Sunday, May 3, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 134

இறுதித்தூதர் முஹம்மது நபியின் பிறந்த தினம் இன்றாகும்!

0

இஸ்லாத்தின் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினமான மீலாதுன் நபி தினம் இன்றாகும். 

முஹம்மது நபியின் பிறந்த தினத்தை மீலாதுன் நபி தினமாக இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.

இறுதி நபியான முஹம்மது நபி (ஸல்) அவர்கள், சன்மார்க்க சமுதாயத்தைக் கட்டியெழுப்பத் தம்மை அர்ப்பணித்து, அதற்காகப் பெரும் பணியை ஆற்றியவர் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் 

புனித மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இஸ்லாமிய ஒழுக்க நெறியை நிறுவுவதில் முன்னோடியாகவும் அவர் திகழ்ந்தார். அக்கால சமூகத்திற்கு இஸ்லாத்தின் செய்தியை முன்வைப்பதில் நபிகள் நாயகம் கடுமையான துன்பங்களை அனுபவித்தார். அத்தகைய தருணங்களிலும் கூட, அவர் பொறுமையையும் மௌனத்தையும் கடைபிடித்தார். 

பிளவுபட்ட அரபு சமூகத்திற்குப் பதிலாக, இஸ்லாத்தின் அடிப்படையையும் அர்த்தத்தையும் சுமக்கின்ற, சகோதரத்துவம், அமைதி மற்றும் தியாகத்தை மனதில் கொண்டு உன்னத விழுமியங்கள் நிறைந்த சமுதாயத்தை உருவாக்க, 23 வருடங்களாக, முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தனது பிரசங்கம், செயற்பாடுகள், தியாகம் மற்றும் வாழ்க்கை முன்மாதிரி மூலம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். 

இனம், சாதி, நிறம் என்ற வகையில் எந்தவொரு நபரும் மற்றொருவரை விட உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ அல்ல என்ற சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட மகத்துவமான கருத்தே அவரது போதனைகளின் அடித்தளமாகும். 

சமூகத்தில் நிலவும் இடைவெளிகளை நீக்கி, மக்களின் இதயங்களில் சமத்துவத்தை விதைப்பதற்கான போராட்டத்தைத் தொடங்கிய நபியவர்களின் முன்மாதிரி, இன்று நாம் எதிர்கொள்ளும் சமூக சவால்களை முறியடித்து, சமத்துவம், சட்டத்தை மதித்தல் மற்றும் நல்லொழுக்கம் நிறைந்த ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான நமது முயற்சிகளில் ஒளிவிளக்காக இருக்கும் என்று நான் நம்புகிறேன். 

சகல விதத்திலும் வீழ்ச்சியடைந்துள்ள எமது சமூகத்திற்கு மனிதாபிமானத்தையும் அன்பையும் வழங்கி புதிய நெறிமுறையின் அடிப்படையில் நாட்டை மேம்படுத்தும் எமது முயற்சியில், எம்முடன் இணைந்துள்ள நீங்களும் நபிகளாரின் உண்மையான வாழ்க்கை முன்மாதிரியை வாழ்க்கைக்கு நெருக்கமாக எடுத்து, இந்த மீலாதுன் நபி தினத்தை மென்மேலும் அர்த்தமுள்ளதாக்க உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன் என ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, சிந்தனையுள்ள, கருணையுள்ள, நீதி மற்றும் நியாயத்தை உலகிற்குக் கற்பித்த மனிதாபிமான உணர்வுகளையும் மனித அன்பையும் உலக உயிரினங்களுக்காகப் பகிர்ந்தளித்த இறைதூதர் முஹம்மது நபிகளாரின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தமது வாழ்த்திச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

அதற்காக முழு உலக மக்களுக்கும் அதேபோல் இலங்கையில் வாழும் இஸ்லாமிய சகோதரத்துவத்திற்கும் வாழ்த்துச் செய்தியை அனுப்ப முடிந்தமை மகிழ்ச்சிக்குரியதுன அவர் குறிப்பிட்டுள்ளார். 

இனம், மதம், குலம் அல்லது இருப்பு நிலை பார்க்காமல் ஒருவருக்கொருவர் மரியாதை, கருணை மற்றும் சேவையின் அடிப்படையில் கட்டமைக்கப்படும்போது மட்டுமே ஒரு சமுதாயம் செழிக்க முடியும் என்பதை நபிகள் நாயகம் நமக்குக் காட்டியுள்ளார். 

சமூக பிரச்சினைகளுக்கு சர்வதேசம் நிலைதன்மையான தீர்வுகளை தேடிக்கொண்டிருக்கிறது. நபிகளாரின் உன்னத போதனைகளில் முழு மானுடத்திற்கே வழிகாட்டல்கள் உட்பொதிந்துள்ளன.

அன்னாரின் போதனையானது ஒற்றுமை, பணிவு மற்றும் கருணையை பிரதிபலிக்கிறது, அது இன்றும் நமது பாதையை ஒளிரச் செய்கிறது என்பது என் நம்பிக்கை. 

ஒரு நாடாக நாம் இப்போது பல சவால்களை எதிர்கொண்டு வருகிறோம். எதிர்காலத்தில் மேலும் சவால்கள் வரக்கூடும். 

ஆனால் ஒரே மக்களாக, ஒரே குடும்பமாக மற்றும் ஒரே நாடாக ஒன்றிணைவதன் மூலம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இன மத குல வேறுபாடுகளைப் பார்க்காமல் ஒருவருக்கொருவர் அர்ப்பணிப்புள்ள சமுதாயத்தை கட்டியெழுப்ப அன்னார் காட்டிய வழிமுறைகளை நாமும் பின்பற்ற முடியும். 

அந்த வழிமுறைகளைப் பின்பற்றி இந்தக் கடினமான நேரத்தில் நாம் அனைவரும் நாட்டிற்காக ஒன்றாக அணிதிரளுவோம் என தமது வாழ்த்திச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை துயரத்தில் ஆழ்த்திய கோர விபத்து!

0

எல்ல – வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் நேற்று (05) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

இறந்தவர்களில் 9 பெண்களும் 6 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

11 ஆண்களும் 7 பெண்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 05 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

எல்ல – வெல்லவாய வீதியில் 24வது கிலோமீட்டர் தூணுக்கு அருகில் நேற்று (04) இரவு நடந்த பேருந்து விபத்தில் தங்காலை நகர சபையின் செயலாளர் டி.டபிள்யூ.கே. ரூபசேன உட்பட 12 ஊழியர்கள் உயிரிழந்தனர். 

அத்துடன் இறந்தவர்களில் இரண்டு சிறு பிள்ளைகளும் பேருந்தின் சாரதியும் அடங்குவதாக பதுளை போதனா வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுற்றுலா சென்ற தங்காலை மாநகர சபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானது. 

15 பேர் உயிரிழந்த எல்ல – வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த பேருந்து எல்ல திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கி பயணித்த போது எதிரே வந்த ஜீப் வண்டியில் மோதி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்து தொடர்பாக குறித்த ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

கொழும்பில் 9 மணி நேர நீர் வெட்டு!

0

கொழும்பின் பல பகுதிகளில் நாளை மறுதினம் (06) 9 மணி நேரம் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. 

அதன்படி, காலை 10.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு 01 முதல் 15 வரையிலான பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

அத்துடன் பத்தரமுல்லை, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த. தலவத்துகொட, கோட்டே, ராஜகிரிய, மிரிஹான. மாதிவெல, நுகேகொட, நாவல, கொலன்னாவ, IDH, கொட்டிகாவத்த, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்த, முல்லேரியா, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, இரத்மலானை, மொரட்டுவை உள்ளிட்ட பல பகுதிகளிலும் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கோட்ட மட்டத்தில் முதலிடம் பிடித்த நல்லாந்தழுவை பாடசாலை!

0

இம்முறை இடம்பெற்ற (2025) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில், புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் 14 மாணவர்கள் சித்திபெற்று புத்தளம் தெற்கு கோட்ட மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில், புத்தளம் மதுரங்குளி பகுதியில் அமைந்துள்ள தமது நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் சிறந்த பெறுபேற்றை தமது பாடலைக்கு பெற்றுக்கொடுத்துள்ளதாக பாடசாலை அதிபர் ஜனாப் M.Y. ஹுதைபா தெரிவித்தார்.

இதன் மூலம் புத்தளம் தெற்கு கோட்டத்தில் 131 என்ற வெட்டுப்புள்ளியை கடந்து, புத்தளம் புத்தளம் நல்லாந்தழுவை பாடசாலையைச் சேர்ந்த 14 மாணவர்கள் சித்தி பெற்று பாடசாலைக்கும், ஊருக்கும் கெளவரத்தை பெற்றுக்கொடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதில் ரகுமான் பாத்திமா ரஹ்னா என்ற மாணவி அதிகூடிய புள்ளியாக 162 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துக்கொடுத்துள்ளார்.

இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களை சிறப்பாக தயார்ப்படுத்திய ஆசிரியர்களுக்கு பாடசாலை சமூகம் நன்றி தெரிவித்துள்ளதுடன், பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களையும் பாராட்டியுள்ளனர்.

மேலும் பரீட்சியில் தோற்றி சித்திபெறத் தவறிய மாணவர்களுக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வரலாற்று சாதனைபடைத்த கற்பிட்டி அல் ஹிரா பாடசாலை!

கற்பிட்டி அல் ஹிரா பாடசாலை மாணவி நதா தரம் ஐந்து புலமைப் பரீட்சையில் கற்பிட்டி நகரில் அதி கூடிய புள்ளி பெற்று வரலாற்று சாதனை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலையில் இருந்து இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவி எம்.என்.எப். நதா 154 புள்ளிகள் பெற்று கற்பிட்டி நகரிலேயே அதிக கூடிய புள்ளி பெற்றவராக வரலாற்று சாதனை புரிந்துள்ளார் .

அத்தோடு அதே பாடசாலையின் மாணவி எம் எப். எப் ஹயா 134 புள்ளி மற்றும் எம் எஸ் எம் இஷாக் 134 புள்ளிகள் பெற்று மூவரும் கற்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலையில் புத்தளம் மாவட்டத்தின் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக அதிபர் எம்.எம்.எம். நவ்ப் தெரிவித்துள்ளனர்.

இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு பாடசாலையிலிருந்து 38 மாணவர்கள் தோற்றியதாகவும், அதில் மூன்று மாணவர்கள் வெட்டு புள்ளிக்கு மேல் பெற்றுள்ளதுடன் பரீட்சைக்கு தோற்றியவர்களில் 58 வீதமான மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

மேலும் இம் மாணவர்களின் வெற்றிக்கு அயராது பாடுபட்ட ஆசிரியர்களான ஏ.எம்.எப். பாரா, ஆர்.எம். றின்ஷா, ஏ.எம்.எப். தஸ்ரிகா ஆகியோருடன் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் நிர்வாக உறுப்பினர்கள் பாடசாலை நலன்விரும்பிகள் என சகலருக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக அதிபர் எம்.எம்.எம். நவ்ப் தனது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல்கலை விரிவுரையாளர்கள் குறித்த அதிர்ச்சி தகவல்!

0

சுமார் 13,000 பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இருக்க வேண்டிய இலங்கை பல்கலைக்கழக கட்டமைப்பில் தற்போது 6,500 விரிவுரையாளர்கள் மட்டுமே இருப்பதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் பிரகீத் வீரதுங்க கூறுகிறார்.

