Saturday, August 2, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 123

கற்பிட்டியில் இளம் யுவதி தூக்கிட்டு தற்கொலை!

0

கற்பிட்டி முஹமதிய்யாபுரத்தில் இளம் யுவதி தூக்கிட்டு தற்கொலை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி முஹமதிய்யாபுரத்தில் 18 வயதையுடைய இளம் யுவதி தூக்கில் தொங்கி தற்கொலை செய்த சம்பவம் ஒன்று இன்று புதன்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.

மேற்படி சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
கற்பிட்டி முஹமதிய்யாபுரத்தில் வசிக்கும் குறித்த இளம் யுவதி வீட்டின் முன்புறத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். இன்று (16) காலை அளவில் வீட்டிற்கு வெளியில் வந்து பார்த்தபோது தனது மகள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் உடனடியாக கற்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு உறவினர்களின் உதவியுடன் அறிவித்ததாக தந்தை தெரிவித்தார்.

சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு வருகை தந்த கற்பிட்டி பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன் கற்பிட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.எம் நாசிம் வரவழைக்கப்பட்டு சடலத்தை பார்வையிட்டதுடன் மேலதிக விசாரணைக்காக சடலம் புத்தளம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

கற்பிட்டி திகழி பாடசாலை ஆசிரியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்

0

கற்பிட்டி திகழி முஸ்லிம் மகா வித்யாலய ஆசிரியர்கள் இன்று (16) பணிப்பகிஷ்கரிப்பில்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

திகழி முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றும் சித்திரப் பாட ஆசிரியர் ஒருவர் மீது திகழியைச் சேர்ந்த இளைஞர் கடந்த 10.10. 2024 அன்று தாக்குதல் மேற்கொள்ள முயன்றுள்ளார். இதில் தலையிட்ட அதிபர் உட்பட ஏனைய சில ஆசிரியர்களுக்கும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி மிக மோசமாக குறித்த இளைஞர் நடந்து கொண்டுள்ளார்.

இதற்கு எதிராகவும் ஆசிரியர்களின் பணிக்கு பாதுகாப்பு வேண்டியும் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறையிட்ட போதும் ஊர் மக்களாலும் பொலிசாரினாலும் இதுவரை சரியான தீர்வு கிடைக்கவில்லை.

ஆசிரியர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலை இல்லாமல் செய்து சுதந்திரமான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஏதுவான சூழ்நிலையை ஏற்படுத்தி தருமாறும், பாடசாலை உள்விகாரங்களில் தலையீடு செய்யும் நபர்களின் அராஜகங்களை தடுத்து நிறுத்துமாறு கோரியும் இன்று ( 16) முதல் திகழி முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் சகல ஆசிரியர்களும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர்

வேட்புமனுவே இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை!

0

இந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்காக இதுவரை சுயேச்சைக் குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அடங்களாக 33 குழுக்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யதுள்ளன.

நேற்றைய (08) தினம் வரை 17 அரசியல் கட்சிகளும் 16 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களின் தேர்தல் தொகுதிகளில் நேற்று வரை எந்த அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக் குழுவோ வேட்புமனுக்களை சமர்ப்பிக்கவில்லை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஒக்டோபர் 4ஆம் திகதி ஆரம்பமாகி 11ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை நிறைவடையவுள்ளது.

இதேவேளை, பொதுத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் எதிர்வரும் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கான விண்ணப்பங்கள் ஏற்கும் பணி நேற்று நள்ளிரவுடன் முடிவடைய இருந்தது.

வாகன இறக்குமதி குறித்து இப்படி ஒரு ஏமாற்றமா?

0

ஒக்டோபர் மாதத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என அரசாங்கம் முன்னர் தெரிவித்திருந்த போதிலும் அது தொடர்பில் தற்போது உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேஜ் தெரிவித்தார்.

ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் பேருந்துகள் மற்றும் பாரவூர்திகள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என வதந்திகள் பரவி வருவதாகவும், ஆனால் அவ்வாறான சுற்றறிக்கையோ அல்லது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆவணமோ எந்தவொரு அரசாங்க நிறுவனத்தினாலும் இறக்குமதிக் கட்டுப்பாட்டாளர் அல்லது வங்கிகளுக்கு அனுப்பப்பட்டதாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

தற்போதைய அரசாங்கம் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என்பதை தமது சங்கத்தினால் அறிய முடிந்தது என்றார்.

2020 ஆம் ஆண்டு வாகனங்கள் முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட அதே விலையில் மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என நம்ப முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாகனங்களை இறக்குமதி செய்தாலும் விலையில் பெரிய அளவில் சரிவு ஏற்படாது என்றார்.
கடந்த 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூபாயுடன் ஒப்பிடுகையில் டொலரின் மதிப்பு 80 வீதத்தால் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

முட்டைக்கு போன காலம்!

0

முட்டையின் சில்லறை விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

அண்மைக்காலமாக 30 ரூபாவாக குறைந்திருந்த முட்டை ஒன்றின் விலை மீண்டும் 40 ரூபாவிற்கு மேல் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முட்டை விலை அதிகரிப்புக்கு பல காரணிகள் காரணமாக உள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

“பெரும்பாலான மொத்த வியாபாரிகள் முட்டைகளை எடுத்துச் சென்று முட்டைகளை விற்பனை செய்தனர். இதனால் வாடிக்கையாளர்களுக்கு பாரிய நிவாரணம் கிடைத்தது. தற்போது, ​​உபரி உற்பத்தி பொருட்கள் சந்தையை விட்டு வெளியேறியுள்ளன. தற்போது உற்பத்தியாகும் தினசரி முட்டைகள்தான் சந்தைக்கு வருகின்றன. ஆனால் விலையில் பெரிய ஏற்ற இறக்கம் ஏற்பட்டுள்ளது. இது செயற்கையாக நடக்கிறதா என்ற கேள்வி எங்களுக்கு உள்ளது..”

