Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஸ்ரீ.முஸ்லிம் காங்கிரஸ் கூட்டத்தில் அமைதியின்மை?

ஸ்ரீ.முஸ்லிம் காங்கிரஸ் கூட்டத்தில் அமைதியின்மை?

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் விஷேட உயர்பீட கூட்டம் இன்று (04) ஞாயிற்றுக்கிழமை கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றது.

கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது லுஹர் தொழுகைக்கான பாங்கு ஒலித்த சமயம் கூட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது.

கூட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஏ.ஸி. யஹியாகான் சில புகைப்படங்களை எடுத்து முகநூலில் பதிவிறக்கம் செய்தமையால் கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.

புகைப்படங்களை எடுத்து முகநூலில் பதிவிறக்கம் செய்தமை மற்றும் விஷமிகளுக்கு கட்சியை அநாகரிகமாக முகநூலில் விமர்சிக்க இடமளித்தமை போன்ற காரணங்களால் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம்  உயர்பீட உறுப்பினர் ஏ.ஸி. யஹியாகானை உடனடியாக வெளியேறுமாறு பணித்தார்.

கட்சியின் தற்போதைய உயர்பீடக் கூட்டம் மற்றும் அடுத்த உயர்பீடக் கூட்டம் ஆகிய இரு அமர்வுகளில் யஹியாகான் பங்குபற்றுவதனை இடைநிறுத்துவதாக தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்தார்.

யஹியாகானுடைய வகிபாகம் பற்றி பாராட்டிய தலைவர் ரவூப் ஹக்கீம், இந்த முடிவை மிகவும் மனவருத்தத்துடன் எடுக்கவேண்டிய சூழ்நிலையை உண்டாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தலைவரோடு கைகுலுக்கி, மிகவும் முன்மாதிரியான நற்பண்போடு  யஹியாகான் சிரித்த முகத்துடன் வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது.

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

ஸ்ரீ.முஸ்லிம் காங்கிரஸ் கூட்டத்தில் அமைதியின்மை?

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் விஷேட உயர்பீட கூட்டம் இன்று (04) ஞாயிற்றுக்கிழமை கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றது.

கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது லுஹர் தொழுகைக்கான பாங்கு ஒலித்த சமயம் கூட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது.

கூட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஏ.ஸி. யஹியாகான் சில புகைப்படங்களை எடுத்து முகநூலில் பதிவிறக்கம் செய்தமையால் கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.

புகைப்படங்களை எடுத்து முகநூலில் பதிவிறக்கம் செய்தமை மற்றும் விஷமிகளுக்கு கட்சியை அநாகரிகமாக முகநூலில் விமர்சிக்க இடமளித்தமை போன்ற காரணங்களால் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம்  உயர்பீட உறுப்பினர் ஏ.ஸி. யஹியாகானை உடனடியாக வெளியேறுமாறு பணித்தார்.

கட்சியின் தற்போதைய உயர்பீடக் கூட்டம் மற்றும் அடுத்த உயர்பீடக் கூட்டம் ஆகிய இரு அமர்வுகளில் யஹியாகான் பங்குபற்றுவதனை இடைநிறுத்துவதாக தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்தார்.

யஹியாகானுடைய வகிபாகம் பற்றி பாராட்டிய தலைவர் ரவூப் ஹக்கீம், இந்த முடிவை மிகவும் மனவருத்தத்துடன் எடுக்கவேண்டிய சூழ்நிலையை உண்டாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தலைவரோடு கைகுலுக்கி, மிகவும் முன்மாதிரியான நற்பண்போடு  யஹியாகான் சிரித்த முகத்துடன் வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular