Thursday, June 25, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 190

ஆப்கன் தலிபான் அரசை அங்கீகரித்த ரஷ்யா!

0

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசை ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. தலிபான் அரசாங்கத்தை முறையாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா மாறியது.

இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கான செயல், பல்வேறு துறைகளில் நமது நாடுகளுக்கு இடையே உற்பத்தி ரீதியான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு உத்வேகம் அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான்களால் நியமிக்கப்பட்ட புதிய ஆப்கானிஸ்தான் தூதர் குல் ஹசன் ஹாசனை ரஷ்ய அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. இந்த நடவடிக்கையின் மூலம், 2021ல் தலிபான் தலைமையிலான அரசாங்கம் பொறுப்பேற்றதிலிருந்து அதை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா ஆனது.

மாஸ்கோவில் நடந்த ஒரு சிறப்பு நிகழ்வில் ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ, ஆப்கானிஸ்தான் தூதர் குல் ஹசன் ஹாசனை சந்தித்தார். காபூலில் உள்ள தலிபான் அதிகாரிகள் ரஷ்யாவின் இந்த நடவடிக்கையைப் பாராட்டினர். மேலும் இது உறவுகளை வலுப்படுத்த உதவும். இது எங்கள் உறவுகளின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்’ என்று தலிபானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் கூறினார்.

ஆகஸ்ட் 2021ல் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ரஷ்யா காபூலில் தனது தூதரகத்தைத் திறந்து வைத்துள்ளது. தலிபான் தலைவர்களுடன், ரஷ்ய அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர்.இதுவரை, வேறு எந்த நாடும் தலிபான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. சீனா, பாகிஸ்தான் நாடுகள், தலிபான் அரசின் துாதரை ஏற்றுக் கொண்ட போதிலும், இதுவரை தலிபான் அரசை அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கில் சிக்கிய பெருமளவு கஞ்சா!

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மாமுனைபகுதியில் நேற்று இரவு 11:30 மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

கடற்படையினர் மற்றும் மருதங்கேணி பொலிசார்க்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று இரவு ஓர் விசேட சுற்றிவளைப்பு ஒன்று மாமுனை பகுதி முழுவதும் மேற்கொள்ளப்பட்டது

இச் சுற்றி வளைப்பில் 38 பொதிகள் அடங்கிய 71.400kg கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரும் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கேரளா கஞ்சா மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஜனாதிபதி நிதியத்திற்கு 100 மில்லியன் நன்கொடை!

0

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் 100 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின், இந்நாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ், இதற்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் இன்று (04) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்தார்.

இந்த நன்கொடை, லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் இலங்கையின் கல்வி, சுகாதாரம் மற்றும் கலாசார துறைகளுக்கு வழங்கும் நன்கொடைகளுக்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே மற்றும் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முன்னாள் அமைச்சர் கைது!

0

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்யப்பட்டுள்ளார். 

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க வந்தபோதே அவர் கைது செய்யப்பட்டார்.

தூண்டில் மீன் பிடிக்க சென்றவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி மாவட்ட இரணைமடு குளத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி, இரணைமடு குளத்தில் தூண்டில் மீன் பிடிப்பதற்காகச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான வேலாயுதம் ஜெயரூபன் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று (03) மீட்கப்பட்டுள்ளார்.

தூண்டில் மீன் பிடிக்க சென்ற குடும்பஸ்தர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குறித்த குடும்பஸ்தர் கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியை சேர்ந்தவர் எனவும், சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணம் குறித்த மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

EFC கழகத்திற்கு கால்ப்பந்துகள் வழங்கிவைப்பு!

புத்தளம் எருக்கலம்பிட்டி உதைப்பந்தாட்ட கழகத்திற்கு (EFC) உயர் தரத்திலான கால்ப்பந்துகள் வழங்கும் நிகழ்வு பு/எருக்கலம்பிட்டி உதைப்பந்தாட்ட கழக காரியாலயத்தில் EFC யின் தலைவர் திரு இம்ரான் தலைமையில் இன்று இடம்பெற்றது.

புத்தளம் பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பொத்துவில்லு வட்டார உறுப்பினர் ஜனாப் ஷாஹீன் ரீசா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில், புத்தளம் எருக்கலம்பிட்டி உதைப்பந்தாட்ட கழகத்திற்கு (EFC) உயர் தரத்திலான 10 கால்ப்பந்துகள் EFC யின் தலைவர் திரு இம்ரான் அவர்களிடம் வழங்கிவைக்கப்பட்டது.

புத்தளம் மண்ணில் உதைப்பந்தாட்ட துறையில் புதிய சரித்திரம் படைத்துவரும் EFC அணியின் வளர்ச்சிக்கும், நேர்த்தியான பயிற்சிக்கும் வலு சேர்க்கும் வகையில், உயர் தரத்திலான 10 கால்ப்பந்துகள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.

EFC அணியின் முக்கிய தேவைகள் அறியப்பட்டு, அவர்களுக்கான கால்ப்பந்துகள் முதல் கட்டமாக ஜனாப் ஷாஹீன் ரீசா அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டதுடன், பாடசாலை மைதானத்தின் சில குறைபாடுகள் குறித்து EFC யின் தலைவர் திரு இம்ரான் அவர்களினால் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் ஷாஹீன் ரீசா அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

மைதானத்தின் தற்போதைய குறைபாடுகளை கேட்டறிந்துகொண்ட பிரதேச சபை உறுப்பினர், அவற்றுக்கு தேவையான நடவடிக்கைகளை முதல் கட்டமாக தாம் செய்து தருவதாக தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் புத்தளம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜனாப் சதக்கத்துல்லா ரிஜாஜ், ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தரும், வட மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினருமான ஜனாப் M.S.நாசர், ஓய்வுபெற்ற ஆசிரியர் நஜீம், EFC அணியின் பயிற்றுவிப்பாளர், EFC நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாகவில்லு கிளை உறுப்பினர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

சிறுபோக நெல் கொள்வனவு இன்றுமுதல்!

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு இன்றுமுதல் (03) ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாட்டரிசி நெல் 1கிலோகிராம் 120 ரூபாவிற்கும் சம்பா நெல் 1 கிலோகிராம் 125 ரூபாவிற்கும் கீரிசம்பா நெல் 1 கிலோகிராம் 132 ரூபாவிற்கும் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்தார்.

இதற்காக கடந்த வரவு செலவுத் திட்டத்தில் 06 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நெல் அறுவடை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை குறிப்பிட்டுள்ளது.

முதற்கட்டமாக இந்த மாவட்டங்களுக்கான நெற்கொள்வனவை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கிளிநொச்சியிலுள்ள வடமாகாணத்திற்குரிய நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சிய சாலை துப்பரவு பணியில் உத்தியோகத்தர்கள் தீவிரமாக ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் வயல் அறுவடை விழா

விவசாயிகளிடத்தே நெற்ச்செய்கையில் நவீன தொழில்நுட்பத்தை வழங்கி நெல் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் வடமாகாண விவசாயத்திணைக்களம் மேற்கொண்டு வருகின்ற வயல் அறுவடை விழா கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் நேற்று நடைபெற்றது.

நெல் விதைப்பு நவீன முறையான பரசூட் முறையில் விதைக்கப்பட்ட AT 307 என்ற வெள்ளை நெல் அறுவடை விழா நடைபெற்றது.

பாடவிதான உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண மேலதிக விவசாயப்பணிப்பாளர் தட்சணாமூர்த்தி யோகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட விவசாயப்பணிப்பாளர் வி.சோதிலட்சுமி, பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.

கல்பிட்டியில் சிக்கிய கடத்தல் பொருட்கள்!

0

கடற்படையினர் கடந்த 2025 ஜூலை 01 அன்று, கல்பிட்டி, ஏத்தாலை களப்பு பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வர முயன்ற (979) கிலோகிராம் உலர் இஞ்சியை ஏற்றி வந்த(03) மூன்று டிங்கிகளுடன் சந்தேகநபர்கள் (03) மூவரும் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

கடல் வழிகள் ஊடாக கடத்தல் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்க்கரைகளை உள்ளடக்கி கடற்படை வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஐய நிறுவனத்தினால் கல்பிட்டி ஏத்தாலை களப்பு பிரதேசத்தில் கடந்த 2025 ஜூலை 01 ஆம் திகதி மாலை மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான 03 டிங்கி படகுகள் சோதனையிடப்பட்டது.

அங்கு டிங்கி படகுகளில், சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட் (33) பைகளில் பொதிச்செய்திருந்த தொள்ளாயிரத்து எழுபத்தொன்பது (979) கிலோகிராம் உலர் இஞ்சிகளுடன் மூன்று (03) சந்தேகநபர்கள் கடற்படையினரால் இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.

மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள் 25 முதல் 41 வயதுக்குட்பட்ட கல்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், மூன்று சந்தேக நபர்கள், மூன்று டிங்கி படகுகள் மற்றும் உலர்ந்த இஞ்சியை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வென்னப்புவில் சிக்கிய 900 கிலோ கேரள கஞ்சா!

0

வென்னப்புவவில் 202 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இலங்கை கடலோர காவல்படை, இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்துடன் இணைந்து, வென்னப்புவ போலவத்த பகுதியில் நேற்று (2) விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. 

இதன்போது, 900 கிலோகிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சா, இரண்டு வெளிநாட்டு கைத்துப்பாக்கிகள், 4 மகசின்கள், 40 தோட்டாக்கள் ஆகியவற்றை ஏற்றிச்சென்ற ஒரு கெப் மற்றும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கார் ஒன்றுடன் சந்தேகநபர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

அதன்படி, இலங்கை கடலோர காவல்படைக்கு கிடைத்த நம்பகமான இரகசிய தகவலின் அடிப்படையில், வென்னப்புவ, போலவத்த பகுதியில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, அந்த பகுதி வழியாக பயணித்த சந்தேகத்திற்கிடமான ஒரு கெப் வாகனத்தை சோதனை செய்த போதே மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். 

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 44 முதல் 51 வயதுக்குட்பட்ட உலுக்குளம், போத்தானேகம மற்றும் அனுராதபுரம், இஹலகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். 

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா, கைத்துப்பாக்கிகள், மகசின்கள் மற்றும் தோட்டாக்கள், போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் ஆகியவற்றுடன் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.