Sunday, July 27, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 135

பெண் ஒருவரின் மூளையில் 3 அங்குல புழு உயிருடன்

0
உலகில் முதன்முதலாக, அவுஸ்திரேலிய பெண் ஒருவரின் மூளையில் இருந்து 8 செமீ (3 அங்குலம்) புழு உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு கென்பெராவில் அறுவை சிகிச்சையின் போது இங்கிலாந்தில் பிறந்த பெண் ஒருவரின் சேதமடைந்த முன் மடல் திசுக்களில் இருந்து “சரம் போன்ற அமைப்பு” வெளியேற்றப்பட்டது.

அதன்பின்னரே குறித்த அமைப்பு புழு என்று கண்டறியப்பட்டது.

சத்திரசிகிச்சை அரங்கில் இருந்த ஒவ்வொருவருக்கும் இது அதிர்ச்சியாக இருந்தது என்று அறுவைச் சிகிச்சை நிபுணர் சஞ்சய சேனாநாயக்க கூறியுள்ளார்.

அத்துடன் விலங்குகளிடமிருந்து மக்களுக்கு பரவும் நோய்கள் மற்றும் தொற்று நோய்களின் பெரும் ஆபத்தை இது எடுத்துக்காட்டுகிறது என்று அவர் எச்சரித்துள்ளார்.

குறித்த பெண், தான் வாழ்ந்த இடத்திற்கு அருகில் உள்ள ஏரிக்கரையில் கீரைகளை சேகரித்த போது இந்த புழு அவரிடம் தொற்றியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் வயிற்று வலி, இருமல், இரவு வியர்த்தல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய் அறிகுறிகள் அவருக்கு ஏற்பட்டன.

அத்துடன் இது மறதியை அதிகரித்து மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், நோயாளி 2021 ஜனவரி மாத பிற்பகுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் ஸ்கேன் செய்ததில் “மூளையின் வலது முன் மடலில் ஒரு வித்தியாசமான காயம்” கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் 2022 ஜூன் மாதத்தில் குறித்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதே, அவரின் நோய்க்கான காரணம் கண்டறியப்பட்டது.

இதேவேளை, குறித்த சம்பவம் மருத்துவ ரீதியாக ஒரு வரலாற்றை உருவாக்கினாலும் பாதிக்கப்பட்ட பெண் நன்றாக குணமடைந்து வருவதாக பிபிசி செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி காட்டிக்கொடுக்கப்பட்டதா?

0

2011 ஆம் ஆண்டில் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தோற்கவில்லை மாறாக காட்டிக் கொடுக்கப்பட்டது என்று தெரிவித்த முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, அப்போதிருந்த தேர்வுக் குழுவின் உயர் அதிகாரியொருவரின் 2013 ஆம் ஆண்டின் சொத்து விபரங்களை ஆராய்ந்தால் அதனை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் தொடர்பான சபைஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர்மேலும் தெரிவிக்கையில்,

2011 ஆம் ஆண்டின் உலகக் கிண்ண போட்டியில் நாங்கள் தோல்வியடையவில்லை. காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளோம் என்ற நிலைப்பாட்டிலேயே நான் இப்போதும் இருக்கின்றேன். இதற்கு தேவையான சாட்சிகள் உள்ளன.

அதன்படி நாங்கள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 2011 காலப்பகுதியில் தேர்வுக் குழுவில் இருந்த உயர் அதிகாரியின் 2013 சொத்து விபரங்களை எடுத்துப் பார்த்தால் அவை சிக்கும்.

இதேவேளை போட்டி காட்டி கொடுப்புகள் இப்போதும் நடக்கின்றன. கடந்த காலங்களில்vகாலியில் நடந்த சம்பவங்கள் அதனை காட்டுகின்றன. இதன்படி விளையாட்டுத்துறையில் பெரும் ஊழல் மோசடிகள் உள்ளன. அது தற்போதைய எல்.பி.எல் வரையில் வந்துள்ளன” என்றார்.

