Monday, March 23, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 289

எருக்கலம்பிட்டி பொதுநல மன்றத்தின் (EWO-London)மற்றுமொரு பணி

0

எருக்கலம்பிட்டி பொதுநல மன்றத்தின் (EWO-London) மற்றுமொரு வேளைத்திட்டம் புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

எருக்கலம்பிட்டி கல்வி வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டும் எருக்கலம்பிட்டி பொதுநல மன்றத்தினால் (EWO-London)) புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நீண்ட காலமாக நிலவிவந்த வாகன தரிப்பிட வசதியின்மைக்கான தீர்வு நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாடசாலைக்கு வரும் ஆசிரியர்களின் மோட்டார் சைக்கில்கள் மற்றும் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கான இடப்பற்றாக்குறை மற்றும் தரிப்பிட வசயின்மை என்பன நீண்ட நாட்களாக நிலவி வந்துள்ள நிலையில் எருக்கலம்பிட்டி பொதுநல மன்றத்தினால் சுமார் 1லட்சத்து 25ஆயிரம் ரூபா செலவில் நிரந்தர வாகன தரிப்பிடம் ஒன்று பாடசாலை வளாகத்தினுல் அமைக்கப்பட்டு பாவனைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இவ்வருடம் க.பொ.த.(சா.த) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளும் மேற்படி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் மற்றும் எருக்கலம்பிட்டி மகளிர் வித்தியாலயத்தில் இவ்வருடம் க.பொ.த.(சா.த) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளும் எருக்கலம்பிட்டி பொதுநல மன்றத்தினால் (EWO-London) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை ஓர் சிறப்பம்சமாகும்.

கடந்த பல வருடங்களாக க.பொ.த.(சா.த) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்காக பல லட்சத்திற்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதுடன் குறிப்பிட்ட அமைப்பின் சில உறுப்பினர்கள் அவர்களின் சொந்த நிதியில் இருந்தும் பாடசாலைகளுக்கான நிதி உதவிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி அமைப்பினரால் புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாகன தரிப்பிடம் பெரிதும் பாராட்டத்தக்க விடயம் என பாடசாலை அதிபர் ஜனாப் S.M. Husaimath அவர்கள் தெரிவித்ததுடன், இவற்றை செய்து தந்தமைக்காக பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்பன எருக்கலம்பிட்டி பொதுநல மன்றத்திற்கு (EWO-London) நன்றி தெரிவிப்பதாகவும், மேலும் இது போன்ற சேவைகள் தொடர இறைவனை பிரார்த்திப்பதாகவும் எமது eNews1st இணையத்திற்கு தெரிவித்தார்.

இவர்களின் சேவைகள் தொடர eNews1st இணையச் சேவையும் வாழ்த்துவடன் இது போன்று மேலும் பல அமைப்புக்களும் முன் வந்து சமூக தேவைகளை அடையாளம் கண்டு நிவர்த்தி செய்யவேண்டியது எம் அனைவரினதும் கடமையாகும்.

“G80” அமைப்பிற்கு நன்றி தெரிவித்த முதலைப்பாலி பாடசாலை அதிபர்

0

முதலைப்பாலி பாடசாலை அதிபரின் நன்றி நவிலல்

புத்/கல்/முதலைப்பாலி முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் அறை நிரந்தர அதிபர் அறையாக அண்மையில் புதுப்பிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.

எருக்கலம்பிட்டி G80 அமைப்பினரால் குறித்த அதிபர் அறை புனரமைக்கப்பட்டு பதுப்பொழிவுடன் நிரந்தர அதிபர் அறையாக திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக நிரந்தர அதிபர் அறை ஒன்று பாடசாலையில் இல்லாமை சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து மேற்படி அமைப்பினரால் அதிபர் காரியாலயம் திருத்தம் செய்யப்பட்டு பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிபர் அறை நிரந்தர அதிபர் அறையாக மாற்றப்பட்டமையை பாராட்டி பாடசாலையின் அதிபர் , ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்பன G80 அமைப்பிற்கு நன்றி தெரிவித்து வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த அமைப்பின் பல அங்கத்தவர்கள் அப்பாடசாலையின் பழைய மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லன்டன்-எருக்கலம்பிட்டி பொதுநல மன்றத்திற்கு அதிபர் பாராட்டு

0

லன்டன்-எருக்கலம்பிட்டி பொதுநல மன்றத்தின் (EWO) இவ்வருடத்திற்கான க.பொ.த சா/த மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.

ஒவ்வொரு வருடமும் இப் பொதுநல மன்றத்தினால் மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் பாடசாலையின் க.பொ.த சா/த மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்காக இலவச வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றமை ஓர் விஷேட அம்சமாகும்.

அந்த வகையில் கடந்த வருடம் ஒன்பது பாடங்களிலும் திறமையான சித்திகளைப் பெற்று வரலாற்று சாதனை படைக்க இவ்வமைபு முக்கிய பங்களிப்பு வழங்கியதாக பாடசாலையின் அதிபர் ஜனாப் S.M. அஸ்மின் அவர்கள் எமது eNews1st இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

மேலும் எருக்கலம்பிட்டி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கான இவர்களின் பங்களிப்பை பாராட்டுவதுடன் பாடசாலை சமூகம் சார்பாக நன்றியையும் தெரிவிப்பதாக பாடசாலையின் அதிபர் ஜனாப் S.M. அஸ்மின் அவர்கள் தெரிவித்தார்.

நாகவில்லுவில் பாரிய வேளைத்திட்டங்கள் ஆரம்பம்!

0

எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவரும், முன்னால் உயர்ஸ்தானிகரும், தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் ஆலோசகருமான அல்ஹாஜ் இப்ராஹிம் அன்சார் மற்றும் முன்னால் மாகாண சபை உறுப்பினரும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன புத்தளம் மாவட்ட இணை அமைப்பாளரும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளன புத்தளம் மாவட்ட தலைவருமான கௌரவ றியாஸ் அவர்களுக்கிடையேயான சினேக பூர்வ சந்திப்பொன்று நேற்றைய தினம் (16.01.2021) சகோதரர் றியாஸ் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போது பு/எருக்கலம்பிட்டியின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் இப்ராஹிம் அன்சார் அவர்களினால் பிரத்தியேகமாக சில கோரிக்கைகளும் சகோதரர் றியாஸ் அவர்களிடம் முன்வைக்கப்பட்டது.

முதற்கட்டமாக 2 கி.மீ. பொத்துவில்லு பாதை புனரமைப்பு இடம்பெறவுள்ளதுடன் மேலதிகமாக நாகவில்லு வைத்தியசாலை வீதியை காபட் வீதியாக செய்து தருவதாக சகோதரர் றியாஸ் அவர்கள் வாக்குறுதியளித்துள்ளார்.

மேலும் எமது ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு நிரந்தர வருமானத்தை பெற்றுத்தரும் நோக்கில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் RO PLANT திட்டமொன்றும் மேலதிகமாக செய்து தருவதாக எமது பள்ளிவாசல் தலைவரிடம் தெரிவித்துள்ளமை ஓர் முக்கிய அம்சமாகும்.

எனவே சகல வழிகளிலும் உதவி நல்கிவரும் முன்னால் மாகாணசபை உறுப்பினர் சகோதரர் றியாஸ் அவர்களுக்கு பள்ளிவாசல் நிர்வாகம் சார்பாக பள்ளிவாசல் தலைவர் நன்றி தெரிவித்ததுடன் மிக விரைவில் பொத்துவில்லு வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெறவுள்ளதாக பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் இப்ராஹிம் அன்சார் அவர்கள் eNews1st ற்கு தெரிவித்தார்.

இவ்வாரான சமூக பணிகளில் ஈடுபடும் சகலருக்கும் அல்லாஹ் உயர்ந்த கூலியை வழங்குவானாக ஆமீன்…