Friday, November 14, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 127

நாளை நோன்புப்பெருநாள்!

0

முஸ்லிம்களின் புனித நோன்புப் பெருநாள் நாளைய தினம் (31) திங்கட்கிழமை கொண்டாடுவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. 

ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. 

இதன்போது ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டதை அடுத்து இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் நாளை நோன்புப் பெருநாளை கொண்டாடலாமென கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

முஸ்லிம்கள் 29-30 நாட்கள் பகல் முழுதும் இறைவனுக்காக நோன்பிருந்து மாலையில் உணவு உட்கொண்டு இறைவனை சந்தோசப்படுத்தியமைக்காக இந்த நோன்புப்பெருநாளை முஸ்லிம்கள் கொண்டாடுகின்றனர்.

ஸ்டிக்கர் விவகாரம்-இளைஞனின் அதிர்ச்சி தகவல்!

0

செய்திக்குறிப்பு – காவல்துறை தலைமையகம்

22/03/2025 அன்று கொழும்பில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்த 22 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவிவருவதாக இலங்கை காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும், மேலும் சமூகத்தில் தவறான தகவல்கள் பரவுவதைத் தடுப்பது இலங்கை காவல்துறையின் முக்கிய பொறுப்பாகும் எனவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தொடர்பான ஸ்டிக்கர் ஒட்டியது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில், இலங்கை காவல்துறை குறித்த இளைஞனை கைது செய்து விசாரணையைத் தொடங்கியது.

இத்துடன் தொடர்புபட்ட குறித்த இளைஞன் தொடர்பான விசாரணையின் போது வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அவர் ஒரு ஸ்டிக்கர் ஒட்டியதைத் தாண்டி சில வலுவான கருத்துக்களைக் கொண்டவர் என்பது தெரியவந்ததுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், விசாரணையின் போது வெளிப்படுத்தப்பட்ட பிற முக்கிய தகவல்களின் அடிப்படையில், அவர் ஏதோ ஒரு வகையில் பயங்கரவாதச் செயலைச் செய்யக்கூடிய நபர் என்ற நியாயமான சந்தேகத்தின் அடிப்படையில் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரின் நடவடிக்கைகள் குறித்து விரிவாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் இணையம் மற்றும் பிற முறைகளைப் பயன்படுத்துவதால் அவர் சில உளவியல் உந்துதல்களுக்கு ஆளாகியுள்ளார் என்பது கவனிக்கப்பட்டதால், அந்த மனநிலையின் அடிப்படையில் மத தீவிரவாத செயல்களைச் செய்வதற்கான அவரது உணர்திறன் குறித்து மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல்களை இலங்கை காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேக நபருக்குச் சொந்தமான கணினி வன்பொருள், தகவல் தொழில்நுட்ப மென்பொருள் மற்றும் மொபைல் போன்கள் குறித்து தடயவியல் பரிசோதனை ஏற்கனவே தொடங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இதுபோன்ற கைதுகள் தொடர்பாக தவறான கருத்துக்கள் பரப்பப்படுவது நாட்டின் அமைதிக்கும் தேசிய பொருளாதாரத்திற்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், தவறான பிரச்சாரங்களால் ஏமாறாமல் நாட்டின் அமைதியையும் பல்வேறு சமூகங்களுக்கிடையே நிலவும் நல்லிணக்கத்தையும் பாதுகாக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துவதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுரங்குளியிலிருந்து ஏற்றுமதியாகும் டின்மீன்!

0

இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட டின் மீன்கள் முதற்கடவையாக வெளிநாட்டு ஏற்றுமதிக்கு

