Thursday, March 19, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 127

உயிரிழந்தோரை மீண்டும் உயிருடன் கொண்டு வர புதிய திட்டம்!

சாகாமல் உயிர் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். இது தொடர்பான ஆய்வுகளும் கூட உலகெங்கும் நடந்தே வருகிறது.. இதற்கிடையே பிரபல ஐரோப்பிய நிறுவனம் ஒன்று, எதிர்காலத்தில் உயிரிழந்தோரை மீண்டும் உயிருடன் கொண்டு வர புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாழ்வில் பிறப்பு என்று ஒன்று இருந்தால் நிச்சயம் இறப்பு இருக்கும். ஆனால், இந்த இயற்கை விதியை மாற்றவே உலகெங்கும் ஆய்வுகள் நடந்து வருகிறது. இதுவரை உயிரிழந்தோரை வெற்றிகரமாக மீட்க முடியவில்லை என்றாலும் கூட இது குறித்த ஆய்வுகள் தொடர்ந்தே வருகிறது. இதற்கிடையே ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான டுமாரோ பயோ வினோதமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஒருவர் உயிரிழந்த பிறகு அவர்களின் உடல்களைப் பாதுகாப்பதாக அறிவித்துள்ளனர். எதிர்காலத்தில் மனித அறிவியல் வளர்ச்சியால் உயிரிழந்தோரை மீண்டும் உயிருடன் கொண்டு வர முடிந்தால் இது அவர்கள் மீண்டும் உயிர் பெற வாய்ப்பு தருவதாக இருக்கும். இதன் கட்டணம் கொஞ்சம் அதிகம் தான். இதற்காக $200,000 (ரூ.1.74 கோடி) கட்டணமாக வசூலிக்கப் போகிறார்களாம்.

உயிரிழந்தோர் உடலை மிகக் குறைந்த வெப்பநிலைக்கு விரைவாகக் குளிர்விப்பதன் மூலம் முழு உடல் கிரையோப்ரிசர்வேஷனை வழங்குகிறது. இது செல் சேதம் மற்றும் சிதைவைத் தடுக்க உதவுகிறது. எப்போதும் உடலைச் சேமிக்க நேரம் மிக முக்கியமானது. கொஞ்சம் லேட் ஆனாலும் உடலைப் பாதுகாக்க முடியாமல் போய்விடும். இதனால் சட்டப்பூர்வ மரணத்திற்குப் பிறகு உடனடியாக செயல்முறையைத் தொடங்குவதே டுமாரோ பயோவின் திட்டம். இதற்காக 24X7 செயல்படும் அவசர காத்திருப்பு குழுவையும் வைத்திருக்கிறார்கள். எதிர்கால மருத்துவ வளர்ச்சியால் ஒரு நாள் இந்த உடல்களுக்கு மீண்டும் உயிர் தர முடியும் என்பதே இவர்கள் நம்பிக்கை.

இதெல்லாம் யார் செய்வார்கள். அதுவும் கட்டணம் இவ்வளவு அதிகமா இருக்கு என நீங்கள் கேட்கலாம். உண்மையில் அந்த ஊரில் இதற்கு மவுஸ் அதிகமாகவே இருக்கிறது. இதுவரை, 650க்கும் மேற்பட்டோர் இந்த சேவைக்குப் பதிவுசெய்துள்ளனர். மரணத்தில் இருந்து சயின்ஸ் தங்களைக் காக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் உடலைப் பாதுகாக்க முடிவெடுத்துள்ளனர். ஐரோப்பாவில் இதுபோன்ற சேவையை வழங்கும் முதல் நிறுவனம் டுமாரோ பயோ ஆகும். இதுவரை அந்த நிறுவனம் 3 அல்லது 4 பேரின் உடல்களைப் பராமரித்து வருகிறதாம். மேலும், 5 செல்ல பிராணிகளின் உடல்களையும் பராமரித்து வருகிறதாம். 700க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ள நிலையில், வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் உயரவே கூடும். மேலும், விரைவில் அமெரிக்காவிலும் இந்த சேவையை அறிமுகப்படுத்த இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதுவரை கிரையோபிரசர்வேஷனுக்குப் பிறகு யாரும் வெற்றிகரமாக உயிர் பெறவில்லை.. ஒருவேலை அவர்கள் உயிர் பெற்றாலும் கூட, அவர்களுக்கு மூளை கடுமையாகச் சேதமடைந்தே இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். மனிதர்களைப் போன்ற சிக்கலான மூளை அமைப்புகளைக் கொண்ட உயிரினங்களை வெற்றிகரமாக மீட்டெடுக்க முடியும் என்பதற்கு தற்போது எந்த ஆதாரமும் இல்லை என்பதால் சிலர் இதை “அபத்தமானது” என்றும் சாடுகிறார்கள். அம்பலப்படுத்துகிறது என்று லண்டன் கிங்ஸ் கல்லூரியின் நரம்பியல் பேராசிரியர் கிளைவ் கோயன் கூறுகிறார்.

தற்போதைய கல்வி முறைமை அனைவருக்கும் சமனானதல்ல!

வடக்கு மாகாணத்தில், அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தத்தை நாங்கள் ஆதரிக்கின்றோம். எங்கள் திறமையான இளைஞர்கள், அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள் மற்றும் எங்கள் மக்களின் உறுதியுடன், இலங்கையின் கல்விக்கான புதிய அத்தியாயத்தில் வடக்கு மாகாணம் ஒரு வெற்றியின் முன்மாதிரியாக இருக்கும் என நம்புகின்றேன். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பிலான மாகாணமட்டக் கலந்துரையாடல் பிரதமரும் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில், வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நேற்று சனிக்கிழமை மாலை (02.08.2025) நடைபெற்றது.

இங்கு உரையாற்றிய ஆளுநர், நாட்டின் பெருமைமிகுந்த மற்றும் மீள்தன்மை கொண்ட எங்கள் பிராந்தியத்துக்கு உங்களை வரவேற்கின்றேன். தேசிய ஒற்றுமை, சம வாய்ப்பு மற்றும் எந்த மாணவனும், எந்தப் பாடசாலையும், எந்த மாகாணமும் பின்தங்கியிருக்காத எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்புக்கான உங்கள் செய்தி மிகப்பெரியது.

இன்று, வடக்கு மாகாண மாணவர்களுக்கும், அனைத்து இலங்கையர்களுக்கும் நம்பிக்கையைத் தரும் ஒரு துணிச்சலான கல்வி சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதில் உங்கள் தொலைநோக்குத் தலைமையை நாங்கள் பாராட்டுகின்றோம்.

ஒவ்வொரு மாணவனும் தங்கள் கல்வியை முடிக்கவும், அவர்கள் விரும்பும் எதிர்காலத்தைத் தொடரும் வாய்ப்புக் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலான ஒருங்கிணைந்த தொழில் மற்றும் கல்விப் பாதைகளுடன் கல்வி முறையை மறுசீரமைத்தல் சிறப்பானது.

பாடசாலை அடிப்படையிலான மதிப்பீடுகளை பரீட்சைப்புள்ளிகளுடன் சமநிலைப்படுத்தும் மிகவும் நெகிழ்வான மதிப்பீட்டு முறைகளை அறிமுகப்படுத்துவது, மாணவர்கள் மீதான தேவையற்ற போட்டி மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

எண்ணிமப்படுத்தலை (டிஜிட்டல் மயமாக்கல்) புகுத்துவதன் மூலம் வடக்கு மாகாணம் போன்ற கல்வி இடைவெளிகள் அதிகமாகவுள்ள மாகாணங்கள் மிகப்பெரிய நன்மையடையும்.

இந்தச் சீர்திருத்தங்களுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவை கொள்கை மாற்றங்களை மட்டும் பிரதிபலிக்கவில்லை. நீதி, உள்ளடக்கம் மற்றும் சமமான வளர்ச்சிக்காக நீண்ட காலமாக காத்திருக்கும் சமூகங்களுக்கான நம்பிக்கையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன, என்றார் ஆளுநர்.

இங்கு உரையாற்றிய பிரதமர் அவர்கள், இந்தக் கலந்துரையாடலை ஒழுங்குபடுத்திய வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் அவர்தம் நிர்வாகக் கட்டமைப்பினருக்கு முதலில் நன்றிகளைக் கூறுகின்றேன்.

கல்வியின் முக்கியத்துவம் தொடர்பில் நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. ஏனெனில் வலிகள் நிறைந்த காலத்திலும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள் நீங்கள். வடக்கு மாகாணம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது. ஏன் இந்த நிலைமை என்று சிந்திக்கவேண்டும்.

