Thursday, June 25, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 192

பெருமளவு கேரள கஞ்சாவுடன் சிக்கிய குடும்ப பெண்!

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இன்றைய தினம் (30.06.2025) மயில்வாகனபுரம் கொழுந்துப்பிலவு பகுதியில் வீடொன்றின் பின்புறமாக மறைத்து வைத்திருக்கப்பட்டிருந்த 79 கிலோ 245 கிராம் நிறை கொண்ட கேரளா கஞ்சாவினை தர்மபுரம் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

வீட்டு உரிமையாளரான 55 வயதுடைய குடும்ப பெண் ஒருவரும் பொலிசாரால் குறித்த சோதனை நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான விசுவமடு கொழுந்து புலவு பகுதியை சேர்ந்தவர் 55 வயதுடைய பெண் ஒருவர் மற்றும் தடையப் பொருட்கள் நாளைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதி மன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி D.M.S.J. திஸ்ஷநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த கேரள கஞ்சாவானது இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணி!

0

“பாலஸ்தீனத்துக்கு சுதந்திரம் – யுத்தத்தை நிறுத்து” என்ற கருப்பொருளை வலியுறுத்தி, சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் பாலஸ்தீன ஐக்கிய மக்கள் இயக்கம் ஆகியன இணைந்து கொழும்பில் இன்று (30) ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை முன்னெடுத்தன. 

பெருந்திரளான மக்களின் பங்கேற்பில் கொழும்பு கொம்பனித் தெருவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணி இஸ்ரேல், அமெரிக்காவுக்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணியாக அமைந்தது. 

கொழும்பு 3, கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கிச் சென்ற இப்பேரணியினர், “கொல்லாதே கொல்லாதே குழந்தைகளை கொல்லாதே”, “இனப்படுகொலையை நிறுத்து” என கோஷமிட்டும் பதாதைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.  

பாலஸ்தீனில் இடம்பெற்றுவரும் இன அழிப்பில் இதுவரை 55ஆயிரத்திற்கும் அதிகளவான அப்பாவி பொது மக்கள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பூனாகலயில் 51 குடும்பங்களுக்கு வீடுகள்!

0

பூனாகல, கபரகல தோட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை வழங்கும் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பம்.

2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பூனாகல, கபரகல பகுதியில் வீடுகளை இழந்தவர்களுக்காக பூனாகலவில் கட்டப்படும் புதிய வீட்டுத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த (28) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஹல்தும்முல்ல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பூனாகல, கபரகல பகுதியில் நிலச்சரிவு காரணமாக வீடுகளை இழந்த 51 குடும்பங்களுக்கு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு ஆகியவற்றின் ஏற்பாடுகளின் கீழ் இந்த வீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மீண்டும் சாம்பியனான அஜித்குமார் அணி!

0

பெல்ஜியமில் நடந்த ஜிடி3 சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் அஜித்குமார் ரேஸிங் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித், தற்போது கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். குட் பேட் அக்லி பட வெற்றிக்குப் பிறகு, இன்னும் சில மாதங்களுக்கு கார் ரேஸில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாகவும், சினிமாவில் இருந்து தற்காலிமாக விலகுவதாகவும் அஜித் கூறியிருந்தார்.

இதையடுத்து, மொட்டை அடித்தது போன்ற புது கெட்டப்பில் இருக்கும் அஜித், கார் ரேஸில் மும்முரம் காட்டி வருகிறார். அவரது போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், பெல்ஜியமில் நடந்த கிரவுட் ஸ்டிரைக் ஸ்பா ஜிடி3 சாம்பியன்ஷிப் போட்டியின் ப்ரோ ஏ.எம். பிரிவில் அஜித்குமார் கார் ரேஸ் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

இது குறித்து அஜித் குமார் ரேஸ் அணி வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், ‘எங்கள் அணியின் பேபியன், மேதியூ அடங்கிய குழுவினர், மிகவும் கடினமான போட்டியில் முதலிடம் பிடித்துள்ளனர். அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்,’ என்று குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே, துபாயில் நடந்த ரேஸில் அஜித்தின் ‘அஜித்குமார் ரேஸிங்’ அணி 3வது இடம் பிடித்து சாதித்தது. இத்தாலி மற்றும் பெல்ஜியத்தில் நடந்த போட்டிகளிலும் பரிசுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

வடக்கில் சிக்கிய பெருமளவிலான கேரள கஞ்சா!

0

யாழ்ப்பாணம் காரைநகர் கோவிலான் பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் கடந்த (2025 ஜூன் 27) அதிகாலை இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ரூபா 47 மில்லியனுக்கும் அதிகமான சுமார் இருநூற்று ஒன்பது (209) கிலோகிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற மூன்று (03) சந்தேக நபர்களும், ஒரு டிங்கி (01) படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

அதன்படி, காரைநகர் கோவிலன் பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் எலாராவுக்குச் சொந்தமான கப்பல்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறிப்பிட்ட கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று பயணித்து வருவது கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அங்கு, ஆறு (06) பைகளில் எழுபத்து மூன்று (73) பொதிகளில் பொதிச்செய்யப்பட்டிருந்த சுமார் இருநூற்று ஒன்பது (209) கிலோகிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவுடன், மூன்று (03) சந்தேக நபர்களையும் (01) டிங்கி படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு நாற்பத்து ஏழு மில்லியன் (47) ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள் 26 முதல் 43 வயதுக்குட்பட்ட குருநகர் மற்றும் அனலைத்தீவு பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

சந்தேக நபர்கள், கேரள கஞ்சா பொதிகள் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

திடுக்கிடும் தகவல் வெளியிட்ட அர்ச்சுனா எம்.பி!

0

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பாக இன்று (30) பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

என்னை நீக்க வழக்கு தொடரப்பட்டுள்ளது. நான் அதை நீதிமன்றத்தில் கொண்டு செல்வேன். ஆனால் எனக்கு பயமாக இருக்கிறது. அந்த கொள்கலன்கள் 323க்குள் என்ன இருந்தது என்பதற்கான பட்டியலை நான் உங்களுக்கு வழங்க முடியும். அது எங்கே போனது, எந்த நாட்டிலிருந்து வந்தது? ஆனால் அவர்கள் என்னை எம்.பி. இருக்கையிலிருந்து நீக்க மாட்டார்கள் என்பதை எனக்கு நிரூபிக்கச் சொல்லுங்கள். அதை நான் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பேன்.

இல்லையெனில், நான் வேறு நாட்டிற்கு சென்று அதை வெளியிடுவேன். அந்த 320க்குள் என்ன இருந்தது என்பதை நான் பயமின்றி கூறுவேன். முழு விவரங்களையும் என்னால் உங்களுக்குச் சொல்ல முடியும், ஆனால் எனக்கு பயமாக இருக்கிறது. ஆனால் நான் கொல்லப்படுவேன் என்று பயப்படவில்லை. அவர்கள் என்னை மீண்டும் மீண்டும் தேவையற்ற வழக்குகளில் இழுக்கிறார்கள்.

இப்போது அவர்களிடம் பொலிஸின் அதிகாரம் உள்ளது. இப்போது அவர்கள் என்னை எம்.பி. பதவியிலிருந்து அகற்றுவதன் மூலம் உண்மை வெளிவருவதைத் தடுக்க முயற்சிக்கிறார்கள். என தெரிவித்துள்ளார்.

கோர விபத்தில் பற்றி எறிந்த வேன்!

பூநகரி மன்னார் வீதியின் பூநகரி தம்பிராய் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கி சென்றுகொண்டிருந்த ஹய்யஸ் வேன் ஒன்று பூநகரி தம்பிராய் பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிளிலுடன் மோதிய குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகளும் வீதியை கடக்க முற்பட்ட போது எதிரே வந்த வேன் விபத்தை தவிர்ப்பதற்கு வீதியின் மற்ற திசைக்கு திருப்பிய போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் முழுமையாக தீப்பற்றி எரிந்தது.

மோட்டார் சைக்கிள் தீப்பற்றியதில் ஹய்யஸ் வேனும் தீப்பற்றிக்கொண்டது.

விபதுக்குள்ளான குறித்த மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் பயணித்த நிலையில், எரி காயங்களுக்குள்ளானவர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு சிறுமிகள் இரண்டு பெண்கள் ஒரு ஆண் உட்பட ஐந்து பேர் பூநகரி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக பூநகரி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தை ஏற்படுத்திய ஹயஸ் வேன் வாகனத்தின் சாரதி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பரிதாபமாக உயிரிழந்த மீனவர்!

