Monday, May 4, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 123

கைகுலுக்குவார்களா இந்திய, பாகிஸ்தான் அணி வீரர்கள்!

0

ஆசிய கிண்ணத் தொடரின் இன்றைய (21) சுப்பர் – 4 சுற்றில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. 

இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

ஏற்கனவே இந்த தொடரில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியிருந்த நிலையில் அதில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. 

அத்துடன் அன்றைய ஆட்டத்தின் பின்னர் பாகிஸ்தான் வீரர்களுக்கு, இந்திய அணி வீரர்கள் கைகுலுக்குவதை நிராகரித்தமை பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. 

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை கண்டித்து இந்திய அணி அவ்வாறு நடந்து கொண்டதாக கூறப்பட்டது. 

இந்த விடயம் தொடர்பில் பாகிஸ்தான் அணி அதிருப்தி வௌியிட்ட நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையிலும் முறைப்பாடளித்திருந்தது. 

பின்னர் அந்த சம்பவத்தை கண்டித்து ஐக்கிய அரபு இராச்சியம் அணியுடனான போட்டியின் ​போது மைதானத்திற்கு தாமதமாகவே பாகிஸ்தான் அணி வந்தது. 

இதனால் மேலும் பரபரப்பான சூழல் ஏற்பட்டிருந்தது. 

இந்நிலையில் இன்றைய தினம் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ள நிலையில் போட்டிக்கு முன்னதாக இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பை பாகிஸ்தான் அணி புறக்கணித்துள்ளது. 

இவ்வாறான சூழலில் போட்டியின் வெற்றி, தோல்வி ஒருபுறம் இருக்க, இரண்டு அணி வீரர்களும் இன்று கைகுலுக்குவார்களா என்பதையே கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற சமாதானத்திற்கான நடைப்பவனி!

சமாதானத்திற்கான நடைப்பவனி ஒன்று இன்று கிளிநொச்சியில் இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்டது.

செல்வநாயகம் நினைவு அறைக்கட்டளையின் அனுசரணையுடன் வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 30 இளைஞர்களுக்கு சமாதானம் தொடர்பாக பயிற்சியளிக்கப்பட்டு அவர்களால் உலக சமாதான தினத்தை முன்னிட்டு ஒரு நடைப்பவனி திட்டமிடப்பட்டது.

குறித்த நடைப்பயணம் உலக சமாதான தினத்தை முன்னிட்டு இன்றய தினம் காலை 9 மணியளவில் கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் இருந்து அமைதியாக நடைப்பயணம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நடைப்பயணம் ஆரம்பமாகி கிளிநொச்சி பேருந்து நிலையம் வரை தமிழ் சிங்கள முஸ்லிம் இளைஞர்களால் பல்வேறுபட்ட சமாதான எண்ணக்கரு தாங்கிய பதாகைகள் ஏந்தி குறித்த நடைப்பயணம் மேற்கொள்ளபட்டது.

இவ் நடைப்பயணத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மத குருமார்கள் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தமது கைது குறித்து மனம் திறந்த முன்னாள் ஜனாதிபதி ரணில்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (20) தாம் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசேட உரையொன்றை வெளியிட்டார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறினார். 

குறித்த முறைப்பாட்டை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தற்போதைய செயலாளரினால் தாக்கல் செய்யப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

எவ்வாறாயினும் தாம் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இங்கிலாந்து திரும்பியதாகவும், கொழும்பு திரும்புவதற்கு முன்பு ஒரு இரவை அங்கேயே கழித்ததாகவும் குறிப்பிட்டதுடன் இந்த செயல்முறை முற்றிலும் உத்தியோகபூர்வ விஜயம் என்றும் அவர் கூறினார். 

தாம் அங்கு இருந்ததால் தமக்கு கிடைத்த உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்றுக்கொண்டதாகவும், அவ்வாறான உத்தியோகப்பூர்வ அழைப்பு விடுக்கப்படாது இருந்திருப்பினும் தாம் இங்கிலாந்திலேயே அன்றைய தினம் இருந்திருப்பேன் என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதிகரிக்கும் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம்!

0

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளையில், 2024 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட 15 சிறுவர்கள் இணையவழி மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

அதே ஆண்டில், 375 பெண்கள் இத்தகைய துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக அவர் கூறினார்.

இருப்பினும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்ட 114 நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

சூடுபிடிக்க உள்ள ஆசிய கிண்ண சூப்பர் 4 சுற்று!

0

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண டி20 தொடரின் சூப்பர் 4 சுற்றுப்போட்டி இன்று (20) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை அணி சூப்பர் 4 சுற்றில் மொத்தம் மூன்று போட்டிகளில் விளையாடவுள்ளது. 

இதன்படி, செப்டம்பர் 23 அன்று அபுதாபியில் பாகிஸ்தானுடனும், செப்டம்பர் 26 அன்று துபாயில் இந்தியாவுடனும் இலங்கை அணி மோதவுள்ளது.

சூப்பர் 4 சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் உப்பு உற்பத்தியில் புதிய சாதனை!

0

தற்போதைய வறண்ட வானிலை காரணமாக சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு புத்தளத்தின் உப்பு அறுவடையில் குறிப்பிடத்தக்க அளவு ஒரு சாதனை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நாட்களில் வறண்ட வானிலை தொடர்ந்தால், நாட்டின் உப்புத் தேவையில் பெரும்பகுதியை புத்தளத்தில் இருந்து பூர்த்தி செய்ய முடியும் என்றும் உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

உப்பு அறுவடை தற்போது ஒரு லட்சம் மெட்ரிக் தொன்னைத் தாண்டும் அளவில் இருப்பதாக உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பெய்த கனமழையால், புத்தளத்தில் உப்பு உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டதாகவும், உப்புத் தொட்டிகள் மழைநீரில் நிரம்பி வழிந்ததால் தொழில்துறை முடங்கியதாகவும் உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

அதனால்தான், உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக, நாட்டின் உப்புத் தேவைக்குத் தேவையான உப்பை இந்திய மாநிலமான குஜராத்தில் இருந்து இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் நாட்டில் மொத்த உப்புத் தேவை ஒரு லட்சத்து எண்பதாயிரம் மெட்ரிக் தொன்னை நெருங்கியுள்ள நிலையில், இது உணவு மற்றும் பிற பொருட்களுக்குத் தேவையான அளவு எனவும் புத்தளம் தவிர, ஆனையிறவு மற்றும் ஹம்பாந்தோட்டையிலும் உப்பு உற்பத்தி அதிக அளவில் இடம்பெறுவதாகவும் உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சேவை கொடுப்பனவுகளை இனி வீட்டிலிருந்தே செலுத்தமுடியும்!

அரச நிறுவனங்களின் சேவைகளுக்கான கொடுப்பனவுகளை வீட்டிலிருந்தவாறு செலுத்தக்கூடிய முறைமை உருவாக்கப்படுவது வரவேற்கத்தக்கது.

எண்ணிமைப்படுத்தல் (Digitalization) மூலம் ஊழல் மோசடிகளைக் குறைக்க முடியும். எனவே வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து நிறுவனங்களும் இந்தச் சேவைக்கு உள்ளீர்க்கப்படுவதை வரவேற்கின்றோம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

மாண்புமிகு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைவாக GovPay என்ற செயலியின் அறிமுகம் மற்றும் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை காலை (19.09.2025) வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்ட ஆளுநர் தனது உரையில் தெரிவித்ததாவது,

இந்த அரசாங்கத்தின் பிரதான கொள்கைகளில் ஒன்றான எண்ணிமைப்படுத்தலின் ஒரு அங்கமாகவே GovPay அமைந்துள்ளது.

இன்று இலங்கை மின்சார சபையின் மின்பட்டியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை பலரும் வீட்டிலிருந்தே செலுத்துகின்றார்கள். வீண் அலைச்சல், நேர விரயத்தை இல்லாமல் செய்தல் என்பவற்றையே பலரும் விரும்புகின்றார்கள். தற்போதுள்ள சூழலில் கணவன் மற்றும் மனைவி இருவருமே தொழில் செய்பவர்களாக உள்ளனர். அவ்வாறான நிலையில் அரசாங்க நிறுவனங்களின் சேவைகளுக்குரிய கட்டணங்களை அரச அலுவலகங்களுக்கு நேரில் சென்று குறித்த நேரத்துக்குள் செலுத்துவது என்பது மிகப் பெரிய சவாலாக மாறி வருகின்றது. எனவே, இவ்வாறு வீட்டிலிருந்தே எமது கொடுப்பனவுகளைச் செய்யக் கூடிய சேவைகள் மிக அவசியமானவையே.

இத்தகைய எண்ணிமைப்படுத்தல் ஊடான சேவைகளால் ஊழல் மோசடிகள் குறைவடையும். இந்தச் சேவைகள் வெளிப்படைத்தன்மையானது. தரவுகளை இலகுவாகவும் பெற்றுக் கொள்ள முடியும். இதன் ஊடாக நிர்வாகச் செலவீனங்கள் கூட அரச நிறுவனங்களுக்கு குறைவடையும். அத்துடன் அரச நிறுவனங்கள் தங்கள் சேவைகளை மேம்படுத்தவும் இது உதவும்.

இதுவரை 135 அரச நிறுவனங்கள் இந்தச் செயலியில் இணைந்துள்ளதுடன் அவற்றின் ஊடான 700 இற்கு மேற்பட்ட சேவைகளைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

இதை வடக்கு மாகாணத்துக்குட்பட்ட அரச திணைக்களங்களில் நடைமுறைப்படுத்துவதை விரைவுபடுத்தவேண்டும் என்றும் ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களை இந்தச் சேவைக்குள் முதல் கட்டமாக உள்வாங்கும் நடவடிக்கைகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன. உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கு இது தொடர்பான தெளிவூட்டல் வழங்கப்பட்டதுடன் அவர்களுடனான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு, லங்காபே நிறுவனத்தின் பிரதி தலைமை நிறைவேற்று அதிகாரி டினுக பெரேரா, லங்காபே நிறுவனத்தின் முதன்மை சேவை வழங்கல் அதிகாரி செல்வி துசா முகுந்தன், லங்கபே நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் சிவபிரசாந் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நாகவில்லுவில் அதிகரித்துவரும் அபிவிருத்தி பணிகள்!

புத்தளம் பிரதேச சபை ஊடாக புத்தளம் எருக்கலம்பிட்டி பகுதியின் குறுக்கு வீதிகளுக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் செலவில் பொரள் மண் இடப்பட்டு வீதி புனரமைப்பு பணிகள் மிகவும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

புத்தளம் பிரதேச சபை உறுப்பினரும், அபிவிருத்தி குழுவின் தலைவருமான ஜனாப் ஷாஹின் ரீஸா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க குறித்த பொரள் மண் இடப்பட்டு வீதிகளை செப்பனிடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

புத்தளம் எருக்கலம்பிட்டி பகுதியில் குன்றும் குழியுமாக உள்ள சுமார் 4 குறுக்கு வீதிகள் முதற்கட்டமாக இனம்காணப்பட்டு அதன் புனரமைப்பு பணிகளே இவ்வாறு இடம்பெற்று வருகின்றன.

சுமார் 100 மீட்டர் நீளமுள்ள நான்கு குறுக்கு வீதிகளுக்கு பொரள் மண் இடப்பட்டு வீதி புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருவதுடன், மற்றுமொரு 50 மீட்டர் நீளமுள்ள குறுக்கு வீதிக்கான பொரள் மண் இடப்பட்டு வீதி புனரமைப்பு பணிகள் மிகவும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

குறித்த குறுக்கு வீதிகளுக்கு சுமார் 31 லோடு பொரள் மண் பறிக்கப்பட்டு இன்றுடன் மூன்றாவது நாளாகவும் வீதி புனரமைப்பு பணிகள் மிகவும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

மேலும் தேவையுடைய மீதமுள்ள குறுக்கு வீதிகளுக்கு பொரள் மண் பறிக்கப்பட்டு வீதி புனரமைப்பு பணிகள் எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் எனவும், வீதி மின் விளக்குகள் திருத்தும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் ஜனாப் ஷாஹின் ரீஸா எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

இதேவேளை புத்தளம் எருக்கலம்பிட்டியில் அண்மையில் 15 லட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தார் வீதி ஒன்று புத்தளம் பிரதேச சபை தலைவரினால் மக்களின் பாவனைக்கு திறந்துவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம், ஆனவிலுண்தாவ பகுதியில் 20 ஏக்கர் நிலம் எரிந்து நாசம்!

