Tuesday, December 23, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 241

82 அமைப்பின் அனுசரணையில் நாகவில்லில் ஹஜ் விழா

0

82 பிரண்ட்ஸ் போறேவேர் அமைப்பின் இணை அனுசரணையில் ஹஜ் விழா 2022 நிகழ்வுகள் புத்தளம் எருக்கலம்பிட்டியில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.

புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு கடந்த 11,12 மற்றும் 13 ஆகிய மூன்று தினங்களாக இடம்பெற்ற ஹஜ் விளையாட்டு விழா 2022 நிகழ்வுகள் நேற்று மாலையுடன் நிறைவுக்கு வந்தது.

தொடர்ச்சியாக மன்னார் எருக்கலம்பிட்டியில் இடம்பெற்றுவந்த ஹஜ் விழா நிகழ்வுகள் இம்முறை எரிபொருள் சிக்கல் மற்றும் போக்குவரத்து பிரச்சினை காரணமாக புத்தளம் எருக்கலம்பிட்டியில் நடத்தப்பட்டது.

நாகவில்லு முஸ்லீம் காங்கிரஸ் ஏட்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளை 82 பிரண்ட்ஸ் போறேவேர் அமைப்பினர் மிகவும் சிறப்பாக நடாத்தி முடித்ததுடன் நிகழ்வுக்கு இணை அனுசரணையும் வழங்கினர்.

சுமார் இருபதுக்கும் அதிகமான கழகங்கள் பங்குபற்றிய உதைப்பந்தாட்ட போட்டிகள் மூன்று தினங்களும் விழாவை அலங்கரித்தன.

பாரிய சிரமங்களுக்கு மத்தியில் மன்னாரில் இருந்து வருகை தந்து போட்டியில் கலந்துகொண்ட எருக்கலம்பிட்டி யங் ஹீரோஸ் அணியினர் அரையிறுதி போட்டியுடன் வெளியேறினார்

EYMA  மற்றும் எருக்கலம்பிட்டி யூத் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற அரையிறுதி போட்டியில் பெனால்டி முறையில் EYMA அணி வெற்றிபெற்றதுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.

எருக்கலம்பிட்டி யங் ஹீரோஸ் மற்றும் எருக்கலம்பிட்டி யங் யூனைடெட் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் பெனால்டி முறையில் எருக்கலம்பிட்டி யங் யூனைடெட் அணி வெற்றிபெற்றதுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.

EYMA மற்றும் எருக்கலம்பிட்டி யங் யூனைடெட் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் EYMA அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்தனர்.

மேலும் பார்வையாளர்களை கவரும் விதத்தில் ஏட்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சிப் போட்டி ஒன்றும் இம்மைதானத்தை மேலும் அலங்கரித்தது.

இதேவேளை இரண்டு தினங்களாக மின்னொளியில் இடம்பெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி யூத் அணியினர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி கிண்ணத்தை சுவீகரித்தனர்.

இறுதி தினமான நேற்றைய தினம் இடம்பெற்ற மைதான நிகழ்ச்சிகள் வருகை தந்திருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்ததுடன் பரிசளிப்பு நிகழ்வுகளுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுக்கு வந்தது.

குறித்த நிகழ்வில் பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் 82 பிரண்ட்ஸ் போறேவேர் அமைப்பினர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நாகவில்லுவில் பரிசளிப்பு விழா 2021

0

நாகவில்லு YMMA பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வு நேற்று 19.06.2021 ஞாயிற்றுக்கிழமை  புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

நாகவில்லு YMMA பாலர் பாடசாலையின் தலைவர் ஜனாப் AG நவாஸ்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட மாணவர்கள் சுமார் 44 பேர் கலந்துகொண்டனர்.

சிறார்களின் கண்கவர் விளையாட்டு நிகழ்வுகள் மைதானத்தை அலங்கரித்ததுடன் பார்வையாளர்களுக்கும் மிகுந்த சந்தோசத்தை ஏற்படுத்தியது.

2021 ஆம் ஆண்டு குறித்த பாலர் பாடசாலையில் கல்விகற்று வெளியாகிய மாணவர்களின் பிரியாவிடையும் மேடை நிகழ்வுகளும் சிறப்பாக அமைந்திருந்தது.

குறித்த பாலர் பாடசாலையில் கல்விகற்று வெளியாகிய மற்றும் போட்டிகளில் வெற்றிபெற்ற சிறார்களுக்கு நினைவுச் சின்னங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் பு/எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்து சிறப்பித்தமை விஷேட அம்சமாகும்.

