Wednesday, February 5, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 57

மரணப்படுக்கையில் கிரிக்கெட் வீரர்

0

ஸிம்பாப்வேயின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவரும் அந் நாட்டின் கிரிக்கெட் ஜாம்வனுமான ஹீத் ஸ்ட்ரீக், புற்றுநோயினால் பீடிக்கப்பட்டு மரணப்படுக்கையில் இருப்பதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால், அவர் நலமாக இருப்பதாக இன்னும் ஒரு செய்தி கூறுகிறது.

அவரது நோய் குறித்த விபரங்கள் சரியாக வெளியிடப்படாத போதிலும்  அவர் தென் ஆபிரிக்காவில் சிகிச்சை பெற்றுவருதாகக் கூறப்படுகிறது.

அவர் கடும் சுகவீனமுற்றிருப்பதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து அவர் விரைவாக நலம்பெற வேண்டும் என இரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஸிம்பாப்வேயின் முன்னாள் கல்வி, கலை மற்றும் கலாசசார அமைச்சர் டேவிட் கோல்ட்டார்ட் தனது ட்விட்டர் மூலம் இந்த செய்தியை உறுதிப்படுத்தினார்,

இதேவேளை, புகழ்பூத்த கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக்கை ஓர் அற்புதத்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் என விளையாட்டுத்துறை ஊடகவியலாளர் மைக் மெடோடா கூறியுள்ளார். ஸ்ட்ரீக் நலம் பெற அனைவரும் பிரார்த்திக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘ஹீத் ஸ்ட்ரீக் கடைசிப் பயணத்தில் உள்ளார். அவரது குடும்பத்தினர் இங்கிலாந்தில் இருந்து தென் ஆபிரிக்கா சென்றுள்ளனர். இப்போது ஒரு அற்புதம் மட்டுமே அவரை காப்பாற்றும் என்று தெரிகிறது. பிரார்த்தனைகள் அவசியம்’ என மெடோடா தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 49 வயதான ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் நல்ல மன நிலையில் இருப்பதாகவும் மற்றொரு செய்தி கூறுகிறது.

இந் நிலையில், ‘கிரிக்கெட் அரங்கில் ஹீத் ஸ்ட்ரீக் உச்ச நிலையில் இருந்தபோது அவரது பந்துவீச்சை எதிர்கொள்வதில் எதிரணி வீரர்கள் எவ்வாறு சிரமங்களை அனுபவித்தார்களோ அதே போன்று நோயை ஹீத் ஸ்ட்ரீக் எதிர்த்துப் போராடுவார்’ என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

‘ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோயினால் பீடிக்கப்பட்டுள்ளார். தென் ஆபிரிக்காவில்  பிரபல புற்றுநோயியல் நிபுணர் ஒருவரிடம் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்’ என்று அவரது குடும்பத்தினர் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

‘அவர் நல்ல மனநிலையில் இருக்கிறார், கிரிக்கெட் அரங்கில் அவர் உச்ச நிலையில் இருந்தபோது அவரது எதிரிகள் எதிர்கொண்டதைப் போன்றே இந்த நோயை அவர் எதிர்த்துப் போராடுவார். அவரது உடல்நிலை குறித்து இப்போதைக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இல்லை. எந்த செய்தியும் உண்மையாகவும் உறுதியாகவும் வெளியிடப்பட வேண்டும். ஏனையவை வதந்தியாகவே கருதப்படும்’ என அவரது குடும்பத்தினர் கூறினர்.

ஸிம்பாப்வே கிரிக்கெட் அணியில் 1990களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் பிரதான வீரராக இடம்பெற்றார்.

65 டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம் உட்பட 1990 ஓட்டங்களைப் பெற்றதுடன் 216 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

189 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 2943  ஓட்டங்களைப்   பெற்றுள்ளார். அத்துடன் 239 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.

ஸிம்பாப்வே கிரிக்கெட் சபையினருடன் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக 2004 இல் அணித் தலைவர் பதவியில் இருந்து விலகினார். ஒரு வருடம் கழித்து தனது 31ஆவது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஐசிசியின் 5 ஒழுக்க விதிகளை மீறியதாக ஓப்புக்கொண்டதை அடுத்து 2021 ஆம் ஆண்டில், 8 வருட தடைக்குட்பட்டார்.

கிரிக்கெட் விளையாட்டிலிருந்து வீரராக ஓய்வுபெற்ற பின்னர் ஹீத் ஸ்ட்ரீக் பல்வேறு அணிகளுக்கு பயிற்றுநராக இருந்துள்ளார். பங்களாதேஷ, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சமர்செட் ஆகிய அணிகளின் பந்துவீச்சு பயிற்றுநராக அவர் பதவி வகித்தார்.

வைத்தியர் ஷாஃபியின் மனு உயர்நீதிமன்றினால் நிராகரிப்பு!

0
தம்மைக் கைதுசெய்து தடுத்து வைத்தமை சட்டவிரோதமானது என  உத்தரவிடக் கோரி குருணாகல் வைத்தியசாலையின் மகப்பேறு வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நீதியரசர்களான விஜித் மலல்கொட, யசந்த கோதாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இது தொடர்பான விடயங்களை நீண்ட காலம் பரிசீலித்ததன் பின்னர் இந்த தீர்மானத்தை இன்று வழங்கியுள்ளது.

குருணாகல் காவல்துறை உத்தியோகத்தர்களால் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் பணச்சலவை சட்டத்தின் கீழ் தம்மைக் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைப்பட்டிருந்தமை சட்டவிரோதமானது என உத்தரவிடக்கோரி வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீன் இந்த அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்க்கு 525 மில்லியன் நட்டம்

0
இந்த வருடம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு 525 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 165 பில்லியன் ரூபா) நட்டம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொவிட் பரவலை அடுத்து, 2022ஆம் ஆண்டு விமானத்துறைக்கு வருமானம் கிடைக்கக்கூடிய காலமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், இந்த காலப்பகுதியிலும் நட்டத்தை சந்தித்த விமான நிறுவனங்களில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனமும் ஒன்று என செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்துடன், கடந்த வருட முதல் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நட்டம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நச்சுத் தன்மைக் கொண்ட தேங்காய் எண்ணெய் விற்பனை?

0
நச்சுத் தன்மைக் கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய், இலங்கையில் உள்நாட்டு வியாபாரக் குறியில் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

குருநாகல் பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த அதன் பிரதான இணைப்பாளர் புத்திக டி சில்வா இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட நச்சுத் தன்மை கொண்ட தேங்காய் எண்ணெய் துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டமை பிரச்சினைக்குரியதாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நச்சுதன்மை கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன் ஒன்று கெக்கிராவ பகுதியில் வைத்து பொது சுகாதார பரிசோதகர்களால் மீட்கப்பட்டது.

இலங்கைக்கு தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்து வெவ்வேறு இரசாயன திரவங்களை பயன்படுத்தி அவற்றை தூய்மைப்படுத்தி சந்தைக்கு விடுவிக்கின்றமை தொடர்பில் முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த தேங்காய் எண்ணெய் தொகுதி துறைமுகத்தில் இருந்து எவ்வாறு வெளியேற்றப்பட்டது என்பது தொடர்பில் கேள்வி எழுவதாகவும் அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதான இணைப்பாளர் புத்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

0

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 75 மில்லிலீற்றருக்கு அதிகமாக மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் அறுதிப்பெரும்பான்மை வெற்றி..

0

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றிப்பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இதற்கு காங்., தலைவர்கள் கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை இன்று (மே 13) நடைபெற்றது. இதில் பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களை விட கூடுதலான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருவதால், அக்கட்சியே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இதில் கர்நாடக காங்., தலைவர் டி.கே.சிவக்குமார் 70 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

காங். தேசியத்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே…

காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். கர்நாடகாவில் மோசமான ஆட்சி நிர்வாகத்துக்கு எதிராக மக்கள் ஓட்டளித்துள்ளனர். முதல்வர் யார் என்பது ஆலோசித்து முடிவெடுக்கப்படும். காங்கிரஸ் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். பிரதமர், உள்துறை அமைச்சர் என பா.ஜ., தனது மொத்த பலத்தையும் செலுத்திய இந்த தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது.

மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் எங்கள் ஆட்சி அமையும். பா.ஜ., நிறுத்தி வைத்துள்ள நல்ல திட்டங்களை நாங்கள் மீண்டும் கொண்டு வருவோம். சோனியா, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் இணைந்து செயல்பட்டதால் வெற்றி சாத்தியமானது.

காங்., முன்னாள் தலைவர் ராகுல்…

latest tamil news

கர்நாடக வெற்றிக்காக பாடுபட்ட தொண்டர்கள், தலைவர்களுக்கு இதயத்தில் இருந்து நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஜனநாயகம் வென்றது. முதலாளிகளுக்காக ஆட்சி நடத்தும் பா.ஜ.,வுக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர். முதலாளிகளை கர்நாடக ஏழைகள் தோற்கடித்துள்ளனர். கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் என்றும் துணை நிற்கும். முதல் அமைச்சரவை கூட்டத்தில் 5 முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.

முன்னாள் முதல்வர் சித்தராமையா…

130 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம். இது காங்கிரஸ் கட்சியின் மாபெரும் வெற்றி. கர்நாடக மக்களுக்கு பா.ஜ., ஆட்சியில் அதிருப்தி ஏற்பட்டதால் மாற்றத்தை விரும்பினர். ‘ஆபரேஷன் லோட்டஸ்’ மூலமாக பா.ஜ., குறுக்கு வழியில் ஆட்சியை அமைத்தது. ஆனால் மக்கள் அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர். ராகுலின் பாதயாத்திரை, கட்சியினரை உற்சாகப்படுத்தவும் உதவியது.

இது நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் ஜேபி நட்டாவுக்கு எதிராக மக்கள் அளித்த தீர்ப்பு. பிரதமர் 20 முறை கர்நாடகா வந்தார்; கடந்த காலத்தில் எந்த பிரதமரும் இப்படி பிரசாரம் செய்யவில்லை. பிரதமர் மோடி இங்கு வந்தாலும் எதுவுமே நடக்காது என்று முன்பே கூறினோம். இந்த தேர்தல் முடிவு, லோக்சபா தேர்தலுக்கான படிக்கல். பா.ஜ., அல்லாத அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து பா.ஜ.,வை தோற்கடிக்கும். ராகுல் நாட்டின் பிரதமராக வருவார் என்றும் நம்புகிறேன்.

காங்., தலைவர் டி.கே.சிவக்குமார்…

latest tamil news

வெற்றி அனைத்தும் காங்கிரஸ் தலைமையையே சேரும். வெற்றியை கொடுத்த மக்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன். தேர்தல் வெற்றிக்கு உழைத்த சித்தராமையா, தொண்டர்களுக்கு நன்றி. (இவ்வாறு அவர் கூறியபோது, உணர்ச்சி மிகுதியில் ஆனந்த கண்ணீருடன் பேசினார்)

பால் மா விலையை குறைக்க மாட்டோம்!

0
வர்த்தக அமைச்சர் அறிவித்தது போல எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பால்மாவின் விலையை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள விலையில் இறக்குமதி செய்யப்பட்ட பால்மா தொகை, இன்னும் கையிருப்பில் உள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதால், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் பால்மாவின் விலையை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இறுதியாக, கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி பால்மாவின் விலை குறைக்கப்பட்டது.

இந்தநிலையில், எதிர்வரும் 15ஆம் திகதி முதல் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நேற்று வர்த்தக அமைச்சர் அறிவித்திருந்தார்.

எனினும், வர்த்தக அமைச்சரின் இந்த அறிவிப்பை மறுத்த பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம், பால்மாவின் விலையை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என குறிப்பிட்டுள்ளது.

டிரைவர் இல்லாத பஸ் சேவை அடுத்த வாரம் துவக்கம்

0

உலகிலேயே முதன் முறையாக டிரைவர் இல்லாத பஸ் சேவை, ஸ்காட்லாந்தில் அடுத்த வாரம் துவங்க உள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ஒரு பகுதியாக ஸ்காட்லாந்து உள்ளது. இங்கு, டிரைவர் இல்லாத பஸ் சேவையை அடுத்த வாரம் துவங்க, பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தானியங்கி பயணியர் பஸ் இயக்கப்படுவது, உலகிலேயே இதுதான் முதன்முறை. ‘சென்சார்’கள் பொருத்தப்பட்ட இந்த பஸ்கள், மணிக்கு, 80 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

அதே நேரத்தில், முழு அளவிலான தானியங்கி பஸ் சேவைக்கு அரசு அனுமதி தராததால், ஒவ்வொரு பஸ்சிலும் பாதுகாப்புக்காக டிரைவர் இருப்பார்.

அவர், பஸ்சின் இயக்கத்தை கண்காணிப்பார். தேவைப்படும் நேரத்தில், பஸ்சை அவர் இயக்கி கட்டுப்படுத்துவார். மேலும், பயணியருக்கு பயணச்சீட்டு வழங்க, நடத்துனரும் பஸ்சில் இருப்பார்.

இந்த தானியங்கி பஸ்கள், செயற்கை நுண்ணறிவு இயந்திரம் வாயிலாக இயக்கப்படும். இது, பாதுகாப்பான வழிகளை கண்டறிந்து, பஸ் இயங்க வழிவகை செய்கிறது.

இந்த சேவை பாதுகாப்பானதாகவும், எரிபொருள் சிக்கனமானதாகவும், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தையும் அளிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் காதலியை சுட்டு தானும் தற்கொலை

0

வவுனியாவில் இன்று (13) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஒரு பிள்ளையின் தாயை நபர் ஒருவர் சுட்டுக் கொன்றதுடன், தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியா, பறயனாலங்குளம், நிலியமோட்டையில் உள்ள வீடொன்றில் வைத்து பெண் ஒருவர் இன்று (13) அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

பின்னர் சந்தேக நபரும் இன்று காலை நிலியமோட்டை கோவிலுக்கு அருகில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேகநபர் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த பெண் திருமணமாகி தனது கணவர் மற்றும் குழந்தையுடன் நிலியமோட்டை பிரதேசத்தில் குடியேறியுள்ளார்.

திருமணத்திற்கு முன்னர் குறித்த சந்தேக நபருடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸாரிடம் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டின் இன்றைய வானிலை முன்னறிவிப்பு

0

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75

மில்லிமீற்றருக்கும் அதிகமாக பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவின் ஏனைய பகுதிகளில் இடைக்கிடை மழை பெய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது 40 தொடக்கம் 45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இடியுடன் கூடிய மழை, மின்னல் தாக்கம் மற்றும் கடும் காற்று நிலைமைகளின் போது ஏற்படக்கூடிய அனர்த்தங்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.