Thursday, November 13, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 141

வேட்டுபுமனுக்கள் செலுத்த முடியாது!

0

கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச சபைக்கான தேர்தல் இடம்பெறாது என தேர்தல்கள் தேர்வத்தாச்சியாளர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச சபைக்கான தேர்தலுக்கு கட்சிகள் பல கட்டுப் பணங்களோ, வேட்டுபுமனுக்களோ செலுத்த முடியாது என கிளிநொச்சி மாவட்ட தேர்தல்கள் தேர்வத்தாச்சியும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய எஸ். முரளிதரன் இன்றைய ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.

மேலும் வேட்புமனுக்கள் 2025 மார்ச் 17 முதல் 2025 மார்ச் 20 வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும், வேட்பு மனுக்களை மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை செலுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கட்டுப்பணம் ஏற்கும் நடவடிக்கை மார்ச் 19 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு நிறைவடையும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெறிவித்துள்ளது என மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

உலகின் சுதந்திரத்திற்கான பாத யாத்திரை!

0

உலகில் சுதந்திரம் அமைதி வேண்டி திஸ்ஸமகாராம (அம்பாந்தோட்டை) முதல் நாகதீபம் (நயினாதீவு) வரை இலங்கை உட்பட ஐந்து நாடுகளை சேர்ந்த பெளத்த தேரர்கள் பாத யாத்திரை ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 07ம் திகதி ஆரம்பமான பாத யாத்திரை இன்று கிளிநொச்சியை வந்தடைந்ததுடன், வருகை தந்த தேரர்களை யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவர்கள் வரவேற்றனர்.

வீதியிலிருந்து பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சரசவி விகாரை வரை மாணவர்கள், விரிவுரையாளர்கள் அமோகமாக வரவேற்பளிக்கப்பட்டது.

தய்லாந்து, மியன்மார், இலங்கை, லாகோஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுமார் 50 வரையான தேரர்கள் குறித்த பாத யாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த பாத யாத்திரை நாளைய தினம் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி தமது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி செய்திகளுக்காக ஆனந்தன்

பாராளுமன்றில் அமளி துமளி!

0

மட்டக்களப்பில் இடம்பெறும் வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பாக சபையில் கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் ஒலிவாங்கியை இடைநிறுத்தியதை அடுத்து சபையில் இன்று (04) அமைதியின்மை ஏற்பட்டது. 

கடந்த 20 ஆம் திகதி, மட்டக்களப்பு ஆரையம்பதி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது, ​​மர்மக் குழு ஒன்று வாள்களால் தாக்கியதில் இருவர் படுகாயமடைந்தனர். 

அதேபோல், நேற்று (03) மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள உணவகம் ஒன்றிற்கு முன்னால் நடந்த வாள் வெட்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். 

இதற்கிடையில், இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது, ​​இந்த விவகாரம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கருத்து தெரிவிக்க முயன்ற போது, ​​சபாநாயகர் குறுக்கிட்டு, “இது ஒழுங்குப் பிரச்சினை அல்ல, எனவே சபை ஒத்திவைப்பு பிரேரணையின் போது இதனை கொண்டு வரலாம்” என்றார். 

அதேபோல், இது ஒரு தேசிய பிரச்சினை அல்ல என்று சபாநாயகர் கூறியதால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. 

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் திருகோணமலை வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் நோயாளர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் சபையில் கேள்வி எழுப்ப முற்பட்ட நிலையில் சபாநாயகர் அனுமதி மறுத்திருந்தார். 

இதனையடுத்து, சபையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. 

எவ்வாறாயினும், எதிர்க்கட்சித் தலைவர் தலையிட்டு நிலையியல் கட்டளைக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன மற்றும் அர்ச்சுனாவுக்கு ஒவ்வொரு நிமிடங்களை பெற்றுக் கொடுக்குமாறு கோரிய நிலையில் அவர்களுக்கான ஒரு நிமிடம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

SLCL மாஸ்டர் லீக்கில் ஸ்கோபியோ லெஜண்ட் சம்பியன்!

0

ஸ்ரீலங்கன் கிரிக்கெட் லீக் நடத்திய SLCL மாஸ்டர்ஸ் லீக் சீசன்1 கிரிக்கெட் சுற்றுத் தொடரின் இருத்திப் போட்டியில் ஸ்கோபியோ லெஜண்ட் அணியினர் வெற்றிவாகை சூடிக்கொண்டனர்.

நேற்று இடம்பெற்ற SLCL மாஸ்டர்ஸ் லீக் சீசன்1 கிரிக்கெட் சுற்றுத் தொடரில் ரீபோன் லெஜண்ட் அணியினரை வீழ்த்தி வெற்றி மகுடம் சூடிக்கொண்டனர் ஸ்கோபியோ லெஜண்ட் அணியினர்.

நாணய சுழட்சியில் வெற்றிபெற்ற ஸ்கோபியோ லெஜண்ட் அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் நிறைவில் 5 விக்கட் இழப்பிற்கு 215 என்ற இமாலய ஓட்ட இலக்கை நிர்ணயித்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரீபோன் லெஜண்ட் அணியினர் 16.3 ஓவரில் சகல விக்கட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்களை மாத்திரமே பெற்று படுதோல்வி அடைந்தனர்.

78 ஓட்ட வித்தியாசத்தில் ரீபோன் லெஜண்ட் அணியினரை ஸ்கோபியோ லெஜண்ட் அணியினர் வெற்றிபெற்றதன் மூலம், SLCL மாஸ்டர் T20 லீக் சீசன்1 கிரிக்கெட் சுற்றுத் தொடரின் சம்பியன் பட்டம் வென்றனர்.

இறுதிப்போட்டியின் சிறந்த வீரராகவும் சிறந்த பந்து வீச்சாளராகவும் தர்ஷன பீரிஸ் தெரிவுசெய்யப்பட்டதுடன், இறுதிப்போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக சுஜாத் விஜேசேகர தெரிவுசெய்யப்பட்டார்.

மேலும் தொடரின் சிறந்த வீரராக JD மஹேஷ் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் சிக்கிய பெறுமளவான கஞ்சா!

0

இலங்கை கடற்படையினரின் இன்றைய (2025 மார்ச் 03) விசேட அதிரடி நடவடிக்கையில், யாழ்ப்பாணம் அனலைத்தீவின் வடக்கு கடலில் நூற்று தொண்ணூற்றி ஏழு (197) கிலோகிராம்களுக்கு அதிகமான கேரள கஞ்சாவுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், டிங்கி படகொன்றும் (01) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இதன்படி, வடக்கு கடற்படை கட்டளைக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், இலங்கை கடற்படை கப்பல் எலார நிறுவனத்துடன் கடற்படையின் விசேட கப்பல் படையணி குழுவொன்றும் இணைந்து யாழ்ப்பாணம் அனலைத்தீவு வடக்கடலில் இந்த விசேட தேடுதல் நடவடிக்கையில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று சோதனையிடப்பட்டது.

அங்கு, குறித்த டிங்கி படகில் இந் நாட்டிற்கு கொண்டு வர முயற்சித்த எழுபத்தி எட்டு (78) பார்சல்களில் பொதி செய்யப்பட்ட சுமார் நூற்று தொண்ணூற்றி ஏழு (197) கிலோ நானூறு (400) கிராம் கேரள கஞ்சாவுடன் (ஈரமான எடை) இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் டிங்கி படகொன்று (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி எழுபத்தி எட்டு (78) மில்லியன் ரூபா என நம்பப்படுவதுடன், மேலும் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 29 மற்றும் 43 வயதுடைய பேசாலை மற்றும் காரைநகரைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் காரைநகர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட உள்ளன.

நாளை தொடக்கம் திடீர் வானிலை மாற்றம்!

0

நாளையிலிருந்து தற்போது நிலவும் மழை நிலைமை குறைவடையும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை நாளையிலிருந்து (04) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வருட சிறுபோக செய்கை ஆரம்பம்!

0

2025ம் ஆண்டு சிறுபோக செய்கைக்காக இரணைமடு குளத்தின் நீர் இன்று சமய வழிபாட்டுடன் சம்பிரதாயபூர்வமாக திறந்து விடப்பட்டது.

