Thursday, November 13, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 142

போதை தலைக்கேறியதில் 37 பேர் பலி!

0

பொலிவியாவில் இரண்டு பஸ்கள் மோதிக் கொண்ட விபத்தில் 37 பேர் உயிரிழந்தனர். 39 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஒரு பஸ் டிரைவர் மது அருந்தியதாக பயணிகள் தெரிவித்து உள்ளனர்.

உயினி மற்றும் கொல்சஹ்னி இடையிலான சாலையில் ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. சாலையின் மறுபுறத்தில் வந்த பஸ் ஒன்று, பாதை மாறி வந்து மோதியது. அந்நாட்டு நேரப்படி காலை 7 மணிக்கு நடந்த இந்த விபத்தில் 37 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 39 பேர் காயமடைந்தனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

விபத்துக்கு உள்ளான பஸ் ஒன்று அந்நாட்டில் நடக்கும் கார்னிவெல் கொண்டாட்டத்திற்கு சென்று கொண்டு இருந்தது. பஸ்சை ஓட்டியவர் மது அருந்தியதாக, பயணிகள் சிலர் போலீசிடம் கூறியுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறித்து அதிர்ச்சி தகவல்!

0

ஒழுங்குறுத்தும் நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், ஒரு வணிக வடிவத்தில் பணியாற்றியுள்ளமை தெளிவாகின்றது

– கோப் குழு

2023 மே மாதம் முதல் 2024 ஜூன் வரை வயதில் குறைந்தவர்கள் 683 பேர் வீட்டு பணிகளுக்காக வெளிநாடு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

வதிவிட பயிற்சி வழங்காமல் வீட்டுப் பணிப்பெண்கள் 28,186 பேர் முதல் முறையாக வெளிநாடு சென்றுள்ளதால் 631,177,650 ரூபாய் வருமானத்தை பணியகம் இழந்துள்ளமை புலப்பட்டுள்ளது

காலி சமநல பூங்கா வேலைத்திட்டத்திற்கு 170,000 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்த வர்த்தகக் கூடம் யாழ்ப்பாண வேலைத்திட்டத்தில் 500,000 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளமை தெரியவந்தது

சுற்றுலா வீசாவில் வீட்டுப் பணிப்பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு பதிவுசெய்யப்பட்ட முகவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை புலப்பட்டுள்ளது

ஜயகமு ஸ்ரீலங்கா திட்டத்தின் மொத்த செலவு 1.2 பில்லியன் ரூபாய்

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பற்றிய விசாரணைகளுக்கு கோப் உப குழு

ஒழுங்குறுத்தும் நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், ஒரு வணிக வடிவத்தில் பணியாற்றியுள்ளமை தெளிவாகியுள்ளதாக கோப் குழு சுட்டிக்காட்டியது. இந்த நிறுவனத்தின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்கும்போது இந்த விடயங்கள் தெளிவாவதாக கோப் குழு சுட்டிக்காட்டியது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் ஆராய்வதற்கு பாராளுமன்ற அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீரவின் தலைமையில் கடந்த 27.02.2025 அன்று கூடிய போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, வதிவிட பயிற்சி வழங்காமல் வீட்டுப் பணிப்பெண்கள் 28,186 பேர் முதல் முறையாக வெளிநாடு சென்றுள்ளதால் 631,177,650 ரூபாய் வருமானத்தை பணியகம் இழந்துள்ளமை புலப்பட்டுள்ளது. 22410 ரூபாய் கட்டணம் அறவிட்டு 28 நாட்கள் வதிவிடப் பயிற்சி வழங்கியிருக்க வேண்டி இருந்தாலும், இந்தப் பயிற்சி வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது புலப்பட்டது.

அந்தப் பயிற்சிக்குப் பதிலாக மூன்று மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு ஒரு நாளைக்கு சுமார் 390 பேருக்கு நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்டுள்ளமை இங்கு புலப்பட்டது. இந்த நேர்முகப்பரீட்சையும் வீடியோ ஒன்றைப் பார்ப்பதன் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை புலப்பட்டதுடன், இதனால் 2023 மே மாதம் முதல் 2024 ஜூன் வரை வயதில் குறைந்தவர்கள் 683 பேர் வீட்டுப் பணிகளுக்காக வெளிநாடு சென்றுள்ளதாக தெரியவந்தது.

அத்துடன், காலி மாவட்டத்தில் இடம்பெற்ற 170,000 ரூபாய் அடிப்படையில் சமநல பூங்கா வேலைத்திட்டத்திற்கு 170,000 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்த வர்த்தகக் கூடம் யாழ்ப்பாண வேலைத்திட்டத்தில் 500,000 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளமை புலப்பட்டுள்ளது

அத்துடன், காலி மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சிக்கு 170,000 ரூபாய்க்கு 30 வர்த்தகக் கூடங்கள் வாடகைக்கு எடுத்துள்ளதுடன், அதே நிறுவனத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சிக்கு எடுத்த வர்த்தக கூடம் ஒன்றுக்கு 500,000 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளமை இங்கு புலப்பட்டது. இந்தத் தொகைக்கு 25 வர்த்தகக் கூடங்கள் எடுத்துள்ளமை கண்டறியப்பட்டதுடன், அமைச்சின் செயலாளரிடமிருந்து கிடைத்த பரிந்துரைக்கு அமைய இந்தக் கட்டணம் செலுத்தப்பட்டதாக வருகை தந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், ஜயகமு ஸ்ரீலங்கா திட்டத்துக்கான மொத்த செலவு 1.2 பில்லியன் என இங்கு தெரிவிக்கப்பட்டதுடன், இதற்காக நிதி சரியான முறையைப் பயன்படுத்தி செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இந்த செலவு 500 மில்லியன் ரூபாவுக்கு அதிகம் என்பதால், அதற்காக அமைச்சரவையின் அனுமதி தேவை எனவும், அந்த அனுமதி கிடைத்துள்ளதாக அதிகாரிகள் கூறுவதானால் இது தொடர்பில் கணக்காய்வாளர் திணைக்களத்தினால் கண்டறிவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்தார்.

அத்துடன், சுற்றுலா வீசாவில் வீட்டுப் பணிப்பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு பதிவுசெய்யப்பட்ட முகவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை இங்கு புலப்பட்டதுடன் இது நிறுவனத்தின் பொறுப்பை முற்றாகத் தட்டிக்கழிப்பதாகும் என கோப் குழு சுட்டிக்காட்டியது.

2023 மார்ச் 30 இல. 07/2023 கொண்ட தலைவரின் சுற்றுநிருபத்தின் ஊடாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் ஓமான் நாட்டுக்கு சுற்றுலா ஒப்பந்தம் இன்றி இந்தப் வீட்டுப் பணிப்பெண்கள் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்களது பாதுகாப்பு தொடர்பில் பொறுப்பேற்றல் மற்றும் பொறுப்புக்கூறல் பற்றி அதிகாரிகளிடம் குழு வினவியது. இவ்வாறு சுற்றுலா வீசாவில் 4,942 பேர் வெளிநாடு சென்றுள்ளதுடன், அவற்றில் அதிகமானவர்களுக்கு தொழில் வழங்கப்பட்டுள்ளமை சம்பந்தமான ஆவணங்கள் தூதரகத்தின் கணினி தகவல் கட்டமைப்பில் சேர்க்கப்படவில்லை என்பதும் இங்கு புலப்பட்டது.

அத்துடன், வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்று பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட புலம்பெயர்ந்தோரை தற்காலிகமாகத் தடுத்து வைப்பதற்கான தடுப்பு மையங்களைப் பராமரிப்பது குறித்தும், இந்நிறுவனத்தில் நியமனங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

மேலும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பற்றிய விசாரணைகளுக்காக கோப் உப குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோப் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான என்.கே.எம்.அஸ்லம், சமன்மலி குணசிங்க, கோசல நுவன் ஜயவீர, சுஜீவ திசாநாயக்க, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பாவானந்தராஜா, ஜகத் மனுவர்ண, ருவன் மபலகம, சுனில் ராஜபக்ஷ, தர்மப்பிரிய விஜேசிங்க, அசித நிரோஷன எகொட விதான, திலின சமரகோன், சந்திம ஹெட்டியாராச்சி மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.

முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு வலை வீச்சு!

0

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்துவவை பொலிஸார் தேடி வருகின்றனர்.

கைது செய்வதற்கான உத்தரவு (வரண்ட்) பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத் தடை விதித்துள்ளது, இதனால் அவர் வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 8 சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2023 டிசம்பர் 31 அன்று மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள W 15 ஹோட்டலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக அவருக்கு கைது வரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, வழக்கு எண் 6314/23 இன் கீழ், கொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கொழும்பு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி அன்ஸ்லம் டி சில்வா உள்ளிட்ட 08 சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வானிலை குறித்த முக்கிய அறிவித்தல்!

0

பலத்த மின்னல் மற்றும் பலத்த மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இன்று (02) பிற்பகல் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, இரவு வரை செல்லுபடியாகும். 

அதன்படி, இந்த அறிவிப்பு மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களுக்கும் மொனராகலை மாவட்டத்திற்கும் பொருந்துமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த பகுதிகளுக்கு மாலை அல்லது இரவில் பலத்த மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். 

மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

வெளியேற்றப்பட்டார் உக்ரைன் ஜனாதிபதி!

0

அமெரிக்க அதிபர் டிரம்புடனான பதட்டமான மோதலுக்கு ஒரு நாள் கழித்து, ‘ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் போராட்டத்தில் அமெரிக்கா அளித்த அசைக்க முடியாத ஆதரவிற்கு நன்றி. டிரம்பின் ஆதரவு முக்கியமானது’ என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே வெள்ளை மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தையின் போது வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் டிரம்பின் உத்தரவு படி ஜெலன்ஸ்கி வெளியேற்றப் பட்டார். டிரம்பால் அவமதிக்கப்பட்டதாக கருதப்படும் ஜெலன்ஸ்கிக்கு ஆறுதலாக ஐரோப்பிய நாடுகள் கைகோர்த்துள்ளன. அமெரிக்காவின் துணை இல்லாமல் ரஷ்யாவுடன் நடக்கும் போரில் இந்த நாடுகள் எதுவும் செய்துவிட முடியாது என்ற எதார்த்தம் பலருக்கும் புரிகிறது.

ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் போராட்டத்தில் அமெரிக்கா அளித்த அசைக்க முடியாத ஆதரவிற்கு நன்றி. டிரம்பின் ஆதரவு முக்கியமானது. அவர் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார். ஆனால் நம்மை விட வேறு யாரும் அமைதியை விரும்பவில்லை. உக்ரைனில் இந்தப் போரில் வாழ்வது நாம் தான். இது நமது சுதந்திரத்திற்கான போராட்டம், நமது உயிர்வாழ்விற்கான போராட்டம்.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஒரு கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராக இருக்கிறேன். அமெரிக்கா அளித்த அனைத்து ஆதரவிற்கும் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். பாதுகாப்பு உத்தரவாதங்கள் இல்லாத போர்நிறுத்தம் உக்ரைனுக்கு ஆபத்தானது. நாங்கள் 3 ஆண்டுகளாக போராடி வருகிறோம். அமெரிக்கா எங்கள் பக்கம் இருப்பதை உக்ரைன் மக்கள் அறிந்து கொள்ள விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரமழானில் இஸ்ரேல் செய்த காரியம்!

0

ரமழான் மற்றும் யூதர்களின் பாஸ்ஓவர் பண்டிகை காலங்களை முன்னிட்டு, தற்போது அமுலில் உள்ள போர்நிறுத்தத்தை, ஆறு வாரங்களுக்கு தற்காலிகமாக நீடிப்பதற்கு இஸ்ரேல் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

முன்னதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட போர்நிறுத்தத்தின் முதல் கட்டம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தது. 

நிறைவடைந்த சிறிது நேரத்தில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் உத்தியோகபூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிட்டது. 

இந்த நிலையில், டொனால்ட் ட்ரம்பின் விசேட பிரதிநிதியினால் சமர்ப்பிக்கப்பட்ட போர் நிறுத்த திட்டத்தின் கீழ், காசாவில் ஹமாசினால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயகைதிகளில் 50 சத வீதமானவர்கள் முதல் நாளிலேயே விடுவிக்கப்படுவார்கள் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது 

இருப்பினும், நிரந்தர போர் நிறுத்தம் குறித்து ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டால் பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

அண்மைய காலத்தில், இஸ்ரேலிய நடவடிக்கைகள் குறித்து ஹமாஸ் பகிரங்கமாக எந்த கருத்தினையும் தெரிவிப்பதில்லை. 

பிரதமர் நெத்தன்யாகுவினால் அழைப்பு விடுக்கப்பட்டு நான்கு மணி நேரம் நடந்த கூட்டத்தின் பின்னரே, இஸ்ரேலிய அரசாங்கம் போர் நிறுத்த நீடிப்பை ஆதரித்தது. 

எனினும் அமெரிக்க விசேட பிரதிநிதியினால் சமர்ப்பிக்கப்பட்ட திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது.

ஹமாஸ் தனது நிலைப்பாட்டை மாற்றினால் இஸ்ரேல் உடனடியாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முடியும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்கு கரையில் உள்ள பாலஸ்தீன அதிகார சபை உட்பட ஏனைய பாலஸ்தீனிய நிர்வாக கட்டமைப்புக்களை கையளிக்க தயாராகவுள்ள போதிலும், காசாவில் ஒரு சக்திவாய்ந்த அமைப்பாக இருப்பதில் ஹமாஸ் உறுதியாக உள்ளதாக கருதப்படுகிறது.

நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு!

0

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு மல்கம்பிட்டி பகுதிகளில் நரிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இலங்கை நரிகள் ( SriLankan Jackal) அல்லது தென்னிந்திய குள்ள நரிகள் என இவை அழைக்கப்படுகின்றன.

நெல் அறுவடை முடிந்து செப்பு நிறத்தில் காணப்பட்ட வயற்பகுதிக்குள் நரிகளின் நடமாட்டம் தென்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

வயலின் அடிக்கட்டை எது? நரி எது? என்று தெரியாத உருமறைப்புடன் அப்பகுதியில் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றது. 

இவ்வாறான நரிகள் ஒரு சூழற்றொகுதியின் சமனிலைக்கு மிக முக்கியமானது. 

நரிகள் மயில்கள் போன்றவற்றை கட்டுப்படுத்தியும் மற்றைய சிறு வேட்டையாடிகளின் குடித்தொகைகளை சமனிலைப்படுத்தியும் விவசாயிகளுக்கும் மக்களுக்கும் நன்மைகள் பயக்கின்றன என இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் உயிரியல் விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் பிரிவுத் தலைவருமான ஏ.எம்.றியாஸ் அகமட் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானில் வேலைவாய்ப்பு!

0

ஜப்பானில் சிறப்புத் திறன் கொண்ட பணியாளர் (SSW) திட்டத்தின் கீழ், தாதியர் பராமரிப்புத் துறையில் இலங்கையர்களுக்காக பல வேலை வாய்ப்புக்கள் காணப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 

அந்த வேலைகளுக்குத் தேவையான தகுதிகளைப் பூர்த்தி செய்யும் பணியாளர்கள், விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக பணியகம் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. 

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் IM Japan இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, 18-35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இந்த வேலை வாய்ப்புகளை இலவசமாகப் பெற முடியும். 

இந்த வேலைகள் 5 வருட காலத்திற்கு கிடைக்கும் என்றும், குறைந்தபட்ச சம்பளம் 400,000 ரூபாய்க்கு மேல் இருக்கும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

மேலும், ஜப்பான் நாட்டவருக்கு கிடைக்கும் அனைத்து வரப்பிரசாதங்களுக்கும் இந்த வேலை வாய்ப்பினை பெறுபவர்களுக்கும் கிடைக்கும் என்பது இந்த வேலைப் பிரிவின் முக்கிய அம்சமாகும். 

வேலைக்கு விண்ணப்பிக்கும் போது ஜப்பானிய மொழி அறிவு கட்டாயமாகும். 

JFT அல்லது JLPT N4 நிலை மற்றும் திறன் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் இதற்காக விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பதாரிகள் உயர்தரப் பரீட்சையில் தோற்றியிருக்க வேண்டும் என்பது கட்டாயம் 

உடலில் பச்சை குத்திக்கொள்ளாமல் இருப்பது கட்டாயத் தேவை என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. 

மேற்கண்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் பணியகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.slbfe.lk/si/ வழியாக பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், இந்த வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஜப்பானில் தாதியர் பராமரிப்பு துறையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட ஒரு குழு நாளை (2) ஜப்பானுக்கு புறப்படவுள்ளது.

கிழி கிழியென கிழித்த சாணக்கியன் எம்.பி!

0

இந்த நாட்டில் இன்னும் பொறுப்புக்கூறல் குறித்து கடுமையான கேள்விகள் உள்ளன. எனது இந்த உரையின் போது மேதகு ஜனாதிபதி அவர்களும் சபையில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பொறுப்புக்கூறல் தொடர்பில் அரசாங்கத்தின் சார்பில் எவ்வித முன்னேற்றகரமான கருத்துக்களும் வெளியிடப்படவில்லை. இது தொடர்பில் உள்நாட்டு செயல்முறையை கடைப்பிடிக்கப் போகின்றீர்களா? அல்லது சர்வதேச செயல்முறையை நாடுகின்றீர்களா? என்பன பாரிய கேள்விக்குறியாக உள்ளன. இதனை உங்களது உரையில் தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன். 

அதற்கு மேலதிகமாக, இந்த ட்ரிப்பலி ப்ளடுன் ஊடாக முன்னெடுக்கப்பட்ட கொலைகள் தொடர்பில் கடந்த காலங்களாக நான் தொடர்ச்சியாக பல விசேட அறிவித்தல்களை வழங்கியுள்ளேன். ஆனால் இதுவரை அது தொடர்பில் எவ்வித விசாரணைகளும் ஆரம்பிக்கப்படவில்லை. இவற்றுடன் அரச புலனாய்வுத்துறையினர் தொடர்புபட்டு செயற்பட்டு இருந்ததாக நாம் மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். அண்மையில் இடம்பெற்ற கனேமுல்ல சஞ்ஜீவவின் கொலையை அடுத்து சாட்சியாளர்கள் எமக்கு பாரிய அழுத்தம் ஏற்படுத்தி வருகின்றனர். சாட்சியங்களை உங்களுக்கு வழங்கி நீங்கள் பாராளுமன்றத்திலும் இதனை வெளிப்படுத்திய நிலையில் நமக்கும் இந்த நிலைதான் நேருமா என்று கேள்வி எழுப்புகின்றனர். 

