Wednesday, February 5, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 70

நாகவில்லில் சுகாதார வழிகாட்டளுடன் ஈத் கொண்டாட்டம்

நாடு முழுவதும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமது வீடுகளுக்குள்ளேயே சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஈதுல் பித்ர் தொழுகையில் ஈடுபட்டு அமைதியான முறையில் இம்முறை ரமழான் பண்டிகையை புத்தளம் எருக்கலம்பிட்டி மக்கள் கொண்டாடினார்கள்.

முழு உலகையும் ஆட்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முழுமையாக நீங்கி, பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து, நாடும் உலகும் மீண்டும் வழமைக்கு திரும்ப வேண்டும் எனவும் அவர்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்.

‘ஈதுல் பித்ர்’ எனப்படும் ஈகைத் திருநாளானது சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் இவ்வுலகில் பரப்பும் நோக்கில் இஸ்லாமியர்கள் கொண்டாடும் ஒரு புனித பெருநாள் விழா ஆகும்.

இஸ்லாமியர்களுக்கு ஐம்பெரும் கடமைகளில் ஒன்று, ரமழான் மாதம் முழுதும் நோன்பு நோற்பதாக்கும் . ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் விடவும், ரமழான் மாதமும் அதை தொடர்ந்து வரும் பெருநாள் தினமும் முஸ்லிம்களுக்கு சிறந்த நாட்களாக கருதப்படுகின்றது.

முப்பது நாட்கள் உண்ணாமல், பருகாமல், நோன்பிருந்து இறைவனுக்காக விழித்திருந்து, தனித்திருந்து, இறைமறையை தினம் ஓதி, இல்லாதவருக்கு ஈந்து இறைவழிபாட்டில் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி அதன் இறுதியாக இன்பமுடன் பெருநாளை கொண்டாடுகின்றனர்.

அந்தவகையில் வழமையாக பெருநாள் தினத்தில் பள்ளிவாசல்களில் காலைவேளையில் விசேட தொழுகை மற்றும் விஷேட சொற்பொழிவு நடைபெறும்.

ஆனால், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பயணத்தடை இம்முறை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றியே நிகழ்வுகள் நடத்துவதற்கு கட்டுப்பாட்டுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் வீட்டுக்குள் இருந்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தொழுகையில் ஈடுபட்டு பெருநாளை அமைதியாகக் கொண்டாடினர்.

நாகவில்லு, பாலாவி மற்றும் புத்தளம் நகரத்திலும் இந்நிலைமையை காணக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பு/எருக்கலம்பிட்டி பள்ளி நிர்வாகத்திற்கு நன்றி-தலைவர்

எவ்வித தடையுமின்றி மாதா மாதம் சம்பளமும், பெருநாள் போனஸூம் வழங்கிய நிர்வாகத்திற்கு எனது நன்றிகள்

பு/எருக்கலம்பிட்டி பள்ளிவாசல்களில் பணிபுரியம் நமது மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய உலமாக்கள் ,முஅத்தீன்கள், மற்றும் ஏனைய ஊழியர்கள்அனைவருக்கும் நமது ஊர் ஜமாஅத் உறுப்பினர்களின் அன்பான நிதி நன்கொடை மூலம் பெற்ற பணத்தொகை புனித ரமழான் நன்கொடையாக தாராளமாக- நியாயமான முறையில் இன்று அவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக பள்ளிவாசர் நிர்வாக சபைத் தலைவரும், முன்னால் உயர்ஸ்தானிகருமான இப்ராஹீம் அன்சார் தெரிவித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஒன்று௯டல், சமூக இடைவெளி பேணல் என அரசினதும், சுகாதார துறையினதும் அறிவுறுத்தலுக்கு அமைய அனைத்து மஸ்ஜித்களும் கட்டுப்பாட்டுடன் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் உலமாக்களின் மாதாந்த ஊதியம் மற்றும் ஏனைய விஷேட கொடுப்பனவுகள் அல்லாஹ்வின் உதவியைக்கொண்டு பூர்த்தியாக வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா அசாதாரண சூழ்நிலையில் மஸ்ஜித்களில் கடமைபுரியும் உலமாக்களுக்கும், முஅத்தின்களுக்கும் மாதாந்த சம்பளம் அல்லது கொடுப்பனவுகளை வழங்குவதில் பெரும்பாலான பள்ளிவாசல்களில் நெருக்கடி நிலைமை உறுவாகியுள்ள நிலையில் இன்றைய தினம் பெருநாள் விஷேட நன்கொடையாக 3 பள்ளிவாசல்களிலும் கடமை புரியும் உலமாக்கல், முஅத்தினகள் மற்றும் ஏனைய ஊழியர்களுக்கு வழங்ப்பட்டமை மிகுந்த திருப்தியளிப்பதாக அவர் தெரிவித்தார்.

