Monday, July 28, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 134

செயற்கை நுண்ணறிவுதான் நம் எதிர்காலம் – சுந்தர் பிச்சை

0

செயற்கை நுண்ணறிவு நம் வாழ்நாளின் மிகப்பெரிய தொழில்நுட்ப மாற்றமாக இருக்கும் என்று கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் பெரும்பாலாக அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள், கடந்த 1998ல் செர்ஜி பிரின், லாரி பேஜ் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. இம்மாத இறுதியில் கூகுள் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

இதையடுத்து கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது:

வரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நம் வாழ்நாளில் மிகப்பெரிய தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்படுத்தும். கணினியில் இருந்து ஸ்மார்ட்ஃபோனுக்கு மாறிய தொழில்நுட்பத்தைவிட, ஏன் இணையத்தைவிட இது மிகப்பெரிய மாற்றமாக இருக்கும். தொழில்நுட்பத்தின் மறுசீரமைப்பு மற்றும் மனித புத்திக் கூர்மையின் நம்பமுடியாத விஷயமாக இது இருக்கும்.

மனிதனின் நுண்ணறிவு மற்றும் நினைவாற்றலின் அளவை மீறுவதற்கு மூளை போன்ற பல நெட்ஒர்க்குகளை உருவாக்க ‘இயந்திர கற்றல்’ என்பது கணினிக்கு பல்வேறு தரவுகளை வழங்குகிறது. இது அனைத்துத் துறைகளிலும் புரட்சியை ஏற்படுத்துகிறது.

தேடுதல் மூலமாக கூகுள் பணம் ஈட்டுவதற்கு செயற்கை நுண்ணறிவு அச்சுறுத்தலாகவும் இருக்கலாம்.

தற்போது இரு முறைகளில் தேடல் நிகழ்கிறது. ஒரு கேள்விக்கு விடை தேடும்போது, கூகுள் போன்ற தேடுபொறிகளில் நேரடி விடை கிடைக்கும், இல்லையெனில் அதுகுறித்த அதிகாரபூர்வ இணையதளத்துக்குச் சென்று பதிலைக் கண்டறிந்து காண்பிக்கும்.

இருப்பினும், பல செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் குறிப்பாக செயற்கை நுண்ணறிவின் சாட் ஜிபிடி(ChatGPT) இதனை ஒரே படிநிலையாகக் குறைக்கிறது. வேறு இணையதளங்களுக்கு எதுவும் செல்லாமல் உடனடியாக பதில் அளித்து தேடல் செயல்முறையை மேலும் எளிதாக்குகிறது. இது மனிதனின் வேலைகள் பலவற்றை தேவையற்றதாக மாற்றும்.

உதாரணமாக மனிதர்களின் உதவியின்றி செயல்படும் செயற்கை நுண்ணறிவு, மருத்துவம், சட்டம் என பல துறைகளில் துல்லியமாக செயல்படும். அடுத்த 5 ஆண்டுகளில் வெள்ளை காலர் தொழிலாளர்கள் மட்டுமின்றி லாரி ஓட்டுநர்கள், பணியாளர்கள், காவலாளிகள் என நீல காலர் தொழிலாளர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனவே செயற்கை நுண்ணறிவின் முதல் நிறுவனமாக கூகுள் இருக்க வேண்டும் என்று நான் தலைமை பொறுப்பை ஏற்றதுமே கூறினேன். கூகுள் நிறுவனம் கடந்த 2000 ஆண்டுகளில் இருந்து இயந்திர கற்றல் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்து அதனை முதன்மையாக பயன்படுத்தியும் வருகிறது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதில் நாங்கள் முதன்மையானவர்கள். இதன் மூலமாக கூகுள் பல புதுமைகளை வழங்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் பெயரை உரிமை கோருமா பாக்கிஸ்தான்?

0

ஏற்கனவே இந்தியா என்ற பெயரை பாரதம் என மாற்றுவதற்கு உள்நாட்டில் பல்வேறு எதிர்க்கருத்துகள் எழுந்துள்ள நிலையில், பாரதம் என பெயரை மாற்றினால், இந்தியா பெயருக்கு பாகிஸ்தான் உரிமை கொண்டாடும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கான விருந்து அழைப்பிதழில், இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பாரத குடியரசுத் தலைவர் என்று அச்சிடப்பட்டிருந்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கான விருந்து அழைப்பிதழில், இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பாரத குடியரசுத் தலைவர் என்று அச்சிடப்பட்டிருந்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

பாகிஸ்தான், இந்துஸ் மாகாணம் என்று அடையாளப்படுத்தும் விதமாக இந்தியா என்ற பெயரை உரிமை கோருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்த பதிவை ஆதரிப்போர் தெரிவித்துள்ளனர்.

இதுவரை மத்திய அரசிடமிருந்து, இந்தியா என்ற பெயரை பாரதம் என மாற்றுவது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில், இந்தியா என்ற பெயருக்கு பாகிஸ்தான் உரிமை கோரும் என்ற அளவுக்கு விவாதங்கள் சென்றுள்ளன.

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் அரசாங்கத்திலா?

0

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான உண்மை வெளிவராமல், நியாயமான, விசாரணை நடத்தப்படாமல் இருப்பதற்கு காரணம் சம்பந்தப்பட்டவர்கள் அரசில் இருப்பதால் தானா? என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (06) நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும்  தெரிவிக்கையில்

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து வெளிப்படைத் தன்மையுடன் கூடிய பாரபட்சமற்ற மற்றும் நியாயமான விசாரணை நம் நாட்டில் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தோம்.

அந்தக் கொடூரத் தாக்குதலால் பல உயிர்கள் பலியாகியுள்ளன. இந்தக் காட்டுமிராண்டித்தனமான – கொடூரமான வன்முறைத் தாக்குதலை அன்றும், இன்றும், நாளையும் நாமும் முழு மக்களும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

தற்போது நமது நாட்டில் இந்தக் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதல் குறித்து நியாயமான தேசிய விசாரணை நடைபெறவில்லை என்பதைப் பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்த நம் நாட்டு மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும். தற்போதைய அரசு கூட நியாயமான விசாரணை நடத்தப்படும் என்ற வாக்குறுதியை அளித்து தான் நிறுவப்பட்டது. இன்று தேசிய மட்டத்திலான விசாரணை முன்னெடுக்கப்படாததால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதற்காக உருவான அரசு இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருந்தால் அதன் உண்மைத் தன்மையை அறிய வேண்டும்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அனைத்து விசாரணைகளும் தற்போது மறைக்கப்பட்டுள்ளன. உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் அடிப்படையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மதவாத மற்றும் இனவாத தாக்குதல்களை நாம் மறக்க முடியாது.

இது தொடர்பில் உண்மையைக் கண்டறிய அரசுக்கு முதுகெலும்பில்லை என்றாலும் சர்வதேச சமூகம் இந்த உண்மையை வெளிப்படுத்தி வருகின்றது. இது தொடர்பாக வெளிப்படையான விசாரணை தேவை.

இது தொடர்பாக தெரிவுக்குழு நியமிக்கப்படும் என்றும் பேசப்படுகின்றது. இது திருடனின் தாயாரிடம் மை பார்ப்பது போன்றாகும்.

இந்த இரத்த வெறி கொண்ட அரசால் உண்மையை வெளிக்கொண்டு வர முடியாது என்பதால் நியாயமான சர்வதேச விசாரணை அவசியம். ஐக்கிய மக்கள் சக்தி அரசின் கீழ் தேசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்புடன் நியாயமான விசாரணைகள் நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்படும்“ என தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியால் உயிரிழந்த மற்றுமொரு குழந்தை

0
தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர், 4 மாத குழந்தையொன்று உயிரிழந்த செய்தி வெலிகம – நலவன பகுதியில் பதிவாகியுள்ளது.

குழந்தைக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி விஷமானமையே இறப்புக்கான காரணம் என குழந்தையின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த 2 ஆம் திகதி நான்கு மாதத்திற்கான தடுப்பூசி, வெலிபிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் குறித்த குழந்தைக்கு செலுத்தப்பட்டது.

இதனையடுத்து, குறித்த குழந்தைக்கு ஏற்பட்ட கடும் குளிர் காரணமாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனினும், அந்த குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே இறந்திருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை மீதான விவாதம் இன்று இரண்டாவது நாளாகவும் நாடாளுமன்றில் விவாதிக்கப்படுகின்றது.

முரளியின் வாழ்க்கை சரித படத்தால் வெடித்த சர்ச்சை

0
இலங்கை சமூகத்தையும், உலக மக்களையும் திரும்பி பார்க்க வைக்கும் மலையக தமிழன் என்று வசனத்தை மாற்றியமையுங்கள்.

தடை செய்யப்பட்ட வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்த வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், கிரிக்கெட் போட்டியாளர் முத்தையா முரளிதரனை வலியுறுத்தியுள்ளார்.

கிரிக்கெட் போட்டியாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை சரிதம் என்ற அடிப்படையில் வெளிவரவுள்ள திரைப்படத்தின் முன்னோட்ட காணொளியில் இடம்பெறும் சர்ச்சைக்குரிய சொற்பிரயோகம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர் மத்தியில், தடைசெய்யப்பட்ட வார்த்தையை உங்கள் திரைப்பட முன்னோட்ட காட்சியில் (ட்ரேலரில்) பயன்படுத்த வேண்டாம்.

அந்த வார்த்தையை நானே நேரடியாக தடை செய்து காட்டியுள்ளேன். கதையம்சத்துக்கு தேவை என என்னிடம் கதைவிட வேண்டாம்.

நானே ஒரு கதாசிரியர். எனக்கு இது பற்றித் தெரியும். குறிப்பிட்ட இடத்தில் “நாட்டை திரும்பி பார்க்க வைத்த மலையக தமிழன்” என்று இடுங்கள். சரியாக வரும்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

0
2022 மற்றும் 2023 ஆம் கல்வியாண்டுக்காக 45 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என அந்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அது தொடர்பான விண்ணப்பம் மற்றும் அறிவுறுத்தல் கையேடுகளை அங்கீகரிக்கப்பட்ட புத்தக விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாறப்போகிறதா இந்திய நாட்டின் பெயர்?

0

இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றப்படுவதாக பல நாட்களாக பேச்சு அடிப்பட்டு வந்த நிலையில், மக்கள் இதை பெரியதாக எடுத்துக்கொள்ளாமல் கடந்து போன நிலையில் இன்று காலை இந்தியாவின் பெயரை பாரத் என ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ ஜி20 கூட்டத்தின் சிறப்பு விருந்து அழைப்பிதழ்கள் இடம்பெற்று இருந்தது மக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை உருவாக்கியது.

இந்த செய்தி டிவிட்டரில் காட்டுத்தீ போல பரவிய நிலையில் பலர் கடுமையான கருத்துக்களை முன்வைத்த நிலையில், பலர் வழக்கம் போல் இந்த விஷயத்தையும் மீம் போட்டு கலாய்க்க துவங்கியுள்ளனர். இதனால் இந்திய டிரென்டிங்கில் பாரத் என்ற ஹேஷ்டேக் கீழ் பல மீம்கள் டிரெண்டான நிலையில் அதில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்.

டிவிட்டரில் பிரபல செய்தியாளரான முகமது ஜூபைர் தனது டிவிட்டரில் இந்தியா டுடே பத்திரிக்கையாளர் பாரத் பெயர் மாற்றம் குறித்த தகவல் பதிவிட்ட நிலையில் முகமது ஜூபைர், இந்தியா டுடே பத்திரிக்கை பெயரை கூட மாற்ற முடியாது பாரத் டுடே என்ற பெயர் ஏற்கனவே எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது என பெயர் மாற்றத்தில் வரும் பிரச்சனைகளை கிண்டலாக தெரிவித்தார்.

எருக்கலம்பிட்டி மண்ணுக்கு மற்றுமொரு மகுடம்

0

அல்ஹம்துலில்லாஹ்.. எருக்கலம்பிட்டி மண்ணுக்கு மற்றுமொரு மகுடம் கட்டார் நாட்டில்

மன்னார் எருக்கலம்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த அல்ஹாஜ் முஹம்மது இப்றாஹிம் அன்வர் (Iffath Pharmacy), ஹாஜியானி வதூதா அன்வர் (ஓய்வு பெற்ற ஆசிரியை) ஆகியோரின் இளைய புதல்வன் முஹம்மது நபார் அவர்கள் இன்று 2023-09-04 கட்டார் நாட்டின் அரசாங்கத்தினால் கெளரவிக்கப்பட்டுள்ளார்கள்.

கட்டார் நாட்டின் அரசாங்க உத்தியோகத்தில் நீண்ட காலம் சிறந்த சேவையாற்றியமைக்காக அவருக்கு இந்த கெளரவ விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இவர் Qatar Energy நிறுவனத்தில் பத்து வருடங்களுக்கும் மேலாக தனது சேவையினை வழங்கி வந்துள்ளதுடன், அவரின் சிறப்பான சேவையின் மூலமாக இந்த விருதினை பெற்றுள்ளமை பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இவர் B.Sc Agri (EUSL), M.Sc in OM (UOP) , PGD போன்ற பல கல்விசார் பட்டங்களையும் பூர்த்தி செய்திருப்பது கல்வியின் முக்கியத்துவத்தை எமது இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இவர் எட்டிய இந்த கல்லை பாராட்டி ஊரின் பல முக்கியஸ்தர்களும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அவருக்கு எமது e-News First சார்பாக வாழ்த்துக்களை தெரிவிப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகின்றோம்.

ஹீத் ஸ்ட்ரீக் தனது 49வது வயதில் காலமானார்

0

ஜிம்பாப்வேயின் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், நாட்டின் அனைத்து நேரங்களிலும் முன்னணி விக்கெட்டுகளை வீழ்த்தியவருமான ஹீத் ஸ்ட்ரீக், கல்லீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோயுடன் போராடி தனது 49 வயதில் காலமானார்.

“செப்டம்பர் 3, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், எனது வாழ்க்கையின் மிகப் பெரிய அன்பும், என் அழகான குழந்தைகளின் தந்தையும், தனது கடைசி நாட்களை தனது குடும்பத்தினரால் சூழ விரும்பிய அவரது வீட்டிலிருந்து தேவதூதர்களுடன் அழைத்துச் செல்லப்பட்டார் என்று அவரது மனைவி நாடின் ஸ்ட்ரீக் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் மருத்துவமனையில் மே மாதம் முதல் வாரந்தோறும் சிறப்பு சிகிச்சை பெற்று வருவதாக ESPN தெரிவித்துள்ளது.

ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர் மற்றும் திறமையான பேட்ஸ்மேன், ஸ்ட்ரீக் 1990 களின் பிற்பகுதியிலும் 2000 களின் முற்பகுதியிலும் கிரிக்கெட்டின் பெரிய நாடுகளுக்கு எதிராக போட்டியிட்ட ஜிம்பாப்வே அணிகளில் முக்கிய உறுப்பினராக இருந்தார்.

இருப்பினும், அவரது கிரிக்கெட் வாழ்க்கை 2021 இல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஊழல் எதிர்ப்பு சட்டத்தை மீறியதற்காக எட்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்டபோது அவமானத்தில் முடிந்தது.

பெயர் குறிப்பிடப்படாத இந்தியர் ஒருவருக்கு வீரர்களின் தகவல் மற்றும் தொடர்பு விவரங்களைத் தெரிவித்ததற்காகவும், பிட்காயினில் $35,000 உள்ளிட்ட கட்டணத்தை ஏற்றுக்கொண்டதற்காகவும் ஐசிசியால் அவருக்கு எட்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

ஸ்ட்ரீக் தனது செயல்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார், ஆனால் அவர் ஒருபோதும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை என்று கூறினார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கட் 1 லட்சமா?

0
எதிர்வரும் சனிக்கிழமை (02) கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண போட்டிக்கான நுழைவுச் சீட்டுகளின் விலை 96,000 ரூபாயாக உயர்வடைந்துள்ளது.

பிரதான மைதானத்தின் மேல் தளத்தில் உள்ள இருக்கைக்களுக்காகவே இந்த அளவில் கட்டணம் அறவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

எவ்வாறாயினும் நாளை மறுதினம் (31) நடைபெறவுள்ள இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டிக்கான நுழைவுச் சீட்டு விலைகள் அவ்வளவு உயர்வாக நிர்ணயிக்கப்படவில்லை.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் போட்டிக்கான நுழைவுச் சீட்டின் விலை ரூ.1600, ரூ.6400 மற்றும் ரூ.11,200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல்லேகல மைதானத்தில் போட்டிகளை காணக்கூடிய பார்வையாளர்களின் எண்ணிக்கை 25,000 ஐ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், 6,000 பார்வையாளர்களுக்கு மட்டுமே இருக்கை வசதி உள்ளது.

மேலும் 15,000 முதல் 16,000 பார்வையாளர்கள், இருக்கை வசதிகள் இல்லாத பிரதான ஓட்ட எண்ணிக்கை பதாதை அருகிலும், எதிரே அமைந்துள்ள புல் மைதானத்தில் போட்டிகளைப் பார்க்க முடியும்.

மேல் தளத்தில் ஆசனம் ஒன்றின் விலை 96,000 ரூபா எனவும் பிரதான விளையாட்டு மண்டபத்தில் இவ்வாறான 1000 ஆசனங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பிரதான விளையாட்டு அரங்கின் கீழ் தளத்தில் ஒரு இருக்கையின் விலை 40,000 ரூபாவாகும், அத்தகைய இருக்கைகள் 5000 உள்ளன.

ஆசன வசதியோ அல்லது கூரை பாதுகாப்போ இல்லாமல், புல் மீது அமர்ந்து அல்லது நின்றபடி போட்டியைக் காண ஒரு நுழைவுச் சீட்டின் விலை 9,600 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கான ரூ.96,000 விலையில் இருந்த 1,000 நுழைவுச் சீட்டுகளில் நேற்று (27) மாலை வரை விற்கப்பட்ட நிலையில், 58 நுழைவுச் சீட்டுகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

40,000 ரூபாய் விலையுள்ள 5,000 நுழைவுச் சீட்டுகளில், 1,029 நுழைவுச் சீட்டுகள் மீதமுள்ளன.

கிட்டத்தட்ட 16,000 புல் மைதான நுழைவுச் சீட்டுகளில் 11,600 மீதம் உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் நுழைவுச் சீட்டுகளை விற்பதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவித்துள்ளது.

இந்த நுழைவுச் சீட்டுகள் அனைத்தும் இணையத்தள பதிவின் ஊடாக விற்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், மைதானத்தின் நுழைவாயிலில் போட்டி ரசிகர்களை சோதனையிட பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு பிரசன்னமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.