Wednesday, March 18, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 135

பொத்துவில் கடலில் மூழ்கிய இளைஞர்கள்!

0

பொத்துவில் கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (18) காலை இடம்பெற்றுள்ளது.

அம்பாறை சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 23 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் பொத்துவில் கடலில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கியுள்ளனர்.

இதன்போது அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர், கடலில் மூழ்கிய இருவரையும் அதிரடியாக காப்பாற்றி அவர்களுக்கு முதலுதவி அளித்துள்ளனர்.

இவர்களின் இந்த செயல் சினிமா காட்சி போல் இருந்ததாகவும், பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரின் இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

அதானி திட்டத்துக்குள் சிக்கிய அரசாங்கம்!

0

அதானி நிறுவனத்தின் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நிறுத்தியமை தொடர்பில் 300-500 மில்லியனை இலங்கை மீள் செலுத்த வேண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

விலை நிர்ணயம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி திட்டங்களிலிருந்து விலகியது. 

அதானி நிறுவனத்தின் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நிறுத்தியமை தொடர்பில் 300-500 மில்லியனை இலங்கை மீள் செலுத்த வேண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

விலை நிர்ணயம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி திட்டங்களிலிருந்து விலகியது. 

எரிசக்தி அனுமதிக்கு அதானி செலுத்திய தொகையை எந்த சூழ்நிலையிலும் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை என்று இலங்கை நிலைபேறுதகு வலு அதிகாரசபை உறுதியாகக் கூறுகிறது. 

இருப்பினும், அடுத்த சில மாதங்களுக்குள் சட்டமா அதிபரின் ஆலோசனை மற்றும் அதிகாரசபையின் பணிப்பாளர் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு, திருப்பிச் செலுத்தும் தொகையின் சரியான தொகை தீர்மானிக்கப்படும். 

இந்த நிறுவனம் வட மாகாணத்தில் மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி நிலைய திட்டங்களை நிர்மாணிப்பதற்கு 442 மில்லியன் டொலர்களை முதலீடு செய்யுமெனவும் இந்தத் திட்டம் 2025 ஆம் ஆண்டுக்குள் தேசிய மின் கட்டமைப்பில் குறைந்தது 350 மெகாவாட் மின்சாரத்தை சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கழுதைகளை திருடும் இஸ்ரேல் ராணுவம்!

0

பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. இந்நிலையில் தான் காசாவில் இருந்து இஸ்ரேல் ராணுவம் கழுதைகளை குறிவைத்து திருடி பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்துக்கு அனுப்பி வருகிறதாம். போருக்கு நடுவே காசாவில் இருந்து இஸ்ரேல் ராணுவம் கழுதைகளை திருடுவதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலில் மொத்த காசா நகரமும் உருக்குலைந்துவிட்டது. காசாவில் உள்ள கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் பல லட்சம் பேர் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

தற்போது இஸ்ரேல் ராணுவம் காசாவில் முகாமிட்டு தொடர்ந்து போர் புரிந்து வருகிறது. இதனால் காசாவில் உள்ள மக்கள் பசி, பட்டினியால் வாடி வருகின்றனர். மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதில் இஸ்ரேல் சிக்கலை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனை ஐநா மட்டுமின்றி பல்வேறு சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் கண்டித்துள்ளன.

இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். காசாவில் போர் புரியும் இஸ்ரேல் ஏன் திடீரென்று கழுதைகளை குறிவைத்துள்ளது என்ற கேள்வி உங்கள் மனதுக்குள் எழலாம். இதன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது.

Palestinians transport aid supplies on an animal-drawn cart, amid a ceasefire between Hamas and Israel, in Gaza City, February 3, 2025. REUTERS/Dawoud Abu Alkas REFILE – QUALITY REPEAT

அதாவது காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் மற்றும் அவர்களுக்கு உதவும் மக்களை மொத்தமாக அழிக்க வேண்டும் என்று தான் இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. இந்த போரின் காரணமாக காசாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் காசா மக்கள் தங்களின் போக்குவரத்து மற்றும் சுமைகளை சுமக்கவும், இடம்பெயரவும் கழுதைகளை தான் பயன்படுத்தி வருகி்னறன.

தண்ணீர், உணவு மற்றும் இறந்தவர்களின் உடல்களை சுமந்து செல்லவும் கழுதைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது இஸ்ரேலின் கண்களை உறுத்தியது. இதனால் தான் கழுதைகளை திருடி வெளிநாடுகளுக்கு இஸ்ரேல் ராணுவம் அனுப்பி வருகிறது. இதன்மூலம் காசாவில் தற்போது உள்ள மக்கள் இன்னும் கூடுதல் சிரமங்களை எதிர்கொள்வார்கள். இதனால் நாளடைவில் அவர்கள் காசாவை விட்டு மொத்தமாக வெளியேறும் வாய்ப்பு ஏற்படலாம் என இஸ்ரேல் நினைக்கிறது.

பறவைகள் ஏன் ‘V’ வடிவில் பறக்கிறது தெரியுமா?

நீங்கள் வானத்தில் பறவைகள் எப்போதுமே ‘V’ வடிவில் சீறிப் பாய்ந்து செல்வதைப் பார்க்கலாம். இயற்கையின் வசீகரமான காட்சிகளில் இதுவும் ஒன்று. பார்ப்பதற்கு அழகாக இருக்கும் அதேநேரம் பறவைகள் காரணம் இல்லாமல் இதுபோல பறப்பது இல்லை. இதற்குப் பிறகு ஒரு முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

கூட்டமாகப் பறக்கும் எந்தவொரு பறவையாக இருந்தாலும் அவை பெரும்பாலும் இந்த ‘V’ வடிவ அமைப்பில் தான் பறக்கும். அதிலும் குறிப்பாக நீண்ட தூரம் பயணிக்கும் போது இப்படித் தான் பறக்கும்.

பறவைகள் இதுபோல பறப்பது வெறும் அழகு மட்டும் இல்லை. அதற்குப் பின்னால் ஒரு முக்கியமான அறிவியலும் இருக்கவே செய்கிறது. பறவைகள் ஏன் இதுபோல பறக்கிறது என்பதைக் கண்டறிய ஆய்வாளர்கள் நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அவர்கள் கண்டுபிடித்தது உண்மையிலேயே குறிப்பிடத்தக்க வகையில் முக்கியமானதாகவே இருக்கிறது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆய்வாளர்கள் மட்டுமின்றி நாசா விஞ்ஞானிகள் கூட தங்கள் மிஷன்களுக்காக பறவைகள் இப்படி ‘V’ வடிவில் பறப்பது குறித்து ஆய்வு செய்தனர். அதில் நீண்ட தூரம் பறக்கும் போது இப்படி ‘V’ வடிவில் பறப்பது ஆற்றலைச் சேமிக்க உதவுகிறது என்பதைக் கண்டறிந்தனர்.. முன்னால் உள்ள பறவை காற்றின் எதிர்ப்பை அதிகமாக எதிர்கொள்கிறது. அதே நேரத்தில் அதன் பின்னால் உள்ள பறவைகளுக்கு இது எளிதாகிறது. அதாவது முன்னால் இருக்கும் பறவையின் இறக்கைகளால் உருவாகும் சுழல் காற்றின் மேல்நோக்கிய இழுவிசையில் பக்கவாட்டில் வரும் பறவைகள் ஈஸியாக பறக்க முடிகிறது.

மேலும், இத்தோடு V’ வடிவத்தில் பறப்பது பறவைகள் ஒன்றுக்கொன்று பார்த்துக்கொள்ளவும் உதவுகிறது. குறிப்பாக இனப்பெருக்கக் காலத்தில் பறவைக் கூட்டங்கள் பல ஆயிரம் கிமீ தூரம் பயணம் செய்யும் போது இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். ‘V’ வடிவம் ஒவ்வொரு பறவையும் அதன் அருகிலுள்ள பறவையைப் பார்த்துக் கொள்ளவும், ஒன்றுடன் ஒன்று மோதுவதையும் தவிர்க்க உதவுகிறது. பறவைகள் பறப்பதை அடிப்படையாக வைத்த விமானத்தில் பல பாகங்கள் உருவாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்டெல் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!

உலகின் முன்னணி செமிகண்டக்டர் நிறுவனமான இன்டெல் நிறுவனம், ஜூலையில் சுமார் 5,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

கடுமையான சந்தைப் போட்டி, நிதி இழப்புகள் மற்றும் AI துறையில் பின்தங்கியது போன்ற காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இன்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் கலிபோர்னியா, ஓரிகான், அரிசோனா மற்றும் டெக்சாஸ் உள்ளிட்ட இடங்களில் 5,000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பணிநீக்கங்கள் புதிய தலைமை நிர்வாக அதிகாரி லிப்-பு டானின் கீழ் நிறுவனத்தின் மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகக் கூறப்படுகிறது.

2024 தொடக்கம் 15000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது மேலும் 5000 பேர் பணிநீக்கம் செய்யப்படஉள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மு.ஜனாதிபதி ரணிலின் திட்டத்தை கையிலெடுத்த அரசாங்கம்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உருவாக்கிய புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்தை கடுமையாக எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட அரசாங்கம் தற்போது அந்த மறுசீரமைப்பு திட்டத்தை செயற்படுத்த முனைவது வரவேற்கத்தக்கது. இதனையே கர்மவினை என்பார்கள். நடைமுறைக்கு சாத்தியமான வகையில் கல்வி முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஐக்கிய குடியரசு முன்னணியின் காரியாலயத்தில்  வெள்ளிக்கிழமை (18)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

புதிய கல்வி சீர்த்திருத்தத்தை அமுல்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் 2019 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்புடன் மறுசீரமைப்பு பணிகளுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்ட்டன. இருப்பினும் அதனை செயற்படுத்த முடியவில்லை.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது இரண்டாண்டு கால பதவியில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நவீன தொழில் உலகினை கருத்திற் கொண்டு கல்வி மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அப்போதைய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ஆகியோர் தலைமையில் குழுவை நியமித்து மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இந்த கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தற்போதைய கல்வி அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய  பல்கலைக்கழக விரிவுரையாளர்களையும், தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆசிரியர்களையும் தூண்டிவிட்டு போராட்டத்தை தோற்றுவித்தார்கள். இதனால் கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன.

இவ்வாறான நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  மேற்கொண்ட கல்வி மறுசீரமைப்பு பணிகளை இந்த அரசாங்கம் எவ்வித மாற்றமுமில்லாமல் செயற்படுத்த தீர்மானித்துள்ளது. 

இதனையே கர்மவினை என்று குறிப்பிட வேண்டும். சிறந்த விடயங்களை செயற்படுத்துவதற்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். நடைமுறைக்கு சாத்தியமான வகையில் கல்வி முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும்.

புதிய கல்வி மறுசீரமைப்பில் 7 முதல் 9 ஆம் தரம், 9 முதல் 11 தரம், 11 முதல் 13 ஆம் தரம் என்ற அடிப்படையில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 9 மற்றும் 11 தரங்களில் தடைதாண்டல் பரீட்சையை நடத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அது எந்த அடிப்படையில் என்பதில் தெளிவற்ற தன்மை காணப்படுகிறது.

பாட தெரிவுகளின் போது விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும். வரலாறு மற்றும் அழகியற் கலை பாடங்களை இரண்டாம் நிலையாக்காமல் அவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் சகல தரப்பினருடனும் அரசாங்கம் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட வேண்டும் என்றார்.