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா

0

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணி வீரர்களான அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் குசல் ஜனித் பெரேராவுக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை அணியின் ஏனைய வீரர்களுக்கும் கொவிட்-19 தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

13போட்டிகள் கொண்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் எதிர்வரும் 30ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி இலங்கை அணியானது எதிர்வரும் 31ம் திகதி தனது முதலாவது போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இவர்கள் இருவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஏனைய வீரர்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்படும் பட்சத்தில் பங்களாதேஷ் அணியுடனான போட்டியானது இரத்து செய்யப்படும் அல்லது போட்டிகள் பிற்போடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது

நோய் அறிகுறிகளுடன் மேலும் 7 கைதிகள் வைத்தியசாலையில்

0

இனங்காணப்படாத நோய் காரணமாக காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 3 கைதிகள் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலி சிறைச்சாலையில் இரு கைதிகள் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவந்துள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில்,  இவர்கள் இருவரின் உயிரிழப்புக்கும்  பற்றீரியா தொற்றே காரணம் என தெரியவந்துள்ளது.

நோய் அறிகுறிகளுடன் மேலும் 7 கைதிகள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பாக  அறிக்கையைப் பெறவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். காலி சிறைச்சாலையில் தற்போது 1,023 கைதிகள் உள்ளனர்.

குப்பைகளோடு வீசப்பட்ட 8 பவுண் தங்க நகைகள்

0

யாழ் – சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட மண்டுவில் வட்டாரத்தில் வசிக்கின்ற குடியிருப்பாளர் ஒருவரினால் வீதியில் குப்பைகளோடு வீசப்பட்ட சுமார் பதினைந்து லட்சம் ரூபா பெறுமதியான 8 பவுண் தங்க நகைகள் நகராட்சி மன்ற குப்பை மேட்டிலிருந்து சுகாதாரப் பகுதியினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

சாவகச்சேரி மண்டுவில் வட்டாரத்தில் வேலுப்பிள்ளை வீதியில் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர் தனது வீட்டில் உள்ள சுமார் 8 பவுண் பெறுமதியான நகைகளை கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில் பழைய துணி ஒன்றில் கட்டி குப்பைகள் போல வீட்டிலேயே பாதுகாத்து வந்துள்ளார்.

இந்நிலையில் அண்மையில் அவரது வீட்டை சுத்தம் செய்கின்ற பொழுது குறித்த நகைகளும் குப்பைகளோடு குப்பைகளாக கட்டப்பட்டு வீதியில் கொட்டப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்றைய தினம் மண்டுவில் வட்டாரத்தில் வழமையான கழிவகற்றும் நடவடிக்கையில் சாவகச்சேரி நகராட்சி மன்ற சுகாதாரப் பகுதியினர் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது குறித்த வீட்டில் முன்னால் இருந்த குப்பைகளும் சுகாதார தொழிலாளர்களால் அகற்றப்பட்டு உழவியந்திரத்தில் நகராட்சி மன்றத்திற்கு சொந்தமான குப்பைகள் தரம் பிரிக்கின்ற இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கொட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் வீட்டிலிருந்த நகைகள் காணாமல் போனதையடுத்து நிலைமையை உணர்ந்த உரிமையாளர் குப்பைகளோடு நகைகளும் வீதியில் கொட்டப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வீதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரீவி கேமராக்களை சோதனையிட்டுள்ளார்.

அப்பொழுது இன்று காலை அப்பகுதியில் நகராட்சி மன்ற கழிவகற்றும் வாகனம் மூலம் கழிவுகள் அகற்றப்பட்டிருந்தமை அவதானித்துள்ளார்.

இதை அடுத்து உடனடியாக சாவகச்சேரி நகராட்சி மன்றத்துக்கு சென்று பிரதம நிர்வாக அதிகாரி செ.அனுசியாவிடம் நிலைமை தொடர்பாக தெரியப்படுத்தியுள்ளார்.

தேடுதல் நடவடிக்கை

குப்பையில் வீசப்பட்ட 15 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் - உரியவர்களிடம் ஒப்படைத்த சாவகச்சேரி சுகாதாரத் தொழிலாளி | Gold Ornaments Handed Over Health Worker

இதையடுத்து உடனடியாக செயற்பட்ட நகராட்சிமன்ற நிர்வாக அதிகாரி மற்றும் நகராட்சி மன்ற சுகாதார மேற்பார்வை உத்தியோகத்தர்களான பா.தயாகரன், மற்றும் பா.நிஷாந்தன் ஆகியோர் நகராட்சி மன்ற கழிவு சேகரிக்கும் இடத்திற்கு வெளியிலிருந்து உள்ளேயும் உள்ளே இருந்து வெளியேயும் எவரையும் அனுமதிக்காத வண்ணம் செயற்பட்டு சுகாதார தொழிலாளர்களைக் கொண்டு தேடுதலை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த குடியிருப்பாளர் பழைய துணியில் கட்டி குப்பைகளோடு குப்பையாக வீதியில் வீசிய சுமார் 8 பவுண் நகைகள் குடியிருப்பாளரின் முன்னிலையிலேயே சுகாதார தொழிலாளியான சண்முகம் தமிழ்சனால் மீட்கப்பட்டு உடனடியாகவே உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

0

எனக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்திருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் பலரும் ஆதரவளிக்க இணக்கம் தெரிவித்துள்ளார்கள் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு கையளித்திருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த  கருத்துக்கள் 

ஐக்கிய மக்கள் சக்தியினால் சபாநாயகருக்கு கையளித்திருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் எனக்கு ஆதரவளிப்பதற்கு இணக்கி இருக்கிறார்கள்.

ஏனெனில் நம்பிக்கையில்லா பிரேரணையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் காரணங்கள் அனைத்தும் உண்மைக்கு புரம்பானவை என்பது தற்போது விஞ்ஞான ரீதியில் ஒப்புவிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு உள்வாங்கி இருக்கும் பிரதான குற்றச்சாட்டான தரமற்ற மருந்து கொண்டுவந்தமை மற்றும் மருந்து ஒவ்வாமை காரணமாக  நோயாளர்கள் மரணித்தார்கள் என்ற விடயங்கள் தற்போது சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விசேட வைத்திய நிபுணர்களின் பங்குபற்றலுடன் நியமிக்கப்பட்டிருக்கும் தொழிநுட்ப குழுவினால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.

அத்துடன் குறித்த குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் எனக்கு அறியத்தந்தார்கள்.

அதனால் எனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விரைவாக விவாதித்து வாக்களிப்பதற்காக சபாநாயகரிடம் திகதி ஒன்றை பெற்றுக்கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கேட்டுக்கொள்கிறேன்.

நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டால் அதற்கு முன்னுரிமை வழங்குவது பாராளுமன்றத்தின் சம்பிரதாயமாகும்.

எதிர்க்கட்சித் தலைவர் அந்த சம்பிரதாயத்தை மீறி நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதை காலம் கடத்தி வருகிறார்.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளில் நூற்றுக்கு 90வீதம் இந்தியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது.

அதனால் தரமற்ற மருந்து வகைகளை சுகாதார அமைச்சு இறக்குமதி செய்திருப்பதாக எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்றார்.

பரவுது புது கொரோனா

0

உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

சீனாவில் 2019 இறுதியில் துவங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி ஸ்தம்பிக்க வைத்தது. இதன் காரணமாக உலகளவில் 69 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். 69 லட்சம் பேர் உயிரிழந்தனர். பின் துவக்கத்தில் ஏற்பட்ட கொரோனாவில் இருந்து பீட்டா, காமா, டெல்டா, ஒமைக்ரான் உள்ளிட்ட பல்வேறு வகை உருமாறிய கொரோனா வைரஸ் உருவாகி உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. 2023 முதல் உலகளவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்ததால் கொரோனாவுக்கு பிறப்பிக்கப்பட்ட ‘சர்வதேச சுகாதார அவசரநிலையை’ உலக சுகாதார நிறுவனம் திரும்ப பெற்றது.

இந்நிலையில் பிஏ.2.86 என்ற மரபணு மாறிய கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை மையம் (சி.டி.சி.) தெரிவித்தது.

