Home Blog Page 179

தன்கொடுவ தேவாலயத்தில் பல லட்சங்கள் கொள்ளை!

ஜூட் சமந்த

கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றை உடைத்து ரூ.8,51,000 மதிப்புள்ள வெளிநாட்டு நாணயம் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து தன்கொடுவ காவல்துறையினர் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

தன்கொடுவ, கோனவிலாவில் உள்ள புனித ஜோசப் தேவாலயத்தின் பொறுப்பாளர் பாதிரியார் ஜூட் பிரான்சிஸ் அந்தோணி அளித்த புகாரைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

நேற்று 7 ஆம் தேதி இரவு 8.00 மணியளவில் காவல்துறைக்கு சென்று புகார் அளித்த தேவாலயத்தின் பொறுப்பாளர் பாதிரியார், தான் நேற்று காலை வேலையில் தேவாலயத்தில் இல்லை என்றும், மாலை வந்தபோது விடுதி உடைக்கப்பட்டதை அறிந்ததாகவும் தெரிவித்தார்.

அதன்படி, தேவாலயத்திற்குச் சொந்தமான விடுதிக்குச் சென்ற போலீசார், விசாரணையில் திருடப்பட்ட சொத்து தொடர்பான தகவல்களைக் கண்டறிந்துள்ளனர்.

யார் கொள்ளை செய்தார்கள் என்பது தொடர்பான விடயம் இன்னும் தெரியவில்லை.

தன்கொடுவ காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்காவில் பகுதியில், ஒரு பொலிஸ் அதிகாரி ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

592வது இராணுவ படைப்பிரிவின் கீழ் உள்ள இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக, ஏ-9 வீதியின் கொக்காவில் பகுதியில் இன்று காலை, குறித்த பொலிஸ் அதிகாரி ஐஸ் போதைப்பொருளுடன் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரி, தனது உடமையில் 92 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அத்தோடு, அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரியாக இருந்த குறித்த நபருக்கு, பொய் வழக்கு பதிவு செய்தல், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு உடந்தையாக செயற்படுதல், இலஞ்சம் பெறுதல் போன்ற பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவர் வெலிஓயா பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த விடயங்களை உண்மைப்படுத்தும் வகையில் அவர் ஐஸ் போதைப்பொருளுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பொலிஸ் அதிகாரி மீது உயரதிகாரிகள் உடனடியாக உரிய சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மிக முக்கிய இயந்திரத்தை உருவாக்கிய மஹவெவ இளைஞர்!

ஜூட் சமந்த

இந்த நாட்டில் உள்ள நீர்த்தேக்கங்களை ஆக்கிரமித்துள்ள ஜப்பானிய நாட்வீட் மற்றும் பிற நீர்வாழ் தாவரங்களை எளிதாக அகற்றக்கூடிய ஒரு இயந்திரத்தை மஹாவெவ, கொஸ்வாடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தயாரிதுள்ளார்.

அவர் தொழில் ரீதியாக ஒரு சைக்கிள் பழுதுபார்க்கும் ஷஷிலா ஹேஷான் திசாநாயக்க (31 வயது) என்பவரே இவ்வாறு புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இவர் மோட்டார் சைக்கிள் எஞ்சின் மற்றும் வேறு சில பாகங்களைப் பயன்படுத்தி புதிய இயந்திரத்தை தயாரித்துள்ளார்.

ஷஷிலா ஹேஷான் திசாநாயக்க தான் தயாரித்த இயந்திரம் பற்றிய தனது அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.

“எங்கள் கிராமத்தில் உள்ள நீர் தொட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான சால்வினியா (ஜப்பானிய நாட்வீட்) மற்றும் பிற தாவரங்கள் இருந்தன. இந்த தாவரங்களை அகற்றுவதற்கு அரசாங்கத்திடமிருந்தோ அல்லது வேறு எந்த அமைப்பிடமிருந்தோ எங்களுக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. எனவே, கிராமவாசிகள் நீர் தொட்டியை சுத்தம் செய்ய பல மாதங்கள் எடுத்தன.

ஆனால் அவைகள் எனக்கு போதுமான ஒரு பெறுபேற்றை கொடுக்கவில்லை. அப்போதுதான் நீர்வாழ் தாவரங்களை அகற்ற ஒரு இயந்திரத்தை உருவாக்குவது நல்லது என்று நினைத்தேன்.