நான் வேண்டுமாயின் மற்றுமாரு விடயத்தை குறிப்பிடுகின்றேன். 2009 யுத்தத்தின் பின்னர் மெனிக்ஃபாமில் இருந்த 27 இளைஞர்கள் காத்தான்குடிக்கு அழைத்து வரப்பட்டு, காத்தான்குடியில் வைத்து கொலை செய்யப்பட்டு கடலில் போடப்பட்டதாக அதனுடன் தொடர்புடைய புலனாய்வுத்துறையின் அப்போதிருந்த வான் சாரதி ஒருவர் வழங்கி சாட்சியம் தற்போதும் எனது தொலைபேசியில் உள்ளது. இவை தொடர்பில் விசாரணை செய்யப்படாவிடின், இந்த அரசாங்கத்தினர் கடந்த காலத்தில் இருந்த சதிகாரர்களுக்கு பயந்து போயுள்ளனரா? இந்த அரசாங்கம் இவற்றை மூடி மறைக்க முயல்கின்றதா? என்பது தொடர்பில் எமக்கு சந்தேகம் எழுகிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக ஒருபுறம் கூறப்படுகிறது. அந்த விசாரணைகள் சரியாக முன்னெமுடுக்கப்படுமாயின் அது எமக்கு மகிழ்ச்சி. ஆனால் இது தொடர்பில் ஒரு நபரிடமேனும் வாக்குமூலம் பதிவுசெய்யப்படவில்லை என்பதை நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். 

அந்தவகையில் பொறுப்புகூறல் விடயத்தில் பாரிய பிரச்சினை காணப்படுகிறது. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை கொண்டு வரப்போகின்றீர்களா? இன்றேல் நாட்டில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் ஏதேனும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றீர்களா? இல்லை என்றால் கொலைகள் தொடர்பில் ஏதேனும் விசாரணைகளை முன்னெடுக்கின்றீர்களா? எதுவும் இல்லை. வடக்கு மக்கள் ஜனாதிபதிக்கு விசேட ஆணை ஒன்றை வழங்கினர். மட்டக்களப்பு மக்கள் என்றால் எனக்கு தான் ஆணை வழங்கினர். இவை பற்றி தேடிப் பார்ப்பதற்காகவே வடக்கு மக்கள் அந்த ஆணையை வழங்கினர். 

அதேபோன்றுதான் இம்முறை பாதுகாப்பு அமைச்சின் வரவு செலவு திட்ட தொகையை பார்த்தால் பாரிய சிக்கல் நிலவுகிறது. இந்த வருடத்தில் 135 பில்லியன் தொகை உணவு மற்றும் சீருடைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு 70 பில்லியன், 2024ஆம் ஆண்டு 101 பில்லியன். 2025 இல் 135 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இது 33 வீதத்தால் அதிகரித்துள்ளது. கடந்த காலத்தில் நீங்களும் எதிர்க்கட்சியில் இருந்த காலப்பகுதியில் இந்த சவேந்திர சில்வா பிரான்சிலிருந்து சீருடை தைக்க கொண்டு வந்தார் என தெரிவித்தோம். அவ்வாறாயின் உண்மையான நிலை என்ன என்பதை தற்போது எங்களுக்கு தெரிவியுங்கள். இல்லை என்றால் பாதுகாப்பு துறை தொடர்பில் நாட்டு மக்களுக்கு சொல்லும் கதைகள் உண்மையா, பொய்யா என்பதை தெளிவுபடுத்துங்கள். 

அதேபோன்று தான் இலங்கை போன்றதொரு சிறிய நாட்டுக்குள் பாதுகாப்பு துறையில் உள்ள செலவுகளை குறைக்காமல் எமது பொருளாதாரத்தை சரிசெய்ய முடியாது. இதனை நாங்கள் கடந்த காலங்களிலும் தொடர்ந்து தெரிவித்து வந்தோம். கடந்த கோட்டாபய ராஜபக்ஷ காலத்தில் நாங்கள் கண்டோம் இராணுவத்தினரை கொண்டு கட்டிடங்களை கட்டுகின்றனர். பிற வேலைகளை செய்கின்றனர். இந்த அரசாங்கத்திலும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் 1000 பாடசாலைகளை அமைப்பதற்கு கதிரை மேசைகளை அமைப்பதற்கு இராணுவத்தினரை பயன்படுத்துகின்றனர். அப்படி என்றால் கதிரை மேசை அமைப்பதற்கு இராணுவத்தினரை பயன்படுத்துவதா? 

