Sunday, March 22, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 75

சிக்கினார் துப்பாக்கிதாரி!

0

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் இன்று (26) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கெகிராவ பிரதேசத்தில் வைத்து இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. 

கைது செய்யப்பட்ட மூவரில் ஒரு பெண்ணும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தெற்காசியாவின் வேகமான மனிதர் சாமோத் யோதாசிங்க!

0

புதிய போட்டி சாதனையுடன் இலங்கைக்காக தங்கப் பதக்கத்தை வென்ற யோதாசிங்கே…..!

தெற்காசிய மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் 2025 இல் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சாமோத் யோதாசிங்க தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

குறித்த ஓட்டப்பந்தய போட்டியை 10.30 வினாடிகளில் முடித்து வெற்றிபெற்றதன் மூலம் புதிய போட்டி சாதனை அவர் படைத்துள்ளார்.

தெற்காசிய மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் 2025 இல் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற சாமோத் யோதாசிங்கே, வேகமான மனிதர் பட்டத்தை வென்றார்.

அவரது அற்புதமான செயல்திறன் இதற்கு முன் இருந்த சாம்பியன்ஷிப் போட்டி சாதனையையும் முறியடித்தது!

உலக சாதனை படைத்த கிங் கோலி!

0

இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டம் சிட்னியில் இன்று (25) நடைபெற்றது. 

இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 46.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 236 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

அதிகபட்சமாக ரென்ஷா 56 ஓட்டங்களைப் பெற்றார். இந்தியா தரப்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

பின்னர் 237 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பாடிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா – விராட் கோலி ஜோடி சிறப்பாக ஆடி வெற்றியை பெற்று கொடுத்தது. 

வெறும் 38.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 237 ஓட்டங்கள் அடித்த இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. 

ரோஹித் சர்மா 121 ஓட்டங்களுடனும், விராட் கோலி 74 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

இந்த ஆட்டத்தில் பெற்ற 74 ஓட்டங்களையும் சேர்த்து சர்வதேச வெள்ளைப்பந்து (ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள்) கிரிக்கெட்டில் விராட் கோலி இதுவரை 18,443 ஓட்டங்களை குவித்துள்ளார். 

இதன் மூலம் வெள்ளைப்பந்து போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற உலக சாதனையை இவர் படைத்துள்ளார். 

இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் 18,436 ஓட்டங்களைப் பெற்றிருந்ததே அதிகபட்சமாக இருந்தது. 

தற்போது அதனை முறியடித்துள்ள விராட் கோலி புதிய சாதனையை படைத்துள்ளார். 

அந்த பட்டியல்: 

1. விராட் கோலி – 18,443 ஓட்டங்கள் 
2. சச்சின் டெண்டுல்கர் – 18,436 ஓட்டங்கள் 
3. குமார் சங்கக்கார – 15,616 ஓட்டங்கள் 
4. ரோஹித் சர்மா – 15,589 ஓட்டங்கள் 
5. மஹேல ஜயவர்தன – 14,143 ஓட்டங்கள்

மத்திய மலைநாட்டின் பல இடங்களில் மண்சரிவு அபாயம்!

0

நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் சீரற்ற வானிலையைத் தொடர்ந்து, மத்திய மலைநாட்டில் உள்ள பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. 

இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியான மழை காரணமாக மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது. 

இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர் மழையுடன் அடிக்கடி பனிமூட்டமும் காணப்படுவதால், வளைவுகள் நிறைந்த மலைநாட்டு வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள், வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்து, மெதுவாகப் பயணிப்பதன் மூலம் வீதி விபத்துகளைத் தவிர்க்க வேண்டும் என போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் கலகல, பிட்டவல, கினிகத்தேனை, கடவல, தியகல, வட்டவளை, ஹட்டன் ஆகிய பகுதிகளிலும், ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் குடாகம, கொட்டகலை, சென்கிளயார், தலவாக்கலை, ரதல்ல, நானுஓயா ஆகிய பகுதிகளிலும் அடிக்கடி பனிமூட்டம் காணப்படுகிறது. 

மேலும், இவ்வீதிகளில் பல இடங்களில் மண் திட்டுகள் சரிந்து வீழ்ந்துள்ளதுடன், மண்சரிவு அபாயமும் நிலவுகிறது. 

எனவே, இந்த வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களைச் செலுத்த வேண்டும் என பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய மலைநாட்டின் நீரேந்து பிரதேசங்களில் அதிக மழைவீழ்ச்சி காரணமாக, நீர்வீழ்ச்சிகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 

விமலசுரேந்திர, காசல்ரி, லக்ஸபான, நவலக்ஸபான, கெனியோன், மவுசாக்கலை, மேல்கொத்மலை, பொல்பிட்டிய ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. 

மழைவீழ்ச்சி மேலும் அதிகரித்தால், நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் எந்நேரமும் திறக்கப்படலாம் என்பதால், நீர்த்தேக்கங்களுக்கு கீழே உள்ள ஆறுகளுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொறுப்பு பொறியியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மதுரங்குளி பகுதியில் இடம்பெற்ற கார் விபத்து!

0

ஜூட் சமந்த

வீதியில் பயணித்த மோட்டார் கார் சாலையை விட்டு விலகி மரத்தில் மோதியதில் பெல்ஜியத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் சாரதி ஆகியோர் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் – சிலாபம் சாலையில் மதுரங்குளிய – செம்பெட்டே பகுதியில் நேற்று 24 ஆம் தேதி மாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் சிக்கிய மோட்டார் கார், சிலாபத்திலிருந்து புத்தளம் நோக்கிச் சென்றவேளையில் வாகனம் சாலையை விட்டு விலகி மரத்தில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மேலும வாகனத்தை செலுத்திய ஓட்டுநர் தூங்கிவிட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்களின் நிலை மோசமாக இல்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மதுரங்குளிய காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

போதைப்பொருள் பாக்கெட்டுகளை விழுங்கிய இளைஞர்!

0

ஜூட் சமந்த

ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பாக்கெட்டுகளை விழுங்கிய நிலையில் இளைஞர் ஒருவர் சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் தொடுவாவ – மஹாவெவ, குடமடுவெல்ல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவராவார்.

போதைப்பொருள் பாக்கெட்டுகளை விழுங்கிய பின்னர் வீட்டில் மயக்கமடைந்த நபரை அவரது சகோதரர் நேற்று 24 ஆம் தேதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவரா அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக போதைப்பொருள் பாக்கெட்டுகளை விழுங்கினாரா என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தொடுவாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனடாவுடன் அனைத்து வர்த்தகப் பேச்சுகளும் நிறுத்தம்!

0

கனடா உடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படுவதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.

அந்த வகையில், கனடாவை அமெரிக்காவோடு இணைப்பது குறித்து அவ்வபோது பேசி வந்த அவர், கனடாவிற்கு அதிக வரிவிதிப்பையும் அமல்படுத்தி உள்ளார். இதற்கிடையே, கனடாவின் பிரதமராக ஒன்பது ஆண்டுகள் பதவி வகித்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியதை அடுத்து, மார்க் கார்னி லிபரல் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரதமரானார்.

மார்க் கார்னி பிரதமரான பின்பும் அமெரிக்காவை எதிர்த்து வந்தார். இந்தச் சூழலில், அமெரிக்காவிற்குச் சமீபத்தில் பயணம் மேற்கொண்ட கனடா பிரதமர் மார்க் கார்னி, வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்பைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில், கனடாவின் வரிவிதிப்பு தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கனடா உடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படுவதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தொலைக்காட்சியில் விளம்பரம் வெளியானதைத் தொடர்ந்து ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகன் வர்த்தக வரிகள் பற்றிப் பேசியதை, கனடா தனது விளம்பரத்தில் தவறாகச் சித்திரித்திருப்பதாக அதிபர் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். வரி விதிப்பு குறித்து எதிர்மறையாகப் பேசும் ரீகனின் விளம்பரங்களைக் கனடா தவறாகப் பயன்படுத்தியதாகவும் அது போலியானது என்றும் அண்மையில் ரொனால்டு ரீகன் அறக்கட்டளை அறிவித்திருந்ததை ட்ரம்ப் சுட்டிக்காட்டினார். மேலும், அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வரிகள் மிகவும் முக்கியமானவை என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கடுமையான அமெரிக்க வரி விதிப்பிற்குத் தளர்வு வழங்கக் கோரி கனடா பிரதமர் மார்க் கார்னி ட்ரம்பைச் சந்தித்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த எதிர்பாரா முடிவு வெளிவந்துள்ளது. முன்னதாக, ”அமெரிக்கா அல்லாத பிற நாடுகளுக்குச் செய்யப்படும் ஏற்றுமதி அடுத்த பத்து ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரிக்கப்படும், அதேநேரத்தில், உள்நாட்டு முதலீடும் உள்கட்டமைப்பும் வரும் பட்ஜெட்டில் அதிகரிக்கப்படும். பல தசாப்தங்களாக நீடித்துவந்த அமெரிக்காவுடனான நெருக்கமான பொருளாதார உறவு முடிந்தது” என்று மார்க் கார்னி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தளம் மாவட்டத்தில் 155 குடும்பங்கள் பாதிப்பு!

0

தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் இதுவரை சுமார் 155 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் நிவாரண சேவைகள் மையம் (NDRSC) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் புத்தளம் மாவட்டத்தின் 14 கிராம சேவகர் பிரிவுகளில், சுமார் 155 குடும்பங்களைச் சேர்ந்த 562 பேர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தின் 10 பிரதேச செயலகங்களுக்கு உற்பட்ட 155 குடும்பங்களை சேர்ந்த 562 பேர் இவ்வாறு சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிலாபம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அம்பகந்ததவள மற்றும் சவரான கிராம சேவகர் பிரிவில் 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், மொத்தமாக 12 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாத்தாண்டிய பிரதேச செயலகத்தின் தெற்கு முது கட்டுவ பிரிவில் உள்ள கால்நடை அலுவலக வளாகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிலாபம் சவாரான பகுதியில் உள்ள சமூக மண்டபம் ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் வெடித்த ஆசிரியர்கள் போராட்டம்!

2026ம் ஆண்டு வடமாகாண கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட இடம்மாற்றத்தில் கிளிநொச்சி ஆசிரியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஒன்றிணைந்து கிளிநொச்சி தெற்கு வலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடமாகாணக் கல்வித்திணைக்களத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தில், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளமையைச் சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட ஆசிரியர்களும் மாவட்டத்தில் பணிபுரியும் ஏனைய ஆசிரியர்களும் அதிபர்களும் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளும் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த முறையற்ற விதமாக மேற்கொள்ளப்பட்ட இடமாற்றத்தை உடணடியாக இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தி இன்று (2025.10.24) வெள்ளிக்கிழமை கிளிநொச்சி தெற்கு வலயக்கல்விப் பணிமனைக்கு முன்பாக ஒன்றுகூடி முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தின் மூலம் இடமாற்றத்தை இரத்துச் செய்வதற்கான பின்வரும் நியாயப்பாடுகளை போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் முன்வைத்துள்ளனர்.

1. போர் நிகழ்ந்த சூழலில் தங்கள் உயிர்களை துச்சமென எண்ணி பதுங்கு குழிகளுக்குள்ளும் குண்டுமழை நடுவினிலும் நின்று கடந்த காலங்களில் பணியாற்றிய பல ஆசிரியர்களின் பெயர்களும் இப்பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளமை.

2. போர்ச்சூழலால் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களதும், உடல் உறுப்புக்களை இழந்து அடைந்தவர்களதும் பெயர்களும் இப்பட்டியலில் விழுப்புண் உள்வாங்கப்பட்டுள்ளமை.

3. உயர்கல்வியை தொடர்வதற்கான வாய்ப்புக்கள் கிடைத்தும் போர் காரணமாக மிக சவால்களின் மத்தியில் உயர்கல்வியை நிறைவுசெய்து காலதாமதமாகி ஆசியர்சேவைக்குள் உள்வாங்கப்பட்டு இன்று பாரிய குடும்பச் சுமைகளோடு பணியாற்றிவருகின்ற ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை.

4. கிளிநொச்சி மாவட்டத்தின் புவிசார் கட்டமைப்புகளை புரிந்து கொள்ளாமல் மாவட்டத்திற்குள்ளே பல கிலோமீற்றர் தூரம் பாரிய போக்குவரத்து நெருக்கடிகளைச் சந்தித்து பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை.

5. கிளிநொச்சி மாவட்டத்தின் பல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்யாத சூழலில் பற்றாக்குறையாகவுள்ள எமது மாவட்டத்தின் ஆசிரியவளத்தை சிதைக்கும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை.

6. முறையான தரவுகளின்றி இடமாற்றப்பட்டியலில் ஆசிரியர்களின் பெயர் உள்வாங்கப்பட்டமை மற்றும் இடமாற்றம் வழங்கப்படும் ஆசிரியர்களுக்கு நிகரான ஆசிரியர்களை வழங்குவது தொடர்பாக நம்பகமான பொறிமுறை ஏதுமின்றி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள நியாயப்பாடுகள் எதனையும் கருத்தில் கொள்ளாமல் முன்னெடுக்கப்பட்ட இடமாற்றத்தால் எமது மாவட்டத்தின் கல்வி மேலும் பின்தள்ளப்பட்டு எமது மாணவர்களின் எதிர்காலம் இருள்மயமாகி பேராபத்து நிகழவுள்ளமையினை புரிந்து கொண்டு உடனடியாக சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தை இரத்துச்செய்யவேண்டும் என்ற கோரிக்கையினை பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பாக ஆசிரியர் சங்கத்தினர் முன்வைத்துள்ளனர்.

கோரிக்கையின் நியாயப்பாடுகளைப் புரிந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியில் அக்கறையுள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்விமான்கள் ஆகியோரும் எம்முடன் கைகோர்த்துள்ளார்கள் என குறித்த சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீரற்ற காலநிலையால் 16 மாவட்டங்கள் பாதிப்பு!

0

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 16 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மைத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் 106 பிரதேச செயலகங்களுக்குற்பட்ட 4,959 குடும்பங்களைச் சேர்ந்த 20,247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.

மேலம் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை நான்கு ஓர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மைத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை சீரற்ற காலநிலையால் 2 வீடுகள் முற்றாக பாதிக்கப்பட்டுளளதுடன், 507 வீடுகள் பகுதியளவில் பதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 8 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 30 பேர் பாதுகாப்பான இடத்தில் தங்கிச வைக்கப்பட்டுள்ளதாகவும், அயல் வீடுகளில் சுமார் 43 குடும்பங்களைச் சேர்ந்த 180 பேர் தங்கியுள்ளதாகவும் குறித்த நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.