என்னுடைய ஒரு அன்பான சகோதரர் எனக்கு ஒரு மோட்டார் சைக்கிள் எஞ்சின் மற்றும் சில உதிரி பாகங்களைக் கொடுத்தார். நான் வேறொருவரிடமிருந்து இரண்டு சிறிய வல்லங்களை பெற்றுக்கொண்டேன். பின்னர், கிராம மக்களின் உதவியுடன், நான் இயந்திரத்தை உருவாக்கினேன். இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி, ஒரு மணி நேரத்திற்கு சுமார் 03 கனசதுர நீர்வாழ் தாவரங்களை அகற்ற முடியும். இந்த இயந்திரம் மேலும் மேம்படுத்தப்பட்டால், நீர்வாழ் தாவரங்களை மிகவும் இலகுவாக அகற்ற முடியும் என்று நான் நம்புகிறேன் என தெரிவித்தார்.”

மேலும் நான் ஒவ்வொரு நாளும் காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை மகாவெவ தொட்டியில் உள்ள நீர்வாழ் தாவரங்களை அகற்றுகிறேன். நான் தினமும் சைக்கிள் ஓட்டிச் சென்றே இவைகளை செய்யவேண்டியிருப்பதால், நேரத்தை மிச்சப்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், குறித்த இயந்திரம் ஒரு மோட்டார் சைக்கிள் இயந்திரத்தால் இயக்கப்படுவதால், எரிபொருளுக்கு மிகக் குறைந்த பணம் மட்டுமே செலவிடப்படுகிறது என்றார்.

மகாவெவ நீர் தொட்டி குழுவின் தலைவர் திரு. சிந்தக விஜயசிறி இதுபற்றி கூறுகையில்;

கிராமவாசிகள் சுமார் 4 மாதங்கள் தொட்டிகளை சுத்தம் செய்ய ஒன்றாக உழைகின்றனர். ஆனால் அவர்களால் வேலையை முடிக்க முடியவில்லை. இதற்கிடையில், கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் இந்த இயந்திரத்தை உருவாக்கத் தொடங்கினார். நாங்கள் அவருக்கு உதவினோம். முதலில், இயந்திரத்தின் இயந்திரம் பொருத்தப்பட்டிருக்கும் பக்கம் மிகவும் கனமாக இருந்ததால், இந்த இயந்திரத்தை தொட்டியில் வைக்க முடியவில்லை. பின்னர், இந்த இளைஞன் அதற்கும் ஒரு தீர்வைப் பயன்படுத்தி வேலையை வெற்றிகரமாக முடித்தார்.

இப்போது, ​​இந்த இயந்திரத்தை மேம்படுத்த நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இது தொடர்பாக அறிவுள்ள நிபுணர்கள் வந்து இயந்திரத்தைச் சரிபார்த்து, குறைபாடுகளைச் சரிசெய்து மேம்படுத்தினால், நாட்டில் உள்ள தொட்டிகளை சுத்தம் செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அங்குரார்ப்பணம்!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பொன்று கட்சியின் தேசியத்தலைவர் ரவுப் ஹக்கீமின் வேண்டுகோளுக்கிணங்க ஞாயிற்றுக்கிழமை (5) முஸ்லிம் காங்கிரஸ், தலைமையகமான தாருஸ்ஸலாமில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கொழும்பு மாநகரசபை உறுப்பினரும் கொழும்பு மாவட்ட அமைப்பாளருமான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாட் நிஸாம்தீனின் தலைமையில், கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் சுஹைர் அத்தாசின் வழிநடத்தலில் இளைஞர் காங்கிரஸ் புதிய பரிமாணம் பெற்றுள்ளது.

நிகழ்வின் முக்கிய அதிதியாக கட்சியின் பிரதித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் சிறப்பு பேச்சாளராக புத்தளம் மாவட்ட முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் கலந்து சிறப்பித்தனர்.

கல்வியின் மூலம் சமுதாயத்தை வலுப்படுத்துதல் வேலைவாய்ப்புகளை பெற வழிகாட்டுதல், சுகாதாரம் மற்றும் விளையாட்டுத்துறையை மேம்படுத்துதல்,
இளைஞர்களை ஆபத்தான போதைப்பொருள்களிலிருந்து பாதுகாத்தல்
போன்ற இன்னோரன்ன வேலைத் திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்த இவ்வமைப்பு திடசங்கட்பம் பூண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாகவில்லுவில் இடம்பெற்ற கரைப்பந்தாட்டாத் தொடர்!

மர்ஹூம்களான AL அன்பஸ் மற்றும் AHM அப்ஸிர் ஞாபகார்த்தமாக நடைபெற்ற டொமினோ பிரிமியர் லீக் கரப்பந்தாட்ட சுற்றுத் தொடர் புத்தளம் எருக்கலம்பிட்டியில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.

கடந்த 4,5 மற்றும் 6 திகதிகளில் புத்தளம் எருக்கலம்பிட்டி டொமினோ பார்க்கில் மின்னொளியில் மிகவும் பரபரப்பாக இடம்பெற்ற லீக் தொடரில் 6 அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.

Domino evergreen, Domino Stone, Domino Stars, Domino Titans, Domino Rock, Domino Power ஆகிய அணிகள் குறித்த சுற்றுத்தொடரில் பங்குகொண்டு தொடரை சுவாரஷ்யமாக்கியது.

    மிகவும் விறுவிறுப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இடம்பெற்ற லீக் தொடரில் சமர்செய்த அணிகளில் Domino Stars, Domino titans, Domino Rock, Domino Power ஆகிய நான்கு அணிகள் ப்லே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இடம்பெற்ற ப்லே ஆப் சுற்றில் அபாரமாக விளையாடிய Domino Stars மற்றும் Domino Power ஆகிய அணிகள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

    பார்வையாளர்களினதும், வீரர்களினதும் மிகுந்த ஆரவாரத்துக்கு மத்தியில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் Domino Stars அணி Domino Power அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

    தொடரில் பங்குகொண்ட சகல போட்டிகளிலும் Domino Stars அணி வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டியில் மிகவும் அபாரமாக விளையாடி கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டனர்.

    தொடரில் சாம்பியன் ஆன Domino Stars அணிக்கு வெற்றிக்கிண்ணம் மற்றும் பணப்பரிசு வழங்கப்பட்டதுடன், இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்ட Domino Power அணிக்கும் வெற்றிக்கிண்ணம் மற்றும் பணப்பரிசு வழங்கப்பட்டன.

    சாம்பியன் கிண்ணத்திற்கு தொழிலதிபர் AGM அஸாருதீன் அனுசரணை வழங்கி இருந்ததுடன், பணப்பரிசினை தொழிலதிபர் HM இக்ராம் வழங்கிவைத்தார்.

    அதே போல் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்ட அணிக்கான கிண்ணத்திற்கு அல்ஹிக்மா விளையாட்டு கழகம் அனுசரணை வழங்கி இருந்ததுடன், அவர்களுக்கான பணப்பரிசினை தொழிலதிபர் AGM அஸாருதீன் வழங்கிவைத்தார்.

    வளர்ந்து வரும் இளம் வீரருக்கான பணப்பரிசினை Domino Stars அணியின் S ருஷ்தி பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான பணப்பரிசை தொழிலதிபர்களான AGM அஸாருதீன் மற்றும் JM சப்ரீன் ஆகியோர் இணைந்து வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.

    உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!

    உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 3,950 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளதாக சர்வதேச சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. 

    அதன்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது நாட்டில் தங்கத்தின் விலை 8,000 ரூபாய் அதிகரித்துள்ளது. 

    இந்நிலையில் கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (07) தங்க விற்பனை நிலவரப்படி, 

    22 கரட் பவுண் தங்கத்தின் விலை 290,500 ரூபாவாக அதிகரித்துள்ளது. 

    இது கடந்த வௌ்ளிக்கிழமை 283,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டிருந்தது. 

    இதற்கிடையில், கடந்த வாரம் 306,000 ரூபாவாக நிலவிய 24 கரட் பவுண் தங்கத்தின் விலை இன்று 314,000 ரூபாவாக உயர்ந்துள்ளது.

    நாகவில்லுவில் இடம்பெற்ற மீலாத் விழா நிகழ்வு!

    உத்தம நபிகளார் முகம்மத் (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தை சிறப்பாக்கி வைக்கும் மீலாதுன் நபி விழா நிகழ்வு கடந்த 05.10.2025 ஞாயிற்றுக்கிழமை புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய நூர்தீன் மஷூர் திறந்த வெளியரங்கில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

    நாகவில்லு ஜம்மிய்யதுல் உலமாவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வை, அதன் தலைவர் அஷ் ஷேக் அபுல்ஹுதா ஐனுல்லாஹ் (நுழாரி) அவர்கள் தலைமை தாங்கி நடத்திவைத்தார்.

    குறித்த நிகழ்வின் பிரதம அதிதியாக ஜம்மிய்யதுல் உலமாவின் புத்தளக் கிளை தலைவர் அஷ் ஷேக், அல்ஹாபிழ் MBM ஜிப்நாஸ் (மிஸ்பாஹி) கலந்து சிறப்பித்தார்.

    பல வருடங்களுக்குப் பின்னர் புத்தளம் எருக்கலம்பிட்டியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்ற மீலாதுன் நபி விழா நிகழ்வில், புத்தளம் எருக்கலம்பிட்டியில் உள்ள 8 குர்ஆன் மத்ரஸாக்களை சேர்ந்த சுமார் 40 மாணவர்களின் நிகழ்ச்சிகள் மேடையை அலங்கரித்ததுடன், அவர்களுக்கான பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

    நிகழ்வினை மேலும் சுவாரஷ்யமாக்கும் வகையில் பக்கீர் பாவாவின் இஸ்லாமிய கீதங்களும் அனைவரின் கவனத்தையும் அதிகம் ஈர்த்தன.

    நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், புத்தளம் எருக்கலம்பிட்டியில் உள்ள 8 குர்ஆன் மத்ரஸாக்களுக்கும் விஷேட நினைவுச்சின்னங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

    குறித்த நிகழ்வில் புத்தளம் எருக்கலம்பிட்டி நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், பாடசாலை அதிபர், மத்ரஸா அதிபர்கள், உலமாக்கள், நாகவில்லு ஜம்மிய்யதுல் உலமாவின் உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

    களத்தில் இறங்கினார் புத்தளம் மாநகரசபை உறுப்பினர்!

    வெறுமனே குறைகளை சொல்லி திரியாமல் இருக்கும் குறைகளை
    நிறைகளாக்க களத்தில் இறங்கினார் புத்தளம் மாநகரசபை உறுப்பினர் எம்.எம்.எம் முர்ஷித்.

    விடுமுறை நாளான நேற்று (06.10.2025) புத்தளம் மாநகர சபைக்குற்பட்ட ஐந்தாம் வட்டாரத்தில் உள்ள ஒரு பகுதி வடிகாண்கள் புத்தளம் மாநகரசபை உறுப்பினர் எம்.எம்.எம் முர்ஷித் அவர்களின் கள முயற்சியில் முழுமையாக துப்பரவு செய்யப்பட்டது.

    மலை காலம் ஆரம்பித்துள்ளமையால் குப்பை கூளங்கள் தேங்கி இருக்கும் வடிகான்களை இணங்கண்டு தனது கரங்களால் துப்பரவு செய்த காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    வடிகான்களின் கழிவுப்பொருட்கள் மற்றும் ஏனைய குப்பை கூளங்கள் அதிகம் தேங்கி இருந்தமையாலும், அதன் கழிவுகள் பல நாட்கள் சுத்தம் செய்யப்படாமையாலும் நேரடியாக காலத்தில் குறித்து துப்பரவு பணிகளை மேற்கொண்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் 5ம் வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற புத்தளம் மாநகரசபை உறுப்பினர் எம்.எம்.எம் முர்ஷித் அவர்களுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

    அந்த வகையில் களத்தில் நின்ற உறுப்பினருக்கு, அவருடைய ஆதரவாளர்களும் அப்பகுதி மக்களும் பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    2025 மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

    உலகில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

    நடப்பு ஆண்டுக்கான நோபல் விருதுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், முதலில் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

    2025-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு, உடலில் உள்ள நோயெதிர்ப்பு அமைப்பானது, அதன் சொந்த உடல் உறுப்புகளைத் தாக்காமல் எப்படி கட்டுக்குள் வைக்கிறது என்ற ஆராய்ச்சிக்காக மேரி இ. பிரன்கோவ் (Mary E. Brunkow), பிரெட் ராம்ஸ்டெல் (Fred Ramsdell) மற்றும் ஷிமோன் சகாகுச்சி (Shimon Sakaguchi) என்ற 3 மருத்துவ வல்லுநர்களுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மருத்துவத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை வேதியியல், அக்டோபர் 8 அன்று இலக்கியம், அக்டோபர் 9 அன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. நோபல் பரிசு பெறுவோர்களுக்கு தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் இலங்கை மதிப்பில் ரூ.30.41 கோடி தரப்படுகிறது.

    தேசிய ரீதியில் சாதிக்கத் துடிக்கும் கல்பிட்டி அல் அக்ஸா மாணவி!

    ஆங்கில மொழித் தினப் போட்டியில் கல்பிட்டி அல் அக்ஸா மாணவி தேசிய மட்டத்திற்கு தெரிவு

    அகில இலங்கை ஆங்கில மொழித் தின சொல்வதெழுதுதல் ( Dictation ) போட்டியில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மாணவி லாபிர் அலி பாத்திமா பஹ்மா மாகாண மட்டப் போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார்.

    கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் தரம் 6 இல் கல்வி பயிலும் மாணவி லாபிர் அலி பாத்திமா பஹ்மா ஆங்கில மொழித் தின சொல்வதெழுதுதல் ( Dictation ) போட்டியில் மாகாண மட்டத்தில் முதலாம் இடம் பெற்று தேசிய மட்டத்திற்க்கு தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

    தேசிய மட்டத்தில் முதலிடத்தை பெற்று பாடசாலைக்கும் தம் பிரதேசத்திற்கும் பெருமை சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் இதற்காக அயராது உழைத்து மாணவியை போட்டி நிகழ்ச்சிக்குத் தயார் செய்த பாடசாலையின் சகல ஆங்கில மொழிப் பாட ஆசிரியர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு இதற்கான வழிகாட்டல்களை வழங்கிய பாடசாலை அதிபர் யு.எம்.எம். அமீருக்கும் ( SLPS I ) பாடசாலை சமூகம் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

    (அரபாத் பஹர்தீன்)