மஸ்ஜித்களில் கடமையாற்றும் அனைத்து உலமாக்களுக்கும், முஅத்தின் மற்றும் ஊழியர்களுக்கும் மாதாந்த சம்பளம் அல்லது கொடுப்பனவுகளை வழங்குமாறு வக்பு சபை தலைவரும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளருமான அஷ்ஷெய்க் அஷ்ரப் ( நளீமி) அவர்கள் கடந்த வருடமும் ஊடகங்கள் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும், மஸ்ஜித்களின் செயற்பாடுகள் முடக்கப்பட்டிருந்த போதிலும் எமது புத்தளம் எருக்கலம்பிட்டி (நாகவில்லு) ஜூம்ஆப் மஸ்ஜித் நிர்வாக சபையினர் , தாராளம் மனம் கொண்ட மஹல்லாவாசிகளின் பூரண ஒத்துழைப்புடன் தங்களுடைய நிர்வாகத்தின் கீழ் கடமைபுரியும் உலமாக்கள், முஅத்தின்கள் மற்றும் ஏனைய ஊழியர்களுக்கு உரிய மாதாந்த சம்பளம் மற்றும் பெருநாள் கொடுப்பனவு என்பனவற்றை எவ்வித குறையுமின்றி இம்முறையும் வழங்கியுள்ளனர் அல்ஹம்துலில்லாஹ்.

இதற்காக பாடுபட்ட நிர்வாக சபையினருக்கும், மஹல்லாவாசிகளுக்கும், வெளி இடங்களைச்சேர்ந்த பரோபகாரிகளுக்கும் எருக்கலம்பிட்டி ஜூம்ஆ மஸ்ஜித் சார்பில் எனது உளப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் எல்லா நலவுகளையும் வழங்குவதுடன், வாழ்க்கையில் பரக்கத்தையும், நீண்ட ஆயுளையும் கொடுக்க வேண்டும் என இந்த சந்தர்ப்பத்தில் அல்லாஹ்விடம் பிரார்த்தனையும் செய்வதாக பள்ளிவாசர் நிர்வாக சபைத் தலைவர் தெரிவித்தார்.

எமது எருக்கலம்பிட்டி ஜூம்ஆ மஸ்ஜித் நிர்வாக சபையினருடைய இந்த நடவடிக்கையானது புத்தளம் மாவட்டம் மாத்திரமின்றி, ஏனைய மாவட்டங்களில் உள்ள மஸ்ஜித் நிர்வாக சபையினருக்கும் ஒரு முன்னுதாரணமாகும் என ஊர் நலன் விரும்பிகள் மற்றும் ஏனைய அமைப்புக்கள் தெரிவித்துள்ளமை ஓர் விஷேட அம்சமாகும்.

பு/எருக்கலம்பிட்டி பள்ளிவாசலின் மக்களுக்கான விஷேட செய்தி

புத்தளம் எருக்கலம்பிட்டி ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு இதுவரை இல்லாத பெரும் தொகை பேரீச்சம் பழங்கள் இம்முறை அன்பளிப்பாக கிடைக்கப்பெற்றுள்ளதாக முன்னால் உயர்ஸ்தானிகரும் புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் தலைவருமான இப்ராஹீம் அன்சார் தெரிவித்துள்ளார்.

எதிர்நோக்கியுள்ள கொவிட் 19 அசாதாரண சூழ்நிலையில் மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் ரமழான் மாதத்தின் மார்க்க கடமைகளை நிறைவுற்றுவதிலும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இவ்வாரான ஒரு காலப்பகுதியில் ரமழான் மாதத்தில் நன்மையை நாடி ஊரவர்கள் மற்றும் வெளியூர் தனவந்தர்களும் பேரீத்தம்பழங்களை எமது பள்ளிவாசலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதுவரை சுமார் 4 ஆயிரம் கிலோ கிராமிற்கும் அதிகமான பேரீத்தம்பழங்கள் கிடைக்கப்பெற்றுள்ளமை எமது ஊர் மீதும் பள்ளிவாசல் மீதும் வைத்துள்ள அன்பையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாக பள்ளிவாசல் தலைவர் இப்ராஹீம் அன்சார் தெரிவித்துதார்.

கிடைக்கப்பெற்ற அனைத்து பேரீத்தம்பழங்களையும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் இரவு பகல் பாராது நீதமான முறையில் மக்களுக்கு பகிர்ந்தளித்ததாகவும், குடும்பம் ஒன்றிற்கு சுமார் 3 கிலோ வரையான பேரீத்தம்பழங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக பாடுபட்ட பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் அன்பளிப்பு செய்த நல்லுள்ளங்கள் மற்றும் ஊர் ஜமாத்தார்களுக்கு நன்றி தெரிவிப்பதாகுவும் அவர் eNews1st ற்கு தெரிவித்தார்.

பெருந்தொகை பேரீத்தம்பழங்கள் பள்ளிவாசலுக்கு அன்பளிப்பு!

புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் எஸ்.எம் றிஜாஜ் மற்றும் நாகவில்லு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களால் புத்தளம் எருக்கலம்பிட்டி ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு பெரும் தொகை பேரீச்சம் பழங்கள் இன்று 1.05.2021 அன்பளிப்பு செய்யப்பட்டது.

புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் எஸ்.எம் றிஜாஜ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அவர்களினால் மேற்படி பேரீச்சம் பழங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

சமார் 1400 கிலோ கிராம் பெறுமதியான பேரீச்சம் பழங்கள் இன்று 1.05.2021 பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதுவரை இல்லாத அளவு இம்முறை நோன்பு காலத்தில் புத்தளம் எருக்கலம்பிட்டி ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு பெரும் தொகை பேரீச்சம் பழங்கள் நன்கொடையாக கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இதுவரை சுமார் 4 ஆயிரம் கிலோவிற்கும் அதிகமான பேரீச்சம் பழங்கள் கிடைக்கபெற்று அவை மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாகவும் பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதில் முதற்கட்டமாக 750 கிலோ பேரீச்சம் பழங்களும், அதனை தொடர்ந்து 900 கிலோ பேரீச்சம் பழங்களும், அதனை தொடர்ந்து 1100 கிலோ பேரீச்சம் பழங்களும், பரோபகாரிகளினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கையளிப்பு நிகழ்வில் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் எஸ்.எம் றிஜாஜ் மற்றும் நாகவில்லு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

நாகவில்லு வைத்தியாசாலைக்கு கான் வசதி!

0

புத்தளம் நாகவில்லு பகுதியில் அமையப்பெற்றுள்ள வைத்தியாசாலையின் வடிகானுக்காக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று 12.04.2021 இடம்பெற்றது.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாகவில்லு கிளையின் வேண்டுகோளுக்கிணங்க, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் திருமதி. பிஸ்லியா பூட்டோ அவர்களின் நிதி ஓதுக்கீட்டில் குறித்த வடிகான் நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இடம்பெற்றது.

மழை காலங்களில் ஏற்படும் அசௌகரியங்களை கருத்தில்கொண்டும், வைத்தியசாலைக்கு முன்பாக கானுக்குல் நீர் தேங்கி நிற்கும் நிலையை அவதானித்தும் மேற்படி முன்னெடுப்பு இடம்பெற்றுள்ளது.

65 மீட்டர் வரை நீலமுள்ள குறித்த வடிகான், சுமார் 10 லட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், குறித்த வேளைத்திட்டத்தை நடைமுறைப்படுத்திய பிரதேச சபை உறுப்பினர் திருமதி. பிஸ்லியா பூட்டோ அவர்களுக்கு ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாகவில்லு கிளை நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

குறித்த நிகழ்வில் புத்தளம் பிரதேச சபை தலைவர் திரு. அஞ்சன, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் திருமதி. பிஸ்லியா பூட்டோ, புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் உப தலைவர், செயலாளர் மற்றும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் FA கிண்ண சுற்றுப் போட்டியில் எருக்கலம்பிட்டி FC அணி வெற்றி!

0

2021 ஆம் ஆண்டிற்கான புத்தளம் FA கிண்ண சுற்றுப் போட்டியின் 3வது போட்டியில் புத்தளம் 777 FC அணியை 3.0 என்ற கோள் கணக்கில் வீழ்த்தி எருக்கலம்பிட்டி FC அணி வெற்றி பெற்றுள்ளது.

2021 ஆம் ஆண்டிற்கான புத்தளம் FA கிண்ண சுற்றுப் போட்டிகள் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில், தொடரின் 3வது போட்டி புத்தளம் சாஹிரா கல்லூரி மைதானத்தில் நேற்றைய தினம் 04.04.2021 இடம்பெற்றது.

நாசர் இல்ஹாமின் தலைமையில் கலமிரங்கிய எருக்கலம்பிட்டி FC அணி ஆரம்பம் முதல் போட்டியில் ஆதிக்கத்தை செலுத்தியிருந்ததுடன் ஆட்டத்தின் முதல் பாதியில் 2 கோல்களை அடித்து முன்னனி வகித்தது.

போட்டியின் இரண்டாம் பாதியின் இருதிக்கட்டத்தில் எருக்கலம்பிட்டி FC அணி சார்பாக 3வது கோல் அடிக்கப்பட்டதுடன் போட்டி 3.0 என்ற கோல் கணக்கில் நிறைவுபெற்றது.

இதனடிப்படையில் எருக்கலம்பிட்டி FC அணி புத்தளம் FA கிண்ண சுற்றுப் போட்டியில் முன்னிலை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மன்/எருக்கலம்பிட்டி பாடசாலையில் அடிக்கல் நாட்டு வைபவம்!

0

மன்/எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய நுலைவாயில் மற்றும் சுவர் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் ஜனாப் என்.எம். ஷாபி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பாடசாலை நுலைவாயில் உட்பட சுமார் 300 மீற்றர் வரையான சுவர் அமைப்பதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது.

எருக்கலம்பிட்டி ஐடியல் பிரண்ட்ஸ் அசோசியேஷன் (72) அமைப்பின் பூரண அணுசரனையில் இடம்பெறும் இவ் வேளைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வின்போது, அமைப்பின் தலைவர் உட்பட ஏனைய அங்கத்தவர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.

சுமார் 7 லட்சம் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்படவிருக்கும் குறித்த நுலைவாயில் மற்றும் சுவர் கட்டுமான பணியை பாடசாலையின் அதிபர் வெகுவாக பாராட்டியதுடன் எதிர்காலத்தில் இதுபோன்ற பல்வேறுபட்ட அபிவிருத்திகளில் பங்களிப்பு செய்யுமாறும் வேண்டிக்கொண்டார்.

குறித்த நிகழ்வில் பாடசாலை அதிபர், எருக்கலம்பிட்டி ஐடியல் பிரண்ட்ஸ் அசோசியேஷன் அமைப்பினர், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், உலமாக்கள் உட்பட ஏனைய நலன்விரும்பிகளும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நாகவில் பாடசாலை மைதானம் முழுமையாக செப்பன்!

0

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மைதானம் செப்பனிடும் வேளைத்திட்டம் இன்று 3.4.2021 இடம்பெற்றது.

எருக்கலம்பிட்டி எப்.சீ அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் எஸ்.எம். றிஜாஜ் அவர்களின் ஏற்பாட்டில் மைதானம் முழுமையாக செப்பனிடப்பட்டது.

குன்றும் குழியுமாக காணப்பட்ட மேற்படி மைதானம் நாளைய தினம் இடம்பெறவுள்ள எருக்கலம்பிட்டி எப்.சீ மற்றும் புத்தளம் செவன் ஸ்டார் கழகங்களுக்கிடையிலான உதைப்பந்தாட்ட போட்டிக்காக இன்று காலை தொடக்கம் செப்பனிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

குறித்த மைதானம் மழை காலங்கில் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், சுற்று மதில் இல்லாத காரணத்தினால் இரவு வேளைகளில் போதை பாவனை விடயங்கள் இடம்பெறுவதாகவும் வாலிபர்கள் விசனம் தெரிவித்தனர்.

புத்தளம் எருக்கலம்பிட்டியை மையப்படுத்திய எருக்கலம்பிட்டி எப்.சீ உதைப்பந்தாட்டக் கழகம், புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் போட்டிகளில் விளையாடி வருவதுடன், லீக் போட்டிக்கு தெரிவாகிய முதலாவது சந்தர்ப்பததிலேயே இருதிப்போட்டிக்கு தெரிவாகி இருந்தமை ஓர் விஷேட அம்சமாகும்.

எருக்கலம்பிட்டி மகளிர் பாடசாலையில் மாணவர் பாராளுமன்ற தேர்தல்

0

மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் மகா வித்தியாலயத்தின் இரண்டாவது மாணவர் பாராளுமன்ற தேர்தல் இன்று திங்கள் 29. 3. 2021 பாடசாலையில் நடைபெற்றது.

60 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக சுமார் 100 வேட்பாளர்கள் போட்டியிட்டதுடன் 3 வாக்களிப்பு நிலையங்களில் 300க்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களித்தனர்.

இன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படயிருப்பதுடன் மாணவர் பாராளுமன்றத்தின் முதல் அமர்வு எதிர்வரும் 6.4.2021 செவ்வாய்க்கிழமை பாடசாலையில் வெகு விமர்சையாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நடைபெறவிருக்கும் மாணவர் பாராளுமன்றத்தின் முதல் அமர்வு நிகழ்வில் பிரதம அதிதியாக உதவித் தேர்தல் ஆணையாளர் (வவுனியா, மன்னார்) அவர்களும்
மன்னார் கல்வி வலய அதிகாரிகளும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

இவ்வாரான செயற்பாடுகள் மாணவர்களின் உதிர்கால தலைமைத்துவ பண்புகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் சவால்களை எதிர்கொள்ளும் திறனும் அதிகரிக்குமென பாடாசலை அதிபர் ஜனாப் S. அஸ்மி அவர்கள் எமது eNews1st ற்கு தெரிவித்தார்.

இன்றைய இரண்டாவது மாணவர் பாராளுமன்ற தேர்தல் வாக்களிப்பில் வாக்களித்த எந்த ஒரு வாக்கும் செல்லுபடியற்ற வாக்காக பதியப்படாமையானது ஓர் விஷேட அம்சமாகும்.

பு/எருக்கலம்பிட்டி பாடசாலை பழைய மாணவர் பொதுக் கூட்டம்

0

பு/எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் சங்க பொதுக் கூட்டம் இன்று ஞாயிரு 21.03.2021 இரவு 7.00 மணிக்கு இடம்பெற உள்ளது.

பாடசாலை அதிபர் S.M. ஹுசைமத் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ள இப் பழைய மாணவர்கள் சங்க பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவும் இடம்பெற உள்ளமை ஓர் முக்கிய விடயமாகும்.

இவ்வருடம் 25 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாட இருக்கும் இப் பாடசாலை, புதிய நிர்வாக உறுப்பினர்களின் செயற்பாடுகள் பாடசாலையிலும் வெள்ளி விழா நிகழ்விலும் பாரிய பங்களிப்பை செய்யும் என பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

பாடசாலையின் பிரதான மண்டபத்தில் சுமூகமான முறையில் இடம்பெற உள்ள பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாக தெரிவிற்கு அனைத்து பழைய மாணவர்களையும் வருகை தருமாறு பாடசாலை அதிபர் அவர்கள் வேண்டிக்கொள்கின்றார்கள்.

அசாதாரண ஒரு சூழலில் இடம்பெறும் இக்கூட்டத்தின் மூலம் பாடசாலையின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் கல்வி வளர்ச்சி என்பன பெரிதும் எதிர்பார்க்கப்படும் விடயமாக அனைவராலும் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.