0

ஆனவிலுண்தாவ ரெம்சா சதுப்பு நில பகுதியில் நேற்று முன்தினம் (17) இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 20 ஏக்கருக்கும் அதிகமான நிலம் எரிந்து நாசமாகியுள்ளதாக புத்தளம் மாவட்ட பேரிடர் மேலாண்மைப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் (17) இரவு 7.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் உள்ளிட்ட குழுவினர் தீயை முழுமையாக அணைக்க கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் கடுமையாக போராடி இருந்தனர்.

புத்தளம்-கொழும்பு பிரதான வீதியின் ரயில் பாதைக்கு அருகில் குறித்த தீ பரவியது. வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் ஆரம்பத்தில் அதை அணைக்க நடவடிக்கை எடுத்திருந்தாலும், அது மிக வேகமாக பரவியதால் தீயணைப்புத் துறையினரின் உதவியை நாடியுள்ளனர்.

அதன்படி, சிலாபம் நகரசபை மற்றும் புத்தளம் நகர சபையின் தீயணைப்புத் துறையினர் விரைவாக சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விரைந்து தீயை அணைக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அருகிலுள்ள ரயில் பாதையின் உள்ளே தீயணைப்பு வாகனங்கள் நுழைய சிரமம் ஏற்பட்டதால் அதிக நேரம் பிடித்தது, இது தீயைக் கட்டுப்படுத்துவதில் தாமதத்தை ஏற்படுத்தியது.

இருப்பினும், தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆரச்சிகட்டுவ செயலாளர் ஆயிஷா விக்ரமசிங்க, கிராம சேவையாளர் மற்றும் ஆரச்சிகட்டுவ பிரதேச சபைத் தலைவர் மற்றும் அதிகாரிகள் குழுவுடன் சேர்ந்து தீ பரவாமல் தடுக்க கடுமையாக உழைத்தனர்.

தீ விபத்து ஏற்பட்டதிலிருந்து பரவிய கடும் புகை காரணமாக, தீயணைப்பு கட்டுப்பாட்டு குழுக்கள் சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் செல்வது கடினமாக இருந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

சில நாட்களுக்கு முன்பு ஆனவிலுண்தாவ ரெம்சா ஈரநிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஏக்கர் நிலம் எரிந்து நாசமாகியதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நிலவும் வறண்ட காலநிலையில் நிலவும் காற்று காரணமாக தீ பரவியதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், இந்த தீ யாரோ ஒருவரால் தூண்டப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது, மேலும் இது குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக வனவிலங்குத் துறை கூறுகிறது.

இந்த தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பு குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், இதுபோன்ற செயல்களைச் செய்பவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று எச்சரிக்க வேண்டும் என்றும் வனவிலங்கு அதிகாரிகள் மீண்டும் வேண்டுகோள் விடுத்தனர். இதுபோன்ற தீ விபத்துகள் இந்தப் பகுதியில் வாழும் பறவைகள், ஊர்வன மற்றும் பிற விலங்குகளின் உயிர்வாழ்வை கடுமையாகப் பாதித்துள்ளதாக வனவிலங்குத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

0

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (19) முற்பகல் 10 மணி முதல் நாளை (20) முற்பகல் 10 மணி வரை அமலில் இருக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் பின்வருமாறு,

கொழும்பு மாவட்டம்:
– சீதாவக்க
களுத்துறை மாவட்டம்:
– இங்கிரிய
– ஹொரணை
கேகாலை மாவட்டம்:
– தெஹியோவிட்ட
நுவரெலியா மாவட்டம்:
– கொத்மலை
இரத்தினபுரி மாவட்டம்:
– இரத்தினபுரி