இராணுவத்தை முறையானதாக மாற்றியமைப்போம் என உங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் இன்றும் இவர்களை கதிரை மேசை அமைப்பதற்கு பயன்படுத்துகின்றீர்கள். அதேபோன்று தான் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள், கடற்படை முகாம்கள், விமானப்படை முகாம்கள், மக்களின் பாடசாலைகள், பொது சந்தைகள் போன்றன இன்னும் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் பொறுப்பில் காணப்படுகின்றன. இவற்றை விடுவிப்பதாக குறிப்பிட்டிருந்த போதிலும், நீங்கள் விடுவிப்பதாக கூறிய 7 ஏக்கர் நிலப்பரப்பும் இன்னும் விடுவிக்கப்படவில்லை என உறுப்பினர் கஜன் பொன்னம்பலம் குறிப்பிட்டார். எனவே உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையை பயன்படுத்தி நீங்கள் எமக்கு நியாயமான ஒரு தீர்வை பெற்றுத் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். 

அதேபோன்று தான் தேர்தல் கொள்கை பிரகடனத்தின் 172ஆவது பக்கத்தில் உடனடியாக புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு நிறைவேற்று முறையை இல்லாதொழிப்பதாக, அது மட்டுமின்றி புதிய அரசியலமைப்பை உடனடியாக கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது தொடர்பில் எதுவும் காணக்கூடியதாக இல்லை. 

அரசாங்கத்தினதும், உங்களதும் பிரபல்யம் காணப்படும் போதே இவற்றை செய்ய வேண்டும். இவற்றை காலம் தாமதித்து காலம் தாமதித்து செய்ய கூடியவை அல்ல. புதிய அரசியலமைப்பு குறித்து எமக்கு அறியக் கிடைத்த ஒரே விடயம் சபாநாயகர் கூறியது, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் பெயரை நிரந்தர எதிர்க்கட்சி தலைவர் என குறிப்பிடுவது மாத்திரமே. வேறு எதுவும் எமக்கு தெரியாது. எனது மேதகு ஜனாதிபதி அவர்களே இது தொடர்பில் உங்களிடமிருந்து பொறுப்புமிக்க பதிலொன்றை எதிர்பார்க்கின்றோம். 

இதற்கு மேலதிகமாக கடந்த காலங்களில் புலனாய்வு துறையின் கேர்னல் மட்டத்தின் மேலுள்ள அனைவரையும் நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது புலனாய்வுத்துறையின் உயர்மட்ட அதிகாரிகளை செயற்படுத்துவது தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்திக்கு உதவிய புலனாய்வுத்துறை அதிகாரியொருவர் என தகவல் பரவிவருகிறது. எனவே இது தொடர்பிலும் தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். ஆனால் இது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவே பதில் கூற முடியாது என்றாலும் பரவாயில்லை. ஏனென்றால் இது போன்ற பதில்களை கேட்டு கேட்டு நாம் பழகிவிட்டோம். 

எனக்கு சில வேளைகளில் ஜனாதிபதி அவர்கள் குறித்து கவலையும் ஏற்படுகிறது. ஜனாதிபதி அவர்கள் நாடு முழுவதும் சென்று பாடுபட்டு பாரிய முயற்சி எடுத்து இந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுத்தார். ஆனால் இந்த பாராளுமன்றத்திலுள்ள அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாட்டை பார்க்கும் போது ஜனாதிபதி குறித்தும் கவலை ஏற்படுகிறது. 

தேர்தல் காலத்தில் குறிப்பிட்ட விடயங்களையும், தற்போது நிகழும் விடயங்களையும் பார்க்கும் போது, உகண்டாவிலிருந்து ஒழித்துவைக்கப்பட்ட பணத்தை கொண்டுவருவதாக கூறப்பட்டது. வீ.எஃப்.எஸ். கொடுக்கல்வாங்கல் என ஏதேனும் செயற்பாட்டை இதுவரை முன்னெடுத்துள்ளீர்களா? சீனி வரி ஊழல் தொடர்பில் நீங்கள் தான் கேள்வி எழுப்பியிருந்தீர்கள். அது தொடர்பில் ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளீர்களா? தேங்காய் எண்ணெய் ஊழல் குறித்து ஏதேனும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா? அவன்கார்ட் தொடர்பில் ஏதேனும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளீர்களா? அவன்கார்ட் தொடர்பிலும் நிறைய விடயங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அது தொடர்பில் பின்னர் குறிப்பிடுகின்றோம். 

