Wednesday, November 12, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 151

கர்ப்பிணித் தாய்மார்கள் மிக அவதானம்!

0

தீவிர காலநிலை மாற்றத்தால் கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வில் கூறுகிறது.

தீவிர காலநிலை மாற்றத்தால் நீண்டகால கர்ப்பத்துக்கு பெண்கள் ஆளாவதாக ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. பொதுவாக, முன்கூட்டிய பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளின் பாதிப்பில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், நீண்டகால கர்ப்பம் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கும் சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

பெண்களின் கர்ப்பக் காலம், 36 வாரங்கள் முதல் 40 வாரங்கள்வரையில் இருக்கும். காற்று மாசுபாடு, வெப்பநிலை மாற்றம் முதலான தீவிர காலநிலை மாற்றத்தால் பெண்களின் கர்ப்பக் காலம் நீள்வதுடன், பிரசவத்தின்போது தாய்க்கும் சேய்க்கும் சிக்கல் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. சிலருக்கு செயற்கையாக பிரசவ வலியைத் தூண்டும் நிலையும் ஏற்படலாம்.

மேற்கு ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 12 சதவிகிதப் பிறப்புகள் நீண்டகால கர்ப்பத்தில் தோன்றியது கண்டறியப்பட்டது. குறிப்பாக, 35 வயதுக்கு மேற்பட்ட தாய்மார்கள், முதல்முறை கருத்தரிக்கும் பெண்கள், நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள், கர்ப்பமடைவதில் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பது தெரிகிறது.

காற்றின் தர ஒழுங்குமுறைகள், பொது சுகாதார முன்முயற்சிகள் உள்ளிட்ட காலநிலை தொடர்பான சுகாதார அபாயங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தேவை என்று மருத்துவத் துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Click here to join our whatsApp group

51 பேரின் உயிரை பறித்த பஸ் விபத்து!

0

கவுதமாலாவில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 51 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றாக இருப்பது கவுதமாலா என்ற நாடு. இங்குள்ள எல் ரான்ச்சோ என்ற கிராமத்தில் இருந்து 75 பயணிகளுடன் பஸ் புறப்பட்டு சான்அகஸ்டின் அகாசகுவாஸ்லான் என்ற பகுதிக்குச் சென்று கொண்டிருந்தது.

பெலிஸ் என்ற பாலத்தில் பஸ் வந்து கொண்டிருந்த போது முன்னே சென்று கொண்டிருந்த கார் மீது மோதி, கட்டுப்பாட்டை இழந்து 20 அடி ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் பாய்ந்தது.

இந்த விபத்தில் பஸ்சில் இருந்தவர்களில் 51 பேர் பலியாகி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மீட்புப்படையினர் உதவியுடன் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

எஞ்சியவர்களின் நிலை என்ன என்பது பற்றிய எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள உள்ளூர் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் குறித்து அந்நாட்டு அதிபர் பெர்னார்டோ அதிர்ச்சியும், கவலையும் தெரிவித்துள்ளார். மீட்புப்பணிகளில் ராணுவத்தினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட உத்தரவிட்ட அவர், 3 நாட்கள் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Click here to join our whatsApp group

மூக்குடைந்த உலக பணக்காரர் எலன் மஸ்க்!

0

ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தை வாங்க எலான் மஸ்க் தலைமையிலான முதலீட்டாளர் குழு முன் வந்துள்ளது. இதனை நிராகரித்த ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தின் சி.இ.ஓ., சாம் ஆல்ட்மென், ‘எக்ஸ்’ நிறுவனத்தை நாங்கள் வாங்க தயாராக இருக்கிறோம் என பதிலடி கொடுத்து உள்ளார்.

உலகின் முன்னணி கோடீஸ்வரரான எலான் மஸ்க், கடந்த 2022ம் ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். அதில் பலவித மாற்றங்களை செய்துள்ள அவர், அதன் பெயரையும் ‘எக்ஸ்’ என மாற்றி உள்ளார். கடந்த 2015ம் ஆண்டு சாட்ஜிபிடியை வடிவமைத்த ஓபன் ஏ.ஐ., நிறுவனத்திற்கு ஆதரவாக எலான் மஸ்க் இருந்தார்.

ஆரம்ப கட்டத்தில் ஓபன் ஏ.ஐ.,நிறுவனம் லாபமற்ற நோக்கம் கொண்ட நிறுவனமாக இருந்தது. பிறகு லாபத்தை நோக்கி மாற்றுவதற்கான முயற்சிகளில் அதன் சி.இ.ஓ., சாம் ஆல்ட்மென் ஈடுபட்டார். இதனால், அதிருப்தியடைந்த எலான் மஸ்க் அந்த நிறுவனத்தை கடுமையாக விமர்சித்தார். வழக்கும் தொடர்ந்தார்.

இந்நிலையில், ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தை விலைக்கு வாங்க எலான் மஸ்க் முயற்சி செய்வதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அவரும், சில முதலீட்டாளர் குழுவும் சேர்ந்த அந்த நிறுவனத்தை 9.7 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கும் திட்டத்தை, சாம் ஆல்ட்மெனிடம் வழங்கி உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

ஆனால், இதனை நிராகரித்துள்ள சாம் ஆல்ட்மென், ” வேண்டாம் நன்றி. ஆனால், நீங்கள் விரும்பினால், ‘எக்ஸ்’ தளத்தை 9.74 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்க தயாராக இருக்கிறேன்,” என பதிவிட்டு உள்ளார்.

Click here to join our whatsApp group

அரச சேவையில் இணைய தயாரா?

0

அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாமினரை முகாமைத்துவம் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்து தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் நேர அட்டவணையை அடையாளங் கண்டு, அதுதொடர்பாக கட்டாயமாக ஆட்சேர்ப்புச் செய்ய வேண்டிய அளவு இனங்காணப்பட்டுள்ளது.

அதன்படி, 7,456 பேர் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள்.

இதற்காகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கப் பிரதமரின் செயலாளர் தலைமையில் ஒரு அதிகாரி குழுவை நியமிக்கக் கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

அந்தந்த அமைச்சுகள், அந்த அமைச்சின் கீழ் உள்ள துறைகள் மற்றும் பிற நிறுவனங்களில் வெற்றிடமாகவுள்ள பதவிகளைக் குழுவிற்குப் பரிந்துரைத்துள்ளன.

அதன்படி, அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்காகச் சமர்ப்பிக்கப்படும் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, குழுவால் முன்மொழியப்பட்ட ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த நோக்கத்திற்காகச் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கும், நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்குவதற்காகப் பிரதமர் சமர்ப்பித்த முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

Click here to join our whatsApp group

காவல்துறை 17 அதிகாரிகள் பணிநீக்கம்!

0

கடந்த நான்கு மாதங்களில், ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப் பொருட்களைப் பயன்படுத்தியதற்காக இலங்கை காவல்துறை 17 அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளது.

போதைப்பொருள் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கை காவல் துறையின் அதிகாரிகளின் பட்டியலைப் புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவு வழங்கியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசோதனைக்குப்படுத்தப்பட்டு, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபைக்கு மருத்துவ அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காவல் துறையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இதேபோன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் பல அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மனதுங்க உறுதிப்படுத்தினார்.

இந்த விவகாரத்துடன் தொடர்புடைய மூத்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க அறிவுறுத்தியுள்ளார்.

Click here to join our whatsApp group

நாகவில்லு பாடசாலைக்கு முகம் தெரியாத நபர் உதவி!

0

அல்லாஹ்வின் பொருத்தத்தை மாத்திரம் எதிர்பார்த்து சதகதுல் ஜாரியா நிரந்தர நன்மையான உதவியொன்று புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலையில் இன்று (10.02.2025) அடையாளப்படுத்தப்படாத பரோபகாரி ஒருவரினால் செய்யப்பட்டுள்ளது.

பாடசாலையின் ஆரம்பப்பிரிவுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியே குறித்த பரோபகாரி ஒருவரினால் செய்யப்பட்டுள்ளது.

1000 லீட்டர் தண்ணீர் தாங்கி வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்கு தேவையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொடர்ச்சியாக நிரப்பப்பட்டு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் குடிநீர் தேவை பூர்த்திசெய்யப்படும் என அடையாளப்படுத்தப்படாத குறித்த பரோபகாரியினால் தெரிவிக்கப்பட்டுள்ளது அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தனது வாழ்நாள் முழுதும் தண்ணீர் தாங்கியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிரப்புவதற்கான முழுப் பொறுப்பையும் குறித்த பரோபகாரி ஏற்றுக்கொண்டுள்ளதுடன், தாம் யார் என்பதை வெளிப்படுத்தாமல் குறித்த தண்ணீர் தாங்கியை பாடசாலைக்கு இரகசியமாக வழங்கியுள்ளதாக பாடசாலை அதிபர் திரு S.M. ஹுஸைமத் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

மேலும் இப்படியாப்பட்ட ஒரு முன்னுதாரணமான உதவியை செய்த குறித்த பரோபகாரிக்கு பாடசாலை சமூகம் சார்பாக தமது நன்றிகளை தெரிவிப்பதாகவும் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Click here to join our whatsApp group

இகிரிகொல்லேவயில் ஐஸ்-உடன் சிக்கிய வாலிபர்!

0

இலங்கை கடற்படை, ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து, மெதவச்சி பகுதியில் மேற்கொண்ட விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையில், இரண்டு (02) சந்தேகநபர்கள், மூன்று (03) கிராம் முந்நூற்று எழுபது (370) மில்லிகிராம் ஐஸ் மற்றும் நானூறு (400) போலியான சிகரட்களுடன் கைது செய்யப்பட்டனர்.

இதன்படி, வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் பண்டுகபய நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், மெதவச்சி ஊழல் தடுப்பு பிரிவினருடன் இணைந்து, மெதவச்சி, இகிரிகொல்லேவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான நபரொருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அங்கு, குறித்த நபரின் உடமையில் விற்பனை செய்வதற்கு தயார் செய்யப்பட்டிருந்த சுமார் மூன்று கிராம் (03) மற்றும் முந்நூற்று எழுபது (370) மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் (Methamphetamine) சந்தேகநபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் அன்றைய தினம் இலங்கை கடற்படை கப்பல் பண்டுகபய நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் செட்டிகுளம் மற்றும் மடுகந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மெதவச்சி நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அங்கு, அந்த நபரிடம் விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட நானூறு (400) போலி சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் (01) கைது செய்யப்பட்டார்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22 மற்றும் 30 வயதுடைய மெதவச்சி, இகிரிகொல்லேவ மற்றும் கரப்பிக்கடை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஐஸ் போதைப்பொருள் மற்றும் சிகரெட்டுகடகளுடன் மெதவச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Click here to join our whatsApp group

அமைச்சர் பிமலின் அதிரடி ஆக்ஷன்!

0

அரச நிதியை இழப்பீடு என்ற பெயரில் கையூட்டலாக பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகத் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் கிளிநொச்சி தொடருந்து நிலையத்துக்கான களவிஜயத்தில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரகலய போராட்டம் இடம்பெற்ற காலப்பகுதியல் தங்களது இல்லங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடாக அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 122 கோடி ரூபாவுக்கு அதிகமான தொகையைப் பெற்றுள்ளனர்.

அரசாங்கத்திடமிருந்து இவ்வாறான இழப்புகளுக்காக 25 இலட்சம் ரூபாவினையே உயர்ந்த பட்ச இழப்பீடாக வழங்க முடியும்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 முதல் 10 இலட்சம் ரூபாய் வரையிலே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

யுத்தத்தில் தாக்குதலுக்கு உள்ளான வீடுகளுக்கு அதிகபட்சமாக 16 இலட்சம் ரூபாவே வழங்கப்பட்டுள்ளதுடன், சிலருக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை.

எனினும், கெஹெலிய ரம்புக்வெல்ல 900 இலட்சம் ரூபாவினை பெற்றுள்ளார். அந்த நிதியில் கிளிநொச்சியில் ஒரு கிராமத்தை அபிவிருத்தி செய்திருக்க முடியும்.

Click here to join our whatsApp group

இத்தகைய சேதங்களுக்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் ஆராயப்பட வேண்டும் என்பதுடன் இந்த இழப்பீடுகள் முற்று முழுதாக கையூட்டலாகவே வழங்கப்பட்டுள்ளன.

எனவே, இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

முதலிடத்தில் நம்ம நாட்டு சீகிரியா!

0

Booking.com வலைத்தளத்தின்படி, 2025 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் வரவேற்கப்பட்ட நகரங்களில் சீகிரியா முதலிடத்தில் உள்ளது. 

360 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட Booking.com என்ற வலைத்தளம், சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்காக வழங்கப்படும் சேவையைப் பாராட்டி, உலகின் மிகவும் பிரபலமான நகரங்களில் ஒன்றாக சீகிரியா பெயரிடப்பட்டுள்ளது. 

Booking.com என்ற வலைத்தளம், அதன் 13வது பயணிகள் மதிப்பாய்வு விருதுகளுடன் இணைந்து இதனை வௌியிட்டுள்ளது.

Click here to join our whatsApp group

நாட்டில் திடீரென உண்டான நெருக்கடி!

0

தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எனவே இன்றும் (10) நாளையும் (11) ஒன்றரை மணி நேரம் மின் விநியோகத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை  அறிவித்துள்ளது.

அதன்படி, இந்த மின் விநியோக துண்டிப்பு பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடையில் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையம் மீண்டும் தேசிய மின் அமைப்புடன் இணைக்கப்படும் வரை இந்த மின் விநியோக துண்டிப்பை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.