அதன்படி, இலங்கையில் உள்ள பல்கலைக்கழக கட்டமைப்பில் தற்போது ஐம்பது சதவீத விரிவுரையாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளில் சுமார் 1,500 விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக கட்டமைப்பை விட்டு வெளியேறியுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தில் மட்டும் சுமார் 150 விரிவுரையாளர்கள் வெளியேறியுள்ளதாகவும், பல பல்கலைக்கழகங்களில் மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் போன்ற பீடங்களில் நிலைமை மோசமாக உள்ளதாகவும் பேராசிரியர் பிரகீத் வீரதுங்க சுட்டிக்காட்டுகிறார்.

இந்த சூழ்நிலை காரணமாக, பல பட்டப்படிப்புகளின் கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் சிக்கல்கள் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு போதுமான வசதிகள் மற்றும் சம்பளம் இல்லாததே இந்த நிலைமைக்குக் காரணம் என்று அவர் மேலும் கூறினார்.

இந்தப் பிரச்சினை மற்றும் பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள பல சிக்கல்கள் குறித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கக் கூட்டமைப்பு தற்போது அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது.

சாதித்து காட்டிய கொத்தாந்தீவு பாடசாலை 6 மாணவர்கள்!

புத்தளம் கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆறு மாணவர்கள் சித்தி

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இருந்து இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 39 மாணவர்களில் ஆறு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

1.முஹம்மது சமீம் ஆயிஷா ஐனா 155
2.வஸீம் ரஜா ஆகில் அஹ்மட் – 144
3.முஹம்மத் முபீத் ஆயிஷா அத்தியா – 143
4.முஹம்மத் இஜிலான் பாத்திமா இஷாபா – 137
5.வஸீம் ரஜா ருக்கையா அலா – 134
6.முஹம்மது றியாஸ் றஹ்பா -134

ஆகியோர் புத்தளம் மாவட்டத்தின் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளதாக அதிபர் எஸ் நஸ்மி தெரிவித்துள்ளார்.

இம் மாணவர்களின் வெற்றிக்கு அயராது பாடுபட்ட வகுப்பாசிரியர்களான
ஏ. சீ. எப். நஸ்ரின், ஏ. எல். எப். றிஸ்வானா ஆகியோருக்கும் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் நிர்வாக உறுப்பினர்கள் பாடசாலை நலன்விரும்பிகள் என சகலருக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக தனது வாழ்த்துக்களை அதிபர் எஸ் நஸ்மி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்று (04) பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் சித்திபெற்ற மாணவரகளை கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் தலைமையில் இடம்பெற்ற போது பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தனர்.

நாகவில்லு பாடசாலையில் 9 மாணவர்கள் சித்தி!

இம்முறை இடம்பெற்ற (2025) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில், புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலையில் 9 மாணவர்கள் சித்திபெற்று சாதனை படைத்துள்ளனர்.

அதில் முஹம்மத் அர்சத் ருகையா என்ற மாணவி அதிகூடிய புள்ளிகளாக 154 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துக்கொடுத்துள்ளார்.

புத்தளம் மாவட்டத்தில் 131 என்ற வெட்டுப்புள்ளியை கடந்து, புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலையைச் சேர்ந்த ஒன்பது மாணவர்கள் சித்தி பெற்று பாடசாலைக்கும், ஊருக்கும் கெளவரத்தை பெற்றுக்கொடுத்துள்ளனர்.

அந்த வகையில் முஹம்மத் அர்சத் ருகையா 154 புள்ளிகளையும், முபீன் முசாப் அஹமத் 148 புள்ளிகளையும், ஜிப்ரி ஹிக்மா 147 புள்ளிகளையும், ரமீஸ் அபான் அஹமத் 143 புள்ளிகளையும், சிபாத் பாத்திமா அபா 140 புள்ளிகளையும், ஹாரிஸ் அப்துல்லாஹ் ஹசன் 139 புள்ளிகளையும், சுஜாவு ஷான் அஹமத் 138 புள்ளிகளையும், அபீக் அஹமத் 132 புள்ளிகளையும், வாசிப் பாத்திமா அனீகா 131 புள்ளிகளையும் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களை சிறப்பாக தயார்ப்படுத்திய ஆசிரியர்களுக்கு ஊர் மக்கள் நன்றி தெரிவித்துள்ளதுடன், பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களையும் பாராட்டியுள்ளனர்.

மேலும் பரீட்சியில் தோற்றி சித்திபெறத் தவறிய மாணவர்களுக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

பரீட்சையில் அசத்திய எருக்கலம்பிட்டி மாணவர்கள்!

இம்முறை இடம்பெற்ற (2025) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில், மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மத்திய கல்லூரியில் 5 மாணவர்கள் சித்தியடைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

அதில் ஹிலால் சப்கி முஹம்மத் 165 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துக்கொடுத்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் 131 என்ற வெட்டுப்புள்ளியை கடந்து, எருக்கலம்பிட்டி முஸ்லீம் மத்திய கல்லூரியை சேர்ந்த ஐந்து மாணவர்கள் திறமைச் சித்தி பெற்று பாடசாலைக்கும், ஊருக்கும் கெளவரத்தை பெற்றுக்கொடுத்துள்ளனர்.

அந்த வகையில் ஹிலால் சப்கி முஹம்மத் 165 புள்ளிகளையும், முஹம்மது சஜாத் சஹாம் 152 புள்ளிகளையும், இல்முதீன் முஹம்மது இனாஸ் 143 புள்ளிகளையும், சபான் முஹம்மது அஸ்ஜாத் 142 புள்ளிகளையும், பாஹில் அப்துல்லாஹ் 138 புள்ளிகளையும் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களை சிறப்பாக தயார்ப்படுத்திய ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்துள்ளதுடன், பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களையும் பாராட்டியுள்ளனர்.

மேலும் பரீட்சியில் தோற்றி சித்திபெற தவறிய மாணவர்களுக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

மூடப்படவுள்ள 33 அரச நிறுவனங்கள்!

0

சமகாலத்துக்கு ஏற்புடையதல்லாத மற்றும் அரசுக்கு கடுமையான சுமையை ஏற்படுத்தும் 33 அரச நிறுவனங்களை இரு கட்டங்களாக மூடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கல் மற்றும் மூலோபாய ரீதியான பொருளாதார செயற்பாடுகளை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களை அடைவதற்காக, குறித்த காலத்திற்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஒருசில அரச தொழில் முயற்சிகள் ஸ்தாபிக்கப்பட்டதன் நோக்கங்கள் சமகாலத்துடன் ஏற்புடையதாக இன்மை மற்றும் சந்தைத் தேவைகளுடன் பொருந்தாமை போன்ற காரணங்களால் தொடர்ந்தும் பேணிச் செல்வதற்கு நடைமுறைக்குச் சாத்தியமற்றதாகவும் குறைவான நிதிச் செயலாற்றுகை போன்ற காரணங்களால் செயலிழந்து காணப்படுகின்றன. 

தேசிய பொருளாதாரத்திற்கு அல்லது அரச சேவைகளை வழங்குவதற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குகின்ற நியதிச்சட்ட நிறுவனங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் போன்ற பல்வேறு வகைகளுக்குரிய அரச தொழில் முயற்சிகள் அரசுக்கு செலவுச் சுமையாகத் தொடர்ந்தும் மேற்கொண்டு செல்வதற்குப் பதிலாக, குறித்த நிறுவனத்தைக் கலைத்து முடிவுறுத்துவது பொருத்தமென அடையாளம் காணப்பட்டுள்ளது. 

அதற்கமைய, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, குறித்த அமைச்சின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட கலைத்தல் பிரிவின் மேற்பார்வையின் கீழ் தற்போது தொழிற்பாட்டு நிலையில் இல்லாத 33 அரச தொழில் முயற்சிகளை 02 கட்டங்களாக முறையாகக் கலைத்து முடிவுறுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.