மதுரங்குளி Ocean food தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ocean star jack mackerel டின் மீன்களை ஏற்றுமதிக்கான கொள்கலன்களில் ஏற்றும் பணி நேற்று (29) தொழிற்சாலை வளாகத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன்கள் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்படுவது இதுவே முதற்தடவையாகும். அதன்படி, இந்த டின் மீன்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர், புதிய அரசாங்கத்தின் “ஒரு வளமான நாடு, ஒரு அழகான வாழ்க்கை” என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, இந்த நாட்டின் வரலாற்றில் முதற்தடவையாக 2025 மார்ச் மாதம் 29, அன்று டின் மீன் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் நாளாந்த டின் மீன் நுகர்வு மூன்று இலட்சம் என்றும், ஒரு நாளைக்கு ஐந்து இலட்சம் டின் மீன்களை உற்பத்தி செய்யும் திறன் இருப்பதாகவும், அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்குள் டின் மீன் ஏற்றுமதி மூலம் 8 மில்லியன் டொலர்கள் நாட்டிற்குள் கொண்டு வர முடியும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்த ஒரு கொள்கலனில் 48,000 கேன்கள் உள்ளன. இதனூடாக, 38,000 – 40,000 டொலர் வரை அந்நியச் செலாவணியை நாட்டிற்கு பெற்றுக் கொள்ள முடியும்.

மீனவர்களால் பிடிக்கப்படும் தரமான மீன்களை தொழிற்சாலைக்கு கொண்டு வருவதற்கான விசேட திட்டத்தை Ocean food நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, உள்நாட்டு, மீன்பிடி படகுகளில் பிடிக்கின்ற மீன்களை, Ocean food நிறுவனம், நேரடியாக சென்று இரண்டு நாட்களுக்குள், பெற்று குளிர்பதன கிடங்கில் சேமிக்கப்பட்டு, உடனடியாக தொழிற்சாலைக்கு கொண்டு வரப்படுகிறது. எனவே, மீன் அறுவடைக்குப் பின்னதான சேதங்கள் எதுவும் இல்லை. மீன் அறுவடைக்குப் பின்னதான இழப்புகளைக் குறைப்பது இந்த அமைப்பின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும்.

ஏற்றுமதிக்கு மிகவும் பொருத்தமான மீன்களை உற்பத்தி செய்வதற்கும் இந்த முறை மிகவும் உதவியாக இருக்கும். இதனூடாக மீனவர்கள் கடலில் அதிக விலையைப் பெற்றுக் கொள்கின்றனர். அவர்கள் விரைவாக மீண்டும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பமும் கிடைக்கின்றது.

இதன் விளைவாக மீன் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள் குறைந்துள்ளதாகவும், மீனவர்களுக்கு சிறந்த விலை கிடைத்துள்ளதாகவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நுகர்வோர் குறைந்த விலையில் தரமான டின் மீன்களை பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளதாகவும் Ocen food நிறுவனத்தின் பணிப்பாளர் சபையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தற்போது 21 டின் மீன் தொழிற்சாலைகள் இயங்கி வருவதாகவும், மீன்பிடித் திணைக்களத்தின் தரவுகளில் படி பதிவு செய்யப்பட்ட இரண்டாவது தொழிற்சாலை Ocean food நிறுவனம் என்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.

பற்றி எறிந்த ரஷ்ய ஜனாதிபதியின் வாகனம்!

0

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உத்தியோகப்பூர்வ சொகுசு limousine வாகனம் தீப்பிடித்து எரிந்துள்ளது. 

மொஸ்கோவிலுள்ள பெடரல் பாதுகாப்பு சேவை தலைமையகத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இந்த ரஷ்ய ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பில் மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்த மகிழுந்தின் மதிப்பு 3,55,796 டொலர் எனக் கூறப்படுகிறது. 

மகிழுந்தின் இயந்திரத்தில் முதலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், பிறகு அது மெல்ல உட்புறம் வரை பரவியுள்ளது. 

இந்த மகிழுந்து ரஷ்ய ஜனாதிபதி மாளிகையின் ஜனாதிபதி சொத்து முகாமைத் துறைக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. 

மகிழுந்து திடீரென வெடித்துச் சிதறக் காரணம் என்ன, இதன் போது உள்ளே யாராவது இருந்தார்களா என்பது தொடர்பான தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. 

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதேவேளை அண்மையில் ஐரோப்பிய ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது ரஷ்யா ஜனாதிபதி இறந்துவிடுவார் என யுக்ரேன் ஜனாதிபதி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது அரசியலமைப்புக்கு முரணானது!