காலை 10.00 மணிக்கு சமய வழிபாடுகளைத் தொடர்ந்து 2025ம் ஆண்டுக்கான முதலாவது சிறுபோக செய்கைக்காக நீர் திறந்து விடப்பட்டது.

கடந்த வருட இறுதிப்பகுதியில் நாட்டின் பெரும்போக செய்கை அறுவடை செய்யப்பட்டதை அடுத்து சிறுபோகத்திற்கான செய்கையை இரனை மடு மக்கள் ஆரம்பித்துள்ளனர்.

கடந்த வருட இறுதியில் பெய்த கடும் மலை மற்றும் சீரற்ற காலநிலையால் நாட்டின் பெரும் பகுதிகளில் பெரும்போக செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன.

2025ம் ஆண்டு சிறுபோக செய்கை ஆரம்ப நிகழ்வில் மாவட்ட அரசாங்கதிபர், நீர்ப்பாசன பொறியியலாளர், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

பயிர்ச்செய்கைக்குழு தீர்மானத்தின் படி 20

25 சிறுபோகத்தில் 19164 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்ச்செய்கையும் 382 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுதானிய செய்கையும் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

நடுக்கடலில் அலறிய இலங்கை இந்திய கப்பல்!

0

நாகையிலிருந்து இலங்கைக்கு சென்ற பயணிகள் கப்பல் திடீரென கடல் சீற்றத்தால் நடுக்கடலில் தத்தளித்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

இதன்போது பயணிகள் அலறியதால் கப்பல் பாதியிலேயே நாகை திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அந்த கப்பலில் 17 ஊழியர்கள் உள்பட 95 பேர் பயணம் செய்துள்ளனர். 

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் கப்பல் சேவை வானிலை மாற்றம், சர்வதேச தொழில்நுட்ப அனுமதி உள்ளிட்ட காரணங்களால் தற்காலிகமாக கடந்தாண்டு நவம்பர் 18ம் திகதி முதல் நிறுத்தப்பட்டது. 

இதைதொடர்ந்து கடந்த மாதம் 22ம் திகதி முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பமானது. 

இருப்பினும் கடல் காற்று அதிகமாக வீசுவதால் பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வானிலை மாற்றம் சீரடைந்ததும் மீண்டும் மார்ச் 1 முதல் நாகப்பட்டினம்-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

அதன்படி நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு 78 பயணிகளுடன் புறப்பட்டது. 

வேளாங்கண்ணிக்கு தென்கிழக்கே 15 மைல்கல் தொலைவில் கப்பல் சென்றபோது கடல் சீற்றம் அதிகமானது. 

இதனால் கப்பல் கடலில் தத்தளிக்க ஆரம்பித்ததால் பயணிகள் அலறினர். வானிலை மோசமானதை தொடர்ந்து கப்பலை அவசர, அவசரமாக நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கப்பலின் கெப்டன் திருப்பியுள்ளார். 

இதை தொடர்ந்து நேற்று(2) மற்றும் இன்று (3) கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

கப்பல் நிர்வாகத்தின் அலட்சியமான போக்கால் இது போன்ற சம்பவம் நடந்ததாக பயணிகள் தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்த அரசாங்கத்தால் நாட்டை ஆள முடியாது!

0

கடந்த இரண்டு தேர்தல்களிலும் பொய்களை கூறி, மக்களை ஏமாற்றியே வெற்றி பெற்று, இன்று எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர் உடன்படிக்கையின்படி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய சதவீதத்தை ஒருதலைப்பட்சமாக மீறுவதால் மக்களும் வர்த்தகர்களும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு இந்த நெருக்கடி பாதீப்பை ஏற்படுத்தாது. ஆனால் சாதாரண மக்களே இவற்றுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

இது இவ்வாறே போனால், பெட்ரோல் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவதுடன், அரச நிறுவனங்களுக்குக் கடனாக வழங்கப்பட்டு வரும் எரிபொருளும் நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இவற்றைச் செய்ய முடியாத அரசாங்கமே நாட்டில் காணப்படுகின்றது. இந்த அரசாங்கத்தால் நாட்டை ஆள முடியாது. நாட்டை ஆளும் சரியான தொலைநோக்கு இவர்களிடம் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

