Thursday, June 25, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 194

22 பல்கலைக்ககழக மாணவர்களுக்கு வகுப்பு தடை!

0

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 22 மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிப்பதற்கு பல்கலைக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

பகிடிவதை செய்த சம்பவத்தின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 

புதிய மாணவ குழுவிற்கு கொடூரமாக பகிடிவதை செய்த வீடியோ சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது. 

இந்த விடயம் தொடர்பான ஆரம்ப விசாரணைகளை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மூன்றாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொறியியல் பீடங்களைச் சேர்ந்த 22 மாணவர்களுக்கே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பகிடிவதை செய்த சம்பவம் குறித்து பொலிஸாரும் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கிடையில், பகிடிவதை உட்பட அனைத்து வகையான துன்புறுத்தல்களையும் தடுப்பதற்காக செயலணி ஒன்றை நியமிக்க கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ நடவடிக்கை எடுத்துள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து புதிய அப்டேட்!

0

நாட்டினுள் எந்தவொரு எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது. 

இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருள் முன்பதிவுகள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார். 

“மக்களுக்கு சொல்ல விரும்புவது, எந்த பிரச்சனையும் இல்லாமல் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருளை நாங்கள் முன்பதிவுகள் செய்துள்ளோம். அந்த முன்பதிவுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. 

இந்த நாட்டில் எந்த காரணத்தினாலும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. பிரச்சனை என்னவென்றால், எரிபொருள் எந்த இடங்களிலிருந்து வருகிறது என்பதுதான். அதற்கு பிறகு, போரின் தாக்கம் இருக்கிறதா என்பதை நாம் பார்க்க வேண்டும்.” என்றார். 

அத்துடன் தற்போதைய நிலைமையில், சட்டவிரோதமாக எரிபொருள் கையிருப்பு வைப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜே. ராஜகருணா மேலும் தெரிவித்தார். 

“எங்களிடம் உள்ள அறிக்கைகளின்படி, ஒக்டேன் 92 பெற்றோல் பெருமளவு இறக்குமதி செய்யப்படுவது போர் நடக்கும் பிராந்தியத்திலிருந்து அல்ல. அந்த எரிபொருள் மலேசியா, சிங்கப்பூர், இந்தியாவில் இருந்து வருகிறது. 

ஒரே ஒரு இறக்குமதி ஓமானிலிருந்து செய்யப்பட்டது. அதுவும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டாலும் எங்களுக்கு பிரச்சனை இல்லை. நாங்கள் அந்த விநியோகஸ்தர்களிடம் பேசி, அதை முழுமையாக உறுதி செய்துள்ளோம். டீசல் விடயத்திலும் அப்படித்தான். எந்த சிக்கலும் இல்லை” என்றார்.

இணையும் ஹக்கீம் – முஷாரப்!

0

அகில இலங்கை மக்கள் காங்கிரசின், முன்னாள் பாராளமன்ற உறுப்பினரும் தற்போது பொத்துவில் பிரதேச சபை உறுப்பினருமான SMM. முஷர்ரப் அவர்களும் அவர்களுடைய பொத்துவில் பிரதேச சபையின் எழு (07) உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடைய முக்கியஸ்தர்களும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுடன் நாளை இணைவதாக அக்கட்சியின் மாவட்ட செயற்குழு செயலாளர் சமால்டீன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்க முஸ்லீம் காங்கிரஸின் தேசியத் தலைவர் அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் ( MP) அவர்களின் முன்னிலையில் நாளை (25) காலை 9.30 மணியளவில் மாளிகைக்காடு பிரதான வீதியில் அமைத்துள்ள வாவா திருமண மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெறும் என அவர் அறிவித்துள்ளார்.

இந் நிகழ்வில் பாராளமன்ற உறுப்பினர்கள், முன்னால் பாராளமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் உச்சபீட உறுப்பினர்கள் அத்தோடு அம்பாறை மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,தேர்தலில் போட்டியிட்ட , பட்டியல் வேட்பாளர்கள்,மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள்

சிங்கள இளைஞர்களும் ஆறுகளில் பிணமாக மிதந்தார்கள்!

கிளிநொச்சி மாவட்டத்தின் மீன்வள அபிவிருத்தி தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கடற்றொழில் பிரதியமைச்சர் ரத்ன கமகே தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்கள் மீன் பிடித்துறைக்கு முன்னுரிமை அளிக்கின்ற மாவட்டங்கள் எனவும், இதில் மன்னார் மாவட்டம் நூற்றுக்கு நாற்பது வீதம் மீன் பிடி தொழிலையே பிரதானமாகக் கொண்டுள்ளது எனவும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில்,

கடந்த காலத்தில் கடடற்றொழிலாளர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் கடற்றொழிலாளர்களை பகடைக்காய்களாக மாத்திரமே பயன்படுத்தினர். நிரந்தர ஓய்வூதியம் கூட பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

சட்டவிரோத கடற்தொழிலை தடுத்தல் அதில் ஈடுபடும் மீனவர்களை தெளிவூட்ட வேண்டும். இந்திய மீனவர்களின் வருகையையும் இதன் ஊடாக தெளிவு படுத்த வேண்டியுள்ளது. இந்தியாவுக்கும் எடுத்து சொல்ல வேண்டியுள்ளது.

எதிர்வரும் ஜுலை மாதத்திலிருந்து மீனவர்களின் பங்களிப்புக்கு ஏற்ப ஓய்வூதியத்தையும் அதிகரிக்கவுளள்ளோம். மீனவ பெண்களின் வாழ்வாதாரத்தையும் அதிகரிக்க பெண்கள் அமைப்புக்களுக்கு ஊக்குவிக்கவுள்ளோம். கூட்டுறவு சங்கங்களையும் பலப்படுத்தவுள்ளோம்.

யாழ்ப்பாணம் வரும் மனித உரிமை ஆணையாளரை வரவேற்கின்றோம். உலகில் எங்கையாவது மனித உரிமை மீறப்பட்டிருந்தால் அது தடுக்கப்படவேண்டும். மனித உரிமை மீறலில் ஈடுபபடுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படவேண்டும்.

உலகத்தில் இன்று மனித உரிமையை மீறுகின்றவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். நாங்கள் சொல்லுகின்றோம் மக்களுக்கு யுத்தம் முடிந்து 17வருடங்கள் ஆகின்றது. நாங்கள் சொல்கின்றோம் இனியும் இப்படியான யுத்தம் ஏற்படக்கூடாது. இனிமேலும் இசைப்பிரியாக்கள், கிருசாந்திகள், கோணேஸ்வரிகள் உருவாகக்கூடாது.

மனித உரிமை மீறல்கள் என்பது வடக்கில் மாத்திரம் இல்லை, தமிழ் இளைஞர்களுக்கு மாத்திரம் அல்ல, ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்களும் இதே விதத்தில் அடித்து நொருக்கி ஆறுகளில் பிணங்கள் மிதந்த வரலாறு உள்ளது.

இந்த விடயத்தை மீள மீள பேசி எங்களுடைய உறவை பிரிக்கின்ற நடவடிக்கையாக எங்களுக்கு இது தேவையா? ஆனால் நாங்கள் சொல்கின்றோம் செம்மணியில் புதையுண்டவர்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படவேண்டும். இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் உருவாகாத சமூதாயத்தை உருவாக்க வேண்டும். அதனையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செய்கின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகள், கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

நாளை கொழும்பில் இலத்திரணியல் ஒலிபரப்பு மாநாடு!

0

நாளை (25) கொழும்பில் நடைபெறும் இலத்திரணியல் ஒலிபரப்பு மாநாடு (Broadcasting Symposium)

இலங்கை இலத்திரணியல் ஒலிபரப்பாளர்களின் சங்கமும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இலத்திரணியல் ஒலிபரப்பு மாநாடு (Broadcasting Symposium) நாளை (25) கொழும்பில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் என்.ஏ.கே.எல். விஜேநாயக்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (23) நடைபெற்ற, இலத்திரணியல் ஒலிபரப்பாளர்களின் மாநாடு குறித்து ஊடகங்களைத் தெளிவூட்டும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலத்திரணியல் ஒலிபரப்பில் தற்போதைய சவால்கள் மற்றும் புதிய போக்குகள், புதிய ஊடகங்களின் வருகையுடன் ஊடகத் துறையில் எழுந்துள்ள சவால்கள் மற்றும் ஊடகக் கொள்கைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் இலங்கையை ஒலிபரப்புக்கான மையமாக மாற்றுவதே இதன் நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஈரானுடன் சமாதான பேச்சு-காஸாவில் சுட்டுக்கொலை!

0

இஸ்ரேல், ஈரான் போர் உலகின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ள நிலையில் மறுபுறம் காஸா மக்கள் மீதான இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

உணவுக்காக தவித்துக்கொண்டிருக்கும் அப்பாவி காஸா மக்கள் மீது தினமும் இஸ்ரேல் வன்முறைகளில் ஈடுபட்டு கொலைசெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதாபிமான உதவிகளுக்காக காத்திருந்த அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் சுமார் 50 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதாரப் பணியாளர்கள் தெரிவித்துள்ளதாக அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

காசாவில் மனிதாபிமான உதவிகள் இடம்பெறும் மையங்களுக்கு அருகில் நேற்று அதிகாலை முதல் இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் வரை கொல்லப்பட்டதாகவும், ஏனைய பகுதிகளில் 21 பேர் கொல்லப்பட்டதாகவும் காசா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

மத்திய காசாவில் சலா அல்-தின் தெருவில் நடந்த ஒரு சம்பவத்தில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்ததாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 140 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் 62 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேலிடையே கட்டாய போர் நிறுத்தம் பற்றி பேசிவரும் சில மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அமெரிக்கா, காஸா போர் நிறுத்தம் பற்றி எதுவும் வாய் திறக்காமல் இருப்பது ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் பிரதேச சபை மயில் கட்சி வசம்!

0

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (24) காலை 8.30 மணியளவில்  வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.

இதன் போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில்,  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி  உறுப்பினர் கிறிஸ்ரி றெவல் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரான் ஆகியோரது பெயர்கள் முன் மொழியப்பட்டது.

இதன் போது சபையில் உள்ள 22 உறுப்பினர்களும் பகிரங்க வாக்கெடுப்பை கோரியிருந்தனர்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர் கிறிஸ்ரி றெவல் ஆதரவாக 09 வாக்குகளும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரான் அவர்களுக்கு ஆதரவாக 13 வாக்குகளும் அழிக்கப்பட்ட நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரான் மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

அவருக்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தேசிய மக்கள் சக்தியும் ஆதரவு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் உப தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.

இதன் போது உப தவிசாளர் தெரிவிற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் றொயிட்டன் சாந்தினி குரூஸ் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் இஸ்மாயில் முஹம்மது இஸ்ஸதீன் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டது. இதன் போது 22 உறுப்பினர்களும் பகிரங்க வாக்கெடுப்பை கோரியிருந்தனர்.

இதன் போது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் றொயிட்டன் சாந்தினி குரூஸ் அவர்களுக்கு 15 வாக்குகளும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் இஸ்மாயில் முஹம்மது இஸ்ஸதீனுக்கு 07 வாக்குகளும் அழிக்கப்பட்ட நிலையில், மன்னார் பிரதேச சபையின் உப தவிசாளராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் றொயிட்டன் சாந்தினி குரூஸ் தெரிவு செய்யப்பட்டார்.

இவருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி, அகில இலங்கை தமிழ்  காங்கிரஸ், சுயேட்சைக்குழு ஆகியவற்றின் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் – ஈரான் போர் முடிவுக்கு வந்ததா?

இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் அமலுக்கு வந்துள்ளதாகவும் அதை தயவுசெய்து மீறவேண்டாம் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது நேற்று இரவு ஈரான் பல ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. 

அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது. 

இருப்பினும் ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக கட்டாரும், அமெரிக்காவும் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நடந்து வந்தது. 

இந்த நிலையில், இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர்நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்திருக்கிறார். இருப்பினும், இருநாடுகளுக்கு இடையே எந்த போர் நிறுத்தமும் இல்லை என ஈரான் தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில், 12 நாள்கள் தொடர்ந்து இடைவிடாமல் நடைபெற்றுவந்த இஸ்ரேல் உடனான போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சண்டை நிறுத்தத்தை ஈரான் அறிவித்திருப்பதாகவும், இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனாட் டிரம்ப் ட்ரூத் சோசியல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “இப்போது முதல் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துவிட்டது. தயவுசெய்து அதை மீறாதீர்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

இருப்பினும் ஈரான் இன்னும் அதிகாரபூர்வமாக தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!

ஈரான், தனது அணு உலை வசதிகள் மீது அமெரிக்கா நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதல்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கும் என எச்சரித்துள்ளது. 

ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுடனான தொலைபேசி உரையாடலில், நேற்று நடந்த இந்தத் தாக்குதல்களை சர்வதேச குற்றமாக குறிப்பிட்டுள்ளதாக ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அமைதி காலத்தில், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில், ஒரு நாட்டின் அணு உலை வசதிகளைத் தாக்குவது சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும், அமைதி மற்றும் உரையாடலை விரும்புவதாகக் கூறப்படும் உரிமைகோரல்களின் வெறுமையை அம்பலப்படுத்துவதாகவும் பெசெஷ்கியான் வலியுறுத்தியுள்ளார். 

ஈரான் தனது அணு உலை திறனை பூஜ்ஜியமாகக் குறைக்காது என்றும், ஆக்கிரமிப்புக்கு பதிலடியாக ஈரானின் ஆரம்பத் தாக்குதல் மிகக் கடுமையாக இருக்கும் என்றும் மக்ரோனிடம் எச்சரித்தார். 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பிற உலகத் தலைவர்களுடனான உரையாடல்களிலும், அணு உலை வசதிகளை இலக்கு வைப்பது சட்டவிரோதமானது என்று பெசெஷ்கியான் மீண்டும் கூறியுள்ளார்.

இதேவேளை ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை கண்டித்து உலகின் பல நாடுகளில் அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக டோக்கியோ, ஏதென்ஸ், மணிலா, கராச்சி, நியூயார்க், டொரொன்டோ ஆகிய உலகின் மிக முக்கிய நகரங்களில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடெம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தூக்கிலிடப்பட்ட மொசாட் உளவாளி!

0

ஈரானின் மத்திய நகரமான இஸ்ஃபஹானில், இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்புக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் மஜித் மொசய்யேபி என்ற நபர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிலிடப்பட்டார்.

இஸ்லாமிய புரட்சி நீதிமன்றம், மஜித் மொசய்யேபியை “கடவுளுக்கு எதிராக போர் தொடுத்தல்” (முஹாரேபா) மற்றும் எதிரிகளுடன் ஒத்துழைத்து உளவு பார்த்ததற்காக “பூமியில் ஊழல்” செய்த குற்றங்களுக்காக தண்டித்தது.

பாரசீக வளைகுடா நாடு ஒன்றில் டேவிட் என்ற பெயரில் அறியப்பட்ட மொசாட் முகவருடன் தொடர்பில் இருந்த இவர், வாரந்தோறும் அறிக்கைகளை அளித்து வந்தார்.

ஈரானின் முக்கியமான இடங்கள் மற்றும் குறிப்பிட்ட நபர்கள் பற்றிய ரகசிய தகவல்களை கிரிப்டோகரன்சி பணம் பெறுவதற்கு ஈடாக மொசாட்டுக்கு வழங்கும் பணியை மொசய்யேபி மேற்கொண்டார்.

கடந்த ஜூன் 13 அன்று இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் போர் தொடங்கிய பின்னர், எதிரிகளுக்கு சேவை செய்ததாக ஈரான் பாதுகாப்பு படைகள் ஏராளமானவர்களை கைது செய்தனர்.

ஈரானின் நீதித்துறை தலைவர் கோலாம் ஹொசைன் மொஹ்சேனி எஜெய், உளவு வழக்குகளை உடனடியாக விசாரித்து, நீண்ட நிர்வாக தாமதங்களை தவிர்க்குமாறு நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.