Saturday, October 4, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsகல்பிட்டியில் மூன்று வயது குழந்தை பாலியல் துஷ்பிரயோகம்!

கல்பிட்டியில் மூன்று வயது குழந்தை பாலியல் துஷ்பிரயோகம்!

கற்பிட்டி வாழைத்தோட்டம் பகுதியில் மூன்று வயது குழந்தை பாலியல் துஷ்பிரயோகம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி, வாழைத்தோட்டம் பகுதியில் மூன்று வயது பெண் குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மிக மோசமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கற்பிட்டி வாழைத்தோட்டம் பகுதியில் வசிக்கும் சுமார் 35 வயதுடைய, திருமணமான நபர் ஒருவர் அதே பகுதியில் வசிக்கும் மூன்று வயது பெண் பிள்ளையை இரகசிய இடம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக அந்த குழந்தை மிகுந்த வலியினால் துடித்துள்ளதை அடுத்து மேற்கொண்ட சோதனையின்போது குறித்த சம்பவம் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் வாழைத்தோட்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய நபரின் வீட்டை ஊர் மக்கள் முற்றுகை இட்டனர்.

இதன்போது தப்பி ஓட முயற்சித்த குறித்த சந்தேக நபர் பெரும் போராட்டத்திற்கு மத்தியில் ஊர் மக்களால் பிடிக்கப்பட்டு கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் பாதிக்கப்பட்ட பெண் குழந்தையை புத்தளம் தள வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

கல்பிட்டியில் மூன்று வயது குழந்தை பாலியல் துஷ்பிரயோகம்!

கற்பிட்டி வாழைத்தோட்டம் பகுதியில் மூன்று வயது குழந்தை பாலியல் துஷ்பிரயோகம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி, வாழைத்தோட்டம் பகுதியில் மூன்று வயது பெண் குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மிக மோசமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கற்பிட்டி வாழைத்தோட்டம் பகுதியில் வசிக்கும் சுமார் 35 வயதுடைய, திருமணமான நபர் ஒருவர் அதே பகுதியில் வசிக்கும் மூன்று வயது பெண் பிள்ளையை இரகசிய இடம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக அந்த குழந்தை மிகுந்த வலியினால் துடித்துள்ளதை அடுத்து மேற்கொண்ட சோதனையின்போது குறித்த சம்பவம் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் வாழைத்தோட்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய நபரின் வீட்டை ஊர் மக்கள் முற்றுகை இட்டனர்.

இதன்போது தப்பி ஓட முயற்சித்த குறித்த சந்தேக நபர் பெரும் போராட்டத்திற்கு மத்தியில் ஊர் மக்களால் பிடிக்கப்பட்டு கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் பாதிக்கப்பட்ட பெண் குழந்தையை புத்தளம் தள வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular