நிர்வாகச் சீர்கேட்டால் நாடு பேரழிவை நோக்கிச் செல்கிறது: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரிக்கை
தற்போதைய அரசாங்கம் எஞ்சியிருக்கும் பொதுச் சேவையையும் சீர்குலைத்து, அதற்குப் பதிலாக குறைந்த தகுதியும் அனுபவமும் கொண்ட தனது கட்சி உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் நியமிக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஆட்சிமுறை எந்தளவிற்கு மோசமடைந்துள்ளது என்பதை மக்கள் உணர்ந்து கொண்டதாலேயே ‘அரகலய’ (போராட்டம்) உருவானது என்றும், தற்போது குடிமக்களிடையே அரசியல் விழிப்புணர்வு மிகவும் அதிகமாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த இரு தசாப்தங்களாக நிலவும் மோசமான ஆட்சிமுறையினால் ஏற்பட்ட அழிவுகளால் நாடு ஏற்கனவே நிலைகுலைந்து போயுள்ளது.
தற்போதைய ஆட்சி முறை உடனடியாக மாற்றப்படாவிட்டால், நாடு முழுமையான குழப்ப நிலைக்குத் தள்ளப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