அநுராம்புரம், நொச்சியாகம சமனல ஹோட்டலில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 

இன்றும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. மனித – காட்டு யானை மோதலுக்கு புதிய தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை. பயிர் சேதம் மற்றும் சொத்து சேதங்களுக்கான இழப்பீடுகள் இன்னும் வழங்கப்படவில்லை. எதிர்க்கட்சியில் இருந்த போது விவசாயிகளுக்கு 150 ரூபா உத்தரவாத விலை தருவதாக கூறினர், அது இன்னும் வழங்கப்படவில்லை. தற்போது அரசாங்கம் உத்தரவாத விலை 120 ரூபா என கூறி வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

விவசாய இயந்திரங்களின் விலை அதிகரித்துள்ளன. உரங்கள், களைக்கொல்லிகள், கிருமி நாசினிகள் மற்றும் உரங்கள் சரியாக கிடைப்பதில்லை. இப்பிரச்சினைகளால் நெல்லுக்கு உத்தரவாத விலையும் வழங்காதிருக்கின்றனர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

* விவசாயிக்கு ஏற்ற சிறந்த திட்டத்தை நாம் முன்வைத்திருந்தோம். 

விவசாயிகளுக்கு ஏற்ற சிறந்த திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியே தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்திருந்தது. அதை ஏற்றுக்கொள்ளாமல் ஆளுந்தரப்பினர்கள் கூறிய பொய்களை நம்பி தற்போது விவசாயிகள் ஏமாற்றமடைந்துபோயுள்ளனர். எனவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

* வேலையற்ற பட்டதாரிகள் வீதியில். 

தற்போது நாட்டில் சுமார் 40000 வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர். அவர்களுக்கு வேலை வழங்கப்படும் என அனுர குமார திஸாநாயக்க அன்று தெரிவித்திருந்தார். ஆனால் இன்று அவர்களுக்கு வேலை கூட வழங்கப்படவில்லை. அதற்கான உரிய ஏற்பாடுகள் கூட இதுவரை முன்வைக்கப்படவில்லை. பட்டதாரிகளையும் இந்த அரசாங்கம் ஏமாற்றியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். 

* அரச பணியாளர்களும் ஏமாற்றப்பட்டுள்ளனர். 

பொதுவாக, வரவு செலவுத் திட்டங்களில் சம்பள அதிகரிப்பு என்றால் சரளமாக தெளிவாக கூறப்படும். இம்முறை சம்பளம் அதிகரிப்பு குறித்து தெளிவின்மையான தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து உரையையும், ஏனைய ஆவணங்களையும் ஆராய்ந்தே இந்த வரவு செலத்திட்டத்தில் சம்பள அதிகரிப்பு குறித்த விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளன. ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு தடவையிலும் 20,000 ரூபா அதிகரிப்பு வழங்கப்படும் என கூறினாலும், இன்று அது கிடைக்காது முழு அரச சேவையாளர்களும் ஏமாற்றப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். 

ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார திஸாநாயக்க சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை மக்களுக்கு சார்பான முறையில் மாற்றுவதாக கூறினர். ஆனால் எந்த மாற்றமும் இன்றி ரணில் விக்ரமசிங்கவின் உடன்படிக்கையை முன்னெடுத்துச் செல்கின்றது. ஐக்கிய மக்கள் சக்தியும் மக்களுக்கு சார்பான முறையில் மாற்றுவதாக கூறியது. எமக்கு அதிகாரம் கிடைத்திருப்பின் நாம் மாற்றியமைத்திருப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு சவால் விடுத்த ரணில்!

0

இந்தியாவுடன் இணைந்து செயற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்ட காற்றாலை மின் திட்டம் தொடர்பாக புதிய அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்க்க காத்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

இந்திய தலைநகர் புது டெல்லியில் நடைபெற்று வரும் ‘NXT சர்வதேச மாநாட்டில்’ பங்கேற்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கு நடைபெற்ற ஊடகவியாலளர் சந்திப்பில் வைத்து இதனைத் தெரிவித்தார். 

இந்திய பயணத்தின் போது, ​​முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து கலந்துரையாடினார்.