0

இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்காக, திசைகாட்டி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பாக முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெளிவுபடுத்தியுள்ளார். 

தேசபந்து தென்னகோன் தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்த பிரேரணையை சபாநாயகர் ஏற்றுக்கொள்வது பாராளுமன்றத்தின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகும் முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

“தற்போது பிரச்சனை என்னவென்றால், முன்னாள் ஜனாதிபதி தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்தது. 

அந்த நியமனத்தை மேற்கொள்ளும்போது அரசியலமைப்பு சபையின் அனுமதி பெறப்பட்டதாக சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன. 

இருப்பினும், உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் மூலம் அவரது நியமனம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சூழ்நிலையில், தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபர் அல்ல. நீதிமன்ற உத்தரவு இன்னும் அமுலில் உள்ளது. 

உயர் நீதிமன்ற உத்தரவு அமுலில் இருக்கும் அதே வேளையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் கையழுத்திட்டு தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குமாறு பிரேரணை சமர்ப்பித்துள்ளனர். 

2002 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க சட்டத்தின் கீழ், அத்தகைய பிரேரணையை அப்போது பதவியில் இருந்த பொலிஸ் மா அதிபருக்கு எதிராக மட்டுமே சமர்ப்பிக்க முடியும். 

அதன்படி, உயர் நீதிமன்றத்தால் அவர் பொலிஸ்மா அதிபர் இல்லை என்று உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார். 

இது அரசியலமைப்புச் சட்டத்தின், 2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க சிரேஸ்ட அதிகாரிகளை நீக்குதல் சட்டத்தின் கீழ் உள்ள விதிகளுக்கு முற்றிலும் முரணானது. 

அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதற்காக ஒரு குழுவை நியமிக்க வேண்டும், மேலும் அந்தக் குழுவின் தலைவராக உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவர் இருக்க வேண்டும். 

எனவே உயர் நீதிமன்றம் அவர் பொலிஸ் மா அதிபர் இல்லை என்று இடைக்கால தடை விதித்துள்ளது. 

மறுபுறம், பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டுமா? என்பதைத் தீர்மானிக்க விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

எனவே, இது பாராளுமன்றத்தின் அதிகாரத்தை, குறிப்பாக சபாநாயகரால், கணிசமாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகும். 

ஏனென்றால் அவர்கள் செய்யப் போவது எந்த சட்டப்பூர்வ அதிகாரமும் இல்லாத ஒரு செயலாகும்….” என்றார்.

ஆரம்பிச்சதே இப்போதான், அதுக்குள்ளேயேவா?

0

இதுவரை 180 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.  

இந்த முறைப்பாடுகள் கடந்த 20 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை பெறப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வன்முறைச் செயல்கள் தொடர்பாக ஒரு முறைப்பாடும், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக 179 முறைப்பாடுகளும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளன.

பெறப்பட்ட 180 முறைப்பாடுகளில் இதுவரை 133 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் 47 முறைப்பாடுகளை தீர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மியன்மர் நிலநடுக்கம்-1600ஐ கடந்த உயிரிழப்பு!

0

மியான்மர் நாட்டில் நேற்று முன்தினம் (மார்ச்-28) இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவாகின. இது, தாய்லாந்திலும் மிகப் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது.

பாங்காக் நகரில் சில வானுயர்ந்த கட்டடங்கள் சரிந்து விழுந்தன. நில நடுக்க இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1644 ஐ தாண்டியுள்ளது. 3,400 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மேலும் உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இதனிடையே நேற்று ( மார்ச் 29) மாலை ரிக்டர் அளவில் 5.1 என்ற அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து நய்பிடாவ், மண்டாலே உட்பட ஆறு பிராந்தியங்களில் அவசரநிலையை மியான்மர் ராணுவ அரசு அறிவித்தது. மண்டாலே நகரத்தின் அருகே இர்ரவாடி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த, 90 ஆண்டுகள் பழமையான பாலம் உடைந்தது.

இந்த அதிர்வுகளால் கட்டடங்கள் சரிந்ததில், மியான்மரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1644 ஐ தொட்டது. 3,400 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும் உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

பெயரை மாற்றியமைக்காக கொதித்த சிறீதரன் எம்.பி!

0

ஆனையிறவு உப்பின் அடையாளப் பெயரை உறுதிசெய்க. : சிறீதரன் எம்.பி கோரிக்கை.

ஆனையிறவு உப்பு என்னும் அடையாளப் பெயரை உறுதிசெய்யுமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடக்கு மாகாணத்தின் கைத்தொழிற் பொருளாதார அடையாளங்களுள் ஒன்றான ஆனையிறவு உப்பளத்தை மீள ஆரம்பித்தமை காலத்தேவையான செயற்பாடாகும். 1937ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆனையிறவு உப்பளத்தில் 1938 ஆம் ஆண்டில் உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் ஏறத்தாழ ஒன்பது தசாப்த பாரம்பரியம் மிக்க ஆனையிறவு உப்பளத்தின் செயற்பாடுகள் இன்றுமுதல் (29) மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளித்தாலும், ‘ஆனையிறவு உப்பு’ என்ற அடையாளப் பெயர் ‘ரஜ லுணு’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கிடைக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

வடக்கு மாகாணத்தின் கைத்தொழிற் பேட்டைகளுள் முதன்மையானதும், முக்கியத்துவம் மிக்கதுமான ஆனையிறவு உப்பளம் என்பது எமது மக்களின் அடிப்படை வாழ்வியலோடு இணைந்த ஓர் அடையாளம் ஆகும். அத்தகையதோர் கைத்தொழிற் கட்டமைப்பை மீள ஆரம்பிக்கும் போது அதன் அடிப்படை அடையாளத்தை மாற்றம் செய்கின்றமை தங்கள் அரசாங்கத்தின் மீதான அபிமானத்தையும், இன நல்லிணக்கம் குறித்த தங்களின் சிந்தனைப் போக்கையும் கேள்விக்குட்படுத்துவதாக அமைந்துள்ளது.

குறிப்பாக, கடந்த காலங்களில் இனத்துவ அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அடையாளத் திணிப்புகளைப் போலவே, எமது மொழியியல் அடையாளத்தை சிதைத்து, பெரும்பான்மையினத்தின் தனித்துவத்தை வலிந்து புகுத்தும் இன மேலாதிக்கச் செயற்பாடாகவே இதனையும் கருத வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

கடந்த 2025.03.18 ஆம் திகதி, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22.7 இன் கீழ், ஆனையிறவு உப்பளம் குறித்து பாராளுமன்றில் நான் கேள்வி எழுப்பியபோது வலியுறுத்தியதற்கு அமைவாகவும், எமது மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்பவும் ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பினை ‘ஆனையிறவு உப்பு’ என்ற பாரம்பரிய பெயருடனேயே விற்பனை செய்வதை உறுதிசெய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன் – என்றுள்ளது.

சாலை விபத்தை தடுக்க விஷேட விழிப்புணர்வு!

0

சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேரணி இன்று இடம்பெற்றது.

நாட்டில் ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் ஒரு சாலை விபத்தில் ஒரு விலைமதிப்பற்ற மனித உயிர் இழக்கப்படுவதாகவும், அது இப்போது கட்டுப்படுத்த முடியாத சவாலாக மாறிவிட்டது என்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

வீதிப் பாதுகாப்பு மற்றும் விபத்துத் தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) இன்று (29) கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த நடைபயணத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.

சாலை விபத்துகளைத் தடுப்பதற்கான முறையான மற்றும் நிலையான வேலைத்திட்டம் இல்லாததால், சாலை விபத்துகளால் விலைமதிப்பற்ற உயிர்கள் அகால மரணம் அடைவது மிகவும் வருந்தத்தக்கது என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் கல்வி, சுகாதாரம் மற்றும் சாலை அமைப்பு மிகவும் முன்னேறிய நிலையை எட்டியுள்ள இந்த நேரத்தில், சாலை விபத்துகள் மற்றும் சாலை விபத்துகளைத் தடுப்பது குறித்து எந்த அறிவியல் விசாரணையும் நடத்தப்படவில்லை. மேலும் நாட்டில் இது தொடர்பான ஆராய்ச்சித் திட்டங்களோ அல்லது ஆய்வுகளோ நடத்தப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது என்றும் அமைச்சர் கூறினார்.

“சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு” என்ற கருப்பொருளின் கீழ் நடத்தப்பட்ட இந்த நடைபயணம். இன்று (29) காலை கொழும்பு காலி முகத்திடலில் இருந்து தொடங்கி, லிபர்ட்டி சுற்றுவட்டம் வழியாக விஹாரமஹாதேவி பூங்காவை அடைந்த பின்னர், பொதுமக்கள் விழிப்புணர்வு விழாவுடன் நிறைவடைந்தது.

இந்த பேரணியை சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம், இலங்கை மருத்துவ சங்கம், சாலை போக்குவரத்து விபத்து தடுப்பு தொடர்பான SLMA நிபுணர் குழு பாதுகாப்புப் படைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சகம் உட்பட பல நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

கடந்த ஆண்டு சாலை விபத்துகளால் கிட்டத்தட்ட 2,200 இறப்புகள் ஏற்பட்டுள்ளது. விபத்துகளில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை, வாகன விபத்துகளின் செலவு, சுகாதார சேவையில் ஏற்படும் சிரமம் மற்றும் பிரச்சினைகள் போன்ற இந்த அனைத்து காரணிகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும்போது, நாட்டின் செலவினங்களில் சுமார் 3.7 சதவீதம் இதற்காக செலவிடப்படுகிறது.

இது சர்வதேச நாணய நிதியத்திலிருந்து பெறப்பட்ட தொகையை விட மூன்று மடங்கு அதிகம் என்று கூறப்பட்டது.

இந்த பேரணிக்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர், சிறப்பு மருத்துவர் அனில் ஜாசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், டாக்டர் அசேல குணவர்தன. இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் சிறப்பு மருத்துவர் சுரந்த பெரேரா, செயலாளர் ஆசிரி ஹேவமவகே. இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த ரொட்ரிக் உலக சுகாதார அமைப்பின் நாட்டு பிரதிநிதி டாக்டர் அழகா சிங் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர், மூத்த பேராசிரியர் கபில் சி. ஆகியோர் தலைமை தாங்கினர்

கே. பெரேரா, மூத்த கிரிக்கெட் வீரர்கள் சனத் ஜெயசூரிய, அரவிந்த டி சில்வா, மோட்டார் பந்தய சாம்பியன் டிலந்த மலகமுவ பொது பிரதிநிதிகள், சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சகம் உள்ளிட்ட இராஜாங்க அமைச்சகங்கள் முப்படைகள் மற்றும் காவல்துறை, அரசு சாரா நிறுவனங்கள், சமூக அடிப்படையிவான அமைப்புகள், தனியார் துறை மற்றும் வணிக சமூகம், கலைஞர்கள் மற்றும் பல தரப்பினர் கலந்து கொண்டனர்.

ஆனையிறவில் உப்புத் தொழிற்சாலை!

0

தேசிய உப்புக் கம்பனியுடன் இணைந்த ஆனையிறவு உப்புத் தொழிற்சாலை இன்று மக்கள் பாவனைக்கு.

தேசிய உப்புக் கம்பெனியின் கீழ் இயங்கும் ஆனையிறவு உப்பளத்தின்  தேசிய உப்புத் தொழிற்சாலையை தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி இன்று (29) முதல் மக்கள் பாவனைக்கு திறந்துவைத்தார்.

“ரஜ லுணு” எனும் பெயரில் சமையல் உப்பு வர்த்தக பேருடன் அறிமுகப்படுத்தப்படுவதுடன் அந்த தொழிற்சாலை ஊடாக மிகவும் சாதாரண விலையில் சமையல் உப்பு சந்தைக்கு வழங்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக தொழிற்சாலையின் தலைவர் கயான் வெள்ளால தெரிவித்தார்.

தொழிற்சாலை ஊடாக இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படுவதற்கும் எதிர்பார்ப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

குறித்த நிகழ்வில்  கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.