சுகாதார அமைச்சின் மேற்பார்வையில் இலங்கை கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ தரத்தில் அமையப்பெற்ற சுத்திரீகரிக்கப்பட்ட குடிநீர் மையம், நேற்று (2025 பெப்ரவரி 01) ஆனமடுவ ஆதார வைத்தியசாலையின் இரத்த சுத்தீகரிப்பு (hemodialysis) பிரிவில் நிறுவப்பட்டது.
இது கடற்படையின் உயர் தொழிநுட்ப பங்களிப்புடன் இந்த சமூகப் பணித் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட முப்பத்தொறாவது (31) மருத்துவ தர சுத்திரீகரிக்கப்பட்ட குடிநீர் மையமாகும்.
இத் திட்டத்தை ஆனமடுவ ஆதார வைத்தியசாலையின் இரத்த சுத்தீகரிப்பு (hemodialysis) பிரிவில் நிறுவுவதன் மூலம், குறித்த பிரிவில் பத்து (10) சிறுநீரக நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியும், மேலும் இருபது (20) நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடிய தன்மையும் உள்ளது.
மேலும், ஆனமடுவ ஆதார வைத்தியசாலையில் நிறுவப்பட்ட மருத்துவ தரத்தில் அமையப்பெற்ற குறித்த சுத்திரீகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை வைத்தியசாலைக்கு கையளிக்கும் நிகழ்வில், இந்த சமூகப் பணித் திட்டத்தின் வெற்றிக்கு தொடராக பங்களித்து வரும் அனைத்து பங்குதாரர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


