Wednesday, January 15, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsமக்களின் உணர்வுகளை வென்ற அலிசப்றி ரஹீம் எம்.பி

மக்களின் உணர்வுகளை வென்ற அலிசப்றி ரஹீம் எம்.பி

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அலி சப்ரி ரஹீம் அவர்களுக்கும் வடமேல் மாகாண ஆளுநர் அகமத் நசீர் அவர்களுக்குமான சந்திப்பு நேற்று (10) ஆளுநர் மாளிகையில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் புத்தளம் மாவட்ட அபிவிருத்தி தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன், மக்களுக்கான அவசர நிவாரண உதவிகள் தொடர்பிலும் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

மேலும் புத்தளம் மாவட்ட அரச உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாக முகம்கொடுததுவரும் பிரச்சினைகள் தொடர்பாக ஆளுநருடன் கலந்துரையாடி அவர்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும், ஆலோசனைகளையும் உறுப்பினர் கௌரவ அலி சப்ரி ரஹீம் பெற்றுக் கொடுத்தார்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் புத்தளம் பிரதேசத்தின் பல கிராமங்களின் வீதிகள், பாலங்கள் என வீடுகளும் பாரிய அளவில் பாதிக்கட்ட விடயங்களை முன்வைத்த அலி சப்ரி ரஹீம், இவற்றை துரித கதியில் நிவர்த்திசெய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வடமேல் மாகாண ஆளுநர் அகமத் நசீர் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அலி சப்ரி ரஹீம் அவர்களுக்கும் வடமேல் மாகாண ஆளுநர் அகமத் நசீர் அவர்களுக்குமிடையான பலதரப்பட்ட சந்திப்பின் மூலம் மக்களின் பல பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular