Thursday, January 22, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 248

இன மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசிய சரத் வீரசேகர

0
வடக்கில் அமைக்கப்பட்டுள்ள விகாரைகள் சட்டவிரோதம் என்றால் தெற்கில் அமைக்கப்பட்டுள்ள இந்து ஆலயங்களும் சட்டவிரோதமானவையே என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட தொடர் போராட்டம் தொடர்பில்  ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றார்கள்.

அவர்கள் தங்கள் குல தெய்வங்களை வழிபட அந்தந்த இடங்களில் சிறிய மற்றும் பெரிய ஆலயங்களை அமைத்திருக்கின்றார்கள். அதேபோல் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் பௌத்தர்கள் வாழ்வதற்கு முழு உரித்தும் உண்டு.

வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்தர்கள் வாழ முடியாது என்று எந்தவொரு சட்டமும் இல்லை.

வடக்கில் பௌத்தர்கள் வாழ்கின்றார்கள். இராணுவத்தினர் இருக்கின்றார்கள். அவர்கள் வழிபட விகாரைகள் அமைப்பதில் தவறில்லை என தெரிவித்துள்ளார்.

மனைவியை நண்பர்களுடன் உறவுகொள்ள வற்புறுத்திய கணவன்

0
கணவன் ஆபாச திரைப்படங்களில் வரும் பாலியல் காட்சிகள் போன்று தனது மனைவியை வற்புறுத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

அந் நபரை வெல்லம்பிட்டிய பொலிஸார் நேற்று (7) கைது செய்துள்ளனர்.

ஐஸ் போதைப்பொருளுக்கு அதிக அடிமையாகியுள்ள இந்த சந்தேக நபர். ஆபாசப் படங்களுக்கும் அடிமையாகியுள்ளார்.

அந்தப் படங்களில் உள்ள பாலுறவு சைகைகளைப் பின்பற்றி தமது நண்பர்களுடன் உடலுறவு கொள்ள வேண்டுமென சந்தேகநபரான கணவர் நிர்பந்தித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சந்தேக நபரின் அழுத்தத்தை தாங்க முடியாமல் அவரது மனைவி வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சேகுவேராவை கைதுசெய்தவர் காலமானார்

0

கியுப புரட்சியாளர் சேகுவேராவை  கைதுசெய்த பொலிவிய ஜெனரல் காலமானார்.

சேகுவேராவை கைதுசெய்ததன் மூலம் தேசிய நாயகனாக மாறிய கரி பிரடோ சல்மன் 84 வயதில் காலமானார்

அமெரிக்காவின் ஆதரவுடன் 1967 இல் பொலிவியாவில் கரிபிரடோ சல்மன் முன்னெடுத்த இராணுவநடவடிக்கையே இடதுசாரிகளின் புரட்சியை அந்த நாட்டில் ஒடுக்கியது.

அக்காலப்பகுதியில் பொலிவியாவில் வலதுசாரி இராணுவ ஆட்சியாளர்கள் ஆட்சியிலிருந்தனர்.

சேகுவேராவை கைதுசெய்த இராணுவ அதிகாரியொருவர் அவரை சுட்டுக்கொன்றார்.

அமெரிக்காவிற்கும் ரஸ்யாவிற்கும் இடையில் பனிப்போர் உச்சத்திலிருந்த அந்த காலப்பகுதியில் சேயின் நடவடிக்கைகள் குறித்தும் இலத்தீன் அமெரிக்காவில் இடதுசாரிகளின் செல்வாக்கு குறித்தும் அமெரிக்கா கவலை கொண்டிருந்தது.

 

1959ம் ஆண்டு கியுப புரட்சியின் வெற்றியின் பின்னர் ஏனைய நாடுகளில் கெரில்லா இயக்கங்களை முன்னெடுப்பதற்காக சேகுவேரா அங்கிருந்து வெளியேறினார்.

பிடல்கஸ்டிரோவின் நெருங்கிய நண்பரான சே சர்வதேச அளவில் இடதுசாரிகளின் கதாநாயகனாக மாறினார்.

ஜெனரல் பிராடோவின் மகன் தனது தந்தையை அசாதாரண நபர் என விவரித்துள்ளார்.

