்தி பணியகத்தின் மேற்பார்வையில் சுமார் 75.63 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வரும் காலநிலைக்கு சீரமைவான விவசாய செய்கைக்காக ஒதுக்கப்பட்ட 10 ஏக்கர் பகுதியில் ஆரம்பகட்ட பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இப்பகுதியை பகுதியை குறித்த குழுவினர் பார்வையிட்டனர்.

மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், தமித் சந்திரசேகர (UNDP திட்ட பணிப்பாளர்), மாவட்ட மேலதிக அரசாங் அகதிபர் நளாயினி இன்பராஜ், மாவட்ட காணி மேலதிக அரசாங்க அதிபர் அஜிதா பிரதீபன், கண்டாவளை பிரதேச செயலாளர் தங்கவேலாயுதம் பிருந்தாகரன், கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் கே.கருணாநிதி உள்ளிட்ட திணைக்கள உத்தியோகத்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

குறித்த விவசாய சமூக பண்ணை மூலம் குறித்த பகுதியின் விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு, வருடம் முழுவதும் பயிர்ச்செய்கை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் குறித்த பகுதியின் குடும்பங்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும் எனவும், இது சுழற்சி முறையில் அனைவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்தார்.

பொலீசாரைக் கண்டு ஓடியவர் தவறி விழுந்து உயிரிழப்பு!

குற்றச் செயலுடன் தொடர்புடைய நபர் ஒருவரை கைதுசெய்ய பொலிசார் அவரின் வீடு சென்றபோது, பொலிசாரை கண்டு ஓடிய குடும்பஸ்தர் அருகிலுள்ள வீட்டின் கிணற்றினுள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி, இராமநாதபுரம் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்ட விரோத கசிசிப்பு உற்பத்தியில் ஈடுபடுவதாக நேற்றிவு 24.09.2025 சுமார் 6.30 மணி அளவில் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய 6ம் யூனிட் இராமநாதபுரம் ஆலடி பகுதிக்கு விரைந்த பொலிஸார், குறித்த சந்தேக நபரை கைதுசெய்ய முயன்றபோது தப்பிச்செல்ல முற்பட்ட சந்தேக நபர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.