Thursday, March 19, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 123

சூடுபிடிக்கும் முல்லைத்தீவு முத்தையன் கட்டு சம்பவம்!

0

வடக்கில் உள்ள இராணுவத்தை அகற்றவேண்டும் என்ற கோரிக்கையை கணக்கில் எடுக்காமல் இருப்பதன் விளைவுதான் முல்லைத்தீவு முத்தையன் கட்டு சம்பவம் என மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

முல்லைத்தீவில் உள்ள முத்தையன்கட்டுப் பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றிற்கு தகரம் தருவதாக அழைக்கப்பட்ட நான்கு இளைஞர்கள் நேற்று இராணுவத்தால் தாக்குதலுக்கு உள்ளானதாக செய்திகள் வந்தன. பின்னர் அதில் நால்வர் தப்பியதாகவும் ஒருவரைக் காணவில்லை எனவும் ஊர் மக்கள் தெரிவித்தனர்.

அதில் காணாமலாகியிருந்த ஒருவர் இன்று சடலமாக மீட்க்கப்பட்டிருக்கின்றார் என ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்.

இந்த கொலையை இராணுவம் செய்துள்ளதாக மக்கள் தெரிவிப்பதாகவும், தமிழ் மக்களை ஆண்டாண்டு காலமாக கொன்ற இராணுவத்தின் கொலை வெறி இன்னும் அடங்குவதாகவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கில் இனப்படுகொலை இராணுவத்தை அகற்று என்ற எம் கோரிக்கையை கணக்கில் எடுக்காமல் இருப்பதன் விளைவு தான் இவை. இது ஒரு பாரதூரமான விடயம், அந்த இடத்து இளைஞர்களுக்கான பாதுகாப்பை உடனடியாக அரசு உறுத்திப்படுத்துவதுடன் கொலைகாரர் எனக் கூறப்படும் இராணுவத்தை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை அகற்றப்படுகின்ற இராணுவ முகாமின் தகரங்களை பெற்றுக்கொள்ளுவதற்காக மரணித்த இளைஞரும் ஏனைய மூன்று இளைஞர்களும் முகாமிற்குள் சென்றார்கள் என்றும் அங்கு கைகலப்பு இடம்பெற்றது என்றும் சொல்லப்படுகிறது.

வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவன் பலி!

0

இரத்தினபுரி – பலாங்கொடை, தெஹிகஸ்தலாவ, மஹவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து இன்று சனிக்கிழமை (09) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்தின் போது வீட்டிலிருந்த 7 வயதுடைய சிறுவன் ஒருவன் தீக்காயங்களுடன் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

பொத்துவில் மண்ணில் பேரெழுச்சிப் பெருவிழா!

0

“பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் வாசித், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.எம் முஷாரப் ஆகியோரை வாழ்த்தி பொத்துவில் மக்கள் ஒற்றுமைப்பட்டு கொண்டாடிய “பேரெழுச்சிப் பெருவிழா நிகழ்வு” நேற்று (08) பொத்துவில் பிரதேசத்தில் நடைபெற்றது.

எழில் மிகு கடற்கரையில் ஜலால்தீன் சதுக்கத்தில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில், பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியால் நிரம்பிய இந்நிகழ்வு, பொத்துவில் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக பதியப்படும்.

இந்நிகழ்வில், கட்சியின் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

கட்சியின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர், கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, நகர சபை, பிரதேச சபை தவிசாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்துகொண்டனர்.

2023 இந்திய தேர்தலில் பாரிய மோசடி?

0

தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் மீனா ராகுல் காந்திக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் முனணி தலைவருமான ராகுல் காந்தி, கர்நாடகாவின் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டதாகவும், 12,000 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

மகாதேவபுரா தொகுதியில் தேர்தல் மோசடி நடந்துள்ளது. “1,00,250 வாக்குகள் திருடப்பட்டன, 12,000 போலி வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இது தேர்தல் ஆணையத்தின் தோல்வியையும், பாஜகவின் மோசடியையும் காட்டுகிறது,” என்று தெரிவித்தார் ராகுல் காந்தி. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதிலும், தேர்தல் முறைகேடுகள் நடந்ததாகவும், இது இந்திய ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என்றும் அவர் விமர்சித்தார்.

டெல்லியில் கடந்த 07.08.2025 அன்று பத்திரிகையாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, பெங்களூர் சென்ட்ரல் லோக்சபா தொகுதிக்குட்பட்ட மகாதேவபுரா சட்டசபை தொகுதியில் 1 லட்சத்து 250 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளது. பாஜகவுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது. வாக்குகள் திருடப்பட்டு, போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் தான் பாஜக வேட்பாளரிடம் காங்கிரஸ் வேட்பாளர் தோற்றார் என்று பரபரப்பான தகவலை கூறினார்.

மகாதேவபுரா சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் மேற்கொண்ட ஆய்வில் சரியாக 1 லட்சத்து 250 போலி ஓட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதில், 11,965 வாக்காளர்களின் பெயர்கள் இரண்டு முறை பதிவாகி உள்ளன. 40,009 வாக்காளர்களின் முகவரிகள் போலி. 10,452 வாக்காளர்கள் ஒரு குறிப்பிட்ட முகவரியில் மொத்தமாக பதிவு செய்துள்ளனர். அதோடு, 4,132 பொருத்தமில்லாத புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இப்படியாக மகாதேவபுராவில் 1,00250 ஓட்டுகள் திருடப்பட்டதை நாங்கள் கண்டறிந்தோம். இங்கு புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6 தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. போலி முகவரியில், ஒரே முகவரியில் கூடுதல் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளன” என்று குற்றம்சாட்டி உள்ளார்.

இதையடுத்து, கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் மீனா ராகுல் காந்திக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், ராகுல் காந்தி தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களுடன் நாளை (ஆகஸ்ட் 8, 2025) அன்று தன்னை சந்திக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில வாக்காளர் பட்டியலில் முறைகேடாக சேர்க்கப்பட்ட மற்றும் விலக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை கையெழுத்திட்ட உறுதிமொழிப் பத்திரத்துடன் இணைத்து பகிருமாறு கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரி ராகுல் காந்தியை கேட்டுக்கொண்டுள்ளார்.

கிளிநொச்சி பகுதியில் 12 வயது சிறுமி துஷ்பிரயோகம்!

கிளிநொச்சி, தருமபுர பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 12 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிராயோகம் செய்த குற்றச்சாட்டில் 46 வயதுடைய நபர் ஒருவர் போலீசாரினல் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிராம சேவையாளர் ஒருவரினால் போலீசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய, தருமபுர பொலிசாரிடம் பாதிக்கப்பட்ட குறித்த 12 வயது சிறுமி தன்னை 46 வயதுடைய குறித்த நபர் துஷ்பிரயோகம் செய்ததாக வழங்கிய தகவலுக்கமைவாக சந்தேக நபர் தர்மபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிளிநொச்சி நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 20.08.2025 வரை சந்தேக நபரை தடுப்பு காவலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தருமபுர போலீசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புத்/எருக்கலம்பிட்டியில் இலவச நுளம்பு வலைகள் விநியோகம்!

புத்தளம் எருக்கலம்பிட்டி பிரைம் டெவலப்பர்ஸ் அமைப்பின் அனுசரணையில் இயங்கிவரும், எருக்கலம்பிட்டி பிரைம் டெவலப்பர்ஸ் மாதர் சங்கத்தினால் இன்றைய தினம் புத்தளம் எருக்கலம்பிட்டி பகுதியில் இலவச நுளம்பு வலைகள் வழங்கிவைக்கப்பட்டது.

புத்தளம் எருக்கலம்பிட்டி பகுதியில் வசிக்கும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கான இலவச நுளம்பு வலைகளே இவ்வாறு இன்று வழங்கிவைக்கப்பட்டது.

புத்தளம் எருக்கலம்பிட்டி பகுதியில் வசிக்கும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்காக சுமார் 150 நுளம்பு வலைகள் வழங்கப்பட உள்ளத்துடன், அதன் முதல்கட்டமாக புத்தளம் எருக்கலம்பிட்டி மந்தக்காடு பகுதியில் வசிக்கும் சுமார் 30 குடும்பங்களுக்கு எருக்கலம்பிட்டி பிரைம் டெவலப்பர்ஸ் மாதர் சங்கத்தினால் இன்றைய தினம் இலவச நுளம்பு வலைகள் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும் வருமானம் குறைந்த புத்தளம் எருக்கலம்பிட்டியில் வசிக்கும் மந்தக்காடு பகுதி தவிர்ந்த ஏனைய குடும்பங்களுக்கான நுளம்பு வலைகள் எதிர்வரும் தினங்களில் வழங்கப்பட உள்ளதாக புத்தளம் எருக்கலம்பிட்டி பிரைம் டெவலப்பர்ஸ் அமைப்பின் தலைவர் M.J.M. சிராஜ் எமது ஊடகத்துக்கு தெரிவித்தார்.

உலக சாதனை படைத்த ஆறு வயது இலங்கைச் சிறுவன்!

0

கொழும்பு 13 புனித பெனடிக்ட் கல்லூரியின் தரம் 2 இல் கல்வி கற்கும் தினேஷ் ஹெதாவ் என்ற மாணவன் 50 மீற்றர் (Freestyle Swimming) நீச்சல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். 

நேற்றைய தினம் கல்லூரி நீச்சல் தடாகத்தில் நடைபெற்ற போட்டியில் 49 வினாடிகளில் 50 மீற்றர் தூரத்தைக் கடந்து, அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். 

இதன் மூலம், ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த சிறுவன் ஒருவரின், 1 நிமிடம் 6 வினாடிகள் என்ற முன்னைய சாதனையை அவர் முறியடித்துள்ளார். 

