Tuesday, March 17, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 151

பலஸ்தீனுக்கு ஆதவளித்த இலங்கை!

0

காசாவில் உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்தம் கோரி, நேற்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இலங்கை வாக்களித்துள்ளது. 

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த, 2023 ஆம் ஆண்டு ஒக்டோபரிலிருந்து மோதல் நடந்து வருகிறது. 

இந்த போரில், காசாவில் இதுவரை, 55,000க்கும் மேற்பட்டோர் இறந்ததாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் ஐக்கிய நாடுகளின், பொதுச் சபையில் ஸ்பெயின் சார்பில் போர் நிறுத்த தீர்மானம் நேற்று கொண்டு வரப்பட்டது.

தீர்மானத்தின் உள்ளடக்கங்களாக, நிரந்தர போர் நிறுத்தம், மனிதாபிமான உதவிகளுக்கான தடையை இஸ்ரேல் நீக்க வேண்டும், பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும், இஸ்ரேல் படைகள் வெளியேற வேண்டும் ஆகியவை இடம்பெற்றிருந்தன.

இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையில், 193 உறுப்பினர்களாக உள்ள 193 நாடுகளில், 149 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. 

12 நாடுகள் எதிராக வாக்களித்தன. 

இந்தியா உட்பட, 19 நாடுகள் வாக்களிப்பைத் தவிர்த்தன. 

இந்த நிலையில், தமது நாட்டின் நிலைப்பாட்டை வெளியிட்ட, ஐக்கிய நாடுகளின் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி பர்வதநேனி ஹரிஷ், “இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சினையில், இரு தரப்புக்கும் இடையே நேரடி அமைதி பேச்சு மீண்டும் ஆரம்பிக்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே, வாக்களிப்பை இந்தியா தவிர்த்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

உச்சக்கட்டத்தில் ஈரான் இஸ்ரேல் போர்!

இஸ்ரேலும் இரானும் பதிலுக்குப் பதில் தாக்குதல்கள் நடத்தியுள்ளதால் மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இரானின் ஏவுகணைகளை இடைமறிக்க இஸ்ரேலுக்கு உதவியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் 2 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இரானிய அரசு ஊடகங்கள் கூறுகின்றன. இதனை இஸ்ரேல் மறுத்துள்ளது.

இரான் தலைநகர் டெஹ்ரானில் விமான நிலையம் ஒன்றில் தீப்பற்றி எரிவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இரானின் அணுசக்தித் திட்டங்களைக் குறிவைத்து தாக்குதல்களை நடத்தி இருப்பதாக இஸ்ரேல் நேற்று அறிவித்தது. இதில், இரானிய அணு விஞ்ஞானிகள் 6 பேரும், இரானிய புரட்சிகர காவல் படைத் தலைவரும் கொல்லப்பட்டதாக இரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இதற்குப் பதிலடியாக இஸ்ரேலை ஏவுகணைகளையும், டிரோன்களையும் பயன்படுத்தி இரான் தாக்குதல் நடத்தியுள்ளது. டெல் அவிவ் மற்றும் மத்திய இஸ்ரேலை இலக்காகக் கொண்டு அவை செலுத்தப்பட்டன. இந்த தாக்குதலில் டெல் அவிவ் நகரில் சில கட்டடங்கள் சேதமடைந்தன.

இரான் தாக்குதலில் காயமடைந்த 40 பேர் இஸ்ரேலிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இஸ்ரேலை நோக்கிச் சென்ற இரானிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க ராணுவம் உதவியிருக்கிறது. இதனை அமெரிக்க அதிகாரிகள் 2 பேர் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) அன்று உறுதிப்படுத்தியதாக பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி முகமையான சிபிஎஸ் நியூஸ் தெரிவிக்கிறது.

இஸ்ரேலின் 2 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இரானிய அரசு ஊடகங்கள் கூறுகின்றன.

இரானின் வான் பாதுகாப்பு அமைப்பு இரண்டு இஸ்ரேலிய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், இந்த போர் விமானங்களில் ஒன்றின் விமானி பிடிபட்டதாகவும் அவர் பெண் விமானி என்றும் இரானின் தஸ்னிம் செய்தி நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.

விமானி பிடிபட்டதாக வெளியான இரானிய ஊடக அறிக்கைகளை இஸ்ரேல் ராணுவம் மறுத்துள்ளது. இரானிய ஊடகங்களால் பரப்பப்படும் இந்த செய்தி முற்றிலும் ஆதாரமற்றது என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் ஆட்ரே தெரிவித்துள்ளார்.

பட்டம் வாங்கச் சென்று 6 மாதம் பூர்த்தி!

0

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பாராளுமன்றத்தின் முதலாவது சபாநாயகராக நியமிக்கப்பட்ட அசோக ரன்வல அந்த பதவியை இராஜினாமா செய்து நேற்று நள்ளிரவுடன் 6 மாதங்களாகின்றன.

அவரது கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சைக்குரிய சூழ்நிலையே அவரது இராஜினாமாவுக்குக் காரணம்.

எதிர்காலத்தில் தனது பட்டதாரி சான்றிதழை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாக தெரிவித்து டிசம்பர் 13ஆம் திகதி பதவி விலகினார்.

ஆனால், 6 மாதங்கள் கடந்தும், இதுவரை பட்டப்படிப்பு சான்றிதழ் முன்வைக்கப்படவில்லை.

ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டமும், மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டமும் பெற்றதாகவும் ஆனால் இதுவரை சான்றிதழ் எதனையும் சமர்ப்பிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

0

வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக நோய்களுக்கான மருந்துகள் உள்ளிட்ட பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. 

மத்திய மருந்து சேமிப்பு மையத்தில் தற்போது சுமார் 180 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க குறிப்பிட்டார். 

கடந்த பல மாதங்களாக புற்றுநோய் நோயாளிகளுக்கான மருந்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாகவும், இதன் விளைவாக புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் சில வரையறைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வடக்கில் அரசு அறிமுகப்படுத்திய புதிய செயலி!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தில் செயலக சேவை நடைமுறை தொடர்பான செயலியை அங்குரார்பணம் செய்யும் நிகழ்வு இன்று (13-06-2025) நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தின் மக்களுக்கான சேவை இலகுவாக வழங்கும் வகையில் நடைமுறைப் படுத்தும் செயலியை அங்குராணம் செய்யும் நிகழ்வு இன்று பகல் 10 மணிக்கு கண்டாவளை பிரதேச செயலாளர் த. பிருந்தாகரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெ. ரஜீவன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளீதரன், மற்றும் துறை சார்ந்த திணைக்களின் தலைவர்கள், பிரதேச மட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கையின் முதலாவது பொதுமக்கள் சேவையை வழங்கும் இந்த செயலி கண்டாவளை பிரதேச செயலகத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கண்டவளை பிரதேச செயலகத்தினால் இணைய வழி பங்கீட்டு அட்டையும் வழங்கி வழங்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வடக்கில் அதிகரித்துள்ள சட்ட விரோத மணல் அகழ்வு!

கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் கடந்த 15 வருட காலமாக தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம் பெற்று வருவதாகவும், பல ஆட்சிகள் மாறிவந்த போதிலும் சட்டவிரோத மணல் அகல்வுக்கு நிரந்தர தீர்வு காண முடியாத நிலையில் காணப்படுவதாகவும் அங்குள்ள மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு மத்தியில் கடல்தொழில் அமைச்சரும் கிளிநொச்சி, யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளிதரன், கண்டாவாளை பிரதேச செயலாளர் பிருந்தகன் மற்றும் நீர் பாசன தினைக்களத்தின் குழுவினர்கள் குறித்த பகுதிக்கு சென்றிருந்தனர்.

கல்லாறு பகுதியில் காணப்பட்ட பறவைகள் சரணாலயம் முற்றாக அளிக்கப்பட்டு உள்ளதுடன், கடல் நீர் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு உள்வரும் அபாய நிலையில் தோன்றியுள்ளதாகவும் கண்டறியப்பட்டது.

தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம் பெற்று வருவதால் அப்பகுதியில் உள்ள வனப்பகுதி முற்று முழுதாக அழிவடைந்து வருவதாகவும், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் கல்லாறு பகுதியில் மீண்டும் இராணுவ காவலர் அமைத்து இங்கு இடம் பெறுகின்ற சட்ட விரோத மணல் அகல்வினை முற்றாக கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கடத் தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

சீனி மோசடி தொடர்பில் வெளியான அதிரடி முடிவு!

0

2020 ஒக்டோபரில் சீனி மீதான ஐம்பது ரூபாய் வரியை 25 சதங்களாக குறைத்தது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் எந்த குற்றவியல் குற்றமும் கண்டறியப்படவில்லை என்று சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பான முறைப்பாடு நேற்று (12) கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

அதன்படி, குறித்த விசாரணைகளை முடிக்க அனுமதி வழங்கிய நீதவான், இந்த சம்பவத்தில் ஏதேனும் ஊழல் அல்லது இலஞ்சம் வெளிப்பட்டால், வழக்கு கோப்புகளை விசாரணைக்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பலாம் என்று தெரிவித்தார். 

2020 ஒக்டோபர் 13 நள்ளிரவு முதல் சீனி மீதான செஸ் வரியை ரூ.50-ல் இருந்து 25 சதங்களாக குறைக்க அரசாங்கம் எடுத்த முடிவின் விளைவாக அரசுக்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டதா என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தக் கோரி முறைப்பாடு அளிக்கப்பட்டது. 

அப்போது, ​​சீனி வரியைக் குறைக்கும் முடிவால் அரசுக்கு 1,600 மில்லியன் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டதாகவும், வரி குறைப்பின் பலனை மக்கள் பெறாமல் மிகப்பெரிய சீனி வரி மோசடி நடந்துள்ளதாகவும் பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டியிருந்தனர். 

அதன் பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பில் விசாரணைகளை நடத்தி, அனைத்துப் பகுதிகளையும் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பித்தது. 

அவற்றைப் படித்த பிறகு, இந்த விசாரணையின் மூலம் எந்தவொரு குற்றவியல் குற்றமும் அடையாளம் காணப்படவில்லை என்று சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு தெரிவித்திருந்தார். 

சீனி வரியைக் குறைப்பதன் மூலம் எந்தவொரு தரப்பினரோ அல்லது தனிநபரோ தேவையற்ற இலாபத்தைப் பெற்றுள்ளனரா அல்லது ஊழல் குற்றத்தைச் செய்துள்ளனரா என்பதை விசாரிக்கவும், சீனி வரியைக் குறைப்பதன் மூலம் ஏதேனும் இலஞ்சம் அல்லது பிற பரிவர்த்தனை நடந்துள்ளதா என்பதை மேலும் விசாரித்து கண்டறியவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் மேலும் அறிவுறுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த மேலதிக நீதவான், சீனி வரி குறைப்பு செயல்முறை தொடர்பான விசாரணை அறிக்கைகளை மேலும் விசாரிக்கவும், தேவைப்பட்டால் வழக்கு கோப்புகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி குற்றவாளிகளைக் கண்டறியவும் உத்தரவிட்டார்.

ஆட்சியை கைப்பற்றிய SJB!

0

அனுராதபுர மாவட்டத்தின் கெபித்திகொல்லேவ பிரதேச சபையில் பெரும்பான்மை ஆதரவை பெற்று ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கிறது. 

இன்று (13) நடைபெற்ற தவிசாளர் தேர்வு வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிப் பெற்று இவ்வாறு ஆட்சியமைக்கிறது. 

இதன்போது, பெரும்பான்மை வாக்குகளை பெற்று, ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் வேட்பாளரான ரணசிங்க வனிகசேகரலாகே தர்மதாச கெபித்திகொல்லேவ பிரதேச சபையின் தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கெபித்திகொல்லேவ பிரதேச சபையில் வெற்றியை பெற்றது தேசிய மக்கள் சக்தியாகும், ஆனால் பெரும்பான்மை உறுப்பினர்களை பெற தவறியது. 

அந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 7 உறுப்பினர்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 6 உறுப்பினர்களையும் வென்றன. 

மேலும், பொதுஜன பெரமுனவிற்கு 3 உறுப்பினர்களும், பொதுஜன ஐக்கிய முன்னணி மற்றும் சுயாதீன குழு  (எண் 1) தலா ஒரு உறுப்பினரையும் பெற்றன.

மன்னாரில் கரையொதுங்கிய மர்ம பொருட்கள்!

0

மன்னார் மாவட்டத்தில் செளத்பார் தொடக்கம் தாழ்வுபாடு உட்பட பல்வேறு கடற்கரையோர பகுதிகளில் நுண்ணிய பிளாஸ்டிக் போன்ற சிறிய அளவிலான உருண்டைகள் இலட்சக்கணக்கில் கரை ஒதுங்கியுள்ளன. 

முன்னதாக இலங்கை கடற்பரப்பில் பற்றியெறிந்த எவர் கிறீன் கப்பலில் இருந்து வெளியேறிய அதே போன்ற வடிவமுடைய பொருளே மேற்படி தொடர்ச்சியாக கரையொதுங்கி வருகிறது. 

இவ்வாறான பின்னனியின் இன்றைய தினம் (3) கரையோர காவல் திணைக்களம், கடற்படை, இராணுவம் இணைந்து முதற்கட்டமாக கடற்கரை ஓரங்களில் ஒதுங்கியுள்ள குறித்த பிளாஸ்டிக் மாதிரி பொருட்களை அகற்றியுள்ளனர். 

குறிப்பாக கடற்கரையோரங்களில் இலட்சக்கணக்கில் இவ்வாறான ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நுண்ணிய பொருட்கள் காணப்படுகின்றமையினால் முழுமையாக குறித்த பொருட்களை அகற்ற முடியாத நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

செயலிழக்கும் நுரைச்சோலை மின் பிறப்பாக்கி!

0

இன்று (13) நள்ளிரவு முதல் நுரைச்சோலை 3வது மின் பிறப்பாக்கியின் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது. 

அதன்படி, இந்த பராமரிப்பு பணிகள் 25 நாட்களுக்கு நடைபெறும் என்றும் அந்த சபை தெரிவித்துள்ளது. 

இதனால், தேசிய மின் கட்டமைப்பிற்கு 300 மெகாவோட் மின்சாரம் இழக்கப்படும். 

எனினும், 2 மின் பிறப்பாக்கிகள் செயல்பாட்டில் உள்ளதால் மின்சக்தி விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளார். 

3வது மின் பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட பின்னர், நுரைச்சோலை மின்நிலையத்தின் 1வது மின் பிறப்பாக்கி பராமரிப்பு பணிகளுக்கு அனுப்பப்பட உள்ளது. 

இதேவேளை, கடந்த ஒன்றரை மாத காலமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம், அடுத்த சில நாட்களில் மின்சக்தி உற்பத்திக்காக மீண்டும் இணைக்கப்பட உள்ளது. 

இதன் மூலம் தேசிய மின் கட்டமைப்பிற்கு 165 மெகாவோட் மின்சாரம் சேர்க்கப்படும்.