 

எருக்கலம்பிட்டி வைத்தியருக்கு உயரிய விருது

0

அகில இலங்கை ஆயுர்வே தவைத்திய சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யபட்டிருந்த விருது வழங்கல் மற்றும் வருடாந்த கூட்டம் 2022.6.17 இன்று குருநாகல் ஆயுர்வேத திணைக்களத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இதில் ஆயுர்வேததுறையில் ஆயுர்வேத மருந்து உற்பத்தி, ஆயுர்வேத மூலிகை பண்னை, தொழில் பயிற்சி நிலையம், ஆயுர்வேத கல்வி நிலையம், பாரம்பரிய அருங்காட்சியகம், ஆகிய முக்கிய அம்சங்கள் உள்வாங்கப்பட்டு மிகவும் வெற்றிகரமாக செயற்படும் வைத்தியர்களுக்கு மாத்திரம் “ஆயுர்வேத விசாரித பண்டித” விருது வழங்கப்படுகிறது.

இவ்விருது எருக்கலம்பிட்டியை சேர்ந்த தேசகீர்த்தி, தேசபந்து, தேசமான்ய, வைத்திய சிரோன்மனி Dr.பி.எம்.எம்.சாலின் அவர்களுக்கு இன்றைய தினம் கிடைக்கபெற்றுள்ளது.

மன்னார் எருக்கலம்பிட்டியில் தனது ஆரம்பக்கல்வியை பூர்த்தி செய்த Dr.பி.எம்.எம். சாலின் அவர்களுக்கு
கடந்த ஏப்ரில் மாதம் 29ம் திகதி பதுளை ஆயுர்வேத சம்மேளனத்தினால் “வைத்திய சிரோன்மணி எனும் விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இவ்விருதினை இலங்கையில் பெற்றுக்கொண்ட ஒரே ஒரு முஸ்லிம் வைத்தியர் எருக்கலம்பிட்டியை சேர்ந்த  Dr.பி.எம்.எம்.சாலின் என்பது குறிப்பிடதக்கது.

இவரின் இவ்வளர்ச்சிக்கு ஊர் மக்கள் மற்றும் வைத்திய சமூகத்தினர் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமை விஷேட அம்சமாகும்.

மர்ஹூம் ஹில்மி அவர்களின் நினைவாக திறந்த வகுப்பறை

0

மன்னர் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் பழைய மாணவரும், எருக்கலம்பிட்டி றினைசன்ஸ் அமைப்பின் ஸ்தாபக உறுப்பினருமான மர்ஹூம் அலாவுதீன் முகம்மது ஹில்மி அவர்களின் நினைவாக மன்னர் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரிக்கு திறந்த வகுப்பறை ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

எருக்கலம்பிட்டி றினைசன்ஸ் அமைப்பின் பூரண அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த திறந்த வகுப்பறை கடந்த 13.06.2022 திங்கட்கிழமை பாடசாலை அதிபர் ஜனாப் N.M. ஷாபி அவர்களின் தலைமையில் பாடசாலை மாணவர்களின் பாவனைக்கு திறந்துவைக்கப்பட்டது.

18.11.1968 ஆம் ஆண்டு பிறந்த மர்ஹூம் அலாவுதீன் முகம்மது ஹில்மி சிறு வயது முதல் கல்வியில் அதிக ஆர்வம்கொண்டு விளங்கியதுடன் விளையாட்டிலும் அதீத திறமைகொண்டவராக திகழ்ந்தார்.

கடந்த ஆண்டு 05.07.2021 எம்மை விட்டும் பிரிந்த மர்ஹூம் அலாவுதீன் முகம்மது ஹில்மி அவர்களின் மறுமை வாழ்வுக்காகவும், சதகத்துல் ஜாரியா எனும் நிரந்தர நன்மையை நாடியும் அவரின் நண்பர்களினால் குறித்த திறந்த வகுப்பறை அன்னாரின் தகப்பனாரும் ஓய்வுபெற்ற ஆசிரியருமான அல்ஹாஜ் M.S. அலாவுதீன் அவர்களின் கரங்களால் திறந்துவைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வின் சிறப்பு அதிதியாக மன்னர் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு. G.D. தேவராஜா கலந்துகொண்டதுடன், எருக்கலம்பிட்டி றினைசன்ஸ் அமைப்பினர், பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி குழுவினர், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் நலன்விரும்பிகளும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் விசேட ஒன்றுகூடல்

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் விசேட ஒன்றுகூடல் இன்று 05.06.2022 ஞாயிற்றுக்கிழமை புத்தளம் நீச்சல் தடாக வளாகத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் புத்தளம் எருக்கலம்பிட்டி கிளையின் மத்திய குழு மற்றும் இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் பூரண அனுசரணையில் மேட்படி ஒன்றுகூடல் இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் விருட்சத்தின் விழுதுகள் எனும் தலைப்பில் ஏட்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தேசியத் தலைவர் அல்ஹாஜ் றவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

நாட்டில் ஏட்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியினை அடிப்படையாகக் கொண்டு அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படவேண்டிய முக்கிய நகர்வுகல் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

விசேடமாக புத்தளம் எருக்கலம்பிட்டி ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் போராளிகளுக்காக ஏட்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த நிகழ்வில் புத்தளம் நகரசபை தலைவர் ஜனாப் S.M ரபீக் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

நண்பகல் ஆரம்பமான இந்நிகழ்வு பகல் போஷணையை தொடர்ந்து மாலை வரை இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில்  ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் ஜவ்பார் மரைக்கார், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜனாப் நியாஸ், ஜனாப் பைரோஸ், புத்தளம் நகரசபை உறுப்பினர்கள் மற்றும் புத்தளம் எருக்கலம்பிட்டி ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் போராளிகள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் லீக் போட்டியில் 2ஆம் இடம்பெற்ற எருக்கலம்பிட்டி அணி

0

மர்ஹூம் கே.ஏ. பாயிஸ் அவர்களின் ஜாபகார்த்தமாக புத்தளம் நகரசபையினால் நடாத்தப்பட்ட புத்தளம் லீக் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இருதிப்போட்டி எருக்கலம்பிட்டி எப்.சி மற்றும் புத்தளம் லிவர்பூல் அணியினருக்கிடையில் நேற்று புத்தளம் மாவட்ட மைதானத்தில் இடம்பெற்றது.

போட்டியின் முதல் பாதிவரை இரு அணிகளும் மிகச்சிறப்பாக விளையாடியதன் மூலம் எதுவித கோல்களும் இன்றி முதல் பாதி முடிவுற்றது. இரண்டாவது பாதியில் மிகவும் அபாரமாக விளையாடிய புத்தளம் லிவர்பூல் அணி 3 கோல்கள் அடித்து வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது.

புத்தளம் லிவர்பூல் அணி வீரர் நஸ்ரின் ஹெட்ரிக் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

போட்டியின் இறுதிவரை போராடிய எருக்கலம்பிட்டி எப்.சி அணி போட்டியின் இறுதி நேரத்தில் கோல் ஒன்று அடித்து எருக்கலம்பிட்டி ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சி அழித்தனர்.

எருக்கலம்பிட்டி எப்.சி அணி சார்பாக அஸ்கான் ஒரு கோலினை அடித்து அணிக்கு ஆறுதல் அளித்தார்.

இப்போட்டியின் சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த வெற்றிபெற்ற புத்தளம் லிவர்பூல் அணிக்கு 30ஆயிரம் ரூபா பணப்பரிசு மற்றும் வெற்றிக்கிண்ணம் வழங்கிவைத்தார்.

இப்போட்டியின் கௌரவ அதிதியாக கலந்துகொண்ட இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் அவர்களினால் தொடர் சுற்றின் இரண்டாம் இடத்தைப் பெற்ற எருக்கலம்பிட்டி எப்.சி அணியினருக்கு 20ஆயிரம் ரூபா பணப்பரிசு மற்றும் கிண்ணம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நேற்றைய நிகழ்வில் புத்தளம் நகரசபை தலைவர் ஜனாப் எம்.எஸ்.எம். ரபீக், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர், இலங்கை சுங்கத்திணைக்கள அதிகாரி லுக்மான் சஹாப்தீன், மன்னார் பிரதேச சபை தலைவர் இஸ்மாயீல் இஸ்ஸதீன் மற்றும் ஏனைய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

 

புத்தளம் உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டிக்கு எருக்கலம்பிட்டி அணி தெரிவு

0

மர்ஹூம் கே.ஏ. பாயிஸ் அவர்களின் ஜாபகார்த்தமாக நடாத்தப்பட்டுவரும் புத்தளம் லீக் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இருதிப்போட்டிக்கு எருக்கலம்பிட்டி எப்.சி மற்றும் புத்தளம் லிவர்பூல் அணியினர் தகுதிபெற்றுள்ளனர்.

குறித்த சுற்றுப்போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டியி புத்தளம் அல் அஷ்ரா மற்றும் புத்தளம் லிவர்பூல் அணிகளுக்கிடையில் இடம்பெற்றது. இப்போட்டியில் புத்தளம் லிவர்பூல் அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

இன்றைய தினம் எருக்கலம்பிட்டி எப்.சி மற்றும் நியூ ப்ரணட்ஸ் அணிகளுக்கிடையான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் எருக்கலம்பிட்டி எப்.சி அணியினர் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

இன்றைய தினம் இடம்பெற்ற போட்டியின் முதல் பாதியில் நியூ ப்ரணட்ஸ் அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரு கோலினை அடித்து வலுவான நிலையில் இருந்தனர். இரண்டாவது பாதியில் மிகவும் சிறப்பாக விளையாடிய எருக்கலம்பிட்டி எப்.சி அணியினர் இரண்டு கோல்கள் அடித்து வெற்றிபெற்றனர்.

எருக்கலம்பிட்டி எப்.சி அணி சார்பாக ரக்‌ஷான் மற்றும் பாஸில் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

எருக்கலம்பிட்டி எப்.சி மற்றும் புத்தளம் லிவர்பூல் அணிகள் எதிர்வரும் 25ஆம் திகதி புத்தளம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இறுதிப்போட்டியில் மோதவுள்ளனர்.

இன்றைய தினத் இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, புத்தளம் நகரபிதா எஸ்.எம்.ரபீக் மற்றும் புத்தளம் நகரசபை உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

மர்ஹூம் ஏ.சி. அப்துல் ஹக் அவர்களின் 10வது ஆண்டு நினைவு மலர் வெளியீடு

0

முன்னைநாள் மன்னார் பிராந்திய கல்விப் பணிப்பாளர் eruk

மன்னார் மடுமாதா சிறிய குருமடத்தின் அதிபர் அருட்பணி தமிழ்நேசன் அடிகளாரின் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (11.03.2022) மாலை 4 மணியளவில் மன்னார் நகரசபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற இவ் விழாவில் முதன்மை விருந்தினராக மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்கள் கலந்து கொண்டார்.

அத்துடன் இதில் சிறப்பு விருந்தினர்களாக மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் செல்வி தேவராஜா தேவதயாழினி முன்னாள் மன்னார் அரசாங்க அதிபர் எஸ்.மரியதாசன் குரூஸ் முன்னாள் மன்னார் அரசாங்க அதிபர் வி. விஸ்வலிங்கம் இவர்களுடன் மேலும் கௌரவ விருந்தினர்களாக முன்னாள் மன்னார் வலயக் கல்விப்பணிப்பாளர்கள் எம். ஆபேல் றெவல் திருமதி எஸ். சுகந்தி செபஸ்ரியான் மற்றும் முன்னாள் மடு வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி எஸ். மாலினி வெனிற்றன் ஆகியோரும் இவ் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ் விழாவில் கலந்து கொண்ட மன்னார் மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபர்கள் வலயக் கல்விப்பணிப்பாளர்கள் அமரர் ஹக் சேர் அவர்களுடன் யுத்த சூழ்நிலை கடுமையாக இருந்த காலத்தில் பணியாற்றிய அந்தநாள் ஞாபகங்களையும் அவரின் மனிதநேய பணிகளையும் எடுத்தியம்பினர்.

‘ஹக் சேர்’ என்ற நூலை மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை ஹக் சேர் அவர்களின் மனைவிக்கு முதல் புத்தகத்தை வழங்கி வெளியீட்டை ஆரம்பித்துவைத்தார்.

இந் நூலுக்கான நயப்புரையை இந்து நாகரிய ஆசிரிய ஆலோசகர் திரு ச. ரமேஸ் வழங்கினார்.

மன்னார் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் திருமதி வி. மேரி சியாளினி மற்றும் செல்வி அருள்மொழி குரூஸ் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் இறை வணக்க நிகழ்வையும் மேற்கொண்டதுடன், மன்னார் பரதக் கலாலயா நாட்டியப் பள்ளி மாணவிகளால் நடனங்களும் இடம்பெற்றதுடன் இந் நிகழ்வை ஓய்வுநிலை கிராம அலுவலர்களின் பொறுப்பாளராக திகழ்ந்த ராதா பெனாண்டோ தொகுத்து வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

மன்னார் பிராந்திய கல்விப் பணிப்பாளர் மர்ஹும் ஏ.சி.அப்துல் ஹக் சேர் காலத்தில் அவருடன் பணியாற்றியவர்கள் பலர் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கல்வியாளர் ஹக் சேர் அவர்களின் ஞாபகர்த்தமாக புத்தகம் வெளியீடு செய்யப்பட்டது மாத்திரமல்ல இவ் நிகழ்வில் கலந்துகொண்ட யாவருக்கும் அவரின் ஞாபகர்த்தமாக அவரின் குடும்பத்தினர் சுவர் கடிகாரங்களை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

புத்தளம் பி.ச.உறுப்பினர் ரிஜாஜினால் வீதி புனரமைப்பு

0

புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் எஸ்.எம்.ரிஜாஜ் அவர்களினால் பொத்துவில்லு பிரதான வீதியின் ஒரு பகுதி புனரமைக்கப்பட்டு மீண்டும் மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாட்டில் பெய்த தொடர் மழை காரணமாக நாட்டின் பல பாகங்களும் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் புத்தளம் நாகவில்லு பகுதி அதிகமான பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது.

அதிலும் நாகவில்லு, பொத்துவில்லு பிரதான வீதியின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்து மக்கள் பயணங்கள் மேற்கொள்ள முடியாமல் மிகவும் சிறமப்பட்டனர்.

இவ்வாரு பாதிக்கப்பட்ட வீதியினை மிக அவசரமாக திருத்தம் செய்ய பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் எஸ்.எம்.ரிஜாஜ் அவர்களினால் பல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அந்த வகையில் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு வீதி திருத்தும் பணிக்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தன.

பிரதேச சபை உறுப்பினரின் குறித்த வேண்டுகோளுக்கினங்க மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நாகவில்லு, பொத்துவில்லு பிரதான வீதியின் பாதிக்கப்பட்ட வீதி சுமார் 107 மீட்டர் நீளமும் 12 அடி அகலமும் கொங்கிரீட் இடப்பட்டு செப்பனிடப்பட்டு வீதி புனரமைக்கப்பட்டு  நிறைவுசெய்யப்பட்டுள்ளது.

குறித்த வீதியின் ஊடாகவே பொத்துவில்லு மற்றும் அட்டவில்லு பிரதேச மக்கள் பயணங்கள் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முற்றாக சேதமடைந்திருந்த பொத்துவில்லு பிரதான வீதியின் குறித்த பகுதியை முழுமையாக திருத்தி தந்தமைக்காக பொத்துவில்லு மற்றும் அட்டவில்லு பிரதேச மக்கள் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் எஸ்.எம்.ரிஜாஜ் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், புத்தளம் எருக்கலம்பிட்டி (நாகவில்லு) மக்கள் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளமை விஷேட அம்சமாகும்.

நாகவில்லு பாடசாலைக்கு பழைய மாணவர் சங்கத்தினால் குழாய் நீர் வசதி

0

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு இன்றை தினம் 07.03.2022 திங்கள் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினால் குழாய் கிணறு மற்றும் நீர் தாங்கி நிர்மானிக்கப்பட்டு பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

புத்தளம் எருக்கலம்பிட்டி மு.ம.வி. பழையமாணவர் சங்கத்தின் வேண்டுகோளுக்கினங்க புத்தளம் சமூக ஆர்வளர் திரு சஜாப் அவர்களின் முயற்சியால் இன்றைய தினம் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாவனைக்கு குழாய் கிணறு மற்றும் நீர் தாங்கி நிர்மானிக்கப்பட்டு பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

பழையமாணவர் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று மிக குறிய காலத்தில் நிர்மானித்து தந்த புத்தளம் சமூக ஆர்வளர் திரு சஜாப் அவர்களுக்கு பாடசாலை பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலைச் சமூகத்தினால் நன்றி தெரிவிக்கப்பட்டது.

சுமார் மூன்று லட்சம் செலவில் பாடசாலை பள்ளிவாசலுக்கு அருகில் நிர்மானிக்கப்பட்ட இக்குழாய் கிணற்றின் மூலம் பாடசாலை மாணவர்கள் அனைவரும் பயன்பெறுவார்கள் என பாடசாலை அதிபர் திரு எஸ்.எம். ஹுசைமத் தெரவித்தார்.

குறித்த நிகழ்வில் பள்ளிவாசல் இமாம், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்ததுடன், சிற்றுண்டி நிகழ்வுடன் இவ் வைபவம் நிறைவுபெற்றமை குறிப்பிடத்தக்கது.