இது தொடர்பில், உயிரிழந்த பெண்ணின் உறவினர்களால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மரணம் மயக்க மருந்தினால் ஏற்பட்டதா என்பது தொடர்பில், உடன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், உயிரிழந்த பெண்ணின் உறவினர்களால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மரணம் மயக்க மருந்தினால் ஏற்பட்டதா என்பது தொடர்பில், உடன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப்பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
அசாதாரண காலநிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக அரச பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் நாட்களில் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஹட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலைகள் மாத்திரம் ஜுலை 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரண்டு சதங்களை விளாசி இலங்கை மகளிர் அணியின் தொடர் வெற்றிக்கு உதவிய இலங்கை துடுப்பாட்ட அணித் தலைவி சாமரி அத்தபத்து துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கான ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் பெத் மூனியை பின்தள்ளி சாமரி அதபத்து துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கான தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சமரி அதபத்து 3 போட்டிகளில் 2 சதங்களை பெற்றிருந்தார்.
முதல் போட்டியில் 108 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்ற அவர், இரண்டாவது போட்டியில் ஓட்டங்களின்றி ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெறும் 80 பந்துகளில் 140 ஓட்டங்களை பெற்று இலங்கை அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.
வரலாற்றில் முதன்முறையாக நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை மகளிர் அணி ஒருநாள் தொடரை வெற்றிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில், இலங்கை மகளிர் கிரிக்கெட்டில் தரவரிசையில் முதலிடம் பிடித்த இலங்கை வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
சனத் ஜயசூரியவை தொடர்ந்து ஐ.சி.சியின் துடுப்பாட்ட தர வரிசையில் முதலிடம் பிடித்த இரண்டாவது இலங்கையர் என்ற சாதனையை பதிவுசெய்துள்ளார்.
இதற்கமைய வருடத்திற்கு விபத்துக்களால் மாத்திரம் சுமார் 12 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகவும் அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
அதன்படி வருடத்திற்கு விபத்துக்களால் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பேர் வரை உயிரிழக்கின்றனர்.
மேலும் இலங்கையில் ஐவரில் ஒருவருக்கு வருடாந்தம் விபத்து ஏற்படுவதுடன், மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன.
இதனால் அரசாங்கத்திற்கு பாரிய மருத்துவ செலவு ஏற்படுவதாகவும், விபத்துக்களை தவிர்த்துக்கொண்டால் பாரிய தொகையினை அரசாங்கம் சேமிக்கும் எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இலங்கையில் 15 வயது முதல் 44 வயதிற்கிடைப்பட்டவர்களே விபத்துக்களில் அதிகம் உயிரிழக்கின்றனர்.
இதனால் விபத்துக்களை குறைக்கும் வகையிலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் தேசிய விபத்துக்கள் தடுப்பு வாரம் கடந்த 03 ஆம் திகதி முதல் அமுல் படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஜிம்பாப்வேயை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தனது இடத்தைப் பிடித்தது.
165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 32-வது ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
இந்த வெற்றியானது 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கையின் தகுதியை உறுதி செய்துள்ளது. தகுதிச் சுற்றில் மீதமுள்ள ஒரு ஆட்டத்தில் அவர்கள் இதை அடைந்தனர்.
2023 கிரிக்கெட் உலகக் கோப்பை அக்டோபர் 7 முதல் நவம்பர் 14, 2023 வரை நடைபெற உள்ளது. இது 2011க்குப் பிறகு முதல் முறையாக இந்தியா போட்டியை நடத்துவதைக் குறிக்கும்.
வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம், கோதுமை மா ‘குறிப்பிட்ட பொருட்கள்’ பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.
அதன்படி, கோதுமை மா, மக்களின் அத்தியாவசியப் பொருளாக இருப்பதால், கடந்த 16ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், குறிப்பிட்ட பொருட்களின் வகையின் கீழ் கொண்டுவரப்பட்டது.
இது 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபை (திருத்தம்) சட்டத்தின் பிரிவு 18 இன் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள பொருளின் கையிருப்பை சந்தையில் தட்டுப்பாடின்றி பேண வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த 8 ஜூலை 2022 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியின் மூலம் குறிப்பிட்ட பொருளாக இருந்த எரிவாயு, அந்தப் பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் உத்தர பிரதேச பல்லியா மாவட்ட வைத்தியசாலையில், கடுமையான வெப்பநிலைக்கு மத்தியில், கடந்த 3 நாட்களில் மாத்திரம் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், 400க்கும் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறப்புக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக இருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
உத்தர பிரதேச பகுதியில், 40 செல்சியஸ்க்கும் அதிகமான வெப்பநிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆங்கில மொழிக்கு மாத்திரம் மட்டுப்படாமல் சீனா, ஜப்பான், அரபு உள்ளிட்ட மொழிகளையும் கற்றுகொள்வதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற 2018 – 2022ஆம் கல்வியாண்டு தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் தேசிய பாடசாலைகளுக்கான ஆயிரத்து 729 நியமனங்களும் மேல் மாகாணத்திற்கான 626 நியமனங்களும் வழங்கப்பட்டன.
அதனையடுத்து, ஏனைய 8 மாகாணங்களுக்குமான நியமனங்களும் வழங்கப்பட்டதோடு மொத்தமாக இன்றைய தினத்தில் 7 ஆயிரத்து 342 டிப்ளோமாதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன.
இந்தநிலையில், நாட்டிற்குள் 2050ஆம் ஆண்டிற்கு பொருத்தமான கல்வி முறையை உருவாக்குவதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதற்கான முதன்மைக்காரணி மனித வளம் என வலியுறுத்திய ஜனாதிபதி, மனித வளத்தை தயார்படுத்தும் பொறுப்பு ஆசிரியர்களை சார்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டிற்குள் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்திலும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமாயின் கல்வி முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.