Sunday, August 3, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 120

மாவீரர் தின காணொளிகள் பொய்யானவையே!

0

வடக்கில் மாவீரர் தின வைபவங்கள் நடைபெற்றதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் செய்யப்பட்டு வரும் காணொளிகளானது கடந்த காலங்களில் வௌிநாடுகளில் நடைபெற்ற வைபவங்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இன்று (04) பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வௌியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் வடக்கில் புலிகளின் கொண்டாட்டங்களுக்கு அனுமதியளித்ததாக சிலர் நம்ப வைக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

விசாரணையில் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சி இது போன்ற செயல்களில் ஈடுபட்டது உறுதியானது என்றும், இது தொடர்பாக பலரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தேங்காய் பிரச்சினை தீர்வுக்கு இவ்வளவு காலமா?

0

அடுத்த ஆறு மாதங்களில் தேங்காய் விலை அதிகரிப்பு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சமன் தேவகே குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக சந்தையில் தேங்காய் விலை வேகமாக அதிகரித்து வருகின்றது.

பல பகுதிகளில் தேங்காய் ஒன்று 180 முதல் 200 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

சில இடங்களில் தேங்காய் ஒன்று 220 ரூபாய் வரை அதிக விலைக்கு விற்கப்படுகின்றது.

தென்னை ஏற்றுமதி மற்றும் பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக சுமார் 100 கோடி தேங்காய் அறுவடையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

54 சிரேஷ்ட அதிகாரிகளுக்கு இடமாற்றமா?

0

உடன் அமுலாகும் வகையில் பிரதி காவல்துறைமா அதிபர்கள், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள், காவல்துறை அத்தியட்சகர்கள் உள்ளிட்ட 54 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 

தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பணிப்பாளராகச் செயற்பட்ட மகளிர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஐ.எஸ் முதுமால அந்த திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

அத்துடன் 5 பிரதி காவல்துறை மா அதிபர்களுக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கில் திடீரென மாறிய வானிலை!

0

வட மாகாணத்தில் இன்று (02) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள புதிய வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழை இல்லாத வானிலை காணப்படும்.

வடக்கு, வடமத்திய, வடமேல், மேற்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-45 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கிலிருந்து தென்மேற்கு திசையில் வீசுவதுடன் காற்றின் வேகமானது  மணித்தியாலத்திற்கு 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடுவதுடன், புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகமானது  மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது  மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்பு அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் திருகோணமலை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும்.

புத்தளத்திலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் கடல் அலையின் உயரம் சுமார் 2.5 – 3.0 மீற்றர் வரை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையுடன் அந்த கடற்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுவதுடன், பின்னர் அந்த கடல் பகுதிகள் சிறிது நேரத்திற்கு மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

உலக எயிட்ஸ் தினத்தன்று திடுக்கிடும் தகவல்!

0

உலக எய்ட்ஸ் தினம் இன்றாகும்.

முழு உலகத்துடன் ஒப்பிடும் போது, ​​இலங்கை எயிட்ஸ் நோய் பரவல் குறைவாக உள்ள நாடாகக் கருதப்படுகிறது.

எவ்வாறாயினும், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு இலங்கையில் எயிட்ஸ் பரவல் அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த தேசிய பாலியல் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் இயக்குனர், சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் விந்தியா குமாரிபெலி, கடந்த 2020-21ம் ஆண்டை விட 2022-23ம் ஆண்டிலேயே எய்ட்ஸ் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

“2020-2021 ஆண்டுகளில், 200-300 எய்ட்ஸ் நோயார்கள் பதிவாகியிருந்தனர்.

ஆனால் 2022-2023ல் நிலைமை இரட்டிப்பாகியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில், ஆண்களிடையே புதிய எய்ட்ஸ் நோயாளர்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன.

அந்த நோயாளிகளில் 15% பேர் 15-24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆகும்.

இதேவேளை, உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடைபவனி இன்று காலிமுகத்திடல் மைதானத்தில் இருந்து ஆரம்பமாகி சுகாதார அமைச்சு வரை சென்றுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, எயிட்ஸ் நோயை நாட்டிலிருந்து இல்லாதொழிக்கும் கருணையுள்ள சமூகத்தை கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என குறிப்பிட்டார்.

நாட்டின் பல பகுதிகளில் தரமற்ற காற்று பதிவு!

0

நாடளாவிய ரீதியில் 12 நகரங்கள் மற்றும் பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்று இரவு 9 மணியளவில், சில பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.

அதற்கமைய இரத்தினபுரி, கிளிநொச்சி, கம்பஹா, திருகோணமலை, அம்பலாங்கொடை, தம்புள்ளை, காலி, நீர்கொழும்பு, புத்தளம், மஹியங்கனை, குருநாகல் மற்றும் கலாவெவ ஆகிய பிரதேசங்களிலேயே காற்றின் தரம் இவ்வாறு ஆரோக்கிமற்ற நிலையில் காணப்பட்டுள்ளது.

காற்றின் தரக் குறியீட்டின்படி, 0-50 நல்லது, மற்றும் 51-100 மிதமானது. அத்துடன், 101-150 இடையே சிறிது சாதகமற்றது என்பதோடு 151-200 என்பது மிகவும் சாதகமற்ற நிலைமையாகும்.

இதேவேளை 201-300 க்கு இடையே காற்றின் தரம் காணப்படுமாயின் மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பதோடு, அந்த எண்ணிக்கை 301-500ஆக காணப்படுமாயின் அது ஆபத்தானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் காற்றின் ஆரோக்கியமற்ற நிலை காரணமாக, உணர்திறன் உடையவர்கள் சுவாசிப்பதில் சிரமங்களை அனுபவித்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுனாமி தொடர்பில் வெளியான எச்சரிக்கை!

0

சுனாமி அனர்த்தம் தொடர்பில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மற்றும் ஆரையம்பதி பகுதியில் கடல்நீர் உள்வாங்கப்பட்டதாகவும் கிணற்றுநீர் வற்றியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் சுனாமி ஏற்படலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டு அப்பகுதியிலிருந்து வெளியேறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை தொடர்புகொண்டு கேட்டபோது அவர் இதனை மறுத்ததோடு மக்கள் இயல்பாக அப்பகுதியில் வசிக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன், இது முற்றிலும் போலியான தகவல் என மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.எஸ்.சியாத் தெரிவித்துள்ளார்.

மேலும், சுனாமி அனர்த்தம் ஒன்று உருவாகும் பட்சத்தில் மக்களுக்கு அது தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஊடாக உடனடியாக அறிவிக்கப்படும் என்பதனை மிகவும் பொறுப்புடன் அறியத்தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிந்தவூரில் துக்க தினம் அனுஷ்டிப்பு!

0

நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியில் கல்வி கற்று விடுமுறைக்கு சென்ற சமயம் வெள்ள அனர்த்தத்தில் சிக்கி ஷஹீதான மாணவர்களை நினைவுகூர்ந்து நிந்தவூரில் வெள்ளைக் கொடி கட்டி பறக்கவிடப்பட்டது.

நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியில் ஷரீஆ மற்றும் ஹிப்ழ் பிரிவில் முழு நேரமாக கல்வி கற்று வந்த அனைத்து மத்ரசா மாணவர்களுக்கும், கால நிலை சீற்றத்தின் காரணமாக மத்ரசாவினால் 26-11-2024ம் திகதியன்று மாலை விடுமுறை வழங்கப்பட்டது.

அந்த வகையில் சம்மாந்துறையினைச் சேர்ந்த மாணவர்கள் தமது சொந்தவூரான சம்மாந்துறை பிரதேசத்திற்கு செல்லும் வழியில் காரைதீவு, மாவடிப்பள்ளி பாலத்தடியில் வெள்ள அனர்த்தத்தின் தாக்கம் அதிகமாக இருந்தமையால் குறித்த சோக சம்பவம் இடம்பெற்றது.

வபாத்தான இளம் மாணவர்களின் சம்பவமானது, சம்மாந்துறையினை மட்டுமல்லாது, முழு நாட்டையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இம்மாணவர்களின் தவிர்க்க முடியாத பிரிவின் காரணமாக தமது துக்கத்தினை வெளிப்படுத்தும் நோக்குடன் சமூக நலன் விரும்பிகளால் நிந்தவூர் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் முன்றல் மற்றும் நிந்தவூர் பிரதான வீதியில் வெள்ளைக் கொடி கட்டி பறக்கவிடப்பட்டுள்ளது.

அதே போன்று வெள்ளிக் கிழமை நிந்தவூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் கீழ் இயங்கக்கூடிய அனைத்து ஜும்ஆ பள்ளிவாசல்களிலும் இடம்பெறக்கூடிய குத்பாக்களில் ஷஹீதுகளுடைய அந்தஸ்து தொடர்பாக குத்பா உரை நிகழ்த்தப்பட்டதுடன், ஜும்ஆ தொழுகையினைத் தொடர்ந்து வபாத்தான மாணவர்களுக்காக காயிபான ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டுள்ளதோடு, விஷேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.

வல்ல அல்லாஹ் வபாத்தான மாணவர்களுக்கு உயர்ந்த ஜன்னத்துல் பிர்தெளஸினை வழங்குவதோடு, இம் மாணவர்களின் பிரிவினால் கவலையுறும் அவர்களுடைய குடும்பத்திற்கு ஆறுதல் வழங்க வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.

பட உதவி- எம்.ஸி.முபீத்

குடும்பத்தின் உயிரையே காப்பாற்றிய நாய்

0

களுத்துறை, தொடங்கொட பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கமகொட பகுதியில் நாயினால் குடும்பம் ஒன்று காப்பாற்றப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் பெய்த கடும் மழையுடன் கூடிய காற்றுடன் காற்று காரணமாக புளியமரத்தின் கிளையொன்று வீடொன்றின் மீது வீழ்ந்துள்ளது.இதன் காரணமாக வீடு முற்றாக இடிந்துள்ளதுடன், வீட்டில் இருந்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

வீட்டில் இருந்த வளர்ப்பு நாய் காரணமாக வீட்டில் உள்ளவர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.அதிகாலை 2 மணியளவில் வீட்டு உரிமையாளரின் படுக்கையறையின் படுக்கைக்கு அருகில் வந்த நாய் நுளம்பு வலையை கடித்து கிழித்ததுடன், வீட்டு உரிமையாளரின் ஆடை கடித்து இழுத்துள்ளது.வீட்டின் ஏனையவர்கள் உறங்கும் அறைக்கும், உரிமையாளரை இழுத்து சென்ற நாய், அவர்களையும் வெளியே அழைத்து சென்றுள்ளது.

குடும்பத்தினர் வெளியே வந்து சில நிமிடங்களின் மரத்தின் கிளை வீட்டின் கூரையின் மீது விழுந்துள்ளது. வீட்டின் சமையலறையின் சுவர்கள் கட்டிலின் மீது விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நாயின் செயற்பாட்டினால் அனைவரும் விழிந்துக் கொண்டமையால், உயிராபத்தில் இருந்து தப்பியதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்தியரேலிய பாராளுமன்றம் சென்ற ரோஹித் சர்மா, நடந்தது என்ன?

0

இந்திய- அவுஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் தொடர் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனது மனைவிக்குப் பிரசவத்தில் இரண்டாவது குழந்தை பிறந்ததால் முதல் டெஸ்டில் ரோகித் சர்மா விளையாடவில்லை.

எதிர்வரும் டிசம்பர் 6ஆம் திகதி ஆரம்பமாகும் இரண்டாம் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தற்போது அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.

இந்நிலையில், அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு ரோகித் ஷர்மாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

நேற்றையதினம் (28) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரோகித் சர்மா,

இந்திய- அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையே விளையாட்டிலும் சரி, வர்த்தகத்திலும் சரி நீண்ட காலம் நட்புறவு இருந்து வருகிறது.

பல ஆண்டுகளாக இங்கு வந்து கிரிக்கெட்டை உற்சாகமாக விளையாடி வருகின்றோம்.

அவுஸ்திரேலிய மண்ணில் கிரிக்கெட் ஆடுவது எப்போதும் சவாலானது. முந்தைய தொடர்களிலும், கடந்த வாரத்திலும் இங்கு வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறோம். அதே உத்வேகத்துடன் அடுத்து வரும் போட்டிகளையும் எதிர்கொள்ள ஆர்வமாக உள்ளோம்.

அதே சமயம் அவுஸ்திரேலியாவின் கலாச்சாரத்தை மதிக்கிறோம். வரும் வாரங்களில் அவுஸ்திரேலிய மக்களையும், இந்திய இரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.