Friday, June 26, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 206

முகக்கவசம் அணிவது தொடர்பில் புதிய சர்ச்சை!

0

அலுவலக வளாகங்களில் முகக்கவசம் அணியுமாறு பொதுவாக நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கோவிட் வைரஸ் தொற்றுக்கள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளது.

எனவே, மேல் மாகாணத்தின் துணைப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) வெளியிட்ட (2025.06.02) கடிதம், மேல் மாகாண சபையின் அனைத்து நிறுவனத் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதில் அலுவலக வளாகங்களிலும் பொதுமக்கள் அதிகமாக இருக்கும் அனைத்து இடங்களிலும் பணிபுரியும் போது முகக்கவசம் அணியுமாறு அனைத்து ஊழியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் தொடர்பாக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர், சிறப்பு மருத்துவர் அனில் ஜயசிங்க, மேல் மாகாண தலைமைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, சம்பந்தப்பட்ட கடிதத்தில் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களை மறுபரிசீலனை செய்யுமாறும், அலுவலகங்களில் முகமூடிகளை அணியுமாறு பொதுவாக நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியுள்ளார்.

2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் COVID 19 உலகளாவிய தொற்றுநோய் முடிவுக்கு வந்த பிறகு, சுவாச நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு செயல்முறையின் கீழ் COVID 19 பிற தொற்று நோய்களின் வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

எனவே, மழைக்காலத்தில் இன்ஃப்ளூயன்ஸா போன்ற சுவாச நோய்கள் அதிகரிப்பதால், கோவிட் 19 அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், பொதுவாக, சுவாச நோய்களை தடுப்பதும், பொதுவான வழிமுறையின்படி மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த நேரத்தில் கோவிட் 19 தடுப்பு ஒரு ஆபத்தாகக் கருத வேண்டிய அவசியமில்லை என்றும், மேலும், நிறுவனங்களுக்கு இதுபோன்ற பரிந்துரைகளை வழங்குவது தேவையற்ற பயத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் சூழ்நிலையை உருவாக்கக்கூடும் என்றும், எனவே சுகாதார அமைச்சகத்துடன் கலந்தாலோசித்த பின்னரே அத்தகைய ஆலோசனையை வழங்குவது நல்லது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், யாராவது தானாக முன்வந்து அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்காக மருத்துவ ஆலோசனையின் பேரில் முகக்கவசம் அணிந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் செயலாளர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இருமல், சளி (காய்ச்சல்) போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் மட்டுமே முகக்கவசம் அணிவது முக்கியம் என்றும், தனிப்பட்ட சுகாதாரத்தைப் பேணுவதற்கும், மற்றவர்களுக்கு நோய் பரவும் வாய்ப்பைக் குறைப்பதற்கும் முகக்கவசம் அணிவது சிறந்தது என்று குறித்த கடித்ததில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


தீப்தி விஜேதுங்க
சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சரின் ஊடகச்செயலாளர்
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு.

அறிமுகமாகிறது சுகாதார தகவல் அமைப்பு!

0

நாட்டின் ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு முறையில் ஒரு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரின் தலைமையில் நாளை (05) தம்புத்தேகமவில் கிளஸ்டர் சுகாதார தகவல் அமைப்பு (CHIS) ஆரம்பிக்கபட உள்ளது.

ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ், கிளஸ்டர் சுகாதார தகவல் அமைப்பு (CHIS) நாளை (05) காலை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் தம்புத்தேகம ஆதார மருத்துவமனையில் தொடங்கப்படும். இந்த கிளஸ்டர் சுகாதார தகவல் அமைப்பு நாட்டின் சுகாதாரப் பராமரிப்பு முறையை டிஜிட்டல் மயமாக்குவதில் ஒரு முக்கிய அம்சமாக இடம்பெறவுள்ளது.

இந்த கிளஸ்டர் சுகாதார தகவல் அமைப்பு அருகிலுள்ள மருத்துவமனைகளைச் சுற்றி “கிளஸ்டர்களாக” தொகுக்கிறது, மருத்துவமனைகள் மற்றும் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நோயாளியின் சுகாதார பதிவுகள், எக்ஸ்ரே படங்கள், ஆய்வக சோதனை முடிவுகள், மருந்துச்சீட்டுகள் மற்றும் சிகிச்சைகள் மற்றும் மருத்துவ வரலாறு பற்றிய தரவைப் அறிய உதவுகிறது.

மேலும் நோயாளியின் உடல்நலம் குறித்த சரியான தரவுகளை மிகக் குறுகிய காலத்தில் ஆய்வு செய்ய முடியும். மேலும், ஒரு சிறிய மருத்துவமனைக்கு ஆய்வகம் இல்லையென்றால், அதே கிளஸ்டருக்குள் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சோதனை மாதிரிகளை அனுப்ப முடியும், இது பரிசோதனைகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்க மற்றும் நோயாளிகளுக்குத் தேவையான பராமரிப்பைப் பெறுவதை எளிதாக்க இது உதவுகிறது.

நோயாளிகள் பெரும்பாலும் தேவையான சிகிச்சையைப் பெற வெவ்வேறு மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும், மேலும் சில நேரங்களில் அவர்கள் மீண்டும் மீண்டும் பரிசோதனைகள் செய்ய வேண்டியிருக்கும், மருத்துவ பதிவுகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு வர வேண்டியிருக்கும் அல்லது முடிவுகளுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த சிரமங்களைத் தவிர்ப்பதன் மூலமும், நேரத்தை மிச்சப்படுத்துவதன் மூலமும், செலவுகளைக் குறைப்பதன் மூலமும், சிறந்த பராமரிப்பை வழங்குவதன் மூலமும், இந்த புதிய சுகாதார தகவல் அமைப்பு திறமையான மற்றும் நோயாளிக்கு ஏற்ற சுகாதார அமைப்பை உருவாக்க உதவும். மேலும், தேவையற்ற தாமதங்கள் அல்லது செலவுகள் இல்லாமல், சரியான நேரத்தில், சரியான இடத்தில், மக்கள் சரியான பராமரிப்பைப் பெறுவதையும் இது உறுதி செய்கிறது.

இந்த அமைப்பு சுகாதார அமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் (HSEP) கீழ் ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நவீன சுகாதார தகவல் அமைப்பின் மேம்பாட்டிற்கு ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப உதவியை வழங்கியுள்ளது.

இந்த அமைப்பின் சரியான செயல்பாட்டைச் பரிசோதிக்க தம்புத்தேகம மற்றும் தம்புள்ளையைச் சுற்றியுள்ள 31 மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களை உள்ளடக்கிய பரிசோதனை செயல்முறையும் இடம்பெறஉள்ளது.

மின்சார திருத்த சட்டமூலம் தொடர்பில் முக்கிய தகவல்!

0

“இலங்கை மின்சாரம் (திருத்தம்)” சட்டமூலம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேலும் இரண்டு மனுக்களின் பிரதிகள் தனக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் அறிவித்தார். 

சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (04) பாராளுமன்றத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். 

“இலங்கை மின்சாரம் (திருத்தம்)” சட்டமூலம் தொடர்பாக, அரசியலமைப்பின் பிரிவு 121 (1) இன் படி உயர் நீதிமன்றத்தில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “இலங்கை மின்சாரம் (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களின் மேலும் இரண்டு பிரதிகள் தனக்குக் கிடைத்துள்ளதாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (04) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

பில்கேட்ஸிடமிருந்து பிரியும் 99% சொத்துக்கள்!

0

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ், தனது சொத்தில் 99 சதவீதத்தை 2045 ஆம் ஆண்டுக்குள் ஆப்பிரிக்காவில் சுகாதாரம் மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் கேட்ஸ் அறக்கட்டளை 2045 ஆம் ஆண்டுக்குள் தனது செயல்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ், தனது சொத்தில் பெரும்பகுதியை, குறிப்பாக ஆப்பிரிக்காவில் சுகாதாரம் மற்றும் கல்வி சேவைகளை மேம்படுத்துவதற்காக அடுத்த 20 ஆண்டுகளில் நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளார்.

ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டின்படி, உலகின் ஐந்தாவது பெரிய பணக்காரரான பில் கேட்ஸின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 175 பில்லியன் டாலர்கள். இது 2045 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 200 பில்லியன் டாலர்களை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே ஆண்டில் தான் அவரது அறக்கட்டளை தனது செயல்பாடுகளை நிறுத்த திட்டமிட்டுள்ளது.

எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் உள்ள ஆப்பிரிக்க யூனியன் தலைமையகத்தில் பேசிய 69 வயதான பில் கேட்ஸ், “என்னுடைய சொத்துக்களை அடுத்த 20 ஆண்டுகளில் நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளேன். இதில் பெரும்பகுதி ஆப்பிரிக்காவில் உள்ள சவால்களை எதிர்கொள்ள உதவும் வகையில் செலவிடப்படும்” என்று தெரிவித்தார். கேட்ஸ் அறக்கட்டளை மூன்று முக்கிய இலக்குகளை கொண்டுள்ளது. அவை, தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் தவிர்க்கக்கூடிய இறப்புகளை முடிவுக்குக் கொண்டுவருவது, தொற்று நோய்களால் பாதிக்கப்படாமல் அடுத்த தலைமுறையை வளர்ப்பது மற்றும் மில்லியன் கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்பது ஆகியவையாகும்.

அரசாங்க திட்டங்கள் முறையானதாக இல்லை!

0

கிளீன் ஶ்ரீலங்கா தொடர்பில் கதைத்த அரசாங்கம் இப்போது அதனை விடுத்து உள்ளூராட்சி சபைகளில் யாருடன் ஆட்சியமைப்பது என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (3) நடைபெற்ற தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  இவ்வாறு தெரிவித்தார்

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்கள் முறையானதாக இல்லை. தரவு முகாமைத்துவம் இல்லாமையே அதற்கு காரணமாகும். கிளீன் ஶ்ரீலங்கா தொடர்பில் ஆரம்பத்தில் கதைத்தனர். ஆனால் இப்போது உள்ளூராட்சி சபையில் ஆட்சியமைப்பது யார் என்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. முன்னர் கூறியவற்றை மூடி மறைத்துவிட்டு இப்போது உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க யாருடன் இணைவது என்று தேடுகின்றனர். 

இதேவேளை  பொருளாதார சீர்குலைவு தொடர்பில் கதைக்கின்றீர்கள். நீங்கள் கடந்த கால வரலாற்றில் செய்த பொருளாதார சீர்குலைவுகள் என்ன என்று நினைத்து பாருங்கள். கடந்த காலங்களில் இந்த நாட்டில் பஸ்களுக்கு தீ மூட்டியதால், மின் பிரப்பாக்கிகளை நொறுக்கியதால் நாட்டின் பொருளாதாரத்துக்கு நட்டம் ஏற்படவில்லையா என கேட்கிறோம்.

நீங்கள் தற்காலிகமாக ஏற்பட்ட அலையில் ஆட்சிக்கு வந்தவர்கள். அதனால் தொடர்ந்தும்  ஆட்சியில் இருக்க முடியும் என நினைக்க வேண்டாம்.  நீங்கள் இந்த நாட்டின் நிரந்தர உரிமையாளர்கள் அல்ல. உங்களிடம் முறையான தரவுகள் இருந்தால் அவற்றை கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்யுங்கள். 

18ஆவது ஐபிஎல் தொடரில் மகுடம் சூடுவது யார்?

0

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது. 

அஹமதாபாத் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று இரவு 7.30 இற்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. 

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் விளையாடவுள்ளன. 

2009, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் இரண்டாம் இடத்தைப் பெற்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4ஆவது தடவையாக இறுதிப் போட்டியில் பங்கேற்கிறது. 

அதேநேரம் பஞ்சாப் கிங்ஸ் அணி 2ஆவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடுவதற்குத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மின்சார சபைக்கு புதிய தலைவர்!

0

இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக பொறியியலாளர் பேராசிரியர் கே.டி.எம்.யு. ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார். 

இலங்கை மின்சார சபையின் கடிதத் தலைப்பின் கீழ் இந்த நியமனம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. 

இவர் வலுசக்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆவார். 

இதற்கிடையில், இலங்கை மின்சார சபையின் தலைவராக இதுவரை பணியாற்றி வந்த பொறியியலாளர் கலாநிதி டி.ஜே.டி. சியம்பலாபிட்டியவின் ராஜினாமா உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திக்குமுக்காடும் உள்ளூராட்சி சபைகள்!

0

161 உள்ளூராட்சி சபைகளின் பணிகள் இன்று (02) முதல் ஆரம்பமாகவுள்ளன. 

கடந்த மே 6 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளுக்கு அமைவாக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இந்த சபைகளின் பணிகளை ஆரம்பிக்க வேண்டியது அவசியமாகும். 

ஒரு அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவொன்றால் பெரும்பான்மை அதிகாரத்தை கொண்ட 161 உள்ளூராட்சி சபைகளின் பணிகளை இன்று ஆரம்பிக்க முடியும் என்றும், ஏனைய உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி அதிகாரம் குறித்து உள்ளூராட்சி ஆணையாளரின் தலைமையில் கூடும் உள்ளூராட்சி சபைகளால் தீர்மானம் எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இதேவேளை, உள்ளூராட்சி சபைகளில் ஆளும் கட்சி எடுக்கும் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளுக்கு ஆதரவை வழங்க எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார தெரிவித்தார். 

பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி நிறுவனங்களில் அதிகாரத்தை நிறுவ எதிர்க்கட்சி தயாராக இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். 

தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வழங்கிய அதிகாரத்திற்கு இணங்க உள்ளூராட்சி சபைகன் அதிகாரத்தை கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் டி.பி.சரத் தெரிவித்தார்.

விடைபெறும் நிதியமைச்சின் செயலாளர்!

0

நிதியமைச்சின் தற்போதைய செயலாளர் மஹிந்த சிறிவர்தன இந்த மாத இறுதியில் நிதியமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவார் என்றும், அதன் பிறகு ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) மாற்று நிர்வாக பணிப்பாளராக தனது கடமைகளை ஏற்றுக்கொள்வார் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 

இன்று (02) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற தேசிய வரி வாரத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

மஹிந்த சிறிவர்த்தனவின் ஓய்வு குறித்து தொடர்ந்து கருத்து வௌியிட்ட ஜனாதிபதி, 

அவர் கூறியது போல சமீப கால வரலாற்றில் மற்றும் உலக வரலாற்றிலும் மிகக் குறைந்த வரி விதிக்கும் அரசாக நாம் மாறிவிட்டோம். இது நமது நாட்டை மீண்டும் ஒரு சாதாரண வரி முறைக்கு மாற்றுவதற்கான ஒரு முயற்சியாகும், மேலும் ஏராளமான நிறுவன சீர்திருத்தங்கள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் நிதி அமைச்சின் செயலாளர் என்ற வகையில் மஹிந்த சிறிவர்தன மேற்கொண்டுள்ளார். 

இந்த மாத இறுதியில் அவர் நமது நிதி அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து விடைபெறுவார் என்று நினைக்கிறேன். இலங்கை உட்பட 7 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆசிய அபிவிருத்தி வங்கியில் மாற்று நிர்வாக பணிப்பாளராக கடமையாற்ற இந்த மாத இறுதியில் அவர் புறப்படவுள்ளார். 

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவருக்கு எனதி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வரி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் அவர் வகித்த பங்கை நாம் பாராட்ட வேண்டும்.

சத்தியப்பிரமாணம் செய்த பிரதேச சபை உறுப்பினர்கள்!

இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இன்றைய தினம் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர்.

கட்சியின் கிளிநொச்சி அலுவலகமான அறிவகத்தில் குறித்த சத்தியபிரமாணம் நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், ஓய்வு நிலை அதிபர் நாகலிங்கம் சோதிநாதன் ,மாவட்ட பிரஜைகள் குழு தலைவர் கிருஸ்ணபிள்ளை சின்னராசா, முன்னாள் வடமாகாண கல்வியமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா ஆகியோர் முன்னிலையில் தமது சத்தியபிரமாணத்தை செய்துகொண்டனர்.

நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்,

இலங்கை தமிழரசுக்கட்சி கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையும் திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் பிரதேச சபையும், மட்டக்களப்பு இரண்டு சபைகளுமாக மொத்தம் ஆறு பிரதேச சபைகளில் சுகந்திரமாக எந்தவித இடையூறுகளும் இன்றி ஆட்சி அமைக்கவுள்ளது.

அதேநேரம் கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் ஆட்சியமைப்பதற்கு ஒரு ஆசனம் போதாது உள்ள நிலையில் அந்த ஒரு ஆசனம் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசிடம் உள்ளது. அந்த ஆசனத்தை கொள்கை ரீதியாக ஆதரவு வழங்க இனங்கி இருக்கின்றனர்.

மேலும் நெடுந்தீவிலும் இவ்வாறு இனங்கியுள்ளனர். ஊர்காவற்துறை பிரதேச சபையில் தமிழ்க்காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.