Monday, March 23, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 58

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் கைது!

0

ஜூட் சமந்த

உரிமம் இல்லாமல் வேலைவாய்ப்புக்காக மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக பணம் பெற்று மோசடி செய்த ஒரு நிறுவனத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சுற்றி வளைத்ததுடன், உரிமையாளர் உட்பட நான்கு பேரைக் கைது செய்துள்ளனர்.

மரதானையில் உள்ள ஸ்ரீ பிரியதர்ஷனாராம மாவத்தையில் இயங்கும் ஒரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் மூன்று ஊழியர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

அந்த இடத்தை சோதனை செய்த அதிகாரிகள் 256 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு சுமார் 85 புகார்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் இதற்கு முன்னர் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி பல மோசடி செய்த விடயங்களுக்காக வழக்குகள் தொடரப்பட்டு அதன் உரிமத்தை இடைநிறுத்தியதாக தெரியவந்துள்ளது.

உரிமம் இடைநிறுத்தப்பட்டிருந்தாலும், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

சிறுபான்மை சில்லறைகள் மூடிக்கொண்டு வேடிக்கை பார்!

0

நேற்று நுகேகொடையில் இடம்பெற்ற சில எதிர்க்கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு கூட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்திலே இவ்வாறு பதிவொன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.

சில மாசங்களுக்கு முன் சொந்த ஊரிலேயே, 50-பேரை கூட, திரட்ட முடியாத நாமல் கட்சி, இன்று UNP, SLFP உடன் சேர்ந்து, தம் பலத்தை காட்டி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

என் வீட்டில் இருந்து நடை தூரம், நுகேகொடை சந்தி. நடக்காமல், நேரடி தகவல்.

கூட்ட ஏற்பாட்டாளர் பலமுறை நமது கட்சிக்கு அழைப்பு விடுத்தார்கள். நமக்கு “சரி வராது Bro” என மறுத்து விட்டோம்!

இந்த கூட்டத்தை வைச்சு, அங்க யாரும், அரசை உடனடியா கவிழ்க்க ஏலாது. அது கலர் கனவு!

மேடையிலும், அப்படி சொல்லப்படவில்லை. ஆனால், தான் கப்பல் கட்டுவது “ஹார்பரில்” தரித்து நிற்க அல்ல, ஆழ்கடலில் ஓடத்தான் என நாமல் சொன்னார்.

இது, அரசுக்கு சவால் விடும் கூட்டம் என்பதை விட, தேசத்தின் பிரதான எதிர் கட்சி யார் என நிலைநாட்டுவதே அங்கே முதல் கனவு!

இதன் மூலம் இங்கே கூடிய சிங்கள (பெளத்த) மகாஜனம், சில செய்திகளை தந்தது.

(1) 2019ல் கோதாவுக்கும், பின் 2024ல் அனுரவுக்கும் வாக்களித்த, அதே 69 இலட்சம், விரும்புனா, தாய் வீடு திரும்பலாம். எந்நேரமும் மாறலாம். மாறாமலும் விடலாம். எப்படியும், இங்கே நாம் தான் எஜமானர். எங்கள் “தேசாபிமானம்” தான் இங்கே “பிரைம் சப்ஜெக்ட்”!

(2) சிறுபான்மை சில்லறைகள் மூடி-கொண்டு வேடிக்கை பார்க்கனும்! அல்லது ஓரமா போய் விளையாடனும்!

(3) பாராளுமன்ற, எதிர்கட்சி தலைவரான சஜித், இப்படி ஒரு கூட்டத்தை, வெளியே கூட்டி காட்டும்வரை, நாட்டிலே நாமல் தான் “ஒபொசிசன் லீடர்”! என தனது பதிவில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி!

0

ஜூட் சமந்த

இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.2 மில்லியன் மோசடி தொடர்பில் சிலாபம் சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

மஹாவெவ, கொஸ்வாடியைச் சேர்ந்த ரண்டுனு பத்திரன்னலகே துஷான் கவிந்த (30 வயது) என்பவர் அளித்த புகாரைத் தொடர்ந்து குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடவத்தை கிரில்லவலவில் வசிக்கும் ஒருவர், கடந்த ஆகஸ்ட் 9, 2024 முதல் மூன்று சந்தர்ப்பங்களில் அவரிடமிருந்து ரூ.1.2 மில்லியன் பணத்தைப் பெற்றுக்கொண்டதாக மாரவில பொலிஸாருக்கு தெரிவித்த புகார்தாரர், வேலையோ அல்லது அவர் கொடுத்த பணமோ அவருக்குத் திருப்பித் தரப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

கூறப்படும் மோசடி ரூ.1 மில்லியனுக்கும் அதிகமாக இருப்பதால், மாரவில பொலிசார் விசாரணையை சிலாபம் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பரிந்துரைத்துள்ளனர்.

சந்தேக நபர் தேடப்பட்டுவரும் நிலையில், பொலிஸார் மேதிக விசாரணைகளை தொடர்ந்து வருகின்றனர்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவு (TID) இஸ்ரேலியர்களின் கருவியாகிவிட்டத்தா?

ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டு:

பயங்கரவாத விசாரணைப் பிரிவு (TID) இஸ்ரேலியர்களின் கருவியாக மாறியுள்ளதா? இலங்கையில் யூதர்களின் சபத் வழிபாட்டு இல்லங்கள், பயங்கரவாத தடைச் சட்டம்(PTA) துஷ்பிரயோகம் செய்யப்படல், பயங்கரவாத விசாரணைப் பிரிவு (TID) இஸ்ரேலியர்களுக்கான கருவியாக மாறியுள்ளமை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரசியல் தலையீடுகள் என்பன பற்றி சபையில் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் காட்டம்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA)- ஓட்டமாவடி

திங்கள் கிழமை(17) பாராளுமன்றத்தில் வெளிவிவகார மற்றும் நீதி அமைச்சுக்கள் தொடர்பான வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கூறியவையாவன:

வெளிவிவகார அமைச்சு மற்றும் நீதி அமைச்சு தொடர்பான இந்தக் குழுநிலை விவாதத்தில் எனது கருத்துக்களை முன்வைப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

ஆரம்பத்தில், திருகோணமலையில் ஒரு விகாரை கட்டப்படுவது தொடர்பாக திடீரென ஏற்பட்ட இனவாத பதற்றம் தொடர்பான இந்த விடயத்தை நான் குறிப்பிட விரும்புகிறேன். இதற்கு முன்பே உறுப்பினர்கள் சிலர் இதுபற்றி பேசியுள்ளனர். இது ஒரு மிக மிக முக்கியமான பிரச்சினை. இது அவ்வப்போது வருகின்றது. எங்கிருந்தோ திடீரென சிலைகள் கொண்டு வரப்பட்டு விகாரைகள் எழுப்பப்படுகின்றன. இது தேவையற்ற பதற்றத்தை உருவாக்குகிறது.

வெளிவிவகார அமைச்சு ஒர் இன நல்லுறவு குழுவை அமைத்து, இவ்வாறான மோதல்களை அந்த சபைகளுக்குப் பரிந்துரைக்க முன்வர வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன்.இங்கிலாந்தில் இதுபோன்ற ஓர் அமைப்பு அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது. சமய ரீதீயான பதட்டங்களைக் கையாளும்போது அரசாங்கங்கள் தேவையற்ற சர்ச்சையிலும், சிரமத்திலும் சிக்கிக் கொள்வதை நான் அறிந்துள்ளேன்.

இது திருகோணமலையில் நடந்ததை நியாயப்படுத்துவதாக ஆகி விடாது.அது மிகவும் பாரதூரமான விடயம்.திருகோணமலையில் பௌத்தர்கள் இருப்பதால், அங்கு விகாரைகள் அவசியம் என்று கூட நீங்கள் இப்பொழுது சொல்லுவீர்கள். ஆனால், இந்த நாட்டில் யூதர்கள் இல்லை. ஆனால், சபத் இல்லங்கள் என்ற வழிபாட்டுத்தலங்கள் இந்த நாட்டில் ஒரு யூதர் கூட இல்லாதபோதுயூதர்களுக்காக கட்டப்பட்டுள்ளன. சமீபத்தில் என்ன நடந்தது?

எனது கட்சி உறுப்பினர்களில் ஒருவர், கொழும்பு மாநகர சபையில், சபத் இல்லம், அதாவது யூதர்களின் வசதிக்காக கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள மத வழிபாட்டுத் தலத்தை விவாதத்தில் சேர்க்காதது ஏன் என்று மேயரிடம் கேட்கும் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இந்த விடயத்தை கௌரவ பிரதமர் சபையில் மிகத் தெளிவாக, இது ஒரு மத ஸ்தாபனத்தை உருவாக்க அங்கீகரிக்கபடாத காரியம் என்று கூறினார். இறுதியாக என்ன நடக்கிறது?

மாநகர சபையில் எனது உறுப்பினர் இந்த பிரச்சினையை எழுப்பி, கொழும்பு மாநகர சபையின் விவாதத்தில் ஏன் சேர்க்கப்படவில்லை என்று கேட்கும்போது, அடுத்த நாள், அவர் உடனடியாக பயங்கரவாத விசாரணைத் பிரிவிற்கு (TID) அழைக்கப்பட்டார். அவர் ஏன் இந்த பிரச்சினையை எழுப்பினார் என்று கேட்கப்பட்டார். அவர் ஏன் வரவழைக்கப்பட்டார் என்று கேட்டபோது, “இல்லை, கொழும்பு மாநகர சபையில் நீங்கள் கொண்டு வந்த தீர்மானம் பற்றி முகநூலில் சில கருத்துக்கள் வந்துள்ளன” என்று கூறப்பட்டது. அதற்கு அவர், “இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.

கௌரவப் பிரதமர் இது அங்கீகரிக்கப்படாத கட்டிடம் என்று கூறியிருந்தார். அதை அகற்றுவதற்கான பொருத்தமான அதிகாரம் கொண்ட மாநகர சபை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று கேட்டார். அதற்கு எதுவும் செய்யப்படவில்லை. மாறாக, அவர் பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு வரவழைக்கப்பட்டார். அதேபோல், பொத்துவில் பிரதேச சபையில், பொத்துவிலில் உருவாக்கப்பட்ட சபத் இல்லத்தை மூடுவதற்கு அவர்கள் ஒரு முடிவை எடுத்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு, முகநூல்பக்கத்தில் சில கருத்துக்களை இட்ட பொதுமக்களில் இளைஞர்கள் இருவர், பொத்துவில் பொலிஸாரால் வாக்குமூலம் அளிப்பதற்காக வரவழைக்கப்பட்டனர். அதன் பிறகு, அவர்கள் பயங்கரவாத விசாரணைத் பிரிவிற்கு வரவழைக்கப்பட்டனர்.

நீங்கள் ஏன் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இத்தகைய அற்பமான விடயங்களுக்காக துஷ்பிரயோகம் செய்கிறீர்கள்? ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில்,பயங்கர வாத தடைச் சட்டத்தை (PTA) ஒழிப்பதாக உறுதியளித்த அரசாங்கம்தான் இது. ஆனால், இந்த நாட்டில் ஒரு யூதர் கூட இல்லாத நிலையில், சபத் இல்லங்களை அமைப்பது குறித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்த அப்பாவி மக்களை வரவழைக்க அந்த சட்டம்(PTA) பயன்படுத்தப்படுகின்றது.

அத்தகைய பல மத வழிபாட்டுத் தலங்கள் உருவாகின்றன. இதன் பொருள் என்ன?அதேபோல், கத்தார் மீது இஸ்ரேலால் எந்தவித ஆத்திரமூட்டலும் இன்றித் தாக்குதல் நடத்தப்பட்டபோது வெளிவிவகார அமைச்சு அறிக்கை வெளியிட்ட விதத்தைப் பாருங்கள். அது, “சமீபத்தில் கத்தாரில் பதிவான தாக்குதல்கள் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகின்றது” என்று மட்டும் கூறுகின்றது.

இந்த அர்த்தமற்ற அறிக்கை எதற்கு? நீங்கள் ஏன் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுகின்றீர்கள்? இந்த அறிக்கைகளை வெளியிடுவதற்குப் பதிலாக, அறிக்கையையே வெளியிடாமல் அமைதியாக இருந்திருக்கலாம். இது தேவையற்றது. இது மிகவும் உணர்வற்ற அலட்சியமான, வேண்டுமென்றே பாரபட்சமான, திரிபுபடுத்தப்பட்ட அறிக்கையாகும். இது ஆக்கிரமிப்பாளரின் பெயரைக் கூட குறிப்பிடவில்லை, அல்லது வெளிப்படையாக மீறப்பட்ட ஒரு நாட்டின் அரசாங்கம் மற்றும் மக்களின் உணர்வுகளை எவ்வாறு பகிர்ந்து கொள்கிறது என்று கூட பேசவில்லை.

கத்தார் ஒரு நட்பு நாடு. இந்த நாடு ஆறு வளைகுடா நாடுகளின் சார்பாக மனித உரிமைகள் சபையில் உறுப்பினராக உள்ளது. மேலும், அவர்கள் மனித உரிமைகள் பேரவையில் எங்களை ஆதரித்தனர்.ஆனால், நீங்கள் ஆக்கிரமிப்பாளரை குறிப்பிடாத ஒரு வெற்று அறிக்கையை வெளியிடுகிறீர்கள், குறைந்தபட்சம் அத்துமீறல்களைக் கண்டிக்கும் அளவிற்குக் கூட செல்லவில்லை.

நீங்கள் இஸ்ரேலைத் தாக்குதல் நடத்திய நாடாக குறிப்பிடப் பயப்படுகிறீர்கள். சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்காவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் சில கூட்டங்களை நடத்தியதற்காக ஒரு பிரிட்டிஷ் பத்திரிகையாளர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அதேபோல், நீங்கள் இங்கே செய்கிறீர்கள்.

யாரெல்லாம் கருத்து தெரிவிக்கிறார்களோ அவர்களை கைது செய்கிறீர்கள். சில மாதங்களுக்கு முன்பு பாலஸ்தீனியர்களுடன் தனது ஒற்றுமையைக் காட்டும் ஒரு ஸ்டிக்கரை ஒட்டிய ஓர் அப்பாவி இளைஞன் பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு (TID ) வரவழைக்கப்பட்டான்.

இப்போது TID இந்த நாட்டில் இஸ்ரேலியர்களின் ஒரு கருவியாக மாறியுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசங்களில் இஸ்ரேல் எடுத்த நடவடிக்கைகளுக்காக சீற்றம் காட்டும் அப்பாவி பொதுமகனை நீங்கள் இப்படித்தான் நடத்துகின்றீர்களா? இந்த பிரச்சினை முடிவுக்கு வர வேண்டும்.

அதேபோல், ஜெனீவாவில் பயங்கரவாத தடைச் சட்டத்தை ( PTA) ஒழிப்பதாக அரசாங்கம் உறுதியளித்தது. ஆனால் இன்று என்ன நடந்தது? சட்டமா அதிபர் திணைக்களம் ஒரு சுயாதீன பொது வழக்குத் தொடுநர் அலுவலகத்தை உருவாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக நான் ஒரு அறிக்கையைப் பார்க்கிறேன். சுயாதீன பொது வழக்குத் தொடுநர் அலுவலகம் – இது அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு ஜெனீவாவில் அளித்த உத்தரவாதம். அரசியல் நோக்கங்களுக்காக சட்டமா அதிபர் திணைக்களம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை நாங்கள் அறிவோம்.

சட்டமா அதிபர் திணைக்களம் பல அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்குகளில் உடந்தையாக இருந்தது. ஜனாதிபதி உட்பட நானும் இன்னும் பலரும் ஒரு சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வரவழைக்கப்பட்டோம். அங்கு சட்டமா அதிபர் திணைக்களம் வழக்குப் பதிவு செய்தது. இறுதியில் எங்களின் குடியுரிமை உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கும் .

சட்டமா அதிபர் திணைக்களம் வழக்குகளை நடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டது. இப்போது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதைப் பாருங்கள். அவர்களின் அதிகாரிகளில் ஒருவராக இருந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் வேண்டுமென்றே பொய்யாகச் சிக்க வைக்கப்பட்டார்.

எனது கருத்துப்படி, இது ஒரு கற்பனைக் கதை. புத்தளம் அருகில் உள்ள கரைதீவில் ஒரு இடத்திற்குச் சென்று, போதைக்கு அடிமையான பெற்றோரின் ஏழைக் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக ‘முத்துக்களைக் காப்போம்’ என்ற ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் உருவாக்கப்பட்டது என்று அவர்மீது குற்றம் சாட்டினர்.

பயங்கரவாத சித்தாந்தங்களில் ஈடுபட்டதாகக் காட்டுவதற்காக அரசாங்கத்தால் இது ஒரு பொய் சாக்காக உருவாக்கப்பட்டது. ஆனால், இறுதியாக புத்தளம் மேல் நீதிமன்றத்தில் பல வருடங்களாக வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. சட்டமா அதிபர் பல தவணைகளை எடுத்து வருகிறார். வழக்கை மேலும் தொடர முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும், இத்தகைய தேவையற்ற விடயங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, சட்டமா அதிபர் அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்குகளில் ஈடுபட்டு வருகிறார்.

அரசாங்க பாதுகாப்பு நிதி இந்த நாட்டில் பயங்கரவாதத்திற்கு, பௌத்த மற்றும் தமிழ், முஸ்லிம் தரப்புகளில் உள்ள தீவிரவாதத்திற்கு நிதி வழங்க பயன்படுத்தப்பட்டதாக ஜனாதிபதியே பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். சட்டமா அதிபர் அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்குகளைத் தாக்கல் செய்வதில் ஈடுபட்டுள்ளார். மேலும், அவர்கள் தேவையற்ற முறையில் இந்த விடயங்களை மேல் நீதிமன்றத்தில் இழுத்தடிக்கிறார்கள்.

எனவே, இந்த விடயங்கள் முடிவுக்கு வர வேண்டும். சில நாட்களுக்கு முன்புதான், புத்தளம் மேல் நீதிமன்றத்திற்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் இந்த விடயத்தை முடிக்குமாறு உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது. இந்த விடயம் தேவையற்ற முறையில் இழுத்தடிக்கப்படுவதைக் கண்டு, அப்பாவி வழக்கறிஞர்கள் மீது கொண்டு வரப்பட்ட தேவையற்ற தண்டனைத் தடைகள் அவர்களின் அரசியல் நோக்கங்களால் தூண்டப்பட்டுள்ளன. இது முடிவுக்கு வர வேண்டும். எனவே, ஒரு சுயாதீன பொது வழக்குத் தொடுநர் அலுவலகம் நிறுவப்பட வேண்டும்.

அதைக் கூறி இத்தோடுமுடிக்கின்றேன் என தனது உரையை நிறைவு செய்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் உரைக்கு நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார பின்வருமாறு பதிலளித்தார் :

கௌரவ உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்களே, நீங்கள் சுட்டிக்காட்டிவை அனைத்திற்கும் நன்றி. அவை அனைத்தும் நன்கு கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. நான் இரண்டு விடயங்களுக்கு மட்டுமே பதிலளிக்கிறேன். அவற்றில் ஒன்று பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA). புதிய சட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளது என்று நான் காலையில் கூறினேன், ஒருவேளை, அப்பொழுது நீங்கள் இங்கு இருக்கவில்லை. தற்போது அது சிங்களம் மற்றும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

எனவே, மிகக் குறுகிய காலத்திற்குள், பயங்கரவாதம் தொடர்பான புதிய சட்டம் பொது ஆலோசனைகளுக்காக வெளியிடப்படும். எனவே, மக்கள் கருத்துக்களை வழங்க போதுமான அவகாசம் இருக்கும். சர்வதேச சமூகத்திற்கு நாங்கள் உறுதியளித்ததையும், எங்கள் மக்களுக்கு நாங்கள் உறுதியளித்ததையும் நாங்கள் செய்துவிட்டோம்.

இரண்டாவது, சுயாதீன வழக்குத் தொடுநர் சேவை பற்றி. வேறு எந்த சர்வதேச அழுத்தத்தினாலும் நாங்கள் உறுதியளிக்கவில்லை. நாங்கள் சுயாதீன வழக்குத் தொடுநர் பிரிவை நிறுவப் போகிறோம் என்று சொன்னபோது, அது எங்கள் தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாக இருந்தது. நாங்கள் அதைக் குறித்தே சொன்னோம். இருப்பினும், தற்போது, கௌரவ நீதியரசர் யசந்த கொதாகொட தலைமையிலான ஒரு குழு இந்த விடயத்தைப் பரிசீலித்து வருகிறது. கௌரவ சட்டமா அதிபரும் அதில் ஒரு பகுதியாக உள்ளார்.மேலும், ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், நாங்கள் பொது ஆலோசனைகளுக்கு அழைக்க விரும்புகிறோம்.

சட்ட அதிகாரிகளின் சங்கம் அவர்களின் ஆட்சேபனை குறித்து எனக்கு ஒரு கடிதத்தை அனுப்பியது எனக்கு நன்றாகத் தெரியும். எனவே, வேறு யாரையும் போலவே அவர்களும் தங்கள் கருத்துக்களைக் கூறலாம். ஆனால், இந்த அரசாங்கம் ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு விடயங்களை அப்படியே விட்டுவிடப் போவதில்லை என்று அர்த்தமல்ல. நாங்கள் அனைத்து கருத்துக்களையும் பரிசீலிப்போம், ஆனால் எங்கள் தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு நாங்கள் உறுதியளித்ததை எது வந்தாலும் நாங்கள் தொடருவோம் என பதிலளித்தார்.

376 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருட்கள் மீட்பு!

0

376 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதை பொருட்களை கொண்டு வந்த ஆழ்கடல் மீன்பிடிக் கப்பலுடன் 06 சந்தேகநபர்கள் தெற்கு கடற்கரையில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்.

இலங்கை கடற்படை, தெற்கு ஆழ் கடலில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, விஷப் போதைப் பொருட்கள் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் பொதி மற்றும் உள்நாட்டு ஆழ்கடல் மீன் பிடி கப்பலுடன் ஆறு சந்தேக நபர்கள் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த ஆழ் கடல் மீன் பிடிக் கப்பலுடன் சந்தேக நபர்கள் நேற்று ( 2025 நவம்பர் மாதம் 20 ) தங்கல்லை மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியகம் மேற்கொண்ட விசேட சோதனையில், போதைப் பொருளாக சந்தேகிக்கப்படும் 261 கிலோவிற்கும் அதிகமான ஐஸ் 18 மூடை மற்றும் 115 கிலோ ஹெரோயின் ஆகியன உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கையிருப்புடன், 02 ரிவால்வர் ரக மற்றும் பிஸ்டல் ரக பக்க ஆயுதங்கள், 02 வெடிமருந்து பத்திரிகைகள் மற்றும் ஒரு செயற்கைக்கோள் தொலைபேசி ஆகியவை அங்கு கண்டுபிடிக்கப்பட்டன.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகொட ஆகியோர் போதைப்பொருள் கையிருப்பு மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகளை ஆய்வு செய்வதில் பங்கேற்றனர்.

இன்று உலக தொலைக்காட்சி தினம்!

0

உலக தொலைக்காட்சி தினம் (World Television Day) ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது, மேலும் இணையத்திற்கு முன்பு தொலைக்காட்சி, உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் செல்வாக்குமிக்க தகவல் ஊடகமாக இருந்தது என்பதை நினைவில் கொள்ளும் நாளாக இது பெயரிடப்பட்டது.

உலக தொலைக்காட்சி தினம் 1996 இல் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் அறிவிக்கப்பட்டது, மேலும் உலக மக்களிடையே வெற்றிகரமான தொடர்பு, கலாச்சார பரிமாற்றம், கல்வி மற்றும் சமூக மற்றும் ஒழுக்கத் தரங்களை மேம்படுத்துவதில் தொலைக்காட்சி குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது என்பது இரகசியமல்ல. இந்த தனித்துவமான ஊடகத்தின் தாக்கம் பற்றிய பரந்த விவாதத்திற்கான வாய்ப்பை பல தசாப்தங்களாக வழங்கும் ஒரு நாளாகவும் இந்த நாள் உள்ளது.

தொலைக்காட்சி படம் மற்றும் ஒலி ஆகிய இரண்டு வடிவங்கள் மூலம் அறிவு, விரிவான செய்திகள் மற்றும் பொழுதுபோக்கை உருவாக்குகிறது, மேலும் பல சந்தர்ப்பங்களில் பொதுக் கருத்தை பாதிக்கும் முதன்மை ஆதரவாளராக இருந்து வருகிறது.

தொலைக்காட்சி ஒரு சிறப்பு மதிப்புடையது, ஏனெனில் இது சிறப்பு பொது நிகழ்வுகள், உலக புனைகதை மற்றும் விளைவுகள், அரசியல் விவாதங்கள், கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் போன்ற இந்த கூறுகளை மில்லியன் கணக்கான மக்களுக்கு நேரடியாகக் கொண்டுவருகிறது. உலகின் பல நாடுகளில், கல்வித் திட்டங்கள், குழந்தைகளுக்கான அதிகாரமளிப்புத் திட்டங்கள், தொழில்நுட்ப அறிவு மற்றும் அறிவியல் தகவல்களை வழங்குவதற்கு தொலைக்காட்சி முக்கிய கருவியாகும்.

நமது நாட்டில் COVID-19 தொற்றுநோய் காலத்தில் கல்விக்காக தொலைக்காட்சி வழங்கும் சேவை இதற்கு ஒரு வலுவான சான்றாகக் கூறலாம். பல்வேறு மொழிகள், மரபுகள் மற்றும் தேசிய ஜன்னல்கள் மூலம் உலகின் பன்முகத்தன்மையை அறிந்து அனுபவிப்பதற்கு தொலைக்காட்சி சிறந்த கட்டுப்படுத்தியாகும்.

பல்வேறு நாடுகளிலிருந்து சினிமா, நாடகம், இசை மற்றும் கலாச்சார இருப்பை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதன் மூலம் உலக மக்களிடையே கலாச்சார புரிதலை ஊக்குவிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

பண்டைய காலங்களிலிருந்து சமூகத்தின் முன்னேற்றத்திற்கான முக்கியமான நடவடிக்கைகளில் தொலைக்காட்சி ஈடுபட்டுள்ளது என்பது காணப்படுகிறது. துல்லியமான தகவல்களை வழங்குவது, தவறான பிரச்சாரத்தை எதிர்த்துப் போராடுவது, வளமான கலாச்சார கூறுகள் மூலம் அறிவை வழங்குவது மற்றும் அரசியல், சமூகத் தகவல்கள், விலங்குகள், இயற்கை போன்ற தகவல்களை வாசகருக்கு வழங்குவது ஒரு பொறுப்பாக தொலைக்காட்சி கருதுகிறது.

இணையம், ஸ்மார்ட் டிவி, IPTV, OTT சேவைகள் (YouTube, Netflix, முதலியன) வருகையுடன், தொலைக்காட்சி புதிய தொழில்நுட்பங்களுடன் ஒன்றிணைந்து ஒரு புதிய ஊடக சூழலை உருவாக்கியுள்ளது. இன்று, தொலைக்காட்சி ஒரு ஊடாடும், உலகளாவிய மற்றும் கட்டுப்படுத்தக்கூடிய தளமாக மாறியுள்ளது.

இது அதன் உள்ளடக்கத்தில் மாற்றத்திற்கு வழிவகுத்தது. இது வாசகருக்கு தேவையற்ற விஷயங்களை வழங்குவதால் பலர் இப்போது அதைக் கைவிட்டு வருகின்றனர். மேலும், தொலைக்காட்சியின் நம்பகத்தன்மை இல்லாமை, சலிப்பூட்டும் நிகழ்ச்சிகள் மற்றும் சிலரின் தனிப்பட்ட தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் இணையம் மூலம் அவர்களுக்குத் தேவையான முக்கியமான விஷயங்களை அணுக முடியும் என்பதன் காரணமாக தற்போது தொலைக்காட்சி சரிவைச் சந்தித்து வருகிறது.

உலகத் தொலைக்காட்சி தினம் என்பது உலகெங்கிலும் உள்ள மக்களிடையே இணைப்பு, புரிதல், அறிவு மற்றும் பொழுதுபோக்கை உருவாக்கும் மிகவும் மதிப்புமிக்க ஊடகம் என்பதை மக்களுக்கு நினைவூட்டும் ஒரு நாளாகும். வெளிப்படையான, உண்மை மற்றும் பொறுப்பான ஊடகத்தை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் பங்களிப்பது இத்தகைய நாட்களின் சிறப்பு நோக்கமாகும்.

ஆகஸ்ட் 13, 1888 அன்று கிரேட் பிரிட்டனின் ஸ்காட்லாந்தின் டன்பார்டனில் பிறந்த ஜான் லோகி பெயர்டால் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட தொலைக்காட்சி, சமீப காலம் வரை உலகின் மிகவும் பிரபலமான ஊடகமாக மாறியது. சமூக ஊடகங்களால் இது ஓரளவு சிதைக்கப்பட்டிருந்தாலும், பொது நனவில் இன்னும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அனைவரும் நம்பும் உண்மை. எனவே, நமது சமூகத்தை பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக மற்றும் கலாச்சார ரீதியாக உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல, சரியான ஊடக எழுத்தறிவுடன் கூடிய தொலைக்காட்சி ஊடகத்தைப் பயன்படுத்த வேண்டும்.

இலங்கையில் தொலைக்காட்சி அமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்ப திட்டம் 1979 ஆம் ஆண்டு சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு (ITN) நிறுவப்பட்டதன் மூலம் தொடங்கியது. இலங்கையில் முதல் தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பு 1979 ஏப்ரல் 13 அன்று ITN தொடங்கப்பட்டதன் மூலம் தொடங்கப்பட்டது. ITN ஆரம்பத்தில் ஒரு வணிக/தனியார் நிறுவனமாகத் தொடங்கப்பட்டாலும், பின்னர் அது அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் ஊடக நிறுவனமாக மாறியது. இலங்கை மக்களுக்கு தொலைக்காட்சியின் புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்திய சேனலாக ITN மாறியது.

அரசாங்கத்திற்கு முழுமையாகச் சொந்தமான தேசிய தொலைக்காட்சி சேனல் தேவைப்பட்டது, எனவே 1982 இல் இலங்கை தொலைக்காட்சி கவுன்சில் (SLRC) நிறுவப்பட்டது. 15 ஜூன் 1982 – SLRC (ரூபவாஹினி) அதிகாரப்பூர்வமாக ஒளிபரப்பைத் தொடங்கியது. இது ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் கட்டப்பட்ட ஒரு வசதியிலிருந்து இயங்கியது. கல்வி, கலாச்சாரம், செய்தி மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கான முன்னணி தளமாக கவுன்சில் இருந்தது.

தொலைக்காட்சி மிகவும் பிரபலமடைந்ததால், 1990கள் மற்றும் 2000களில் பல புதிய சேனல்கள் நிறுவப்பட்டன. அதன்படி, TNL TV – 1993, சிரச TV – 1998, சுவர்ணவாஹினி – 1994, தெரண TV – 2005 மற்றும் பல சேனல்கள் தொடங்கப்பட்டன.

எனவே, தொலைக்காட்சி என்பது நீண்ட பயணத்தைக் கொண்ட ஒரு ஊடகம் என்பதால், அதிலிருந்து நாம் உள்வாங்கக்கூடியதை மட்டுமே பிரித்தெடுக்க உழைப்பதன் மூலம், இந்த அற்புதமான ஊடகத்தை நீண்ட காலம் நம்மிடையே வைத்திருக்க முடியும்.

புத்தளம் பொது நூலகத்திற்கு கிடைத்த கெளரவம்!

0

புத்தளம் மாநகர சபையின் பொது நூலகத்திற்கு தேசிய ரீதியில் கிடைத்த கெளரவம்!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தினை அதிகப்படுத்த புத்தளம் மாநகர சபையின் பொது நூலகம் சிறப்பான வேலைத்திட்டங்களை செயல்படுத்தியமைக்காக (2024) நேற்று (20) தேசிய நூலக ஆவணவக்கல் சபையினால் கௌரவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விருதினை புத்தளம் பொது நூலகத்தின் பிரதம நூலகரும், பட்டய நூலகரும், இலங்கை நூலகர் சங்கத்தின் நூலக தகவல் விஞ்சாபன விரிவுரையாளருமான கே.ம். நிஷாத் பெற்றுக்கொண்டார்.

புத்தளம் மாநகர சபையின் பொது நூலகம் கடந்த பல ஆண்டுகளாக சிறப்பாக செயற்பட்டு வந்திருந்ததுடன், மன்னார் எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த புத்தளம் பொது நூலகத்தின் பிரதம நூலகர் கே.ம். நிஷாத் கடந்த சில காலங்களுக்கு முன்னர் கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் பல பல முக்கிய வேலைத்திட்டங்களை அறிமுகப்பிடுத்தி இருந்தார்.

அந்த வகையில் அவரின் அர்பணிப்பான சேவையுடனும், புத்தளம் மாநகர சபையின் சிறப்பான வழிகாட்டுதலிலும், புத்தளம் மாநகர சபையின் பொது நூலகத்திற்கு குறித்த கெளரவம் கிடைக்கபெற்றமை விஷேட அம்சமாகும்.

கம்பளைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நுரைச்சோலை OIC!

0

ஜூட் சமந்த

நுரைச்சோலை காவல் நிலையப் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் ரவி தர்மகுமார உடனடியாக அமலுக்கு வரும் வகையில் கம்பளை பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ் மா அதிபரால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

நுரைச்சோலை காவல் நிலையப் பொறுப்பதிகாரி ரவி பத்மகுமார, அந்தப் பகுதியில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்களுக்கு உதவி செய்து வருவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பல்வேறு கடத்தல்காரர்களுடன் OIC நடத்தியதாகக் கூறப்படும் பல தொலைபேசி உரையாடல்களின் ஆடியோ பதிவுகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதுர்தீன் சமீபத்தில் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

இவற்றினை கருத்திற்கொண்டு நுரைச்சோலை காவல் நிலையப் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய ரவி தர்மகுமாரவிற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கம்பளை பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள முன்னாள் நுரைச்சோலை காவல் நிலையப் பொறுப்பதிகாரி தரம் குறைக்கப்பட்டே குறித்த பகுதியில் பணிபுரிய பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடுமையாக கோபமடைந்த வட மாகாண ஆளுநர்!

மத்திய அரசாங்கம் நாங்கள் கோரும் நிதியை விடுவிப்பதற்குத் தயாராக உள்ளது. ஆனால், வடக்கு மாகாண நிர்வாகத்திலுள்ள ஒரு சில செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்வதற்கு விருப்பமின்றி, வெறும் சலுகைகளை அனுபவிப்பதில் மட்டுமே குறியாக உள்ளனர். இத்தகைய அதிகாரிகளை நினைத்து நான் வெட்கப்படுகிறேன், என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கடும் விசனம் வெளியிட்டார்.

கிளிநொச்சி, புதுமுறிப்புக் கிராமத்தில் மக்கள் நலன்சார் பணிகளை ஆற்றிவரும் ‘பத்மலோக – மனிதவள சிறப்பாற்றல் நிறுவனத்தின்’ 10ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (21.11.2025) புதுமுறிப்பு விக்னேஸ்வரா கல்லூரியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றும்போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நான் நிர்வாகச் சேவையில், ஆளுநராகப் பதவியேற்ற பின்னரே மாகாண நிர்வாகத்தினுள் நுழைந்தேன். மாகாண நிர்வாகம் இவ்வளவு பின்னடைவைச் சந்திக்கக் காரணம், பொறுப்பிலுள்ள சில அதிகாரிகளே. இவர்கள் பதவிகளையும் கதிரைகளையும் பிடித்து வைத்துக்கொண்டு, மக்கள் சேவையாற்றாது காலத்தை ஓட்டுகின்றனர்.

மக்களின் வரிப்பணத்தில் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகளை எவ்வித தயக்கமும் இன்றிப் பெற்றுக்கொள்ளும் இவர்கள், அந்த மக்களுக்குச் சேவையாற்ற மட்டும் விரும்புவதில்லை. இத்தகைய சுமைகளையும் சுமந்துகொண்டே நாம் பயணிக்க வேண்டியுள்ளது.

கடந்த காலங்களில் அரசியல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பல கிராமங்கள் அபிவிருத்தியிலிருந்து புறக்கணிக்கப்பட்டன. ஆனால், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், ‘பின்தங்கிய கிராமம் என்று எதுவும் இருக்கக் கூடாது’ என்ற உறுதியான நோக்கோடு செயற்பட்டு வருகிறது. எமது மாகாணத்துக்கு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு அபிவிருத்தி வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால், இந்த நன்மைகள் மக்களைச் சென்றடைவதற்கு எமது அதிகாரிகளே முட்டுக்கட்டையாக இருப்பது வேதனையளிக்கிறது.

சில சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் எமது மக்களின் அவலநிலையை ஒரு முதலீடாகக் காட்டித் திட்டங்களைத் தீட்டி நிதியைப் பெறுகின்றன. ஆனால், அப்படிப் பெறப்படும் நிதியில் மக்களுக்கான உதவிகளை விட, அந்த நிறுவனங்களின் நிர்வாகச் செலவுகளுக்கே பெரும் பகுதி செலவிடப்படுகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரத்தில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை.

மாறாக, மக்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்து, அவர்களுக்கு உண்மையில் என்ன தேவை என்பதைப் புரிந்து கொண்டு, தொண்டு அடிப்படையில் பணியாற்றும் ‘மனிதவள சிறப்பாற்றல் நிறுவனம்’ போன்ற அமைப்புகளே எமக்குத் தேவை, என்றார் ஆளுநர்.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டச் செயலக உதவி மாவட்டச் செயலர், கிராம அலுவலர், மனித வள சிறப்பாற்றல் நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

300 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருள் மீட்பு!

0

ரூ.300 மில்லியன் மதிப்புள்ள 30 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் மீட்பு

இலங்கை சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பொதியில் இருந்து 30 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

பின்னர், நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், குறித்த பொதி மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இவ்வாறு மீட்கப்பட்ட குஷ் போதைப்பொருள் கையிருப்பின் சந்தை மதிப்பு சுமார் ரூ.300 மில்லியன் என்று இலங்கை சுங்கம் குறிப்பிடுகிறது.