இலங்கை கடற்படையினர் நேற்று (2025 ஏப்ரல் 23) அதிகாலை கல்பிட்டி, ஆலன்குடா கடல் பகுதியிலும் புத்தளம் தொடுவாவ பகுதியிலும் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயற்சி செய்த பெருந்தொகை கடத்தல் பொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
ஏலக்காய் மற்றும் ஏலக்காய் விதைகள், ஸ்மார்ட் மொபைல் போன்கள், பெண்களுக்கான ஆடைகள், தொலைக்காட்சி பெட்டிகள், இரசாயன போத்தல்கள், குளிர்பான போத்தல்கள், எண்பது (80) புறாக்கள், ஒரு டிங்கி படகு, ஒரு வாடகை வண்டி மற்றும் நான்கு (04) சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்தனர்.
கடல் வழிகளில் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்பரப்பை உள்ளடக்கிய வழக்கமான ரோந்து மற்றும் தேடல் நடவடிக்கைகளை கடற்படை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, இன்று (2025 ஏப்ரல் 23) அதிகாலை கல்பிட்டி ஆலங்குடா கடல் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தினரால் நடத்தப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று சோதனை செய்யப்பட்டது. அங்கு குறித்த, இரண்டு (02) சந்தேக நபர்களையும் டிங்கி படகையும் கடற்படையினர் கைது செய்தனர், மேலும் அந்த டிங்கி படகில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட இருநூற்று நாற்பது (240) கிலோகிராம் ஏலக்காய், இருநூறு (200) கிலோகிராம் ஏலக்காய் விதைகள் மற்றும் ஐம்பத்தொன்பது (59) ஸ்மார்ட் மொபைல் போன்கள் ஆகியவை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
மேலும், புத்தளம் தொடுவாவ பகுதியில் இலங்கை கடற்படை கப்பல் தம்பப்பண்னி மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான ஒரு வாடகை வண்டி சோதனை செய்யப்பட்டது. அப்போது, எழுபத்தைந்து (75) கிலோகிராம் ஏலக்காய், மூன்று (83) பைகள், பெண்கள் ஆயத்த ஆடைகள், ஒரு (01) தொலைக்காட்சிப் பெட்டி, எண்பது (80) இரசாயனங்கள் போத்தல்கள், ஐநூற்று அறுபத்தாறு (566) குளிர்பானங்கள் போத்தல்கள் மற்றும் எண்பது (80) புறாக்கள் ஒரு கெப் வண்டி மற்றும் இரண்டு (02) சந்தேக நபர்களை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இந்த நடவடிக்கைகளின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 26 முதல் 48 வயதுக்குட்பட்ட கல்பிட்டி மற்றும் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நான்கு (04) சந்தேக நபர்கள், ஏலக்காய் மற்றும் ஏலக்காய் விதைகள், ஸ்மார்ட் மொபைல் போன்கள், பெண்களுக்கான ஆயத்த ஆடைகள், ஒரு தொலைக்காட்சிப் பெட்டி, ஒரு இரசாயன போத்தல்கள், ஒரு குளிர்பான போத்தல்கள், எண்பது புறாக்கள், ஒரு டிங்கி படகு மற்றும் ஒரு கெப் வண்டி ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளன.