தற்போதுள்ள கல்வி முறைமை எல்லோருக்கும் சமனானதாகத் தெரியவில்லை. பணம் சார்ந்த சுமைகளை பெற்றோருக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. பரீட்சை மையக் கல்வியானது மாணவர்களை முடக்கியுள்ளது. எனவே, அவசியமான இந்தக் கல்விச் சீர்திருத்தம் கட்டம் கட்டமாகவே மேற்கொள்ளப்படும். 2026ஆம் ஆண்டு தரம் ஒன்று மற்றும் தரம் ஆறு வகுப்புகளுக்கு நடைமுறைப்படுத்தப்படும்.

வடக்கு மாகாணத்தில் 5 மாவட்டங்கள் உள்ளன. ஆனால் எல்லோரும் யாழ்ப்பாண நகரத்தில் வேலை செய்வதற்கு ஆசைப்படுகின்றார்கள். ஏனைய மாவட்டங்களுக்கும் அதுவும் குறிப்பாக எல்லை நிலையிலுள்ள பாடசாலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயறப்படவேண்டும், என பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து கல்வி சீர்திருத்தம் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், நிரல் கல்வி அமைச்சின் செயலாளர் நலக்க கலுவேவா, வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், மாகாண கல்விப் பணிப்பாளர், மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கல்வி நிர்வாகசேவை உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இஸ்ரேலியர்களால் உள்நாட்டு வர்த்தகம் பாதிப்பு!

0

சுற்றுலா விசாவில் வந்த இஸ்ரேலியர்கள், அறுகம்பை பகுதியில் சுற்றுலா தொழிற்துறையை கடுமையாகப் பாதித்து வருவதாக, அந்த பகுதியில் சுற்றுலா தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் கூறுகின்றனர். 

சுற்றுலா விசாவில் வந்து நாட்டில் வணிகம் செய்த பல வெளிநாட்டினர் மீது ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் கூறுகிறார். 

இஸ்ரேலியர்கள் இந்தப் பகுதியில் சுற்றுலாத் துறையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து சர்வதேச DJ ஒருவர் சமூக ஊடகங்களில் தனது கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். 

இந்த நாட்டிற்கு வருகை தந்த சர்வதேச DJ டொம் மோங்கல் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

அறுகம்பை பகுதிக்குச் சென்றபோது, இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவ் சென்றது போன்ற அனுபவம் தனக்கு ஏற்பட்டதாக அவர் கூறுகிறார். 

அறுகம்பை பகுதி முழுவதும் இஸ்ரேலியர்கள் தங்கள் ஆட்சியைப் பரப்பியுள்ளதாக அவர் கருதுவதாகக் கூறியுள்ளார். 

அறுகம்பை நாட்டின் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகும். இதற்கு முக்கிய காரணம், அறுகம்பை கடல் பகுதி சர்ஃபிங்கிற்கு ஏற்றதாக உள்ளது. 

இவ்வாறு நாட்டுக்கு வருகை தரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் இஸ்ரேலியர்கள் ஆகும். 

ஏனென்றால், பெரும்பாலான சுற்றுலாப் பொருட்கள் இஸ்ரேலியர்களால் வழங்கப்படுகின்றன. 

இது குறித்து தனியார் ஊடகம் ஒன்று நடத்திய விசாரணையில், சுற்றுலா விசாவில் வரும் இஸ்ரேலியர்கள் வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. 

இது உள்ளூர் வர்த்தகர்களை கடுமையாக பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காமெடி நடிகர் மதன் பாப் காலமானார்!

0

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த மதன் பாப் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 71.

மதன் பாப்பின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. இசையமைப்பாளராக தனது திரைவாழ்க்கையை தொடங்கிய இவர், ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். நீங்கள் கேட்டவை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மதன் பாப், பல மொழிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தேவர்மகன், சதி லீலாவதி, துள்ளாத மனமும் துள்ளும், தெனாலி, குஷி, சிங்கம் 2, எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இவர் கடைசியாக சாகசம் என்னும் படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல், பிரபல டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மதன் பாப், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அடையாறில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை 5 மணிக்கு காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும்!

0

வாஷிங்டன்: “இந்தியா – பாகிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்” என வௌ்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் 4 நாள்களுக்கு பிறகு முடிவுக்கு வந்தது.