மேலும் இது அமெரிக்கா, டென்மார்க், இஸ்ரேல் நாடுகளில் பதிவாகியுள்ளது. இதன் பாதிப்பு வீரியம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதை உறுதி செய்த உலக சுகாதார நிறுவனம் இது ‘கண்காணிப்பு நிலையில்’ உள்ளது. இதன் தீவிரம் குறித்து அறிய மேலும் தகவல் தேவைப்படுகிறது என தெரிவித்துள்ளது.

காதல் ஜோடியின் லீலையால் எரிந்த குருநாகல் மலை பகுதி

0

குருநாகல் எத்துகல மலையைப் பார்க்கச் சென்ற காதல் ஜோடி வீசிய தீக்குச்சியால் எத்துகல பாதுகாப்பு வனப்பகுதியின் சுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது.

 

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட காதர்கள் இருவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருநாகல் நீதவான் நீதிமன்றம் (19) உத்தரவிட்டுள்ளது.
குருநாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எத்துகல மலை உச்சியில் உள்ள புத்தர் சிலையை பார்வையிடுவதற்காக காதலர்கள் நேற்று காலை சென்றுள்ளனர்.
குறித்த இளைஞனின் சட்டைப் பையில் தீப்பெட்டி ஒன்று காணப்பட்டதையடுத்து குறித்த யுவதி, அது தொடர்பில் காதலனிடம் விசாரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், சிறுமி தீப்பெட்டியில் இருந்த இரண்டு தீக்குச்சிகளை கொளுத்தி, அப்பகுதியில் வீசியதால் தீப்பிடித்துள்ளது.
இதனைக் கண்ட பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, குருநாகல் மாநகரசபை ஊழியர்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டுள்ளது.
தீயினால் அழிவடைந்த பிரதேசம் 03 ஏக்கர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தீப்பரவலை தொடர்ந்து கீழ் பகுதிக்கு ஓடிய காதலர்கள் இருவரையும் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட காதலர்கள் 24 மற்றும் 20 வயதுடைய மாத்தளை மற்றும் மஹவ பிரதேசத்தில் சேர்ந்தவர்களாவர்.
குறித்த இளைஞர் இராணுவ வீரர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

கடனை மீளப்பெற சென்றவர் உயிரிழப்பு

0
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடனை மீள பெற வந்த இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மஹரகம, நாவின்ன பிரதேசத்தில் நேற்று (19) காலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தலகல, கிரிவந்துடுவ பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவர் எனவும், உயிரிழந்தவர் நாவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கடன் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இறந்தவர் கடன் தொகையை வசூலிப்பதற்காக மற்றொரு நபருடன் முச்சக்கர வண்டியில் கடனாளியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இருவரும் வந்து கடனாளியின் வீட்டின் மூடியிருந்த கேட்டை திறக்க முற்பட்டதுடன், அப்போது கடன் வாங்கிய வீட்டின் உரிமையாளர் கூரிய ஆயுதம் ஒன்றை கொண்டு வந்து இருவரையும் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

பின்னர் காயமடைந்த இருவரும் தாங்கள் வந்த அதே முச்சக்கரவண்டியில் ஹோமாகம வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

சந்தேகநபருக்கு வழங்கப்பட்ட கடன் தொகையை பெற்றுக் கொள்ள உயிரிழந்தவர் வந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலையை செய்த 60 வயதுடைய சந்தேக நபர் ஹோகந்தர பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்ற வேளையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை செய்துகொண்ட பல்கலை மாணவர்

0

கிளிநொச்சி விவேகாநந்த நகர் பகுதியில் பல்கலைக்கழக மாணவர் ஓருவர் தமது வீட்டிலேயே உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு, கணிதப்பிரிவில் அவர் பயின்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், நீண்ட காலமாக, மன அழுத்தத்தால் பாதிப்படைந்திருந்த நிலையில், அவர் அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதனால், அவர், உயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகித்துள்ளது.

சம்பவம் தொடர்பில், கிளிநொச்சி காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

குறித்த மாணவன், 2020ம் ஆண்டு உயர் தரப்பரீட்சையின், கணிதப்பிரிவில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய மட்டத்தில் 85ம் இடத்தினையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.