Thursday, July 17, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 151

லன்டன்-எருக்கலம்பிட்டி பொதுநல மன்றத்திற்கு அதிபர் பாராட்டு

0

லன்டன்-எருக்கலம்பிட்டி பொதுநல மன்றத்தின் (EWO) இவ்வருடத்திற்கான க.பொ.த சா/த மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.

ஒவ்வொரு வருடமும் இப் பொதுநல மன்றத்தினால் மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் பாடசாலையின் க.பொ.த சா/த மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்காக இலவச வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றமை ஓர் விஷேட அம்சமாகும்.

அந்த வகையில் கடந்த வருடம் ஒன்பது பாடங்களிலும் திறமையான சித்திகளைப் பெற்று வரலாற்று சாதனை படைக்க இவ்வமைபு முக்கிய பங்களிப்பு வழங்கியதாக பாடசாலையின் அதிபர் ஜனாப் S.M. அஸ்மின் அவர்கள் எமது eNews1st இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

மேலும் எருக்கலம்பிட்டி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கான இவர்களின் பங்களிப்பை பாராட்டுவதுடன் பாடசாலை சமூகம் சார்பாக நன்றியையும் தெரிவிப்பதாக பாடசாலையின் அதிபர் ஜனாப் S.M. அஸ்மின் அவர்கள் தெரிவித்தார்.

நாகவில்லுவில் பாரிய வேளைத்திட்டங்கள் ஆரம்பம்!

0

எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவரும், முன்னால் உயர்ஸ்தானிகரும், தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் ஆலோசகருமான அல்ஹாஜ் இப்ராஹிம் அன்சார் மற்றும் முன்னால் மாகாண சபை உறுப்பினரும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன புத்தளம் மாவட்ட இணை அமைப்பாளரும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளன புத்தளம் மாவட்ட தலைவருமான கௌரவ றியாஸ் அவர்களுக்கிடையேயான சினேக பூர்வ சந்திப்பொன்று நேற்றைய தினம் (16.01.2021) சகோதரர் றியாஸ் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போது பு/எருக்கலம்பிட்டியின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் இப்ராஹிம் அன்சார் அவர்களினால் பிரத்தியேகமாக சில கோரிக்கைகளும் சகோதரர் றியாஸ் அவர்களிடம் முன்வைக்கப்பட்டது.

முதற்கட்டமாக 2 கி.மீ. பொத்துவில்லு பாதை புனரமைப்பு இடம்பெறவுள்ளதுடன் மேலதிகமாக நாகவில்லு வைத்தியசாலை வீதியை காபட் வீதியாக செய்து தருவதாக சகோதரர் றியாஸ் அவர்கள் வாக்குறுதியளித்துள்ளார்.

மேலும் எமது ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு நிரந்தர வருமானத்தை பெற்றுத்தரும் நோக்கில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் RO PLANT திட்டமொன்றும் மேலதிகமாக செய்து தருவதாக எமது பள்ளிவாசல் தலைவரிடம் தெரிவித்துள்ளமை ஓர் முக்கிய அம்சமாகும்.

எனவே சகல வழிகளிலும் உதவி நல்கிவரும் முன்னால் மாகாணசபை உறுப்பினர் சகோதரர் றியாஸ் அவர்களுக்கு பள்ளிவாசல் நிர்வாகம் சார்பாக பள்ளிவாசல் தலைவர் நன்றி தெரிவித்ததுடன் மிக விரைவில் பொத்துவில்லு வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெறவுள்ளதாக பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் இப்ராஹிம் அன்சார் அவர்கள் eNews1st ற்கு தெரிவித்தார்.

இவ்வாரான சமூக பணிகளில் ஈடுபடும் சகலருக்கும் அல்லாஹ் உயர்ந்த கூலியை வழங்குவானாக ஆமீன்…