(எம் என் முஹம்மது)
அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி முதல்வரும் தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநகர சபை உறுப்பினருமான யூ.எல். உவைஸ் அவர்கள், கட்சிக்கும் தலைமைக்கும் வழங்கியிருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இன்று( 17) தனது பிரதி முதல்வர் பதவியிலிருந்தும் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்தும் உத்தியோகபூர்வமாக ராஜினாமா செய்துள்ளார்.
அரசியல் நேர்மை மற்றும் கட்சிக் கட்டுப்பாட்டிற்கு முன்னுரிமை வழங்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த தீர்மானம், அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஒரு வருட காலம் மாநகர சபை உறுப்பினராகவும் பிரதி முதல்வராகவும் பதவி வகித்த காலப்பகுதியில் அக்கரைப்பற்று மக்களின் தேவைகள் மற்றும் பிரதேச அபிவிருத்திக்காக அவர் பல்வேறு பங்களிப்புகளை வழங்கியுள்ளார்
பதவிகளில் இருந்து விலகியுள்ள போதிலும், அக்கரைப்பற்று மண்ணின் முன்னேற்றம் மற்றும் மக்களின் நலனுக்காக அவரது சமூகப் பணி தொடர வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.


