மத்திய அதிவேக நெடுஞ்சாலைப் பணிகள் காரணமாக 12 மணி நேர நீர் விநியோகம் துண்டிப்பு – பல பகுதிகளுக்கு தேசிய நீர்வழங்கல் சபை அவசர அறிவிப்பு
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளுடன் தொடர்புடைய அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக, பல பகுதிகளில் நாளை (11) இரவு முதல் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, நீர்க் குழாய்களை இடமாற்றும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதால், நாளை மாலை 7.00 மணி முதல் மறுநாள் (12) காலை 7.00 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு குடிநீர் விநியோகம் முழுமையாகத் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நீர் விநியோகத் தடை கீழ்க்கண்ட பகுதிகளில் அமுல்படுத்தப்படவுள்ளது.
மஹர பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்:
- எல்தெனிய
- கோனஹேன
- வேபெட
- சூரியபாலுவ
- உடுபிட
கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்:
- பரகந்தெனிய
- கொஸ்ஸின்ன
- எபரலுவ
- இம்புல்கொட
- யாகொட
எனவே, மேற்குறிப்பிடப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்குத் தேவையான அளவு குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.
அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர், வழமையான நீர் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


