யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பிரதேச சபையின், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பொன்னம்பலம் இராஜேந்திரம், உடன் அமுலாகும் வகையில் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
கட்சியின் தீர்மானத்தை மீறிச் செயற்பட்டதன் காரணமாக அவர் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தப்படுவதாக, இலங்கைத் தமிழரசுக் கட்சி கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
நேற்று நடைபெற்ற வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவுகளின் போது கட்சியின் தெளிவான அறிவுறுத்தலுக்கு மாறாக அவர் நடுநிலை வகித்ததாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டல்குடாவ குறுக்கு வீதியில் நேற்று (18) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி வீடொன்றின் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
குறித்த விபத்தில் 20 வயதுடைய தலவில பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் தற்போது கற்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் ஜூலை 5 ஆம் திகதி வரை 16 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக நுளம்புகளின் பரவல் அதிகரித்துள்ளதால், அதைக் கட்டுப்படுத்த இந்த டெங்கு ஒழிப்பு வாரத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் ஆலோசகரும், சமூக வைத்திய நிபுணருமான பிரஷிலா சமரவீர தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர இதனைத் தெரிவித்தார்.
நாடு முழுவதும் இதுவரை 26,000இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதுவரை ஒரு குழந்தை மரணம் பதிவாகியுள்ளது, மேலும் 45 வீதமான நோயாளிகள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சமூக வைத்திய நிபுணருமான பிரஷிலா சமரவீர தெரிவித்தார்.
இதேவேளை, நாடு முழுவதும் 26,775 டெங்கு நோயாளர்கள் மற்றும் 14 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன. மேல், கிழக்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்கட்சிகள் இணைந்து ஆட்சி அமைப்பதை விமர்சித்த ஆளும் கட்சி எதிர்கட்சிகளை இணைத்துக்கொண்டு அதிகாரத்தை கைப்பற்றுவது நியாயமான செயலா என முஜீபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.
எதிர்க்கட்சி கூட்டணியை கீரி, பாம்பு என விமர்சித்த ஆளும் தரப்பு தற்போது விமர்சித்த அணிகளிடன் ஆட்சி அமைக்க இணைந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
ரிஷாத் பதியுதீனை சொப்பின் பேக்குடன் வந்தவர் என பிரதி அமைச்சர் ஒருவர் கடுமையாக விமர்சித்தார், தற்போது குருநாகலை மற்றும் ஹொரவபத்தானையில் அவரது கட்சி உறுப்பினர்களோடு கூட்டணி வைத்துள்ளார்கள் இதில் யார் கீரி ? யார் பாம்பு ? பிள்ளையானை தீவிரவாதி என சிறையில் அடைத்துவிட்டு அவரின் கட்சியோடு இணைந்து அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். இதில் யார் கீரி யார் பாம்பு என முஜீபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கலாசார நிகழ்ச்சித்திட்டத்தின் “சித் ரூ 2025 (நடனப்போட்டி) வடமாகாண மட்ட போட்டி கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
ஐந்து மாவட்டங்களின் மாற்றுத்திறனாளிகள் குழுவினர் குறித்த போட்டியில் பங்குபற்றியிருந்தன.
குறித்த போட்டி நிகழ்வினை கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் நளாயினி இன்பராஜ் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
வடமாகாண போட்டியில் கிளிநொச்சி மாவட்டம் முதலாம் இடத்தினையும், இரண்டாம் இடத்தினை யாழ்ப்பாண மாவட்டமும், மூன்றாம் இடத்தினை வவுனியா மாவட்டமும் பெற்றுக்கொண்டது.
முதலாம் இடத்தினைப்பெற்ற கிளிநொச்சி மாவட்டம் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை காவல்துறை மற்றும் சிறப்பு போதை ஒழிப்பு பிரிவால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் தேடுதல் நடவடிக்கையில் கடந்த 2025 ஜூன் மாதம் 16 ஆம் தேதி அதிக அளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
04 கிலோ கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப் பொருளுடன் பொலிசாரின் சமிக்ஞையை மீறி சென்ற வாகனத்தைப் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
பதில் பொலிஸ்மா அதிபரின் கட்டளைக்கிணங்க நாடுபூராகவும் நடைமுறைக்கு வரும் வகையில் குற்றங்கள் மற்றும் போதைப் பொருள்களை கட்டுப்படுத்துவதற்காக, இலங்கை பொலிசாரால் மேற்கொள்ளப்படும் சுற்றிளைப்புகளின் போது 16.06.2025 ஆந் திகதி இரவு வேளையில் கடலோர பொலிஸ் பிரதேசத்தில் பொலிசார் இரவு நேர மோட்டார் சைக்கிள் ரோந்து கடமைகளில் ஈடுபட்டிருந்த வேளை ஹெட்டியாவத்தை சந்திக்கு அருகாமையில் அதிக வேகத்தில் செலுத்திய காரை நிறுத்துமாறு பொலிசார் சமிக்ஞையிட்டனர்.
அவ்வேளையில், கார் பொலிசாரின் சமிக்ஞையை மீறி பயணித்த போது இரவு நேர ரோந்து கடமையிலிருந்த பொலிசாரால் மோட்டார் சைக்கிளில் அந்த காரை பின்தொடர்ந்து புறக்கோட்டை, ரெக்லமேஷன் வீதி, கடலோர வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரை பரிசோதனைக்குற்படுத்தினர்.
அவ்வேளையில் காரைச் செலுத்திய சாரதி தப்பிச் சென்றுள்ளதுடன், காரில் 04 ப்ளாஸ்டிக் பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 04 கிலோகிராம் 112 கிராம் எடைக் கொண்ட ஐஸ் போதைப் பொருள் மற்றும் காரையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த தினத்தில் நாடுபூராகவும் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின்போது, தெஹிவளை பகுதியில் 105500 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 5430 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், பேலியகொட பகுதியில் 15.75 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், காங்கேசன்துறை பகுதியில் 12.4 கிராம் ஐஸ் போதைப்பொருளும், மெதிரிகிரிய பகுதியில் 315 கிராம் ஹெரோயின் மற்றும் 2.3 கிராம் ஐஸ் போதைப்பொருளும், அம்பாறை பகுதியில் 11.52 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொலன்னாவ நகரசபைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட நாரஹேன்பிகே சுசில் குமார கொஸ்தாவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
கொலன்னாவ நகர சபையின் தலைவர் மற்றும் பிரதித் தலைவரை நியமிப்பதில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிர்வாகக் குழு மற்றும் கட்சி செயற்குழுவின் முடிவுக்கு இணங்கச் செயல்படாததால், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளைப் பெறுவதற்காக நுகர்வோர் தன்னிச்சையாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூடி, தேவையற்ற நெரிசல் மற்றும் வரிசைகளை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டுகிறது.
அதன்படி, மேற்கண்ட முடிவு எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு மாறாகச் செயல்பட்டால், கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
போதுமான எரிபொருள் இருப்பு இருந்தபோதிலும், நுகர்வோர் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி இவ்வாறு செயல்படுவதால், பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை திரிபோஷா லிமிடெட்டின் புதிய தலைவர் திரு. அமல் நிரோஷன அத்தநாயக்க நேற்று (16) காலை கந்தானையில் உள்ள இலங்கை திரிபோஷா லிமிடெட் வளாகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
உள்ளூர் மற்றும் சர்வதேச வணிகத் துறைகளில் விரிவான அனுபவமும் நிபுணத்துவமும் கொண்ட திரு. அமல் நிரோஷன அத்தநாயக்கவை இலங்கை திரிபோஷா லிமிடெட்டின் புதிய தலைவராக நியமிக்க சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ சமீபத்தில் நடவடிக்கை எடுத்தார்.
25 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளூர் மற்றும் சர்வதேச வணிகத் துறைகளில் விரிவான அனுபவத்தைக் கொண்ட திரு. அமல் நிரோஷன அத்தநாயக்க, கண்டி தர்மராஜா கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.
பல உள்ளூர் மற்றும் சர்வதேச பிராண்டுகளின் வடிவமைப்பாளரான திரு. அத்தநாயக்க, தெற்காசியாவிலும் இலங்கையிலும் பல சர்வதேச கண்காட்சிகளை இயக்கி நிர்வகித்துள்ளார். நவீன தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலைப் பயன்படுத்துவதில் அவருக்கு விரிவான அனுபவமும் உள்ளது.
இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத் துணை அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி, திரிபோஷா லிமிடெட்டின் செயல்பாட்டு மேலாளர் சம்பிகா சல்காடு, தர உத்தரவாத மேலாளர் அஜித் திசாநாயக்க, மனிதவளம் மற்றும் சட்ட மேலாளர் தனுஜா அல்விஸ், தரக் கட்டுப்பாட்டாளர் நெலம் மெண்டிஸ், உற்பத்தி மேலாளர் தசநாயக்க மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
குறிப்பாக யாழ் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளைப் பெறுகின்றனர்.
இதேவேளை, எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை. மக்கள் தாமாகவே எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் கூடி எரிபொருளைப் பெற முயற்சிக்கின்றனர் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில், “வட மாகாணத்தில் எரிபொருள் இருப்பு உள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வழமையான முறையில் செயல்பட்டு எரிபொருள் விநியோகத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, போதிய அளவு எரிபொருள் உள்ளதாகவும், செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்க வேண்டாம் என்று அரசாங்க அதிபர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்க்களப் போக்கு எரிபொருள் விநியோகத்தில் தடையை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
இதனால், நாடு முழுவதும் எரிபொருளுக்காக மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருப்பதை பரவலாகக் காண முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ் மாவட்டத்தின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளைப் பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது.
குறிப்பாக யாழ் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளைப் பெறுகின்றனர்.
இதேவேளை, எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை. மக்கள் தாமாகவே எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் கூடி எரிபொருளைப் பெற முயற்சிக்கின்றனர் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில், “வட மாகாணத்தில் எரிபொருள் இருப்பு உள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வழமையான முறையில் செயல்பட்டு எரிபொருள் விநியோகத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, போதிய அளவு எரிபொருள் உள்ளதாகவும், செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்க வேண்டாம் என்று அரசாங்க அதிபர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்க்களப் போக்கு எரிபொருள் விநியோகத்தில் தடையை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
இதனால், நாடு முழுவதும் எரிபொருளுக்காக மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருப்பதை பரவலாகக் காண முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.