Friday, June 5, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsகல்முனையில் சீனத் தூதுவர்: 'சீனாவின் சகோதர பாசம்' எனும் பெயரில் அன்பளிப்புகள்!

கல்முனையில் சீனத் தூதுவர்: ‘சீனாவின் சகோதர பாசம்’ எனும் பெயரில் அன்பளிப்புகள்!

ஏ.எஸ்.எம்.அர்ஹம் – நிருபர் 

கல்முனை: கல்வி, மனிதநேயம் மற்றும் சர்வதேச நட்புறவின் உன்னத வெளிப்பாடாக, இலங்கைக்கான சீனத் தூதுவர் அதிமேதகு கீ ஜென்ஹொங் (HE. Qi Zhenhong) அவர்கள் நேற்று (04) கல்முனை நகருக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

பாடசாலையின் அதிபர் திருமதி ரிஷானா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், “சீனாவின் சகோதர பாசம்” எனும் தொனிப்பொருளின் கீழ் 3.8 மில்லியன் பெறுமதிமிக்க மாணவர்களுக்கான கற்றல் உபகரணப் பொதிகளும், தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும், ‘ரஹ்மத் பவுண்டேஷன்’ அமைப்பின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் விசேட அழைப்பை ஏற்று சீனத் தூதுவர் இந்த விஜயத்தை அமைத்திருந்தார்.

கோலாகலமாக நடந்த வரவேற்பும் “சகோதர பாச” திட்டமும்

சீனத் தூதுவரின் வருகையை முன்னிட்டு, கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாடசாலையின் அதிபர் திருமதி ரிஷானா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, இரு நாட்டு நட்புறவை பறைசாற்றும் வகையில் அமைந்தது.

“சீனாவின் சகோதர பாசம்” எனும் உன்னத தொணிப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும் மாணவர்களின் கல்வியையும் ஊக்குவிக்கும் வகையில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

பாடசாலை மாணவர்களின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணப் பொதிகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட தேவையுடைய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் இதன்போது தூதுவரால் நேரடியாகக் கையளிக்கப்பட்டன.

முக்கிய பிரமுகர்களின் பங்கேற்பு

இப்பிராந்தியத்தின் கல்வி மற்றும் சமூக நலனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்நிகழ்வில் பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல, மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் ஷஹ்துல் நஜீம் ஆகியோர் இதில் கௌரவ விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

கல்முனை மண்ணில் சர்வதேச தூதுவர் ஒருவரின் பங்களிப்போடு நடைபெற்ற இந்த மனிதாபிமானப் பணி, வெறும் உதவித்திட்டமாக மட்டுமன்றி, மாணவர்களின் எதிர்காலக் கனவுகளுக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. கல்வியையும் மனிதநேயத்தையும் முன்னிறுத்தி ரஹ்மத் பவுண்டேஷன் மற்றும் சீனத் தூதரகம் இணைந்து மேற்கொண்ட இத்தகைய முயற்சிகள், எதிர்காலச் சமூக முன்னேற்றத்திற்கான மிகச்சிறந்த முதலீடாகும் எனப் பிரதேச மக்கள் நன்றியோடு நினைவு கூருகின்றனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

கல்முனையில் சீனத் தூதுவர்: ‘சீனாவின் சகோதர பாசம்’ எனும் பெயரில் அன்பளிப்புகள்!

ஏ.எஸ்.எம்.அர்ஹம் – நிருபர் 

கல்முனை: கல்வி, மனிதநேயம் மற்றும் சர்வதேச நட்புறவின் உன்னத வெளிப்பாடாக, இலங்கைக்கான சீனத் தூதுவர் அதிமேதகு கீ ஜென்ஹொங் (HE. Qi Zhenhong) அவர்கள் நேற்று (04) கல்முனை நகருக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

பாடசாலையின் அதிபர் திருமதி ரிஷானா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், “சீனாவின் சகோதர பாசம்” எனும் தொனிப்பொருளின் கீழ் 3.8 மில்லியன் பெறுமதிமிக்க மாணவர்களுக்கான கற்றல் உபகரணப் பொதிகளும், தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும், ‘ரஹ்மத் பவுண்டேஷன்’ அமைப்பின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் விசேட அழைப்பை ஏற்று சீனத் தூதுவர் இந்த விஜயத்தை அமைத்திருந்தார்.

கோலாகலமாக நடந்த வரவேற்பும் “சகோதர பாச” திட்டமும்

சீனத் தூதுவரின் வருகையை முன்னிட்டு, கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாடசாலையின் அதிபர் திருமதி ரிஷானா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, இரு நாட்டு நட்புறவை பறைசாற்றும் வகையில் அமைந்தது.

“சீனாவின் சகோதர பாசம்” எனும் உன்னத தொணிப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும் மாணவர்களின் கல்வியையும் ஊக்குவிக்கும் வகையில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

பாடசாலை மாணவர்களின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணப் பொதிகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட தேவையுடைய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் இதன்போது தூதுவரால் நேரடியாகக் கையளிக்கப்பட்டன.

முக்கிய பிரமுகர்களின் பங்கேற்பு

இப்பிராந்தியத்தின் கல்வி மற்றும் சமூக நலனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்நிகழ்வில் பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல, மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் ஷஹ்துல் நஜீம் ஆகியோர் இதில் கௌரவ விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

கல்முனை மண்ணில் சர்வதேச தூதுவர் ஒருவரின் பங்களிப்போடு நடைபெற்ற இந்த மனிதாபிமானப் பணி, வெறும் உதவித்திட்டமாக மட்டுமன்றி, மாணவர்களின் எதிர்காலக் கனவுகளுக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. கல்வியையும் மனிதநேயத்தையும் முன்னிறுத்தி ரஹ்மத் பவுண்டேஷன் மற்றும் சீனத் தூதரகம் இணைந்து மேற்கொண்ட இத்தகைய முயற்சிகள், எதிர்காலச் சமூக முன்னேற்றத்திற்கான மிகச்சிறந்த முதலீடாகும் எனப் பிரதேச மக்கள் நன்றியோடு நினைவு கூருகின்றனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular