Tuesday, November 4, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 207

16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்!

0
சுமார் 16 பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியரொருவர் இன்று (11) கைது செய்யப்பட்டதாக களுத்துறை சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

களுத்துறை வடக்கு பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை வடக்கு – காலி வீதியில் தனியார் வகுப்புகளை நடத்தும் சந்தேகநபரான ஆசிரியர், சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது கணவரின் மடிக்கணினியை பரிசோதித்தபோது அதில் சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்படும் காணொளிகள் மறைத்து  வைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டதாக சந்தேக நபரான ஆசிரியரின் மனைவி சம்பந்தப்பட்ட மாணவிகளில் சிலரின் பெற்றோருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த பெற்றோர் மூலமாக களுத்துறை வடக்கு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.

அவர் இன்று (11) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

33 இலட்சம் பேருக்கு நலன்புரிக் கொடுப்பனவு

0

நாட்டிலுள்ள 33 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு ஜூலை 1 முதல் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

அதற்கமைய மிக வறியவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள பயளானிகளுக்கு எதிர்வரும் 3 ஆண்டுகளுக்கு 15 000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அதிகாரங்களுக்கமைய இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இடைநிலை, பாதிக்கப்படக்கூடிய, வறிய மற்றும் மிகவும் வறுமையான குடும்பங்களுக்கு 4 பிரிவுகளின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளதோடு, அங்கவீனமானவர்கள், முதியவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்கள் ஆகியோருக்கும் அஸ்வெசும திட்டத்தின் கீழ் நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

அதற்கமைய தற்காலிக நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருக்கும் 400,000 பேருக்கான 2500 ரூபாய் மாதாந்த கொடுப்பனவு 2023 டிசம்பர் 31 வரையிலும்,  பாதிக்கப்படக் கூடிய 400,000 பேருக்கான 5000 ரூபாய் கொடுப்பனவு 2024 ஜூலை 31 வரையிலும் வழங்கப்படவுள்ளது. மேலும் வறியோர் என்று அறியப்பட்ட பயனாளிகள் 800,000 பேருக்கான 8500 ரூபாய் கொடுப்பனவும் மிக வறுமையானவர்களுக்காக மாதாந்தம் 15,000 கொடுப்பனவும் 2023 ஜூலை 01 முதல் மூன்று வருட காலத்திற்கு வழங்கப்படவுள்ளன.

தற்போது நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளும்72,000 மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்தம் 5000 ரூபாய் வீதமும், சிறுநீரக பாதிப்புக்கான நிவாரணங்களை பெறும் 39,150 பேருக்கு 5000 ரூபாய் வீதமும் முதியவர்களுக்கான கொடுப்பனவுகளை பெறும் 416,667 பேருக்கு 2000 ரூபாய் என்ற அடிப்படையிலும் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

மேற்படி நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள 340 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து 3,712,096 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு திட்டத்திற்கு தகுதியானவர்களை கண்டறிவதற்கான திட்டத்தில் தகவல்களை சரிபார்க்கும் பணிகளில் 91.5 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

பிரதேச செயலாளர் பிரிவுகளில் மூவர் அடங்கிய தெரிவுக்குழு ஒன்றின் கீழ் தகவல்கள் பரிசீலிக்கப்பட்டு மாவட்டச் செயலாளரின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.

மிகவேகமாகப் பணவீக்கம் வீழ்ச்சி

0

எதிர்பார்க்கப்பட்டதை விடவும் மிகவேகமாகப் பணவீக்கம் வீழ்ச்சியடைந்துவரும் நிலையில், அதற்கு சமாந்தரமாக வட்டிவீதங்களும் வீழ்ச்சியடையுமென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எதிர்வுகூறியுள்ளார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (09) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொருளியல் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய ஆளுநர் நந்தலால் வீரசிங்க, ‘பணவீக்கம் நாம் எதிர்பார்த்ததை விடவும் மிகவேகமாக வீழ்ச்சியடைந்துவருகின்றது. அதனுடன் இணைந்ததாக உயர்மட்டத்தில் காணப்பட்ட வட்டிவீதங்கள் தற்போது வீழ்ச்சியடைந்து வருகின்றன’ என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி கடன்மறுசீரமைப்புச் செயன்முறை தொடர்பில் முழுமையாக அறிவித்ததன் பின்னர், சந்தை வட்டிவீதங்கள் மேலும் விரைவாக வீழ்ச்சியடையுமென எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு பணவீக்கமானது இவ்வாண்டின் பின்னரைப்பகுதியில் தாம் ஏற்கனவே எதிர்வுகூறிய மட்டத்தை அடையுமெனவும் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் கடன்மறுசீரமைப்பை மேற்கொள்ளும்போது வங்கிக்கட்டமைப்பின் உறுதிப்பாட்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும், பொதுமக்களின் வைப்புக்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உத்தரவாதமளித்துள்ளார்.

அரச பணியாளர்கள் இன்று முதல் சேவைக்கு

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரச பணியாளர்களை மீண்டும் பணியில் இணைப்பது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, உள்ளூராட்சி மன்ற வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த அரச பணியாளர்கள் தாங்கள் வேட்பாளராக போட்டியிடும் தொகுதியில் பணிபுரிந்தால், அதற்கு வெளியே உள்ள அரச அல்லது அரச அனுசரணை பெற்ற நிறுவனங்களுக்கு இடமாற்றம் பெற்று பணியில் இணைய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த அரச பணியாளர்கள் இன்று (9) முதல் அந்தந்த நிறுவனங்களின் தலைவர்களால் நியமிக்கப்பட்ட பணியிடங்களில் பணிக்கு சமுகமளிக்க முடியுமென அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறைகள்

0
அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறைகளை ஸ்தாபிக்க அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டினருக்காக, நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் இவ்வாறான கட்டணம் செலுத்தும் அறைகள் ஸ்தாபிக்கப்படவுள்ளன.

அரசாங்க வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறைகள் அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு முன்மொழிவில் தெரிவித்திருந்தார்.

தனியார் வைத்தியசாலைகளில் செலவு அதிகமாக இருப்பதால், அரச வைத்தியசாலைகளிலும் கட்டணம் செலுத்தும் அறைகளை ஸ்தாபிக்குமாறு பொதுமக்கள் வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த திட்டம் முன்மொழியப்படுவதாக ஜனாதிபதி பாதீட்டு உரையில் தெரிவித்தார்.

அதன்படி, முதற்கட்டமாக தேசிய வைத்தியசாலைகளில் இந்த கட்டணம் செலுத்தும் முறைமை அறிமுகப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

0
வத்தளை – ஹெந்தலை பிரதேசத்தில் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சுமார் ஒரு கிலோகிராம்  14 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தளையைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே நேற்று (8) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர்களிடம் இருந்து, சட்டவிரோதமான வழியில் ஈட்டப்பட்டதாகக் கருதப்படும் 15 இலடட்சம் ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இன மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசிய சரத் வீரசேகர

0
வடக்கில் அமைக்கப்பட்டுள்ள விகாரைகள் சட்டவிரோதம் என்றால் தெற்கில் அமைக்கப்பட்டுள்ள இந்து ஆலயங்களும் சட்டவிரோதமானவையே என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட தொடர் போராட்டம் தொடர்பில்  ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றார்கள்.

அவர்கள் தங்கள் குல தெய்வங்களை வழிபட அந்தந்த இடங்களில் சிறிய மற்றும் பெரிய ஆலயங்களை அமைத்திருக்கின்றார்கள். அதேபோல் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் பௌத்தர்கள் வாழ்வதற்கு முழு உரித்தும் உண்டு.

வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்தர்கள் வாழ முடியாது என்று எந்தவொரு சட்டமும் இல்லை.

வடக்கில் பௌத்தர்கள் வாழ்கின்றார்கள். இராணுவத்தினர் இருக்கின்றார்கள். அவர்கள் வழிபட விகாரைகள் அமைப்பதில் தவறில்லை என தெரிவித்துள்ளார்.

மனைவியை நண்பர்களுடன் உறவுகொள்ள வற்புறுத்திய கணவன்

0
கணவன் ஆபாச திரைப்படங்களில் வரும் பாலியல் காட்சிகள் போன்று தனது மனைவியை வற்புறுத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

அந் நபரை வெல்லம்பிட்டிய பொலிஸார் நேற்று (7) கைது செய்துள்ளனர்.

ஐஸ் போதைப்பொருளுக்கு அதிக அடிமையாகியுள்ள இந்த சந்தேக நபர். ஆபாசப் படங்களுக்கும் அடிமையாகியுள்ளார்.

அந்தப் படங்களில் உள்ள பாலுறவு சைகைகளைப் பின்பற்றி தமது நண்பர்களுடன் உடலுறவு கொள்ள வேண்டுமென சந்தேகநபரான கணவர் நிர்பந்தித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சந்தேக நபரின் அழுத்தத்தை தாங்க முடியாமல் அவரது மனைவி வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சேகுவேராவை கைதுசெய்தவர் காலமானார்

0

கியுப புரட்சியாளர் சேகுவேராவை  கைதுசெய்த பொலிவிய ஜெனரல் காலமானார்.

சேகுவேராவை கைதுசெய்ததன் மூலம் தேசிய நாயகனாக மாறிய கரி பிரடோ சல்மன் 84 வயதில் காலமானார்

அமெரிக்காவின் ஆதரவுடன் 1967 இல் பொலிவியாவில் கரிபிரடோ சல்மன் முன்னெடுத்த இராணுவநடவடிக்கையே இடதுசாரிகளின் புரட்சியை அந்த நாட்டில் ஒடுக்கியது.

அக்காலப்பகுதியில் பொலிவியாவில் வலதுசாரி இராணுவ ஆட்சியாளர்கள் ஆட்சியிலிருந்தனர்.

சேகுவேராவை கைதுசெய்த இராணுவ அதிகாரியொருவர் அவரை சுட்டுக்கொன்றார்.

அமெரிக்காவிற்கும் ரஸ்யாவிற்கும் இடையில் பனிப்போர் உச்சத்திலிருந்த அந்த காலப்பகுதியில் சேயின் நடவடிக்கைகள் குறித்தும் இலத்தீன் அமெரிக்காவில் இடதுசாரிகளின் செல்வாக்கு குறித்தும் அமெரிக்கா கவலை கொண்டிருந்தது.

 

1959ம் ஆண்டு கியுப புரட்சியின் வெற்றியின் பின்னர் ஏனைய நாடுகளில் கெரில்லா இயக்கங்களை முன்னெடுப்பதற்காக சேகுவேரா அங்கிருந்து வெளியேறினார்.

பிடல்கஸ்டிரோவின் நெருங்கிய நண்பரான சே சர்வதேச அளவில் இடதுசாரிகளின் கதாநாயகனாக மாறினார்.

ஜெனரல் பிராடோவின் மகன் தனது தந்தையை அசாதாரண நபர் என விவரித்துள்ளார்.

தனது தந்தை அன்பு நேர்மை மற்றும் தைரியம் ஆகியவற்றின் பாராம்பரியத்தை விட்டுச்சென்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேகுவேராவை சுட்டுக்கொன்ற பொலிவிய இராணுவ அதிகாரி மரியோ டெரன் கடந்தவருடம் உயிரிழந்தார்.

சேயின் குழுவினரை ஒழித்தமைக்காக ஜெனரல் பிராடோ பொலிவியாவின் இராணுவ ஆட்சியாளர்களை காப்பாற்றிய தேசிய வீரர் என கருதப்பட்டார்.

பொலிவியாவில் தொலைதூரத்தில் உள்ள வனப்பகுதியில் மறைந்த சே குழுவினருக்கு எதிரான நடவடிக்கைகளிற்கு  பிராடோ தலைமை தாங்கினார்.

தவறுதாக துப்பாக்கிகுண்டொன்று முதுகெலும்பை தாக்கியதை தொடர்ந்து சக்கரநாற்காலியை பயன்படுத்தவேண்டிய நிலைக்கு பிராடோ தள்ளப்பட்டார்.

நான் எப்படி சேகுவேராவை  கைதுசெய்தேன் என அவர் நூல் ஒன்றை எழுதினார்.

மஹிந்தவை மீண்டும் பிரதமராக்குவோம்

0

அரசியல் சூழ்ச்சி,அரசியல் நெருக்கடி ஆகியவற்றின் ஊடாக மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க வேண்டிய தேவை கிடையாது.

மக்களாணையுடன் மீண்டும் அவரை பிரதமராக்குவோம். பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை முழுமையாக ஏற்றுக்கொள்பவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்போம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

அடுத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ என அரசியல் களத்தில் குறிப்பிடப்படும் விடயம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவை தற்போது கிடையாது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் தினேஷ் குணவர்தனவை பிரதமராக நியமிக்க கட்சி என்ற ரீதியில் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அதற்கு இணக்கம் தெரிவித்தார்.

பெரும்பான்மை பலத்தை வைத்துக் கொண்டு கட்சி என்ற ரீதியில் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளோம்.

ஜனாதிபதி,பிரதமர் ஆகியோரை நாங்களே தெரிவு செய்தோம்.ஆகவே பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவை ஏதும் கிடையாது.

அரசியல் சூழ்ச்சி,அரசியல் நெருக்கடி ஆகியவற்றின் ஊடாக மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க வேண்டிய தேவை கிடையாது.

மக்களாணையுடன் மீண்டும் அவரை பிரதமராக்குவோம்.தேர்தல் ஒன்று இடம்பெற்றாமல் எமது பலத்தை மீண்டும் உறுதிப்படுத்துவோம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளமை அவரது தனிப்பட்ட கருத்தாகும்.

அதற்கும் கட்சிக்கும் தொடர்பில்லை.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டால் ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஆதரவு வழங்கலாம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைளை முழுமையாக ஏற்றுக் கொண்டு அதனை செயற்படுத்துபவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்போம்.

எக்காரணிகளுக்காகவும் கட்சி கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்.எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் சகல தேர்தல்களிலும் எமது கட்சியை முன்னிலைப்படுத்தி செயற்படுவோம்.

அமைச்சரவை தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.நிலையான அமைச்சரவை ஒன்றை அமைக்கும் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எட்டு சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதியிடம் இரண்டு முறை எழுத்து மூலமாக வலியுறுத்தினோம். ஆனால் இதுவரை அதற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை.

2023 ஆம் ஆண்டு வரவு – செலவு திட்டத்தின் பின்னர் அமைச்சரவை மறுசீரமைப்பு என்று குறிப்பிடப்பட்டது.அதன் பின் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொண்டதன் பின்னர் அமைச்சரவை மறுசீரமைப்பு என குறிப்பிடப்பட்டது.

ஆனால் இதுவரை நிலையான அமைச்சரவை ஸ்தாபிக்கப்படவில்லை.அமைச்சரவை தொடர்பில் இனி கட்சி மட்டத்தில் ஜனாதிபதியுடன் எவ்வித பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட போவதில்லை.அமைச்சு பதவி இல்லாவிடினும் அரசாங்கத்தின் சிறந்த தீர்மானங்களுக்கு கட்சி என்ற ரீதியில் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.