மட்டக்களப்பில் மாபெரும் கண்காட்சி!

0

மட்டக்களப்பில் நிர்மாணத்துறை, தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறைகளை வலுப்படுத்தும் நோக்கில் Batticaloa Expo 2025 வர்த்தக கண்காட்சி நிகழ்வானது 17.07.2025 அன்று மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது தடவையாக இடம் பெறும் batticaloa Expo 2025 கண்காட்சியானது 17.07.2025 அன்று முதல் 20.07.2025 வரையான நான்கு நாட்கள் இடம்பெறுவதுடன், இதில் தொழில் சார் கண்காட்சி மட்டுமல்லாது சிறுவர்களுக்கான mega carnival உள்ளிட்ட பல அம்சங்கள் அடங்கியுள்ளன.

நிர்மாணம், தொழில்துறை மற்றும் வணிகத் துறைகளுக்கிடையிலான தொடர்புகளை மாவட்டத்தில் வலுப்படுத்தும் வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்குடன் இந்த ஆண்டு பாரம்பரிய கண்காட்சியாக குறித்த கண்காட்சி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்துவதற்கும் இக் கண்காட்சியானது சந்தர்ப்பமாக அமையுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

இக்கண்காட்சியில் 175 இற்கு மேற்பட்ட காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், முன்னணி தொழில் நிபுணர்கள் மற்றும் தொழில் முனைவோர்களினால் கிழக்கு மாகாணத்தின் பொருளாதார மற்றும் வணிக வளர்ச்சி ஊக்குவிக்கபடுவதாக ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டது.

நிர்மாணம், உள்ளமைப்பு, இயந்திரங்கள், வேளாண்மை சார்ந்த தயாரிப்புகள், பதப்படுத்தல் மின் மற்றும் மின் உபகரணங்கள், கைத்தொழில் பொருட்கள், சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகள், கண்ணாடிப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், சுகாதார உபகரணங்கள், உணவு மற்றும் பானங்கள், பரிசுப் பொருட்கள், துணி, கருவி உபகரணங்கள் மற்றும் பல துறைகளுக்கான தயாரிப்புகளும் சேவைகளும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Tima international (Pvt) Ltd மற்றும் Event Max Exhibitions ஆகியவவை இணைந்து ஒழுங்குபடுத்திய இக்கண்காட்சி நிகழ்விற்கு மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனம், Ceylon institute of Builders (CIOB), EDB மற்றும் கிழக்கு மாகாண வர்த்தக சங்கங்கள் ஆதரவு வழங்குகின்றன.

ஒருவகை நரம்பு நோயால் பாதிக்கப்பட்ட அதிபர் ட்ரம்ப்!

0

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு விதமான நரம்பு பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு 79 வயதாகிறது. கடந்த ஜூலை மாதம் நியூ ஜெர்சியில் நடந்த பிபா உலகக் கோப்பை பைனலின் போது, டிரம்ப்பின் வீங்கிய கால்கள் பத்திரிக்கையாளர்களால் போட்டோ எடுக்கப்பட்டது. அதேபோல், வெள்ளை மாளிகையில் பஹ்ரைன் பிரதமருடன் நடந்த சந்திப்பின் போது, அவரது கையில் காயங்கள் இருப்பது போன்ற போட்டோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், அவரது உடல்நலம் குறித்து விவாதம் எழுந்தது.

இந்த நிலையில், அதிபர் டிரம்ப்புக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து வெள்ளை மாளிகை விளக்கம் கொடுத்துள்ளது.

வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் லீவிட் கூறியதாவது; அதிபர் டிரம்ப் காலில் ஏற்பட்ட வீக்கத்தை பரிசோதனை செய்ததில் அவருக்கு க்ரானிக் வெனோஸ் இன்சப்பிசியன்ஸ்’ (நாள்பட்ட சிரை பற்றாக்குறை) எனப்படும் நரம்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை நோய் உலகில் 20ல் ஒருவரை பாதிக்கும். கால்களில் இருந்து இதயத்திற்கு ரத்தம் சரியாக திரும்பாததால் இந்தப் பிரச்னை ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அடிக்கடி கைகுலுக்குதலால் ஏற்பட்ட திசு சேதம் மற்றும் இதய நோய்தடுப்பு மருந்தான ஆஸ்பிரின் மருந்து பயன்பாடு இதற்கு காரணம்.

கால்களில் உள்ள நரம்புகளுக்கு ரத்தத்தை மீண்டும் இதயத்திற்கு செலுத்துவதில் சிரமம் ஏற்படும்போது இந்த நிலை உருவாகிறது. மற்றபடி, தமனி நோய், இதய செயலிழப்பு அல்லது சிறுநீரக பிரச்சினைகள் போன்ற கடுமையான பாதிப்புகள் எதுவும் இல்லை. இந்த நோய் கண்டறியப்பட்டாலும் டிரம்ப்புக்கு எந்த விதமான வலி அல்லது அசவுகரியம் இல்லை, இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

66,000 கோடி இழப்பீடு கேட்டு மார்க்கிற்கு எதிராக வழக்கு!

0

‘பேஸ்புக்’ பயனர்களின் தகவல்கள் கசிந்த விவகாரத்தில் அதன் தாய் நிறுவனமான, ‘மெட்டா’வின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பர்க்கிற்கு எதிராக, 66,000 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்த வழக்கின் விசாரணை நேற்று துவங்கியது.

அமெரிக்காவைச் சேர்ந்த மெட்டா நிறுவனத்தின் கீழ், ‘பேஸ்புக், வாட்ஸாப், இன்ஸ்டாகிராம்’ ஆகிய சமூக ஊடகங்கள் செயல்படுகின்றன. இதில் கோடிக்கணக்கான பயனர்களின் தகவல்கள் உள்ளன.

இந்த தகவல்களை, 2016ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டிரம்புக்காக அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிடிகா பயன்படுத்தியது.

இது, அமெரிக்காவின் சட்டப்படி தனியுரிமை மீறல் என சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக 2018ல், அமெரிக்க பார்லிமென்ட்டில் ஆஜராகி பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க் மன்னிப்பு கோரினார். 35,000 கோடி ரூபாய் அபராதம் செலுத்தினார்.

இந்த சம்பவத்தால் பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு, 1.36 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சரிவைச் சந்தித்தன. இதனால், ஒவ்வொரு முதலீட்டாளரும் பல ஆயிரம் கோடி ரூபாயை இழந்தனர். அவர்கள், பேஸ்புக் நிறுவனர் மார்க் மற்றும் அதன் தற்போதைய மற்றும் முன்னாள் தலைவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.

அதில், ‘பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவால் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயங்கள் குறித்து, மெட்டா எங்களுக்கு தெரியப்படுத்தவில்லை.

இதனால் 66,000 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கூறியுள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை நேற்று துவங்கியது. அதில் மெட்டா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘பயனர் தனியுரிமைக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம்.

கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவின் ஏமாற்று வேலைக்கு நாங்கள் பலியானோம். வழக்கின் குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவை’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

பாலியல் சேட்டை செய்த 81 வயது பௌத்த துறவி!

0

காலி ஹபராதுவ விஹாரை ஒன்றில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 81 வயதான பௌத்த துறவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தலைமை மதகுருவாக பணியாற்றும் இந்த துறவி, 41 வயதான நியூசிலாந்து நாட்டவருக்கு உணவு மற்றும் பானங்களை வழங்கிய நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் குறித்த சுற்றுலாப் பயணி, இந்த சம்பவம் தொடர்பில் உனவட்டுன சுற்றுலா காவல்துறையிடம் முறையிட்டதை அடுத்தே பௌத்த துறவி கைது செய்யப்பட்டார்.