Monday, May 4, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 205

உடப்புவில் சிக்கிய கடத்தல் பொருட்கள்!

0

கடந்த 2025 ஏப்ரல் 13 ஆம் திகதி உடப்புவ, கருகப்பனே கடல் பகுதி மற்றும் அதனை அண்டிய கடலோரப் பகுதியிலும் கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்த முயன்ற சுமார் 145 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளை ஏற்றிச் சென்ற டிங்கி படகுடன் ஆறு (06) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கடல் வழியாக மேற்கொள்ளும் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களை ஒடுக்கும் வகையில், தீவைச் சுற்றியுள்ள கடற்கரையை உள்ளடக்கி வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை கடற்படை மேற்கொண்டபோதே சட்டவிரோதமாக கடத்த முயன்றபோதே உலர்ந்த மஞ்சளை ஏற்றிச் சென்ற டிங்கி படகுடன் ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இந்த கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு (02) நபர்கள் மற்றும் இரண்டு (02) மோட்டார் சைக்கிள்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கைகளின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஆறு (06) சந்தேக நபர்களும் 22 முதல் 52 வயதுக்குட்பட்ட பங்கதெனிய, வைக்கால மற்றும் கல்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஆறு சந்தேக நபர்கள், உலர்ந்த மஞ்சள் பொட்டலம், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

வடக்கில் சிக்கிய போதைப்பொருட்கள்!

கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் 85 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் ஒருவர் கைது.

இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைவாக சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் கிளிநொச்சி போலீசார், தர்மபுரம் போலீசார் இணைந்து புளியம்பொக்கனை கிராம அலுவலர் பிரிவு உட்பட்ட பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 85 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் பளை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புளியம்பொக்கனை நாகேந்திரபுரம் பகுதியில் தனியார் ஒருவரது வீட்டை வாடகைக்கு பெற்று அங்கிருந்து கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் பெரும் எதிர்ப்பை தெரிவித்துள்ள நிலையில், தமது பகுதியில் இப்படியான சம்பவங்கள் எதுவும் இடம்பெறுவதில்லை எனவும், இவர்கள் இங்கு குடியிருப்பது இதுவரையில் தமக்கு தெரியாது எனவும், இது தொடர்பாக கிராம சேவையாளருக்கும் எந்தவித பதிவுகளோ அல்லது விவரமும் கிடைக்கப்பெறவில்லை எனவும் குறித்த கிராமத்துக்கு பொறுப்பான கிராம சேவையாளர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேக நபர், தடையப் பொருட்கள் அனைத்தும் கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி போலீசார் தெரிவித்துள்ளனர்.

கண்டியில்​ 50 பாடசாலைகளுக்கு பூட்டு!

0

கண்டி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 50 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குவது குறித்து மத்திய மாகாண கல்வி செயலாளர் மாதுபானி பியசேன விசேட அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார்.

அதற்கமைய, ஏப்ரல் 21 தொடக்கம் ஏப்ரல் 25 வரையான காலப்பகுதியில் மேற்குறிப்பிட்ட 49 பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 18 முதல் 27 வரையான காலப்பகுதியில் விசேட தலதா கண்காட்சி இடம்பெறவுள்ளதன் காரணமாகவே இவ்வாறு பாடசாலைகள் மூடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மூடப்படவுள்ள பாடசாலை விபரங்களை கீழே காணலாம்

கண்டி வலயம்

குருதெணிய மகா வித்தியாலயம் 
வித்தியா லோக மகா வித்தியாலயம் 
தென்னெகும்புர தர்மராஜ வித்தியாலயம் 
டீ.எஸ்.சேனாநாயக்க மகா வித்தியாலயம் 
மஹாஓயா மகளிர் வித்தியாலயம் 
பெரவட்ஸ் வித்தியாலயம் 
அம்பிடிய சித்தார்த வித்தியாலயம் 
தம்பவெல கனிஷ்ட வித்தியாலயம் 
கோதமீ மகளிர் வித்தியாலயம் 
ஶ்ரீ ராஹூல தேசிய பாடசாலை 
புனித அந்தோனி ஆண்கள் பாடசாலை 
புனித அந்தோனி மகளிர் பாடசாலை 
வித்யார்த வித்தியாலயம் 
தக்‌ஷிலா வித்தியாலயம் 
ஹேமமாலி மகளிர் வித்தியாலயம் 
புனித சில்வெஸ்தர வித்தியாலயம் 
கண்டி வாரியபொல ஶ்ரீ சுமங்கல வித்தியாலயம் 
விவேகானந்தர் வித்தியாலயம் 
புஷ்பதான மகளிர் வித்தியாலயம் 
யஹபத் எடேராகே கன்யாராமய 
இந்து சிரேஷ்ட வித்தியாலயம் 
மத்தும பண்டார வித்தியாலயம் 
விஹாரமகாதேவி மகளிர் வித்தியாலயம் 
உயர் மகளிர் வித்தியாலயம் 
சுவர்ணமாலி மகளிர் வித்தியாலயம் 
சித்திலெப்பை மகா வித்தியாலயம் 
தர்மவிக்ரம மகளிர் வித்தியாலயம் 
சீதாதேவி மகளிர் வித்தியாலயம் 
கிங்ஸ்விட் வித்தியாலயம் 
மகாநாம மகா வித்தியாலயம் 
ரணபிம ரோயல் வித்தியாலயம் 
சரசவி உயன மகா வித்தியாலயம் 
பேராதனை மத்திய மகா வித்தியாலயம் 
பேராதனை கனிஷ்ட இரண்டாம் நிலை வித்தியாலயம் 
பேராதனை இந்து வித்தியாலயம் 
லும்பினி ரோயல் வித்தியாலயம் 
விமலபுத்தி வித்தியாலயம் 
ராசீன்தேவி வித்தியாலயம்
செங்கடகல விரோதார வித்தியாலயம் 
பத்துத்தின் மகளிர் வித்தியாலயம்
தர்மாஷோக வித்தியாலயம் 
சங்கமித்தா வித்தியாலயம் 
கெப்பெட்டிபொல வித்தியாலயம் 

வத்தேகம கல்வி வலயம் 

மகாவெலி மகா வித்தியாலயம் 
கண்டி முன்னோடி வித்தியாலயம் 
சமுத்ராதேவி மகளிர் வித்தியாலயம் 

தெனுவர கல்வி வலயம் 

ஈரியகம புஷ்பதான வித்தியாலயம் 
கன்னோருவ கனிஷ்ட வித்தியாலயம்

தலைக்கு எண்ணெய் வைக்கும் அரச விழா!

0

தலைக்கு எண்ணெய் வைக்கும் அரச விழா கண்டி ஸ்ரீ மஹா நாத விகாரையில்..

தலைக்கு எண்ணெய் வைக்கும் அரச விழாவானது, சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் பங்கேற்புடன் கண்டி ஸ்ரீ மஹா நாத விகாரையில் இன்று (16) காலை இடம்பெற்றது.

சியம் மஹா நிக்காயவின் மல்வத்த மற்றும் அஸ்கிரி பீடங்களின் அனுநாயக்க தேரர்களின் ஆசீர்வாதங்களுடன், காலை 9.04 மணிக்கு சுப நேரத்தில் வடக்கு திசையை நோக்கி தலைக்கு எண்ணெய் வைக்கும் அரச விழா நடைபெற்றது.

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சும், ஆயர்வேதத் திணைக்களமும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

ஸ்ரீ தலதா மாளிகையின் பர்மா ராஜா மற்றும் மிஹார யானைகளுக்கு எண்ணெய் தடவி உணவளிக்கும் நிகழ்வும் வெகுஜன ஊடக அமைச்சரின் பங்கேற்புடன் நடைபெற்றது.

பொலிஸாரால் தாக்கப்பட்ட அரச ஊழியர்!

கிளிநொச்சியில் அரச உத்தியோகத்தரை தாக்கிய பொலீஸாரை விசாரணைக்கு அழைத்த மனித உரிமைகள் ஆணைக்குழு.

நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணியாற்றிய சாந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர் ஒருவரை கிளிநொச்சியில் கடந்த வாரம் தாக்கிய பொலீஸாரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் விசாரணைக்கு அழைத்துள்ளது.

கிளிநொச்சி சாந்தபுரத்தைச் சேர்ந்த அரச உத்தியோகத்தரான குறித்த இளைஞனை
கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலீஸ் உத்தியோகத்தர்கள் காரணமின்றி தன்னை தாக்கி கைவிலங்கிட்டதாக குறித்த இளைஞன் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் வருகின்ற 21 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்திற்கு சம்பந்தப்பட்ட
பொலீஸ் உத்தியோகத்தர்கள், கிளிநொச்சி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி, மற்றும் கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட பொலீஸ் அதிகாரி ஆகியோரை விசாரணைக்கு வருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பானை விடுத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவித்துள்ளார்.

ரணிலின் அபாய எச்சரிக்கை!

0

அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையால் இந்த நாட்டில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தொழில்வாய்ப்புகளை இழக்கும் அபாயம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

இன்று (16) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட ரணில் விக்ரமசிங்க, இதை அவசரநிலையாகக் கருத வேண்டும் என்றும் தெரிவித்தார். 

புதிய அமெரிக்க வரிக் கொள்கை தொடர்பாக அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

நாகவில்லுவில் களைகட்டிய உதைப்பந்தாட்டத் தொடர்!

அணிக்கு 7 பேர் கொண்ட லெஜண்ட் ப்ரோ சுபர் லீக் (LEGEND PRO SUPER LEAGUE) உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்றைய தினம் புத்தளம் எருக்கலம்பிட்டியில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற பழைய மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற குறித்த உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் 2022 அணியினர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

கடந்த இரு தினங்களாக (13,14) மிகவும் கோலாகலமாக இடம்பெற்ற இச் சுற்றுப்போட்டியில் சுமார் 17 அணிகள் பங்குபற்றின. ஆரம்பம் முதல் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தி 2010 மற்றும் 2022 வகுப்பு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

பலப்பரீட்சை நடத்திய 2010 மற்றும் 2022 அணிகள் தண்ட உதை மூலம் வெற்றியை தீர்மானிக்கும் போட்டியாக இறுதிப்போட்டி அமைந்தமை பார்வையாளர்களை மிகவம் உற்சாகமூட்டியது.

தண்ட உதை மூலம் 5-4 என்ற கோல் கணக்கில் 2010 அணியை 2022 அணி வெற்றி கொண்டு சம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

இதன்மூலம் 2 நாட்களாக இடம்பெற்ற சுற்றுத்தொடர் மக்களின் அமோக வரவேற்புடனும், ஆதரவுடனும் இனிதே நிறைவுபெற்றமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

0

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தல்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

சம்பந்தப்பட்ட தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அந்த மனுக்கள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகளின் நகல்களை சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு வழங்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதன்படி, தேர்தல் ஆணைக்குழு இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கட்சிகளின் செயலாளர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் சுயாதீன குழுக்களின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளது. 

சமாதான நீதிபதிகளால் பிறப்புச் சான்றிதழ்களை சான்றளிப்பது மற்றும் அரசியலமைப்பின் 7வது அட்டவணையின் கீழ் எடுக்கப்பட்ட சத்தியப்பிரமாணம் தொடர்பான சிக்கல்கள் காரணமாக பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பல சுயேச்சைக் குழுக்களிடமிருந்து பல வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 

இந்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தன. 

அதன்படி, மனுக்களை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், சம்பந்தப்பட்ட பிரிவுகளில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை மீண்டும் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள உத்தரவிட்டது. 

இதற்கமைய அந்த வேட்புமனுக்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுத்த அரசியல் கட்சிகளுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு மனுக்கள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகளின் நகல்களை வழங்குமாறு சம்பந்தப்பட்ட கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளிடம் ஆணைக்குழு கோரியுள்ளது.

வசூல் வேட்டையில் அதிவேக நெடுஞ்சாலை!

0

அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக கடந்த 4 நாட்களில் 17.4 கோடி ரூபாவுக்கு அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

கடந்த 11 ஆம் திகதி முதல் நேற்று வரை 17.4 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. 

குறித்த காலப்பகுதியில் சுமார் 5 இலட்சம் வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக நேற்றைய தினத்தில் மாத்திரம் 19,637 வாகனங்கள் பயணித்துள்ள நிலையில், அதன் மூலம் 39 மில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு!

0

மின்சாரக் கட்டணம் இரண்டு சந்தர்ப்பங்களில் குறைக்கப்பட்ட போதிலும், கடந்த ஆண்டு 148.6 பில்லியன் ரூபாயினை இலங்கை மின்சார சபை இலாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக, 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 292.8 பில்லியன் ரூபாவாக காணப்பட்ட இலங்கை மின்சார சபையின் குறுகிய கால கடன்கள் மற்றும் பொறுப்புகள் 2024 ஆம் ஆண்டில் 123.6 பில்லியன் ரூபாவாக குறைவடைந்துள்ளது என மத்திய வங்கி அறிவித்துள்ளது. 

அதே போன்று நீண்டகால கடன்கள் 413.3 பில்லியன் ரூபாவில் இருந்து 409 பில்லியன் ரூபாவாக குறைந்துள்ளது. 

அதேநேரம், இலங்கை மின்சார சபை அதன் செலவுகளைக் குறைக்காமல் மேலும் கட்டணக் குறைப்புகளை மேற்கொள்ளக் கூடாது என மத்திய வங்கி அதன் வருடாந்த பொருளாதார மதிப்பாய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. 

அவ்வாறு இல்லாத நிலையில் இலங்கை மின்சார சபையின் நிதி செயல்திறன் குறையலாம் என மத்திய வங்கி எச்சரித்துள்ளது. 

கடந்த ஆண்டு இலங்கையில் உற்பத்தியான மொத்த மின்சாரத்தில் 32.6 சதவீதம் அனல் மின்னுற்பத்தியின் ஊடாகவும், 32.3 சதவீதம் நீர் மின்னுற்பத்தி நிலையங்கள் ஊடாகவும் பெறப்பட்டுள்ளது. 

21.2 சதவீத மின்னுற்பத்தி பாரம்பரியமற்ற முறைமைகளின் அடிப்படையிலும், 13.9 சதவீத மின்சாரம் எரிபொருளைக் கொண்டும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கிய தெரிவித்துள்ளது.