Thursday, November 13, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 144

இந்தியாவுக்கு பறக்கவுள்ள ரணில்!

0

உலகளாவிய நிகழ்வுகள் குறித்து விசேட உரை நிகழ்த்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (27) இந்தியா செல்லவுள்ளார்.

இந்தச் சொற்பொழிவு நாளை (28) புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சர்வதேச இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது. 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாபர், முன்னாள் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் ஆகியோரும் இங்கு உரை நிகழ்த்தவுள்ளனர். 

தெற்காசியா குறித்த சொற்பொழிவை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிகழ்த்தவுள்ளமை விசேட அம்சமாகும். 

மேற்படி, இந்திய விஜயத்தின் போது ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் ஒரு சந்திப்பும் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. 

மேலும், இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் குழுவுடன் அவர் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார். 

குறுகிய காலத்திற்குள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இதுவாகும். 

முன்னாள் ஜனாதிபதி மார்ச் 2 ஆம் திகதி நாட்டுக்கு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறக்கப்படாத ஆயுர்வேத வைத்தியசாலை!

0

பல வருட காலமாக திறக்கப்படாத ஆயுர்வேத வைத்தியசாலை

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச சபையினரால் கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் பல மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை ஏழு வருடம் கடந்த நிலையில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படாது குறித்து மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த கட்டிடம், கால்நடைகளின் தங்குமிடமாகவும், பட்டறை காடாகவும் காட்சியளிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ் வைத்தியசாலை கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 16 கிராம மக்கள் பயன் தரக்கூடிய வகையில் நவீன ஆயுர்வேத வைத்தியசாலையாக நிர்மாணிக்கப்பட்ட போதிலும் இன்றுவரை மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படாத நிலையில் இருப்பதையிட்டு மக்கள் கவலை தெரிய்விக்கின்றனர்.

இதனை மிக விரைவில் மக்களினது பாவானைக்கு கையளிக்க வேண்டுமென இப்பகுதியில் வாழும் பொது அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் தற்பொழுது அதிகளவாக ஆயுர்வேத வைத்தியசாலையையே நாடி வருகின்றமையால் குறித்த பகுதியில் உள்ள மக்கள் புதுக் குடியிருப்பு, பரந்தன் ஆகிய பகுதிகளுக்கே பல சிரமங்களுக்கு மத்தியில் ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சொந்த இடத்தில் நவீன ஆயுர்வேத வைத்தியசாலை கட்டிடம் இருந்தும் வெளி பகுதியில் உள்ள ஆயுர்வேத வைத்திய சாலையை நாடவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே மக்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் குறித்த ஆயுர்வேத வைத்திய சாலையை எமது பயன்பாட்டுக்கு விரைவாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

கிளிநொச்சி செய்திகளுக்காக ஆனந்தன்

முல்லைத்தீவில் களைகட்டிய இல்ல விளையாட்டு போட்டி!

0

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் அமைந்துள்ள விஸ்வநாதர் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வளுனர் திறனாய்வுப் போட்டி பள்ளி முதல்வர் திரு யோகராசா அவர்களின் தலைமையில் நேற்று 25.02.2025 மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

மாணவர்களின் விளையாட்டு திறமையை ஊக்குவிக்கும் ஒரு அங்கமாக வருடம்தோறும் பாடசாலைகளில் இல்ல மெய்வளுனர் திறனாய்வுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் விசுவமடு, விஸ்வநாதர் வித்தியாலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல மெய்வளுனர் திறனாய்வுப் போட்டிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

மாணவர்கள் தமது விளையாட்டு திறமையை காண்பிக்கும்வண்ணம், போட்டிகளில் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் 50 மீட்டர் 75 மீட்டர் ஓட்டங்கள் என பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றதுடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கானி ஜெயகாந்த், ஆரம்ப உதவி கல்வி பணிப்பாளர் திருக்குமரன், மதகுருமார்கள், இராணுவத்தினர், அயல் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி செய்திகளுக்காக ஆனந்தன்

தனியார் ஊழியர்களுக்கு விழுந்த இடி!

0

வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் முன்மொழிந்திருந்தாலும், அத்தகைய சம்பள அதிகரிப்புக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று இலங்கையின் ஐக்கிய தொழில்முனைவோர் மன்றம் தெரிவிக்கிறது. 

வணிகர்கள் திவாலான தங்கள் வணிகங்களை மீண்டும் உயிர்ப்பிக்க கால அவகாசம் தேவை என அதன் தலைவர் டானியா எஸ். அபேசுந்தர தெரிவித்தார். 

“நாங்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது பட்ஜெட்டில் வைப்பதற்கான சில தரவுகள் அல்ல. சில செயல்படுத்தக்கூடிய திட்டங்கள். அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அது மிகவும் நல்ல விடயம். தனியார் துறையையும் அதையே செய்யச் சொல்லும்போது அதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். ரூ. 21,000 சம்பளத்தை ரூ. 27,000 ஆக உயர்த்தும்போது, ​​அங்கேயே ரூ. 6,000 வித்தியாசம் உள்ளது. 50 – 60 மணிநேரத்திற்கு OT செய்கிறார்கள். நாங்கள் ஒரு மணி நேரத்திற்கு ரூ. 210 செலுத்துகிறோம். அதற்கு மட்டும், நாங்கள் சுமார் ரூ. 10,000 செலுத்துகிறோம். அதனுடன் ETF, EPF மற்றும் சம்பள அதிகரிப்பு அனைத்தையும் கூட்டும்போது, ​​சுமார் ரூ. 15,000 அதிகரிக்கிறது. அது அடிப்படை சம்பளத்திலிருந்து அதிகரிக்கும்போது, ​​தொழில்முனைவோராகிய எங்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது.” என்று தெரிவித்தார்.

சட்டென்று மாறிய வானிலை!

0

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுளளது.

ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை, காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ.க்கு மேல் சற்று பலத்த மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சஞ்சீவ படுகொலையின் திக் திக் நொடிகள்!

0

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவம் தொடர்பான மரண விசாரணை இன்று (24) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த விசாரணை தொடர்பான சாட்சியங்கள் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் பதிவு செய்யப்பட்டன.

இதன்போது, கொழும்பு குற்றப்பிரிவின் பொலிஸ் சார்ஜென்ட் பண்டாரவின் வழிகாட்டுதலின் கீழ், துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் நீதிமன்ற அறையில் பணியில் இருந்த கெசல்வத்த பொலிஸை சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஹேவாபதிரணகே தரங்க சாட்சி வழங்கிய நிலையில்,  சம்பவம் நடந்த அன்று நீதிமன்ற நடவடிக்கைகள் காலை 9.30 அல்லது 9.35 மணியளவில் ஆரம்பித்ததாக தெரிவித்தார்.

“அன்று ஸ்கைப் தொழில்நுட்பத்தின் மூலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலத்தை நீட்டிக்கும் செயற்பாடு இடம்பெறவிருந்தது. காலை 9:40 மணியளவில் நீதிமன்ற அறையின் மூடப்பட்டிருந்த கதவைத் திறந்து, இரண்டு சிறை அதிகாரிகள் சந்தேக நபர் ஒருவரை திறந்த நீதிமன்றத்திற்குள் அழைத்து வந்தனர். ஒரு சிறை அதிகாரி என்னிடம் வந்து, ‘கணேமுல்ல சஞ்சீவவை அழைத்து வந்துள்ளோம்’ என்று கூறினார். நான் சந்தேக நபரை சிறைக் கூண்டிற்குள் வைக்கச் சொன்னேன்.

அப்போது சிறை அதிகாரி, ‘இந்த சந்தேக நபருக்கு பகைவர்கள் இருப்பதால், கூண்டிற்குள் வைக்க முடியாது’ என்று கூறினார். பின்னர் அவரை பெஞ்சில் உட்கார வைக்கச் சொன்னேன்.  நீதவான் கேட்டால், நீங்களே காரணங்களை விளக்குங்கள் என்று நான் சிறை அதிகாரியிடம் கூறினேன்.
பின்னர் இந்த சந்தேக நபரை பெஞ்சில் உட்கார வைத்தார்கள். ஏறக்குறைய முப்பது வழக்குகள் ஸ்கைப் தொழில்நுட்பத்தின் மூலம் எடுக்கப்பட்ட பிறகு, ஸ்கைப் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் கணேமுல்ல சஞ்சீவவின் வழக்கு அழைக்கப்பட்டது. பிரதிவாதி சாட்சிக் கூண்டிற்கு முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அப்போது நீதவான், சந்தேக நபர் கணேமுல்ல சஞ்சீவவிடம், வழக்குக்கு பிணை இருந்ததா என்று விசாரித்தார். அப்போது கணேமுல்ல சஞ்சீவ, ‘பிணை இல்லை’ என்று கூறினார். அந்த சந்தர்ப்பத்தில் நீதவான், சிறை அதிகாரியிடம், ‘நீதிமன்ற உத்தரவு இல்லாமல் இந்த சந்தேக நபரை ஏன் அழைத்து வந்தீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்க சிறை அதிகாரி முன்னால் வந்தார். அவரால் ‘ஒன்பது’ என்ற வார்த்தையை மட்டுமே சொல்ல முடிந்தது. திடீரென மூன்று அல்லது நான்கு துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டன.

உள்ளே இருந்தவர்கள் கத்த ஆரம்பித்தனர். சட்டத்தரணி உடையணிந்த ஒரு நபர் சாட்சிக் கூண்டு பக்கம் திரும்பி ஏதோ செய்வதைப் பார்த்தேன். அதனுடன் தான் துப்பாக்கிச் சத்தங்கள் வந்தன. அந்த நபரின் முகத்தை நான் பார்க்கவில்லை. அவர் நீல நிற டையை அணிந்திருந்தார். பின்னர் அந்த நபர் கதவைத் திறந்து வெளியே தப்பி ஓடினார். அவர் கையில் எதுவும் இருக்கவில்லை. பின்னர் நான் நீதவான் இருக்கை பக்கம் பார்த்தேன். அங்கு நீதவான் இருக்கவில்லை. பின்னர் நாங்கள் தேடி பார்த்தோம். நீதவான் பெஞ்சுக்கு அடியில் மறைந்து இருந்தார்.

பின்னர் நாங்கள் அவரை பாதுகாப்பாக அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றோம். நீதவான் அதிர்ச்சியடைந்திருந்தார். பின்னர் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்கான சந்தேக நபர் கணேமுல்ல சஞ்சீவ சாட்சிக் கூண்டிற்குள் மேலே தலை தூக்கியவாறு விழுந்து கிடந்தார்.” என்று சாட்சி வழங்கினார்.

புதுகுடியிருப்பு பகுதியில் கோர விபத்து!

0

தர்மபுரம், புது குடியிருப்பு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தர்மபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம், புது குடியிருப்பு பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த ஹையஸ் ரக வேன் ஒன்று, பரந்தன் பகுதியில் இருந்து விசுவமடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவ நபர் படுகாயம் அடைந்த நிலையில் தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலதிக சிகிச்சைக்காக தருமபுரம் வைத்தியசாலையிலிருந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலை மாற்றப்பட்ட நிலையில், அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஹையஸ் வேனில் பயணித்த ஒருவரும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பாக தர்மபுரம் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி நிருபர் ஆனந்தன்.

கிளிநொச்சியில் சிக்கிய அதிகளவான கஞ்சா!

0

கிளிநொச்சி பகுதியில் முதல் தடவையாக அதிகளவான கஞ்சா கன்டுபிடிக்கப்பட்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

400 கிலோவுக்கு அதிகளவான கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, கிளிநொச்சி பொலிசார் இன்று 24.02.2025 நடத்திய சுற்றிவளைப்பில் மாங்குளம் மற்றும் கிளிநொச்சி போலீஸ் பிரிவுகளை சேர்ந்த சந்தேக நபர்கள் இருவரும் 400 கிலோவுக்கு அதிகளவான கேரளா கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டனர்

ஆணையிரவு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி கூலர் வண்டியில் கடத்திச் செல்ல முற்பட்ட சுமார் 400 kg கேரள கஞ்சாவுடன் மாங்குளம் போலீஸ் பிரிவை சேர்ந்த ஒருவரும், கிளிநொச்சி போலீஸ் பிரிவை சேர்ந்த மற்றைய சந்தேக நபரும் மேற்படி கைதுசெய்யப்பட்டதுடன், கூலர் வாகனமும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி போலீசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தகக்கத்து.

கிளிநொச்சி செய்திகளுக்காக ஆனந்தன்

காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்!

0

இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே நேற்று நடைபெற்ற அவசர மீனவ ஆலோசனைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டது. 

மன்னார் கடற்பரப்பில் நேற்று அதிகாலை 32 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. 

நேற்று நடைபெற்ற இந்த கூட்டத்தில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடப்படுவதைத் தடுத்து படகுகளை மீட்க வேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அனைவரையும் கைது செய்யுங்கள்-பகீர் தகவல்!

0

முப்படைகளில் இருந்து தப்பியோடிய அனைத்து வீரர்களையும் உடனடியாக கைது செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா உத்தரவிட்டுள்ளார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பாதுகாப்பு செயலாளர் இதனை உறுதிப்படுத்தினார். 

பெரும்பாலான குற்றங்களுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற இராணுவ வீரர்கள் தொடர்புப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு பாதுகாப்பு அமைச்சு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.