தற்போது சந்தையில் வெள்ளை நிற முட்டை ஒன்று 40-45 ரூபாவுக்கும் பழுப்பு நிற முட்டை ஒன்று 45-48 ரூபாவுக்கும் விற்கப்படுகின்றது.

உபுல் தரங்கவுக்கு நேர்ந்த சோகம்!

0

ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்கு நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் உபுல் தரங்கவிற்கு மாத்தளை மேல் நீதிமன்றம் இன்று (08) பிடியாணை பிறப்பித்துள்ளது.

பல்லேகல மைதானத்தில் இவ்வருடம் மார்ச் மாதம் நிறைவடைந்த “லெஜண்ட்ஸ் லீக்” என்ற கிரிக்கெட் போட்டித்தொடரின் போது பணத்திற்கு ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுமாறு தனக்கு அழுத்தும் கொடுக்கப்பட்டதாக உபுல் தரங்க செய்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணையில் உள்ள வழக்கொன்றிற்கு உபுல் தரங்க நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தால் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்திற்கு அறிவிக்காமல் உபுல் தரங்க வெளிநாடு சென்ற காரணத்தினால் விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் வெளிநாட்டில் உள்ளதால், நாடு திரும்பிய பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராவதாக சீராக்கல் மனு ஊடாக நீதிமன்றிற்கு  அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்டம் பெரும் அதிர்ச்சியில்!

0

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மாத்திரம் 87 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள், அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சூரியவெவ மற்றும் திஸ்ஸமஹாராம ஆகிய பிரதேசங்களிலிருந்து பதிவாகியுள்ளனர்.

மேலும், எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்ப கட்டங்களிலேயே உரிய சிகிச்சைகளை அளிப்பதினால் அவர்களைக் குணப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் எம்.பிக்களுக்கு அடிக்கு மேல் அடி!

0

சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இலவசமாக வழங்கப்பட்டிருந்த 5 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள முத்திரைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் ஆர்.சத்குமார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிவுறுத்தல் சகல அஞ்சல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களால், அதனைப் பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிட முடியாது.6 கட்சிகளுக்கு தடை!

0

செயலாளர் பதவியில் பிரச்சினைகள் உள்ள 6 அரசியல் கட்சிகள் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்துள்ளன.

இதன்படி 77 அரசியல் கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நவம்பர் 14-ம் திகதி நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடக்கூடிய அரசியல் கட்சிகள் மற்றும் அதற்கென ஒதுக்கப்பட்ட சின்னங்களை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய லங்கா மகாசபா கட்சி, ஐக்கிய லங்கா பொதுஜன கட்சி, லங்கா மக்கள் கட்சி, இலங்கை முற்போக்கு முன்னணி மற்றும் ஈழவர் சனநாயக முன்னணி  ஆகிய கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் எடுத்த அதிரடி முடிவு!

0

கட்சியில் இருந்து விலக்கப்பட்டவர்கள் மற்றும் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்தவர்கள் உள்ள கூட்டணியில் இணையப்போவதில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நேற்று (06) மன்னார், மாந்தை பிரதேசத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிண்ணியாவைச் சேர்ந்த கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஒருவர் கட்சியிலிருந்து விலகிவிட்டதாகவும் இவ்வாறு பலர் உங்களது கட்சியிலிருந்து விலகிச் செல்வதற்கு காரணம் என்ன? எனவும் மற்றும் தனித்தா அல்லது இணைந்தா போட்டியிடுவது? எனக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த தலைவர் ரிஷாட் தெரிவித்ததாவது,

“தவறு செய்தமைக்காக கட்சியிலிருந்து விலக்கப்பட்ட சிலர், இன்று தாமாகவே கட்சியிலிருந்து வௌியேறியதாகக் கூறித் திரிகின்றனர். தவறு செய்தவர்கள் உடனடியாக கட்சியிலிருந்து நீக்கப்படுவர். இவ்வாறு தவறு செய்த மூன்று எம்.பிக்களை எமது கட்சி நீக்கியுள்ளது.

இதுபோலவே, கிண்ணியாவைச் சேர்ந்த ஒருவரையும் நாம் நீக்கியுள்ளோம். இன்று அவர் ரணிலுடன் இணைந்துள்ளார். மட்டுமல்ல கட்சியிலிருந்து அவர்தான், வௌியேறியதாக ஊடகங்களுக்கு கூறுகிறார். மக்கள் ஆணையை மீறியவர்களுக்கு மக்களே பாடம்புகட்டுவர்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் எமது கட்சி அம்பாறை மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் போட்டியிடும். சில மாவட்டங்களில் தனித்தும் இன்னும் சில மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தும் போட்டியிடும். எம்மால் நீக்கப்பட்டவர்களைச் சேர்த்து உருவாக்கப்படும் கூட்டணியில் நாம் சேரமாட்டோம்.

இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்து, ஜனாஸாக்களை எரிப்பதற்கு உதவியவர்கள் உள்ள கூட்டணியிலும் எமது கட்சி இணையாது. அம்பாறை மாவட்டத்தில், இவ்விடயம்தான் இழுபறியில் உள்ளது. இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் உள்ள அணியில், நாம் இணையப்போவதில்லை.

இவர்களைச் சேர்த்தால் அம்பாறையில் தனித்தே மயில் சின்னத்தில் போட்டியிடுவோம். புத்தளம் மாவட்டத்திலும் இந்த நியதியே பின்பற்றப்படும். இது குறித்து தீர்க்கமான முடிவை எடுக்குமாறு கட்சியின் புத்தளம் மாவட்ட உயர்பீடத்துக்கு அறிவித்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.