இத்தோடு, இந்த சாதனையானது “சோழன் உலக சாதனைப் புத்தகம் (CBWR)” மூலம் உறுதிப்படுத்தப்பட்ட உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீதரன் எம்.பி கொண்டுவந்துள்ள ஒத்திவைப்பு பிரேரணை!

தமிழ் மக்களின் நீடித்து நிலைத்து போயுள்ள அரசியல் தீர்வு உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து பேசுவதற்காக பாராளுமன்றில் எதிர்வரும் 22ம் திகதி ஒத்தி வைப்பு பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

அன்றைய தினம் முழுநாள் விவாதமாக பாராளுமன்றத்தில் இடம்பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் குறித்த விடயத்தை தெரிவித்தார்.

கடந்த மாதம் 23ம் திகதி பாராளுமன்ற குழுத்தலைவர் என்ற ரீதியில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கும், சபாநாயகருக்கும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் நில அபகரிப்பு, மனித புதைகுழிகள் தொடர்பான விடயங்கள் பேசுவதற்கான கோரிக்கையை முன்வைத்திருந்ததாகவும், அதற்கான சந்தர்ப்பம் எதிர்வரும் ஆகஸ்ட் 22ம் திகதி வெள்ளிக்கிழமை கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த ஒரு நாள் விவாதத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட மனித புதைகுழிகளுக்கான சர்வதேச விசாரணை, காணிகள் அபகரிப்பு உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தவுள்ளோம் என தெரிவித்த பாராளுமன்ற உரிப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், நேற்றைய தினம் மன்னார் காற்றாலை தொடர்பான அமைச்சர் தொடர்பிலான சந்திப்பு மற்றும் அரசியல் கைதிகள் விடுவிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியிடம் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை கேட்டு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

0

2025 ஆம் ஆண்டு க.பொ.த. (உயர்தர) பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

இதன்படி, ஓகஸ்ட் 12 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

2024 ஆம் ஆண்டு மீள் மதிப்பீட்டு பெறுபேறுகளின் அடிப்படையில் 2025 உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், மற்றும் 2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு குறிப்பிட்ட காலத்தில் விண்ணப்பிக்க முடியாதவர்களுக்கு இந்த நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சலுகை காலம் எந்தவொரு காரணத்தைக் கொண்டும் மேலும் நீட்டிக்கப்படாது என்று கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொதித்தெழுந்த கிளிநொச்சி வர்த்தகர்கள்!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் ஆர். டி டி. எல்லைக்கு உட்பட்ட வர்த்தக நிலையங்களின் முட்பகுதியை பிரதேச சபையினர் நேற்றைய தினம் 07.08.2025 அகற்ற முற்பட்ட போது பெரும் அமளித்துமளி ஏற்பட்டது.

எந்தவித அறிவித்தலும் வர்த்தகர்களுக்கு வழங்கப்படாத நிலையில் நேற்றைய தினம் திடீரென வர்த்தக நிலையங்களின் முற்பகுதியை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக அப்பகுதியில் வர்த்தகர்களால் அமைதியின்மை ஏற்பட்டதாகவும், முறையாக கிளிநொச்சி வர்த்தக சங்கத்தினருக்கு இப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களின் முற்பகுதியை அகற்றப்படுவது குறித்து தகவல் வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும், அப்படி வழங்கப்பட்டிருந்தால் வர்த்தகர்கள் ஆகிய நாங்கள் அதற்கு அடிபணிவோம் எனவும் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பிரதேச சபையின் செயலாளரிடம் விணவியபோது;

அவ்வீதியானது ஆர் டி டி எல்லைக்கு உட்பட்ட பகுதியாக காணப்படுவதன் காரணமாகவும், இப்பகுதியில் உள்ள நடைபாதையில் உள்ள வியாபாரிகளை முற்று முழுதாக அகற்றப்பட வேண்டும் என பிரதேச சபையின் ஊடாக வர்த்தக சங்கத்தினருக்கு கடிதம் மூலம் தகவல் வழங்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

மேலும் ஒலிபெருக்கி ஊடாகவும் இரண்டு தடவைகள் நடைபாதை வியாபார இடங்களை அகற்றுமாறு ஒலிபெருக்கி மூலம் தகவல் வழங்கப்பட்டிருந்த போதிலும், அதற்கும் அவர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் நேற்றைய தினம் 07.08.2025 பிரதேச சபையினர் நடைபாதை வியாபார இடங்களை அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்த பொழுது அங்கு கூடிய சில வர்த்தகர்களால் வாக்குவாதம் ஏற்பட்டதுடன் பிரதேச சபையின் ஊழியர் ஒருவரையும் தாக்கம் முட்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதன் காரணமாக அப்பகுதியில் இருந்து பிரதேச சபையினர் வெளியேறியதுடன் கிளிநொச்சி போலீஸ் நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பாக முறைப்பாடு ஒன்றிணையும் பதிவு செய்துள்ளதாக கிளிநொச்சி பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.