Monday, October 13, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeERUKKALAMPIDDYநாகவில்லு பாடசாலைக்கு ஐகொனிக் அமைப்பின் சூப்பர் திட்டம்!

நாகவில்லு பாடசாலைக்கு ஐகொனிக் அமைப்பின் சூப்பர் திட்டம்!

புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலையின் பிரதான மண்டபத்தின் உள்ளக கட்டமைப்பே புனரமைப்பு செய்து, உயர் தரத்திலான டிஜிட்டல் சவுண்ட் சிஸ்டம் (DIGITAL SOUND SPEAKER SYSTEM) வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று 12.10.2025 புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

எருக்கலம்பிட்டி ஐகொனிக் நண்பர்கள் அமைப்பின் (ICONIC FRIENDS ASSOCIATION-ERUKKALAMPISSY) பூரண அனுசரணையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தின் உள்ளக கட்டமைப்பே புனரமைப்பு செய்து, உயர் தரத்திலான டிஜிட்டல் சவுண்ட் சிஸ்டம் (DIGITAL SOUND SPEAKER SYSTEM) அமைப்பின் தலைவர் ஜனாப் அரூஸ் அவர்களின் தலைமையில் இன்று மாலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

ஐகொனிக் நண்பர்கள் அமைப்பின் கடந்த கால செயற்பாடுகள் மற்றும் தொலை நோக்கு குறித்து அமைப்பின் செயலாளர் ஜனாப் NM நளீம் விரிவாக குறிப்பிட்டார்.

சுமார் ஒரு மில்லியன் செலவில் செய்துமுடிக்கப்பட்ட குறித்த திட்டம், இப்பாடசாலைக்கு மிக முக்கியமானதும் தேவையானதுமாகவும் இருந்ததாக பாடசாலையின் அதிபர் ஜனாப் SM ஹுசைமத் அவர்கள் தனது விஷேட உரையில் தெரிவித்தார்.

மேலும் இவ்வாறான பல சேவைகளை மன்/எருக்கலம்பிட்டி மற்றும் புத்/எருக்கலம்பிட்டி ஆகிய இரு பிரதேசங்களிலும் செய்துவரும் ஐகொனிக் நண்பர்கள் அமைப்பிற்கு பாடசாலை சமூகம் சார்பாக தனது நன்றிகளை தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் மேடை நிகழ்வும் இடம்பெற்றதுடன் ஐகொனிக் நண்பர்கள் அமைப்பிற்கு அவர்களின் பாடசாலை காலத்தில் கல்வி கற்றுக்கொடுத்த ஆசிரியர்களை கெளரவிக்கும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.

தமது பாடசாலை நாட்களை மீண்டும் ஒரு முறை மீட்டி, தமக்கு கல்வி கற்றுத்தந்த ஆசிரியர்களின் உயரிய சேவையை பாராட்டி அவர்களை கெளரவித்து நினைவுப்பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டமை அரங்கை அலங்கரித்தது.

நிகழ்வின் இறுதியில் டிஜிட்டல் சவுண்ட் சிஸ்டம் (DIGITAL SOUND SPEAKER SYSTEM) பாடசாலையின் அதிபர் ஜனாப் SM ஹுசைமத் அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், ஐகொனிக் நண்பர்கள் அமைப்பிற்கு அவர்களின் பாடசாலை காலத்தில் கல்வி கற்றுக்கொடுத்து தற்போது மண்ணறையில் வாழும் மர்ஹூம்களுக்காக விஷேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் உலமாக்கள், பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலைச் சமூகம், ஏனைய கழகத்தின் உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

நாகவில்லு பாடசாலைக்கு ஐகொனிக் அமைப்பின் சூப்பர் திட்டம்!

புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலையின் பிரதான மண்டபத்தின் உள்ளக கட்டமைப்பே புனரமைப்பு செய்து, உயர் தரத்திலான டிஜிட்டல் சவுண்ட் சிஸ்டம் (DIGITAL SOUND SPEAKER SYSTEM) வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று 12.10.2025 புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

எருக்கலம்பிட்டி ஐகொனிக் நண்பர்கள் அமைப்பின் (ICONIC FRIENDS ASSOCIATION-ERUKKALAMPISSY) பூரண அனுசரணையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தின் உள்ளக கட்டமைப்பே புனரமைப்பு செய்து, உயர் தரத்திலான டிஜிட்டல் சவுண்ட் சிஸ்டம் (DIGITAL SOUND SPEAKER SYSTEM) அமைப்பின் தலைவர் ஜனாப் அரூஸ் அவர்களின் தலைமையில் இன்று மாலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

ஐகொனிக் நண்பர்கள் அமைப்பின் கடந்த கால செயற்பாடுகள் மற்றும் தொலை நோக்கு குறித்து அமைப்பின் செயலாளர் ஜனாப் NM நளீம் விரிவாக குறிப்பிட்டார்.

சுமார் ஒரு மில்லியன் செலவில் செய்துமுடிக்கப்பட்ட குறித்த திட்டம், இப்பாடசாலைக்கு மிக முக்கியமானதும் தேவையானதுமாகவும் இருந்ததாக பாடசாலையின் அதிபர் ஜனாப் SM ஹுசைமத் அவர்கள் தனது விஷேட உரையில் தெரிவித்தார்.

மேலும் இவ்வாறான பல சேவைகளை மன்/எருக்கலம்பிட்டி மற்றும் புத்/எருக்கலம்பிட்டி ஆகிய இரு பிரதேசங்களிலும் செய்துவரும் ஐகொனிக் நண்பர்கள் அமைப்பிற்கு பாடசாலை சமூகம் சார்பாக தனது நன்றிகளை தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் மேடை நிகழ்வும் இடம்பெற்றதுடன் ஐகொனிக் நண்பர்கள் அமைப்பிற்கு அவர்களின் பாடசாலை காலத்தில் கல்வி கற்றுக்கொடுத்த ஆசிரியர்களை கெளரவிக்கும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.

தமது பாடசாலை நாட்களை மீண்டும் ஒரு முறை மீட்டி, தமக்கு கல்வி கற்றுத்தந்த ஆசிரியர்களின் உயரிய சேவையை பாராட்டி அவர்களை கெளரவித்து நினைவுப்பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டமை அரங்கை அலங்கரித்தது.

நிகழ்வின் இறுதியில் டிஜிட்டல் சவுண்ட் சிஸ்டம் (DIGITAL SOUND SPEAKER SYSTEM) பாடசாலையின் அதிபர் ஜனாப் SM ஹுசைமத் அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், ஐகொனிக் நண்பர்கள் அமைப்பிற்கு அவர்களின் பாடசாலை காலத்தில் கல்வி கற்றுக்கொடுத்து தற்போது மண்ணறையில் வாழும் மர்ஹூம்களுக்காக விஷேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் உலமாக்கள், பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலைச் சமூகம், ஏனைய கழகத்தின் உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular