Thursday, November 13, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 134

அஸ்வெசும திட்டத்தில் மாற்றம்!

0

அஸ்வெசும (ஆறுதல்) நலன்புரி நன்மைகள் உதவி வழங்கும் திட்டத்தைத் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

இன்று (18) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார். 

அஸ்வெசும (ஆறுதல்) நலன்புரி நன்மைகள் உதவி வழங்கும் திட்டம் 2023.07.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்படுவதுடன், 2415/66 மற்றும் 2024.12.21 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இத்திட்டம் இறுதியாகத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 

2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் தற்போது நடைமுறையிலுள்ள அஸ்வெசும உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகள் கீழ்வருமாறு திருத்தப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடுவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. 

* அஸ்வெசும (ஆறுதல்) நலன்புரி நன்மைகள் உதவி வழங்கும் திட்டத்தின் I ஆவது அட்டவணையில் உள்ளடக்கப்பட்டுள்ள ‘நிலையற்றவர்கள்’ சமூகப் பிரிவினருக்கான உதவித்தொகை கிடைக்கின்ற காலப்பகுதியை 2025.04.30 வரை நீடித்தல். 

* குறித்த உதவி வழங்கும் திட்டத்தின் II ஆவது அட்டவணையின் உள்ளடக்கப்பட்டுள்ள இயலாமைக்குட்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவுதொகை மற்றும் சிறுநீரக நோய்க்கான உதவி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவுதொகையை 7,500 ரூபாவிலிருந்து 10,000 ரூபா வரை அதிகரித்தல் மற்றும் முதியோருக்காக வழங்கப்படும் உதவுதொகையை 3,000 ரூபாவிலிருந்து 5,000 ரூபா வரை அதிகரித்தல் மற்றும் குறித்த தீர்மானங்களை 2025 ஏப்ரல் மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தல். 

* II ஆவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள உதவுதொகையைப் பெறுகின்ற இயலாமைக்குட்பட்ட நபர்களுக்கான கொடுப்பனவு, சிறுநீரக கொடுப்பனவு மற்றும் முதியோருக்கான கொடுப்பனவு நோயாளர்களுக்கான மேற்குறிப்பிட்டுள்ள முன்மொழிவுகளுக்கமைய, கொடுப்பனவுக் காலப்பகுதியை 2025.12.31 வரை நீடித்தல். 

* 2025 ஏப்ரல் மாதத்தின் பின்னர் நிலையற்றவர்கள் சமூகப் பிரிவினருக்கான கொடுப்பனவு நிறுத்தப்பட்டாலும், குறித்த குடும்பங்களிலுள்ள இயலாமைக்குட்பட்ட நபர்கள், சிறுநீரக நோயாளர்கள் மற்றும் முதியோருக்கு வழங்கப்படும் நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுக்கான காலப்பகுதியை 2025.12.31 வரை நீடித்தல். 

* புதிதாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள இயலாமைக்குட்பட்ட நபர்கள், சிறுநீரக நோயாளர்களின் விண்ணப்பங்கள் உயர்ந்தபட்ச வரையறையின் கீழ், உள்வாங்கி தகுதி பெறுகின்றவர்களுக்கு குறித்த கொடுப்பனவை 2025.12.31 வரை வழங்கல்.

கண்டுபிடிக்கப்பட்ட 7 லட்சம் சிகரெட்டுகள்!

0

இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட, 12 கோடி ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள சிகரெட் தொகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக வளாகத்தில் உள்ள ஒரு கிடங்கில் இருந்து இந்த சிகரெட் தொகையை, சுங்க வருமான பணிக்குழு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதன்போது, சுமார் 713,000 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சிகரெட்டுகள் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து பாதுக்க பிரதேசத்தில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் பெட்டிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் மதிப்பு 124,019,554 ரூபாவாகும், இதனால் அரசாங்கத்திற்கு 107,985,621 ரூபா  இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் கூறியுள்ளது.

புத்தளத்தில் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து போட்டி!

0

புத்தளம் தொகுதியின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலில் கையொப்பமிடும் நிகழ்வு நேற்று (16.03.2025) புத்தளம் நுஹ்மான் மண்டபத்தில் இடம்பெற்றது.

நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல் தயாரிப்புகள் யாவும் நிறைவுபெற்றுள்ளதாக புத்தளம் நகர சபை முன்னாள் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் தொகுதி இணை அமைப்பாளருமான M.S.M. ரபீக் தெரிவித்துள்ளார்.

புத்தளம் தொகுதியின் உள்ளூராட்சி சபைகளான புத்தளம் மா நகர சபை, கல்பிட்டி பிரதேச சபை மற்றும் வனாதவில்லு பிரதேச சபைகளில் ஐக்கிய மக்கள் சக்தி அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் இணைந்து போட்டியிடுவதுடன் புத்தளம் பிரதேச சபையில் மாத்திரம் ஐக்கிய மக்கள் சக்தி தனித்து போட்டியிடுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை புத்தளம் தொகுதியின் நான்கு உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் நாளைய தினம் புத்தளம் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள உதவி தேர்தல்கள் ஆணையாளர் காரியாலயத்தில் உத்தியோகபூர்வமாக செலுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட தலைவரும், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஹெக்ட்ர் அப்புகாமி கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க சூறாவளியில் சிக்கி 36 பேர் பலி!

0

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் கடுமையான சூறாவளி, காட்டுத் தீ என, அடுத்தடுத்து தொடர்ந்த இயற்கை சீற்றங்களில் சிக்கி, 36 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள மிக்சிகன், மிசோரி மாகாணங்களில், கடந்த 17ம் தேதி இரவு, சூறாவளி வீசத் துவங்கியது. இது, சிறிது சிறிதாக நகர்ந்து, நேற்று முன்தினமும், நேற்றும் மிசிசிபி, ஜார்ஜியா, டெக்சாஸ் என வரிசையாக அடுத்தடுத்த மாகாணங்களை துவம்சம் செய்தது. அதன் தொடர்ச்சியாக, ஒக்லகோமா மாகாணத்தில் காட்டுத் தீ பரவியதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

மணிக்கு 70 கி.மீ., வேகம் வரை வீசிய சூறாவளியால், வயனே கவுன்டி, பட்லர் கவுன்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. பள்ளி கட்டடங்களும் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்தன. லாரிகள் போன்ற கனரக வாகனங்களைக் கூட சூறாவளி புரட்டிப் போட்டது. இடிபாடுகளில் சிக்கி வயனே கவுன்டியில் மட்டும், 15 பேர் உயிரிழந்தனர்.

சூறாவளியைத் தொடர்ந்து, புழுதி காற்றும் பலமாக வீசியதால், சாலைகளில் வாகனங்களை இயக்க முடியவில்லை. கன்சாஸ் நகர சாலையில், 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதின. மிசிசிபியில் 10 பேர் பலியாகினர்.

சூறாவளி, புழுதிப்புயலைத் தொடர்ந்து ஓக்லகோமா மாகாணத்தில் பயங்கரமாக காட்டுத் தீ பரவியது. மாகாணம் முழுதும், 130 இடங்களில் தீப்பிடித்ததில், 689 சதுர கி.மீ., நிலங்கள் தீக்கிரையாகின.

இதற்கிடையே, மினசோட்டா, டகோட்டா ஆகிய இடங்களில் நேற்று பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அரை அடி அளவுக்கு பனிகட்டி குவியும் என்றும், சூறாவளியும் சேருவதால் வீடுகள் சேதமைடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. ‘மார்ச் மாதத்தில் இதுபோன்ற அடுத்தடுத்த இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது, இதுவரை காணாத நிகழ்வு’ என வானிலை வல்லுநர்கள் கூறினர்.

இயற்கையின் கோரத் தாண்டவத்தால், அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில், 10 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 36 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சூறாவளி வலுவிழக்காமல் லுசியானா, மிசிசிபி, அலபாமா, ஜார்ஜியா, புளோரிடா மாகாணங்களை கடப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளதால் சேதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

51 குடும்பங்களுக்கு நிலத்துடன் புதிய வீடுகள்!

0

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 51 குடும்பங்களுக்கு நிலத்துடன் கூடிய புதிய வீடுகள்

(ஹல்துமுல்ல நாயபெத்த நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 51 குடும்பங்களுக்கான புதிய வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா)

நிலச்சரிவு காரணமாக இருப்பிடங்களை இழந்து இரண்டு ஆண்டுகளாக பூனாகலை மஹாகந்த தேயிலைத் தொழிற்சாலையில் வசித்து வந்த 51 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (16) ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவின் பூனாகலை கபரகலை பிரிவில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர், ஊவா மாகாண ஆளுநர், இராணுவத் தளபதி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஹல்துமுல்ல நிலச்சரிவுக் காரணமாக பாதிக்கப்பட்ட இந்த 51 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் தலா பத்து பேர்ச்சஸ் காணிப் பகுதிகளுடன் புதிய வீடுகள் வழங்கப்படவுள்ளன. இந்தப் பத்து பேர்ச்சஸ் காணிப் பகுதியுடன் ரூ. 28 லட்சம் செலவில் அனைத்து வசதிகளுடன் கூடிய வீடு கட்டப்படவுள்ளதுடன், 51 வீடுகள் கட்டும் திட்டத்திற்கான நிதி செலவை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு ஏற்கவுள்ளதுடன், இலங்கை இராணுவத்தின் பங்களிப்புடன் இது கட்டப்படவுள்ளது.

வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன,

“இந்த வீடுகள் கட்டுவதற்கான பணம் தன்னுடைய அல்லது வேறு யாருடைய தனிப்பட்ட பணம் அல்ல, பொதுமக்களின் வரிப்பணம் என்றும், அதனால் தனக்கும் தனது குழுவினருக்கும் போடப்பட்ட மாலைகள் தமக்கோ அல்லது தமது குழுவினருக்கோ போடப்பட வேண்டியதில்லை என்றும் கூறினார்.

புதிய அரசாங்கம் பாரம்பரிய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் பதவிக்கு வந்துள்ளதால், மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் மக்களின் பிரச்சினைகளில் தலையிடுவது அவசியம் என்றும், கடந்த காலத்தில் மக்கள் பிரதிநிதிகள் வேலை செய்யவில்லை என்று தான் கூறவில்லை என்றும், ஆனால் முன்னுரிமை கொடுத்து செய்ய வேண்டியதை செய்யாததால் ஏற்பட்ட தவறுகளை எதிர்காலத்தில் சரிசெய்வோம் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

தமது அரசாங்கத்திற்கு வாய்ப்புக் கிடைத்தவுடன் அனாதைகள் முகாம்களில் இருந்து வெளியேற்றி புதிய வீடுகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், இதேபோல் 2014 ஆம் ஆண்டு முதல் சமசர நிலச்சரிவுக் காரணமாக அனாதைகள் முகாம்களில் உள்ள 22 குடும்பங்களுக்கும் விரைவில் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், மக்களுக்கு அப்படி நேர்ந்தாலும் ஆட்சியாளர்களுக்கு அப்படி நடக்கவில்லை. வீடுகள் தீக்கிரையான பிறகு, மாதக்கணக்கில் கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு பெற்றனர். இப்போது இந்த வீட்டுத் திட்டம் நாட்டு மக்களின் வரிப்பணத்தில் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சு இந்த வீடுகளுக்காக ரூ. 1800 லட்சம் ஒதுக்கியுள்ளது. ஆனால் கடந்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் வீடுகளுக்கு ஒரு வீட்டிற்கு சுமார் ரூ. 1300 லட்சம் செலவு செய்ததாக அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்”

இந்த நிகழ்வில் ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தர லிங்க பிரதீப் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி உட்பட மேலதிக செயலாளர்கள், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், பதுளை மாவட்ட மேலதிக செயலாளர், ஹல்துமுல்ல பிரதேச செயலாளர், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் புதிய வீட்டு பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கிராம சேவையாளர்கள் போராட்டம்!

0

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கிராம சேவையாளர்கள் சுகயீன விடுமுறை போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச செயலக பெண் கிராம உத்தியோகத்தரான நாகேந்திரம் கார்த்திகா என்பவருக்கு கடந்த 2025.03.08 உலக மகளிர் தினத்தன்று அவரது அலுவலக நேரத்தில் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிராம உத்தியோகத்தர்களுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்தக் கோரி சுகயீன விடுமுறை போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் நாட்டில் பாதுகாப்பு குறித்த பெரும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், நாட்டின் பல பாகங்களிலும் அவ்வப்போது இவ்வாறான மிலேச்சனமான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

கண்ணீருடன் விடைபெற்ற நளீம் எம்.பி!

0

ஏறூர் மண்ணை தேசியத்தில் மனக்கச்செய்து கண்ணீருடன் விடைபெற்ற நளீம் எம்பி

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) ஓட்டமாவடி.

தேசிய அரசியலில் முன்மாதிரிமிக்க மனிதராக இன்று பார்க்கப்படும் சாலி முஹம்மது நளீம் ஏறாவூர் மண்ணுக்கு கௌவரம் சேர்த்துள்ளார்.

கணவான் அரசியல்வாதிகள் வாழ்ந்து மறைந்த ஏறாவூர் மண்ணில் அரசியலில் அதிகாரங்களை அடைந்து கொள்வதற்காக கட்சி மாறி, வசைபாடித்திரியும் நபர்களுக்கு மத்தியில் கொடுத்த வாக்கை நிறைவேற்றி கௌரவமாக பாராளுமன்றத்திலிருந்து வெளியேறினார்.

ஏறாவூர் அரசியலில் கணிசமான பங்கு முஸ்லிம் காங்கிரஸுக்கும் இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இருக்கிறது.

கட்சியின் முக்கிய தவிசாளர், பிரதித்தலைவர் பதவி என ஏறாவூர் மண்ணுக்கு கொடுத்து அழகு பார்த்தார். அரசியலதிகாரம் என்ற அடிப்படையில் தேர்தலில் தோல்வியை ஏறாவூர் மண் தழுவிய போது, பல தடவைகள் தேசியப்பட்டியலூடாகவும் அதிகாரங்களைக் கொடுத்தார்.

அமைச்சராக, பிரதியமைச்சராக, இராஜாங்க அமைச்சராக, மாகாண முதலமைச்சராக, மாகாண சபை அமைச்சராக, மாகாண சபை உறுப்பினராக என அதிகாரங்களும் தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீமினால் முஸ்லிம் காங்கிரஸினூடாக ஏறாவூர் மண் பெற்றுக்கொண்டது.

இவ்வாறான அதிகாரங்களைப்பெற்று அனுபவித்தவர்கள் காலப்போக்கில் தலைமைக்கெதிராக கட்சிக்கு துரோகம் செய்து கட்சி கட்சியாய் மாறிப்போன போதும்கூட, முஸ்லிம் காங்கிரஸின் தலைமை ஏறாவூம் மண் மீது நம்பிக்கை இழக்கவில்லை. அம்மக்களை கைவிடவுமில்லை.

கடந்த பாராளுமன்றத்தேர்தலில் பலத்த போட்டிக்கு மத்தியில் பல அரசியல் ஜாம்பவான்களை எதிர்த்து களத்தில் நின்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் ஆசனத்தை முஸ்லிம் காங்கிரஸினூடாக உறுதிப்படுத்துவதில் நளீம் ஹாஜியாரின் பங்கு அளப்பெரியது.

இதன் காரணமாக, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம், தனது கட்சிக்கு கிடைத்த தேசியப்பட்டியலை சுழற்சி முறையில் பகிர்ந்தளிக்க முடிவு செய்த போது, கடந்த காலங்களில் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களும் ஆரம்பத்தில் இப்படி ஒரு முயற்சியை எடுத்து தோல்வி கண்ட நிலையில், ரவூப் ஹக்கீம் அவர்களும் கடந்த காலங்களில் தேசியப்பட்டியலை வழங்கி, மீளப்பெறுவதற்கு முயற்சித்த போது சிலர் கட்சி மாறி ஆளுங்கட்சியோடு ஒட்டிக்கொண்ட சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும். மீண்டும் இவ்வாறான முயற்சி வெற்றியளிப்பதற்கு ஆரம்பமாக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான நபராக ஏறாவூர் மகன் நளீம் ஹாஜியாரைத்தெரிவு செய்து அமானிதத்தை ஒப்படைத்த நிலையில், அதனை திரும்பக் கொடுத்து அமானிதத்தைக் காப்பாற்றியவராக வரலாற்றில் இடம்பிடித்தார் நளீம் ஹாஜியார்.

மக்களோடு அன்பாகப்பழகக்கூடியர், ஏறாவூர் நகர சபை உறுப்பினராகத்தெரிவு செய்யப்பட்டு, நகர சபையின் தவிசாளராக, பாராளுமன்ற உறுப்பினராக மூன்று மாதங்கள் இருந்த நிலையில், தனக்கு கிடைத்த சம்பளம் உட்பட மேலதிகக் கொடுப்பனவுகளையும் மக்களுக்குப் பகிர்ந்தளித்து முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்.

தற்போது தன்னிடம் வழங்கப்பட்ட அமானிதத்தை மூன்று மாத காலங்கள் பாராளுமன்றத்தில் மக்களின் குரலாக மட்டு.மாவட்டத்திற்கு வெளியிலுள்ள மக்களின் பிரச்சினைகளையும் பாராளுமன்றத்திற்கு கொண்டு சென்று குரல் கொடுத்தது மாத்திரமின்றி, முஸ்லிம் விரோதக்கருத்துக்கள் பாராளுமன்றத்தில் பேசப்பட்ட போது, துணிந்து எதிர்த்து பதிலடி கொடுத்தவர். குறுகிய பாராளுமன்ற காலத்திற்குள் அடிக்கடி மக்கள் பிரச்சினைகளைப் பேசிய பாராளுமன்ற உறுப்பினராகக் காணப்படுகிறார்.

பிரதேசவாதம் தலைதூக்கியிருக்கும் அரசியலில் தனது பண்பாடு, ஒழுக்கம், சகல பிரதேச மக்களோடும் சகஜமாகப்பழகி, அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதும் அவர்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் பேசியதனூடாகவும் மனங்களை வென்று இவர் இன்னும் பாராளுமன்றத்தில் இருக்கக்கூடாதா? என்று அங்கலாய்க்கும் நிலையைத் தோற்றுவித்து விடைபெற்றுச்சென்று விட்டார்.

பாராளுமன்றில் உருக்கமான உரையோடு, ஏறாவூர் மண்ணுக்கு தேசிய ரீதியாக கௌரவம் சேர்த்து சிறந்த முன்னுதாரணங்களோடு இறுதியில் கண்ணீரோடு விடைபெற்றார்.

இவரின் நடவடிக்கைகளை பாராளுமன்றில் அவதானித்த ஆளுங்கட்சியின் முக்கிய அமைச்சர் சொன்ன வார்த்தை “இவர் எங்கள் கட்சியில் இருக்க வேண்டியவர்” என்று.

பாராளுமன்றத்தில் பிரியாவிடை பெறும் போது தனக்கு பதவி தந்து தன்னை அலங்கரித்து அழகு பார்த்த தலைவரிடம் விடைபெறும் போது ஆரத்தழுவிய போது தலைவரின் கண்களும் கலங்கி விட்டது.

எதிர்கால முஸ்லிம் அரசியலில் இவர் போன்ற பலரும் உருவாக வேண்டுமென எதிர்பார்ப்பதோடு, ஏறாவூர் நகர சபைத்தேர்தலில் களம் காணவிருக்கும் நளீம் ஹாஜியாருக்கு ஏறாவூர் மக்கள் அமோக ஆதரவினை வழங்கி தங்களைக் கௌரவப்படுத்தி மண்ணை தேசியத்தில் மனக்கச்செய்த மகனை நகர சபைத் தலைவராகத்தெரிவு செய்ய வேண்டும்.

அதற்காக ஏறாவூர் வட்டாரங்களில் நளீம் ஹாஜியாரின் தலைமையில் வட்டார ரீதியாகப் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரையும் அந்தந்த வட்டார மக்கள் நளீம் ஹாஜியாராக எண்ணி வாக்களித்து வெற்றி பெறச் செய்வது அவரின் பெரும்தன்மைக்கு ஏறாவூர் மக்கள் கொடுக்கும் கௌரவமாகப் பார்க்கப்படும்.

இவ்வாறு ஏறாவூர் மண்ணை தேசியத்தில் கௌரவப் படுத்திய, கணவான் அரசியலை மீண்டும் உயிர்ப்பித்த நளீம் ஹாஜியாருக்கு ஏறாவூர் மக்கள் செய்யவிருக்கும் கைங்கரியம் என்னவென்பதை தேசியம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

உள்ளூராட்சித்தேர்தல் முடிவுகள் அதற்கான சிறந்த பதிலாக அமையுமென எதிர்பார்க்கிறோம்.

வடக்கில் வேட்பு மனுவை செலுத்திய கட்சிகள்!

0

இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளுக்குமான வேட்பு மனு இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கையளிக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுவை செலுத்தியிருந்தார்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பன இன்றைய தினம் கிளிநொச்சியிலுள்ள மூன்று உள்ளூராட்சி சபைகளுக்கான கட்டுப்பணத்தை செலுத்தினர்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக மாவட்ட அமைப்பாளர் மரியசீலன் அவர்களும் தேசிய மக்கள் சக்தி சார்பாக கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன் அவர்களும் கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

பத்துலுஓய பகுதியில் கோர விபத்து!

0

நிக்கவெரட்டிய பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, ஆராச்சிகட்டுவ, பத்துலுஓய பகுதியில் வீதியை விட்டு விலகி, மரமொன்றில் மோதி, பின்னர் கடை மற்றும் வீட்டொன்றின் மீது மோதி விபத்துள்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்து இன்று (17) காலை இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் வீட்டில் இருந்த ஒரு சிறு குழந்தை உட்பட 21 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் பஸ் சாரதி மற்றும் நடத்துனரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆராச்சிகட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இரவு விடுதியில் கருகிய 51 உடல்கள்!

0

வடக்கு மாசிடோனியாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 51 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

வடக்கு மாசிடோனியா என்பது தென்கிழக்கு ஐரோப்பாவில் பால்கன் குடாவில் அமைந்துள்ள ஒரு நாடு. இது 1991ம் ஆண்டில் யுகோஸ்லாவியாவில் இருந்து பிரிந்து தனிநாடாகியது.

வடக்கு மாசிடோனியாவின் வடமேற்கில் கொசோவோ, வடகிழக்கில் செர்பியா, கிழக்கில் பல்கேரியா, தெற்கில் கிரேக்கம், மேற்கில் அல்பேனியா ஆகிய நாடுகள் எல்லைகளாக உள்ளன. இங்குள்ள இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 51 பேர் பலியாகி உள்ளனர்.

இது குறித்து உள்துறை அமைச்சர் பஞ்சே டோஷ்கோவ்ஸ்கி கூறியதாவது:

நாட்டின் கிழக்கு நகரமான கோக்கானியில் உள்ள ஒரு இரவு விடுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 51 பேர் பலியானார்கள், சுமார் 100 பேர் காயமடைந்தனர்.

உள்ளூர் பாப் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சியின் போது அதிகாலை 2:35 மணியளவில் தீ விபத்து தொடங்கியது. இந்த கிளப்பிற்கு வந்த பார்வையாளர்கள் பட்டாசுகளை வெடித்ததால் தீப்பிடித்தது.

இந்த மிகவும் கடினமான தருணங்களில், அரசு, தேவவையான உதவியை செய்யும். இச்சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இரவு விடுதிக்குள் குழப்பம் நிலவுவதை வீடியோக்கள் காட்டுகின்றன, பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

வடக்கு மாசிடோனியாவின் பிரதமர் ஹ்ரிஸ்டிஜன் மிக்கோஸ்கி கூறுகையில்,

இது மாசிடோனியாவிற்கு ஒரு கடினமான மற்றும் மிகவும் சோகமான நாள். பல இளம் உயிர்களை இழந்தது ஈடுசெய்ய முடியாதது, மேலும் குடும்பங்கள், அன்புக்குரியவர்கள் மற்றும் நண்பர்களின் வலி அளவிட முடியாதது என்று கூறியுள்ளார்.