நாகர்கோவில் கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவில் கடற் பகுதியில் நேற்று (29)அதிகாலை இடம் பெற்ற படகு விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்து உள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

நேற்று அதிகாலை ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவில் கடற் பகுதியில் படகுகளை கழுவிக் கொண்டிருந்த வேளை அலையின் சீற்றத்தில் சிக்குண்ட படகு குறித்த மீனவருக்கு மேல் கவிழ்ந்ததில் பலத்த காயமடைந்த மீனவர் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நபர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மருதங்கேணி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று சர்வதேச சமூக வலைத்தள தினம்!

0

தொடர்பாடலும் தகவல் பரிமாற்றத்துக்குமான ஒரு பெரிய புரட்சி சமூக வலைத்தளங்களால் உருவாகியுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜூன் 30 அன்று சமூக வலைத்தள தினம் (Social Media Day) கொண்டாடப்படுகிறது. இந்த நாள் சமூக வலைத்தளங்களின் தாக்கம் மற்றும் அதன் பயன்களை நினைவூட்டும் வகையில் உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாகக் கருதப்படுகிறது. 

சமூக வலைத்தளங்கள் என்றால் என்ன? 

சமூக வலைத்தளங்கள் என்பது, இணையத்தின் மூலம் உலக மக்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளும், தகவல்களைப் பகிரும், கருத்துகள் பரிமாறும் தளங்கள் ஆகும். இவற்றில் உதாரணமாக Facebook, X, Instagram, YouTube, LinkedIn, TikTok ஆகியவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம். 

சமூக வலைத்தளங்களின் சிறப்புகள்: 

உலகம் ஒரு கிராமமாகும்: சமூக வலைத்தளங்கள் மூலம் எங்கு இருந்தாலும் நம்மை விரைவாக மற்றவருடன் இணைக்க முடிகிறது. அறிவுத் தரவுகள் பரிமாற்றம்: கல்வி, செய்தி, தொழில், ஆராய்ச்சி போன்ற துறைகளில் தகவல்களை விரைவில் பகிர முடிகிறது. 

தொழில் வளர்ச்சிக்கு உதவுகிறது: நிறுவனங்கள், சிறு தொழில்கள், உற்பத்தியாளர்கள் தங்களது சேவைகள், பொருட்களை விளம்பரப்படுத்த சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர். 

படைப்பாற்றலுக்கு மேடை: நகைச்சுவை, பாடல், நடனம், ஓவியம் போன்ற கலைகளை பகிர அனைத்து மக்களுக்கும் வாய்ப்பு வழங்குகிறது. 

பாதகப்பாடுகளும் உள்ளன: 

தவறான தகவல்கள் பரவல்: உண்மைதான் என நினைத்து சிலர் தவறான தகவல்களை பகிர்வதால் சமூகம் பாதிக்கப்படுகிறது. மேலும் படிப்பு, வேலை, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றில் கவனம் சிதறுகிறது. 

துன்புறுத்தல், தனிமை: 

சிலர் சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துகள், விமர்சனங்கள் மூலம் பிறரை மனவளமாக பாதிக்கின்றனர். 

தீர்வுகள் மற்றும் விழிப்புணர்வு: 

சமூக வலைத்தளங்களை பொறுப்புடன் பயன்படுத்துதல். 
உண்மைத் தகவல்களை மட்டுமே பகிர்தல். 
தனிப்பட்ட விவரங்களை பகிர வேண்டாம். 

குழந்தைகள், இளைஞர்கள் சமூக வலைத்தளங்களை சரியான முறையில் பயன்படுத்த பெற்றோர் வழிகாட்ட வேண்டும். 

இன்று, சமூக ஊடகங்கள் மனித சித்தாந்தங்களை உருவாக்கி சிதைக்கும் ஒரு கருவியாக மாறிவிட்டது, மேலும் அவை மிகுந்த எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும். 

இணையத்தின் வளர்ச்சியுடன் சமூக வலைத்தளங்களும் நாளடைவில் மேலும் முக்கிய இடத்தைப் பெறப்போகின்றன. அதனால், நாம் இதை பொறுப்புடன், நல்ல நோக்கத்தில் பயன்படுத்துவதுதான் எதிர்காலத்திற்கு அவசியம். சமூக வலைத்தள தினம் என்பது, நம்மை தொடர்புறுத்தும் தொழில்நுட்பங்களை கொண்டாடும் நாளே அல்லாமல், அவற்றை எப்படி நன்மைக்கு பயன்படுத்தலாம் என்பதை நினைவூட்டும் நாளாகவும் அமைகிறது. இந்த நாளில் நாம் அனைவரும் சமூக வலைத்தளங்களை எதிர்மறை பாதிப்பின்றி, விழிப்புணர்வுடன் பயன்படுத்த உறுதி எடுத்துக்கொள்வோம். 

இதேவேளை, நாட்டில் சமூக ஊடகங்களின் பயன்பாடு குறித்து களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் விஜயானந்த ரூபசிங்க, கீழ்வருமாறு தெரிவித்தார். 

“எந்தவொரு நாட்டிலும் பலர் சமூக ஊடகங்களைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களைக் கொண்டுள்ளனர். ஆனால் அந்த எதிர்மறையான கருத்துக்களுக்குக் காரணம் ஊடகங்களின் பயன்பாடு குறித்த தவறான புரிதல்கள் என்று நான் நினைக்கிறேன். முதலில், இதன் முக்கியத்துவம் என்பது இதை ஒரு புதிய ஊடகமாகப் பயன்படுத்துவதில்தான் உள்ளது. சுமார் 20 முதல் 25 வருடங்களுக்கு பின்பு உலகில் வளர்ந்த ஒரு ஊடகம். ஆனால் அது ஊடகங்களில் பெரிய மாற்றத்திற்கு உள்ளான ஒரு துறை. இன்றைய சமூகம் சமூக ஊடகங்கள் இல்லாமல் இருக்க முடியாது.” 

தொடர்ந்து கருத்து வௌியிட்ட சிரேஷ்ட விரிவுரையாளர் விஜயானந்த ரூபசிங்க, நாட்டின் மக்கள் தொகையில் 53% பேர் தற்போது சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர் என்றார். 

இது சுமார் 12 மில்லியன் என்று அவர் குறிப்பிட்டார், மேலும் சமீபத்திய தரவுகளுக்கு அமைவாக 2025 ஆம் ஆண்டுக்குள் டிக்டோக் பயன்பாடு சுமார் 30% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். 

ஏனைய சமூக ஊடகங்களுடன் ஒப்பிடும்போது அளவில் சிறியதாக இருந்தாலும், டிக்டோக் வேகமாக வளர்ந்து வரும் சமூக ஊடகமாகும் என்று விஜயானந்த ரூபசிங்க கூறினார். இலங்கையில் டிஜிட்டல் ஊடகங்கள் எழுத்தறிவை வளர்ப்பதில் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

புத்தகங்களின் விலை சடுதியாக உயர்வு!

0

பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி விதிக்கப்பட்டதால் அச்சிடப்பட்ட புத்தகத்தின் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கத்தின் வருடாந்திர ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றும் போதே இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்தீவர இந்தக் கருத்தை வெளியிட்டார். 

ஒரு புத்தகத்தின் விலை 20% அதாவது ஐந்தில் ஒரு பங்கு அதிகரித்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் குழம்பியுள்ளனர். முன்பு, எழுதுபொருள் உட்பட அனைத்திற்கும் VAT வரி விகிதம் 15% ஆக இருந்தது. ஆனால் அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு VAT வரி இல்லை. அதற்குதான் நேரடியாக 0 – 18%ஆக அறவிடப்பட்டது. எழுதுபொருட்களுக்கு 3%ஆக மட்டுமே இருந்தது. அவர்கள் இந்த இரண்டு விடயங்களால் குழம்பிப் போயுள்ளனர். சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, ஜனாதிபதி செயலகத்திலிருந்து எங்களுக்கு ஒரு கடிதம் வந்தது, அதில் அவர்கள் VAT வரி தொடர்பாக சில விடயங்களை ஆராய்ந்து வருவதாகவும், பின்னர் ஒரு பதிலை வழங்குவதாகவும் தெரிவித்தனர். 

தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கத்தின் புரவலர் காமினி மொரகொடவும் இது குறித்து ஊடகங்களுக்கு தனது கருத்துக்களை தெரிவித்தார். 

உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு எங்கள் புத்தகங்களுக்கு VAT வரி அறவிடப்படுகிறது. இலங்கையில் 75 ஆண்டுகளாக நடைமுறையில் இல்லாத VAT வரி, ஜனவரி 2024 முதல் விதிக்கப்பட்டதால் புத்தக விற்பனை அழிவடைந்து வருகிறது. இது தொடருமாக இருந்தால் ஒரு பிள்ளைக்கு புத்தகம் கூட வாங்க முடியாது.