இந்த போரை நிறுத்தியது நான்தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் 30 முறை கூறி உள்ளார். அவரது இந்த பேச்சு இந்திய அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்திய டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும் என வௌ்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வௌ்ளை மாளிகை செய்தி தொடர்பு செயலாளர் கரோலின் லீவிட் கூறியதாவது,

“அதிபர் டிரம்ப் தற்போது தாய்லாந்து – கம்போடியா போர், இஸ்ரேல் – ஈரான் போர், ருவாண்டா – காங்கோ ஜனநாயக குடியரசு மோதல் ஆகியவற்றை பேச்சுவார்த்தை நடத்தி நிறுத்தி உள்ளார். இதேபோல் இந்தியா – பாகிஸ்தான், செர்பியா – கொசாவோ, எகிப்து – எத்தியோப்பியா இடையேயான மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற தனது ஆறுமாத பதவிக்காலத்தில் சராசரியாக மாதத்துக்கு ஒரு சமாதான ஒப்பந்தம் அல்லது போர் நிறுத்த மத்தியஸ்தம் செய்து வருகிறார். அதிபர் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டிய நேரம் வந்து விட்டது” என இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வெளியாகிய உலக பணக்காரர்கள் பட்டியலில்!

0

உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டு உள்ளார்.

மிக பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்க பங்குச்சந்தை குறியீடுகளை புதிய உச்சங்களுக்கு கொண்டு சென்றுள்ளது. இதன் அடிப்படையில் உலகின் முதல் 10 பெரும் செல்வந்தர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு இருக்கிறது.1987ம் ஆண்டு முதல் இத்தகைய பட்டியலை அந்த பத்திரிகை வெளியிட்டு வருகிறது.

2025ம் ஆண்டு, ஆக.1ம் தேதி நிலவரப்படி உலகின் டாப் 10 பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் 9 பேர் அமெரிக்கர்கள் ஆவர். ஒருவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்.

பட்டியல் படி உலகின் முதல் பெரும் செல்வந்தர் என்ற இடத்தை பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் தக்க வைத்துக் கொண்டு உள்ளார். இவரின் சொத்து அமெரிக்க மதிப்பில் 401 பில்லியன் டாலர் ஆகும்.அவரைத் தொடர்ந்து லாரி எலிசன் 2வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்த டாப் 10 பட்டியலில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் 10வது இடத்தில் உள்ளார். இவரை தவிர மற்ற 9 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.

டாப் 10 பெரும் செல்வந்தர்கள் பட்டியல் விவரம்; (சொத்து மதிப்பு அடைப்புக்குறிக்குள்)

1. எலோன் மஸ்க் (401 பில்லியன் டாலர்)
2. லாரி எலிசன் (299.6 பில்லியன் டாலர்)
3. மார்க் ஜுக்கர்பெர்க் (266.7 பில்லியன் டாலர்)
4. ஜெஃப் பெசோஸ் (246.4 பில்லியன் டாலர்)
5. லாரி பேஜ் (158 பில்லியன் டாலர்)
6. ஜென்சன் ஹுவாங் (154.8 பில்லியன் டாலர்)
7. செர்ஜி பிரின் (150.8 பில்லியன் டாலர்)
8. ஸ்டீவ் பால்மர் (148.7 பில்லியன் டாலர்)
9. வாரன் பஃபெட் (143.4 பில்லியன் டாலர்)
10. பெர்னார்ட் அர்னால்ட் (142.9 பில்லியன் டாலர்)

பாடசாலை நாட்களில் கனரக வாகனம் செலுத்த தடை!

கிளிநொச்சி நகரப் பகுதியில் காலை 6:40 தொடக்கம் 7:30 மணி வரையும், அதேபோன்று பாடசாலை முடிவுறும் நேரம் 1.30 தொடக்கம் 2.00 மணி வரையும் கனரக வாகனங்கள் செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களின் நலன் கருதி, பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் இவ்வாறு மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து நடவடிக்கை மேற்கொள்ள்ளப்பட்டுள்ளதாக கிளிநொச்சி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி போலீஸாரின் மனித நேய செயலாகவும், முன்னுதாரணமான நடவடிக்கையாகவும் இந்த அதிரடி முயற்சிக்கு பொதுமக்கள் நன்னாரி தெரிவித்துள்ளனர்.

நாட்டில் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ள நிலையில், கிளிநோச்சி பாடசாலை மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு, பாடசாலை நாட்களில் தடைசெய்யப்பட்ட பாடசாலை நேரங்களில் கனரக வாகனங்கள் கிளிநொச்சி நகர பகுதிகளுக்குல் அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ளிநொச்சி நகர பகுதிகளுக்குல் கனரக வாகனங்கள் செலுத்த மட்டுப்படுத்தப்பட்ட நேரங்களில், குறித்த கனரக வாகனங்கள் வீதி ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பா.உ சிறீதரன் விடுத்துள்ள மிக முக்கிய வேண்டுகோள்!

செம்மணி சித்துப்பாத்தி இந்துமயானத்தில் இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழியின் அகழ்வுப் பணிகளில் இதுவரை மீட்கப்பட்டுள்ள தடயப்பொருட்கள் பொதுமக்களால் அடையாளப்படுத்தப்படுமாக இருந்தால், அவற்றை அடிப்படையாகக்கொண்டு உண்மைகளைக் கண்டறிவதற்கான விசாரணைகளைக் கோர முடியும் என பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால் விடுக்கப்பட்டுள்ள கட்டளையை மேற்கொள் காட்டி கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். 

செம்மணியில் மீட்கப்பட்ட என்புத்தொகுதிகளின் பின்னணியிலுள்ள இனப்படுகொலைச் சம்பவங்களை எண்பிப்பதற்கு, அங்கு நடைபெற்று வரும் அகழ்வுப் பணிகளில் மீட்கப்பட்ட தடயப்பொருட்கள் உரியவர்களின் உறவினர்களால் அடையாளம் காட்டப்பட வேண்டும். 

ஆகவே, தடயப்பொருட்களை இனங்காட்ட வேண்டியதன் அவசியம் உணர்ந்து, தங்களின் உறவுகளும் செம்மணியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், எதிர்வரும் 2025.08.05 ஆம் திகதி மாலை 1.30 மணி முதல் 5.00 மணிவரை யாழ்ப்பாணம் சித்துப்பாத்தி இந்துமயானத்தருகில் காட்சிப்படுத்தப்படும் தடயப்பொருட்களை அடையாளம் காட்ட வருகைதந்து, இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைக்கு வலுச்சேர்க்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தியுள்ளார்.

மைத்துனரை கொன்ற டிப்பர் வண்டி!

தனது வீட்டு ஒழுங்கையில் நித்திரை கொண்டிருந்த மைத்துனரின் மீது கவனயீனம் காரணமாக டிப்பர் ரக வாகனம் ஒன்றினால் தவறுதலாக ஏற்றப்பட்ட நிலையில் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பு இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடொன்றில் சல்லிக்கல்லினை பறித்துவிட்டு வாகனத்தை திருப்பி வந்துகொண்டிருந்த வேளை இரவு நேரமாகையால் குறித்த ஒழுங்கையில் தனது மைத்துனர் படுத்திருந்ததை அறிந்திருக்காத நிலையில் குறித்த இளைஞன் மீது டிப்பர் வாகனம் ஏறியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

02.08.2025 இன்று காலையிலே குறித்த இளைஞன் வாகனத்துள் நசுங்கி நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதை அறிந்து மைத்துனரான வாகனச்சாரதி நெடுங்கேணிப் பொலிசாரிடம் சரணடைந்துள்ளதாக அறிய முடிகிறது.

இச்சம்பவும் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நெடுங்கனி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்

யானை தாக்கியதில் குடும்பஸ்தர் பலி!

0

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி நெல்லிக்காட்டில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் யானை தாக்கியதில் 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நெல்லிக்காட்டு கிராமத்திற்குள் நேற்றிரவு புகுந்த யானை வீட்டின் முன்பகுதியில் வைத்து மாணிக்கம் இராமலிங்கம் என்பவரை தாக்கியுள்ளது. 

பின்னர் சம்பவ இடத்திற்கு அதிகாலை சென்ற போரதீவுப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் த.கயசீலன், படுகாயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் பணியை முன்னெடுத்திருந்தார். 

இதன்போது யானையின் தாக்குதல் காரணமாக படுகாயமடைந்தவரை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.