Thursday, October 9, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsகல்பிட்டியில் தொடர்ச்சியாக சிக்கும் கடத்தல் பீடி இலைகள்!

கல்பிட்டியில் தொடர்ச்சியாக சிக்கும் கடத்தல் பீடி இலைகள்!

இலங்கை கடற்படையினர், கடந்த வெள்ளிக்கிழமை (03) கற்பிட்டி குடாவ கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் நானூற்று ஐந்து (405) கிலோகிராம் பீடி இலைகள், ஒரு (01) டிங்கி படகு மற்றும் இரண்டு (02) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

கடல் வழிகள் ஊடாக கடத்தல் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்க்கரைகளை உள்ளடக்கி கடற்படை வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

அதன்படி வெள்ளிக்கிழமை (03) இரவு கற்பிட்டிக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​சந்தேகத்திற்கிடமான டிங்கி (01) படகு சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, ​​ சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் நானூற்று ஐந்து (405) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் டிங்கி படகு இரண்டு (02) சந்தேக நபர்களுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

மேற்படி நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கற்பிட்டி முகத்துவாரம் மற்றும் பள்ளிவாசல்துறை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள், டிங்கி படகு மற்றும் பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மதுவரி திணைக்கள சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

கல்பிட்டியில் தொடர்ச்சியாக சிக்கும் கடத்தல் பீடி இலைகள்!

இலங்கை கடற்படையினர், கடந்த வெள்ளிக்கிழமை (03) கற்பிட்டி குடாவ கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் நானூற்று ஐந்து (405) கிலோகிராம் பீடி இலைகள், ஒரு (01) டிங்கி படகு மற்றும் இரண்டு (02) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

கடல் வழிகள் ஊடாக கடத்தல் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்க்கரைகளை உள்ளடக்கி கடற்படை வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

அதன்படி வெள்ளிக்கிழமை (03) இரவு கற்பிட்டிக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​சந்தேகத்திற்கிடமான டிங்கி (01) படகு சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, ​​ சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் நானூற்று ஐந்து (405) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் டிங்கி படகு இரண்டு (02) சந்தேக நபர்களுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

மேற்படி நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கற்பிட்டி முகத்துவாரம் மற்றும் பள்ளிவாசல்துறை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள், டிங்கி படகு மற்றும் பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மதுவரி திணைக்கள சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular