Saturday, May 2, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 166

‘சமூக சக்தி’ தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்!

0

கிராமப்புற ஏழை மக்களின் வாழ்க்கையை உயர்த்துவது தற்போதைய அரசின் முக்கிய பொறுப்பு என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 

‘சமூக சக்தி’ தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, இலக்கு வைக்கப்பட்ட சமூகங்களுக்கு மானியங்களை முறையாக வழங்குவது தேசிய மக்கள் சக்தி அரசின் கொள்கையாகும் எனக் கூறினார். 

அதன்படி, கிராமப்புற வறுமையை ஒழிப்பது அவசியமானது என ஜனாதிபதி வலியுறுத்தினார். 

இதற்காக ஏராளமான முடிவுகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு தேவையான பல காரணிகள் கணிசமான அளவில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

மானியங்கள் பெற வேண்டிய மக்களை துல்லியமாக அடையாளம் காண ஒரு சிறந்த தரவு முறைமை தேவை எனவும், அதன் மூலம் கிராமப்புற மக்களுக்கு மானியங்கள் சரியான முறையில் வழங்கப்பட முடியும் எனவும், இதற்கு அரசு அதிகாரிகள் நேர்மையாக செயல்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறினார். 

கிராமப்புற மக்களுக்கு உதவி வழங்கும் அனைத்து வேலைத்திட்டங்களையும் ஒருங்கிணைக்க வேண்டும் எனவும், இந்தப் பணியை முறையாக செய்ய ‘பிரஜாசக்தி’ வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேல் மாகாணத்தில் 12 மணி நேர நீர் விநியோகம் தடை!

0

கம்பஹாவில் பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடை!

இலங்கை மின்சார சபையின் சபுகஸ்கந்த உப மின் நிலையத்தின் ஊடாக மின்விநியோகிக்கப்படும் வழிகளில் அத்தியாவசியமான பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக ஜூலை 7ஆம் திகதி முற்பகல் 8.30 மணி முதல் பிற்பகல் 8.30 மணி வரை 12 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வழங்கப்படும் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதனால் இந்த குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதன்படி பேலியகொடை, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க மற்றும் சீதுவ ஆகிய நகர சபை பிரதேசங்களுக்கு மற்றும் களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா – எல, கடான, மினுவாங்கொடை ஆகிய பிரதேச சபை பிரிவுகளுக்கும் மற்றும் கம்பஹா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் இந்த நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் விநியோகம் தற்காலிகமாகத் துண்டிக்கப்படுவதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பாக தமது வருத்தத்தை தெரிவிப்பதுடன் நீரை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

ஆப்கன் தலிபான் அரசை அங்கீகரித்த ரஷ்யா!

0

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசை ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. தலிபான் அரசாங்கத்தை முறையாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா மாறியது.

இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கான செயல், பல்வேறு துறைகளில் நமது நாடுகளுக்கு இடையே உற்பத்தி ரீதியான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு உத்வேகம் அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான்களால் நியமிக்கப்பட்ட புதிய ஆப்கானிஸ்தான் தூதர் குல் ஹசன் ஹாசனை ரஷ்ய அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. இந்த நடவடிக்கையின் மூலம், 2021ல் தலிபான் தலைமையிலான அரசாங்கம் பொறுப்பேற்றதிலிருந்து அதை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா ஆனது.

மாஸ்கோவில் நடந்த ஒரு சிறப்பு நிகழ்வில் ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ, ஆப்கானிஸ்தான் தூதர் குல் ஹசன் ஹாசனை சந்தித்தார். காபூலில் உள்ள தலிபான் அதிகாரிகள் ரஷ்யாவின் இந்த நடவடிக்கையைப் பாராட்டினர். மேலும் இது உறவுகளை வலுப்படுத்த உதவும். இது எங்கள் உறவுகளின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்’ என்று தலிபானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் கூறினார்.

ஆகஸ்ட் 2021ல் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ரஷ்யா காபூலில் தனது தூதரகத்தைத் திறந்து வைத்துள்ளது. தலிபான் தலைவர்களுடன், ரஷ்ய அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர்.இதுவரை, வேறு எந்த நாடும் தலிபான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. சீனா, பாகிஸ்தான் நாடுகள், தலிபான் அரசின் துாதரை ஏற்றுக் கொண்ட போதிலும், இதுவரை தலிபான் அரசை அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கில் சிக்கிய பெருமளவு கஞ்சா!

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மாமுனைபகுதியில் நேற்று இரவு 11:30 மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

கடற்படையினர் மற்றும் மருதங்கேணி பொலிசார்க்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று இரவு ஓர் விசேட சுற்றிவளைப்பு ஒன்று மாமுனை பகுதி முழுவதும் மேற்கொள்ளப்பட்டது

இச் சுற்றி வளைப்பில் 38 பொதிகள் அடங்கிய 71.400kg கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரும் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கேரளா கஞ்சா மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஜனாதிபதி நிதியத்திற்கு 100 மில்லியன் நன்கொடை!

0

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் 100 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின், இந்நாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ், இதற்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் இன்று (04) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்தார்.

இந்த நன்கொடை, லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் இலங்கையின் கல்வி, சுகாதாரம் மற்றும் கலாசார துறைகளுக்கு வழங்கும் நன்கொடைகளுக்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே மற்றும் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முன்னாள் அமைச்சர் கைது!

0

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்யப்பட்டுள்ளார். 

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க வந்தபோதே அவர் கைது செய்யப்பட்டார்.

தூண்டில் மீன் பிடிக்க சென்றவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி மாவட்ட இரணைமடு குளத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி, இரணைமடு குளத்தில் தூண்டில் மீன் பிடிப்பதற்காகச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான வேலாயுதம் ஜெயரூபன் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று (03) மீட்கப்பட்டுள்ளார்.

தூண்டில் மீன் பிடிக்க சென்ற குடும்பஸ்தர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குறித்த குடும்பஸ்தர் கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியை சேர்ந்தவர் எனவும், சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணம் குறித்த மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

EFC கழகத்திற்கு கால்ப்பந்துகள் வழங்கிவைப்பு!

புத்தளம் எருக்கலம்பிட்டி உதைப்பந்தாட்ட கழகத்திற்கு (EFC) உயர் தரத்திலான கால்ப்பந்துகள் வழங்கும் நிகழ்வு பு/எருக்கலம்பிட்டி உதைப்பந்தாட்ட கழக காரியாலயத்தில் EFC யின் தலைவர் திரு இம்ரான் தலைமையில் இன்று இடம்பெற்றது.

புத்தளம் பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பொத்துவில்லு வட்டார உறுப்பினர் ஜனாப் ஷாஹீன் ரீசா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில், புத்தளம் எருக்கலம்பிட்டி உதைப்பந்தாட்ட கழகத்திற்கு (EFC) உயர் தரத்திலான 10 கால்ப்பந்துகள் EFC யின் தலைவர் திரு இம்ரான் அவர்களிடம் வழங்கிவைக்கப்பட்டது.

புத்தளம் மண்ணில் உதைப்பந்தாட்ட துறையில் புதிய சரித்திரம் படைத்துவரும் EFC அணியின் வளர்ச்சிக்கும், நேர்த்தியான பயிற்சிக்கும் வலு சேர்க்கும் வகையில், உயர் தரத்திலான 10 கால்ப்பந்துகள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.

EFC அணியின் முக்கிய தேவைகள் அறியப்பட்டு, அவர்களுக்கான கால்ப்பந்துகள் முதல் கட்டமாக ஜனாப் ஷாஹீன் ரீசா அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டதுடன், பாடசாலை மைதானத்தின் சில குறைபாடுகள் குறித்து EFC யின் தலைவர் திரு இம்ரான் அவர்களினால் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் ஷாஹீன் ரீசா அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

மைதானத்தின் தற்போதைய குறைபாடுகளை கேட்டறிந்துகொண்ட பிரதேச சபை உறுப்பினர், அவற்றுக்கு தேவையான நடவடிக்கைகளை முதல் கட்டமாக தாம் செய்து தருவதாக தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் புத்தளம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜனாப் சதக்கத்துல்லா ரிஜாஜ், ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தரும், வட மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினருமான ஜனாப் M.S.நாசர், ஓய்வுபெற்ற ஆசிரியர் நஜீம், EFC அணியின் பயிற்றுவிப்பாளர், EFC நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாகவில்லு கிளை உறுப்பினர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

சிறுபோக நெல் கொள்வனவு இன்றுமுதல்!

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு இன்றுமுதல் (03) ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாட்டரிசி நெல் 1கிலோகிராம் 120 ரூபாவிற்கும் சம்பா நெல் 1 கிலோகிராம் 125 ரூபாவிற்கும் கீரிசம்பா நெல் 1 கிலோகிராம் 132 ரூபாவிற்கும் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்தார்.

இதற்காக கடந்த வரவு செலவுத் திட்டத்தில் 06 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நெல் அறுவடை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை குறிப்பிட்டுள்ளது.

முதற்கட்டமாக இந்த மாவட்டங்களுக்கான நெற்கொள்வனவை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கிளிநொச்சியிலுள்ள வடமாகாணத்திற்குரிய நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சிய சாலை துப்பரவு பணியில் உத்தியோகத்தர்கள் தீவிரமாக ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் வயல் அறுவடை விழா

விவசாயிகளிடத்தே நெற்ச்செய்கையில் நவீன தொழில்நுட்பத்தை வழங்கி நெல் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் வடமாகாண விவசாயத்திணைக்களம் மேற்கொண்டு வருகின்ற வயல் அறுவடை விழா கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் நேற்று நடைபெற்றது.

நெல் விதைப்பு நவீன முறையான பரசூட் முறையில் விதைக்கப்பட்ட AT 307 என்ற வெள்ளை நெல் அறுவடை விழா நடைபெற்றது.

பாடவிதான உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண மேலதிக விவசாயப்பணிப்பாளர் தட்சணாமூர்த்தி யோகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட விவசாயப்பணிப்பாளர் வி.சோதிலட்சுமி, பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.