தனது தந்தை அன்பு நேர்மை மற்றும் தைரியம் ஆகியவற்றின் பாராம்பரியத்தை விட்டுச்சென்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேகுவேராவை சுட்டுக்கொன்ற பொலிவிய இராணுவ அதிகாரி மரியோ டெரன் கடந்தவருடம் உயிரிழந்தார்.

சேயின் குழுவினரை ஒழித்தமைக்காக ஜெனரல் பிராடோ பொலிவியாவின் இராணுவ ஆட்சியாளர்களை காப்பாற்றிய தேசிய வீரர் என கருதப்பட்டார்.

பொலிவியாவில் தொலைதூரத்தில் உள்ள வனப்பகுதியில் மறைந்த சே குழுவினருக்கு எதிரான நடவடிக்கைகளிற்கு  பிராடோ தலைமை தாங்கினார்.

தவறுதாக துப்பாக்கிகுண்டொன்று முதுகெலும்பை தாக்கியதை தொடர்ந்து சக்கரநாற்காலியை பயன்படுத்தவேண்டிய நிலைக்கு பிராடோ தள்ளப்பட்டார்.

நான் எப்படி சேகுவேராவை  கைதுசெய்தேன் என அவர் நூல் ஒன்றை எழுதினார்.

மஹிந்தவை மீண்டும் பிரதமராக்குவோம்

0

அரசியல் சூழ்ச்சி,அரசியல் நெருக்கடி ஆகியவற்றின் ஊடாக மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க வேண்டிய தேவை கிடையாது.

மக்களாணையுடன் மீண்டும் அவரை பிரதமராக்குவோம். பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை முழுமையாக ஏற்றுக்கொள்பவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்போம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

அடுத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ என அரசியல் களத்தில் குறிப்பிடப்படும் விடயம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவை தற்போது கிடையாது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் தினேஷ் குணவர்தனவை பிரதமராக நியமிக்க கட்சி என்ற ரீதியில் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அதற்கு இணக்கம் தெரிவித்தார்.

பெரும்பான்மை பலத்தை வைத்துக் கொண்டு கட்சி என்ற ரீதியில் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளோம்.

ஜனாதிபதி,பிரதமர் ஆகியோரை நாங்களே தெரிவு செய்தோம்.ஆகவே பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவை ஏதும் கிடையாது.

அரசியல் சூழ்ச்சி,அரசியல் நெருக்கடி ஆகியவற்றின் ஊடாக மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க வேண்டிய தேவை கிடையாது.

மக்களாணையுடன் மீண்டும் அவரை பிரதமராக்குவோம்.தேர்தல் ஒன்று இடம்பெற்றாமல் எமது பலத்தை மீண்டும் உறுதிப்படுத்துவோம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளமை அவரது தனிப்பட்ட கருத்தாகும்.

அதற்கும் கட்சிக்கும் தொடர்பில்லை.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டால் ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஆதரவு வழங்கலாம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைளை முழுமையாக ஏற்றுக் கொண்டு அதனை செயற்படுத்துபவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்போம்.

எக்காரணிகளுக்காகவும் கட்சி கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்.எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் சகல தேர்தல்களிலும் எமது கட்சியை முன்னிலைப்படுத்தி செயற்படுவோம்.

அமைச்சரவை தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.நிலையான அமைச்சரவை ஒன்றை அமைக்கும் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எட்டு சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதியிடம் இரண்டு முறை எழுத்து மூலமாக வலியுறுத்தினோம். ஆனால் இதுவரை அதற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை.

2023 ஆம் ஆண்டு வரவு – செலவு திட்டத்தின் பின்னர் அமைச்சரவை மறுசீரமைப்பு என்று குறிப்பிடப்பட்டது.அதன் பின் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொண்டதன் பின்னர் அமைச்சரவை மறுசீரமைப்பு என குறிப்பிடப்பட்டது.

ஆனால் இதுவரை நிலையான அமைச்சரவை ஸ்தாபிக்கப்படவில்லை.அமைச்சரவை தொடர்பில் இனி கட்சி மட்டத்தில் ஜனாதிபதியுடன் எவ்வித பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட போவதில்லை.அமைச்சு பதவி இல்லாவிடினும் அரசாங்கத்தின் சிறந்த தீர்மானங்களுக்கு கட்சி என்ற ரீதியில் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

வேகமாக அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்

0
டெங்கு நோய் தொற்று அதிகமாக பரவியுள்ள கம்பஹா மாவட்டத்துக்கு டெங்கு நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த விசேட குழுவொன்றை இன்று அனுப்பவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நேற்றைய தினம் வரையில், நாட்டில் 31,098 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்தநிலையில், மேல் மாகாணத்தில் அதிகளவானோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், கடந்த ஆண்டு மே மாதம் வரையில் இலங்கையில் 24 ஆயிரத்து 206 டெங்கு நோயளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த வருடத்தில், டெங்கு நோய் தொற்றின் 3 ஆம் திரிபே இதற்கு பிரதான காரணம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் காட்டுத் தீ – அவசரநிலை!

0

மேற்கு கனேடிய மாகாணம் முழுவதும் பரவிய காட்டுத் தீயை அடுத்து ஆல்பர்ட்டா மாகாணத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

காட்டுத் தீ பரவலையடுத்து குறைந்தது 25,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

மாகாணத் தலைநகர் எட்சனில் வசிக்கும் 8,000 க்கும் அதிகமான மக்கள் உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மாகாணத் தலைநகர் எட்மண்டனுக்கு மேற்கே 140 கிமீ தொலைவில் உள்ள டிரேட்டன் பள்ளத்தாக்கு மற்றும் நகருக்கு வடக்கே சுமார் 550 கிமீ தொலைவில் உள்ள ஃபாக்ஸ் லேக் பகுதிகளில் 20 வீடுகள் தீயில் கருகின.

பலத்த காற்று வீசுவதால், தீயை கட்டுப்படுத்த முடியாது போயுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் மற்றும் விமான தாங்கிகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

வெளியேற்றப்பட்ட 1,000க்கும் மேற்பட்டவர்கள் எட்மண்டன் எக்ஸ்போ சென்டரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அல்பர்ட்டா ஒரு பெரிய எண்ணெய் உற்பத்தி தளமாகும். எவ்வாறாயினும், இதுவரை எண்ணெய் கிடங்குகள் ஆபத்தில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகவில்லை.

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை!

0
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில புறநகர்பகுதிகளில் நாளைய தினம் 10மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்லப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொலன்னாவ நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும், ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, எத்துல்கோட்டே, நாவல, கொஸ்வத்தை மற்றும் நாவல திறந்த பல்கலைக்கழக வளாகத்திலும் நீர் விநியோகத்தடை அமுப்படுத்தப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

நாளை முற்பகல் 10 மணிமுதல், இரவு 8 மணிவரையான காலப்பகுதியில் வரையில் நீர்விநியோகத்தடை அமுலில் இருக்கும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு

0

இறுதி காலாண்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

அரசு எதிர்பார்த்த இலக்குகளை எட்டினால், பொதுமக்கள் பயன்பெறுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் கடந்த காலாண்டுக்குள் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்ததாக பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

4 ஆளுநர்களுக்கு ஆப்பு!

0
மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து நான்கு மாகாண ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகம் பணித்துள்ளதாக அரசாங்க தகவல் தரப்புகள் தெரிவித்துள்ளன.

இதன்படி, இந்த தீர்மானம் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் வசந்த கரன்னாகொட, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் மற்றும் சப்ரகமுவ ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ ஆகியோர் இதில் உள்ளடங்குகின்றனர்.

குறித்த ஆளுநர்கள், மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயற்படாமை காரணமாகவே விலக்கப்படவுள்ளனர்.

இதேவேளை லண்டனில் நேற்று இடம்பெற்ற பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் முடிசூட்டு விழாவில் கலந்து கொண் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியவுடன் புதிய ஆளுநர்கள் விரைவில் பெயரிடப்படவுள்ளனர்.

இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானின் பெயரும் பரிந்துரையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கொவிட் தொற்றினால் மூவர் மரணம்!

0
கொவிட் தொற்றினால் நேற்று முன்தினம் (5) மூவர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (6) வெளியிடப்பட்ட கொவிட் மரண அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் 8 பேருக்கு புதிதாக கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 13 பேருக்கு நேற்றுமுன்தினம் (5) கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.