Tuesday, March 17, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 153

600 முஸ்லீம் போலீசார் கொல்லப்பட்ட திகில் சம்பவம்!

0

1990 ஜூன் 11- விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட 600 முஸ்லிம் பொலிஸ்காரர்கள்.

அரசு மேலிடத்து உத்தரவின்படி சரணடைந்தும், விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட600 முஸ்லிம் பொலிஸ்காரர்கள்!

இன்று 11 ஆம் திகதி 35 வருடங்கள்!!

கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் நிலயங்கள் கடந்த 1990.06.11 ஆம் திகதி விடுதலைப் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டபோது அன்றிருந்த அரசின் மேலிடத்து உத்தரவின் பேரில் ஆயுதங்கள் தம் வசம் இருந்தும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தாமல் தம்மிடம் இருந்த அனைத்து ஆயுதங்களையும் விடுதலைப் புலிகளிடம் ஒப்படைத்துவிட்டு அவர்களிடம் சரணடைந்த சுமார் 800 பொலிஸ் உத்தியோகத்தர்களில் சுமார் 600 பேர் தமிழ் மொழி பேசும் முஸ்லிம்களாகும்.

கல்முனை பொலிஸ் நிலையத்தில் மாத்திரம் 116 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு மேலிடத்து உத்தரவின்படி சரணடைந்து பஸ்ஸில் ஏற்றப்பட்டு திருக்கோவில் பகுதியில் உள்ள காட்டுப்பகுதி ஒன்றின் சமவெளியில் வைத்து விடுதலைப் புலிகளின் பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த நடேசனின் மேற்பார்வையில் கண்களும் கைகளும் கட்டப்பட்டு சுடப்பட்டிருக்கிறார்கள்.

பொலிஸ்காரர்களின் இந்தப் படுகொலைகள் விடுதலைப் புலிகள் செய்த கொலைகளுடன் இதுவும் ஒன்றாகக் கருதிவிட முடியாது.

இப்படுகொலைகள் அன்றிருந்த அரசாங்கத்தின் சரியான வழிகாட்டல்கள் பொலிஸ்காரர்களுக்கு வழங்கப்படாமல் அரச அனுசரணையோடு விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டதாகக் கருதக்கூடிய பாரிய படுகொலையாகும்.

பொலிஸ்காரர்களின் இந்தப் படுகொலைகள் நடந்து இன்று 11 ஆம் திகதியுடன் 35 வருடங்கள் கடந்தும் இது தொடர்பான மர்மங்கள் இன்னும் அகலவில்லை.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச மறைந்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன அன்று பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைமைகள் ஆகியோர்களுக்கே இப்படு கொலைகளின் மர்மங்கள் தெரியும்.

விடுதலைப் புலிகளின் கிழக்கு கட்டளைத் தளபதியாகச் செயல்பட்ட கருனா அம்மான் என்றழைக்கப்பட்ட விநாயக மூர்த்தி முரளிதரன் மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுப் பொறுப்பில் இருந்த போதிலும் பொலிஸ்காரர்களின் இந்தப் படு கொலைகளுக்குரிய பின்னணியை அவரின் ஆட்சியில் கண்டறிய முற்படவில்லை.

இது விடயத்தில் மஹிந்த அரசாங்கம் தவறிவிட்டதா? இல்லை கருனா அம்மான் என்றழைக்கப்பட்ட விநாயக மூர்த்தி முரளிதரனைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கண்டும் காணாதது போல் இருந்து மறைத்து விட்டதா? என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது.

1990 ஜுன் 11 ஆம் திகதி அன்று நிராயுதபாணியான இந்த பொலிஸ்காரர்கள் விடுதலைப் புலிகளின் ஆணைகளுக்கு இணங்கியிருந்தபோதிலும் சரணடைந்த நிலையிலும் விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்டதானது பிரிவினைவாத யுத்த வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயமாகும்.

விடுதலைப் புலியினர் 600 பொலிஸ்காரர்களையும் படுகொலை செய்த சமயத்தில் கருணா அம்மான் என்றழைக்கப்பட்ட விநாயக மூர்த்தி முரளிதரன் விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாக 2004 ஆம் ஆண்டு வரை சேவையாற்றியிருந்தார். இந்நிலையில் இப்படுகொலைக்கு தாம் பொறுப்புதாரி அல்ல எனவும் தான் அச்சமயத்தில் வடக்கில் இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

பொலிஸ்காரர்களின் இப்படுகொலைகள் இடம்பெற்று இன்று 35 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இது விடயத்தை நினைவு கூரும் நாம் அவர்களுக்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

அன்று கடத்தப்பட்டு தப்பி வந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தனது அனுபவத்தை இப்படி தெரிவித்துள்ளார்…..

35 வருடங்களுக்கு முன்…..1990 ஜூன் மாதம் 11 ஆம் திகதி..பொலிஸ் சார்ஜன்ட் ஆக இருந்த போது விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு தெய்வாதீனமாக உயிர் தப்பிய பலாங்கொடை பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின் தலைவர் அல் ஹாஜ் நஜீமுதீனின் திகில் அனுபவம்.

தமிழ் சகோதரர் ஒருவர் உணவும் பாதுகாப்பும் தந்து உறங்க வைத்தார். நெற்றியில் திருநீறு பூசி என்னை தமிழ் கிராமத்துக்கு அழைத்து சென்று பின் என்னை பள்ளிவாயலில் ஒப்படைத்தார்.

இரத்தக் கறையுடன் காட்டில் பாய்ந்து விடியும் வரை புதருக்குள் மறைந்திருந்தேன். ஜனாதிபதி ஆர். பிரேமதாச எங்களை சரணடையுமாறு அன்று எங்களுக்கு உத்தரவிட்டிருந்தார். கருணா எங்களை கொன்று விடுமாறு உத்தரவு வழங்கியிருந்தார். நான் இறந்து விட்டதாக பொலிஸ் அறிவித்திருந்ததால் வீடு திரும்பிய என்னை வீட்டார் அச்சமடைந்து வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.

பொலிஸ் சேவையில் இருந்த அநேகமான தமிழ் அதிகாரிகள் விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டனர். 1990 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளால் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு திருக்கோவிலில் படுகொலை செய்யப்பட்ட 79/78 பேரில் தெய்வாதீனமாக உயிர் தப்பிய ஒருவரான பலாங்கொடையை சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் அப்துல் லத்தீப் நஜிமுதீன் அவர்கள் புலனாய்வு ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுடன் நடத்திய நேர்காணலில் தெரிவித்த திகில் அனுபவங்கள் பற்றிய விபரம் வருமாறு,

இவர் தற்போது ஒரு பிரபலமான இரத்தினக்கல் வர்த்தகராக உள்ளார். பலாங்கொடை பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின் தலைவராக தற்போது கடமையாற்றுகிறார். ஒரு சிறந்த சமூகப் பணியாளராககல்வி சமூகப் பணிகளுக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கி வருகிறார்.

அன்று 1990 ஜூன் 11 ஆம் திகதி அக்கறைப்பற்று பொலீஸ்நிலையம் விடுதலைப் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டது. 78 பொலீஸ் உத்தியோகத்தர்கள் கடத்தி செல்லப்பட்டு திருக்கோவில் நெசவு நிலையம் ஒன்றில் கைகள் (பின்னால்) கட்டப்பட்டு கண்களும் கட்டப்பட்ட நிலையில் நிலத்தில் படுக்க வைக்கப்பட்டு துப்பாக்கிகளால் நாம் சுடப்பட்டோம்.

தெய்வாதீனமாக என் மீது துப்பாக்கி சூடுபடவில்லை. சூடு நடத்தப்பட்ட பின் அவர்கள் ஒவ் வொருவராக யாராவது உயிருடன் இருக்கிறார்களா என பரீட்சிப்பதற்காக எங்களின் உடம்புகளில் ஏறிப் பார்த்தனர். என் உடம்பிலும் ஏறி நடந்தனர். நான் மிகவும் பொறுமையாக வலியை தாங்கினேன்.

பக்கத்தில்இருந்த தடித்த பொலீஸ் அதிகாரியின் தோல் பட்டையில் தலை வைத்து இறந்தது போல நடித்தேன். என் முகத்திலும் உடம்பிலும் அடுத்தவர்களின் உடல் சிதறிய இரத்தம் ஓடியது. அனைவரும் இறந்து விட்டார்கள் என உறுதிப்படுத்திக் கொண்ட அவர்கள் கிரனைட் ஒன்றையும் எம்மீது வீசினார்கள். அதில் ஒரு துண்டு என் நெற்றியில் பட்டது.

எமது பொலீஸ் நிலையத்தில் கடமையாற்றிய தமிழ் அதிகாரியின் சகோதரர் ஒருவர் விடுதலைப் புலிகளின் பொறுப்பாளராக இருந்தார். இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற உள்ளதாக எமது OIC இற்கு அவரே தகவல் வழங்கி இருந்தார். எனவே, OIC சம்பவம் இடம் பெறும் போது பொலீஸ் நிலையத்தில் இருக்கவில்லை.

நாம் சுற்றி வளைக்கப்பட்டுள்ள விடயத்தை பொலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்த போது யுத்த நிறுத்த ஒப்பந்தம் பற்றி பேசிக் கொண்டு இருப்பதால் எங்களை அவர்களிடம் சரணடையுமாறு எங்களுக்கு உத்தரவிடப்பட்டது. பொலீஸ் நிலையத்திலிருந்த தமிழ் அதிகாரிகள் கொல்லப்படவில்லை அவர்கள் வெளியேறிச் செல்ல அனுமதிக்கப்பட்டது.

முன்னாள் இராணுவ தளபதி டென்சில் கொப்பேகடுவவிடமும் நான் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் உயிர்த்தப்பி வந்த எனக்கு பதவி உயர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை என்பது வேதனையாக இருக்கிறது. ஒரு இலட்சம் ரூபா அன்பளிப்பு பணம் மட்டும் கிடைத்தது. அதன் பின் சேவையிலிருந்து நான் விலகினேன்.

இந்தளவு பாதிக்கப்பட்ட நீங்கள் எதனை எதிர்பார்க்கிறீர்கள்? பணம் வேண்டுமா பதவி உயர்வு வேண்டுமா? அதனை அரசாங்கத்துக்கும் அதிகாரிகளுக்கும் கூறுங்கள் என ஊடகவியலாளர் சமுதித கேட்ட போது, எனக்கு எதுவும் வேண்டாம் என்னோடு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி நியாயத்தைப் பெற்று கொடுக்குமாறு வேண்டுகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.ஜுனைதீன், ஊடகவியலாளர்.

பூநகரி பிரதேச சபையின் கன்னியமர்வு இன்று!

பூநகரி பிரதேச சபையின் முதலாவது கன்னியமர்வு இன்று சமய வழிபாடுகளுடன் ஆரம்பமானது.

கிளிநொச்சி பூநகரி பிரதேச சபையின் கன்னியமர்வானது சபையின் தவிசாளர் சிவகுமாரன் சிறீரஞ்சன் தலைமையில் ஆரம்பமானது.

இருபது உறுப்பினர்களைக்கொண்ட பூநகரி பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக பத்து உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி சார்பாக மூன்று உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி சார்பாக மூன்று உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி சார்பாக ஒரு உறுப்பினரும், அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் சார்பாக ஒரு உறுப்பினரும், சுயேட்சைக்குழு 01-ஒரு உறுப்பினரும், சுயேட்சைக்குழு 02 -ஒரு உறுப்பினரும் என இருபது உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளின் ஊட்டச்சத்து குறித்து அதிர்ச்சி தகவல்!

0

தற்போதைய குழந்தைகள் காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வதை தவிர்த்து வருகின்றனர் இது சம்பந்தமாக, பெற்றோர்களும் சமூகமும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தற்போதைய இளைய தலைமுறையினர் காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வதிலிருந்து வேகமாக தவிர்த்து வருகின்றனர். சுற்றுச்சூழலில் சத்தான மற்றும் சிறந்த பொருட்கள் காணப்பட்டாலும், பள்ளிகளில் அவை குறித்து எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும், குழந்தைகள் காய்கறிகள் மற்றும் பழங்களை விரும்புவதில்லை என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டுக்கான தேசிய ஊட்டச்சத்து மாதத்திற்காக இன்று (11) காலை பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற தேசிய நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

சுகாதார அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தை தேசிய ஊட்டச்சத்து மாதமாக அறிவித்துள்ளது. ஊட்டச்சத்து விஷயத்தில் வெகுஜன ஊடகங்கள் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றன என்றும், ஊடக நிறுவனங்கள் ஒளிபரப்பும் செய்திகள் மற்றும் அறிவார்ந்த நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாமல், அனைத்து அரசு மற்றும் தனியார் ஊடகங்களும் ஊட்டச்சத்து தொடர்பான சரியான செய்தியை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், அதற்கான முறையான திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

ஊட்டச்சத்து என்பது சுகாதாரத் துறையுடன் மட்டும் தொடர்புடைய ஒரு விடயம் அல்ல மாறாக பல அமைச்சகங்களின் தலையீட்டின் மூலம் வெற்றிகரமாக அடைய வேண்டிய ஒரு விடயம் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

இந்த ஆண்டு தேசிய ஊட்டச்சத்து மாதம் “காய்கறிகள் மற்றும் பழங்கள் என்ற தலைப்பு கருப்பொருளின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருப்பொருளின் கீழ் நான்கு முக்கிய விடயங்களை அடையாளம் கண்டு சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தினமும் குறைந்தது இரண்டு வகையான காய்கறிகள், ஒரு வகை இலை கீரைகள் மற்றும் இரண்டு வகையான பழங்களை உட்கொள்ளுதல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கிய விடயம் ஆகும்.

முடிந்தவரை ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணுதல், குறைந்த விலையில் உள்ளூரில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களைத் தேர்வு செய்தல் என்பன முக்கிய விடயங்களாக அமைந்தன.

இந்நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க, யுனிசெஃப் நாட்டு பிரதிநிதி திரு. கிறிஸ்டியன் ஸ்கூக், சுகாதார அமைச்சின் செயலாளர்கள், துணை இயக்குநர்கள், மாகாண சுகாதார சேவை இயக்குநர்கள், பிராந்திய சுகாதார சேவை இயக்குநர்கள், மருத்துவமனை இயக்குநர்கள், சிறப்பு மருத்துவர்கள், மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மின்சாரக் கட்டண உயர்வுக்கு சஜித் சாட்டையடி!

0

இன்று நள்ளிரவு முதல் மின்சாரக் கட்டணத்தை 15% ஆல் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை மின்சார சபையும், அரசாங்கமும் முன்வைத்த முன்மொழிவின் அடிப்படையில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த மின்சாரக் கட்டண அதிகரிப்பு மக்கள் ஆணையை மீறும் செயலாகும். மக்களின் குரலுக்கு செவிசாய்க்காத போக்காகும். இது இந்நாட்டு மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

ஜனாதிபதி தேர்தலின் போது, ​​ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மின்சாரக் கட்டணத்தை ரூ.9000 இல் இருந்து ரூ.6000 ஆகவும், ரூ.3000 கட்டணத்தை ரூ.2000 ஆகவும் குறைப்போம் என்றார். மின்சார கட்டணத்தை 33% ஆல் குறைப்போம் என்றும் மேடைக்கு மேடை பிரஸ்தாபித்தார். பின்னர், பொதுத் தேர்தலில் அக்கட்சி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை ஈட்டி 159 ஆசனங்களை தனதாக்கிய சந்தர்ப்பத்திலும் கூட ​​மின்சாரக் கட்டணத்தை 33% ஆல் குறைத்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அப்பட்டமாக மீறி, ஜனாதிபதியே தான் வெளியிட்ட அறிக்கைகளை பொய்களாக மாற்றும் வகையில், மின்சாரக் கட்டணத்தை 15% ஆல் அதிகரிக்க தற்போது இந்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கை, இந்த நாட்டின் மின்சார நுகர்வோரின் உரிமைகளை அப்பட்டமாக மீறும் செயலாக அமைந்து காணப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பாக இன்று (11) விசேட கூற்றொன்றை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அடுத்த கட்ட தவணையைப் பெறுவதற்காக மின்சாரக் கட்டணங்கள் இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளன. நீட்டிக்கப்பட்ட கடன் வசதியை பெற வேண்டுமானால் மின்சார கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ளது. 

திசைகாட்டி தலைமையிலான ஜே.வி.பி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தமொன்றையும் இணக்கப்பாடொன்றையும் எட்டுவோம் என வாக்குறுதியளித்திருந்தது. என்றாலும் ஆட்சிக்கு வந்தவுடன் தனது ஆணையை மீறியுள்ளதுடன், முந்தைய அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டை அவ்வாறே முன்கொண்டு செல்கிறது. இந்த அரசாங்கம் மக்கள் ஆணையை மீறி செயல்பட்டு வருகிறது. மக்கள் ஆணையை காட்டிக் கொடுத்து பொதுமக்களின் கருத்தை கிடப்பில் போட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் இணக்கப்பாட்டை இவர்கள் அதே முறையில் செயல்படுத்தியதன் விளைவாக, நாடும் மக்களும் இன்று இவ்வாறான நிலைமைகளுக்கு ஆளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். 

ஐக்கிய மக்கள் சக்தியும் கூட சர்வதேச நாணய நிதியத்துடன் இனங்கி செயல்படும். என்றாலும் IMF பிரதிநிதிகளை சந்தித்தபோது நாம் புதியதொரு இணக்கப்பாட்டுக்கு வருவோம் என தெரிவித்திருந்தோம். ஐக்கிய மக்கள் சக்தி (SJB) இன்றும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. தற்போதைய அரசாங்கம் பொதுமக்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் பொய்யாக்கி, மின்சார கட்டணத்தை 15% ஆல் அதிகரித்துள்ளது. அரசாங்கம் எடுத்துள்எ இந்த நடவடிக்கையால் ஏழைகள், சாதாரண மக்கள், உழைக்கும் மக்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டு வருவோரை கடுமையான சிக்கலுக்குள் தள்ளும். எனவே, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றி, வழங்கப்பட்ட மக்கள் ஆணையை காட்டிக் கொடுக்க இடமளிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். 

மின்சாரக் கட்டணத்தை 15% அதிகரிப்பதற்கு பகரமாக மின்சாரக் கட்டணத்தை 33% ஆல் குறைக்கும் நடவடிக்கையையே இந்த அரசாங்கம் எடுத்திருக்க வேண்டும். வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வரை மின்சார நுகர்வோருடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தி குரல் எழுப்பும். ஐக்கிய மக்கள் சக்தி ஜனநாயக ரீதியிலான போராட்டத்திலும் ஈடுபடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

ஒரு மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய ரணில்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வௌியேறிச் சென்றுள்ளார். 

சுமார் ஒரு மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அவர் அங்கிருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் இன்று (11) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி இருந்தார்.

நாட்டிற்குள் மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் அளித்திருந்த முறைப்பாட்டுக்கு அமைவாக, முந்தைய அரசாங்கத்தின் பல அமைச்சர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இது தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளனர். 

மன்னாரில் இடம்பெற்ற சத்தியப்பிரமான நிகழ்வு!

0

உள்ளூராட்சித் தேர்தலில் வன்னியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் சத்தியப்பிரமான நிகழ்வு நேற்று மன்னாரில் இடம்பெற்றது.

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சித் தேர்தலில், வன்னி மாவட்டத்தில், மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வெவ்வேறு கட்சிகளில் போட்டியிட்டு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் நேற்று (10), கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

மன்னார் நகரில் நடைபெற்ற இந் நிகழ்வில் கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக், மன்னார் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் இஸ்மாயில் இஸ்ஸதீன்,உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பங்குபற்றிச் சிறப்பித்தனர்.

களை கட்டிய எருக்கலம்பிட்டி 15ஆவது ஹஜ் விழா!

வன்னியின் மைந்தனும், முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் நூர்தீன் மஷூரின் எழில் கொஞ்சும் எருக்கலம் பிட்டியில் 15 ஆவது ஹஜ் விழாவின் இறுதி நாள் நிகழ்வு நேற்று வெகு விமர்சையாக இடம்பெற்றது.

முன்னாள் மன்னார் பிரதேச சபை தலைவர் இஸ்மாயில் இஸ்ஸதீனின் ஏற்பாட்டில், சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளர் சட்டத்தரணி லுக்மான் சஹாப்தீன் தலைமையில், ஆயிரக்கணக்கானோரின் பங்குபற்றலுடன் வெகு விமர்சையாக நடைபெற்ற குறித்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மக்கள் வெள்ளத்தில் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பளிக்கப்பட்டதுடன், அவர் உதைப்பந்தாட்டப் போட்டியையும் மிகுந்த ஆவலுடன் கண்டுகளித்தார்.

விறுவிறுப்பாக இடம்பெற்ற உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் எருக்கலம்பிட்டி யூத் அணியினரை எருக்கலம்பிட்டி எப்.சீ அணியினர் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கிக்கொண்டனர்.

குறித்த நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் உதுமாலெப்பை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக், உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் பெருந்திரளாகப் பங்குபற்றினர்.

ஆளும் கட்சி வசம் சென்ற மாநகர சபை!

0

பண்டாரவளை மாநகர சபையின் அதிகாரத்தை நிலைநாட்டுவதில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. 

அதன்படி, அந்த மாநகர சபையின்  மேயராக தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர் ரத்நாயக்க முதியன்செலாகே சாகர தீர விஸ்வவிக்ரம தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

​மேயர் பதவிக்காக இன்று நடைபெற்ற தேர்தலில் 04 மேலதிக வாக்குகளால் வெற்றுப்பெற்று அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

பண்டாரவளை மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி 06 உறுப்பினர்களை கொண்டுள்ள அதேநேரத்தில் சுயேச்சை குழு எண்1, 05 உறுப்புனர்களை கொண்டுள்ளது. 

அதே மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தி 03 உறுப்பினர்களை கொண்டுள்ளது. 

அத்துடன் சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் 02 சுயேச்சை குழுக்கள் தலா ஒரு உறுப்பினர்களை கொண்டுள்ளன.

போர்த்துக்கல் அணி சாம்பியன் ஆனது!

0

‘நேஷன்ஸ் லீக்’ கால்பந்தில் போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனது. பைனலில் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 5-3 என ஸ்பெயினை வீழ்த்தியது.

ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக ‘நேஷன்ஸ் லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. நேற்று ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த பைனலில், போர்ச்சுகல், நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 21வது நிமிடம் ஜுபிமெண்டி (ஸ்பெயின்), 26வது நிமிடம் மெண்டிஸ் (போர்ச்சுகல்) தலா ஒரு கோல் அடித்தனர். 45வது நிமிடம் மைக்கேல் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 61 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 138வது கோல் இது. 90 நிமிட முடிவில் போட்டி 2-2 என சமன் ஆனது. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. காயம் காரணமாக 88 வது நிமிடம் வெளியேறிய ரொனால்டோ, இதில் பங்கேற்கவில்லை.

முதல் 3 வாய்ப்பில் போர்ச்சுகலின் ராமோஸ், விடின்ஹா, பெர்ணான்டஸ் கோல் அடித்தனர். மறுபக்கம் ஸ்பெயின் தரப்பில் மெரினோ, பயேனா, இஸ்கோ கோல் அடிக்க 3-3 என ஆனது.

4வது வாய்ப்பில் மெண்டெஸ் (போர்ச்சுகல்) கோல் அடிக்க, ஸ்பெயினின் மோராட்டோ அடித்த பந்தை கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்து அசத்தினார்.

5வது வாய்ப்பில் நெவேஸ் கோல் அடித்தார். இதையடுத்து 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் ‘திரில்’ வெற்றி பெற்றது. 2019க்குப் பின் இத்தொடரில் மீண்டும் சாம்பியன் ஆனது.

தில்லையடியில் சிக்கிய கடத்தல் பீடி இலைகள்!

0

புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் வேன் ஒன்றும் பறிமுதல்!

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட ஒரு வேன் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், புத்தளம் பொலிஸாருடன் இணைந்து தில்லையடி பகுதியில் நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகளானது வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வேன் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.