Friday, November 7, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 195

COPE இலிருந்து அதிரடியாக விலகிய 8 எம்.பி.க்கள்

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எம்.பி. சரித்த ஹேரத், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. இராசமாணிக்கம் சாணக்கியன், ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்களான எஸ்.எம். மரிக்கார், ஹேஷா விதானகே, நளின் பண்டார உள்ளிட்டோர், அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான, (CoPE) கோப் குழுவில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

கோப் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கடந்த மார்ச் 07ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டிருந்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது ஒவ்வொருவராக இராஜினாமா செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ X கணக்கில் பதிவிட்டுள்ள சரித்த ஹேரத், குறித்த முடிவை உத்தியோகபூர்வமாக சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எஸ்.எம். மரிக்கார் எம்.பி தனது இராஜினாமா குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் இடுகையொன்றை இட்டுள்ளார்.

அதில் குறிப்பிட்டுள்ள அவர்,

இலங்கையின் அரச நிறுவனங்களில் இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை மற்றும் குழுவின் தலைவர் பதவிக்கு பொருத்தமற்ற ஒருவரை நியமித்தமை போன்ற காரணங்களால், எதிர்காலத்தில் ஊழல் மோசடிகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில் நம்பிக்கை வைக்க முடியாது என்பதால், இன்று முதல் கோப் குழுவிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. இராசமாணிக்கம் சாணக்கியன் தனது இராஜினாமா குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று நான் கோப் குழுவில் இருந்து இராஜினாமா செய்தேன், ஏனெனில் அது அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அல்ல, மாறாக அது ரோஹித அபேகுணவர்தனவை தலைவராக கொண்ட மொட்டு எண்டர்பிரைஸ் குழுவாகும்.

தமது இராஜினாமா குறித்து, பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, ஹேஷா விதானகே, நளின் பண்டார,  இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் இணைந்து கூட்டாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் முன்னெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், நேற்றையதினம் (18) ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன விலகிய நிலையில், இன்றையதினம் விலகிய தயாசிறி ஜயசேகர, சரித்த ஹேரத், எஸ்.எம். மரிக்கார், ஹேஷா விதானகே, நளின் பண்டார உள்ளிட்ட 8 பேர் இதுவரை கோப் குழுவிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

8400 உள்ளூராட்சி நிறுவன ஊழியர்களுக்கு அடித்த அதிஷ்டம்

0

உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.

அதற்கு தேவையான அமைச்சரவை அங்கீகாரம் தற்போது கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் 8,400 ஊழியர்கள் நிரந்தரம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

40% பெண்கள் சுகாதார அணையாடை பாவனை நிறுத்தம்

0

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் சுமார் 40 வீதமான பெண்கள் சுகாதார அணையாடை பாவனையை இடைநிறுத்தியுள்ளதாக எட்வகாட்டா என்ற அமைப்பு அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் 15 வயதுக்கும் 47 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களில் 40 வீதமானவர்கள் சுகாதார அணையாடை பாவனையை நிறுத்தியுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

2019 ஆம் ஆண்டில் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட குடும்ப வருமானம் தொடர்பான அறிக்கையில் காட்டப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த நாட்டில் கருக்கலைப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக வைத்தியர்கள் மற்றும் சிவில் உரிமைகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு 1000 கருக்கலைப்புகள் நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பா. உ செல்வராசா கஜேந்திரன் மீது சரமாரியாக தாக்குதல்

0

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் நேற்றைய தினம் (08) இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாடுகளின் போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட 07பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெடுக்குநாறி மலை ஆலயத்தில் சிவராத்திரி உற்சவம் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் மாலை ஆறு மணியுடன் அனைத்து வழிபாடுகளையும் முடிவுக்கு கொண்டு வருமாறும், காவல்துறையினரின் கட்டளையை மீறும் பட்சத்தில் குறித்த நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் ஆலய நிர்வாகத்தினர் பூஜை நிகழ்வுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வந்த நிலையில் அன்னதானம், பொங்கல் மற்றும் பூஜை பொருட்கள் என சுமார் 10 இலட்சம் பெறுமதியான பொருட்களை காவல்துறையினர் எடுத்துச் சென்றுள்ளனர்.

இதன் காரணமாக பூஜை வழிபாடுகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பூஜை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது கலகம் அடக்கும் காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆலயத்தில் குவிக்கப்பட்டனர்.

அத்துடன் பாதணிகளுடன் ஆலயத்திற்குள் புகுந்த காவல்துறையினர் கலந்துகொண்ட பெண்களையும் அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

இதன்போது ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட வழிபாடுகளில் கலந்து கொண்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீதும் தாக்குதல் மேற்கொண்டு காவல்துறையினர் கைது செய்ய முயன்றதுடன், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் என தெரியவந்ததையடுத்து தூக்கிச் சென்று ஆலய முன்றலில் போட்டு விட்டு சென்றனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 07 பேரும் நெடுங்கேணி காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா

0

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளனர்.

சாந்த நிரியல்ல உட்பட 15 பேர் கொண்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் அறிவித்தலுக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி திங்கட்கிழமை புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ “அத தெரண” விற்கு தெரிவித்தார்.

கனடாவில் 6 இலங்கையர்கள் படுகொலை

0

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளடங்களாக 6 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதுகாப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

35 வயதுடைய தர்ஷனி ஏகநாயக்க என்ற தாயையும் அவரது ஏழு வயதான மகன், நான்கு மற்றும் இரண்டு வயது மற்றும் இரண்டு மாதங்களேயான அவரது நான்கு பிள்ளைகளும் கொல்லப்பட்டனர்.

சம்பவத்தில் குறித்த பிள்ளைகளின் தந்தை பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், குறித்த வீட்டில் வசித்து வந்த 40 வயதுடைய காமினி அமரகோன் என்ற அவர்களது நண்பர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.

கூரிய ஆயுதத்தினால் இந்தக் கொலைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் 19 வயதுடைய இலங்கை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்த வீட்டிலிருந்து 15 கிலோமீற்றர் தொலைவில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் உயிரிழந்த குடும்பத்தாரின் நெருங்கிய உறவினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இது தொடர்பான அடுத்த வழக்கு எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன் அன்றைய தினம் அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஒட்டாவா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குருணாகல் – பொல்கஹவெல பகுதியில் வசித்து வந்திருந்த இவர்கள் சுமார் 6 மாதங்களுக்கு முன்னரே கனடாவுக்கு சென்றுள்ளதாக உயிரிழந்த தர்ஷனி ஏகநாயக்கவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் ஒட்டாவா நகர வரலாற்றில் பதிவாக மிகவும் மோசமான படுகொலை எனவும் குறித்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்தவிடயம் தொடர்பில், எமது செய்திச் சேவை கனடாவின் ஒட்டாவாவுக்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் அன்சுல் ஜானை தொடர்பு கொண்டு வினவியது, அதற்கு பதிலளித்த அவர், இவ்வாறான சம்பவமொன்று இதற்கு முன்னதாக இடம்பெறவில்லை எனவும், இலங்கையைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவர் ஒருவர் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளமை வருத்தத்திற்குரிதாகும் என குறிப்பிட்டுள்ளார்.

அவர் உயிரிழந்தவர்களின் குடும்பத்துடன் இணைந்து இருந்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள், தேவையேற்படின் நாட்டுக்கு கொண்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

அதற்கான செலவீனங்கள் தொடர்பில் எந்தவொரு தீர்மானங்களும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் சடலங்கள் கிடைக்கப்பெறும் தினம் தொடர்பில் எந்தவொரு அறிவிப்பும் எமக்கு கிடைக்கபெறவில்லை என கனடாவின் ஒட்டாவாவுக்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் அன்சுல் ஜான் தெரிவித்தார்.

இந்த நாட்டினருக்கு சீனா செல்ல விசா தேவையில்லை

0
பிரான்ஸ் உட்பட 6 நாட்டினருக்கு விசா தேவையில்லை என சீனா அறிவித்துள்ளது. 

கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்தது. கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா துறை பெரிதும் பாதிப்புக்குள்ளானது. 

இந்நிலையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அதன்படி தற்போது, சீனா சுற்றுலாத் துறையைப் புதுப்பிக்கவும், அனைத்துலக விமானப் பாதைகளை மீட்டெடுக்கவும் பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் சீனா செல்ல விசா தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, டிசம்பர் 1 முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30ம் தேதி வரை, அந்த நாடுகளின் குடிமக்கள் வணிகம், சுற்றுலா, உறவினர்கள் மற்றும் நண்பர்களைப் பார்க்க அல்லது 15 நாட்களுக்கு மேல் பயணம் செய்ய சீனாவிற்குள் நுழைவதற்கு தற்காலிகமாக விசா தேவையில்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 

சர்வதேச விமான பாதைகளை மீட்டெடுப்பது உட்பட, மூன்று ஆண்டு கடுமையான கொரோனா நோய்த்தொற்றை தொடர்ந்து, சுற்றுலாத் துறையை புதுப்பிக்க சீனா நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இம்மாதத் தொடக்கத்தில், சீனா தனது விசா இல்லாத போக்குவரத்துக் கொள்கையை நார்வே உட்பட 54 நாடுகளுக்கு விரிவுபடுத்தியது. ஜூலையில் சிங்கப்பூர், புருணை குடிமக்கள் விசா இல்லாமல் 15 நாள் பயணம் மேற்கொள்ள அது அனுமதி வழங்கியது. 

ஆகஸ்ட் மாதம், சீனாவுக்கு வரும் அனைத்துப் பயணிகளுக்கும் கொரோனா மருத்துவச் சோதனை நடைமுறைகளை அந்நாட்டு அரசு கைவிட்டது.

இஸ்ரேல் பிரதமரின் தலையில் இடியை இறக்கிய கருத்துக்கணிப்பு!

0
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தற்போது தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

இப்படி இருக்கையில் இஸ்ரேலில் அடுத்த முறை நெதன்யாகு பிரதமராக வாய்ப்பில்லை என அந்நாட்டு ஊடகங்கள் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளன.

பாலஸ்தீன விடுதலைக்காக போராடி வரும் ஹமாஸ் படையினர் கடந்த மாதம் 7ம் தேதி திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தினர்.இந்த தாக்குதலை காரணம் காட்டி கடந்த 49 நாட்களாக இஸ்ரேல், பாலஸ்தீனம் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனர்க்ள கொல்லப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையில் குழந்தைகள் மட்டும் 6 ஆயிரத்திற்கும் அதிகம்.

இதை இப்படியே விட்டால் ஒட்டுமொத்த பாலஸ்தீனமும் காலியாகிவிடும் என பயந்த அண்டை நாடுகள், போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையில் இறங்கின.

பிணை கைதிகளை விடுவிப்பதாக சொன்னால் போரை தற்காலிகமாக நிறுத்துவதாக இஸ்ரேல் கூறியது. இதனையடுத்து தற்போது போர் தற்காலிமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் தங்கள் மீது நடந்த தாக்குதலை தடுக்க பிரதமர் நெதன்யாகு தவறிவிட்டார் என்றும், பிணை கைதிகளாக உள்ள தங்களின் உறவினர்களை மீட்ட தாமதம் செய்துவிட்டார் என்றும் இஸ்ரேல் மக்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

இந்நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் நாட்டின் அரசியல் கள நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து கருத்துக்கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி தேர்தல் வந்தால் நெதன்யாகு மீண்டும் பிரதமராக தேர்வாக மாட்டார் என்று சொல்லப்படுகிறது. ஹீப்ரு செய்தி நிறுவனமான Maariv இந்த கருத்துக்கணிப்பை வெளியிட்டிருக்கிறது. அதாவது நெதன்யாகு கட்சிக்கு வெறும் 3.25 சதவிகித வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் மொத்தம் 120 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன. கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நெதன்யாகுவின் லிகுட் கட்சி 32 இடங்களை வென்றது. கூட்டணி கட்சிகளும் 32 இடங்களை வென்று 64 என்கிற பெரும்பான்மையுடன் நெதன்யாகு பிரதமராக பொறுப்பேற்றார். ஆனால் இந்த முறை லிகுட் கட்சி 18 இடங்களில் சுருங்கிவிடும். கூட்டணி கட்சிகளை எல்லாம் சேர்த்தாலும் கூட மொத்தமாக 49 இடங்களைதான் பெற முடியும் என கருத்துக்கணிப்பு கூறுகிறது.

மறுபுறம் எதிர்க்கட்சியாக இருக்கும் தேசிய ஒற்றுமைக் கட்சி 43 இடங்களை வெல்லும். கூட்டணியை சேர்த்தால் 79 இடங்களை வென்று ஆட்சியை கைப்பற்றும் என கணிப்புகள் கூறியுள்ளன.

அதேபோல இஸ்ரேலின் பிரதமாராக இருக்க யார் பொருத்தமானவர்கள் என்றும் கருத்துக்கணிப்பில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதற்கு 52% பேர் எதிர்க்கட்சியான தேசிய ஒற்றுமைக் கட்சியின் தலைவர் காண்ட்ஸ்தான் பொருத்தமானவர் என்று பதிலளித்துள்ளனர். 27% பேர் மட்டுமே நெதன்யாகுவுக்கு சப்போர் செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.”

இஸ்ரேல் பிரதமரின் விஷம் கலந்த பதில்

0
இஸ்ரேல் ஹமாஸ் இடையே சண்டை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வரும் நிலையில், போர் குறித்தும் தனது வருங்கால திட்டம் குறித்தும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

கடந்த அக். 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலை நடத்தியது. ஒரு பக்கம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய இஸ்ரேல், மறுபறம் இஸ்ரேலில் புகுந்தும் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தி பலரையும் பிணையக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றன.

இந்த தாக்குதலால் முதலில் இஸ்ரேல் ஆட்டம் கண்டாலும் கூட பதில் தாக்குதலை ஆரம்பித்தது. முதலில் காசா மீது ஏவுகணை தாக்குதலை நடத்திய இஸ்ரேல், மெல்லப் படையெடுப்பையும் ஆரம்பித்து பல்லாயிரக்கணக்கான சிறுவர்களையும் அப்பாவி மக்களையும் கொன்று குவித்து வருகின்றது.

இதற்கிடையே இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சன்மின் நெதன்யாகு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

அதாவது இந்த சண்டை ஹமாஸுக்கு எதிரானது என்று குறிப்பிட்ட அவர், இந்த சண்டையை வைத்து காசாவைக் கைப்பற்றவோ, ஆக்கிரமிக்கவோ அல்லது ஆட்சி செய்யவோ இஸ்ரேல் முயலவில்லை என்றும் தெரிவித்தார். ஆனால் தீவிரவாத அச்சுறுத்தல்களைத் தடுக்க பாலஸ்தீனிய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த ராணுவம் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

காசா பாதுகாப்புக்கு இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும் என்றும் காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது சரியானது இல்லை என்று சமீபத்தில் அமெரிக்கா கூறி இருந்தது. மேலும், இஸ்ரேல் ஹமாஸ் சண்டை முடிந்த பிறகும் கூட, காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்கக் கூடாது என்று அமெரிக்க அதிபர் பைடன் கடந்த வாரம் தான் திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.

அதை ஆமோதிக்கும் வகையில் இப்போது இஸ்ரேலும் இந்தக் கருத்துகளைக் கூறியுள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறுகையில், நாங்கள் காசாவைக் கைப்பற்ற முயலவில்லை. காசாவை ஆக்கிரமிக்க முற்படவில்லை, காசாவை ஆள வேண்டும் என்பதும் எங்கள் திட்டமில்லை. காசாவில் ஒரு மக்கள் ஆட்சி உருவாக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் திட்டம். அதற்கான நடவடிக்கைகளைத் தான் எடுத்து வருகிறோம் என்று நெதன்யாகு கூறியிருப்பது முழு உலகையும் கேளிக்கைக்கு உள்ளாக்கி இருப்பதாக மேற்குலகம் குற்றம் சுமத்தியுள்ளது

அதேநேரம் கடந்த அக். 7ஆம் தேதி நடந்த தாக்குதலைப் போல மற்றொரு தாக்குதல் நடந்துவிடக் கூடாது என்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்கள் ராணுவத்தில் ஒரு பகுதி தேவைப்பட்டால், காசாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த ரெடியாக இருக்கிறது. இதைச் செய்தால் மட்டுமே ஹமாஸ் படையை முழுமையாக அழிக்க முடியும். ஹமாஸ் மீண்டும் வராமல் தடுக்க இது மட்டுமே ஒரே வழி என்று தெரிவித்தார்.

இந்த சண்டைக்குப் பிறகு காசாவை ஆக்கிரமிக்க வேண்டும் என்பது எங்கள் திட்டமில்லை. இப்போது ஹமாஸ் தான் அங்கே வீரர்களைக் குவித்துள்ளனர். அந்த நிலையை மாற்றி, காசாவை மக்கள் வாழக் கூடிய நகராக மாற்ற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்றார்.

காசாவை மக்கள் வாழக் கூடிய நகராக மாற்ற வேண்டும் என்று கூறியுள்ள நெதன்யாகு அங்கு அனைத்து மக்களும் எவ்வாறு கொல்லப்பட்டார்கள், யார் கொன்று குவித்தார்கள் என்பது பற்றி தெரியாதது போல் பேசியிருப்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது.

மனிதர்கள் வாழ்ந்த இடங்களை சீர்குலைத்து அணைத்து கட்டிடங்களும் அடித்து நொறுக்கப்பட்டுவிட்டு எந்த மக்களை அங்கு நிம்மதியாக வாழ வைக்க நினைக்கிறார் இந்த இஸ்ரேல் பிரதமர் என்பது அனைவரின் வினாவாக உள்ளது.

சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்த நிலையில், வேறு வழியின்றி மக்கள் பாதுகாப்பாக வெளியேறத் தினசரி 4 மணி நேரம் போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் சம்மதம் தெரிவித்த விடயம் தற்போது இஸ்ரேலை சமாதானத்தை விரும்பும் நாடாக காண்பிக்க முயல்கிறது இஸ்ரேலிய மேற்குலகம்.

இலங்கை கிரிக்கெட்டை காட்டிக்கொடுத்த அதிகாரி

0

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே, ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளதாக கிரிக் இன்போ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த தீர்மானத்தை எடுப்பதற்காக தொலைக் காணொளி ஊடாக இடம்பெற்ற அவசர கூட்டத்தில், ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா பங்கேற்றுள்ளதாக அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

உடன் அமுலாகும் வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை, ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை நேற்று முதல் இடைநிறுத்தியது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிர்வாக நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் தலையீடு காணப்படுவதனால் அதன் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

உறுப்பினர் என்ற கடப்பாட்டை பாரதூரமான முறையில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மீறியுள்ளதாகவும், அதன் நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் உரிய முறையில் இடம்பெறவில்லை எனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை குறிப்பிட்டுள்ளது.

எனவே, மறு அறிவித்தல் வரை ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தநிலையில், இது சர்வதேச கிரிக்கெட் பேரவையின் திடீர் முடிவாக இருந்தாலும் ஸ்ரீ லங்கா கிரிக்கட்டின் கோரிக்கைக்கு அமையவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிரிக் இன்போ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.