இந்த திருடர்களை பிடிப்பதற்காகவே ஆணை வழங்கப்பட்டது. ஆனால் திருடர்களை பிடிக்கின்றார்களா இல்லையா என்பது தொடர்பிலேயே எமக்கு பாரிய பிரச்சினை காணப்படுகிறது. ஏனென்றால் அரச வழக்கறிஞர்கள் அலுவலகம் அமைப்பதாக நாட்டின் நீதி அமைச்சர் கூறுகின்றார். ஆனால் வெளிவிவகார அமைச்சர் ஜெனீவாவிற்கு சென்று அது தொடர்பில் ஒரு வார்த்தை கூட பேசுகின்றார் இல்லை. அதற்கு அடுத்ததாக பயங்கரவாத தடை சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்று மாத்திரமல்ல பயங்கரவாத தடை சட்டத்திற்கு மாற்றாக எதுவும் கொண்டு வர நாம் இடமளிக்க மாட்டோம் என கூறப்பட்டது. ஆனால் தற்போது பயங்கரவாத தடை சட்டத்திற்கு புதிய சட்டமூலத்தை கொண்டுவர அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நீதி அமைச்சர் குறிப்பிடுகின்றார். எனவே தேர்தல் மேடைகளில் குறிப்பிடப்பட்டவையும் தற்போது நிகழ்பவையும் ஒன்றுக்கு ஒன்று முரணாகவே காணப்படுகின்றன. 

இது தொடர்பில் நான் தொடர்ந்து குறிப்பிட்டு வந்துள்ளேன். கடந்த காலங்களில் 966 பில்லியன் வரி நிவாரணம் வழங்கப்பட்டது. அதனை இந்த அரசாங்கம் ஏன் மீளப் பெறவில்லை. 2025ஆம் ஆண்டிலும் அந்த 966 பில்லியன் வரி நிவாரணம் வழங்கப்படுகிறது. கோடீஸ்வர வர்த்தகர்களுக்கு இந்த அரசாங்கத்திலும் 966 வரி நிவாரணம் வழங்கப்படுகிறது. சாதாரண மக்களுக்கு மேலும் வரி விதிக்கப்படுகிறது. அதனால், கௌரவ ஜனாதிபதி அவர்களே உங்கள் மீது மக்கள் இன்னும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இழுத்து மூடப்பட்ட யால தேசிய பூங்கா!

0

தற்போதைய மழை நிலைமைகள் தணியும் வரை யால தேசிய பூங்காவை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யால தேசிய பூங்காவின் பொறுப்பாளர் மனோஜ் வித்யாரத்ன தெரிவித்தார். 

கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழையால் யால தேசிய பூங்காவின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன என்றும், பூங்காவிற்குள் உள்ள சில ஏரிகளின் கரைகள் உடைந்து சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இதன் காரணமாக, வனவிலங்குகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இன்று (மார்ச் 1) முதல் மழை நிலைமைகள் தணியும் வரை யால தேசிய பூங்காவை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, யால வலய இலக்கம் 01 -ஐ சேர்ந்த கடகமுவ மற்றும் பலடுபான நுழைவு வாயில்கள் மூடப்பட்டுள்ளன. 

இது தொடர்பாக எமது ஆய்வில், யால தேசிய பூங்காவின் நுழைவு வீதியான நிமலவ பகுதியில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதை காண முடிந்தது. 

இது தொடர்பில் யால சஃபாரி ஜீப் வாகன சங்கத்தின் தலைவர் தரிந்து ஜயசிங்க கருத்து தெரிவிக்கையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தால், முன்பணம் செலுத்திய சுற்றுலாப் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்தார்.